கவித்துவம்
நிரம்பி வழியும் கவிதைகள்
படிக்கப் படிக்க
மனம் மகிழ்வித்துப் போனாலும்...
மிக லேசாகத்தான் என்றாலும் தவறாது
நீ எழுதத்தான் வேண்டுமா என
அச்சுறுத்தியும் போகிறது...
உருவில் மட்டும்
கவிதையாய் இருக்கிற உளறல்கள்
படிக்கப் படிக்க
எரிச்சல் கொடுத்த போதும்
தவறாது மிக உறுதியாய் நீ
எழுத்தத்தான் வேண்டும் எனத்
தைரியமளித்தும் போகிறது..
கவனமாய் எழுத
அச்சுறுத்தலும் அவசியமே என்பதால்
தவறாது அன்றாடம்
சில நல்ல கவிதைகளையும்
தொடர்ந்து எழுத
தைரியமும் அவசியமே என்பதால்
தவறாது நாள்தோறும்
பல மோசமான கவிதைகளையும்
இரசித்துப் படிப்பதை
கடமையாகக் கொள்கிறேன்
ஆம்....
மனித்தப் பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே.
என்பதைப் போலவே...
மனித்த? உள'ர'ல்கள்?
ReplyDeleteThanks sir...மனித்தப் பிறவியும் சரிதானே...இல்லையா..
ReplyDeleteநன்று. தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.
ReplyDelete