Tuesday, January 22, 2013

ஞானம் பெற எளிய ( ? ) வழி

தேவைகளை
எவ்வளவு சுமக்க முடியுமோ
எவ்வளவு குறைக்க முடியுமோ
அவ்வளவு குறைத்தபடி

சேர்த்தவைகளை
எவ்வளவு  இழக்க முடியுமோ
எவ்வளவு விலக்க முடியுமோ
அவ்வளவு விலக்கியபடி

நினைவுகளை
எவ்வளவு மறக்க முடியுமோ
எவ்வளவு துறக்க முடியுமோ
அவ்வளவு துறந்தபடி

அறிந்தவைகளை
எவ்வளவு எரிக்க முடியுமோ
எவ்வளவு புதைக்க முடியுமோ
அவ்வளவு புதைத்தபடி

திசைகளை
எவ்வளவு கடக்க முடியுமோ
எவ்வளவு  தகர்க்க முடியுமோ
அவ்வளவு தகர்த்தபடி

குருவற்ற  சீடனாய்
எவ்வளவு  ஓட  முடியுமோ
எவ்வளவு தேட முடியுமோ
அவ்வளவு தேடியபடி

அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்

45 comments:

  1. மகான்கள் எல்லாம் அலைந்து திரிந்தே ஞானம் பெற்றிருக்கிறார்கள்.அதனை அழகான வார்த்தைகளால் சொல்லிவிட்டீர்கள்

    ReplyDelete
  2. சூப்பரா இருக்கு சார் டைரி யின் முதல் பக்கத்தில் எழுதி வைத்து கொள்ள வேண்டிய கவிதை இது

    ReplyDelete
  3. அலையாமல் கிடைப்பதில்லை ஞானம்.
    தேடாமல் கிடைப்பதில்லை அறிவு!

    ReplyDelete
  4. "தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்"
    அடையக்கூடியவைகளை அடைவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று.சரிதானே சார்?

    ReplyDelete
  5. ஆகா அனுபவம் பேசுகிறது!.
    நன்றி..நன்றி முத்துக்களைப் பொறுக்குவோம்.
    தாருங்கள்.
    இனிய அனுபவங்கள் பெருகட்டும்.
    இஙையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. முத்திரைக் கவிதை !

    அருமை..அருமை ..வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. அருமையான கவிதை .
    நீங்கள் சொன்னவை எல்லாம் முடியுமா ?
    கொஞ்சமாவது முடிகிறதா என்று முயன்று பார்க்க வேண்டும்.

    நன்றி பகிர்விற்கு,
    ராஜி

    ReplyDelete
  8. சார் தத்துவம் அருமை

    ReplyDelete
  9. unmainga ayya!

    saththiyamaa..

    unmainga ayyaa..!

    manam thottu ulukkiyathu ayya!

    mikka nantri ayya..!

    ReplyDelete
  10. தேடுதல்தான் ஞானம்பெற வழி.. ஆனால் இன்றைய தேடுதல் வேறு தளத்தில் பயணிக்கிறது. அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  11. //அலைதல் ஒன்றே
    உலகில் ஞானம் பெற
    எளிய வழியென அறிவோம்
    அதனைப் பயில்தலே
    உண்மை ஞான நெறியென
    அறிந்து தெளிவது கொள்வோம்//

    அருமையான வரிகள் சார்.
    த.ம 7

    ReplyDelete
  12. //அலைதல் ஒன்றே
    உலகில் ஞானம் பெற
    எளிய வழியென அறிவோம்
    அதனைப் பயில்தலே
    உண்மை ஞான நெறியென
    அறிந்து தெளிவது கொள்வோம்//

    நீங்க அழைக்கும் போதெல்லாம் வந்து இங்கே படித்தும் ஞானம் பெறுகிறோம் இங்கே எவ்வளவு படிக்க முடியுமோ படித்தப்படி அவ்வளவையும் ரசித்தபடி ,,,,,,

    நன்றி நன்றி அருமை ......
    தமிழ் மனம் 8

    ReplyDelete
  13. குருவற்ற சீடனாய்
    எவ்வளவு ஓட முடியுமோ
    எவ்வளவு தேட முடியுமோ
    அவ்வளவு தேடியபடி

    அலைதல் ஒன்றே
    உலகில் ஞானம் பெற
    எளிய வழியென அறிவோம்
    அதனைப் பயில்தலே
    உண்மை ஞான நெறியென
    அறிந்து தெளிவது கொள்வோம்

    மனப்பாடம் செய்ய வேண்டிய வரிகள்! அத்தனையும் முத்தனைய! அருமை!

    ReplyDelete
  14. //அலைதல் ஒன்றே
    உலகில் ஞானம் பெற
    எளிய வழியென அறிவோம்//
    அருமையான, மனதில் தைத்த வரிகள் சார்.....தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  15. கவிதை அருமையாக இருக்கிறது!

    ReplyDelete
  16. //அலைதல் ஒன்றே
    உலகில் ஞானம் பெற
    எளிய வழியென அறிவோம்
    அதனைப் பயில்தலே
    உண்மை ஞான நெறியென
    அறிந்து தெளிவது கொள்வோம்//
    சிறப்பான வரிகள்! அர்த்தமுள்ள கவிதை! மிக்க நன்றி!

    ReplyDelete
  17. அருமையான கவிதை இரமணி ஐயா.

    ReplyDelete
  18. எளிய ( ? ) வழி ...

    ???

    கொஞ்சம் கஷ்டம் தான் நமக்கு...


    ReplyDelete
  19. அலைதல் ஒன்றே
    உலகில் ஞானம் பெற
    எளிய வழியென அறிவோம்
    அதனைப் பயில்தலே
    உண்மை ஞான நெறியென
    அறிந்து தெளிவது கொள்வோம்//

    அருமையான வரிகள்.
    தேடினால் தான் கிடைக்கும்.
    அறிந்து தெளிவதே ஞானம் அற்புதம்.

    ReplyDelete
  20. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கைவூட்டும் கவிதை !

    கல்வி ஞானம் குருஇடமிருந்து நன்கு கற்கவேண்டும்.

    கல்வியை கற்போம் - கற்பிப்போம்

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. //அலைதல் ஒன்றே
    உலகில் ஞானம் பெற
    எளிய வழியென அறிவோம்//

    அங்கங்கே கலைகள் தேறும் அறிவன் (மாணவன்) போல அலைந்தால் நிச்சயம் ஞானம் (அனுபவம்) கிடைக்கும்.

    ReplyDelete

  22. /அலைதல் ஒன்றே
    உலகில் ஞானம் பெற
    எளிய வழியென அறிவோம்
    அதனைப் பயில்தலே
    உண்மை ஞான நெறியென
    அறிந்து தெளிவது கொள்வோம்/ உண்மை. ஆனால் அதற்கு ஞானம் பெறத்தான் செய்யவேண்டும் என்றில்லை. நிம்மதி பெறவும் அதையெல்லாம் செய்ய வேண்டும். நிம்மதி பெற்றுவிட்டால் ஞானம் பெற்ற மாதிரிதானோ.?

    ReplyDelete
  23. T.N.MURALIDHARAN //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  24. r.v.saravanan //


    சூப்பரா இருக்கு சார் டைரி யின் முதல் பக்கத்தில் எழுதி வைத்து கொள்ள வேண்டிய கவிதை இது//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  25. ஸ்ரீராம். //.

    அலையாமல் கிடைப்பதில்லை ஞானம்.
    தேடாமல் கிடைப்பதில்லை அறிவு!//


    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. அகலிக‌ன் //

    "தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்"
    அடையக்கூடியவைகளை அடைவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று.சரிதானே சார்?//

    மிகச் சரி
    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. kovaikkavi//

    ஆகா அனுபவம் பேசுகிறது!.
    நன்றி..நன்றி முத்துக்களைப் பொறுக்குவோம்.
    தாருங்கள்.
    இனிய அனுபவங்கள் பெருகட்டும்.
    இஙையாசி நிறையட்டும்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  28. ரமேஷ் வெங்கடபதி//

    முத்திரைக் கவிதை !
    அருமை..அருமை ..வாழ்த்துக்கள் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  29. rajalakshmi paramasivam //

    அருமையான கவிதை .
    நீங்கள் சொன்னவை எல்லாம் முடியுமா ?
    கொஞ்சமாவது முடிகிறதா என்று முயன்று பார்க்க வேண்டும்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. கவியாழி கண்ணதாசன் //

    சார் தத்துவம் அருமை//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. Seeni said...

    unmainga ayya!saththiyamaa..unmainga ayyaa..!

    manam thottu ulukkiyathu ayyamikka nantri ayya..//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. விச்சு //

    தேடுதல்தான் ஞானம்பெற வழி.. ஆனால் இன்றைய தேடுதல் வேறு தளத்தில் பயணிக்கிறது. அருமையாக சொல்லியுள்ளீர்கள்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. கோவை2தில்லி //

    அருமையான வரிகள் சார்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. ரியாஸ் அஹமது //

    நீங்க அழைக்கும் போதெல்லாம் வந்து இங்கே படித்தும் ஞானம் பெறுகிறோம் இங்கே எவ்வளவு படிக்க முடியுமோ படித்தப்படி அவ்வளவையும் ரசித்தபடி ,,,,,,

    நன்றி நன்றி அருமை ...

    படைப்பின் தொனியிலேயே பின்னூட்டமிட்டது
    மனம் கவர்ந்தது

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. புலவர் சா இராமாநுசம் ''

    மனப்பாடம் செய்ய வேண்டிய வரிகள்! அத்தனையும் முத்தனைய! அருமை!//

    தங்கள் வரவும் வாழ்த்தும் என் பாக்கியம்

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. s suresh //

    அருமையான, மனதில் தைத்த வரிகள் சார்.....தொடர வாழ்த்துக்கள் !//

    ஒரு வகையில் நீங்களும் அலைதலில் தேடுதலில்
    ஆர்வம் கொண்டவர் என்கிற முறையில்
    தங்கள் பின்னூட்டம் எனக்கு அதிக தெம்பளிக்கிறது

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. கே. பி. ஜனா... //

    கவிதை அருமையாக இருக்கிறது!//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. s suresh //

    சிறப்பான வரிகள்! அர்த்தமுள்ள கவிதை! மிக்க நன்றி! ''

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. அலைந்து திரிந்து பெற வேண்டியது ஞானம்.... உண்மை தான்...

    த.ம. 14

    ReplyDelete
  40. வெங்கட் நாகராஜ் //

    அலைந்து திரிந்து பெற வேண்டியது ஞானம்.... உண்மை தான்..//


    ஒரு வகையில் நீங்களும் அலைதலில் தேடுதலில்
    ஆர்வம் கொண்டவர் என்கிற முறையில்
    தங்கள் பின்னூட்டம் எனக்கு அதிக தெம்பளிக்கிறது

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. /
    G.M Balasubramaniam //.. உண்மை. ஆனால் அதற்கு ஞானம் பெறத்தான் செய்யவேண்டும் என்றில்லை. நிம்மதி பெறவும் அதையெல்லாம் செய்ய வேண்டும். நிம்மதி பெற்றுவிட்டால் ஞானம் பெற்ற மாதிரிதானோ.?//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    அமைதியும் ஞானமும் நாணயத்தின் இருபக்கங்கள்
    போலத்தானே !

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. தி.தமிழ் இளங்கோ//

    அங்கங்கே கலைகள் தேறும் அறிவன் (மாணவன்) போல அலைந்தால் நிச்சயம் ஞானம் (அனுபவம்) கிடைக்கும்.//

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. சேக்கனா M. நிஜாம் //

    இளைஞர்களுக்கு தன்னம்பிக்கைவூட்டும் கவிதை !
    கல்வி ஞானம் குருஇடமிருந்து நன்கு கற்கவேண்டும்.கல்வியை கற்போம் - கற்பிப்போம் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete