Friday, February 10, 2012

இன்னும் ஒரு அங்கீகாரம்! 

தோழர் மகேந்திரன தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது.  நண்பர் மின்னல் வரிகள் கணேஷ் எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு இந்தவிருதினை எனக்களித்தமைக்காகவும்  ( எங்கள் மனம மகிழ வேண்டும் என்பதற்காக  "என்னிலும் மேம்பட்ட " என்கிற  பொருந்தாத  வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும்  )   எனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

 எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்  

 

1)அதிகாலை நடைப் பயிற்சி 

2)புத்தகம் படித்தல் 

3) வானொலி கேட்பது

4)குடும்பத்தினருடன் நண்பர்களு டன் பேசிக்கொண்டிருப்பது

5)வீட்டு  வேலையில் மனைவிக்கு உடன் உதவுவது
6) நான் சார்ந்திருக்கும்சேவை அமைப்புடன்
 சமூகப் பணிகள் செய்வது
7) அப்புறம் என்ன  வலைத்தளத்தில் உலாவுவதுதான்

என் மனம் கவர்ந்த பதிவர்கள் ஐவர்

1)குறையொன்றுமில்லை லெட்சுமி  அவர்கள்  Lakshmi

அனுபவமிக்க வாழ்வியல் கட்டுரைகளுக்காகவும்
அருமையான பயணக் கட்டுரைகளுக்காகவும்

2) திருமதி யுவராணி அவர்கள் யுவராணி தமிழரசன்
 சமுக உணர்வுடன் கூடிய தித்திக்கும் தமிழ் நடைக்காக

3) திருமதி இந்திரா அவர்கள் இந்திரா
யதார்த்தம், தார்மீ கக் கோபம்,  ,
லேசான ரசிக்கும் படியான  கிண்டல்  இப்படி
இப்படி நவரசங்கள் கலந்த அருமையான  பதிவுகளுக்காக

4)திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
அருமையான பழைய தமிழ்  பாடல்களுக்காகவும்
மிகச் சிறந்த காணொளி களுக்காகவும் 

5) திருமதி ராம்வி அவர்கள் RAMVI.
சிறந்த ஆன்மிகப் பதிவுகளுக்காகவும்
அருமையான பயணப் பதிவினுக்காகவும்

இந்த ஐவருக்கும் விருது வழங்குகிறேன் என்பதைவிட சமர்பபிக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளும்படியும், எனக்கு விருது தந்த கணேஷ் அவர்களுக்கும்   அவருக்கு விருது தந்த ஷக்திப்ரபா அவர்களும் சொன்ன படி, நீங்கள் விரும்பும் ஐந்து நல்எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறேன்.


36 comments:

  1. தங்களுக்கும் தங்களால் விருது பெற்றவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களது பிடித்த செயல்களும் அருமை. வானொலி கேட்பது, சமூக சேவை ஆகியவை சாதாரணமாக யாரும் செய்யாதது. தாங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களையும் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. சார் ஓட்டுப்போட முடியலியே ஏன் சார்?

    ReplyDelete
  3. விருது பெற்றதற்கும் உங்களால் விருது பெற்ற‌ அன்புத் தோழமைகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. அய்யா !
    உங்களுக்கு விருதுகள்
    கிடைப்பது பெரிய விஷயம் இல்ல!

    அதற்க்கான தகுதி-
    உங்களுக்கு உள்ளதுதான்!

    அதனால்தான் விருது
    உங்களை தேடிவருகிறது!

    வாழ்த்துக்கள்!

    கவிதையை போடுங்க சார்!
    எதிர் பார்க்கிறேன்!
    t

    ReplyDelete
  5. தங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. துரைடேனியல் //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி
    (வேலைப் பளுவின் காரணமாக
    அதிகமாக பதிவில் கவனம் செலுத்த இயலவில்லை
    இன்று ஓட்டுப் பெட்டியை சரிசெய்து விடுகிறேன் )

    ReplyDelete
  8. மனோ சாமிநாதன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. Asiya Omar //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. ஸாதிகா //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. Seeni //

    தோட்டத்தில் பாதி கிணறு ஆகிப் போனால்
    விளைச்சலும் பாதி குறைந்து போகும் என்பதைப்போல
    விருதும் அது தொடர்பான வேலைகளுமே
    பதிவிடுவதை தாமதப் படுத்திப் போகிறது
    இரண்டு நாளில் சம தளத்துக்கு வந்து விடுகிறேன்
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுவது - நல்ல விசயம்தான்.விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. சொல்லி இருக்கும் பிடித்த ஏழு விஷயங்களும் மனதைக் கவர்ந்த விஷயங்கள்....

    விருது பெற்ற உங்களுக்கும், உங்கள் மூலம் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. விச்சு //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  16. wavvvvvvvvvvvvvvv...super ...super....

    kalakunga....vaazthukkal ayyaa....

    ReplyDelete
  17. மிக்க நன்றி ரமணி சார், எனக்கும் விருது வழங்கி வாழ்த்தியதற்கு.

    விருது பெற்ற தங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. கலை //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. RAMVI //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. விருது பெற்றவர்களுக்கும் விருது வழங்கி ஊக்கப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. பிடித்த ஏழு விஷயங்கள் அருமை.....

    தங்களுக்கும், தங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள் சார். விருதுகள் தொடரட்டும் சார்.

    ReplyDelete
  22. koodal bala //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. கோவை2தில்லி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. வெற்றி மீது வெற்றி வந்து உம்மைச் சேரும் , அதைப் பெற்றுக் கொள்ளும் தகுதி எல்லாம் உம்மைச் சாரும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. நன்றி சொல்ல வார்த்தைகளை தேடியே நான் இங்கு எனது கருத்துரையை பதிக்கிறேன் !
    எனது முதல் விருது தங்களிடம் இருந்து பெருவதில் மிக்க மகிழ்ச்சி மேழும் சிறந்த பதிவுகளை தர வேண்டும் என்ற உந்துதலும் உடன் ஒட்டிகொண்டு துள்ளல்போடுகிறது!!!!

    விருது வாங்கிய தங்களுக்கும் மற்றும் தங்களிடம் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  26. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா....

    ReplyDelete
  27. G.M Balasubramaniam //

    தங்கள் பாராட்டினை உயரிய விருதாகக் கருதுகிறேன்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. யுவராணி தமிழரசன் //

    சிறந்த பதிவுகளை தர வேண்டும் என்ற உந்துதலும் உடன் ஒட்டிகொண்டு துள்ளல்போடுகிறது!!!!

    தங்களிடம் வித்தியாசமான பார்வையும்
    மொழிஆளுமையும் சிறப்பாக அமைந்துள்ளன
    தாங்கள் அதை உணர்ந்தாலே போதும்
    அருமையான பதிவுகள் அருவிபோல் கொட்டும்

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. ஐயா... முகஸ்துதி அல்ல... நான் உளமார உணர்ந்ததையே ‘என்னிலும் மேம்பட்டவர்கள்’ என்ற வார்த்தையின் மூலம் சொன்னேன். நான் அவ்வப்போது நகைச்சுவை, மொக்கை என்றெல்லாம் போவேன். நல்ல சிந்தனைகளை மட்டுமே விதைக்கும் நீங்கள் நிச்சயம் என்னிலும் மேம்பட்டவரே. அதை விடுங்கள்... ராம்வி அவர்களும் இந்திராவும் எனக்கும் மிகப் பிடித்தமானவர்கள். அந்த இருவருக்கும் நீங்கள் விருது வழங்கியதில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி. மற்றவர்களும் தகுதியில் சிறந்தவர்களே! உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. கணேஷ் //

    உண்மையில் தங்கள் விரிவான
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்தால்
    மிகவும் பெருமிதம் கொண்டேன்
    தொடர்ந்து பயனுள்ள அவசியமான
    பதிவுகள் மட்டும் தர வேண்டும் என்கிற உறுதியும்
    எடுத்துக் கொண்டேன்
    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. வணக்கம்! தங்களுக்கு “ VERSATILE BLOGGER AWARD” விருது வழங்கிய "மின்னல் வரிகள்" கணேஷ் அவர்களுக்கு நன்றியையும், உங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெளியூர் சென்று விட்டேன். வாழ்த்து சொல்வதில் நான் சற்று தாமதம்.

    ReplyDelete
  33. தி.தமிழ் இளங்கோ //

    வணக்கம்! தங்களுக்கு “ VERSATILE BLOGGER AWARD” விருது வழங்கிய "மின்னல் வரிகள்" கணேஷ் அவர்களுக்கு நன்றியையும், உங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. R.S.Krishnamurthyயின் பதிவுகளை நானும் நிறைய ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  35. அப்பாதுரை //

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. வயதில் மூத்தவர் என்றாலும் உங்களிடம் இருக்கும் பணிவும் அடக்கமும் எங்களுக்கு கற்றுத்தரும் பாடங்கள் அதிகம் ரமணி சார்.... ரொம்ப லேட்டா பதிவுக்கு பதில் போடுகிறேனே என்று தானே???

    மனம் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ரமணி சார்.. விருது வழங்கிய கணேஷாவுக்கும், விருது பெற்ற உங்களுக்கும், உங்களால் விருது பெறப்பட்ட தோழமைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரமணி சார்..

    யூ டிசர்வ்ட் டு கெட் திஸ் அவார்ட்....

    ReplyDelete