Thursday, June 1, 2017

சென்னை சில்க்ஸின் பாதிப்பும் அதன் பெருந்தன்மையும்...

கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்
அவரை விழ்த்துவதற்கென்றே
மிகத் துல்லியமாக வீசப்பட்ட  ஒரு பந்தை
அவதானிக்கையில் சிறு கவனப்பிசகு
நேர்ந்தாலும் ஸ்டம்பினைத் தகர்க்கும்
நிலையில்

மிகச் சரியாகக் கவனித்து அதை
ஒரு சிக்ஸராக மாற்றுபவர் எப்படி
மிகச் சிறந்த பேஸ்மெனாக கருதப்படுகிறாறோ

அதைப் போல...

சமாளிக்கவே முடியாத சோதனை
ஏற்படுகையில் அதில் தனக்கு நேர்ந்த
இழப்புகள் குறித்து மட்டும் கவனம்
கொள்ளாது,

அதனால் தன்னைச் சார்ந்துள்ள
யாரும் பாதிக்கப்பட்டுவிடாமல் இருக்கும்படியாக
அதிகம் கவனக் கொள்கிற நிறுவனமும்
நிர்வாகத்தினரும் மிகச் சிறந்த நிர்வாகமாகவும்
நிர்வாகத்தினராகவும் மதிக்கப்படுவர்

அந்த வகையில் மிகப் பெரிய பாதிப்பை
அடைந்த போதும் அது குறித்து மட்டுமே
கவன்ம் கொள்ளாது, உடன் தங்கள்
நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்
அனைவருக்கும் தாமதம் செய்யாது
இம்மாத ஊதியத்தை
உடன்பட்டுவாடா செய்ததோடு,

உடன் அவர்களை தன் நிறுவனத்தில்
 பிற கிளைகளில்பணியமர்த்த ஏற்பாடுகளைச்
செய்து கொண்டிருக்கிற
சென்னை சில்க்ஸ் நிறுவனம்
மக்கள் மனங்களில் ஒரு போற்றத்தக்க
மதிப்பினைப் பெற்றுள்ளது என்றால்
நிச்சயம் அது மிகையில்லை

அந்த நிறுவனம்  இந்தப் பேரதிர்வில்
இருந்து விரைவில் மீளவும், மீண்டும்
தனக்கான மதிப்பான நிலையைத்
தொடர்ந்து தங்க வைத்துக் கொள்ளவும்
இத்தனைப்பெரிய மோசமான சம்பவத்திலும்
உயிர் இழப்பு ஏதும் நேராதபடி அருளிய
எல்லாம் வல்ல இறைவன் இதற்கும்
அருள் புரியவேண்டிக் கொள்வோமாக  

16 comments:

  1. வணக்கம் !

    மாற்றம் மகிழ்வழித்தும் ! மாண்பு தவறாமை
    ஏற்றம் உடையார் இயல்பு !

    நல்ல மனிதர்களைக் கடவுள் சோதிப்பான் என்பதற்கு அத்தாட்சி இவ்வழிவு !

    இழப்பின் துயரை இறையீடு செய்ய வேண்டுகிறேன் வாழ்க நலம்
    தம முதல் வாக்கு !

    ReplyDelete
  2. சீராளன்.வீ said...
    வணக்கம் !

    மாற்றம் மகிழ்வழித்தும் ! மாண்பு தவறாமை
    ஏற்றம் உடையார் இயல்பு !//

    ஆஹா. எத்தனைப் பொருத்தமான வரிகள்
    உடன் வரவுக்கும் ஆறுதல் அளிக்கும்படியான
    அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகுக.

    ReplyDelete
  4. அவர்களுக்கு எதையும் சமாளிக்கும் வல்லமை உண்டு...

    ReplyDelete
  5. பாராட்டப்படவேண்டிய செயல்.

    ReplyDelete
  6. போற்றுதலுக்கு உரிய செயல்

    ReplyDelete
  7. இது எதிர்பாராத மிகப்பெரிய சோதனைதான். எப்படியும் சமாளித்து இதிலிருந்து மீண்டு வருவார்கள்.

    அதிக உயிர்சேதங்கள் ஏதும் இல்லாமல் தப்பித்ததில் நிம்மதி. ஊழியர்கள் நலத்தினில் கவனம் செலுத்திவருவது கேட்க மேலும் மகிழ்ச்சியே. பாராட்டுவோம்.

    ReplyDelete
  8. உயிர்பலி இல்லையே இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
    த.ம

    ReplyDelete
  9. எது எப்படியோ ஊழியர்களின் நிலையை யோசித்து முடிவெடுத்தவரை நிச்சயமாய் பாஅராட்டுவோம்

    ReplyDelete
  10. நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  11. திநகரில் உள்ள மற்ற பெரும் துணிக்கடைகளை விட தரம் உயர்ந்த்தும் விலையில் சகாயமானதுமான அணிதுணிகள் சென்னை சில்க்சில் எப்போதும் கிடைக்கும் என்பது என் கடந்த ஐந்தாண்டு அனுபவம். அந்நிறுவனம் அழிந்துவிடக்கூடாது.

    ReplyDelete
  12. திநகரில் உள்ள மற்ற பெரும் துணிக்கடைகளை விட தரம் உயர்ந்த்தும் விலையில் சகாயமானதுமான அணிதுணிகள் சென்னை சில்க்சில் எப்போதும் கிடைக்கும் என்பது என் கடந்த ஐந்தாண்டு அனுபவம். அந்நிறுவனம் அழிந்துவிடக்கூடாது.

    ReplyDelete
  13. சென்னை சில்க்ஸ் நிறுவன நிர்வாகத்தினருக்கும் ஊழியர்களுக்கும் நலம் வேண்டி இறைவனை வேண்டுகின்றோம்.

    ReplyDelete
  14. oஒரு இழப்பிலும் ஒரு ஆறுதல்

    ReplyDelete
  15. நல்லவர்கள் மீண்டு வந்து ஜெயிப்பார்கள்.
    தன்னை சார்ந்து இருப்பவர்கள் நலம் விரும்புவர்களை இறைவன் காப்பான்.

    ReplyDelete
  16. நல்ல மனம் கொண்ட சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் மீண்டு வந்திட வேண்டும். பாராட்ட வேண்டிய செயல்...

    --துளசி, கீதா

    ReplyDelete