Tuesday, October 28, 2014

பாராட்டுச் சான்றிதழ்

மதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல் உள்ளிட்ட 
நான்குரெவென்யூ மாவட்டங்களை உள்ளடக்கியப் 
பகுதியினை மாவட்டம் 324 பி3 என 
அரிமா சங்கத்தில் குறிப்பிடுவார்கள்

அந்த மாவட்டத்திற்குரிய மிட்- டேர்ம் கன்வென்ஸன்
கடந்த சனிக்கிழமை மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ்
கட்டிடத்தில் நடைபெற்றது

அதில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 
மிகச் சிறப்பாகச் சேவைசெய்த 
சங்கத் தலைவர் செயலாளர் மற்றும்பொருளாளரை 
மாவட்ட ஆளுநர் தனித்தனியாக
மேடையேற்றி சான்றிதழ் மற்றும் பரிசு கொடுத்துக்
கௌரவித்தார்

(அந்த வகையில் நானும் பாராட்டப்பட்டேன்
என்னுடன் இருப்பவர் எமது சங்கச் செயலாளர்
கே.முத்துமுணியாண்டி அவர்கள் )

பரிசு ,சான்றிதல் ,பாராட்டுக்காக சேவை இயக்கத்தில்
சேவை மனப்பான்மையுள்ளவர்கள் சேர்வதில்லை
என்பது உண்மையாயினும் கூட ----

இதுபோன்ற சிறு உற்சாகமூட்டல்
சேவைசெய்வபவர்களுக்குத் தொடர்ந்து 
சேவையை இன்னும் கூடுதலாகச் செய்யவும் 
இன்னும் சிறப்பாகச் செய்யவும் ஊக்கமளிக்கிறது
என்பதோடு அல்லாமல்--- 

சேவை மனப்பான்மையிருந்தும் 
எதைச் செய்வது, எப்படிச் செய்வது ,
எவருக்குச் செய்வது
யார் மூலம் செய்வது எனத் தெரியாது தவிப்பவர்களுக்கு

ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் என்பதாலேயே
இதுபோன்ற அவ்வப்போது பாராட்டுக் கூட்டங்கள்
சேவை இயக்கங்கங்களில் நடத்தப்படுவது உண்டு

இங்கு  இது குறித்து பகிர்தல் கூட அந்தநோக்கத்தில்தான் என நான் சொல்லவும் வேண்டுமா என்ன ? 





    




7 comments:

Yarlpavanan said...

வாழ்த்துகள்
தங்கள் பணி தொடரட்டும்

Anonymous said...

இனிய நல் வாழ்த்துகள்.
பணி தொடரட்டும்
வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

வணக்கம் !

வாழ்த்துக்கள் ரமணி ஐயா ! தங்களின் தொண்டு மென்மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .

கவியாழி said...

உங்களின் ஆளுமைத்திறன் எல்லோருக்குமே தெரிந்ததுதானே.உங்கள தலைமைப் பண்பை அறிந்துள்ளேன்

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரவும் வாழ்த்துக்கள்!

காரஞ்சன் சிந்தனைகள் said...

வாழ்த்துகள் ஐயா!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் ரமணி ஜி!

Post a Comment