Thursday, April 5, 2018

அந்த முறையே கவிதை எனநாம் தெளிவோம்

சொல்ல நினைப்பதை
தெளிவாய் அறிவோம்-பின்
தெளிவாய் அறிந்ததைத்
தெளிவாய்ச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
உணர்ந்துத் தெளிவோம்-பின்
உணர்ந்துத் தெளிந்ததை
உணரச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
முழுதாய் அறிவோம்-பின்
முழுதாய் அறிந்ததை
நிறைவாய்ச் சொல்வோம்

சொல்ல நினைப்பதன்
பயனை அறிவோம்-பின்
பயனதைப் பிறரும்
பயனுறச் சொல்வோம்

சொல்ல நினைப்பதை
முறையாய்ச் சொல்வோம்-அந்த
முறையே கவிதை
எனநாம் தெளிவோம்

6 comments:

  1. சொன்ன விதம் நன்று.
    இது எல்லாவற்றிற்கும் பொருந்துமோ!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  2. அறிந்து தெரிந்து புரிந்து கொள் - சிறப்பு...

    ReplyDelete
  3. இப்படிப்ப்ரியும்படி சொன்னாலேயே அது கவிதையாகுமா

    ReplyDelete
  4. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு கவிதை. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete