Tuesday, August 27, 2013

நாங்கள்தான் பதிவர்கள் (4 )

எம் படைப்புகள் எல்லாம்...
ஆற்று நீரை எதிர்த்துநிற்கும்  எனும்
அதீத  எண்ணம் ஏதும்
எங்களில் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
மலர்ந்து சிரிக்கும் என்கிற
கற்பனையும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச்  செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லைஎன்பது
எங்களுக்கும் தெரியும்

 சராசரித்  தேவைகளை அடையவே
 திணறும்அல்லல்  கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் துயர் களை
எமக்குத் தெரிந்த மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் பெற்றுக் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
உல்லாச அனுபவங்களை
கொஞ்சம் மசாலாக் கலந்து
விருந்தாக்கி   மகிழ்கிறோம்

எமது எல்லைக்கு  எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
இன்றைய  நோக்கில்
ஒரு சிறிய குழுவே

ஆயினும்
உலகுக்கு ஒரு நாள் புரியும்
எங்கள் அதீத அசுர  பலமே 

44 comments:

  1. நாங்கள் படும் துயர் களை
    எமக்குத் தெரிந்த மொழியில்
    ஒருவருக்கொருவர் சொல்லி
    ஆறுதல் பெற்றுக் கொள்கிறோம்
    >>
    நிஜம்தான். இந்த பதிவுலகம் என்ற வடிகால் இல்லாட்டி எத்தனை வீட்டில் சண்டை நீளுமோ!

    ReplyDelete
  2. ம்ம்.... பெருமைதான் . நமக்கென ஓர் தனி இடம் , வாசகர் வட்டம் என்று ...

    ReplyDelete
  3. உண்மை... உலகிற்கு புரிய வைப்போம்..

    ReplyDelete
  4. ஆயினும்
    உலகுக்கு ஒரு நாள் புரியும்
    எங்கள் அதீத அசுர பலமே

    மிகச்சரியாகச் சொன்னீர்கள் !இரமணி! அந்த நாள் விரைவில் வரத்தான் போகிறது!

    ReplyDelete
  5. மீண்டும் மீண்டும் கவிவரிகள் என்னை மீட்டிப் பார்த்திட வைத்தன.
    அனுபவித்து எழுதிய உண்மை!
    மனதில் நிறந்தது ஐயா!

    வாழ்த்துக்கள்!

    ஐயா.. என் வலைக்கும் - http://ilayanila16.blogspot.de/ - தங்களின் வரவு அமையப் பெற்றால் மிக மகிழும் என் சிந்தை!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  6. //உலகையே ஒரு வீடாக்கி
    அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
    "யாது ஊரே யாவரும் கேளீர் "என// - நினைக்கும் போதே மகிழ்வாக இருக்கு!

    ReplyDelete
  7. இதைவிட அழகாக சொல்ல முடியாது...

    ReplyDelete
  8. //எம் படைப்புகள் எல்லாம்...
    ஆற்று நீரை எதிர்த்துநிற்கும் எனும்
    அதீத எண்ணம் ஏதும்
    எங்களில் எவருக்குமில்லை//
    (அவசியமும் இல்லை, இங்க எல்லாரும் பாரதி இல்லை)

    நட்ச்சத்திர பதிவரின் தன்னடக்கம் ததும்பும் வரிகள்

    அப்ப என்னை போல், தனியா பேசிக்கிறதுக்கு இப்படி பொது வெளியில் எழுதுவது எவ்வளவோ மேல்னு எழுதுபவர்களின் நிலை...!

    பலரது எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே உங்களது வரிகள் இருக்கிறது.. எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  9. உலகையே ஒரு வீடாக்கி
    அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
    "யாது ஊரே யாவரும் கேளீர் "என
    பண்புடன் வாழ முயலும்
    பதிவர்கள் நாங்களெல்லாம்
    இன்றைய நோக்கில்
    ஒரு சிறிய குழுவே

    நிதர்சனம் ததும்பும் வரிகள்..!

    ReplyDelete
  10. உலகையே ஒரு வீடாக்கி
    அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
    "யாது ஊரே யாவரும் கேளீர் "என
    பண்புடன் வாழ முயலும்
    பதிவர்கள் நாங்களெல்லாம்
    இன்றைய நோக்கில்
    ஒரு சிறிய குழுவே//

    உண்மைதான் .
    அழகாய் சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அருமையாக சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
  12. தங்கள் எழுதியது அனைத்துப் பதிவர்களின் ஆழ்மன

    எண்ணங்கள்.ஓய்வுபெற்ற என் போன்றவர்களுக்கு ஒரு வடிகால் .மன நிறைவு, நம் எண்ணங்கள் கொட்டித்தீர்க்க ஒரு இடுகை. இந்த ப்ளாக் மேலும் விரும்பும் மொழியில் எழுத ஆண்டவன் அளித்த வரம்.
    நம்மை இணைய வைத்த இதய தளம். இணைய தளம்.தங்கள் எளிய வெளிப்பாடு .பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. நீங்கள் அற்புதக் கவிதையாய் படைத்திருப்பதை நான் வரிகளாய் எண்ணியிருந்தேன்....

    அருமை உணர்வு....

    ReplyDelete
  14. பதிவர்களை பற்றி சரியான நோக்குடன், சரியான பார்வை.. அருமையான வரிகள் ஐயா

    ReplyDelete
  15. சிறிய குழுக்கள் பெரிதாய் யோசிக்கின்றன.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  16. /ஆயினும்
    உலகுக்கு ஒரு நாள் புரியும்
    எங்கள் அதீத அசுர பலமே / நம்புவோம். / இன்றைய நோக்கில் ஒரு சிறு குழுவே/ பல குழுக்கள்.?

    ReplyDelete
  17. எங்களுக்குள் நாங்களே
    ஒருவருக்கொருவர் பரிமாறி//சேர்ந்தே சுவைப்போம் மகிழ்வோம் என்பது உண்மையே

    ReplyDelete
  18. நம்முடைய அசுர வளர்ச்சியை அடக்க முடியாததால் தான் மீடியாக்கள் நம்மை கண்டுகொள்ளாமல் அடக்கி வாசிக்கின்றனவோ ?

    ReplyDelete
  19. அற்புதமான வரிகள் ரமணி ஐயா..
    விளங்கும் ஒரு நாள்
    பதிவர்களாகிய எம் பிரம்மாக்களின் பலம்
    இந்த உலகுக்கு....

    ReplyDelete
  20. பதிவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் உண்மை வரிகள்.மிகவும் அருமை ஐயா.

    ReplyDelete
  21. அழகாக எடுத்துக் கூறினீர்கள்.

    "எங்களுக்குள் நாங்களே
    ஒருவருக்கொருவர் பரிமாறி
    மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம் "

    ReplyDelete
  22. ராஜி said...

    >>நிஜம்தான். இந்த பதிவுலகம் என்ற வடிகால் இல்லாட்டி எத்தனை வீட்டில் சண்டை நீளுமோ!/
    /
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  23. ஸ்ரவாணி said...//
    ம்ம்.... பெருமைதான் . நமக்கென ஓர் தனி இடம் , வாசகர் வட்டம் என்று ..

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  24. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    உண்மை... உலகிற்கு புரிய வைப்போம்..//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  25. புலவர் இராமாநுசம் said...//
    ஆயினும்
    உலகுக்கு ஒரு நாள் புரியும்
    எங்கள் அதீத அசுர பலமே

    மிகச்சரியாகச் சொன்னீர்கள் !இரமணி! அந்த நாள் விரைவில் வரத்தான் போகிறது!/

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    /

    ReplyDelete
  26. இளமதி said...
    மீண்டும் மீண்டும் கவிவரிகள் என்னை மீட்டிப் பார்த்திட வைத்தன.
    அனுபவித்து எழுதிய உண்மை!
    மனதில் நிறந்தது ஐயா!

    வாழ்த்துக்கள்!/

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//
    /

    ReplyDelete
  27. உஷா அன்பரசு said...//
    //உலகையே ஒரு வீடாக்கி
    அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
    "யாது ஊரே யாவரும் கேளீர் "என// - நினைக்கும் போதே மகிழ்வாக இருக்கு!


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//
    ///

    ReplyDelete
  28. கே. பி. ஜனா... said...//
    இதைவிட அழகாக சொல்ல முடியாது...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  29. NSK said...//

    நட்ச்சத்திர பதிவரின் தன்னடக்கம் ததும்பும் வரிகள்

    அப்ப என்னை போல், தனியா பேசிக்கிறதுக்கு இப்படி பொது வெளியில் எழுதுவது எவ்வளவோ மேல்னு எழுதுபவர்களின் நிலை...!

    பலரது எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே உங்களது வரிகள் இருக்கிறது.. எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. திண்டுக்கல் தனபாலன் said..//.
    அருமை ஐயா..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    .

    ReplyDelete
  31. இராஜராஜேஸ்வரி said...

    நிதர்சனம் ததும்பும் வரிகள்..!/

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  32. கோமதி அரசு said...

    உண்மைதான் .
    அழகாய் சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள்.//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  33. குட்டன் said...//
    அருமையாக சொல்லி விட்டீர்கள்/

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  34. Sethuraman Anandakrishnan said...
    தங்கள் எழுதியது அனைத்துப் பதிவர்களின் ஆழ்மனஎண்ணங்கள்.ஓய்வுபெற்ற என் போன்றவர்களுக்கு ஒரு வடிகால் .மன நிறைவு, நம் எண்ணங்கள் கொட்டித்தீர்க்க ஒரு இடுகை. இந்த ப்ளாக் மேலும் விரும்பும் மொழியில் எழுத ஆண்டவன் அளித்த வரம்.
    நம்மை இணைய வைத்த இதய தளம். இணைய தளம்.தங்கள் எளிய வெளிப்பாடு .பாராட்டுக்கள//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//

    ReplyDelete
  35. ezhil said...//
    நீங்கள் அற்புதக் கவிதையாய் படைத்திருப்பதை நான் வரிகளாய் எண்ணியிருந்தேன்....
    அருமை உணர்வு..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி//


    ReplyDelete
  36. தமிழ்வாசி பிரகாஷ் said...//
    பதிவர்களை பற்றி சரியான நோக்குடன், சரியான பார்வை.. அருமையான வரிகள் ஐயா//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  37. விமலன் said...//
    சிறிய குழுக்கள் பெரிதாய் யோசிக்கின்றன.வாழ்த்துக்கள்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  38. G.M Balasubramaniam said...//

    /ஆயினும்
    உலகுக்கு ஒரு நாள் புரியும்
    எங்கள் அதீத அசுர பலமே / நம்புவோம். /

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/ //


    ReplyDelete
  39. கவியாழி கண்ணதாசன் said..//.
    எங்களுக்குள் நாங்களே
    ஒருவருக்கொருவர் பரிமாறி//சேர்ந்தே சுவைப்போம் மகிழ்வோம் என்பது உண்மையே/

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/ /


    ReplyDelete
  40. Bagawanjee KA said...//
    நம்முடைய அசுர வளர்ச்சியை அடக்க முடியாததால் தான் மீடியாக்கள் நம்மை கண்டுகொள்ளாமல் அடக்கி வாசிக்கின்றனவோ ?//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/ /

    ReplyDelete
  41. மகேந்திரன் said...//
    அற்புதமான வரிகள் ரமணி ஐயா..
    விளங்கும் ஒரு நாள்
    பதிவர்களாகிய எம் பிரம்மாக்களின் பலம்
    இந்த உலகுக்கு./

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/ /

    ReplyDelete
  42. Tamizhmuhil Prakasam said...//
    பதிவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் உண்மை வரிகள்.மிகவும் அருமை ஐயா.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  43. மாதேவி said...
    அழகாக எடுத்துக் கூறினீர்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete