எதிரிகளை மிகச் சரியாக
அடையாளம் கண்டுகொள்
அவன் கருத்துக்கள் முழுமையாக
உன்னைச் சேரும்படி
வழிவகைச் செய்து கொள்
ஏனெனில்
உன் திட்டம் குறித்து
அதன் பலவீனம் குறித்து
உன் செயல்பாடுகள் குறித்து
உன்னை விட அவனே அதிகம் யோசிக்கிறான்
அது உனக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்
துதிப் பாடுபவனைக்
கொஞ்சம் எட்டியே வை
அவன் பாராட்டுக்கள் துளியும்
உன்னில் ஒட்டி விடாதபடி
எப்போதும் தட்டிவிட்டுக் கொண்டே இரு
ஏனெனில்
உன் செயல்பாடுகளில்
ஒரு அலட்சியம் வரவும்
அதன் காரணமாய்
உன் வேகம் குறையவும்
நிச்சயம் கூடுதல் வாய்ப்பிருக்கிறது
ஆலோசனை சொல்பவனிடம்
கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு
அவன் அலோசனைகள் எதையும்
அலசி ஆராயாது உன்னுள்
அடுக்கி வைக்கத் துவங்காதே
ஏனெனில்
முன் இருவரை விட
உன்னிடம் மிகவும் நெருங்கவும்
உனக்கே அறியாது உன் இலக்குகளை
மாற்றிவிடும் அதீத ஆற்றலும்
இவனிடம்தான் அதிகம் உள்ளது
அடையாளம் கண்டுகொள்
அவன் கருத்துக்கள் முழுமையாக
உன்னைச் சேரும்படி
வழிவகைச் செய்து கொள்
ஏனெனில்
உன் திட்டம் குறித்து
அதன் பலவீனம் குறித்து
உன் செயல்பாடுகள் குறித்து
உன்னை விட அவனே அதிகம் யோசிக்கிறான்
அது உனக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்
துதிப் பாடுபவனைக்
கொஞ்சம் எட்டியே வை
அவன் பாராட்டுக்கள் துளியும்
உன்னில் ஒட்டி விடாதபடி
எப்போதும் தட்டிவிட்டுக் கொண்டே இரு
ஏனெனில்
உன் செயல்பாடுகளில்
ஒரு அலட்சியம் வரவும்
அதன் காரணமாய்
உன் வேகம் குறையவும்
நிச்சயம் கூடுதல் வாய்ப்பிருக்கிறது
ஆலோசனை சொல்பவனிடம்
கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு
அவன் அலோசனைகள் எதையும்
அலசி ஆராயாது உன்னுள்
அடுக்கி வைக்கத் துவங்காதே
ஏனெனில்
முன் இருவரை விட
உன்னிடம் மிகவும் நெருங்கவும்
உனக்கே அறியாது உன் இலக்குகளை
மாற்றிவிடும் அதீத ஆற்றலும்
இவனிடம்தான் அதிகம் உள்ளது
எளியதாக - இனியதாக - நல்ல அறிவுரை..
ReplyDeleteநலம் வாழ்க!..
நல்ல...தெளிவான...ஆராய்ச்சி...கவிதையாய் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteதம 2
ReplyDeleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteஒவ்வொருவரிடமும், எப்படி பழக வேண்டுமென்று ஆராய்ந்து கணித்து எழுதியிருக்கிறீர்கள். தங்கள் கணிப்பு சரிதான்.! பகிர்ந்தமைக்கு என் பணிவான நன்றிகள்..
தங்களுக்கும் இனிய உழவர், மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நல்ல அறிவுரை.
ReplyDeleteபகைவனுடன் மட்டுமல்ல ,இந்த பகவான்ஜீவுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் நல்லதே நடக்கும் என்று இந்த இனிய தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன் :)
ReplyDeleteத ம +1
அறிவுரை நன்று!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
சிறப்பான கருத்தாடல் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.
த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
என் வெற்றிகளுக்கு
ReplyDeleteஉறுதுணையாக இருந்தவன்
என் நண்பன்...!
இந்த வெற்றிக்காக
என்னை உழைக்கவைத்தவன்
என் எதிரி..!
அழகிய படைப்பு
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅனுபவ பாடமென்பர்.
ஏதேது
இது
அனுபவித்ததை
அனுபவித்து பதிவிட்ட கவிதையாய் தெரிகிறதே.
இருப்பினும் அந்த அனுபவத்தின் வலி எனக்கும்
உள்ளது.
வாழ்க்கை தத்துவம் கவிஞரே...
ReplyDeleteநம்மை முன்னேற வைக்கும் நண்பன் தான் எதிரி...! அருமை ஐயா...
ReplyDeleteஅருமை அய்யா. தம+1
ReplyDeleteமிகச் சரியான உண்மை !பகிர்வுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா .
ReplyDeleteபகைவனும் முக்கியம்தான்..
ReplyDeleteஅருமை
ReplyDeleteதம +1
அட! அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteநூற்றுக்கு நூறு உண்மை. நான் அனுபவத்தில் கண்டது.
ReplyDeleteமிகவும்சரியே! நல்ல அறிவுரை கவிதை வடிவில்...வாழ்த்துக்கள்! சார்!
ReplyDeleteபகைவனினும் கொடியவனா ஆலோசனை சொல்பவன்...?! இனி யாருக்கும் யோசனை சொல்லக் கூடாதோ...?! நூதனமாய் அமைந்த பாடுபொருள் பலவித சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. நீங்கள் சொல்வது மிகச் சரி என்றால் அதுவும் முகஸ்துதி ஆகிவிடுமோ...:)
ReplyDeleteநல்ல பயனுள்ள அறிவுரைகள்.
ReplyDelete//நீங்கள் சொல்வது மிகச் சரி என்றால் அதுவும் முகஸ்துதி ஆகிவிடுமோ...:) - நிலாமகள் //
ரஸித்தேன். பாராட்டுக்கள்.