Tuesday, December 20, 2011

உயிரேணி

சிறு புன்னகைதானே
என்னசெய்துவிடப் போகிறது என
அலட்சியமாய் எப்போதும் இருப்பதில்லை

என்று எங்கு எப்போது கிழியும் எனத் தெரியாது
நைந்துபோன சட்டையாய்
பிரச்சனைகளில் அசுரப் பிடியில்
மனம் துடிக்க அலைபவனுக்கு அது ஒரு
சால்வையாகக் கூட ஆகலாம்

சிறு ஆறுதல் வார்த்தைதானே
அதனால் என்ன பயன் என எண்ணி
அசட்டையாய் இதுவரை இருந்ததில்லை

நிலைத்தலுக்கான  அதீத ஓட்டத்தில்
தடம் மாறி நிலை தடுமாறி
அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்

சிறு பாராட்டு மொழியில்
என்ன விளைந்துவிடப் போகிறது என எண்ணி
சோம்பி இருக்க முயன்றதில்லை

உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
அசந்து தூங்கிக் கிடப்பவனை
எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
தாரக மந்திரமாகக்  கூட அது இருக்கலாம்

போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
என்றேனும்  கோடை வெய்யிலின்
உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
எனக்காக  மட்டுமல்ல
என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்

97 comments:

  1. /விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும்/

    உண்மை. கவிதை அருமை.

    ReplyDelete
  2. வழிகாட்டியாக இருந்துக்கொண்டு, புன்னகையோடு நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கு ஊக்குவித்தம் பணியை செம்மையாக செய்பவர்கள் காலத்தால் அழியமாட்டார்கள்...

    அர்த்தமுள்ள பதிவு

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //போகிற வழியில் முடிந்தவரையில்
    புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
    பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
    என்றேனும் கோடை வெய்யிலின்
    உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
    எனக்காக மட்டுமல்ல
    என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
    விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
    அதீத நம்பிக்கையில்//

    அன்பின் மகத்துவம் தனை, ஆறுதலின் அற்புதம் தனை, பாராட்டுகளின் பாக்கியம்தனை செப்பிய நல்முத்து கவிதை. அருமை ஐயா.

    ReplyDelete
  4. அருமை.
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கோடை வெய்யிலின்
    உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
    எனக்காக மட்டுமல்ல
    என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
    விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
    அதீத நம்பிக்கையில்
    >>>
    நம்பிக்கை பொய்க்காது ஐயா

    ReplyDelete
  6. அழகான, அருமையான, தேவையான நம்பிக்கை.

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி //

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. கவிதை வீதி... // சௌந்தர் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. V.Radhakrishnan //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும் அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. நண்டு @நொரண்டு -ஈரோடு //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. ராஜி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. Ramani //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. எங்களிலுள்ளும் விதைத்ததர்க்கு நன்றிகள்! த.ம 9!

    ReplyDelete
  14. துரைடேனியல் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. அருமையான கருத்துக்களை அழகாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ரமேஷ் வெங்கடபதி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  17. //நிலைத்தலுக்கான அதீத ஓட்டத்தில்
    தடம் மாறி நிலை தடுமாறி
    அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
    ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
    அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்//

    எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
    சிறு ஆறுதல் ஒரு ஜீவனுக்குள் மிகப்பெரிய மாறுதலை உண்டாக்கும் சக்தி படைத்தது....

    ReplyDelete
  18. //விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும்//

    இது அதீத நம்பிக்கையல்ல...
    அர்த்தமுள்ள நம்பிக்கை.

    ReplyDelete
  19. சிந்தனை நச்சின்னு ஏற்புடையதாய் இருக்கு..... நெகிழ்வான பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. G.M Balasubramaniam //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. சி.கருணாகரசு //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  22. சிசு //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  23. போகிற வழியில் முடிந்தவரையில்
    புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
    பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
    என்றேனும் கோடை வெய்யிலின்
    உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
    எனக்காக மட்டுமல்ல
    என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
    விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
    அதீத நம்பிக்கையில்



    அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. //விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
    அதீத நம்பிக்கையில்//

    நம்பிக்கை தானே எல்லாம்... நல்ல விதைகள் நிச்சயம் விருட்சமாகி பலன் தரும் என நம்புவோம்....

    நல்ல கவிதை வரிகள்.... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  25. Lakshmi //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. போகிற வழியில் முடிந்தவரையில்
    புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
    பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்//

    வீரியமுள்ள விதை முளைத்து விருட்சமாகி தன் பலனை நிச்சயம் தந்துவிடும் குரு...!!!

    ReplyDelete
  28. கண்டிப்பாக இந்த பண்பு ஒரு சிறந்த ஆளுமைத் திறன்
    மட்டும் அல்ல மனிதாபிமானமும் கூட.
    இதழில் முறுவலும் நெஞ்சில் நெகிழ்ச்சியும் வருகிறது படித்தவுடன்.

    ReplyDelete
  29. //விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
    அதீத நம்பிக்கையில்//

    இந்த தங்கள் நம்பிக்கை என்றும் வீண் போகாது.
    நல்ல கவிதை.பாராட்டுக்கள்.

    தமிழ்மணம்: 11

    ReplyDelete
  30. ஒரு கட்டத்தில் கடந்து வந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது இப்படி செய்திருக்கலாமே அல்லது அதை செய்திருக்கலாமே என்று வருந்துவதைவிட அந்தந்த நேரத்திலேயே ஒரு சிறு புன்னகை /பாராட்டு /ஆறுதல் வார்த்தைகளை விதைத்தால் //விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் //


    மிகவும் அருமையான கவிதை

    ReplyDelete
  31. MANO நாஞ்சில் மனோ //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. ஸ்ரவாணி //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. வை.கோபாலகிருஷ்ணன் //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. angelin //

    தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. நன்றியடஹி விதைத்தால்
    குன்றாது விளையும்...

    அழகான வாக்குக்கு அற்புதமான
    விளக்கக் கவிதை.

    ReplyDelete
  36. புன்னகையோ, ஆறுதலோ, பாராட்டோ தேவைப்படும் மனங்களை, வாழ்க்கைகளைத் துல்லியமாக எடுத்துக்காட்டி மனம் தொட்ட வரிகள்.

    முடங்கிக்கிடக்கும் மனங்களை முடுக்கும் விதமாய், சரிந்து கிடக்கும் வாழ்க்கைகளை தூக்கிநிறுத்தும் விதமாய்,
    நலிந்துபோன நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் விதமாய்
    அழகாய் மொழிந்த அற்புத வரிகளுக்கு என் நன்றியும் பாராட்டும் ரமணி சார்.

    ReplyDelete
  37. போகிற வழியில் முடிந்தவரையில்
    புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
    பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்<<<<<<<<<<<<<<<<<<<<

    உன்னதமான வரிகள் பாஸ்...
    இப்படியே எல்லோரும் இருந்துட்டா
    இந்த உலகம் எவ்ளோ அழகா இருக்கும்

    ReplyDelete
  38. கீதா

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    விரிவான உற்சாகமூட்டும்
    அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. வணக்கம்!
    // போகிற வழியில் முடிந்தவரையில
    புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
    பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்//

    வலைப்பதிவு திரட்டிகளில் புதியவர்களையும் உற்சாகப் படுத்தும் உங்களைக் கண்டவுடனேயே தெரிந்து கொண்டேன் நீங்கள் புதுமையானவர் என்று!

    ReplyDelete
  40. துஷ்யந்தன் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. சாதாரணமாக உணராமல் தாண்டிச் செல்லும் இந்த விஷயங்களின் மகத்துவம் இப்படி யாஆவது ஒருமுறை எடுத்துச் சொன்னால்தான் தெரிகிறது/உரைக்கிறது. உயிரேணியை (எப்படி வார்த்தை கோர்த்தீர்கள் அருமை!) நிறைய பயிர் செய்வோம்.

    ReplyDelete
  42. தி.தமிழ் இளங்கோ //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. ஸ்ரீராம். //


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. மகேந்திரன் //

    தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
    கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
    அசந்து தூங்கிக் கிடப்பவனை
    எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
    தாரக மந்திரமாகக் கூட அது இருக்கலாம்


    விஸ்வரூபமாய் மனதை ஆக்ரமிக்கும் உன்னத பகிர்வு ஐயா..

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  46. ////நிலைத்தலுக்கான அதீத ஓட்டத்தில்
    தடம் மாறி நிலை தடுமாறி
    அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
    ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
    அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்////

    சிறப்பான வரிகள்

    ReplyDelete
  47. அருமையா இருக்கு. இத்தகைய பாசிடிவ் விஷயங்களே அனைவருக்கும் தேவை

    ReplyDelete
  48. இராஜராஜேஸ்வரி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. K.s.s.Rajh //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. மோகன் குமார் //

    தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. புன்னகை, ஆறுதல், பாராட்டு - வேண்டும் சார் வாழ்வில்..

    அவை மிகப் பிரமாண்டமான மாற்றங்களை, ஏற்றங்களை ஒருவனின் வாழ்வில் ஏற்படுத்தும். ஆனால் அதே நேரத்தில் ஏளனப் புன்னகை, வஞ்சக வார்த்தைகள், முகஸ்துதி இவற்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்..
    உற்சாகப் பதிவுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  52. //விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
    அதீத நம்பிக்கையில்//

    அருமையான வரிகள் சார்... நல்ல கருத்துக்கள் அடங்கிய கவிதை...

    ReplyDelete
  53. நல்ல நம்பிக்கை ,அருமை நண்பரே

    த.ம 18

    ReplyDelete
  54. நிலைத்தலுக்கான அதீத ஓட்டத்தில்
    தடம் மாறி நிலை தடுமாறி
    அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
    ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
    அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்// சிறந்த பா இந்த மனிதம் நிலைத்தளுக்கான ஓட்டத்தில் தவறுதலாகவோ அல்லது எப்படியோ வீழ்ந்து போனவனுக்கு வழிகாட்டுதல் அல்லது சிறு நம்பிக்கையூட்டுதல் சிறந்த பண்பு பாராட்டுகள் தொடர்க...

    ReplyDelete
  55. அருமையான வரிகள் சார். இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் எல்லோருக்கும் வர வேண்டும்.
    த.ம - 19

    ReplyDelete
  56. Advocate P.R.Jayarajan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  57. மாலதி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. கோவை2தில்லி //

    தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. கோவிந்தராஜ்,மதுரை. //

    தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. சசிகுமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. M.R //

    தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. நம்பிக்கை அருமை பாராட்டுக்கள்.

    ReplyDelete
  63. r.v.saravanan //

    தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. எப்போதும் நீங்கள் கவிதைக்காக எடுக்கும் கரு என்னை அதிசயிக்க வைக்கிறது !

    ReplyDelete
  65. ஹேமா

    தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  66. "உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
    கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
    அசந்து தூங்கிக் கிடப்பவனை
    எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
    தாரக மந்திரமாகக் கூட அது இருக்கலாம்"

    ஆஹா! ஆக்கத்தின் உச்சமிங்கே ஆலாபனை செய்கிறது...
    தர்மங்களில் எல்லாம் சிறந்தது இதுவே என்பேன்...
    மிகவும் சுலபமானது, சிக்கனமானது ஆனால் வலியது...
    அருமையான கருத்தை மிக எழிலாக கவிதையாய்
    சமைத்துள்ளீர்கள்.....

    பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  67. தமிழ் விரும்பி //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  68. நல்ல (க)விதை விதைத்துள்ளீர்கள். எதை நான் விதைக்கிறோமோ அதை நாம் அறுவடை செய்வோம் என்பதற்கிணங்க நீங்கள் விதைத்த இந்த விதை எல்லோருக்கும் நல்பலன் கொடுக்கும்.

    ரமணி சார். உங்கள் கவிதைகள் அருமை. அதில் குற்றம் கண்டுபிடிக்க இன்னொரு நக்கீரன் பிறந்து வந்தாலும் முடியாது

    ReplyDelete
  69. நம்பிக்கையிலும், அங்கீகாரத்திலும் வாழ்வின் அச்சாணி உள்ளது என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை உறுதிப்படுத்தினீர்கள் சகோதரா. வாழ்த்துகள் உண்மையும் அது தான்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  70. அட்டகாசமான வரிகள் சகோ! மனதுக்கு மிகவும் பிடித்துபோனது... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  71. >>போகிற வழியில் முடிந்தவரையில்
    புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
    பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்

    அழகு வரிகள்

    ReplyDelete
  72. Avargal Unmaigal //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  73. kavithai (kovaikkavi)

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  74. சி.பி.செந்தில்குமார் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும்அழகான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  75. மாய உலகம் //

    தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  76. உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
    கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
    அசந்து தூங்கிக் கிடப்பவனை
    எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
    தாரக மந்திரமாகக் கூட அது இருக்கலாம்
    நன்றி

    ReplyDelete
  77. sasikala //
    தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  78. அழகான ஆழமான கருத்து. பலன் எதிர்பார்க்காமல் விதைத்த விதைகள் விருட்சமாவதுபோல் சிந்தனையை தூண்டுகிறது.

    ReplyDelete
  79. சாகம்பரி //

    தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  80. நல்ல கருத்துக்கள் அடங்கிய கவிதை!

    ReplyDelete
  81. விக்கியுலகம் //

    தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  82. நம்பிக்கை மொழிகள் நன்று.

    ReplyDelete
  83. guna thamizh //

    தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  84. உதட்டோரம் கசிகின்ற சிறு புன்னகைகீற்றுதான் எப்போதும் நம்ம உசுப்பி விடுகிற நம்பிக்கை விளக்காய்/நல்ல கவிதை ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  85. விமலன் //

    தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  86. அனுபவ வரிகள் அருமை! உங்கள் நம்பிக்கை வீண் போகாது!
    பகிர்விற்கு நன்றி Sir!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  87. திண்டுக்கல் தனபாலன் //

    தங்கள்
    வரவுக்கும் வாழ்த்துக்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  88. போகிற வழியில் முடிந்தவரையில்
    புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
    பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
    என்றேனும் கோடை வெய்யிலின்
    உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
    எனக்காக மட்டுமல்ல
    என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
    விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
    விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
    அதீத நம்பிக்கையில்//

    உயிரேணியாகும் அபூர்வ‌ தார‌க‌ ம‌ந்திர‌ம்தான்!

    ReplyDelete
  89. நிலாமகள் //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  90. கவிதை கூறும் கருத்துகள் யாவும் உண்மை உண்மை.

    நாம் தவறே செய்தாலும் அதிலும் நன்மை கண்டு பாராட்டித் தவறைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர்கள் நம் மனதுக்கு எத்தனை பிடித்தவர்களாக இருக்கின்றார்கள்?

    மிக அருமையான கவிதை.

    ReplyDelete
  91. ஔவை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  92. ''எனக்காக மட்டுமல்ல, என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும்''---அடேயப்பா,
    பெரிய சொத்தை வாரிசுகளுக்கு விட்டுச் செல்கிறோம்.
    அருமையான கருத்து.மிக்க நன்றி சார்

    ReplyDelete
  93. radhakrishnan //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  94. அய்யா, விதைத்தது விருட்சமாவது நிச்சியம். விதைப்போம் பலமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

    ReplyDelete