*உஷாரய்யா உஷாரு!*
*வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்*.
*கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி தானா?*
*CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற*
*தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?*
*நல்ல வேலைக்குப் போகவா?*
*ஆங்கிலம் சரளமாகப் பேசவா?*
*குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?*
*ஏன்?*
*எதற்கு?* *....என்று சிந்தித்ததுண்டா?*
*Pre kg 25,000 இல் தொடங்குகிறது*
*Lkg 40,000*
*Ukg 50,000*
*1st 60,000*
*2nd 70,000*
*3rd 80,000*
*4th 90,000*
*5th 1,00,000*
*6to8 1,20,000*
*9to10. 1,50,000*
*11to12 2,00,000 இலட்சம்....*
*ஆக மொத்தம்*
*9,85,000 ரூபாய்.*
*இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்பு தான்.*
*நகரத்தில் இருக்கின்ற பெரிய பள்ளிகளில் 20 இலட்சத்தில் இருந்து 40 இலட்சம் வரை வாங்குறாங்க.*
*சரி!*
*இதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?*
*உங்கள் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்.*
*அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் உங்களால்.?*
*ஒன்றை நினைவில் வையுங்கள்..... உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்குக் கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவழித்து?*
*தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வர முடியுமா?*
*சரி!*
*இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?*
*CBSE கல்லூரியிலா?*
*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே !?*
*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான், இல்லையா?*
*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*
*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?*
*இல்லை!*
*இல்லவேஇல்லை!*
*இப்போது உங்கள் பிள்ளைகளோடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?*
*பத்து இலட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைப் பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவில்லையா ?*
*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி, கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?*
*உங்கள் பிள்ளை சாதனையாளனா?*
*இல்லை.. பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?*
*உங்களுக்குத் தெரியுமா.....*
*TNPSC தேர்வில் தேர்வாகும் 99 விழுக்காட்டினர் அரசுப்பள்ளியில், தமிழில் படித்தவர்கள் என்று?*
*TET தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?*
*இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?*
*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?*
*உங்களால் ஆணித்தரமாக எடுத்துக் கூற முடியுமா... CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?*
*அந்தப் பள்ளிகளைப் பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?*
*இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள் அன்புப் பெற்றோர்களே?*
*அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?*
**வாருங்கள் குரல் கொடுப்போம்* .....
👍ஆங்கில வழியில் கல்வி என்ற மோகம் தற்போது *அரசு பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி உள்ளது*
👍 *வெட்டி கௌரவத்தை விடுவோம்*
👍 *அரசு*
*பள்ளியில்* *படிப்போம்*
👍 *ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம்*
👍 *அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவோம்*
👍 *இதனால்*
*நம் செலவுகள் குறைக்கப்பட்டு, நம் எதிர்காலத்திற்காகபணம் சேமிக்கப்படும்.*
*சிந்திப்போம்!*
*மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்!*
🙏🙏🙏...
அரசு உதவி பெறும் பள்ளியில் செலவில்லாமல் படித்து பின் இயந்திரவியல் பொறியாளராகி இன்று மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான பென்ஸ் இந்தியாவில் சீனியர் மேனேஜராக பணிபுரிகிறார் எனது மகன்.
ReplyDeleteஎன்னுடைய கருத்தும் உங்கள் கருத்து தான்.
வணக்கம் சகோதரரே
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு பதிவு. ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மைதான். ஒவ்வொரு குறிப்பும் நூறு சதவிகிதம் உண்மை. அம்மாளும் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கியே ஓடுவதேன்? நோய் வந்தால் தனியார் மருத்துவமனைகளையே நாடுவதேன்?
ReplyDelete