கடலுக்கு அலையது முகவரி
நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு மணமது முகவரி-என்
மகிழ்விற்கு "அவள்தான்" முகவரி
கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கு "அவள்தான் " முகவரி
மனதுக்கு நினைவதே முகவரி
நினைவுக்கு மொழியதே முகவரி
பகலுக்கு ஒளியதே முகவரி-என்
உயர்வுக்கு "அவள்தான்" முகவரி
கடவுளுக்கு கோவிலே முகவரி
கனியினுக்கு சுவையதே முகவரி
உடலுக்கு முகமதே முகவரி-ஆம்
எனக்கென்றும் "கவிதையே " முகவரி
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் ஐயா !
ReplyDeleteமுகவரிகள் கூறும் முகையவளின் அன்பில்
அகவரிகள் பூத்த அழகு !
மிகவும் ரசித்தேன் அருமை ஐயா தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தம +1
முகவரிகள் பற்றி அனைத்தும் வரிக்கு வரி மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteமுகவரிகளின் முத்தான தொகுப்புகள்..
ReplyDeleteசத்தான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
முகவரி சொன்ன உம் கவி வரி
ReplyDeleteஅருமை
தங்கள் முகவரி அழகு.
ReplyDelete/எனக்கென்றும் நீதான் முகவரி/ நானா...... !
ReplyDeleteமுகவரி சொன்ன கவி வரிகள் கவர்ந்தன! அருமை! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!
ReplyDeleteஉங்கள் கவிதைக்கு முகவரி எளிமை இனிமை.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
முகவரிக் கவிதை அற்புதம் ஐயா... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்று.
ReplyDeleteஅனைத்து முகவரிகளும் அழகு! உங்கள் முகவரியும் கவிதைகள் அன்றோ!
ReplyDelete