Friday, June 29, 2012

இருண்மை


எழுதுதலை கொஞ்சம்
நிறுத்தி இருந்தான் நண்பன்
காரணம்கேட்டேன்

"புரியாததை
புரியாதபடியே
படிப்பவர்களும்
புரிந்து கொள்ளாதபடியே
மறை பொருளாய் எழுதினேன்
பலர் முகம் திருப்பிப் போனார்கள்

மாறுதலாக
புரிந்ததை
புரிந்து கொண்டபடி
படிப்பவர்களும் புரிந்து கொள்ளுபடி
தெளிவாக எழுதிப் போனேன்
பலரும் பாராதே போனார்கள்
அதுதான் எழுதுவதில்லை "என்றான்

நான் சிரித்துக் கொண்டேன்

"பட்டப் பகலும்
நடு நிசியும்
அதிகம் போற்றப்படுவதில்லை
பாடப்படுவதும் இல்லை
பட்டப் பகலில் எல்லாமே தெளிவாகத் தெரியும்
அதில் சொல்ல என்ன இருக்கிறது
நடு நிசியில் எதுவுவேதெளிவாகத் தெரியாது
அதில் சொல்ல என்ன இருக்கிறது

விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
அப்படி முயற்சி செய்
அம்மணம் நிச்சய்ம் பெரும் ஆபாசம்
முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
ஒளிவு மறைவே பேரழகு என்றேன்

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்
தலையாட்டிப் போனான் அவன்
நிச்சயம் அவன் தலைசிறந்த
"இருண்மைகவி" ஆவான் என
அப்போதே முடிவுசெய்துவிட்டேன்


72 comments:

  1. புரிந்தது எனக்கு நன்றாய். அருமையான கருத்து. மனதைப் பறித்தது உங்களின் இந்தப் பதிவு. சூப்பர். (2)

    ReplyDelete
  2. ஒளிவு மறைவே பேரழகு ...........

    மிகவும் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

    எழுத்தாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

    நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சார்.....பதிவுலகில் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்

    ReplyDelete
  4. அழகுபட சொல்லி விட்டீர்கள் சார் ! நன்றி ! (த.ம.6)

    ReplyDelete
  5. விடிந்தும் விடியாத காலையிலும்
    முடிந்தும் முடியாத மாலையிலும்//

    ஒளிவு மறைவே பேரழகு//

    வாஸ்த‌வ‌ம்தான்.

    ReplyDelete
  6. அழகான & அர்த்தம் நிறைந்த வரிகள். ரசித்தேன்.

    ReplyDelete
  7. அருமை...... சொல்ல வார்த்தைகள் இல்லை சார். பின்னிவிட்டீர்கள்.... Superb

    ReplyDelete
  8. நன்றாக இருந்தது. எனெக்கென்னவோ சமீபப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் குறித்து வந்த கவிதையோ என்று சம்சயம்!!!

    ReplyDelete
  9. நிறையப் புரிந்தது...மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ஒளிவு மறைவே பேரழகு..
    உண்மை உண்மை மிகச் சரியான உண்மை நண்பரே...

    ReplyDelete
  11. விடிந்தும் விடியாத காலையிலும்
    முடிந்தும் முடியாத மாலையிலும்
    ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
    அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
    அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
    அப்படி முயற்சி செய்
    அம்மணம் நிச்சய்ம் பெரும் ஆபாசம்
    முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
    ஒளிவு மறைவே பேரழகு என்றேன்

    மிகவும் ரசிக்கவைத்தவரிகள்.

    ReplyDelete
  12. விடிந்தும் விடியாத காலையிலும்
    முடிந்தும் முடியாத மாலையிலும்
    ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
    அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
    அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
    அப்படி முயற்சி செய்
    //////அட..இப்படி ஒன்றும் இருக்கிறதா?அழகாய் சொல்லிச்செல்கின்றீர்கள்.

    ReplyDelete
  13. இருண்மைகவி" ஆவான் என
    அப்போதே முடிவுசெய்துவிட்டேன்

    iஇரு உண்மைகள் ! சொல்லும் கவிதை ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. புரிந்தது போலவும்
    புரியாதது போலவும்
    தலையாட்டிப் போகிறேன் நான்...

    ReplyDelete
  15. முற்றிலும் உணமி.. அருமை அய்யா..

    ReplyDelete
  16. அம்மணம் அழகல்ல! அழகான ஆழமான பதிவு!

    த ம ஓ 11 சா இராமாநுசம்

    ReplyDelete
  17. nantru!
    ayyaa !

    manasukki pidithathAi ezhuthalaame....

    ReplyDelete
  18. எழுத்துக்கு ஒளிவு மறைவுதான் பேரழகு என்பதில்
    ஒரு விகித ஐயமும் இல்லை ஐயா!......தங்கள்
    கவிதையின் அணிநடை அருமை!...வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  19. அர்த்தமுள்ள வரிகள் மட்டுமல்ல அம்மணமாய் சொல்லவந்த கருத்துக்களை மிக தெளிவாக சொல்லி இருக்கீறிர்கள்.கவிதையின் நடை அருமை!வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அருமையான நடையில் ஒப்பற்ற உண்மையைகூறிப்போயுள்ளீர்கள்.தங்களை போன்றோரை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. ஒளிவு மறைவே பேரழகு.

    ReplyDelete
  22. ரமணி ஸார்,
    நீங்கள் எடுத்துகொள்ளும் பொருளும் அருமை; அதை சொல்லும் விதமும் அருமை.
    உங்கள் சிந்தனையில் இருக்கும் தெளிவு,உங்கள் எழுத்தில் நன்றாக தெரிகிறது.உங்கள் நேரத்திற்கும்,உழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  23. //விடிந்தும் விடியாத காலையிலும்
    முடிந்தும் முடியாத மாலையிலும்
    ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
    அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
    அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
    அப்படி முயற்சி செய்
    அம்மணம் நிச்சய்ம் பெரும் ஆபாசம்
    முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
    ஒளிவு மறைவே பேரழகு என்றேன்//

    மிக அருமையான, அசத்தலான வரிகள்!!

    ReplyDelete
  24. விடிந்தும் விடியாத காலையிலும்
    முடிந்தும் முடியாத மாலையிலும்
    ஒரு ஒளிவு மறைவு இருக்கும்

    அழகிய சொல்லாடல் ஐயா. அருமை அருமை.

    ReplyDelete
  25. சிதம்பர ரகசியமாய், சித்தர்களின் பாடல்கள் போல வேதாந்தியின் எண்ணமாய் உங்களது அண்மைக்கால பதிவுகள்.

    ReplyDelete
  26. ஒளிவு மறைவு பேரழகுதான் சார்

    ReplyDelete
  27. நெத்திப்பொட்டில் அடித்தது போல் - இலை மறை காய்மறை - சொன்ன வித பேரழகு

    ReplyDelete
  28. வித்தியாசமான சிந்தனை அருமை ...

    ReplyDelete
  29. பா.கணேஷ் //
    .
    புரிந்தது எனக்கு நன்றாய். அருமையான கருத்து. மனதைப் பறித்தது உங்களின் இந்தப் பதிவு.//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  30. வை.கோபாலகிருஷ்ணன் //

    எழுத்தாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டியதும் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.
    நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  31. சிட்டுக்குருவி //
    .
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சார்...//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  32. ராமலக்ஷ்மி //
    ..
    அருமை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  33. திண்டுக்கல் தனபாலன் //

    அழகுபட சொல்லி விட்டீர்கள் சார் ! நன்றி !//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  34. நிலாமகள் //

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  35. vanathy//

    அழகான & அர்த்தம் நிறைந்த வரிகள். ரசித்தேன்.//

    தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. கோவி //

    அழகு..//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  37. Gobinath //

    அருமை...... சொல்ல வார்த்தைகள் இல்லை சார். பின்னிவிட்டீர்கள்.... Superb//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  38. அருள் //

    தங்கள் வரவுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  39. ஸ்ரீராம்.//

    நன்றாக இருந்தது. எனெக்கென்னவோ சமீபப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் குறித்து வந்த கவிதையோ என்று சம்சயம்!!!//

    அதுகூட ஒருவகையில் சரியெனத்தான் படுகிறது

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  40. ரமேஷ் வெங்கடபதி //
    .
    நிறையப் புரிந்தது...மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  41. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

    அருமை//

    தங்கள் வரவுக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  42. மகேந்திரன்//

    ஒளிவு மறைவே பேரழகு..
    உண்மை உண்மை மிகச் சரியான உண்மை நண்பரே..//.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  43. Lakshmi //

    மிகவும் ரசிக்கவைத்தவரிகள்.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  44. //ஸாதிகா..///

    /அட..இப்படி ஒன்றும் இருக்கிறதா?அழகாய் சொல்லிச்செல்கின்றீர்கள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  45. வரலாற்று சுவடுகள்/

    அருமை //

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  46. iஇராஜராஜேஸ்வரி//


    இரு உண்மைகள் ! சொல்லும் கவிதை ..பாராட்டுக்கள்..//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  47. ரெவெரி //

    புரிந்தது போலவும்
    புரியாதது போலவும்
    தலையாட்டிப் போகிறேன் நான்...//

    நல்ல கவிதைகளை வழக்கம்போல்
    இனி எதிர்பார்க்கலாம் எனச் சொல்லுங்கள்
    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  48. சக்தி கல்வி மையம் //

    முற்றிலும் உணமி.. அருமை அய்யா..//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  49. புலவர் சா இராமாநுசம் //
    .
    அம்மணம் அழகல்ல! அழகான ஆழமான பதிவு!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  50. வெங்கட் நாகராஜ் //
    .
    நல்ல கவிதை....//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  51. Seeni //

    manasukki pidithathAi ezhuthalaame....//

    தங்கள் வரவுக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  52. அம்பாளடியாள் //

    கவிதையின் அணிநடை அருமை!...வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி பகிர்வுக்கு//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  53. Avargal Unmaigal //

    சொல்லவந்த கருத்துக்களை மிக தெளிவாக சொல்லி இருக்கீறிர்கள்.கவிதையின் நடை அருமை!
    வாழ்த்துக்கள்//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  54. Athisaya //

    அருமையான நடையில் ஒப்பற்ற உண்மையைகூறிப்போயுள்ளீர்கள்.தங்களை போன்றோரை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்!//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  55. சத்ரியன் //

    ஒளிவு மறைவே பேரழகு.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  56. '...புரியாததை
    புரியாதபடியே
    படிப்பவர்களும்..''

    இப்படிப் பலர்.

    ''...புரிந்து கொள்ளாதபடியே
    மறை பொருளாய் எழுதினேன்
    பலர் முகம் திருப்பிப் போனார்கள்...''

    இது உண்மை.

    ''...படிப்பவர்களும் புரிந்து கொள்ளுபடி
    தெளிவாக எழுதிப் போனேன்
    பலரும் பாராதே போனார்கள்...''


    ஏன் பார்க்காமற் போனார்கள்? நானென்றால் பார்ப்பேன்.
    என்னிருண்மை இது.
    புரிந்தது போலவும்
    புரியாதது போலவும்
    தலையாட்டிப் போகிறேன்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  57. Ganpat //

    ரமணி ஸார்,
    நீங்கள் எடுத்துகொள்ளும் பொருளும் அருமை; அதை சொல்லும் விதமும் அருமை.
    உங்கள் சிந்தனையில் இருக்கும் தெளிவு,உங்கள் எழுத்தில் நன்றாக தெரிகிறது.உங்கள் நேரத்திற்கும்,உழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றி//

    தங்கள் வரவுக்கும்
    அதிக உற்சாகமூட்டிப்போகும்
    விரிவான அருமையான பாராட்டுக்கும்
    மனமார்ந்த நன்றி
    .

    ReplyDelete
  58. மனோ சாமிநாதன் //...

    மிக அருமையான, அசத்தலான வரிகள்!!//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  59. Sasi Kala //

    அழகிய சொல்லாடல் ஐயா. அருமை அருமை.//


    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  60. தி.தமிழ் இளங்கோ //

    சிதம்பர ரகசியமாய், சித்தர்களின் பாடல்கள் போல வேதாந்தியின் எண்ணமாய் உங்களது அண்மைக்கால பதிவுகள்.//

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  61. செய்தாலி //

    ஒளிவு மறைவு பேரழகுதான் சார்/

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  62. மனசாட்சி™ //

    நெத்திப்பொட்டில் அடித்தது போல் - இலை மறை காய்மறை - சொன்ன வித பேரழகு//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  63. ananthu //

    வித்தியாசமான சிந்தனை அருமை ..//

    /தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
    பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  64. kovaikkavi //

    நானென்றால் பார்ப்பேன்.
    என்னிருண்மை இது.
    புரிந்தது போலவும்
    புரியாதது போலவும்
    தலையாட்டிப் போகிறேன்.
    நல்வாழ்த்து.//


    தங்கள் வரவுக்கும் கவித்துவமான
    அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  65. நல்ல கருத்து ரமணி ஐயா!

    நானும் இனி இருண்மைகவி போல் எழுதலாம் என்று நினைக்கிறேன் ஐயா. நன்றிங்க.

    ReplyDelete
  66. AROUNA SELVAME //.

    நல்ல கருத்து ரமணி ஐயா!

    நானும் இனி இருண்மைகவி போல் எழுதலாம் என்று நினைக்கிறேன் ஐயா. நன்றிங்க.//

    தங்கள் வரவுக்கும் கவித்துவமான
    அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete