Wednesday, August 26, 2020

1500 + 1-------

தெரிந்ததை

தெரிந்தபடி

பிறரும் தெரிந்துகொள்ளும்படி

அதிகம் சுவை கூட்டாது


புரிந்ததை

புரிந்தபடி

பிறரும் புரிந்து கொள்ளும்படி

அதிகம் மெருகூட்டாது


தெளிந்ததை

தெளிந்தபடி

பிறரும் தெளிவுறும்படி

அதிகம் விளக்க முயலாது


கவிதையை விரும்புவோர்

முகம் சுழிக்காது

கவிதையை வெறுப்போர்

விலகி ஓடிவிடாது


கவிதையாயும் இல்லாது

உரையாகவும் இல்லாது

ஏதோவாக

யாதோவாக


பத்தாண்டுகளாக

எவ்விதத் தொய்வுமின்றி

தொடர்ந்து எழுதுவதை...


நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட

நாட்டினர் தொடர்வதும்

நானூறுக்கும் மேற்பட்டோர்

தொடர்ந்து இணைந்து இருப்பதும்


ஆறு இலட்சத்திற்கும்

மேலாக படிக்கப்பட்டிருப்பதுவும்

அதிக மகிழ்வளிக்க..


அதீத உற்சாகத்தோடும்

எனக்கான எல்லையினை

இன்று இன்னும் விரிவுபடுத்தி வைக்கிறேன்...


பதிவர்களாகிய

உங்கள் ஆதரவோடும்

நிறைவான ஆசியோடும்...

5 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துகள்!

    தொடருங்கள். தொடருகிறோம்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் கவிஞரே பயணம் தொடரட்டும்...

    ReplyDelete
  3. மனம் நிறைந்த வாழ்த்துகள் ரமணி ஜி. தொடரட்டும் உங்களுடைய வலைப்பயணம்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே

    உங்களது சிறப்பான வலைப்பயணம் இன்று போல் என்றும் தொடடர்ந்திட எனது வாழ்த்துக்களும். நாங்களும் ரசித்தபடி என்றும் தொடர்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete