Wednesday, December 10, 2014

கவிதைத் தாய்க்குச் செய்யும் தொண்டு

பாட்டுக் கூட பேச்சைப் போல
சுலுவா இருக்கணும் மாமா-அதைக்
கேட்கும் போதே மனசுத் தானா
துள்ளிக் குதிக்கணும் மாமா

நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
ஏதும் தவறியும் மாமா-உன்
பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
கவனம் கொள்ளணும் ஆமா

நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
காத்தைப் போலவும் மாமா -ஓடும்
ஆத்து நீரில் மிதந்து போகும்
பூவைப் போலவும் மாமா

ஆத்தா தூக்கப்  பொங்கிச் சிரிக்கும்
பாப்பா போலவும் மாமா-உன்
பாட்டு என்றும் இயல்பா  இருக்கணும்
சொல்லிப் புட்டேன் ஆமா

எதுகை மோனை தேடி அலையும்
நிலைமை உனக்குமே வந்தா-பாட்டில்
புதுசா சொல்ல விஷயம் தேடி
அலையும் கஷ்டமும் வந்தா

 எழுதும் ஆசைய விட்டு நீயும்
வெளியே வந்துடு மாமா -அதுவே
கவிதைத்  தாய்க்கு நாம  செய்யும்
அருமைத்  தொண்டுதான் மாமா

23 comments:

  1. வெளியே வரவே வேண்டாம். கவிதைகள் தொடரட்டும்! :)))

    புதிய சந்தத்தில் கவிதை ஜோர்!

    //நிலமை உனக்குமே வந்தா-பாட்டில்//

    நிலைமை உனக்கும் வந்தா என்று வந்தால் இடிக்காமல் இருக்குமோ!?!

    ReplyDelete
  2. எழுதும் ஆசைய விட்டு நீயும்
    வெளியே வந்துடு மாமா -அதுவே
    கவிதைத் தாய்க்கு நாம செய்யும்
    அருமைத் தொண்டுதான் மாமா------முடியலையே.

    ReplyDelete

  3. ஸ்ரீராம். said..//.
    நிலைமை உனக்கும் வந்தா என்று வந்தால் இடிக்காமல் இருக்குமோ!?!//

    கருத்துக்கு மிக்க நன்றி மாற்றிவிட்டேன்
    நெலமை என இருந்தால் இன்னும் நல்லா இருக்குமோ

    ReplyDelete
  4. Sethuraman Anandakrishnan said...
    எழுதும் ஆசைய விட்டு நீயும்
    வெளியே வந்துடு மாமா -அதுவே
    கவிதைத் தாய்க்கு நாம செய்யும்
    அருமைத் தொண்டுதான் மாமா------முடியலையே.//

    இது உங்களுக்கானதில்லை
    ஏனெனில் உங்கள் பதிவுகள் அனைத்தும்
    கனமானவை மட்டும் அல்ல
    அதிகப் பயனுள்ளதும் கூட

    ReplyDelete
  5. KILLERGEE Devakottai said...
    அருமை ஐயா //
    உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் வாக்களித்தமைக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. எழுதும் ஆசைய விட்டு நீயும்
    வெளியே வந்துடு மாமா -அதுவே
    கவிதைத் தாய்க்கு நாம செய்யும்
    அருமைத் தொண்டுதான் மாமா///

    நீங்க சொல்லுறதும் உண்மைதான் ஆமா...

    ReplyDelete
  7. இப்படி ஒரு ஆசையா?

    ReplyDelete
  8. ஆஹா! ரெண்டுவரி படிக்கும்போதே மனசு துள்ளி குதிக்குதே!! அருமை அய்யா!

    ReplyDelete
  9. சூப்பரா சொன்னீங்க! எழுத கஷ்டப்படக் கூடாது!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. Earn from Ur Website or Blog thr PayOffers.in!

    Hello,

    Nice to e-meet you. A very warm greetings from PayOffers Publisher Team.

    I am Sanaya Publisher Development Manager @ PayOffers Publisher Team.

    I would like to introduce you and invite you to our platform, PayOffers.in which is one of the fastest growing Indian Publisher Network.

    If you're looking for an excellent way to convert your Website / Blog visitors into revenue-generating customers, join the PayOffers.in Publisher Network today!


    Why to join in PayOffers.in Indian Publisher Network?

    * Highest payout Indian Lead, Sale, CPA, CPS, CPI Offers.
    * Only Publisher Network pays Weekly to Publishers.
    * Weekly payments trough Direct Bank Deposit,Paypal.com & Checks.
    * Referral payouts.
    * Best chance to make extra money from your website.

    Join PayOffers.in and earn extra money from your Website / Blog

    http://www.payoffers.in/affiliate_regi.aspx

    If you have any questions in your mind please let us know and you can connect us on the mentioned email ID info@payoffers.in

    I’m looking forward to helping you generate record-breaking profits!

    Thanks for your time, hope to hear from you soon,
    The team at PayOffers.in

    ReplyDelete
  11. ஆத்தா தூக்கப் பொங்கிச் சிரிக்கும்
    பாப்பா போலவும் மாமா-உன்
    பாட்டு என்றும் இயல்பா இருக்கணும்
    சொல்லிப் புட்டேன் ஆமா

    எளிமை! இனிமை! அருமை! கண்டேன்! விண்டேன்!

    ReplyDelete
  12. ரசித்தோம்! மிகவு மிகவும்! ஆனால் வெளியே வரவேண்டாமே! தொடருங்கள் தங்கள் கவிதைகளை! நாங்கள் ரசிக்க...

    ReplyDelete
  13. நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
    காத்தைப் போலவும் மாமா -ஓடும்
    ஆத்து நீரில் மிதந்து போகும்
    பூவைப் போலவும் மாமா//

    கவிதைக்கு மென்மைதான் அழகு .
    அருமை.

    ReplyDelete
  14. எதுகை மோனையுடன் களை கட்டுகிறது கவிதை

    ReplyDelete
  15. கவிதைத்தாய்க்குச்செய்யும் தொண்டு ரசிக்கவைத்தது.

    ReplyDelete
  16. மாமனுக்கு என்றுமே இல்லை கற்பனைப் பஞ்சம் ,இப்படி ஒரு புள்ளே பக்கத்தில் இருக்கிறவரைக்கும் :)
    த ம +1

    ReplyDelete
  17. புதிதாகக் கவிதை எழுத ஆரம்பிப்பவர்கள் படிக்கவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரரே!

    \\நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
    ஏதும் தவறியும் மாமா-உன்
    பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
    கவனம் கொள்ளணும் ஆமா//

    சிறப்பான வரிகளுடன் செதுக்கிய அழகிய கவிதை!!

    கடைசி நான்கு வரிகள் சிந்திக்க வைக்கும் உண்மை ! பகிர்ந்தமைக்கு நன்றி!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  19. ஆஹா..... ரசித்தேன் நண்பரே....

    த.ம. +1

    ReplyDelete