காதல் உணர்வுப் பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே
வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே
கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே
மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாரியே
தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே
குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு பானமே
எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே
தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ
கவிதைப் பெண்ணே......
உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்கும் நீ வாரிவழங்கிச் செல்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே
வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே
கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே
மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாரியே
தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே
குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு பானமே
எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே
தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ
கவிதைப் பெண்ணே......
உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்கும் நீ வாரிவழங்கிச் செல்
கவிதைப் பெண்ணே......இவரை காயப்படுத்தி விடாதே ..இவர் இன்னும் எழுதட்டும் ..
ReplyDelete/மடமை மரம் முறிக்க
ReplyDeleteசிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாரியே/ வலைத்தளத்தில் பதிக்கும் கவிதைகளுக்குமா. சந்தேகமே. பலரும் நுனிப்புல் மேய்வோரே
அருமை
ReplyDeleteநற்கவிதைநண்பரே
ReplyDeleteநற்கவிதைநண்பரே
ReplyDeleteநற்கவிதைநண்பரே
ReplyDeleteneengal kathalikkum ival yenrum kaividamaddal
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
இரசித்தேன் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதைப் பெண்ணே அவருக்கு எல்லா சக்தியும் கொடுத்து வாழ்த்து. அருமை சார்!
ReplyDelete