ஒரு மொட்டை
மலரச் செய்வதற்கோ
மலர்ந்ததை
வாடச் செய்வதற்கோ
வாடியதை
கருகச் செய்வதற்கோ
கதிரவன் நித்தமும் உதிப்பதில்லை
அவன் தன்
கருணை ஒளியை
பாரபட்சம் ஏதுமின்றி
அனைவருக்கும் சமமாகவே
விரித்து வைத்துப் போகிறான்
அந்தக் கருணை ஒளி
வரமாவதும்
சாபமாவதும்
அவரவர் நிலைபொருத்தேயன்றி
அவன் பொருத்தல்ல
ஒரு செடியை
வளரச் செய்யவோ
வளர்ந்ததை
செழிக்கச் செய்யவோ
செழித்ததை
அழுகச் செய்யவோ
வான்மழை பரவிப் பெய்வதில்லை
அது தன்
அமுதக் கலசத்தை
பாரபட்சம் ஏதுமின்றி
அனைவருக்கும் சமமாகவே
அள்ளிக் கொடுத்துச் செல்கிறது
அந்த அமுதம்
அமுதமாவதும்
விஷமாவதும்
அதனதன் நிலைபொருத்தேயன்றி
மழை பொருத்தல்ல
உலகில் ஒருவனை
வாழ வைக்கவோ
வாழ்பவனை
உயரச் செய்யவோ
உயர்ந்தவனை
தாழச் செய்யவோ
தெய்வம் தன் அருளை வழங்குவதில்லை
"அது " தன்
பேரருளை
பாரபட்சம் ஏதுமின்றியே
அனைவருக்கும் சமமாகவே
பொழிந்து போகிறது
"அதன் " அருள்
பயன்பட்டுப் போவதும்
பயனற்றுப் போவதும்
அவனவன் திறன்பொருத்தேயன்றி
"அதன் "பொருத்தல்ல
மலரச் செய்வதற்கோ
மலர்ந்ததை
வாடச் செய்வதற்கோ
வாடியதை
கருகச் செய்வதற்கோ
கதிரவன் நித்தமும் உதிப்பதில்லை
அவன் தன்
கருணை ஒளியை
பாரபட்சம் ஏதுமின்றி
அனைவருக்கும் சமமாகவே
விரித்து வைத்துப் போகிறான்
அந்தக் கருணை ஒளி
வரமாவதும்
சாபமாவதும்
அவரவர் நிலைபொருத்தேயன்றி
அவன் பொருத்தல்ல
ஒரு செடியை
வளரச் செய்யவோ
வளர்ந்ததை
செழிக்கச் செய்யவோ
செழித்ததை
அழுகச் செய்யவோ
வான்மழை பரவிப் பெய்வதில்லை
அது தன்
அமுதக் கலசத்தை
பாரபட்சம் ஏதுமின்றி
அனைவருக்கும் சமமாகவே
அள்ளிக் கொடுத்துச் செல்கிறது
அந்த அமுதம்
அமுதமாவதும்
விஷமாவதும்
அதனதன் நிலைபொருத்தேயன்றி
மழை பொருத்தல்ல
உலகில் ஒருவனை
வாழ வைக்கவோ
வாழ்பவனை
உயரச் செய்யவோ
உயர்ந்தவனை
தாழச் செய்யவோ
தெய்வம் தன் அருளை வழங்குவதில்லை
"அது " தன்
பேரருளை
பாரபட்சம் ஏதுமின்றியே
அனைவருக்கும் சமமாகவே
பொழிந்து போகிறது
"அதன் " அருள்
பயன்பட்டுப் போவதும்
பயனற்றுப் போவதும்
அவனவன் திறன்பொருத்தேயன்றி
"அதன் "பொருத்தல்ல
T. M 2
ReplyDeleteஅது என்ன திறன்? அது எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா? வறுமை, நற்கல்வி இல்லாமை இவைகளை வைத்து கொண்டு எப்படி மேல்தட்டு நகர மக்களோடு போட்டி போடுவது. எப்படியோ மேலே வந்தாலும் இனம் , சாதி, பாகு பாட்டால் மிதிக்கபடுவது பொது சனம். 'அதன்' அருள் என்று புளுகி அவாள் அனுபவிப்பது தான் மிச்சம். ஆறறிவு தன் நோய் போல் கருத வைக்க வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அதற்கான வாய்ப்பே இல்லையே இங்கே.
ReplyDeleteஇந்த 'அதன் அருள்' இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன?
நல்ல கவிதை.
ReplyDeleteAnonymous //
ReplyDeleteஎன் கருத்தை நானெனத் தெரியும்படிச்
சொல்லியிருக்கிறேன்
உங்கள் கருத்திலும் ஞாயம்
இருக்கத்தான் செய்கிறது
மனம் திறந்துச் சொன்னதை
முகம் தெரியச் சொன்னால்தான் என்ன ?
வணக்கம்,
ReplyDeleteயார் அருள்,,,,,,
ஆனாலும் கவி அருமை, வாழ்த்துக்கள்,,,,,,,,,,,
நன்றி
ReplyDeletemageswari balachandran //.
நம்புவோருக்கு "அவன் " இறைவன்
நம்பாதோருக்கு " அது " இயற்கை
ஆத்திகவாதியும், நாத்திகவாதியும் ஏற்கும் கவிதை. நன்றி.
ReplyDeleteகவிதை நன்றாக வந்திருக்கிறது ஆனால் சொல்லப் பட்ட கருத்துஏற்புடையதாய் இல்லை. ”அது” எனப்படுவது தன் பேரருளை(அப்படி ஒன்று இருந்தால்) பாரபட்சமின்றி வழங்குகிறது என்பதில் உடன் பாடில்லை. கதிரவனும் மழையும் எல்லோருக்கும் சமம் என்பது போல் பேரருள் இல்லை. நம்பிக்கை என்னும் முகமூடியால் உணர்ந்த முற்படுத்தபடுவது.
ReplyDeleteமேலே உணர்த்த என்றிருக்க வேண்டும்
ReplyDeleteG.M Balasubramaniam
ReplyDeleteநீங்கள் இயற்கையெனப் பொருள்
கொண்டால் சரியாயிருக்கும்
ஆத்திகமும், நாத்திகமும் கொஞ்சுகின்றது கவியில்....
ReplyDeleteஅட! அருமை! ஆத்திகன் என்றால் இறைவன் எனலாம்...நாத்திகன் என்றால் இயற்கை எனலாம்...அருமையான கவிதை!
ReplyDelete