நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
வழித் தடங்கள்
ஏதும ற்ற வெளிதனில்
என்னை விட்டுப் போ
நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை
என்னைப் புரிந்து கொள்
இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டுத் தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு
எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன
என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்
நகர்ந்து எனக்கு வழிவிடு
என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு
ஒரு தொண்டனாய்
ஒரு பூசாரியாய்
ஒரு புத்தப் பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு தலைவனாய்
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு
அடர்ந்த காட்டினுள்
வழித் தடங்கள்
ஏதும ற்ற வெளிதனில்
என்னை விட்டுப் போ
நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை
என்னைப் புரிந்து கொள்
இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டுத் தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு
எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன
என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்
நகர்ந்து எனக்கு வழிவிடு
என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு
ஒரு தொண்டனாய்
ஒரு பூசாரியாய்
ஒரு புத்தப் பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு தலைவனாய்
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு
////விவேகத்திற்குப் பின் வேகம் வர
ReplyDeleteசந்தர்ப்பமே இல்லை///
எவ்வளவு எளிமையாய்
மிகப் பெரிய உண்மையை
விளக்கியுள்ளீர்கள்
நன்றி ஐயா
// விழுந்தாலும் எழப் பழகு //
ReplyDeleteஅருமை ஐயா...
வணக்கம்
ReplyDeleteஐயா
கருத்த மிக்க வரிகள்...சொல்வது உண்மைதான்... படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னை நானே அறிய விடாமல் யார் தடுக்கிறார்கள்.
ReplyDelete
ReplyDeleteG.M Balasubramaniam said...
என்னை நானே அறிய விடாமல் யார் தடுக்கிறார்கள்.
வேறு யார் ?
நம் மீது அதிக அன்பும்
அக்கறையும் கொண்டவர்கள்தான்
விழுந்தாலும் எழப்பழகு என்பதானது தன்னம்பிக்கையைத் தருகிறது.
ReplyDeleteஉண்மைதான் வழிகாட்டுதல் ஓரளவுக்கு மட்டுமே வேண்டும்! தன்னைத் தானே அறிவதில் ஓர் சுவாரஸ்யம் மட்டுமல்ல அனுபவமும் பிறக்கிறது! நன்றி!
ReplyDeleteஅருமை.
ReplyDelete
ReplyDeleteஎன்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு//
ஆம்..விட்டு விடாமல்...துங்குவது தான் பாதி காரணம்
//எத்தகைய சுவையான பழமாயினும் உரித்துக் கொடுத்தவை யெல்லாம் கசக்கவே செய்கின்றன//
ReplyDelete:) மிகவும் அருமையான உதாரணங்களுடன் கூடிய அற்புதமான படைப்பு :)