Tuesday, October 1, 2013

ஜீவாத்மாவும் மகாத்மாவும்

முயன்று அதிகத் திறன்கொண்டவனை
"ஆசீர்வாதிக்கபட்டவன் " என
உயர்த்தி உச்சத்தில் வைப்பதில்
சோம்பித் திரிகிறவர்களுக்கு
ஒரு வசதி இருக்கத்தான் இருக்கிறது

முயன்று அதிகப் பலங்கொண்டவனை
"அசகாய சூரன் " என
வேறுபடுத்தி உயர்த்திச் சொல்வதில்
முயற்சியைத் தவிர்க்கிறவர்களுக்கு
நல்ல பலன் இருக்கத்தான் செய்கிறது

முயன்று அதிக உச்சம் தொடுபவனை
"அதிர்ஷ்டக்காரன் "எனப்
புகழ்ந்து  தனித்து வைப்பதில்
இலக்கற்றுத் திரிபவர்களுக்கு
ஒரு நன்மை இருக்கத்தான் இருக்கிறது

வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவரை
"நல்ல ஆத்மா " எனக் கூறாது
"மகாத்மா "எனப் புகழ்ந்து கொண்டாடுவதில் கூட
மாக்களாக வாழும் ஜீவாத்மாக்களுக்கு
ஒரு சுயநல நோக்கமிருக்கத்தான் இருக்கிறது

60 comments:

  1. “மாக்களாக வாழும் ஜீவாத்மா!!!“

    உண்மையான கருத்துக் கவிதை.
    அருமை இரமணி ஐயா.

    ReplyDelete
  2. எதிலும் ஒரு சுயநலம் என ஆனதே இவ்வையம்.. :-( கவிதை அருமை ஐயா!

    ReplyDelete
  3. மிக நல்ல வரிகள். நன்று..நன்று...
    வேறு ஏதும் எழுதத் தோன்றவே இல்லையே!....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. //வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவரை
    "நல்ல ஆத்மா " எனக் கூறாது
    "மகாத்மா "எனப் புகழ்ந்து கொண்டாடுவதில் கூட
    மாக்களாக வாழும் ஜீவாத்மாக்களுக்கு
    ஒரு சுயநல நோக்கமிருக்கத்தான் இருக்கிறது//

    ஆம் ஒருநாள் அரசு விடுமுறை கிடைக்கிறதே !

    மகாத்மா காந்திக்கு ஜே !!

    ReplyDelete
  5. கவிதை மிக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  6. வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவரை
    "நல்ல ஆத்மா " எனக் கூறாது
    "மகாத்மா "எனப் புகழ்ந்து கொண்டாடுவதில் கூட
    மாக்களாக வாழும் ஜீவாத்மாக்களுக்கு
    ஒரு சுயநல நோக்கமிருக்கத்தான் இருக்கிறது

    ஆதங்கமான பகிர்வுகள்..!

    ReplyDelete
  7. சிறப்பான வரிகள் உண்மை தான் ஐயா...

    ReplyDelete
  8. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    ReplyDelete
  9. மாக்களையும் யோசிக்க வைக்கும் வரிகள் அற்புதம்

    ReplyDelete
  10. மகாத்மாக்கள் இன்னும் வேண்டும் நமக்கு...!

    ReplyDelete
  11. ரசிக்கும்படியான அழகிய கவிதை

    ReplyDelete
  12. மகாத்மா என்று சொல்லி அவரை உயர்த்தி வைத்து விட்டு, நாம் அந்த மகாத்மா செய்ததை செய்யாம ஒதுங்க இந்த "மகாத்மா" அவசியமாக இருக்கிறது இல்லையா ?

    ReplyDelete
  13. மிக அருமையான கவிதை.
    உச்சத்தில் வைத்துவிட்டு நம் போக்கில் போகும் இயல்பை அழுத்தமாய் சொல்லி விட்டீர்கள். சபாஷ்

    ReplyDelete
  14. //மாக்களாக வாழும் ஜீவாத்மாக்கள்// உண்மை நிலை தெரிந்து வருத்தம் தான் மிஞ்சுகிறது.....

    நல்ல கவிதை....

    த.ம. 8

    ReplyDelete
  15. மகாத்மாவை பிடிக்கும் ,மகாத்மா ஆகத்தான் யாருக்கும் பிடிக்கவில்லை !காரணம்,சுயநலம் தான் !

    ReplyDelete
  16. நல்ல கருத்துள்ள வரிகள்.
    பகவான்ஜி சொல்வது மிகச் சரி

    ReplyDelete
  17. வணக்கம்
    ஐயா

    ஜீவாத்மாவும் மகாத்மாவும் என்ற தலைப்பில் பின்னிய கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. மிக மிக அருமையான கருத்துக் கவி ஐயா!

    மகாத்மா, நல்ல ஆத்மா சொற்களின் உள்ளார்ந்த கருத்தினை அழகாகச் சொன்ன சிறந்த வரிகள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. மாக்களாக வாழும் ஜீவாத்மாக்களுக்கு
    ஒரு சுயநல நோக்கமிருக்கத்தான் இருக்கிறது

    ஏனோ தெரியவில்லை ! இன்று வாழும் பெருபாலான மக்களுக்கு சுயநலமேப் பெரிதாகப்
    போய்விட்டது! இரமணி!

    ReplyDelete
  20. ஏடுகளில் மட்டுமே வாழும் மகாத்மா.. சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.

    ReplyDelete
  21. இன்றைய இளைய ஆத்மாக்களுக்கு, மகாத்மாவை புரிந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கும் செய்தி!

    ReplyDelete
  22. அழகாய் சொல்லி விட்டீர்கள் வாழ்த்துகக்ள்.த.ம 13

    ReplyDelete
  23. உழைத்து முன்னேறியவர்களை அவர்தம் செயல்களுக்காகக் கூட பாராட்டுவதிலும் ஒரு தனித்திறமை நம்மில் பலருக்கு. காரணங்களா முக்கியம் அவர்கள் உச்சத்தில் . பலரும் அண்ணாந்து பார்க்க.....!

    ReplyDelete
  24. உண்மை! நம் தாழ்ந்த நிலையை சுட்டிக்காட்டி விழிப்புறச் செய்பவனை ஒன்று தட்டி அடக்குகிறோம், அடக்க முடியாவிட்டால் அவனை உச்சத்தில் தூக்கி உட்கார வைத்துவிட்டு மறுபடியும் தூங்கப்போகிறோம். நன்றாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  25. மகாத்மாவை மறக்கக்கூடாதுன்னுதான் ரூபாய் நோட்டுலேயே அவரு படத்தை அச்சடிச்சிருக்காங்க! இருந்தாலும், நாம எம்புட்டுக் கில்லாடிங்க - மறந்து காட்டினோமா இல்லையா? :-) சரியாத்தான் சொல்லியிருக்கீங்க ரமணிஜீ!

    ReplyDelete
  26. மகாத்மாவை மறந்து விட்டார்கள் ஐயா. மகாத்மா படம் அச்சிட்ட நோட்டிற்காக அலையாய் அலைகிறார்கள்.

    ReplyDelete
  27. வித்தியாசமான சிந்தனை! அருமை ஐயா! நன்றி!

    ReplyDelete
  28. சராசரி மக்களின் மனநிலையை அழகாகப் படம்பிடித்த வரிகள். தங்கள் சிந்தனை கண்டு எப்போதும் போலவே வியந்து பாராட்டுகிறேன். பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  29. நல்ல ஆத்மா இன்று அரிதாகி வருகிறதே.......அருமையான கவிதை வரிகள், காந்தி கண் முன்னே வந்தது போல இருந்தது.

    ReplyDelete
  30. அருணா செல்வம் //

    ..தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. கிரேஸ் //

    .தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. .kovaikkavi //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. Seeni//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  35. கோமதி அரசு //.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  36. இராஜராஜேஸ்வரி said...

    ஆதங்கமான பகிர்வுகள்..!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. திண்டுக்கல் தனபாலன் //

    சிறப்பான வரிகள் உண்மை தான் ஐயா...//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. கவியாழி கண்ணதாசன் said...//
    மாக்களையும் யோசிக்க வைக்கும் வரிகள் அற்புதம்/


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  39. கவிதை வீதி... // சௌந்தர் // said..//
    .
    ரசிக்கும்படியான அழகிய கவிதை//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  40. MANO நாஞ்சில் மனோ said...
    மகாத்மா என்று சொல்லி அவரை உயர்த்தி வைத்து விட்டு, நாம் அந்த மகாத்மா செய்ததை செய்யாம ஒதுங்க இந்த "மகாத்மா" அவசியமாக இருக்கிறது இல்லையா ?//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  41. ரிஷபன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பதிவின் உட்பொருள் அறிந்து அளித்த
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. வெங்கட் நாகராஜ் /

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/


    ReplyDelete
  43. Bagawanjee KA said...''
    மகாத்மாவை பிடிக்கும் ,மகாத்மா ஆகத்தான் யாருக்கும் பிடிக்கவில்லை !காரணம்,சுயநலம் தான் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பதிவின் உட்பொருள் அறிந்து அளித்த
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. T.N.MURALIDHARAN said...
    நல்ல கருத்துள்ள வரிகள்.//

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  45. 2008rupan said...

    ஜீவாத்மாவும் மகாத்மாவும் என்ற தலைப்பில் பின்னிய கவிதையின் வரிகள் அருமை

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  46. இளமதி said...//
    மிக மிக அருமையான கருத்துக் கவி ஐயா!

    /தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  47. புலவர் இராமாநுசம் said...//
    மாக்களாக வாழும் ஜீவாத்மாக்களுக்கு
    ஒரு சுயநல நோக்கமிருக்கத்தான் இருக்கிறது///

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  48. Sasi Kala said...
    ஏடுகளில் மட்டுமே வாழும் மகாத்மா.. சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  49. ரமேஷ் வெங்கடபதி said...//
    இன்றைய இளைய ஆத்மாக்களுக்கு, மகாத்மாவை புரிந்து கொள்ள முடியாதது வருத்தமளிக்கும் செய்தி//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. ஸாதிகா said...//
    அழகாய் சொல்லி விட்டீர்கள் வாழ்த்துகக்ள்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. G.M Balasubramaniam said..//.

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. Srinivasan G said...
    உண்மை! நம் தாழ்ந்த நிலையை சுட்டிக்காட்டி விழிப்புறச் செய்பவனை ஒன்று தட்டி அடக்குகிறோம், அடக்க முடியாவிட்டால் அவனை உச்சத்தில் தூக்கி உட்கார வைத்துவிட்டு மறுபடியும் தூங்கப்போகிறோம்//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பதிவின் உட்பொருள் அறிந்து அளித்த
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. சேட்டைக் காரன் said...
    மகாத்மாவை மறக்கக்கூடாதுன்னுதான் ரூபாய் நோட்டுலேயே அவரு படத்தை அச்சடிச்சிருக்காங்க! இருந்தாலும், நாம எம்புட்டுக் கில்லாடிங்க - மறந்து காட்டினோமா இல்லையா? :-) சரியாத்தான் சொல்லியிருக்கீங்க ரமணிஜீ!//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பதிவின் உட்பொருள் அறிந்து அளித்த
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. கரந்தை ஜெயக்குமார் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. s suresh said.//..
    வித்தியாசமான சிந்தனை! அருமை/

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete
  56. கீத மஞ்சரி said...//
    சராசரி மக்களின் மனநிலையை அழகாகப் படம்பிடித்த வரிகள். தங்கள் சிந்தனை கண்டு எப்போதும் போலவே வியந்து பாராட்டுகிறேன்//


    . தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பதிவின் உட்பொருள் அறிந்து அளித்த
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. Suresh Kumar said..//.
    நல்ல ஆத்மா இன்று அரிதாகி வருகிறதே.......அருமையான கவிதை வரிகள், //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி/

    ReplyDelete