காதல் உணர்வதுப் பூக்கையில்
சேர்ந்தே பிறந்துப் பரவும்
மகரந்த மணமே
வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே
கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே
மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாலியே
தனிமைத் துயர்ப் போக்கி
ஏகாந்தச் சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே
குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு பாணமே
எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே
தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ
கவிதைபெண்ணே உனக்கு ஈடாய்
உலகினில் மாற்று ஏது சொல்
எமக்கு உன் அருளை
என்றும்போல் வாரிவழங்கிச் செல்
சேர்ந்தே பிறந்துப் பரவும்
மகரந்த மணமே
வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே
கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே
மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாலியே
தனிமைத் துயர்ப் போக்கி
ஏகாந்தச் சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே
குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு பாணமே
எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே
தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ
கவிதைபெண்ணே உனக்கு ஈடாய்
உலகினில் மாற்று ஏது சொல்
எமக்கு உன் அருளை
என்றும்போல் வாரிவழங்கிச் செல்
நன்று.
ReplyDeleteகவிஞனும் கற்பனையும் கந்தர்வ மணம்புரிந்து
ReplyDeleteகூடிக் களிக்கப் பிறக்கும் அதிசயக் குழந்தைக்குப் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
எமக்கு உன் அருளை
என்றும்போல் வாரிவழங்கிச் செல்
அருள் பெற்ற அருளாளர் அல்லவா சார் நீங்கள்.
கவிதைக்கு ஈடாய் ஏது மாற்று
ReplyDeleteஅருமை ஐயா
எண்ணச் சுமைகளை
ReplyDeleteஎளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான
எழில்மிகு வாகனம்
கவிதை தான் ஐயா!
அருமை ஐயா...
ReplyDeleteஅருமை
ReplyDeleteகவிதைக்கு மட்டுமா அந்தப் பேறு
ReplyDeleteஎண்ணச் சுமைகளை
ReplyDeleteஎளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே
கவிதை அறிவு எனபது கடவுள் தந்த வரம் வாழ்த்துக்கள்
ReplyDelete