Wednesday, August 14, 2013

பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை

கலைவண்ணம் மிக்க ஓவியத்தில் அமைந்த
விதம் விதமான வண்ணங்கள்
அழகா இல்லை மருவா ?

உயரிய நோக்கம் கொண்ட உன்னத காவியத்தில்
பலதரப்பட்ட கதைமாந்தர்கள்
சிறப்பா இல்லை இழிவா ?

கதம்ப மாலைக்குள் நேர்த்தியாய் இணைந்த
பல்வேறு வண்ணமலர்கள் மாலைக்கு
எழிலா இல்லை உறுத்தலா  ?

பல்வேறு சுவைகொண்ட நல் உணவென்பது
மகிழ்வான தருணத்து விருந்துக்கு
சுவையா இல்லை சுமையா ?

எதையும் ஏற்கும் பக்குவம் கொண்ட இந்தியனுக்கு
பலவகை இனமும்  மதமும்
படியா இல்லை தடையா ?

பிரிவுகள் என்பது  பிளவுகள் இல்லை
இனியேனும் அறிந்து தெளிவோம்
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
தவறென ஒதுக்கி உயர்வோம்

39 comments:

  1. வணக்கம்
    பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை
    இனியேனும் அறிந்து தெளிவோம்
    வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம்

    பசுமரத்தில் ஏற்றிய ஆணிபோல் கவிவரிகள் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்
    சுதந்திர தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை
    இனியேனும் அறிந்து தெளிவோம்
    வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம்

    உயர்வான பகிர்வுகள்..!

    ReplyDelete
  3. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம்/////////
    வேற்றுமையில் ஒற்றுமை என்ற வரியை தவறென ஒதுக்க வேண்டுமா???? முரண்பாடாக தங்கள் கவிதையின் முடிவு உள்ளதே...????

    எனக்கு தான் தவறாக புரிகிறதா???

    ReplyDelete
  4. ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் அருமையான கவிதை! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சார்!!!

    ReplyDelete
  5. சந்தேகமென்ன ?
    பிளவுகள் அல்ல பிணைப்புகளே !
    விடுதலை தின வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம்!!ம்ம் அருமை வரிகள் இனிய சுதந்திரநாள் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  7. உண்மைதான் ,மீண்டும் உறுதியாகும்

    ReplyDelete
  8. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம்!! அருமை வரிகள் இனிய சுதந்திரநாள் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  9. நீங்கள் சொல்வது சரியே!
    பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லையே.

    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இரவின் புன்னகை said...
    வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம்/////////
    வேற்றுமையில் ஒற்றுமை என்ற வரியை தவறென ஒதுக்க வேண்டுமா???? முரண்பாடாக தங்கள் கவிதையின் முடிவு உள்ளதே...????

    எனக்கு தான் தவறாக புரிகிறதா???//

    பிரிவுகள் என்பது இயல்பு
    அதை பிளவுகளாகக் கொள்ளவேண்டியதில்லை
    வேற்றுமை என்கிற வார்த்தையே
    எதிர்மறைச் சொல் அதைத் தவிர்ப்போம்
    என்கிற அர்த்தத்தில் சொல்லியுள்ளேன்
    இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாம் என
    தங்கள் பின்னூட்டம் மூலம் தெரிந்து கொண்டேன்
    தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. inamum madhamum thadaikal thaan. padikalaa enra aiyaththukku avasiyame illai.

    ReplyDelete

  12. அப்பாதுரை said...//
    inamum madhamum thadaikal thaan. padikalaa enra aiyaththukku avasiyame illai.//

    அவரவர்கள் இனத்திற்கான பண்பாடும்
    கலாச்சாரமும் எனக்கு குறைவாகவே படவில்லை
    நிறைவாகவேப்படுகிறது
    ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது தாழ்ந்தது என
    நாம் எண்ணிக் கொள்வதுதான்
    தவறாகப்படுகிறது

    ReplyDelete
  13. அருமையான கவிதை. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. பிரிவுகள் என்றால்ப் பிளவுக ளில்லை
    முறிவுகள் கண்டால் முடிவு!

    அரும் பொருள் விளக்கக் கவிதை ஐயா!

    இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!!!

    த ம.5

    ReplyDelete
  15. தக்க சமயத்தில் சொல்லப்பட்டக் கருத்து!
    பாரத தாய்க்கே வெற்றி !

    ReplyDelete
  16. தி.தமிழ் இளங்கோ said...
    // வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம் //

    மாற்று சிந்தனை வரிகள்! சிந்திப்போம்! சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. உரைத்தவை யாவும் உண்மையே. உணரும் நாளில் உன்னதமான வாழ்க்கை அமையும். உறவுகள் தழைக்கும். சிறப்பான சிந்தனைப் பகிர்வுக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

    ReplyDelete
  18. ..பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை
    இனியேனும் அறிந்து தெளிவோம்..

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. வணக்கம்!

    அறிவுடன் தெளிவு! பெருகிடச் சிறப்பு!

    சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
    இதந்தரும் வாழ்வில் இனித்து!

    கவிஞர்கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    த ம.8

    ReplyDelete
  20. பிரிவுகள் வேறு அவை பிளவுகள் அல்ல என்று மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். சிறந்த சிந்தனையை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  21. இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்.

    பிரிவுகள் வேறு அவை பிளவுகள் அல்ல என்று மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. Uyarvirkku uramidum uraththa sinthanai.... valga otrumai...

    ReplyDelete
  23. 2008rupan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. பிரபல எழுத்தாளர் மணி மணி said...//

    ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் அருமையான கவிதை/

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. ஸ்ரவாணி said...//

    சந்தேகமென்ன ?
    பிளவுகள் அல்ல பிணைப்புகளே !//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  27. தனிமரம் said..//
    .
    வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம்!!ம்ம் அருமை வரிகள்///

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி




    ReplyDelete
  28. கவியாழி கண்ணதாசன் said..//
    .
    உண்மைதான் ,மீண்டும் உறுதியாகும்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  29. கரந்தை ஜெயக்குமார் said..//
    .
    வேற்றுமையில் ஒற்றுமை என்கிற வரியே
    தவறென ஒதுக்கி உயர்வோம்!! அருமை வரிகள் /

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  30. rajalakshmi paramasivam said...//

    நீங்கள் சொல்வது சரியே!
    பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லையே.//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. மாதேவி said..//
    .
    அருமையான கவிதை.//


    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. இளமதி said...//

    பிரிவுகள் என்றால்ப் பிளவுக ளில்லை
    முறிவுகள் கண்டால் முடிவு!
    அரும் பொருள் விளக்கக் கவிதை ஐயா!///

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  33. ரமேஷ் வெங்கடபதி said...//

    தக்க சமயத்தில் சொல்லப்பட்டக் கருத்து!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி




    ReplyDelete
  34. கீத மஞ்சரி said...//

    உரைத்தவை யாவும் உண்மையே. உணரும் நாளில் உன்னதமான வாழ்க்கை அமையும். உறவுகள் தழைக்கும். சிறப்பான சிந்தனைப் பகிர்வுக்குப் பாராட்டுகள் ரமணி சார்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. வெங்கட் நாகராஜ் said...//

    ..பிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை
    இனியேனும் அறிந்து தெளிவோம்..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  36. கி. பாரதிதாசன் கவிஞா் said...//

    வணக்கம்!
    அறிவுடன் தெளிவு! பெருகிடச் சிறப்பு!
    சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
    இதந்தரும் வாழ்வில் இனித்து//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. Ranjani Narayanan said...//

    பிரிவுகள் வேறு அவை பிளவுகள் அல்ல என்று மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். சிறந்த சிந்தனையை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  38. வை.கோபாலகிருஷ்ணன் said...//

    இனிய சுதந்திரத்திருநாள் நல்வாழ்த்துகள்.
    பிரிவுகள் வேறு அவை பிளவுகள் அல்ல என்று மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்./

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


    ReplyDelete
  39. Advocate P.R.Jayarajan said...//

    Uyarvirkku uramidum uraththa sinthanai.... valga otrumai...///

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete