Monday, January 13, 2014

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

புராணப் புனைவுக் கதைகள்
தந்த நம்பிக்கையில்
கொண்டாடும் நாட்களை விட

சிறப்பென  உலகு சொல்லும்
நாட்களை மதித்துக்
கொண்டாடும் நாட்களை விட

அறிந்தோ அறியாமலோ சேர்ந்த
கழிவுகளைக் கழித்துக்
கொண்டாடும் இந்த நாளே

நம் உலக வாழ்வுக்கு
கண்கண்ட சக்தியைக்  வணங்கிக்
கொண்டாடும்  இந்த நாளே

விலங்கினமாயினும்
நம்முடன் உழைத்துத் தவித்ததைக்
கொண்டாடும் இந்த நாளே

நம்முடனே நித்தமிருந்து
நம் உயர்வுக்கு உதவுவோரைக் கண்டுக்
கொண்டாடும் இந்த நாளே

உலகத் திருநாள் எதனினும்
உன்னதத் திருநாள் என்பதை
விளக்கிச் சொல்ல வேண்டுமோ ?

தமிழனின் உன்னதத்தை உலகினுக்கு
உணர்த்திடும் திருநாள் என்பதை
எடுத்துச் சொல்ல வேண்டுமோ ?


(பதிவுலக உறவுகள் அனைவருக்கும்
அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் )

32 comments:

  1. மிக அருமையான கவிதையை தந்து அனைவருக்கும் வாழ்த்து சொன்ன உங்களுக்கு எனது நன்றிகள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் tha.ma 2

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    விலங்கினமாயினும்
    நம்முடன் உழைத்துத் தவித்ததைக்
    கொண்டாடும் இந்த நாளே

    சிறப்பான கருத்துள்ள கவிதை... வாழ்த்துக்கள் ஐயா.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்..ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம 3வது வாக்கு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. தங்கள் வாழ்த்துக்கு நன்றி அய்யா,
    எங்கள் பொங்கல் வாழ்த்துகளையும் ஏற்று, மகிழ்ச்சி பொங்கட்டும்... இல்லத்திலும் உள்ளத்திலும்.

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அண்ணா அவர்களுக்கும், நமது வாசக நண்பர்கள் அனைவருக்கும்...இனிய பொங்கல் மற்றும் திமுக புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு. பதிவுலக உறவுகள் அனைவருக்கும் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. உலகத் திருநாள் எதனினும்
    உன்னதத் திருநாள்
    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  10. பொங்கல் வாழ்த்தை மிக அருமையான கவிதை வடித்து அதன் மூலம் சொன்னதற்கு மிக்க நன்றி!
    வாழ்த்துக்கள்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  11. வாழ்த்துக் கவிதை அருமை. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. மிகவும் அருமையாக பொங்கல் திருநாளைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!

    ReplyDelete
  13. கவிதை அருமை!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. மனம் இனிக்கும் தைப் பொங்கல் +புத்தாண்டு வாழ்த்துக்கள் ரமணி ஐயா !
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டும் மகிழ்ச்சி
    பொங்கும் ஆண்டாக மலரட்டும் .

    ReplyDelete
  15. சிறப்பான கவிதை வரிகளுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    ரமணி ஐயா !

    ReplyDelete
  16. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete

  17. வணக்கம்!

    தமிழ்மணம் 7

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  18. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. எனதினிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete

  20. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள் ( என் தளத்தில் ஒரு சிறு கவிதையுடன் )

    ReplyDelete
  22. ரமணி ஐயா இது இன்றைய பொங்கல் திரு நாள் சிறப்புப் பகிர்வு இதனைக் கண்டு மகிழ அன்போடு தங்களையும் அழைக்கின்றேன் !
    http://rupika-rupika.blogspot.com/2014/01/blog-post_13.html

    ReplyDelete
  23. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நன்றி! எனது உளங்கனிந்த
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. பொங்கல் நல்வாழ்த்துகள் ரமணி

    ReplyDelete
  26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

    ReplyDelete
  27. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ரமணி அய்யா

    ReplyDelete
  28. சிறப்பான பகிர்வு.

    த.ம. +1

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  29. நம் உலக வாழ்வுக்கு
    கண்கண்ட சக்தியைக் வணங்கிக்
    கொண்டாடும் நாளாக இந்நாளைப் பாராட்டும் விதம் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. மிக மிக அருமையான கவிப் படையல் ஐயா!

    ஆச்சரியம் என்னவென்றால் இதே கருத்துடன் வாழ்த்துக் குறளாக எழுதியுள்ளேன் பாருங்கள்!..

    பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
    எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. இங்கு கருத்திடும்போது குறள் ஏன் பிரிந்து பதியப்படுகிறது எனத்தெரியவில்லை...
    மீண்டும் முயன்றும் பிரிந்தே பதிவாகியுள்ளது...

    பொறுத்திடுங்கள்!..

    ReplyDelete