Tuesday, December 25, 2012

தொடர் பயணம்

தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொண்டவர்கள்
எப்போதும்
அலுத்து அமர்வதோ
சலித்து ஒதுங்குவதோ  இல்லை

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்பவர்கள்
என்றுமே  
தேங்கி நிற்பதோ
சோர்ந்து சாய்வதோ இல்லை

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்பவர்களுக்கு 
எச் சூழலிலும்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ இல்லை 

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
 என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.

71 comments:

  1. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பரே.
    பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  2. 300 என்ன 3000 பதிவுகள் ஆயினும் நாங்க ரெடி....படிக்க...வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  3. புத்தம்புது நாளாக
    புதியதொரு வாய்ப்பாக
    என்றென்றும் கொள்பவர்கள்
    வெற்றிக்கு தடையினை
    காண்ப தில்லை எப்போதும்.//
    மீள் பதிவானாலும் எனக்காக கொடுத்த இந்த சந்தர்பர்திற்கு நன்றி சார்

    ReplyDelete
  4. தன்னம்பிக்கை ஊட்டும முன்நூறாவது கவிதை !

    வாழ்த்துகள் சகோதரருக்கு...

    ReplyDelete
  5. ''...தேடுதலையே...
    நினைவுகளில் தீர்க்கமாய்
    வாழ்வின் நோக்கமாய்
    எக்கணமும் கொண்டவர்கள்
    எப்போதும்
    அலுத்து அமர்வதோ
    சலித்து ஒதுங்குவதோ இல்லை..''
    அலுக்காத, சலிக்காத 300ம் பதிவிற்கு இனிய நல்வாழ்த்து.

    ReplyDelete
  6. இந்தக் கால இளைஞர்கள் படிக்க வேண்டிய கவிதை.
    அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்வதையே சாதனையாக நினைப்பவர்களெல்லாம் இருக்கிறார்கள்.அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உங்கள் பதிவில் நிறைய உள்ளன.
    மிக நல்ல பதிவு.

    ராஜி

    ReplyDelete
  7. அருமை.

    முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
  9. 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா.. இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.. தொடருங்கள்.. // சிகரங்களை....
    சாதனையாகக் கொள்ளாமல்
    மறுசிகரம் காட்டுகின்ற
    குறியீடாகக் கொள்பவர்களுக்கு
    எச் சூழலிலும்
    கிரீடங்களில் நாட்டமோ
    சரிவுகளில் பதற்றமோ இல்லை
    //

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கவிதைகள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கவிதைகள்

    ReplyDelete
  12. //தேடுதலையே...
    நினைவுகளில் தீர்க்கமாய்
    வாழ்வின் நோக்கமாய்
    எக்கணமும் கொண்டவர்கள்
    எப்போதும்
    அலுத்து அமர்வதோ
    சலித்து ஒதுங்குவதோ இல்லை//

    அருமை! தேடுதல் மட்டுமே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது.

    300 பதிவுகளுக்குப்பின்னும் தேடுதலுடன் கவிதைப்பயணம் தொடர்வதற்கு இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. வெற்றிக்கு வழிகாட்டும் கவிதை.....300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் நினைத்தால் 300 யும் 3000 ஆக்கிவிட முடியும்...உங்களின் தரமான பதிவிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete
  14. arumai ayyaaa!!!!


    vaazhthukkal ayyaaa....
    300+

    ReplyDelete
  15. உற்சாகம் ஊட்டும் வரிகள்! முன்னூறு பெருகட்டும்!

    ReplyDelete
  16. 300 வது பதிவுக்கு வாழ்த்துகள். 'ஏற்கெனவே படித்தது போல உள்ளதே' என்று படித்து வரும்போது லேபிளில் 'மீள்பதிவு' என்று படித்துத் தெளிந்தேன்.

    ReplyDelete
  17. 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அய்யா.

    ஓவியம் தருவாய் - சிற்பம்
    உணர்விப்பாய் கவிதை யூட்டக்
    காவியம் தருவாய், மக்கள்
    கலகல வெனக்சி ரிப்பு
    மேவிடும் விகடம் சொல்வாய்
    மின்னிடும் காதல் தந்து
    கூவுவாய் வீரப் பேச்சுக்
    கொட்டுவாய் கோலத் தாளே

    என்ற, பத்திரிக்கை பற்றிய பாரதிதாசனின் வரிகள்
    தங்களின், வலைப் பூ பத்திரிக்கைக்கும் பொருந்தும் அய்யா. வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  18. முனைவர்.இரா.குணசீலன் //

    300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அன்பரே.
    பயணம் தொடரட்டும்.//

    தங்கள் தொடர் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  19. King Raj //

    300 என்ன 3000 பதிவுகள் ஆயினும் நாங்க ரெடி....படிக்க...வாழ்த்துக்கள் ஐயா.//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. 300 வது பதிவு அருஞ்சாதனை ஐயா! .இன்னும் தொடரட்டும் கவிப் பணி

    ReplyDelete
  21. கவியாழி கண்ணதாசன்//

    மீள் பதிவானாலும் எனக்காக கொடுத்த இந்த சந்தர்பர்திற்கு நன்றி சார்//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. சேக்கனா M. நிஜாம் //

    தன்னம்பிக்கை ஊட்டும முன்நூறாவது கவிதை !
    வாழ்த்துகள் சகோதரருக்கு...//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  23. kovaikkavi //

    அலுக்காத, சலிக்காத 300ம் பதிவிற்கு இனிய நல்வாழ்த்து./

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி






    ReplyDelete
  24. rajalakshmi paramasivam //

    இந்தக் கால இளைஞர்கள் படிக்க வேண்டிய கவிதை.//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. ராமலக்ஷ்மி //

    அருமை.
    முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. Prem Kumar.s //

    வாழ்த்துக்கள் அன்பரே//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. மன்னிக்கவும் சார்! இரண்டு டேப்கள் திறந்து வைத்தால் எதிர்பாராமல் தவறு நேர்ந்து விட்டது.நீக்கியதற்கு நன்றி,

    ReplyDelete
  28. அகல் //

    300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா.. இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.. தொடருங்கள்.. //

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  29. "என் ராஜபாட்டை"- ராஜா //

    வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கவிதைகள்

    .தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  30. மனோ சாமிநாதன் //

    அருமை! தேடுதல் மட்டுமே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது.

    300 பதிவுகளுக்குப்பின்னும் தேடுதலுடன் கவிதைப்பயணம் தொடர்வதற்கு இனிய வாழ்த்துக்கள்!


    .தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .!

    ReplyDelete
  31. விடியலை...,
    மற்றுமொரு நாளாக
    மனதினில் கொள்ளாது
    புத்தம்புது நாளாக
    புதியதொரு வாய்ப்பாக
    என்றென்றும் கொள்பவர்கள்
    வெற்றிக்கு தடையினை
    காண்ப தில்லை எப்போதும்.

    உண்மை தான். 300-வது பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. உங்களின் இந்தக் கவிதை வாழ்க்கையில் முன்னுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு ஊட்டச்சத்தாக அமையும். ஊக்கமான உங்கள் கவிதைக்கு நன்றி

    ReplyDelete
  33. நல்லதொரு அறிவுரை பதிவு! 300வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. Avargal Unmaigal //

    ...உங்களின் தரமான பதிவிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்/.

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி ./

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. Seeni //

    arumai ayyaaa!!!!
    vaazhthukkal ayyaaa....
    300+//
    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி ./

    ReplyDelete
  37. நிலாமகள் //.

    உற்சாகம் ஊட்டும் வரிகள்! முன்னூறு பெருகட்டும்!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. ஸ்ரீராம். //

    300 வது பதிவுக்கு வாழ்த்துகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. கரந்தை ஜெயக்குமார் //
    .
    300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அய்யா.//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி ./

    ReplyDelete
  40. T.N.MURALIDHARAN //

    300 வது பதிவு அருஞ்சாதனை ஐயா! .இன்னும் தொடரட்டும் கவிப் பணி//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி ./

    ReplyDelete
  41. அருமை!தொடர்ந்து சதங்கள் பல காண வாழ்த்துகள்.
    த.ம.6

    ReplyDelete
  42. அடடா.... அருமை அருமை!!

    வணங்குகிறேன் இரமணி ஐயா.
    த.ம. 7

    ReplyDelete
  43. பதிவுகள் முந்நூற்றை தொட்டு விட்ட கவிஞருக்கு ஓராயிரம் தொட்டு விட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. Lakshmi //

    உண்மை தான். 300-வது பதிவுக்கு வாழ்த்துகள்

    .தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///



    ReplyDelete
  45. ezhil //

    உங்களின் இந்தக் கவிதை வாழ்க்கையில் முன்னுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு ஊட்டச்சத்தாக அமையும். ஊக்கமான உங்கள் கவிதைக்கு நன்றி//.

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///


    ReplyDelete
  46. குட்டன் //

    அருமை!தொடர்ந்து சதங்கள் பல காண வாழ்த்துகள்.//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///


    ReplyDelete
  47. அருணா செல்வம் //

    அடடா.... அருமை அருமை!!//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///




    ReplyDelete
  48. தி.தமிழ் இளங்கோ //.

    பதிவுகள் முந்நூற்றை தொட்டு விட்ட கவிஞருக்கு ஓராயிரம் தொட்டு விட வாழ்த்துக்கள்!//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///


    ReplyDelete
  49. விடியலை...,
    மற்றுமொரு நாளாக
    மனதினில் கொள்ளாது
    புத்தம்புது நாளாக
    புதியதொரு வாய்ப்பாக
    என்றென்றும் கொள்பவர்கள்
    வெற்றிக்கு தடையினை
    காண்ப தில்லை எப்போதும்

    300 - பதிவுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  50. // விடியலை...,
    மற்றுமொரு நாளாக
    மனதினில் கொள்ளாது
    புத்தம்புது நாளாக
    புதியதொரு வாய்ப்பாக
    என்றென்றும் கொள்பவர்கள்
    வெற்றிக்கு தடையினை
    காண்ப தில்லை எப்போதும்.//

    மனங்கவர்ந்த வரிகள்! பொருள் பொதிந்தவை! பதிவு 300, 1000 -ம் ஆக, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. 300வது பதிவுக்கு வாழ்த்துகள். வழக்கம் போல கவிதை அருமை. மீளாக இருப்பினும் நினைவிட்டு மீளாததாக.... :-)

    ReplyDelete

  52. ஒரு சந்தேகம். இது 300-வது பதிவா. மீள்வதற்கு முன் இட்டது 300-வது பதிவா. ? எப்படி இருந்தாலும் எண்ணிக்கை ஒரு குறியீடுதானே. இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள். ”விடியலை மற்றுமொரு நாளாக.......” மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  53. இராஜராஜேஸ்வரி //

    300 - பதிவுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///

    ReplyDelete

  54. புலவர் சா இராமாநுசம் //

    மனங்கவர்ந்த வரிகள்! பொருள் பொதிந்தவை! பதிவு 300, 1000 -ம் ஆக, வாழ்த்துக்கள்!/

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .////

    ReplyDelete
  55. RVS //


    300வது பதிவுக்கு வாழ்த்துகள். வழக்கம் போல கவிதை அருமை. மீளாக இருப்பினும் நினைவிட்டு மீளாததாக//.

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///

    ReplyDelete
  56. G.M Balasubramaniam //

    இன்னும் பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள். ”விடியலை மற்றுமொரு நாளாக.......” மிகவும் ரசித்தேன்.//

    தங்கள் உடன் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///

    ReplyDelete
  57. வெற்றிக்கான வழியை இதைவிட விளக்கமாக சொல்ல முடியாது! அருமை!

    ReplyDelete
  58. முன்னூறு பதிவுகள்! - அற்புதமான கருத்துக்களை அள்ளித் தருவதில் முன்னோடியாக.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  59. இன்னும் சிகரம் தொட என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா !

    ReplyDelete
  60. கே. பி. ஜனா... //
    முன்னூறு பதிவுகள்! - அற்புதமான கருத்துக்களை அள்ளித் தருவதில் முன்னோடியாக.... வாழ்த்துக்கள்

    !தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி .///

    ReplyDelete
  61. ஹேமா //

    இன்னும் சிகரம் தொட என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா !//!

    தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. தேட்டுதல் உள்ளவர்கள் ஜெயிக்கிறார்கள்.ஓட்டம் மனிதனின் ரத்தத்த மட்டுமல்ல,சிந்தனையையும் புதுப்பித்து விடுகிறது,நல்ல கவிதை,வைரவரிகள், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  63. விமலன் //

    ,நல்ல கவிதைவைர,வரிகள், வாழ்த்துக்கள்

    தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. ஒவ்வொரு விடியலும் நமக்குப் புதியதொரு வாய்ப்பைக் கொடுப்பதை புரிந்து கொண்டால் வெற்றிக்கு தடை இல்லை என்ற உண்மையை கவிதையில் வெகு சிறப்பாக வடித்துள்ளீர்கள்.

    வரும் புத்தாண்டிலும், இதே போல பல தன்னம்பிக்கை கவிதைகளை கொடுக்க வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  65. புத்தம்புது நாளாக
    புதியதொரு வாய்ப்பாக
    என்றென்றும் கொள்பவர்கள்
    வெற்றிக்கு தடையினை
    காண்ப தில்லை எப்போதும்.//

    உண்மைதான்.
    அருமையான விஷயங்களை கவிதையாக படைத்து
    300 பதிவுகளை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  66. Ranjani Narayanan //

    ஒவ்வொரு விடியலும் நமக்குப் புதியதொரு வாய்ப்பைக் கொடுப்பதை புரிந்து கொண்டால் வெற்றிக்கு தடை இல்லை என்ற உண்மையை கவிதையில் வெகு சிறப்பாக வடித்துள்ளீர்கள்.//

    தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete

  67. கோமதி அரசு //

    உண்மைதான்.
    அருமையான விஷயங்களை கவிதையாக படைத்து
    300 பதிவுகளை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.//

    தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. இரட்டிப்பு வாழ்த்துக்கள் ....... படைப்பிற்கும் ,
    புதியதோர் காலப்பக்கத்திற்கும் [ 2013 ] !

    ReplyDelete
  69. ஸ்ரவாணி //
    இரட்டிப்பு வாழ்த்துக்கள் ....... படைப்பிற்கும் ,
    புதியதோர் காலப்பக்கத்திற்கும்

    தங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு
    அதிக ஊக்கமளிக்கிறது.வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete