Thursday, September 4, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
 
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
  
 
போட்டியின் நெறிமுறைகள்
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு   மிகாமல் எழுத வேண்டும்.
2. விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24  அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
3. படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும்      கவிதைக்கு     50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின்
  மதிப்பெண்களைக் கூட்டி  வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
4. மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்
5. கவிதையினைத் தங்கள் பதிவில் 15/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்)  பதிவிடப் 
   பட்டிருக்கவேண்டும்.
6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
7. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
8. கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய 
  குறிப்புகளைத்  தரவேண்டும்.
9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்
10. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :  
ramask614@gmail.com  
 
நடுவர்கள்   
 

கவிஞர் கி.பாரதிதாசன் - பிரான்சு - http://bharathidasanfrance.blogspot.com 

கவிஞர் .இரமணி             - இந்தியா - http://yaathoramani.blogspot.com

டொக்டர்.திருமிகு.முருகானந்தன்-இலங்கை-http://muruganandanclics.wordpress.com/ 

 
நிருவாகக்குழு

திரு.பொ.தனபாலன்  - இந்தியா - http://dindiguldhanabalan.blogspot.com
திரு.இராஜ முகுந்தன் - கனடா - http://valvaiyooraan.blogspot.com/
திரு அ.பாண்டியன் - இந்தியா-http://pandianpandi.blogspot.com/  
திரு.கா.யாழ்பாவாணன்-இலங்கை-http://eluththugal.blogspot.com/

 
பரிசுகள்முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்ல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்…! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்… கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

 தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்-rupanvani@yahoo.com & dindiguldhanabalan@yahoo.com 
 

10 comments:

  1. // கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து //

    படம் எங்கே ?

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பக்கம் கவிதைப்போட்டி விளம்பரத்தை பார்த்த போதுமிக்க மகிழ்ச்சியடைந்தேன் தொடரட்டும் சேவை.. பகிர்வுக்கு நன்றி ஐயா.
    த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Madhavan Srinivasagopalan அவர்களே!
    தாங்கள் தேடும் படம் கீழ்வரும் இணைப்பில்
    http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html

    ReplyDelete
  5. தங்கள் தளத்தில் போட்டி அறிவிப்பு இருப்பதைக் கண்டு மகிழ்வடைகிறேன். போட்டியில் அதிக பதிவர்கள் இணைவார்கள் என நம்புகிறேன்.
    தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  7. பகிர்விற்கு நன்றி ஐயா
    தாங்கள் நலம்தானே
    பதிவர் திருவிழாவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

    ReplyDelete
  8. பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. போட்டிகான படம் அந்த பெண் ஒவியம் மட்டும் தானே அய்யா?

    ReplyDelete