Saturday, August 19, 2017

இப்படியும் .....

ஜோலார்பேட்டை ரயில் நிலையம்
அருகில் வாணியம்பாடி செல்லும்
சாலையோரத்தில்இருக்கிறது ஏலகிரி ஓட்டல்.
 அங்குச்சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்
கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து
விட்டுச் செல்கின்றனர். NEW INFORMATION

கல்லாவில் இருந்தவரும்காசு கேட்பதில்லை.
பணத்துக்குப்பதில் வணக்கம் செலுத்தினால்
போதுமா?

விசாரித்தபோதுதான்மேலே
தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்
காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்
கு காலை 8 முதல் 11
மணி வரை இலவச உணவு’ (100 பேர்
வரை), ‘

பால் வாங்கப்
பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’

, ‘வாரம் 100மாணவர்களுக்கு இலவசமாக
பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்
வகுப்பு வரையிலான
மாணவர்களுக்கு காலை முதல்மாலை வரை
பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்
சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால்,
“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய
தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.
அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்
செய்துவருகிறார்.

ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்
வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்
தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட
மற்றும் தென் தமிழகம், கர்நாடகம்
மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்
முக்கியச் சந்திப்பு. இந்த
நிலையத்தைக் கடந்ததுதான்
அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

 பயணத்தின்போது காலி தண்ணீர்
பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல
குடும்பத்தில் பாரமென கருதப்படும்
மனிதர்களை ரயிலில்அழைத்து வந்து
இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர்.
அவர்கள்பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

மாதந்தோறும் குறைந்தபட்சம் 15
பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல்
தவிக்கும்அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே
சுற்றித்திரிகின்றனர்   இப்படியும்
.
இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்
சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற
உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத
வருக்குக்கூடஉணவு நமக்கு தேவை
 என்பதை உணர்த்து கிறது”என்கிறார் நாகராஜ்.
இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில்
வீடுகளில் கவனிக்க முடியாதநிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான உணவை
அவர்களது குடும்பத்தினர்வந்து இலவசமாக
பார்சல் வாங்கிச் செல்லலாம்.

நாகராஜின்மனைவி சுஜாதாவும் தன் கணவரின்
இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில்இதையெல்லா எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
“இவர்களுக் கென்று தனியாக
உலை வைக்கப்போதில்லை.
வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம்
கூடுதலாகசமைக்கிறேன்.

 5கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்
10 கிலோ மாவு போட்டாலும்மா
ஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான்
செலவா கிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய்இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத்தேவையான லாபம் கிடைக்கிறது.
மனதுக்கும் சந்தோஷமாகஇருக்கிறது” என்கிறார்
 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடி நிற்கும்' நாகராஜ்

.
NEW INFORMATIONNEW INFORMATION

12 comments:

  1. அவர்களுக்கு வயிறு நிறைகிறது. எமக்கு வாசிக்கும் போது மனம் நிறைகிறது

    ReplyDelete
  2. அருமை! என்ன ஒரு மகத்தான சேவை! மனதிற்கும் மகிழ்வாக இருக்கிறது இப்படியானவர்களைப் பற்றி அறியும் போது... ஓர் அருமையான பாஸிட்டிவ் ந்யூஸ்...ஸ்ரீராமும் எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறோம்....வாழ்க நாகராஜ் அவர்களும் அவரது குடும்பமும்!!

    கீதா

    ReplyDelete
  3. நல்ல மனிதர்கள். இவரைப்பற்றி எங்கள் பாஸிட்டிவ் பதிவிலும் ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. நாகராஜ்-சுஜாதா தம்பதிகள் நீடூழி வாழணும்...

    ReplyDelete
  5. நல்ல மனம் கொண்ட அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    த.ம. நான்காம் வாக்கு.

    ReplyDelete
  6. இங்கேயும் மனிதர்கள்.

    ReplyDelete
  7. திரு .நாகராஜ்-திருமதி சுஜாதா தம்பதிகளின் சமூகசேவைக்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  8. ஏற்கனவே இவர்களை பற்றி படிச்சிருக்கேன்.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நாகராஜின்மனைவி சுஜாதாவும் தன் //கணவரின்
    இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
    இருக்கிறார்.//

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    நல்ல சேவை.

    ReplyDelete
  10. நல் மனம் கொண்ட தம்பதிகள்...

    மன நிறைவோடு வாழ்க பல்லாண்டு...

    ReplyDelete
  11. வெளிநாட்டுஓட்டல் ஒன்றில் உண்ண இம்மாதிரியானவருக்குக் கொடுக்கச் சொல்லி கூடுதல் பணம்கொடுக்கிறார்கள் என்றுபடித்தேன்

    ReplyDelete
  12. எதையும் எதிர் பார்க்காது இவர்கள் செய்யும் சேவை மகத்தானது . நீடுழி வாழணும்இவர்கள்

    ReplyDelete