நிழலைத் தொடர்பவனோ
அது குறித்த நினைவிலேயோ
பயணத்தைத் தொடர்பவனோ
நிச்சயம் இலக்கினை அடைவதில்லை
நிழல் தொடரத்தான் வேண்டும்
அது விதி என்றுணர்ந்தவனே
எல்லையினைக் கடக்கிறான்
கூலி குறித்தோ
பயன் குறித்த கற்பனையிலோ
கடமையினைச் செய்கின்றவன்
நிச்சயம் உயர்வடையச் சாத்தியமில்லை
உழைப்பின் மதிப்பின் கீழ்
கூலியிருக்க விரும்புபவனே
அடையாததையெல்லாம் அடைகிறான்
நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை
நேற்றும் நாளையும்
இன்றின் விளைவெனத் தெளிந்தவே
என்றும் எப்போதும் வெல்கிறான்
அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்
என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்
வேறு வழியில்லையென்றாலும் அவ்வாறே...
ReplyDeleteஅருமை
ReplyDeleteவாழ்வை ரசிப்போம்
நேற்றைய நிகழ்வு இன்றைய பாடம். இன்றைய பாடம் நாளைய அனுபவம்.
ReplyDeleteஅதாவது : " Live the present " ,என்ற தத்துவத்தைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஓஷோ வும் இதையே சொன்னதாக கேள்வி.
ReplyDeleteJayakumar
இன்றின் விளைவெனத் தெரிந்தவே - தெரிந்தவனே?
ReplyDeleteநல்ல கவிதை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பாடம். உணர்ந்தால் உயர்வு.
மனிதனாய்
ReplyDeleteமகிழ்வதற்கான
சிந்தனை!
மனிதனாய்
ReplyDeleteமகிழ்வதற்கான
சிந்தனை!