Friday, July 21, 2017

உனக்கும் வருமடி "வளர்மதி "ஆப்பு...

அண்ணே!
ஒரு சின்ன டவுட் அண்ணே
சமூகத்தைக் கெடுப்பது என்றால்
சமூக  அமைதியைக் கெடுப்பது
என்றால் என்ன அண்ணே ?

தம்பி
சமூகத்துக்கு எது எது
தேவையற்றதோ
எதை எதைச் செய்தால்
அது
இன்னும் நாசமாகுமோ
அதையெல்லாம் செய்வது
சமூகத்தைக் கெடுப்பது

என்ன செய்தாலும்
பொறுத்துக் கொண்டு
ஸ்மரணையற்றுக் கிடக்கும்
சமூகத்தைத் தட்டியெழுப்ப முயன்றால்
அது சமூக அமைதியைக் கெடுப்பது

சமூகத்தைக் கெடுக்க
உறுதுணையாய் இருந்தால்
சம்பள உயர்வு இரண்டு பங்கு
நிச்சயம் உண்டு

மாறாக
அதற்கு எதிராக
ஏதேனும் பிரச்சனை செய்தால்
தண்டனை என்பது
நிச்சயம் உண்டு

அண்ணே
அப்ப இந்த ஜன நாயகம்
மக்கள் உரிமை
அப்படி இப்படிச் சொல்றதெல்லாம்
என்ன அண்ணே

போடா மண்டு
எந்த ஊரில் இருந்துகிட்டு
என்ன என்னவோ எல்லாம்
உளறிக்கிட்டு

உன் வீட்டுக்கிட்டயே
கடையைத் திறந்தாச்சு
போய் ஒரு ஆஃப் அடிச்சிட்டு
பேசாமத் தூங்கு

இல்லாட்டி
உனக்கும் வருமடி
"வளர்மதி "ஆப்பு

6 comments:

  1. நாடாளும் ஆட்சியாளர்கள் சொந்த மக்களையே கொள்ளையடிக்கும் கலிகாலம்! ஆமாம், அதென்ன வளர்மதி ஆப்பு?

    தம +1

    ReplyDelete
  2. யாரந்த வளர்மதி!இரமணி!

    ReplyDelete
  3. பாவம் அய்யா ,அந்த வளர்மதி ....சின்ன பெண்ணைக் குண்டாஸ் ஆக்ட்டில் கைது செய்திருப்பது :(

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. இங்கே இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ......

    ReplyDelete
  5. அருமையான சமூகப் பிரக்ஞை?

    ReplyDelete
  6. ஹஹஹஹ்ஹ கொஞ்சம் காமெடி நக்கல் கலந்து.ஆதங்கத்தை வெளிப்படுத்தியதும்..நன்றாக இருக்கிறது

    ReplyDelete