tag:blogger.com,1999:blog-49240269262282429322024-03-19T01:31:43.076-07:00தீதும் நன்றும் பிறர் தர வாரா...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger1942125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75111642851922480762024-03-18T07:35:00.000-07:002024-03-18T07:35:02.568-07:00தேர்தல்...<p> எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்</p><div>கொடிகளின் சலசலப்பில்<br />எட்டாகச் சுருங்கும்<br />தேர்தல் புயலில்<br />கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்<br />எட்டு<br />மீண்டும்<br />இருபதாகிப் பல்லிளிக்கும்<br /><br />எத்தனைமுறை காவடிஎடுத்தும்<br />அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத<br />"மூலவர்களெல்லாம்"<br />"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி<br />குடிசை வாயில்களில்<br />நாளெல்லாம் தவமிருப்பர்<br /><br />கொள்ளையடித்ததுதானே<br />கொடுக்கட்டும் என<br />துண்டுக்குப்பதில் வேட்டியையே<br />விரித்துக் காத்திருக்கும்<br />"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்<br /><br />கொடுக்கவா செய்கிறோம்<br />விதைக்கத்தானே செய்கிறோம் என<br />அதிகாரத் துணையோடு<br />இரவில் வீடுவீடாக<br />"கவர்" கொடுத்துப்போகும்<br />"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்<br /><br />அணில்களும் பட்டாம்பூச்சிகளும்<br />நேரம் சரியில்லை என<br />வீதி விட்டு ஒதுங்கி<br />வீட்டு மூலைகளில்<br />'முக்காடிட்டு' அமரும்<br /><br />பாம்புகளும் ஓநாய்களும்<br />பொந்து விட்டு வெளியேறி<br />வீதிகளில்<br />"விட்டேத்தியாய்" உலா வரும்<br /><br />துண்டு இழந்து வேட்டி இழந்து<br />அம்மணமானது தெரியாமல்<br />வார்த்தை ஜாலங்களில்<br />வான வேடிக்கைகளில்<br />மெய் மறந்து நிற்பர்<br />'திருவாளர்' பொதுஜனம்<br /><br />நானே பெரும்பூதம்<br />நானே கருப்பணசாமி என<br />உறியடித்து<br />தீவட்டி சாட்டைகளோடு<br />ஊர் மிரள<br />ஊர் வலம் வந்து. . . .பின்<br />சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட<br />சிறு தீங்கும் செய்யாது<br />மீண்டும் மலையேடறிப் போகும்<br />அதிகாரமிக்க 'ஆணையம்'</div><div> </div><div>(ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் சிகரம் முற்போக்கு மாத இதழில் நான் எழுதியது.திருத்தம் ஏதும் செய்ய வேண்டிஇல்லாது சூழல் அப்படியே இருப்பது ஆச்சரியமே. )</div>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65082941391468853112024-03-17T07:36:00.000-07:002024-03-17T07:37:00.981-07:00யாதோ...<p> <span style="font-size: large;">கவிஞனாக அறிமுகமாயிருந்த </span></p><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என் நண்பனிடம்தான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">முதன் முதலாக</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என் படைப்புகளைக் கொடுத்தேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவன் முகம்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">திடீரெனக் சுருங்கத் துவங்கியது </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"> என்றான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">புத்தகத்தில் புதைந்து கிடந்தார்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">படைப்பினில் பாதி கடக்கும்போதே</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவர் உடல் குலுங்கத் துவங்கியது</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என்றார்</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"இதை என்ன செய்வது" என்றேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"> </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவர்கள் தான் எதையும் </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எழுதியபடியே இருந்த கதாசிரியர்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம் ஆனது</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">நம்பிக்கை இழந்த நிலையில்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என்றார்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அரசமரத்தடி பிள்ளையாரை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">மௌனமாய் வேண்டியபடி</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">மறுநாள் அவரைப் பயத்துடன் பார்த்தேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவர் மேசையில் என் படைப்பு இல்லை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">தூரமாய் கூடைக்கருகில்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">குப்பை போல் இருந்தது</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"கதைக்கு அவசியம் கரு வேண்டும்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">நிகழ்வுகள் வேண்டும்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">இன்னும் என்னென்னவோ சொன்னார்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எனக்கு எதுவுமே விளங்கவில்லை</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">முடிவாக</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"இதனை இப்படியே கட்டி மூலையில் வை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">ஓராண்டு தொடர்ந்து படி</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">நடுவீதிக்கு வந்தேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"கைகளில் என்ன பார்சல்"</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"> என்றான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எதிரில் வந்த</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">பத்தாம் வகுப்பில்</span><span style="background-color: white; font-size: medium;">தமிழில்</span><br /><span style="background-color: white; font-size: medium;"> முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">படிப்பிற்கே முழுக்குப் போட்ட</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என் பால்ய நண்பன்.</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"எழுத்தில் ஆர்வம் </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">கொஞ்சம் எழுதியிருக்கிறேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">இது எதில் சேர்த்தி என தெரியாமல் </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அலைகிறேன்" என்றேன் பயந்தபடி</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"பிள்ளையை பெற்று விட்டு</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">பேருக்காக அலைகிறாயா" என்றவன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">ஆவலாய் அதனைப் பிடுங்கி</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">ஒவவொரு பக்கம் முடிய முடிய</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"பேஷ் பேஷ்" என்றான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என்றேன் மெதுவாக</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"> என்றான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">முதன் முதலாக</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">திடுமென என் தோளைத் தட்டியபடி</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"பிரமாதம்" என்றான்</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">தமிழில் தோற்றவனா என் எழுத்தை</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">ஏற்க வேண்டும்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எல்லாம் தலை விதி என்று நொந்து</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"எப்படி" என்றேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என்றான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவனை அதிசயமாய் பார்த்து </span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அச்சத்துடன் கேட்டேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"இது எதில் சேர்த்தி"</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அவைகளை புறக்கணித்தா விட்டோம்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எழுதியவரை " யாரோ "</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"</span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"> என்றான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">நான் அமைதியாய் இருந்தேன்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எழுதியவர் பெயர் தெரியாதபோது</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எழுதியது எதனுள்ளும் அடங்காத போது</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">அதன் பெயர்" யாதோ" என்றான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">போதி மரத்து புத்தன் போல்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">என் முன் அவன் பிரசன்னமானான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">எனது சிந்தனைகளை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">இப்போதெல்லாம்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">ஒரு வகைக்குள்ளோ</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">ஒரு வரையரைக்குள்ளோ</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">இப்போதெல்லாம்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"> நான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">கதை கட்டுரை கவிதைப் பக்கம்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">தலை வைத்துப் படுப்பதே இல்லை</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;">நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்</span><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"></span><br /><span class="Apple-style-span" style="font-size: medium; line-height: normal;"><br /></span><br />Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53088870661631688612024-03-13T01:54:00.000-07:002024-03-13T01:54:17.766-07:00டைம் பேங்க்..<p> படித்ததில் பிடித்தது வியந்தது❤️😮</p><p><br /></p><p>சுவிட்சர்லாந்தில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவர் எழுதுகிறார்:</p><p><br /></p><p>சுவிட்சர்லாந்தில் படிக்கும் போது கல்லூரிக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன்.</p><p>வீட்டு உரிமையாளரான கிறிஸ்டினா 67 வயதான ஒற்றை வயதான பெண்மணி, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.</p><p>சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியம் மிகவும் நன்றாக உள்ளது, அவளது பிற்காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் பற்றி கவலைப்படாமல் இருந்தால் போதும்.</p><p>இருப்பினும், அவள் உண்மையில் "வேலை" கண்டுபிடித்தாள் - 87 வயதான ஒற்றை முதியவரை கவனித்துக் கொள்ள.</p><p>அவள் பணத்திற்காக வேலை செய்கிறாளா என்று கேட்டேன்.</p><p>அவளுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது:</p><p>"நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை, ஆனால் எனது நேரத்தை 'டைம் பேங்கில்' வைக்கிறேன், மேலும் எனது வயதான காலத்தில் என்னால் நகர முடியாதபோது, நான் அதை திரும்பப் பெறலாம்."</p><p>"டைம் பேங்க்" என்ற இந்த கான்செப்ட்டைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, நான் மிகவும் ஆர்வமாக இருந்ததால், வீட்டு உரிமையாளரிடம் மேலும் கேட்டேன்.</p><p>அசல் "டைம் பேங்க்" என்பது சுவிஸ் மத்திய சமூகப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும். மக்கள் இளமையாக இருக்கும்போது முதியவர்களைக் கவனித்துக்கொள்வதில் 'நேரத்தை' மிச்சப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் வயதாகும்போது, நோய்வாய்ப்பட்டால் அல்லது கவனிப்பு தேவைப்படும்போது அதைத் திரும்பப் பெறலாம்.</p><p>விண்ணப்பதாரர்கள் ஆரோக்கியமாகவும், தொடர்புகொள்வதில் நல்லவர்களாகவும், அன்பு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். உதவி தேவைப்படும் முதியவர்களை அன்றாடம் கவனிக்க வேண்டும்.</p><p>அவர்களின் சேவை நேரம் சமூக பாதுகாப்பு அமைப்பின் தனிப்பட்ட 'நேர' கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.</p><p>அவள் வாரத்திற்கு இரண்டு முறை வேலைக்குச் சென்றாள், ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வயதானவர்களுக்கு உதவினாள், ஷாப்பிங் செய்தாள், அவர்களின் அறைகளைச் சுத்தம் செய்தாள், சூரிய குளியலுக்கு அழைத்துச் செல்வாள், அவர்களுடன் அரட்டையடித்தாள்.</p><p>ஒப்பந்தத்தின்படி, அவரது சேவையின் ஒரு வருடத்திற்குப் பிறகு, *"டைம் பேங்க்"* அவள் பணிபுரிந்த மொத்த காலத்தைக் கணக்கிட்டு, அவளுக்கு "டைம் பேங்க் கார்டை" வழங்கும்.</p><p>மேலும், அவளைக் கவனித்துக் கொள்ள யாராவது தேவைப்படும்போது, "நேரம் மற்றும் நேர வட்டியை" திரும்பப் பெற அவள் "டைம் பேங்க் கார்டை" பயன்படுத்தலாம். முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, "டைம் பேங்க்" மற்ற தன்னார்வலர்களை மருத்துவமனையில் அல்லது அவரது வீட்டில் கவனித்துக் கொள்ளும்.</p><p>ஒரு நாள், நான் கல்லூரியில் இருந்தேன், வீட்டு உரிமையாளர் ஜன்னலைத் துடைக்கும் போது அவள் விழுந்ததாகச் சொன்னாள்.</p><p>நான் அவசரமாக விடுப்பு எடுத்து அவளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினேன்.</p><p>வீட்டு உரிமையாளருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில நாட்கள் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது.</p><p>நான் அவளைக் கவனித்துக் கொள்ள ஒரு வீட்டிற்கு விண்ணப்பிக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவளைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் உறவினர் என்னிடம் கூறினார்.</p><p>அவள் ஏற்கனவே "டைம் பேங்க்" க்கு திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தாள்.</p><p>நிச்சயமாக, இரண்டு மணி நேரத்திற்குள் "டைம் பேங்க்" ஒரு நர்சிங் தொழிலாளியை வந்து வீட்டு உரிமையாளரைக் கவனித்துக் கொள்ள அனுப்பியது.</p><p>நர்சிங் தொழிலாளி தினமும் வீட்டுப் பெண்ணை கவனித்து, அவளுடன் அரட்டையடித்து, அவளுக்கு சுவையான உணவைச் செய்தார்.</p><p>நர்சிங் தொழிலாளியின் உன்னிப்பான கவனிப்பில், வீட்டுப் பெண் விரைவில் குணமடைந்தார்.</p><p>குணமடைந்த பிறகு, வீட்டு உரிமையாளர் "வேலைக்கு" திரும்பினார். தான் ஆரோக்கியமாக இருக்கும் போதே "டைம் பேங்க்" இல் அதிக நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.</p><p>இன்று, சுவிட்சர்லாந்தில், முதுமையை ஆதரிக்க "டைம் பேங்க்" பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாகிவிட்டது.</p><p>சுவிஸ் அரசாங்கம் "டைம் பேங்க்" திட்டத்தை ஆதரிக்கும் சட்டத்தையும் இயற்றியது.</p><p><br /></p><p>நம்ம நாட்டுலயும் இப்படி திட்டம் இருந்தா நல்லா இருக்கும்ல!(இதை நாம் வேறுவிதமாக புண்ணியத்தை சேர்க்கச் சொல்கிறோம்...அது டைம் பேங்கை விட அனைத்து விதத்திலும் சிறந்து இல்லையா )</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79049550981414599192024-03-11T20:30:00.000-07:002024-03-11T20:30:13.873-07:00படித்ததில் பிடித்தது<p> ஒருவேளை வனவாசம் படிக்காமல் இருந்திருந்தால் அண்ணாதுரையை பேரறிஞர் அண்ணா என்றும் கருணாநிதியை கலைஞர் கருணாநிதி என்றுமே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-</p><p><br /></p><p>ஒருவேளை "வந்தார்கள் வென்றார்கள், சென்றார்கள்" படிக்காமல் இருந்திருந்தால் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களெல்லாம் அற்புதமானவர்கள் என்றும் பாபர் காலம் பொற்காலம், அக்பர் காலம் பொற்காலம் என்றே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-</p><p><br /></p><p>பூலித்தேவன் முதல், அழகுமுத்துக்கோன் வேலுநாச்சியார், கட்டபொம்மன் மருதுபாண்டியர்,வீரவாஞ்சி, பாரதியார், வ.உ.சி, சுப்ரமணியசிவா, நேதாஜி, ஜான்சிராணி போன்ற என்னற்ற வீரர்களின் தியாக, போராட்ட வலராறுகளைப் படிக்காதிருந்தால் வெள்ளையர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காகத்தான் இங்கே ஆண்டார்கள் என்றும் கூட நம்பவைக்கப்பட்டிருப்பேன் -</p><p><br /></p><p>இவை எதையுமே தெரியாமல் இங்கே வாழும் மக்கள்தான் அதிகம் -</p><p><br /></p><p>கல்வியறிவு பெருமளவில் இல்லாமலிருந்த மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இருந்த நாட்டுப்பற்று, ஆன்மிகப்பற்று, போராடும் வீரம் சுதந்திரத்திற்குப் பிறகு இன்று பெருமளவிற்கு மக்கள் கல்வியறிவு பெற்றும் கூட இல்லாமல் போனதற்குக் காரணம் இந்திய அளவில் கல்வித்துறையில் பெருமளவிற்கு ஊன்றிவிட்டிருக்கும் கம்யூனிஸ, மிஷநரிக் கூட்டங்களே -</p><p><br /></p><p>இந்த நாட்டில் நம்மை அடிமைப்படுத்திய கொடுங்கோலர்களின் வரலாற்றை அவர்கள் செய்த கொடுமைகளை மறைத்து அவர்களை தேவதூதர்கள் என்று நம்மிடம் நம்பவைத்துள்ளனர் -</p><p><br /></p><p>உதராணமாக தளராத முயற்சிக்கு உதாரணமாக கஜினி முகம்மது 17 முறை படையெடுத்தான் என்று மட்டுமே பதியப்பட்டுள்ளது ஆனால் 17 முறையும் கொள்ளையடிக்க மட்டுமே வந்தான், பல லட்சம் மக்களைக் கொன்றான், பல நூறு கோவில்களை இடித்தான் என்ற வரலாறு எங்குமே காணோம் -</p><p><br /></p><p>அதே கஜனி முகமதுவின் சொந்த நாடான ஆப்கானில் அவனது கல்லறை இருக்கும் இடம் கூட இன்று யாருக்கும் தெரியாது -</p><p>(பல கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்த அவனது நாடு இன்று பிச்சைக்கார தேசமாக இருப்பது இறைவன் செயல்)-</p><p><br /></p><p>இந்தியாவின் இருப்புப்பாதைகளின் தந்தை என்று லார்ட் டல்ஹொசி பெயரைப் படித்திருப்போம், ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வளங்களை வேகமாகக் கடத்துவதற்காக மட்டுமே அவன் இருப்புப்பாதைகளை அமைத்தான் என்பதுதான் உண்மை -</p><p>உதாரணமாக இருப்புப்பாதையே இல்லாத மூனாறு -தேனி இடையே அவன் அந்தக்காலத்திலேயே பாதை அமைத்தது மூனார் பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் தேயிலை மற்றும் ஏலம் போன்ற பணப்பயிர்களைக் கடத்தத்தான் -</p><p><br /></p><p>இவற்றையெல்லாம் மறைத்து நம்மை முட்டாள்களாக்கியது -</p><p><br /></p><p>சுதந்திர இந்தியாவில் 35 வருடங்கள் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், திராவிடக் கட்சிகளுக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தமிழக கல்வித்துறையில் வியாபித்து வரும் கிறிஸ்தவர்கள் -</p><p><br /></p><p>இவற்றையெல்லாம் மாற்றியமைத்து பழம்பாரதத்தின் பெருமைகளையும், பழந்தமிழர் வீரத்தையும், அறிவையும், ஆன்மீகத்தையும் மீட்டெடுக்க -</p><p><br /></p><p>இங்கே, திராவிடக் கட்சிகள் முற்றிலும் களையப்பட்டு தேசிய, தெய்வீக சிந்தனையுள்ள கட்சிகளின் ஆட்சி அமையவேண்டும் -Mk😍</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33441253333313814702024-03-10T19:33:00.000-07:002024-03-10T19:33:01.039-07:00ஹாப்பி ஸ்ட்ரீட்????<p>பெ ரிய பெரிய கிரிமினல் விசயங்கள் தான் மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படியான ஒன்று தான் ” ஹாப்பி ஸ்ட்ரீட் ”. இதைப் படிச்சா உங்க குடும்பத்திற்கு நல்லது.</p><p><br /></p><p>ஹாப்பி ஸ்ட்ரீட் என்றவுடன், ஏதோ கலாச்சார சீரழிவு என்று நினைத்துக் கொண்டு கலிகாலம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால், அது லெஃப்ட்ல போட்ட இண்டிகேட்டர். நிஜத்தில் வலதுபுறமா கூட்டிட்டுப் போய் போதைப் பொருள் விற்கும் தளம் அது!</p><p><br /></p><p>மனிதர்களுக்கு பொதுவாகக் கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. பண்டிகைகள் / கோவில் திருவிழாக்கள், நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் போடுவது, அவ்வளவு ஏன்.... ஞாயிற்றுக் கிழமை கறி எடுத்து குடும்பத்துடன் சேர்ந்து புசிப்பது கூட கொண்டாட்ட மனநிலை தான். இது தனிமையில் கிடைக்காது. குறைந்தபட்சம் சிறு கூட்டம். வாய்ப்பு கிடைத்தால் பெருங்கூட்டம். </p><p><br /></p><p>கொஞசம் யோசித்துப் பாருங்கள்... நியூ இயர் கொண்டாட்டம் என்பதில் என்ன நடக்கிறது? யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லிக்கலாம். ஆரவாரமாக எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் கூட கத்திக் கொள்ளலாம். வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டிக் கொள்ளலாம். குடித்து விட்டு பொது நாகரீகம் இல்லாமல் அலையலாம். ஏன் பொதுவிடத்திலேயே குடிக்கலாம். இதெல்லாம் கூட்டமாகச் செய்யும் போது குற்றவுணர்வின்றி போகும். </p><p>எல்லாரும் செய்வதால் தவறில்லை என்ற மாயை. எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன். </p><p><br /></p><p>இப்ப புரியுதா...? கூட்டமா செய்யும் போது சமூக பயம் , சமூக ஒழுங்கு, கட்டற்ற கொண்டாட்ட மனநிலை. </p><p><br /></p><p>சரி, ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்கும், போதைப் பொருள் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்? </p><p><br /></p><p>முதலில் பெரிய ஸ்பீக்கர் வைத்து இளைஞர்களின் தினவுக்கு இரையாக ஆடச் செய்வர். ஆண்களுக்கு பெண்கள் முன் வித்தையைக் காட்டவும், பெண்களுக்கு ஆண்கள் முன் ஈர்ப்பைக் காட்டவும், ஆட்டத்தில் உற்சாகமும், அதீத கொண்டாட்டமும் பொங்கும். நிகழ்ச்சி முடிந்ததும், ஏதோ பெரிதாகக் கொண்டாடியது போன்ற ஒரு மகிழ்ச்சி உருவாகும். </p><p><br /></p><p>அடுத்து....?</p><p><br /></p><p>நாமெல்லாம் நண்பர்களுடனோ சில குடும்பங்கள் சேர்ந்தோ டூர் போய்விட்டு திரும்பும் போதே... அடுத்து எங்கே போகலாம் என்று திட்டமிடுவோம் இல்லையா? அதே போல அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டிற்கு இப்படி போகணும், அவனையும் கூப்பிடணும் லைட்டா சரக்கு அடிச்சுட்டுப் போனா கூடுதல் மஜாவா இருக்கும் என்றெல்லாம் திட்டம் எழும். அடுத்த சில நாட்களுக்கு ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடியதை எல்லாம் சற்றே மிகைப் படுத்தி நண்பர்களிடம் பகிரப்படும். ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்குப் போகாதவனெல்லாம் சமகால இளைஞன் அல்ல என்பதாக சித்தரிக்கப்படும். </p><p><br /></p><p>அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டில் சீனியர்கள் சரக்கடித்து விட்டு வந்திருப்பார்கள். உடன் வந்த குடிப்பழக்கம் இல்லாத பெண்களை, “இன்று மட்டும் கொஞ்சமா” என்று வற்புறுத்துவார்கள். அவர்களும், அவர்கள் வற்புறுத்துவதால் மட்டும் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். இதன்... நீண்ட நாள் இலக்காக...</p><p><br /></p><p>இந்தக் கூட்டத்திற்குள் ஒருவன் நுழைந்து ஒரு ஸ்டஃப் இருக்கு பாஸ்... யூஸ் பண்ணிப் பாருங்க என்று ஒரு பணக்கார இளைஞனை இழுப்பான். முதலில் ஓசியாக... பிறகு ஷேரிங்காக, அப்புறம் அவனவன் காசில், பிறகு ஸ்டஃப் கிடைக்கவில்லை என்று டிமாண்ட் கூட்டி... வேண்டுமென்றால் கொஞ்சம் மொத்தமாக வாங்கணும். இன்னும் நாலைந்து பேர் ஷேர் பண்ணினால் தான் என்று இன்னும் இளைஞர்களை உள்ளிழுப்பார்கள். இது தான் எல்லா தேசத்திலும் போதை விற்பனை ஆசாமிகளின் சேல்ஸ் டெக்னிக். </p><p><br /></p><p>நம்பாதவர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் ஸ்பான்சர்களின் நெட்வொர்க்கை தேடிப் பாருங்கள். </p><p><br /></p><p>ஒன்று பத்தாகும், பத்து ஆயிரமாகும். நாளைக்கு பிடிபடுபவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார பெருசுகளாக இருப்பதால், பணத்தை விட்டெறிந்து ரகசியம் காப்பார்கள். இந்த போதைப் பழக்கம் நடுத்தரக் குடும்பத்திற்குள் நுழையும் போது, பணத் தட்டுப்பாட்டால், வழிப்பறி திருட்டு, கொலை வரை சர்வசாதாரணமாகி விடும். </p><p><br /></p><p>எச்சூச்மீ.... உங்க வீட்ல இளம் வயதினர் இருக்காங்களா? ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி பேசத் தொடங்கும் போதே செருப்பால் அடித்து அடக்கி வச்சுடுங்க. புள்ள முக்கியமா இல்ல அதோட பிடிவாதம் முக்கியம்</p><p><br /></p><p>இந்த பதிவை உங்கள் குழுவில்/நண்பர்களுடன் பகிருங்கள்.</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35116813047852076552024-03-05T05:51:00.000-08:002024-03-05T05:51:58.136-08:00சுய பரிசோதனை.<p>மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுயபரிசோதனையில் தமிழ்நாடு....</p><p><br /></p><p>கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... </p><p><br /></p><p>இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...</p><p><br /></p><p>ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்..</p><p><br /></p><p>இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... </p><p><br /></p><p>எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்..</p><p><br /></p><p>எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... </p><p><br /></p><p>பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... </p><p><br /></p><p>எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்...</p><p><br /></p><p>இதற்கு பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை நண்பர் ஒருவர்</p><p>அனுப்பியுள்ள செய்தி......</p><p><br /></p><p>1. மது & போதை</p><p>கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம்...</p><p><br /></p><p>இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது... </p><p><br /></p><p>தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது...</p><p><br /></p><p>என்கின்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும்...</p><p><br /></p><p> அவர்களுக்கு போட்டியாக....</p><p> பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்...</p><p><br /></p><p> உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில்...</p><p><br /></p><p> இன்று குடிகார்ர்கள் நிறைந்து , </p><p>உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது... </p><p><br /></p><p>குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரத்திலோ... </p><p>செய்ய முடிவதில்லை.. </p><p><br /></p><p>குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள், </p><p>கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை... </p><p><br /></p><p>அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு 1000 கூலி கேட்கின்றனர்...</p><p><br /></p><p> வீட்டுக்கு 500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 500 என்று... </p><p><br /></p><p>இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும்,...</p><p><br /></p><p>இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூகவிரோதிகளாகவும் உருவாகும்...</p><p><br /></p><p>மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...</p><p><br /></p><p>2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால்....</p><p> பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து....</p><p> அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். </p><p><br /></p><p>சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. </p><p><br /></p><p>சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்...</p><p><br /></p><p> மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.</p><p><br /></p><p>3. நூறுநாள் வேலை..</p><p><br /></p><p>இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை...</p><p>ஆனால் .... </p><p>தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. </p><p><br /></p><p>இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால்...</p><p><br /></p><p> காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், </p><p>வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்</p><p><br /></p><p>வேறு எந்த வேலையும் இல்லை.. 150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால்....</p><p><br /></p><p>சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...</p><p><br /></p><p>4. இலவசங்கள்...</p><p>அரசு தரும் இலவச பொருட்களும், </p><p>ஊரக வேலைவாய்ப்பு திட்டமும்... </p><p> மக்களை உழைக்க விரும்பாத, </p><p>சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..</p><p><br /></p><p>5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்..</p><p>அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை... </p><p><br /></p><p>இத்தகைய காரணங்களால்.....</p><p> தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது... </p><p><br /></p><p>தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், </p><p>வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்... </p><p><br /></p><p>ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது... </p><p>ஒரு நாளைக்கு 850-1000 சம்பளத்திற்கு , </p><p>(பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட...</p><p><br /></p><p>ஒரு வடநாட்டவர் 2 மணிநேரம் அதிகமாக 500-600 சம்பளத்திற்கு செய்கிறார்.. </p><p><br /></p><p>தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. </p><p>வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்... </p><p><br /></p><p>இதுதான் அனைத்து வேலைகளுக்கும்... </p><p> </p><p>நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை...</p><p><br /></p><p>கடைசியாக..</p><p><br /></p><p>நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்களின் மனநிலையில்.... </p><p>ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... </p><p><br /></p><p>வேலையே செய்யக்கூடாது,</p><p><br /></p><p>சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும்,</p><p><br /></p><p>சும்மாவே பணம் கிடைக்க வேண்டும்,</p><p><br /></p><p>சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், </p><p><br /></p><p>தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்... </p><p><br /></p><p>இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம்.... </p><p><br /></p><p>கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் , </p><p><br /></p><p>இன்னும்... </p><p><br /></p><p>எல்லோரும்...?????</p><p> </p><p>இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள..நோயை மாற்ற...</p><p><br /></p><p>வழி தேடினால் மட்டுமே தமிழகம் தப்பிப்பிழைக்கும்...🙏</p><p><br /></p><p>மதுவை ஒழிக்க வேண்டும்</p><p><br /></p><p>கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்</p><p><br /></p><p>படித்துப் பார்த்தேன் இன்றைய தமிழகத்திற்கு தேவையான பதிவு..</p><p><br /></p><p>©️</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21624905204289895542024-02-20T14:51:00.000-08:002024-02-20T14:51:45.136-08:00இதையும்...<p> சு. வெங்கடேசன் MP எழுத்திலிருந்து.....</p><p><br /></p><p>"மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்த சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். </p><p><br /></p><p>சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.</p><p>எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. </p><p><br /></p><p>நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.</p><p><br /></p><p> 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. </p><p><br /></p><p>என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். </p><p><br /></p><p>கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.</p><p><br /></p><p>மழை குறையத் தொடங்கியது. தாழ்வாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். </p><p><br /></p><p>அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.</p><p><br /></p><p>அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது.</p><p><br /></p><p> 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன்.</p><p><br /></p><p> 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். </p><p> </p><p>நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். </p><p><br /></p><p>தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.</p><p><br /></p><p>சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். </p><p><br /></p><p>அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தேன்.</p><p><br /></p><p>இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். </p><p><br /></p><p>'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். </p><p><br /></p><p>அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.</p><p><br /></p><p>வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்து போனார். </p><p><br /></p><p>இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.</p><p><br /></p><p>என்னை அழைத்துப் போனவர் தொடர்ந்து சொன்னார்... </p><p><br /></p><p>'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.</p><p>20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. பிறகு பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.</p><p><br /></p><p>நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. </p><p><br /></p><p>'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். </p><p><br /></p><p>'அதுதான் அந்த நரி’ என்றார்.</p><p><br /></p><p>அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். </p><p><br /></p><p>அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).</p><p><br /></p><p>நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.</p><p><br /></p><p>அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.</p><p><br /></p><p>சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.</p><p><br /></p><p>கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.</p><p><br /></p><p>அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.</p><p><br /></p><p>தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?</p><p><br /></p><p>அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...</p><p><br /></p><p>நன்றி- எழுத்தாளர் சு.வெங்கடேசன்</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24776753828722454402024-02-20T06:21:00.000-08:002024-02-20T06:21:08.955-08:00ம்..வாசித்து வைப்போம்..<p> மனித தன்மை சேஷனின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.</p><p>.......................................................................</p><p>அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்.</p><p><br /></p><p>பாரதீயதேஸத்தில் ஜனாநாயகத்தில் தேர்தல் நடக்கும்.</p><p>ஆனாலும் ,அந்த தேர்தலுக்கு அதை ஜனநாயகரீதியாக நடத்த ஒரு தலைமை தேர்தல் தலைமை அதிகாரி இருக்கின்றார்.</p><p>என்பதெல்லாம். T.n சேஷன் தேர்தல் தலையைஅதிகாரியாக, வந்தபிறகுதான் பொதுஜனங்களுக்கு தெரியவந்தது, அதுவும் </p><p>தான் ஒரு ரப்பர்ஸ்டாம்ப் அதிகாரி இல்லை! என்று நீருபணம் செய்தவர்தான் இந்த பாலகாடன் ஐயர்.</p><p><br /></p><p>அப்படிப்பட்ட சேஷன் ஒரு முறை தன்னுடைய கெட்டியோளுடன் உத்திரபிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில் காரில் சென்றுகொண்டேயிருந்தார்.</p><p><br /></p><p>அப்போது ஒரு இடத்தில் மாந்தோப்பில் ,மாமரங்களில் குருவி கூடுகள் கண்டார்.</p><p>அந்த குருவிகூட்டில் குட்டிகுருவிகளின் கீச்கீச் சப்தத்தை சேஷனும், கெட்டியோளும் ரசித்தனர்.</p><p><br /></p><p>இதை கண்ட சேஷனின் புருஷத்திக்கு ஒரு இஷ்டம் தோன்றியது.</p><p>சில குருவிகூடுகளை தங்களுடைய வீட்டில் வைக்கலாம்.</p><p>அந்த கீச்கீச் சப்தத்தை ரசிக்கலாம் என்று தோன்றியது.</p><p>அந்த இஷ்டத்தை தன்னுடைய கெட்டியோனிடம் சொன்னாள்.</p><p><br /></p><p>அந்த மாந்தோப்பில் காரை விட்டு இருவரும் இறங்கினார்கள்.</p><p>அந்த மாந்தோப்பை நிர்வகிக்கும் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனை கண்டு, அந்த மாடுமேய்க்கும் சிறுவனிடம் தேர்தல் அதிகாரியின் பாதுகாப்பு காவலர்கள் ஒரு ஐந்து குருவிகூடுகளை கேட்டனர்.</p><p>அந்த சிறுவனோ கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்.</p><p><br /></p><p>பாதுகாப்பாளர்களுக்கு அதிர்ச்சி.</p><p>அவர் யார் தெரியுமா? அவரின் அந்தஸ்து என்ன தெரியுமா? அவர் நினைத்தில் இந்த தோட்டத்தையே, இப்போதே விலைக்கு வாங்கமுடியும், மரியாதையாக குருவிகூடுகளை கொடுத்துவிடு! என்றனர்.</p><p><br /></p><p>சிறுவனோ! ஐயா நீஙக என்ன சொன்னாலும் கொடுக்கமுடியாது!</p><p>அவர் பெரிய ஆளாக இருந்தாலும் குருவிகூடுகளை கொடுக்கமுடியாது!</p><p>என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான்.</p><p><br /></p><p>அதை கண்ட சேஷன் காரை விட்டு இறங்கி தம்பி ஒரு கூட்டிற்கு பத்து ரூபாய் வைத்து தருகின்றேன் ..என்றார்</p><p>அன்றைக்கு பத்துருபாய் சிறிதளவு பெரிய பணம்.</p><p><br /></p><p>ஆனாலும்கூட அந்த சிறுவன் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டான்</p><p><br /></p><p>உடனே காவலர்கள் ஒரு கூட்டிற்கு ஐம்பதுரூபாய் வைத்து தருகின்றோம் என்றார்</p><p><br /></p><p>அதை கேட்ட அந்த சிறுவன் சேஷனை பார்த்து கைகூப்பி நமஸ்கரித்து கண்ணீர் மல்க சொன்னான்! </p><p><br /></p><p>ஜீ சாப் : இந்த கூட்டில் உள்ள குருவிகளின் தாய்குருவிகள் தன்னுடைய குழந்தைகளுக்காக, இரைதேடி சென்றிருக்கின்றன.</p><p>அந்த தாய்குருவிகள் இரையோடு வரும்போது தன்னுடைய பிஞ்சு சூருவிகளும் கூடுகளும் காணாமல் அவைகள் அழும். கீச்கீச் என்று அழும்!</p><p>அதை காணும்போது, அதன் வேதனையை என்னால உணர்ந்து கொள்ளமுடியும்.</p><p>அந்த மகாபாவம் எனக்கு வேண்டாம்.</p><p>காசுக்காக இரக்தபாசத்தை விற்கமுடியாது. என்று சொன்னான்.</p><p><br /></p><p>இதை கேட்டதும் சேஷனுக்கு பேரதிர்ச்சி ,அவரின் கண்ணீர் வர தொடங்கியது.</p><p><br /></p><p>தன்னுடைய கௌவரம் நஷ்டப்பட்டுபோனதுபோல் தோன்றியது.</p><p>தன்னுடைய. I.A.S படிப்பு ஒன்றுமே இல்லை போன்று தோன்றியது.</p><p>தான் அணிந்துகொண்டிருக்கும் சூட்டும்கோட்டும் ஒன்றுமில்லை போல் தோன்றியது.</p><p>தான் இந்தியதேஸத்தின் மிகப்பெரிய பதவியை வகிக்கும் தலைமைதேர்தல் அதிகாரி என்பதையெல்லாம் கணநேரத்தில் மறந்தார்.</p><p><br /></p><p>தான் வானாளய அதிகாரம் படைத்தவன் என்கிற அகம்பாவம் நஷ்டப்பட்டுபோனது அவருக்கு!</p><p><br /></p><p>தன் எதிரே இருக்கின்ற, தலையில் முண்டாசு கட்டிகொண்டிருக்கின்ற மாடுமேய்க்கின்ற சிறுவன்.</p><p><br /></p><p>நிச்சயமாக சாக்ஷாத் குருவாயூரான் கிருஷ்ணபரமாத்மாவாக தோன்றினான்.</p><p><br /></p><p>அன்றைக்கு மகாபலி தம்புரானுக்கு வாமனஅவதார மூர்த்தி விஸ்வரூபத்தில் தர்சனம் தந்தாரோ!</p><p>அதேபோல்தான் தோன்றியது எனக்கு என்று எண்ணினார்</p><p><br /></p><p>ஒன்றுபேசவில்லை, தன்னுடைய கெட்டியோளோடு காரில் ஏறி சென்றுவிட்டார்.</p><p>பத்துபதினைந்து நாட்களாக உறக்கம் நஷ்டப்பட்டுபோனது அவருக்கு.</p><p><br /></p><p>ஒரு சிறுவன் தாய்பாசத்தை தனக்கு உணர்த்திவிட்டானே!</p><p>என்று எண்ணி துக்கமடைந்தார்.</p><p><br /></p><p>(கேரளாவில் ஒரு கூட்டத்தில் தான் ஓய்வுபெற்றபின்னர் இதைபற்றி பேசிய தொகுப்பு தான்)</p><p><br /></p><p>இவன்</p><p><br /></p><p>ஸ்னேகம்கூடிய</p><p>அஜய்குமார்</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26939042723619683012024-02-16T05:55:00.000-08:002024-02-16T05:55:14.503-08:00ம்...படித்து வைப்போம்<p> (Very thought provoking message. Please go through the write-up.)</p><p><br /></p><p>*Whoever wrote, it is wonderfully written.*</p><p><br /></p><p>I never understood one thing that what do these film actors or actresses do that they get 50 crores or 100 crores for each film?</p><p><br /></p><p>In a country where top scientists, doctors, engineers, professors, officers, etc. get 10 lakh to 20 lakh rupees per year, in the same country a film actor earns 10 crores to 100 crores of rupees per year!</p><p><br /></p><p>What does he do after all?</p><p><br /></p><p>What is their contribution in the development of the country? After all, what do they do to earn so much in just one year that it might take 100 years for the top scientists of the country!</p><p><br /></p><p>Today, the three areas which have fascinated the new generation of the country are cinema, cricket and politics.</p><p><br /></p><p>The earning and prestige of the people belonging to these three fields is beyond all limits.</p><p><br /></p><p>These three areas are the ideals of modern youth, while their credibility is currently under question.</p><p><br /></p><p>So it is useless for the country and the society.</p><p><br /></p><p>Drugs and prostitution in Bollywood, match fixing in cricket, hooliganism and corruption in politics. Money is the main reason behind all this and it is we who bring this money to them.</p><p><br /></p><p>We are doing our own harm by burning our own money. This is the height of stupidity.</p><p><br /></p><p>Till 70-80 years back, famous actors used to get normal salary.</p><p><br /></p><p>30-40 years ago, the earnings of cricketers were also not special.</p><p><br /></p><p>30-40 years ago, there was not so much loot in politics.</p><p><br /></p><p>Slowly they started robbing us and we went on to let them rob ourselves happily.</p><p> </p><p>By getting caught in the clutches of these mafia, we are destroying the future of our children and our country.</p><p> </p><p>50 years back, movies were not made so vulgar and sloppy. Cricketers and politicians were not so arrogant. Today they have become our God (?). Now there is a need to lift them from the head and slap them so that they can know their status.</p><p><br /></p><p>Once , when the then Vietnamese President, Ho-Chi-Minh, came to India for a meeting with Indian ministers, he asked, "What do you guys do?"</p><p><br /></p><p>These people said - "We do politics."</p><p><br /></p><p>He could not understand this answer, so he asked again - "I mean, what is your profession?"</p><p><br /></p><p>These people said - "Politics is our profession."</p><p><br /></p><p>Ho-Chi Minh got a little annoyed and said - "Maybe you people do not understand my meaning. I do politics too, but by profession , I am a farmer and I do farming. Farming makes my livelihood. In the morning and evening I go to my fields. I work. I do my responsibility for the country as President during the day."</p><p><br /></p><p>When Ho-Chi-Minh asked the same thing again, a member of the delegation shrugged and said - "Politics is our profession."</p><p><br /></p><p>It is clear that Indian leaders had no answer to this. Later, a survey revealed that the livelihood of more than 6 lakh people in India was supported by politics. Today this number has reached in crores.</p><p><br /></p><p>Just a few months back, when Europe was being devastated by Corona, the doctors were not getting even a little rest for several months in a row, then a Portuguese doctor said angrily - "Go to Ronaldo, to whom you would give millions of dollars to watch. I only get a few thousand dollars."</p><p><br /></p><p>I firmly believe that in a country where the idols of young students are not scientists, researchers, educationists, but actors, politicians and sportsmen, they may have their own economic progress, but the country will never progress. </p><p><br /></p><p>Socially, intellectually, culturally, strategically the country will always remain backward. The unity and integrity of such a country will always be in danger.</p><p><br /></p><p>The country in which the dominance of unnecessary and irrelevant sector continues to grow, that country will be weakening day by day. The number of corrupt and anti-nationals will continue to increase in the country. Honest people will be marginalized and forced to lead a difficult life.</p><p><br /></p><p>We need to create an environment to groom and promote talented, honest, conscientious, social workers, belligerent & patriotic citizens.</p><p><br /></p><p>Really an eye opener msg to a True Indian</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48377801161542650692024-01-18T19:14:00.000-08:002024-01-18T19:14:10.931-08:00பண்டிதரும் குதிரைக்காரரும்<p> ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் , அனைத்தும் கற்றவர் மற்றும் புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்திருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை அழைத்திருந்தார்கள்.</p><p><br /></p><p>பண்டிதரை அழைத்து வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>பண்டிதர் வந்தபோது அங்கே யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதர்கோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ணலாம்?’னு குதிரைக்காரனிடம் கேட்டார்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>‘அய்யா! நான் குதிரைக் காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது பண்டிதருக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்காக மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா எடுத்துரைத்து பிரமாதப் படுத்திட்டார் பண்டிதர். பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் பண்டிதர்.</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>‘அய்யா… நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்… பண்டிதர் ஒன்றும் பேசாமல் மௌனமாக அவ்விடத்தில் இருந்து புறப்பட்டார் .</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>நீதி ;- மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்…புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் . பக்தியில் ஒருவனுடைய ஈடுபாடு மற்றும் முன்னேற்றத்திற்கு தகுந்தாற்போல் ஒருவருக்கு படிப்படியாக உபதேசத்தை தர வேண்டும். !!!</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண </p><p><br /></p><p>கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே</p><p><br /></p><p>ஹரே ராம, ஹரே ராம, </p><p><br /></p><p>ராம ராம, ஹரே ஹரே</p><p><br /></p><p><br /></p><p><br /></p><p>🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆</p><p><br /></p><p><br /></p><p>ஹரே கிருஷ்ண🙏</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82986376575685133922024-01-07T19:08:00.000-08:002024-01-07T19:08:22.056-08:00படித்ததில் பிடித்து<p> *நுகர்ச்சி* ( *consumption* )</p><p><br /></p><p>*உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை என்னவென்று நினைக்கிறீர்கள்* ? </p><p><br /></p><p>மக்கள் தொகைப் பெருக்கம்? </p><p><br /></p><p>இல்லை.</p><p><br /></p><p>over-population அன்று, </p><p><br /></p><p>*இன்று over-consumption* தான் என்கிறார்கள். </p><p><br /></p><p>அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம். </p><p><br /></p><p>ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம். </p><p><br /></p><p>இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.</p><p><br /></p><p> *population is not exactly the issue. consumption is* ! </p><p><br /></p><p>அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.</p><p><br /></p><p> *அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்*.</p><p><br /></p><p>*இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது* . </p><p><br /></p><p>சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். </p><p><br /></p><p>இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். </p><p>வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?</p><p><br /></p><p> பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. </p><p>ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.</p><p><br /></p><p> ' *பூஜா kit' விலை 180 ரூபாய்*! </p><p><br /></p><p>உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்</p><p>180 ரூபாய்!</p><p><br /></p><p>*தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்*! </p><p><br /></p><p>*ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் வியாபார யுக்தி* !</p><p><br /></p><p> தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித ' *fake demand*' ஐ உருவாக்குவதிலும் *கார்ப்பரேட்கள் வல்லவர்கள்*. </p><p><br /></p><p>சமீபத்திய உதாரணம் *vegetable wash* ! </p><p><br /></p><p>250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். </p><p>இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! </p><p><br /></p><p>பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். </p><p><br /></p><p>எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு *kills 99.9% germs* என்று போட்டு விடுகிறார்கள்.</p><p><br /></p><p> 'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள். </p><p><br /></p><p>எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. </p><p><br /></p><p>' *கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது* ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!</p><p><br /></p><p>*இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது*</p><p><br /></p><p>அதாவது நாம் நம் தாத்தாவை விட *8* மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட *64* மடங்கு அதிகம் நுகர்வான். </p><p><br /></p><p>நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு *option lifebuoy* சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும். </p><p><br /></p><p>எல்லா சோப்புகளும் *more or less* ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. </p><p><br /></p><p>64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக்கொண்டு! </p><p><br /></p><p>' *selection time rule*' என்ன சொல்கிறது தெரியுமா? </p><p><br /></p><p>இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். </p><p><br /></p><p>நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!</p><p><br /></p><p>நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்.</p><p><br /></p><p>இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. </p><p><br /></p><p>அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. </p><p>முழுக்க முழுக்க *automated process* சில் வந்திருக்கலாம். </p><p>எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. </p><p><br /></p><p>அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது, எத்தனை ஏக்கர் மண் மலடானது, எத்தனை டன் காற்று மாசுபட்டது, அந்தத்தயாரிப்பு எத்தனை *carbon footprint* ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது என்றெல்லாம் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை. </p><p><br /></p><p>மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் *socio, economic, political forces* கள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை.</p><p><br /></p><p>' *கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது*.</p><p><br /></p><p> *எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள்*. </p><p><br /></p><p>*home-made* என்று போட்டுவிடு, *organic* என்று எழுது, *100% hygienic* என்று எழுது, *good for liver* என்று போடு, </p><p>ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு *happy family* யின் படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவு தான், *shit sells*!!</p><p><br /></p><p>ஓகே. இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் *பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம்* என்று தோன்றுகிறது. </p><p><br /></p><p>*தினமும் 3 GB டேட்டா இலவசம்*. </p><p>வேறு என்ன செய்ய? </p><p>வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. </p><p>இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் *cognitive data base* அப்படியே தான் இருக்கும். </p><p>எதையும் புதிதாக கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. </p><p><br /></p><p>' *Stop making stupid people famous* ' என்று சொல்வார்கள். </p><p><br /></p><p>அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். </p><p><br /></p><p>*மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers* ! </p><p><br /></p><p>*வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை*. </p><p><br /></p><p>data என்றில்லை, மின்சாரம், தண்ணீர்,எரிபொருள் எல்லாமே over consumption தான்.</p><p><br /></p><p> *Buffet*- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். </p><p><br /></p><p>*விளைவு* : வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! </p><p><br /></p><p>இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!</p><p><br /></p><p>மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.</p><p><br /></p><p> ' *நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு* ' என்பதெல்லாம் சரி தான்.</p><p><br /></p><p> ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?</p><p><br /></p><p> 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு *போதும்டா சாமி என்று exhaust* ஆகி விடுகிறோம்.</p><p><br /></p><p> 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப்பேசுகிறான் </p><p><br /></p><p>'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.</p><p><br /></p><p> ' *expression பத்தலை* ' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்* .</p><p><br /></p><p> 'ஆன்மிகம்' என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும். </p><p><br /></p><p>50+...அந்தந்த வயதில் </p><p>அது அது இனிக்கும். </p><p><br /></p><p>ஆன்மிகத்திற்கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது. </p><p><br /></p><p>20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும். </p><p><br /></p><p>ஆனால் ஒரு *curiosity* க்காக, அனுபவத்துக்காக 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது. </p><p><br /></p><p>அது வெறும் *over consumption* ஆகவே இருக்கும்.</p><p><br /></p><p>சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்வது பொருத்தமாகுமா?</p><p><br /></p><p>பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?</p><p><br /></p><p> 40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?</p><p><br /></p><p>நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். </p><p><br /></p><p>நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. </p><p><br /></p><p>அளவுக்கு மிஞ்சினால்.????</p><p>அமிர்தமும் நஞ்சன்றோ...???</p><p><br /></p><p>சரி... இதற்கான தீர்வு தான் என்ன,..???,</p><p><br /></p><p>*மிகவும் எளிது*....!!!!</p><p>*விருப்பத்திற்காக நுகராதீர்கள்*. *தேவையிருந்தால் மட்டும் நுகருங்கள்*,</p><p><br /></p><p>அப்படியென்றால், என் ஆசைகள் விருப்பங்கள் என்னாவது,,.???</p><p><br /></p><p>உங்கள் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டதா என்று பாருங்கள், அதற்கு முன்னுரிமை தாருங்கள்,</p><p>அதன் பின் நீங்கள் விரும்புவதை நுகருங்கள், *அந்த நுகர்வும் உடல் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் உங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்*. </p><p><br /></p><p>*நீங்கள் விரும்பும், உங்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாத எதையும் கடன் வாங்கி நுகராதீர்கள்*. 🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🔍🤷♂️ </p><p><br /></p><p>*(Excellent analysis of today's lifestyles and it's impact & Dangerous of Over Consumption)</p><p><br /></p><p>படித்தேன்......பகிர்ந்தேன்😎😎</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15471374826894099232023-12-30T22:16:00.000-08:002023-12-30T22:16:29.178-08:00வளரட்டும் உயரட்டும்நிலைக்கட்டும்<p> தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே</p>வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும் <br />வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே<br /><br />நகரட்டும் விலகட்டும் மறையட்டும்<br />சுமையெனவே துயர்தந்த எல்லாமே<br />பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்<br />நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே<br /><br />உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்<br />பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே<br />நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்<br />உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே<br /><br />கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்<br />கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே<br />வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்<br />உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே (அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.)Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1925838122577930182023-12-25T17:50:00.000-08:002023-12-25T17:50:30.117-08:00வாட்ஸ் அப் மேட்டர் தான் ஆனாலும் .விசயம்சூப்பர்<p>யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.</p><p>தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி அதிரடியாக சில முடிவுகள் எடுத்தார். </p><p>அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார்.</p><p>ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது.</p><p>அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.</p><p>உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும், பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான் இந்த கடன் வந்தது.</p><p>இலவசங்களையும் பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு அவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.</p><p>அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்.</p><p>மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும் என்றார்.</p><p>மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர்.</p><p>கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.</p><p>சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.</p><p>இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டில் போட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வினியோகித்தது.</p><p>இம்முறை மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, </p><p>எங்கள் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி செய்யாமல்,</p><p>எங்களை,</p><p>தன்மானம், சுயமரியாதை என்பதையே உணரவிடாமல் கையேந்த வைத்துக் கொண்டு இருக்க வருகிறாயே என,</p><p>செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டி,</p><p>பணம், பிரியாணி, இலவசப் பொருட்கள் கொடுக்காத,</p><p>மக்களுக்கு சேவை செய்வோம் என அறிக்கை கொடுத்த,</p><p>கட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து, ஆட்சி செய்ய வைத்தார்கள்.</p><p><br /></p><p>இப்படி ஒரு கனவு, நேற்றிரவு.</p><p>பதறியபடி எழுந்தேன்.</p><p>விடிந்ததா என பார்த்தேன்.</p><p>இருளாகவே இருந்தது.</p><p>விடியவே இல்லை.</p><p>எப்போது விடியுமோ என மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.</p><p><br /></p><p>வாக்களிக்கும் முன் சிந்திப்பீர்.. 💪</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44552560487575517892023-12-24T16:34:00.000-08:002023-12-24T16:34:28.909-08:00காலத்தை வென்றவன் <p> <a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrXER2LNzyFi0POyTbGKbQrS_TTFUIFz3_WPcqr92uUCI8qjPHW-_x_JHLuY2F2jw1sMaUUxlNOgfxgfa2_VuLeq9c022mspNiuSKCI26RdbZZy0tCpVEhkYQ4KWNzG-nflXOTVnJDtK21dAsRsSfaf0imMC80wRXb45X14Sq_oEyg8Q8Mohz1rrVd=s1280" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="1280" data-original-width="958" height="400" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrXER2LNzyFi0POyTbGKbQrS_TTFUIFz3_WPcqr92uUCI8qjPHW-_x_JHLuY2F2jw1sMaUUxlNOgfxgfa2_VuLeq9c022mspNiuSKCI26RdbZZy0tCpVEhkYQ4KWNzG-nflXOTVnJDtK21dAsRsSfaf0imMC80wRXb45X14Sq_oEyg8Q8Mohz1rrVd=w300-h400" width="300" /></a></p><br /> ஒரறிவு உயிரினங்கள் முதல்<p></p>ஆறறிவு மனிதர்வரை<br />அனைத்தையும்<br />அனைவரையும் நிர்மூலமாக்கி<br />"காலமானதாக்கி கர்ஜிக்கும்<br />காலன் தோற்றது<br />மார்க்கண்டேயனிடம் மட்டுமா<br />இன்றுவரை தமிழக மக்கள் மனதினில்<br />மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?<br />அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?<br /><br />அவர் நடிக்கிற காலங்களில்<br />அவரை விடத் திறம்பட<br />நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்<br />திரைவானில் ஜொலித்த போதும்<br />தனது கடைசி படம் வரை<br />அவர்தானே வசூல் மன்னனாய் இருந்தார் ?<br />அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?<br /><br />தமிழக அரசியல் அரங்கில்<br />அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்<br />ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்<br />ஆரவாரித்துத் திரிந்த போதும்<br />தனது இறுதி மூச்சுவரை<br />அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?<br />அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?<br /><br />அவர் வாழ்ந்த காலத்தில்<br />ஆற்றல் மிக்க பேச்சாளர்களும்<br />அடுக்கு மொழி விற்பன்னர்களும்<br />மிக அதிகமாக இருந்தபோதும்<br />கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்<br />எங்கள் தங்கமாய்<br />புரட்சித் தலைவனாய் அவர்தானே ஜொலித்தார் ?<br />அதற்கான சூத்திரம் என்னவாக இருக்கும் ?<br /><br />கொடைச் சிறப்பா ?<br />கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?<br />எவரையும் கவரும் உடல் வனப்பா ?<br />ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?<br />நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?<br />எப்படி முயன்றபோது எதற்குள்ளும்<br />அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?<br /><br />புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்<br />புரியாதோருக்கு என்றும்<br />மர்மயோகியாய் இருப்பினும்<br />நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்<br />நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை<br />காலத்தை வென்றவரை காவியமானவரை<br />இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்<br />அவர் புகழ் இன்றுபோல் என்றும் வாழ்க என<br />வாழ்த்தி பெருமிதம் கொள்வோம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44271537774554041682023-12-16T19:47:00.000-08:002023-12-16T19:47:13.116-08:00முரண்பாடும் மனித நேயமும்<p> சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ஜெயேந்திரர்.</p><p>கண்கள் இரண்டும் உக்கிரத்தில் சிவந்திருந்தன. </p><p>கோபம், வருத்தம், இயலாமை, அவமானம் என உணர்ச்சிகளின் பிழம்பாக தண்டத்தைக் கையிலேந்தி நின்றார். </p><p><br /></p><p>கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் அசிங்கமாகி விடும் என்று அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.</p><p><br /></p><p>இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.</p><p><br /></p><p>இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அவரைக் கொட்டடியில் அடைக்க வேண்டும். திடீரென அவர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதால், அவருக்கு எந்தச் சிறப்பு முன்னேற்பாடும் செய்யவில்லை. அரசியல் கைதிகள் அதிக எண்ணிக்கையில் வரும்போது, அவர்களை அடைப்பதற்காக 20 ஏக்கர் பரப்பளவுள்ள ‘குளோஸ்டு ப்ரிஸன்’ (Closed Prison) தொகுதி இருந்தது. அது, நீண்ட நாள்களாக யாரும் அடைக்கப்படாமல் புதர் மண்டிக்கிடந்தது.</p><p><br /></p><p>அந்தத் தொகுதியையே அவருக்கு ஒதுக்க முடிவு செய்தேன். ஆயிரம் கைதிகளை உடனே அந்த வளாகத்துக்கு அனுப்பி, இரண்டே மணி நேரத்தில் சுத்தமாக்கினேன். தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலுள்ள இரண்டு அதிகாரிகள் தலைமையில் 40 காவலர்கள்கொண்ட ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு பகலாகப் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p><br /></p><p>இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அந்தத் தொகுதிக்குப் போகச் சொன்னபோது, அவர் என்னிடம் சொன்ன வார்த்தை, என்னை அதிரவைத்தது... ‘‘நான் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை. இவ்வளவு பெரிய அவமானத்தைச் சகித்துக்கொண்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்!’’ என்றார்.</p><p><br /></p><p>என் மனதில் தோன்றியதை நான் பேசினேன்...</p><p><br /></p><p>‘‘நீங்கள் முற்றும் துறந்த துறவிதானே... உங்கள் பார்வையில், உள்ளே இருந்தால் என்ன, வெளியுலகில் இருந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதானே. கடவுள் ஒரு சில நாள்கள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொல்கிறார். சிறையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு ஏதும் இல்லையே!’’ என்றேன்.</p><p>அவர் சற்றே நிதானித்துவிட்டுப் பேசினார்...</p><p><br /></p><p>‘‘என்னதான் எல்லாவற்றையும் துறந்தாலும் எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. லோக க்ஷேமத்துக்காக பூஜை செய்யாமல் சாப்பிடக் கூடாது. நான் நினைத்தவாறு சிறைக்குள் பூஜை செய்ய முடியுமா?’’ என்று கேட்டார். ‘‘உங்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்’’ என்றேன். ‘‘பூஜை செய்ய தனி இடம் வேண்டும்’’ என்றார். ‘‘கொடுக்கிறேன்’’ என்றேன்.</p><p><br /></p><p>‘‘சிறையில் கொடுக்கப்படும் உணவை என்னால் சாப்பிட முடியாது; என் ஆசாரப்படி என்னுடைய உணவு ஒரு பிராமணரால்தான் சமைக்கப்பட வேண்டும், கிணற்று நீர்தான் அருந்துவேன்’’ என்றார். ‘‘அனைத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றேன். அவர் எதைக் கேட்டாலும், செய்து கொடுக்கும் மனநிலையில்தான் நானிருந்தேன்.</p><p><br /></p><p>தண்டனைக் கைதியாக இருந்த ஒரு பிராமணக் கைதியால் அவருக்கு உணவு சமைக்கப்பட்டு, எனது பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்டது. காலையில் அரை லிட்டர் ராகிக்கஞ்சி, மதியம் 500 கிராம் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம். இரவு மூன்று பூரி, 200 மி.லி பால்... அவருடைய ஒரு நாள் மொத்த உணவும் இவ்வளவுதான்! இதைச் செய்து கொடுக்க முடியாதா ஒரு சிறைக் கண்காணிப்பாளரால்?</p><p><br /></p><p>எல்லாவற்றையும்விட அவருடைய பாதுகாப்புக்கு நான் பெரிதும் கவனம் செலுத்தினேன். அதற்குக் காரணம் உண்டு. அவரைச் சிறைக்கு அனுப்பிய பிறகு, அவரைப் பாதுகாப்பது குறித்து எந்த ஓர் அறிவுறுத்தலும் அரசுத் தரப்பிலிருந்து எனக்கு வரவில்லை. ஆனால், வெளியிலிருந்து பலரும் அவரைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சொல்லி என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள்.</p><p><br /></p><p>அதில் நான் எதிர்பாராத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெயேந்திரரின் பாதுகாப்புக்கு நான் அவ்வளவு மெனக்கெட்டதற்கு அவர் பேசியதும் மிக முக்கியக் காரணம்.</p><p><br /></p><p> *ஜெயேந்திரரை பத்திரமாகப் பார்த்துக்* *கொள்ளச் சொல்லி எனக்குத் தொலைபேசியில் அன்புக்கட்டளைபோட்டவர்* , *கலைஞர்* .</p><p><br /></p><p>அவர்தான் என்னிடம் பேசி, “அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள். எங்களுக்குள் கொள்கை முரண்கள் இருந்தாலும், அவர் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவர். அதனால் அவரைக் காக்க வேண்டியது அவசியம். அது மட்டுமன்றி அவருக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கொள்கைக்கு முரணானவர்கள் செய்த காரியமாகக் கருதப்படவும் வாய்ப்புண்டு. அதில் உன் பெயரும் பழுதாகிவிடும்!’’ என்று எச்சரித்தார்.</p><p> </p><p>ஓர் இந்துமதத் துறவியை, ஜனாதிபதி இருக்கையில் அமரவைத்து அழகு பாத்த ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர்.</p><p><br /></p><p>அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேண்டுகோள்விடுக்கிறார் பகுத்தறிவு பேசும் அரசியல் தலைவர்.</p><p><br /></p><p>ஆனால், இந்து மதத்தில் தீவிரமான பற்றும் பக்தியும் கொண்ட ஒருவரின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். *வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் தேசமோ...*’ என்று தோன்றியது எனக்கு.</p><p><br /></p><p>ஜி.ராமச்சந்திரன் </p><p>ஓய்வுபெற்ற.டி.ஐ.ஜி.</p><p>சிறைத்துறை.</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75321370964702153722023-12-10T17:22:00.000-08:002023-12-10T17:29:04.001-08:00நல்லதோர் வீணை யாய்<p> "நல்லதோர் வீணையாய் "</p> அவனிருந்தான்<br />அதனால்தானே மடமை இருளில்<br />ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி<br />பூபாளம் இசைத்து<br />புது விடியலைக் காட்ட முடிந்தது<br /><br />"சுடர்மிகும் அறிவுடன் "<br />அவனிருந்தான்<br />அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்<br />சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு<br />ஒளியாகி விழிப்பூட்டி<br /> நல்வழி காட்ட முடிந்தது<br /><br />"எமக்குத் தொழிலே கவிதை "<br />என்றிருந்தான்<br />அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்<br />அடைபட்டுத் தவித்த அருந்தமிழை<br /> விடுவித்துக் கவிதையை<br />அனைவருக்குமான தாக்க முடிந்தது<br /><br />"ஊருக்குழைத்தலே "<br /> கடமையென்றிருந்தான்<br />அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்<br />கூர்வாளாய்ப் புரட்சிக் கவிகள் படைத்து<br />சமதர்மச் சமூதாயத்திற்கு<br />அடித்தளமிட முடிந்தது<br /><br />" இமைப்பொழுதும்"<br /> சோராதிருந்தான்<br />அதனால்தானே காலத்தை வென்றவனாய்<br />காவிய மானவனாய்<br />"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்<br />என்றென்றும் எப்போதும்<br />பரிமளிக்கவும் முடிகிறது<br />Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30180799687193731572023-12-02T22:12:00.000-08:002023-12-03T02:54:54.926-08:00அமெரிக்கா..சுஜாதாவின் பார்வையில்<p> அமெரிக்காவில் நிரந்தரமாக வாழச் செல்லும் மாமிகளுக்கும், மாமாக்களுக்கும், சில நல்வாக்குகள்: சுஜாதா</p><p>(60 அமெரிக்க நாட்கள் புத்தகத்திலிருந்து)</p><p>===============</p><p>முன்னுரை</p><p>நான் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோது அதைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதும்படி 'தமிழன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக் காக ஆசிரியர் சுதாங்கன் கேட்டுக்கொண்டார். வழக்கமான பயணக் கட்டுரை போலில்லாமல் அமெரிக்காவை 'கட்டிய வியப்புக்கள்' இன்றி யதார்த்தமாக அதன் மனிதர்களின், குறிப்பாக அங்குப் போய்ச்சேர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வின் உண்மைகளையும் பாசாங்குகளையும் யோக்கியமாக எழுதினேன். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் எழுதப்பட்டது இது. இதன்பின் மூன்று ஜனாதிபதிகள் மாறிவிட்டார்கள். இருந்தும் அமெரிக்காவைப் பற்றி எழுதிய சில ஆதார விஷயங்கள் இன்னும் மாறவில்லை.</p><p>அமெரிக்கா பற்றிய ஏராளமான புத்தகங்களின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக இந்தப் புத்தகம் இல்லை என்று யாராவது சொன்னால் திருபதிப்படுவேன்.</p><p>உயிர்மை பதிப்பகத்தார் இதை சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.</p><p>அன்புடன்</p><p>சுஜாதா</p><p>சென்னை</p><p>அக்டோபர் 2007</p><p>===========================</p><p>உங்களுக்கு வீஸா கவலை இல்லை. மகனோ, மகளோ சிட்டிசனாக இருந்து உங்களை க்ரீன் கார்டுக்கு ஸ்பான்ஸர் செய்திருப்பார்கள். மனு செய்து. வரும்நேரத்தில் வரட்டும் என்று அதிகம் பதட்டமில்லாமல் காத்திருந்து, வீஸா வந்தபின் புறப்படுவீர்கள்.</p><p>முதலில் அந்த நாட்டுக்குப் போனதும் உங்கள் பிள்ளை/ மருமகன் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். டிஸ்னி வோர்ல்டு, டிஸ்னி லாண்ட், நயாகரா, பிட்ஸ்பர்க், க்ராண்ட் கான்யன். அதெல்லாம் போய்த் தீர்ந்தபின், உங்களுக்கு அமெரிக்காவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும், வாழ்க்கை ஓரிரு அறைகளுக்குள் பழக வேண்டும்.</p><p>டி.வி. அறை, படுக்கை அறை எல்லாமே மர வீடுகளாதலால் ராத்திரி சில விநோத சப்தங்கள் கேட்கும். பயப்படவேண்டாம். மரப்பலகைகள் சோம்பல் முறிக்கும் சப்தம்.</p><p>அமெரிக்காவில் டி.வி. பெரிசாக இருக்கும். தரைமட்டத்தி லிருந்து பார்க்கலாம். எழுபது எண்பது சானல்கள் இருக்கும். பிடித்தமாக ஓரிரு நிகழ்ச்சிகள் இருக்கும்.</p><p>தினம் முழுவதும் பண்டங்களை விற்பனை செய்யும் க்யுவிசி சானல் பார்க்கலாம். பத்திரிகை முதலில் புரியாது. எல்லா ந்யூஸும் ஒரே மாதிரிதான் இருக்கும். 'ஹிந்து' மாதிரி, The Almighty alone is worthy of obeisance போன்ற பக்தி உபன்யாச சமாசாரங்கள் எல்லாம் தேதி போட்டு அந்த ஊர் பேப்பரில் வராது.</p><p>டிவியில் ஒரு ஆண், ஒரு பெண்; ஒருத்தருக்கொருத்தர் சகஜமாக பேசிக்கொண்டே நியூஸ் சொல்வார்கள் வானிலை இவர்களுக்கு ரொம்ப முக்கியம்: போர்ட்டோரிக்கோவில் புயல் வீசுமுன், அந்தப் புயலுக்கு பேர் வைத்துவிடுவார்கள்.</p><p>காலையிலும் மாலையிலும் வாக் போகலாம். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாகச் செல்லுங்கள். அமெரிக்காவில் சாலையோரமாக யாருமே நடப்பதில்லை. கார்கள் எல்லாமே 60 மைலுக்கு மேல் ஓடுவதால் சாலைகளைக் குறுக்கிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும்.</p><p>எதற்கும் பைக்குள் அட்ரஸ் வைத்துக்கொள்வது நல்லது. சில நகரங்களில், பைக்குள் பத்து டாலராவது வைத்திருப்பது நல்லது. யாராவது 'மக்' (Mug) பண்ணும்போது, காசில்லையென்றால் மண்டையை உடைத்துவிடுவார்கள். முதல் வருஷங்களில் தனியாகப் போவதைத் தவிர்க்கவும் போஸ்ட். ஆபிஸ், லைப்ரரி, பார்க் என்று வெளியே சென்றால், நன்றாகப் போர்த்திக்கொண்டு செல்லவும் திடீர் என்று குளிரும்; அல்லது மழை பெய்யும்.</p><p>அமெரிக்காவில் ஆரோக்யமாக இருப்பது சுலபம். உடம்புக்கு வந்துவிட்டால் டாக்டர்கள் தீட்டிவிடுவார்கள். போன கையோடு இன்ஷுர் செய்துகொள்வது நல்லது. டயபடிஸ், இருதயக் கோளாறு இருந்தால் ஆயிரம் கண்டிஷன் போடுவார்கள். இருந்தும் உங்கள் மகனை அல்லது மாப்பிளையைப் பிடுங்கி எடுத்து இன்ஷுர் செய்து கொள்வது நல்லது. அங்கே வியாதி வருவது மிகவும் பணச் செலவாகும் சங்கதி</p><p>எல்லா இந்திய வீட்டிலும் வாஷிங்மெஷின், டிஷ்வாஷர், மைக்ரோ வேவ், வாக்கும் க்ளீனர் நான்கும் கட்டாயமாக இருக்கும். அவைகளை இயக்குவது எப்படி என்பது தெரிந்தே ஆகவேண்டும். சமையலுக்கு சில வீட்டில் கேஸ் இருக்கும்; திறந்தாலே எரியும்.</p><p>நம ஊர் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும். அதுவும் சைனீஸ் ஸ்டோரில் முளைக்கீரை, மாகாளிக் கிழங்கு எதுவும் கிடைக்கும் சில வீட்டில் எலக்ட்ரிக் ரேஞ்; துணி துவைக்க கட்டி சோப்பு கிடைக்காது. சில நகரங்களில் துணியை வராந்தாவில் உலர்த்த முடியாது, அக்கம், பக்கத்தில் புகார் செய்வார்கள். அதேபோல் இஷ்டப்படி குப்பை போடவும் கூடாது. நினைத்த இடத்தில் நம்பர் ஒன் போகமுடியாது. கிளம்பும்போது அதையெல்லாம் முடித்து கொண்டு போவது உத்தமம்.</p><p>ப்ளாஸ்டிக் தட்டுகளில் சாப்பிட்டுப் பழகவேண்டும். பீட்ஸ பிடித்தே ஆக வேண்டும். அதேபோல் மெக்ஸிக்கன் உணவுகளான Burrito, Tortilla: எட்டுநாள் ஃப்ரீஸரில் வைத்திருந்து சுடவைத்து, ஆவி பறக்க இட்லி சாப்பிடவும் பழகவேண்டும்.</p><p>அமெரிக்க நகரங்களில் இந்திய கலாச்சார விஷயங்களுக்கும் பஞ்சமே இல்லை. நம் ஊர் அத்தனை சங்கீத வித்வான்களும் சிரிப்பு நாடக குழுக்களும் கைக்காசை செலவழித்தாவது அங்கு வந்து கச்சேரி பண்ணிவிட்டாவது போவார்கள்.</p><p>இந்த மாதிரி சங்கீத நாடக சந்தர்ப்பங்களில் அல்லது நாற்பது மைல் தூரத்தில் கட்டப்பட்ட முருகன் - பிள்ளையார் - மீனாக்ஷி -சீனிவாசர் ஆம்னி பஸ் கோவிலில், அமெரிக்காவில் மற்ற கிழங்களை சந்திக்கும் வாய்ப்பு வரும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கை போலவே இருப்பதை அறிந்து திருப்திப் படலாம்.</p><p>'பாப்' சங்கீதம் உங்களுக்குப் பிடித்துப் போக சந்தர்ப்பம் இல்லை. வேணுமென்றால் கண்ட்ரி ம்யூசிக், ஜாஸ் போன்றவை கேட்டுப் பார்க்கலாம்.</p><p>உங்களுக்குப் புத்தகம் படிக்க ஆவலிருந்தால் அமெரிக்கா சொர்க்க பூமி. சின்ன ஊரில் கூட அருமையான நூலகம் இருக்கும். பத்து புத்தகங்கள் தள்ளிக்கொண்டு வரலாம். அதேபோல், 'பார்ன்ஸ் அண்ட் நோபிள்' போன்ற புத்தகக் கடைகளில் சந்தோஷமாக ஓசியில் படிக்க அனுமதிப்பார்கள் உட்கார நாற்காலிகூட எடுத்துப் போகலாம்.</p><p>அதில் என்ன சிக்கல் என்றால் அடுத்த ப்ளாக்குக்குகூட வேண்டும்.உங்களைக் காரில் அழைத்துப் போக மகன், மருமகள் யாரையாவது நாடவேண்டி வரும். அவர்கள் எல்லாம் ரொம்ப பிஸி.</p><p>அமெரிக்காவில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை வண்ணமே வேறு - எண்பது தொண்ணூறு வயசு தாத்தா எல்லாம் அனாயாசமாக கார் ஓட்டுவார்கள். பாட்டிகள் ரூஜ், லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வார்கள்.</p><p>அமெரிக்க நகரங்கள் அனைத்தும் வர, வர ஒரேமாதிரி ஆகிக் கொண்டு வருகின்றன. பக்கத்திலேயே 'மால்' இருக்கும். சியர்ஸ், ஜேசி பென்னி, கே மார்ட், வால் மார்ட், போன்ற ஸ்டோர்கள் ஒரே அடையாளத்தில் இருக்கும். ஃபுட் ஸ்டோர், ட்ரக் ஸ்டோர், ஆபிஸ்களெல்லாம் இருக்கும் 'டௌன் டவுன் இவ்வளவுதான் சமாசாரம். வந்த ஆறாம் மாதம் எல்லாம் பார்த்து அலுத்துவிடும்.</p><p>கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் தூரம் அதிகரித்துக்கொண்டே செல்லும் ஒரு நாளைக்கு பதினைந்து வார்த்தை பேசுவதிலிருந்து 'ஹாய் டாட் போன்ற ஓரிரு வார் களில் வந்து முடியலாம்.</p><p>பேரக் குழந்தைகளிடம் அன்பு காட்டலாம். அவர்கள் பேசும் இங்கிலிஷ் புரிய வேண்டும். பேரக் குழந்தைகளிடம் அதிகம் பாசம் வைத்தால் சில சமயம் அது சிக்கலிலும், மனஸ்தாபத்திலும் முடியும்.</p><p>எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாட்டி நன்றாக பேத்திகளைப்பார்த்துக்கொள்ள, அந்தக் குழந்தைகள் தாயாரை நிராகரித்து, பாட்டியையே எல்லாவற்றிற்கும் நாட, மருமகளால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு, 'சீனியர் சிட்டிஸன்' என்கிற தகுதியில், அரசாங்க சலுகையில், ஒரு ரூம் அப்பார்ட்மெண்டில் தள்ளி இருக்கிறார்.</p><p>தனியாக இருக்கவும், அவ்வப்போது தனக்குள் பேசிக்கொள்ளவும் பழகிவிட்டால், நமக்கு எந்தவிதக் கலாச்சார சம்பந்தமும் இல்லாத டி.வி., பொது வாழ்வை, விளிம்பிலிருந்து வேடிக்கை பார்க்கவும் பழகிவிட்டால் அமெரிக்கா உங்களுக்குப் பழகிவிடும்.</p><p>மற்றபடி பொது ஆரோக்கியம், நல்ல உணவு, வகைவகையாக ப்ரேக் ஃபாஸ்ட் ஸீரியல்கள், ஐஸ்க்ரீம், பாதாம் போன்ற பலவகை பருப்புகள், கொறிப்பதற்கு எத்தனையோ வறுவல்கள், கொட்டைகள், உறுதியாக உழைக்கும் உடைகள், சுத்தமான காற்று, தண்ணீர், பால், தயிர், மோர் இவைகளின் உபயத்தில் நீண்டநாள் வாழ்வீர்கள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை கொட்டாவி விட்டுக்கொண்டு!</p><p>===================================</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6787490801108551962023-11-28T01:52:00.000-08:002023-11-28T01:52:37.613-08:00ஆக்கப்பூர்வமான சிந்தனை<p> டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஜாம்ஷெட்பூரில் டாடா ஸ்டீல் ஊழியர்களுடன் வாராந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தார்.</p><p><br /></p><p>ஒரு தொழிலாளி ஒரு தீவிரமான பிரச்சினையை எடுத்துக் கொண்டார்.</p><p><br /></p><p>தொழிலாளர்களுக்கான கழிப்பறைகளின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது என்றார்.</p><p><br /></p><p>அதேசமயம், எக்ஸிகியூட்டிவ் கழிவறைகளின் தூய்மை மற்றும் சுகாதாரம் எப்போதும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><br /></p><p>அதைச் சரியாக அமைக்க எவ்வளவு நேரம் தேவை என்று டாடா தனது உயர் அதிகாரியிடம் கேட்டார்.</p><p><br /></p><p>அதை சரி செய்ய நிர்வாகி ஒரு மாதம் கேட்டார்.</p><p><br /></p><p>டாடா அவர்கள், "நான் அதை ஒரு நாளில் செய்துவிடுகிறேன். எனக்கு ஒரு தச்சனை அனுப்பு" என்றார்.</p><p><br /></p><p>அடுத்த நாள், தச்சன் வந்தபோது, *அவர் சைன் போர்டுகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்*.</p><p><br /></p><p>தொழிலாளர் கழிப்பறையில் உள்ள அடையாள பலகை *"நிர்வாகிகள்"* மற்றும் நிர்வாகிகளின் கழிப்பறையில் *"தொழிலாளர்கள்"* என்று காட்டப்பட்டுள்ளது.</p><p><br /></p><p>டாடா அவர்கள் *இந்த அடையாளத்தை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்* என்று அறிவுறுத்தினார்.</p><p><br /></p><p>இரண்டு கழிப்பறைகளின் தரம் அடுத்த மூன்று நாட்களில் சம நிலைக்கு வந்தது.</p><p><br /></p><p>*தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது**</p><p><br /></p><p>ஒழுக்கம்:</p><p><br /></p><p>*_பிரச்சினையை கண்டறிவதற்கு விமர்சன சிந்தனை தேவை_*</p><p><br /></p><p>**ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை_*</p><p><br /></p><p>இது கதையல்ல உண்மை சம்பவம்...</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84835654200724716882023-11-12T20:34:00.000-08:002023-11-12T20:34:50.303-08:00பயன்படும் பதிவு..<p> *🚊🚊Amazing railway service:-*</p><p><br /></p><p>தெரிந்து கொள்ளுங்கள்</p><p>இந்தியன் ரயில்வேயின் அற்புதமான சர்வீஸ்:::</p><p><br /></p><p>நாங்கள் குடும்பத்தோடு டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் ஏறினோம்..</p><p><br /></p><p>(காரணம் :- AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. </p><p><br /></p><p>வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது..</p><p><br /></p><p> நமக்கு மொழி பிரச்சினை வேறு..ஹிந்தி எனக்கு சுத்தமாக தெரியாது.. அவிங்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது..</p><p><br /></p><p>இரவு 9 மணி... குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடநாட்டுக்காரன் மனிதாபிமானம் இன்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிகிட்டே இருக்கானுக.. </p><p><br /></p><p>கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்.</p><p><br /></p><p>.அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது.. ஹிந்தி Or ஆங்கிலத்தில் பேசனும்..நாம் பேச நினைக்கற விஷயத்தை உடனே பதிவிட்டால் அடுத்த சில நிமிடத்தில் *RPF POLICE* உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவன் எல்லாம் எங்கிட்டு போனானே தெரியல..</p><p><br /></p><p> Rpf police க்கு வட நாட்டான் செமையா பயப்படுறான்... அடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் நம்ம பயணம் மிக சுமுகமாக அமையும் .. தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.. நன்றி.</p><p><br /></p><p>புகார் பதிவு மிக எளிது...</p><p>குரோம்ல *RAILMADAD* என பதிவிட்டதும் உங்கள் மொபைல் நம்பரை என்டர் செய்யவும்....மொபைல் நம்பருக்கு OTP வரும்....அதை என்டர் செய்ததும்</p><p>நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்ததும் அதிலே உங்கள் ட்ரெயின் நம்பர்....உங்கள் கோச்... பெட்டி நம்பர்... எத்தனை பேர் நீங்கள் பயணிக்கிறீர்கள் என அனைத்து தகவலும் வரும்..</p><p><br /></p><p> அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதிலே ரத்தின சுருக்கமா நீங்க உங்க குறையை பதிவிட்டால் போதும்.</p><p><br /></p><p>உதாரணமாக *"MY SEATS OCCUPIED OTHERS* " என பதிவிட்டால் போதும்.. உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் உங்கள் பிரச்சினை தீரும்.. நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.. </p><p><br /></p><p>என் அனுபவத்தை பகிர்ந்தேன்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் </p><p>நன்றி..</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60181983326323168742023-11-04T18:39:00.002-07:002023-11-04T18:39:28.193-07:00Retirement and cricket<p> Retirement in India: How It Mirrors the Game of Cricket</p><p><br /></p><p>Cricket isn't just a sport in India; it's an emotion, a religion, and a way of life. The strategies, patience, and perseverance required in cricket often mirror the journey of retirement planning in this diverse nation. Let's explore the fascinating parallels between retirement in India and the country's most cherished game.</p><p><br /></p><p>1. The Opening Partnership and Early Investments</p><p><br /></p><p>In cricket, a strong opening partnership lays the foundation for a big score. Similarly, starting your retirement savings early in India, perhaps with instruments like the Employees' Provident Fund (EPF) or the Public Provident Fund (PPF), can set a strong base for a sizeable retirement corpus.</p><p><br /></p><p>2. Setting a Target: Runs and Rupees</p><p><br /></p><p>Every cricket team has a target score in mind, whether they're batting first or chasing. Likewise, individuals should have a clear financial target for retirement, considering factors like inflation, healthcare costs, and desired lifestyle.</p><p><br /></p><p>3. Diverse Playing XI and Investment Portfolio</p><p><br /></p><p>A balanced cricket team has batsmen, bowlers, all-rounders, and a wicketkeeper. Drawing a parallel, a diversified investment portfolio in India could comprise equity, debt, real estate, gold, and more. Balancing high-risk and low-risk assets can help navigate the economic ups and downs, just like a cricket team navigates the challenges of varied oppositions.</p><p><br /></p><p>4. Reading the Pitch: Market Conditions</p><p><br /></p><p>A cricket captain assesses the pitch and conditions before deciding to bat or bowl. Similarly, understanding market conditions and economic forecasts is vital in deciding where to invest and when to shift assets.</p><p><br /></p><p>5. The Test Match: Long-Term Planning</p><p><br /></p><p>Test cricket requires patience, strategy, and a long-term vision. Retirement planning in India is similar. With joint family systems and cultural nuances, planning might extend beyond just the individual, requiring foresight and extended commitment.</p><p><br /></p><p>6. Navigating the Yorkers: Unexpected Expenses</p><p><br /></p><p>Just as batsmen must be prepared for unexpected yorkers, retirees might encounter unforeseen expenses. Having an emergency fund or liquid assets can help navigate these financial "yorkers."</p><p><br /></p><p>7. The Role of a Captain: Financial Advisors</p><p><br /></p><p>A cricket captain guides the team, making strategic decisions. In the retirement journey, a financial advisor plays a similar role, offering expert advice, helping navigate challenges, and ensuring the individual stays on track.</p><p><br /></p><p>8. The Final Overs: Nearing Retirement</p><p><br /></p><p>As a cricket match nears its conclusion, the strategies intensify. Similarly, as one approaches retirement in India, it's essential to reassess risk, consolidate savings, and ensure there's a steady income stream, like annuities or fixed deposits.</p><p><br /></p><p>Conclusion</p><p><br /></p><p>Cricket, with its complexities and strategies, offers insightful lessons for retirement planning in India. By understanding and drawing parallels between the two, individuals can approach retirement planning with the same passion, dedication, and strategy as a thrilling game of cricket. And just as in cricket, with the right planning and execution, one can hit the retirement phase for a 'six'!</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89566641899824504222023-11-01T17:40:00.005-07:002023-11-01T17:40:38.004-07:00தேவையான தகவல்..<p> A letter from a former geriatric hospital orthopaedic director to all the elderly (60-1 00yars and above…</p><p><br /></p><p>*I don't advocate the determination of bone density anymore, because the elderly will definitely have osteoporosis, and with the increase of age, the degree of osteoporosis will definitely become more and more serious, and the risk of fracture is bound to get bigger.*</p><p><br /></p><p>*There is a formula:*</p><p><br /></p><p>*The risk of fracture= external damage force/ bone density.*</p><p><br /></p><p>*The elderly are prone to fractures because the denominator value (bone density) is getting smaller and smaller, so the risk of fractures will definitely increase.*</p><p><br /></p><p>*Therefore, the most important measure for the elderly to prevent fractures is to do everything possible to prevent accidental injuries.*</p><p><br /></p><p>*How to reduce accidental damage?*</p><p><br /></p><p>*There are the seven characters of the so-called secret that I summed up, which is:*</p><p><br /></p><p>*“Be careful, be careful, be careful again"!*</p><p><br /></p><p>*Specific measures include:*</p><p><br /></p><p>*1. Never stand on a chair or stool to get something, even a low stool.*</p><p><br /></p><p>*2. Try not to go out on rainy days.*</p><p><br /></p><p>*3. Take special care when bathing or using the toilet, to prevent slipping.*</p><p><br /></p><p>*4. The most important, especially for women - dont wear underwear in bathroom, taking support of wall or other things... The commonest cause of slipping and fracture of hip joint... After bath, come back to your changing room.. Sit comfortably on either a chair or on your bed and then put on underwear..*</p><p><br /></p><p>*5. While going to toilet, ensure that bathroom floor is dry and not slippery.. Use only comod.. but at the same time fix a hand rest to hold it while getting upright from the comod sit... same is true while taking a bath sitting on bath stool*. </p><p><br /></p><p>*5. Be sure to clean up the floor in the house before going to bed, and take double care when floor is wet...*</p><p><br /></p><p>*5. When getting up in the middle of the night, sit on the bed for 3-4 minutes, be sure to turn on the light first, and then get up.*</p><p><br /></p><p>*6. At least in night or even during day time (if feasible), please, please do not close toilet door from inside.. If possible have an alarm bell fitted in toilet, to press it alarm family members in case of any emergency...*</p><p><br /></p><p><br /></p><p>*7. Seniors must sit on a chair or a bed and wear pants.*</p><p><br /></p><p>*8. In the event of a fall, you must stretch out your hands to support the ground. It is better to fracture the forearm and wrist than to fracture the femoral neck at the hip joint.*</p><p><br /></p><p>*8. I strongly advocate exercise, at least walk, to the extent possible for you..*</p><p><br /></p><p>*9. Especially for women.. be very, very serious to keep your weight in permissible limits... Diet control is the most important key... Eating leftovers, common behavior of women... just get away from it... feed leftovers to stray cows... keeping your weight in control is absolutely in your had and your mind, " always better to stop eating with half stomach full, rather than eat till have a satiety for having full stomach.*</p><p><br /></p><p>*Regarding increasing bone mass, I also advocate dietary supplements (dairy products, soy products and seafood, especially small shrimp skins, which are high in calcium) rather than medicinal supplements.*</p><p><br /></p><p>*The other is to do outdoor activities properly, because sun exposure (under UV light) converts the cholesterol in the skin into vitamin D.*</p><p><br /></p><p>*It is beneficial to promote intestinal absorption of calcium and osteoblast activity has the effect of delaying osteoporosis.*</p><p><br /></p><p>*2. Elderly health care:*</p><p><br /></p><p>*(1) Summary After investigating more than 300 centenarians, I found astonishing data. Almost all centenarians, who have fallen will die within three months.*</p><p><br /></p><p>*(2) A fall may not necessarily lead to a fracture, but the vibration and impact force of the fall will make the whole body function of the elderly in a state of disintegration, the meridians and collaterals are blocked, and they cannot become an organic whole to achieve self-balancing regulation, resulting in rapid failure of the functions of the viscera, and thus rapid death.*</p><p><br /></p><p>*(3) Pay special attention to the non-slip of the bathroom. When going up the stairs, pay attention to the handrails and don't fall. Everyone, take care.*</p><p><br /></p><p>*Therefore, the elderly must pay attention to anti-skid and anti-fall.* </p><p><br /></p><p>*One fall will cost ten years of life. Because all the bones and muscles are destroyed. Surgery is useless, and conservative treatment is also a drag. So, be careful.* </p><p><br /></p><p>**Avoid standing for too long**</p><p><br /></p><p>*The message may look long, but it’s worth reading it especially for the seniors, and those taking care of seniors.* </p><p><br /></p><p><br /></p><p>*Kindly post it in the group*</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39492752220837819902023-11-01T03:32:00.004-07:002023-11-01T03:32:39.140-07:00படித்ததில் பிடித்தது..<p> அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம் சரி மேல மாட்டுற கிளிப்பாவது (வெறும் 3 ரூபாய்) வாங்கி தாங்க என்று அழுதபோது ,</p><p>டேய் உனக்காவது இது கிடைத்தது ,</p><p>நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன </p><p>என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!</p><p><br /></p><p>இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் மகளுக்கு exam board வாங்க போனபோது 150 ரூபாய் மதிப்புள்ள examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி </p><p>இதவிட betterஆ வேற இல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,, </p><p><br /></p><p>மகளிடம் பொருமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர் அட்டையை தான் கொண்டு போவேன்,, ink பாட்டில் வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,</p><p>சில சமயம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,</p><p>புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்; bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;; </p><p>என்று மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது</p><p> நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!!</p><p> நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!</p><p><br /></p><p>நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா (25பைசா) சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்</p><p>இன்று அப்பா filter water கேன்</p><p>(2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் பார்க்கிறேன் </p><p><br /></p><p>நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு </p><p>தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி ( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !) அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்</p><p><br /></p><p>நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!</p><p>( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டிர்) ; </p><p><br /></p><p> இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?</p><p> என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!</p><p><br /></p><p>இன்று SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நாம் ,</p><p> ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6 ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறோம் ( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!! </p><p><br /></p><p>இன்று 64 gb memory வைத்து இருக்கும் நான் ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!</p><p><br /></p><p>இன்று ஒரு லிட்டர் gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி கொண்டு ஓடி இருக்கிறேன்</p><p>(கடைகார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடல புண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்) </p><p><br /></p><p>Boost is the secerd of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;</p><p><br /></p><p> இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது; </p><p><br /></p><p>நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; </p><p>இப்ப இருக்கிற புள்ளைங்க </p><p>சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதில்லை</p><p>சாப்பிடுவதற்கு கஷ்டப்படுதுங்க.</p><p><br /></p><p>இது தலைமுறை இடைவெளி என்று சொன்னாலும் சொல்லலாம் வாழ்க்கை முன்னேற்றம் என்று சொன்னாலும் சொல்லலாம். நாகரீக வளர்ச்சி என்று சொன்னாலும் சொல்லலாம்.</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46789356453480762142023-10-15T21:40:00.001-07:002023-10-15T21:40:07.646-07:00படித்ததில் பிடித்தது..<p> அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.</p><p><br /></p><p>ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை.</p><p>"பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம்</p><p>வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.</p><p>ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.</p><p>காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.</p><p>அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள்.</p><p>""இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்!</p><p>பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.</p><p>""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''</p><p>துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.</p><p>காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.</p><p>திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.</p><p>""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து</p><p>விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று</p><p>இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.</p><p>தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.</p><p>""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின்</p><p>வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.''</p><p><br /></p><p>அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த</p><p>காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.</p><p>பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத</p><p>குறையாகக் கெஞ்சினார்.</p><p>""பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''</p><p>""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''</p><p>""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''</p><p>தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த</p><p>உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.</p><p><br /></p><p>இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது. இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்</p><p>அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.</p><p>இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.</p><p>விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63419967262305199842023-10-12T18:31:00.002-07:002023-10-12T18:31:23.275-07:00பகிரலாமே..<p> கீழ்க்கண்ட பதிவை எழுதிய நண்பருக்கு நன்றி.</p><p><br /></p><p>அரசு ஊழியர்களை, சபிச்சி, கொட்டும், அத்தனை நல்லெண்ணம் கொண்டவர்களே ,கொஞ்சம் மனச திடப் படுத்திகிட்டு படிங்க மேலும்!!!</p><p>இதயம் பலகீனமானவர்கள் படிக்க வேண்டாம்!!!</p><p>*மனதை நெகிழ வைக்கும் கண்ணை உறுத்தும் உண்மை, படித்தவுடன் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்... உங்கள் பணம் எங்கே போகிறது?!*</p><p> இந்தியாவில் மொத்தம் 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 462 எம்எல்சிக்கள் என மொத்தம் 4,582 எம்எல்ஏக்கள் உள்ளனர்.</p><p><br /></p><p> ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் சம்பளம் உட்பட மாதம் 2 லட்சம். அதாவது மாதம் 91 கோடியே 64 லட்சம் ரூபாய்.</p><p><br /></p><p> இதன்படி ஆண்டுக்கு 1100 கோடி ரூபாய்.</p><p><br /></p><p> இந்தியாவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மொத்தம் 776 எம்பிக்கள் உள்ளனர்.</p><p><br /></p><p> இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியுடன் மாதம் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது எம்.பி.க்களின் மொத்த சம்பளம் மாதம் 38 கோடியே 80 லட்சம்.</p><p><br /></p><p> மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியாக ரூ.465 கோடியே 60 லட்சம் வழங்கப்படுகிறது.</p><p><br /></p><p> அதாவது, இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடியே 65 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடுகிறார்கள்.</p><p><br /></p><p> இது அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதர கொடைகள். அவர்களின் தங்குமிடம், வாழ்வாதாரம், உணவு, பயணப்படி, மருத்துவம், வெளிநாட்டுப் பயணம் போன்றவை. கூட கிட்டத்தட்ட அதே தான்.</p><p><br /></p><p> அதாவது சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளுக்காக செலவிடப்படுகிறது.</p><p><br /></p><p> இப்போது அவர்களின் பாதுகாப்பில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களின் சம்பளத்தைக் கவனியுங்கள்.</p><p><br /></p><p> ஒரு எம்.எல்.ஏ.க்கு இரண்டு மெய்க்காப்பாளர்கள் மற்றும் ஒரு பிரிவு வீட்டுக் காவலர் என்றால் குறைந்தது 5 போலீசார், மொத்தம் 7 போலீசார்.</p><p><br /></p><p> 7 காவலர் சம்பளம் (மாதம் ரூ. 35,000) ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம்.</p><p><br /></p><p> இதன்படி 4582 எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு ஆண்டு செலவு 9 ஆயிரம் கோடியே 62 கோடியே 22 லட்சம்.</p><p><br /></p><p> அதேபோல், எம்.பி.க்களின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 164 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.</p><p><br /></p><p> இசட் பிரிவு பாதுகாப்பு தலைவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 16000 பணியாளர்கள் பிரத்யேகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p><br /></p><p> இதற்கான மொத்த ஆண்டு செலவு ரூ.776 கோடி.</p><p><br /></p><p> ஆளும் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.</p><p><br /></p><p> *அதாவது அரசியல்வாதிகளுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.*</p><p><br /></p><p> இந்தச் செலவுகளில் ஆளுநரின் செலவுகள், முன்னாள் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஓய்வூதியம், அவர்களின் பாதுகாப்பு போன்றவை இல்லை.💃💃💃💃💃💃💃</p><p><br /></p><p> அதையும் சேர்த்தால் மொத்த செலவு சுமார் 100 பில்லியன் ரூபாய்.</p><p><br /></p><p> இப்போது யோசியுங்கள். ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் அரசியல்வாதிகளுக்காக செலவிடுகிறோம், அதற்கு ஈடாக ஏழை மக்களுக்கு என்ன கிடைக்கும்?</p><p><br /></p><p> இது ஜனநாயகமா?</p><p><br /></p><p> (இந்த 100 பில்லியன் ரூபாய் நம் இந்தியர்களிடமிருந்து மட்டுமே வரியாக வசூலிக்கப்படும்.)</p><p><br /></p><p> இங்கும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்கணும். இந்தியாவில் இரண்டு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.</p><p><br /></p><p> →முதல் - தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை</p><p> தலைவர்கள் தொலைக்காட்சி மூலம் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும்.</p><p><br /></p><p> → இரண்டாவது - தலைவர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள்,பென்சன். போன்றவற்றின்மீதான தடை.....</p><p> அப்போது தெரியும் அரசியல்வாதிகளின் தேசபக்தி.</p><p><br /></p><p> இந்த வீண் செலவுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுக்க வேண்டும்.</p><p> கனிவான</p><p> மாண்புமிகு பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு,</p><p> தயவு செய்து அனைத்து *திட்டமிடுதலை* நிறுத்தவும்.</p><p><br /></p><p> *ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு பாராளுமன்ற வளாகம் போன்ற கேன்டீனை திறக்கவும்.*</p><p><br /></p><p> எல்லா சண்டைகளும் முடிந்துவிடும்.</p><p><br /></p><p> *ரூ.29க்கு முழு சாப்பாடு கிடைக்கும்..*</p><p><br /></p><p> 80% மக்களுக்கு, குடும்பம் நடத்துவதற்கான போராட்டம் முடிந்துவிடும்.</p><p><br /></p><p> சிலிண்டர், ரேஷன்மிக குறைந்த செலவில் கொடுக்கலாம்</p><p> இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.</p><p><br /></p><p> *நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வழியில் சொந்த வீட்டை நடத்த வேண்டும் என்று பிரதமர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.</p><p><br /></p><p> மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும்.</p><p> டீ = 1.00</p><p> சூப் = 5.50</p><p> தோசை = 1.50</p><p> பரோட்டா= 2.00</p><p> சப்பாத்தி = 1.00</p><p> கோழி = 24.50</p><p>மசால் தோசை = 4.00</p><p> பிரியாணி=8.00</p><p> மீன் = 13.00</p><p> இந்த பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கு இது போன்ற விலையில் வழங்கலாம்., இவை அனைத்தும் இந்திய பாராளுமன்ற கேன்டீனில் கிடைக்கும்.</p><p><br /></p><p> *ஏழைகளின் சம்பளம் மாதம் ரூ.1 லட்சத்து 80,000 அதுவும் வருமான வரி இல்லாமல்.* அந்த ஏழைப் பங்காளர்களின் வயிற்றுகு போகிறது</p><p><br /></p><p> உங்கள் மொபைலில் சேமித்துள்ள அனைத்து எண்களையும் ஃபார்வர்டு செய்யவும், இதன் மூலம் அனைவருக்கும் தெரியும்...</p><p> அதனால் தான் ஒரு நாளைக்கு 30 அல்லது 32 ரூபாய் சம்பாதிப்பவன் ஏழை இல்லை என்று நினைக்கிறார்கள்.</p><p><br /></p><p> *ஜோக்குகள் தினமும் ஃபார்வேர்ட் செய்யப்படுகின்றன, இதையும் ஃபார்வேர்ட் செய்யுங்களேன்? அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிவிப்போம்.</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31952475233244677552023-10-06T05:43:00.008-07:002023-10-06T05:43:48.479-07:00யாரோ எழுதியது ..ஆயினும் அனைவருக்குமானது..<p> *~நாம் எங்கே செல்கிறோம்~*</p><p><br /></p><p>*_சற்றே யோசிக்கலாமே_* </p><p><br /></p><p>சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், *'அம்மா’* என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,</p><p>*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.</p><p><br /></p><p>*_'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_* என்று சொன்ன *பாட்டி* ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~.</p><p><br /></p><p>*_ஆடிப் பட்டம் தேடி விதை_* என இன்றைக்கும் சொல்லும் *வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~.</p><p><br /></p><p>*_மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_* எனப் பாடிய *தேரன் சித்தர்* ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை~.</p><p><br /></p><p>*_செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_* எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு* 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~.</p><p><br /></p><p>_அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_ </p><p><br /></p><p>_அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_ </p><p>_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_</p><p><br /></p><p>*ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*.</p><p><br /></p><p>*வள்ளுவன்*</p><p> சொல்லும்</p><p>*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*</p><p><br /></p><p>*பாரதி*</p><p> சொன்ன</p><p>*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*</p><p> சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.</p><p><br /></p><p>*_மம்மி_*</p><p> எனக்கு</p><p>_வொயிட் சட்னிதான்_</p><p> வேணும்,</p><p>~க்ரீன் சட்னி~</p><p>வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,</p><p>_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.</p><p><br /></p><p>அந்தக் குழந்தையிடம், *_'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’_*</p><p>எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.</p><p><br /></p><p> _ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_.</p><p><br /></p><p>இந்த _மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!*</p><p><br /></p><p> *தொலைக்காட்சி விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து </p><p>*_புரோட்டின், கலோரி, விட்டமின்_* பற்றிய *ஞானம்* பெருகிய அளவுக்கு,</p><p>~'கொள்ளு உடம்புக்குச் சூடு~;</p><p>_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.</p><p>*பலாப் பழம் மாந்தம்*.</p><p>~பச்சைப் பழம் கபம்~·</p><p>*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*</p><p>என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.</p><p><br /></p><p> ~'அதென்ன சூடு, குளிர்ச்சி?~</p><p>அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !</p><p>இந்த *தெர்மாமீட்டர்ல* உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~ அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,* _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._</p><p><br /></p><p>*_~விளைவு?~_*</p><p><br /></p><p> *'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’* எனும் ~அம்மா~,</p><p> *'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’* என்று அக்கறை காட்டும் ~அப்பா.~</p><p><br /></p><p> *~'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~* என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~ போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.</p><p><br /></p><p> *_'வயிறு உப்புசமா இருக்கா?_*</p><p> மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’* என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~</p><p><br /></p><p> *ஏழு மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,* *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*.</p><p><br /></p><p> *~'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~*</p><p>_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~</p><p><br /></p><p> *வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_ என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.*</p><p><br /></p><p>_பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_ மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?</p><p>*'பிள்ளை-வளர்ப்பான்’!*</p><p><br /></p><p> *'சளி பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_.</p><p>_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_</p><p><br /></p><p> *மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?*</p><p>_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_</p><p><br /></p><p> *_சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;_*</p><p><br /></p><p> *வாய்ப் புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_</p><p><br /></p><p> *பித்தக் கிறுகிறுப்புக்கு*</p><p>_முருங்கைக்காய் சூப்,_</p><p><br /></p><p> *மூட்டு வலிக்கு*</p><p>_முடக்கத் தான் அடை,_</p><p><br /></p><p> *மாதவிடாய் வலிக்கு*</p><p>_உளுத்தங்களி,_</p><p><br /></p><p> *குழந்தை கால்வலிக்கு*</p><p>_ராகிப் புட்டு,_</p><p><br /></p><p> *வயசுப் பெண் சோகைக்கு*</p><p>_கம்பஞ்சோறு,_</p><p><br /></p><p>*வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு*</p><p>_வாழைத்தண்டுப் பச்சடி’_</p><p> என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்</p><p>சில நேரம் ~மருந்துகள்;~</p><p>பல நேரம் _மருத்துவ உணவுகள்._</p><p><br /></p><p> *_காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._*</p><p><br /></p><p> *சுழியத்தைக்* _(ஜீரோவை)_</p><p>கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.</p><p><br /></p><p> *'பை’* என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.</p><p><br /></p><p> *'ஆறறிவதுவே அதனொடு மனமே’*</p><p>என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன</p><p>*_தொல் காப்பியம்_*</p><p>எழுதிய ஊர் இது.</p><p><br /></p><p> *~இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?~*</p><p><br /></p><p>யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய இந்த செய்தியை சிறந்த பாடமாகக்கருதி நண்பர்களுடன் பகிரவும்.</p>Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com3