உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் பார்வையாளனாக
காலமும் உயிரும் நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?
இழுத்து அலுத்து
ஓய்ந்த உடலது
இயலாது தன் நுனியை
மெல்லத் தொய்யவிட
எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்கு கடைசி நாளா ?
வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல
ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல
ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அந்த நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?
மூச்சே வடமாக
ஐம்புலனும் பார்வையாளனாக
காலமும் உயிரும் நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?
இழுத்து அலுத்து
ஓய்ந்த உடலது
இயலாது தன் நுனியை
மெல்லத் தொய்யவிட
எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்கு கடைசி நாளா ?
வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல
ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல
ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அந்த நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?
காலமும் இதயமும் நடத்தும் கயிறிழுக்கும் போட்டியில் சிக்கிக்கிட்டிருப்பது என்னமோ நாம் தான் !
ReplyDeleteஇறுதி நாள் குறித்தே அனேகர் சிந்திப்பதை கடந்த சில நாட்களாஅக்தொடரும் பதிவில் காண்கின்றேன்!
மழையும் வெள்ளமும் ரெம்பத்தான் கஷ்டப்படுத்துகின்றது போலும்.
மந்தார மலையும் வாசுகி பாம்பும் கடையபட்டது போல் உலக வாழ்வில் நாம் கடையப்படுகிறோம்
ReplyDeleteஅருமை.
ReplyDeleteதம +1
அப்படித்தான் போல...
ReplyDeleteநல்லதொரு கவிதை எழுதியவர்க்கும் பகிர்ந்தவர்க்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅவ்வளவுதான் வாழ்க்கை...
ReplyDeleteவாழ்வியல் உண்மை ரசித்தேன் கவிஞரே..
ReplyDeleteதமிழ் மணம் 4
வணக்கம்
ReplyDeleteவாழ்வியல் தத்துவத்தை உணர்ந்தேன் ஐயா...த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை அருமை.
ReplyDeleteஅருமையான வரிகளில் வாழ்க்கையின் தத்துவம்...
ReplyDeleteவாழ்வியல் உண்மை..
ReplyDeleteஅருமை ஐயா...