மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்
கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்
மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்
தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்
இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே
கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்
கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்
மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்
தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்
இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே
கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே
This comment has been removed by the author.
ReplyDeleteJust pass
DeleteJust Super Sir/-
ReplyDeleteஇன்று போல் என்றும் இளய மனம் கொண்டிருக்கக் கடவீர்.
வாழ்த்துக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Deleteரசித்தேன் ஐயா...
ReplyDeleteஅருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteசெயற்கை இல்லாவிடில்
ReplyDeleteஎல்லாம் இயற்கையே
செயற்கைக்கு செலவு செய்ய
கையில் காசு வேண்டும்
அது இயற்கையை
மாசு படுத்தும்
இயற்கையோ இலவசமாய் அளவில்லாது
வழங்கி மனிதர்கள் உண்டாக்கிய அனைத்து
மாசுகளை நீக்கும்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே
இன்பம் தரும் வாழ்க்கை.
அருமை
ReplyDeleteவரிகள் வசமாய் வந்திருக்கின்றன.
ReplyDelete