Sunday, December 9, 2012

நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

48 comments:

  1. ஓடும் வேகத்தில் சொல்லியுள்ளீர்கள் அருமை ,உண்மை ஜெயிக்க ஓடித்தான் ஆகவேண்டும்

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டிய விஷயங்களை உங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டீர்கள்.அருமை சார்.

    ReplyDelete
  3. //எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை //

    மிகவும் சரி. :)

    ReplyDelete
  4. மிகவும் சரியான வார்த்தைகளில் சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  5. // விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி //

    பொறா'ஆ'மை - இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்

    கவிதை அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. த.ம தில் பரிந்துரை செய்துள்ளேன்

    வாழ்த்துகள் !

    ReplyDelete
  7. எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "

    தெளிவான பார்வை .பாராட்டுக்கள்...

    ReplyDelete
  8. //எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை//

    அர்த்தமுள்ள வரிகள்...பாராட்டுகள் சார்.

    த.ம.4

    ReplyDelete
  9. "பாதிக்க வாய்ப்பே இல்லை
    அவர்களின் இலக்கு நானானதால்
    அவர்கள் குழப்பமடைகிறார்கள்
    எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்


    அருமையான சிந்தனை பாராட்டுகள்.
    மிகவும் ரசித்து படித்தேன்.

    த ம -ஐந்து..

    ReplyDelete
  10. ஆம் சீரான வேகம் தன்னிலக்கு- இது புரியாதவர் பாதை சீரின்றியே போகும்.
    பொறாமை போன்ற தடைகளும் இப்படித்தானே சீரளிக்கும் . இவையெல்லாம் ஓர வயது வரப் புரியும்
    மிக்க நன்று. நல்ல பதிவு. இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. ஒவ்வொரு வரிகளும் அருமை..! எல்லோருமே சீரான வேகத்தில் போய் கொண்டிருந்தால் நாட்டில் போட்டி, பொறாமை ஒழியமல்லவா? அருமையான பாடம் சொல்லும் கவிதை மனதை விட்டு அகலாது.

    ReplyDelete
  12. // எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை //

    அருமை! அருமை!

    ReplyDelete
  13. //எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை//

    இந்த இரண்டு வரி மட்டுமே கம்பீரத்தை உணர்த்துகிறது.

    ReplyDelete
  14. கவியாழி கண்ணதாசன் //

    ஓடும் வேகத்தில் சொல்லியுள்ளீர்கள் அருமை


    தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  15. T.N.MURALIDHARAN //

    சிந்திக்க வேண்டிய விஷயங்களை உங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டீர்கள்.அருமை''
    சார்

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    .

    ReplyDelete
  16. மீனாக்ஷி //

    மிகவும் சரி. :)//
    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி




    ReplyDelete
  17. Lakshmi //

    மிகவும் சரியான வார்த்தைகளில் சொல்லிட்டீங்க//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    .

    ReplyDelete
  18. சேக்கனா M. நிஜாம் //

    // விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி //
    பொறா'ஆ'மை - இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்
    கவிதை அருமை !//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. சேக்கனா M. நிஜாம் //

    த.ம தில் பரிந்துரை செய்துள்ளேன்//

    மிக்க நன்றி

    ReplyDelete
  20. இராஜராஜேஸ்வரி //

    தெளிவான பார்வை .பாராட்டுக்கள்...//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. கோவை2தில்லி //
    .
    அர்த்தமுள்ள வரிகள்...பாராட்டுகள் சார்.//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. semmalai akash //

    அருமையான சிந்தனை பாராட்டுகள்.
    மிகவும் ரசித்து படித்தேன்.//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. koodal bala //

    அருமையான சிந்தனை!//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. kovaikkavi //

    ஆம் சீரான வேகம் தன்னிலக்கு- இது புரியாதவர் பாதை சீரின்றியே போகும்.
    பொறாமை போன்ற தடைகளும் இப்படித்தானே சீரளிக்கும் . இவையெல்லாம் ஓர வயது வரப் புரியும்
    மிக்க நன்று. நல்ல பதிவு. இனிய நல்வாழ்த்து//.

    உடன் வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. உஷா அன்பரசு //

    ஒவ்வொரு வரிகளும் அருமை..! எல்லோருமே சீரான வேகத்தில் போய் கொண்டிருந்தால் நாட்டில் போட்டி, பொறாமை ஒழியமல்லவா? அருமையான பாடம் சொல்லும் கவிதை மனதை விட்டு அகலாது.//

    உடன் வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. தி.தமிழ் இளங்கோ //

    அருமை! அருமை!//

    உடன் வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. அருமையான சிந்தனை.

    ReplyDelete

  28. Sasi Kala //

    இந்த இரண்டு வரி மட்டுமே கம்பீரத்தை உணர்த்துகிறது.//

    உடன் வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ஸாதிகா //

    அருமையான சிந்தனை.//

    உடன் வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. அருமையான கவிதை! நம் ஓட்டம் சீராக இருந்தால் கவலை இல்லைதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. s suresh //

    அருமையான கவிதை! நம் ஓட்டம் சீராக இருந்தால் கவலை இல்லைதான்! வாழ்த்துக்கள்!

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  32. சீரான பயணம் சிந்திக்கவும் வைத்தது ..

    ReplyDelete
  33. இலக்குகளின் தெரிவில் / தெளிவில் இருக்கிறது சூட்சுமம்!

    ReplyDelete
  34. அரசன் சே //

    சீரான பயணம் சிந்திக்கவும் வைத்தது //

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    .

    ReplyDelete
  35. ஸ்ரீராம். //

    இலக்குகளின் தெரிவில் / தெளிவில் இருக்கிறது சூட்சுமம்!//

    உடன் வரவுக்கும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. //எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்//

    பிடித்த சிந்தனை....

    த.ம. 10

    ReplyDelete
  37. நம் இலக்கை அடைவது தான் லட்சியம் என்றால்..
    இடையில் பள்ளம் இருந்தால் என்ன?
    மேடு இருந்தால் என்ன...? கடக்க வேண்டியது தான் நம் கடமை.

    தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை. அருமை இரமணி ஐயா.

    ReplyDelete
  38. //எனக்கு நான் மட்டுமே இலக்கு//
    வைரவரி.அனைவரும் மேற்கொள்ள வேண்டிய ஒன்று!

    ReplyDelete
  39. வெங்கட் நாகராஜ் //

    பிடித்த சிந்தனை....//

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  40. மதுரை சொக்கன் //

    தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை. அருமை இரமணி ஐயா./

    தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி///

    ReplyDelete

  41. The kingdom of heaven is within you என்பதுபோல் The kingdom of hell is also within you. அவனவனை அவனவனே வெற்றி கொள்ள வேண்டும். கவிதை யதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  42. பாதை விலகாமல் பயணம் போகும் ரகசியம்.

    ReplyDelete
  43. G.M Balasubramaniam //

    The kingdom of heaven is within you என்பதுபோல் The kingdom of hell is also within you. அவனவனை அவனவனே வெற்றி கொள்ள வேண்டும். கவிதை யதார்த்தமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.//

    தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. அப்பாதுரை //

    பாதை விலகாமல் பயணம் போகும் ரகசியம்.//

    வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி நன்றி

    ReplyDelete
  45. Dear sakothara.
    are you taking interval? Or traveling some where. I visited here so many time and went back. but I saw your comments some where..other Places ...on new dates...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete