Saturday, March 4, 2017

தோல்வியே அறியாது தொடர்ந்து பயணிப்போம்....

உணவே
உணர்வைத் தீர்மானிக்கிறது
உணர்வு
நிலைப்பெற்றபின் அதுவே
உணவைத் தீர்மானிக்கத் துவங்குகிறது

எண்ணமே
மனதைத் தீர்மானிக்கிறது
மனம்
நிலைபெற்றதும் அதுவே
எண்ணங்களைத் தீர்மானிக்கத் துவங்குகிறது

செயலே
பழக்கத்தைத் தீர்மானிக்கிறது
பழக்கம்
நிலைக்கொண்டதும் அதுவே
செயலைத் தீர்மானிக்கத் துவங்குகிறது

இலக்கே  
வழியைத் தீர்மானிக்கிறது
வழியில்
மனம் நிலைபெற்றதும் அதுவே
இலக்கைத் தீர்மானிக்கத் துவங்குகிறது

எனவே
என்றும்
எப்போதும்

ஒரு கவளம் தானே
சிறு எண்ணம் தானே
நொடிச் செயல்தானே
சிறு விலகல்தானே என

எதிலும்
அலட்சியம் கொள்ளாதிருப்போம்
என்றும்
தோல்வியே  அறியாது
தொடர்ந்து பயணிப்போம்

14 comments:

  1. "செயலே
    பழக்கத்தைத் தீர்மானிக்கிறது
    பழக்கம்
    நிலைக்கொண்டதும் அதுவே
    செயலைத் தீர்மானிக்கத் துவங்குகிறது" என்பது
    உண்மை தான் - நாமும்
    நற்செயலை செய்து நல்லவர்களாவோம்!

    ReplyDelete
  2. வெற்றிப் பயணத்திற்கான உயரிய சிந்தனை.

    ReplyDelete
  3. ஒரு வேளை தோல்வி நமை தொட வந்தாலும் எதிர் கொண்டு வென்றி டுவோம் நின்று.

    ReplyDelete
  4. வெற்றிக்கான மனத்திண்மை.

    ReplyDelete
  5. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர்கள். புரிந்துகொண்டவர்கள் பயன்பெறுவது நிச்சயம்.
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  6. உண்மை
    எதிலும்
    அலட்சியம் கொள்ளாதிருப்போம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  7. அருமையான நேர்மறைக் கவிதை

    ReplyDelete
  8. //எதிலும் அலட்சியம் கொள்ளாதிருப்போம்.
    என்றும் தோல்வியே அறியாது தொடர்ந்து பயணிப்போம்.//

    தன்னம்பிக்கை அளிக்குமாறு அழகாகச் சொல்லி முடித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  10. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  11. எத்தனை அனுபவம் பொதிந்த வார்த்தைகள்

    ReplyDelete