Thursday, December 10, 2015

"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்.....

"நல்லதோர் வீணையாய் "
 அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து
புது விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "
அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி
 நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை "
என்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை
 விடுவித்துக் கவிதையை
அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே "
 கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு
அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"
 சோராதிருந்தான்
அதனால்தானே காலத்தை வென்றவனாய்
காவிய மானவனாய்
"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
என்றென்றும்  எப்போதும்
பரிமளிக்கவும் முடிகிறது


13 comments:

  1. எக்காலத்திலும் பரிமளிக்க முடியும் ஐயா...

    ReplyDelete
  2. "இன்று புதிதாய் பிறந்தவனை"
    \>>> வாழ்த்துகள்ப்பா

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    இரசிக்கும் படி சிறப்பாக உள்ளது பா வரிகள் வாழ்த்துக்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. காலத்தை வென்றவனாய்,
    காவிய மானவனாய்,
    "இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
    பரிமளிக்கும் அந்த நபருக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. பெருமைக்குரிய பிறப்பு பாராட்டுதலுக்கு உரிய படைப்பு நன்கு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பாட்டுத்தலைவன் பாரதிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    கவிதை மிக அருமை ஐயா வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
  7. தேசியகவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நலமா நண்பரே!தொடர்பே இல்லையே!

    ReplyDelete
  9. Mika nanru....
    Vetha.Langathilakam

    ReplyDelete
  10. வாழும் பா ரதியே...வணக்கம்...தொடரட்டும் உங்கள் பா ரதம்

    ReplyDelete