ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை
உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம் சாத்தியமற்றதென்றும்
ஒரு தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்
இப்போதெல்லாம் அப்படியில்லை
முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
சாரமற்ற என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது
எங்கிருக்கும் உடலையும் எங்கிருக்கும் உயிரும்
ஓயவிடாது இயக்குதெலென்பது
அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது
இப்போதெல்லாம்
உயிரை பிரித்து வைத்து உலவிய
அரக்கனின் கதையும் கூட
சாத்தியமென்றே படுகிறது எனக்கு
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை
உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம் சாத்தியமற்றதென்றும்
ஒரு தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்
இப்போதெல்லாம் அப்படியில்லை
முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
சாரமற்ற என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது
எங்கிருக்கும் உடலையும் எங்கிருக்கும் உயிரும்
ஓயவிடாது இயக்குதெலென்பது
அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது
இப்போதெல்லாம்
உயிரை பிரித்து வைத்து உலவிய
அரக்கனின் கதையும் கூட
சாத்தியமென்றே படுகிறது எனக்கு
வணக்கம் ஐயா !
ReplyDeleteகாரணம் இல்லாமல் கட்டுக் கதைவருமோ ?
அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தமிழ்மணம் கூடுதல் உருவாக்கு !
ப்ரக்ரஸிவ் காம்ப்ரமைஸ்!!!!!!
ReplyDelete:))))))))))))
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பின் வலிமை அது
ReplyDeleteநன்றி ஐயா
தம +1
அன்பிருந்தால் எதுவும் சாத்தியம் தான்...!
ReplyDeleteநேர்மறை எண்ணங்கள் நம்மை மேம்படுத்தும் என்பதற்கு நல்ல சான்று.
ReplyDeleteஅண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html
அன்பிருந்தால் எதுவும் சாத்தியப்படுமே.. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா.
ReplyDeleteஅய்யா, வண்கக்ம.முகமறியாது பேசியறியாது
ReplyDeleteஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
உண்மைதான், வாழ்த்துக்கள், தொடருங்கள். நன்றி.
நம்ப முடியாதவற்றுக்கு இப்படியும் வியாக்கியானம் தரலாம் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிய சிந்தனை
ReplyDeleteதம+1
சிறப்பு ஐயா! இது மீள்பதிவா? ஏற்கனவே படித்த மாதிரி தோன்றுகின்றது!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
அன்பால் எதையும் சாதிக்கமுடியும்... ஐயா.. மிக அருமையான கருத்தாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-