Friday, October 21, 2022

அபுரிக் கவிதைகள்...

 தன் பாண்டித்தியம்

படிப்போருக்குப்

புரியவேண்டும் என்பதற்காக


படித்ததும்

புரிந்துவிடக் கூடாது என்பதற்காக

அவன் பட்ட சிரமம்


கவிதையைப் படித்ததும்

மிக எளிதாய்ப்

புரிந்துவிடுகிறது.


தமிழ்தான்....

தெரிந்த வார்த்தைகள் தான்

என்றபோதும்....


விடாது தொடர்ந்து

பலமுறை முயன்றபோதும்

கவிதைதான் புரியவில்லை..

2 comments:

  1. புரியாத கவிதையே 
    புதுக் கவிதை என்பதை  
    அறியவில்லையா? 

    ReplyDelete