Sunday, March 15, 2020

கொரோனா வெண்பா..

கொம்புளதற்கு  ஐந்து  குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே--வம்பு செய்
குரோனா கிருமிக்கோ  மூன்றடி வேண்டும்
மறந்திட வேண்டாமே என்றும்.                       (விழிப்புணர்வு ஏற்படுத்த ஆளுக்கொன்று எழுதலாமே) 

12 comments:

  1. வணக்கம்
    ஐயா

    உண்மையில் ஒவ்வொருவரும் எழுதினால் ஒரு விழிப்புணர்வு வரும் என்பதில் ஐயமில்லை

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. ஆம் அதற்காகவே இந்தப் பதிவு உடன் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துகள்

      Delete
  2. அருமை.

    மூன்றடி எதற்கு?  முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நோக்கி ஒரு அடி (முதல் அடி) எடுத்து வைத்தால் போதுமே!

    ReplyDelete
    Replies
    1. குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ஒரு மீட்டர் விலகி இருக்கச் சொல்கிறார்கள்...ஆம் எச்சரிக்கை முதலடியே அதனினும் முக்கியம்

      Delete
  3. கொரானாவிற்கு வெண்பா. நன்றாக இருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம். நலமே விளையட்டும்.

    ReplyDelete
  4. மூன்றடி வேண்டாம் சார். யாரையும் தொடக்கூடாது. எந்த வெளிப்பொருளையும் கொண்டுவந்த பிறகு அலம்பணும், நம் கையையும் அலம்பிக்கணும், நம் சேஃப்டிக்கு முகமூடி, அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு கழுவணும். அஷ்டே..

    இதில் பிரச்சனை என்னவென்றால், யார் பாதிக்கப்பட்டவர்கள் என்று யாருக்குமே தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. விரிவான பயனுள்ள தகவலுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்

      Delete
  5. நினைத்தபடி எழுத முடியவில்லையே

    ReplyDelete
  6. எளிதாக எண்ணுவதோ இந்நோ யடைவு?
    புலியாய் அடிக்கின்றது புரிவீர்! - தெளிவு
    பெறாம லிருத்தற்பே தைமை - எரியும்
    கரிவாய்ப் படாதிருத்தல் நன்று!

    ReplyDelete
    Replies
    1. அற்புதம்..வாழ்த்துகளுடன்

      Delete