Saturday, October 5, 2019

நெத்தியடி என்பது யாதெனில்...

இன்னும் கொஞ்சம்
நாகரீகமாய்ச் சொல்லி இருக்கலாம்

இதை இவ்வளவு அழுத்தமாய்ச்
சொல்லி இருக்கவேண்டியதில்லை

இதைச் சொல்லும் முன்
இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்

எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க
இது ஏன் இப்போது ?

இந்த அசட்டுத் தைரியம்
நிச்சயம் ஆபத்தானதுதான்

இப்படியெல்லாம்
உன் எழுத்துக்கு விமர்சனம் வருகிறது எனில்...

சரியான நேரத்தில்
மிகச் சரியாக
மிகச் சரியானதைத்தான்
சொல்லி இருக்கிறாய் எனச்
சொல்லத்தான் வேண்டுமா என்ன ?

7 comments:

  1. ரசித்தேன் கவிஞரே...

    ReplyDelete
  2. சரியான நேரத்தில் மிகச் சரியாக மிகச் சரியானதைத்தான் சொல்லி இருக்கிறீங்க

    ReplyDelete
  3. சிலருக்கு அது தெரிவதில்லையே

    ReplyDelete
  4. அருமையான வரிகள்

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete