தமிழகத்தில் அதுவும் நெல்லைமாவட்டத்தில் பிறந்த பெரும் அறிஞர்களில் முக்கியமானவர் கல்லிடை குறிச்சி நீலகண்ட சாஸ்திரியார், பாரதியாரின் காலத்தவர்
கல்வெட்டில் இருந்த தமிழக இந்து வரலாற்றை இந்து மன்னர்கள் வரலாற்றை அவர்தான் ஏட்டுக்கு கொண்டுவந்தார், புத்தக ஆவணமாக்கினார், அவர்தான் தமிழக வரலாற்றின் வெளிபாட்டை 19ம் நூற்றாண்டில் தொடங்கி வைத்தார்
இவர் கொடுத்த வரலாற்று புத்தகங்களை அடிப்படையாக கொண்டுதான் கல்கி, சாண்டில்யன், கவுதவ நீலாம்பரன் என எண்ணற்ற வரலாற்று ஆசிரியர்கள் வந்தார்கள்
பாலகுமாரனின் சரித்திர நாவல் முதல் பலவற்றுக்கு பின்னால் இவர் இட்ட அடித்தளம் இருந்தது
அவர் கொடுத்த கல்லில் இருந்துதான் இவர்களெல்லாம் சிலை செய்தார்கள், அவர் கொடுத்த உளியில்தான் இவர்கள் செதுக்கினார்கள், அந்த கடலில் இருந்துதான் இவர்கள் ஆதார நீர் எடுத்து மேகமாய்பொழிந்தார்கள்
சாண்டில்யன் இவர் பெயரை நன்றியோடு தன் நாவல்களில் குறிப்பிட்டிருக்கின்றார், அவர் ஒருவருக்குத்தான் அந்த நன்றி இருந்திருக்கின்றதூ
கல்லிடைகுறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி என்பது தமிழக வரலாற்று உலகில் , வரலாற்று அறிஞர்கள் வரிசையில் மறக்கமுடியாத மறக்க கூடாத பெயர்
தமிழக வரலாற்றின் அரிசுவடி அவர்தான்
கல்லிடைகுறிச்சி அக்ரஹாரத்தில் பிறந்த அவர், தொடக்க கல்வி அங்கேதான் கற்றார் பின் இளங்கலை படிப்பை நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரியிலும் முடித்தார்.
பின் சென்னை தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் வரலாற்று ஆசிரியரானார், 1913ல் நெல்லை இந்து கல்லூரியில் பேராசிரியராக அமர்ந்தார்
அவரின் அறிவையும் ஆழ்ந்த வரலாற்று ஞானத்தையும் கண்டு பண்டித மதன்மோகன் மாளவியா அவரை காசி பல்கலைகழகத்துக்கு அழைத்து சென்றார்
பாரதி போல காசியிலும் மிளிர்ந்தார் நீலகண்ட சாஸ்திரி
அவர் அங்கே பணியாற்றும் போதுதான் அண்ணாமலை செட்டியார் கல்லூரி தொடங்கியிருந்தார், சிதம்பரம் மீனாட்சி கல்லூரி அப்போதுதான் தொடங்கபட்டது, அதன் வளர்ச்சிக்காக தமிழகம் திரும்பினார் நீலகண்டர்
பின் 1929ல் திருச்சி தேசிய கல்லூரி , சென்னை பல்கலைகழகம் ஐசூர் பல்கலைகழகம் என 1947 வரை பணியாற்றினார்
1947ல் தேசம் சுதந்திரமடைந்த போது மைசூர் பல்கலைகழகத்தின் வரலாற்று தலைவராக இருந்தவரிடம் இந்திய தொல்லியல்துறை ஒப்படைக்கபட்டது, அயராது பாடுபட்டு அழிந்துகிடந்த கோவில் கல்வெட்டு இதர கல்வெட்டில் இருந்து எல்லாவற்றையும் அச்சில் ஏற்றினார்
1971ல் யுனெஸ்கோ அவரை இந்திய கலாச்சார இயக்குநராக அறிவித்தது
(இது அந்த அய்யா ராம்சாமியின் யுனெஸ்கோ விருது என காமெடி அல்ல, ஆவணபடுத்தபட்ட உண்மை)
1959ல் அமெரிக்க சிகாகவோவில் அவர் ஆற்றிய உரை இந்திய வரலாற்றினை ஆவணமாக சொன்ன முதல் பேச்சாக கருதபடுகின்றது
இந்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி கவுரவித்தது
இந்து சமயச் சார்பும், சமஸ்கிருத ஆதரவும், இந்தியாதான் உலகிலேயே சிறந்த நாடு கொண்டதாக அவரின் எழுத்தும் பேச்சும் இருந்தது
வரலாற்றை சரியாக ஆய்வு செய்தவர் எனும் வகையில் இந்திய பெருமை, இந்திய மன்னர்கள் செய்த இந்துமத தொண்டு, இந்துமதத்தின் மிகபெரிய ஞானபோதனைகளெல்லாம் அவர் புத்தகத்தில் வந்தன
எவ்வளவு பெரிய வாழ்வு வாழ்ந்த இனம் இந்த தமிழக இந்து இனம் என்பதை அவர்தான் ஆதாரமாக எழுதினார், வரலாற்றை வெளிகொண்டுவந்தார்
கிட்டதட்ட 40 நூல்களை எழுதியுள்ளார். . 1929ஆம் ஆண்டு முதல் 1975ஆண்டுக்கும் இடைப்பட்ட சுமார் ஒரு அரை நூற்றாண்டு கால இடைவெளியில் 40 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தென்னிந்திய வரலாறுபற்றி 25 நூல்களும் அடங்கும்.
பாண்டிய வரலாறு, சோழர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பண்டைய தமிழகம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழக வரலாறு, தென்னிந்தியப் பேரரசுகள், தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியத் தாக்கம், தென்னிந்தியாவில் சமய வளர்ச்சி, சங்கப்பாடல்கள் மூலம் அறியும் தமிழக வரலாறு, தமிழர்களின் வரலாறும் பண்பாடும் என அவர் எழுதிய 40 நூல்களும் ஞான களஞ்சியம்
ஆனால் அவர் ஆங்கிலத்தில் எழுதினார் அது இன்னும் ஆங்கிலத்திலேதான் இருக்கின்றது
இவ்வளவு பெரும் மேதை வரலாற்றை சரியாக உலகுக்கு சொன்னவர் , உலக தொல்லியல் அறிஞர்களில் முக்கியமானவர் என் கருதபட்ட நீலகண்ட சாஸ்திரி பற்றி தமிழகத்தில் யாரும் அறிந்திருக்கவில்லை
ஒரு சில நூல்கள் தமிழில் வந்திருந்தாலும் அது முழுமை இல்லை, பலவிஷயங்கள் விடபட்டன, பல நூல்கள் வரவே இல்லை
ஏன் என்றால் விஷயம் எளிதானது
அன்னார் பாரதியின் தேசியசாயல் கொண்டவர், அதனால் அவரின் நூல்களெல்லாம் பாரத பெருமை, இந்துமதம், சமஸ்கிருத சாயல் என கலந்திருக்கும், மிக மிக ஆணிதரமாக இந்து அரசர்கள், இந்து நாகரீகமெல்லாம் எழுதியதால் காங்கிரஸ் அவரை மறைத்தது
அவர் மேல் திராவிட கும்பல் சுற்றிய கம்பு சுற்றலுக்கு காங்கிரசும் அவரை மறைத்தே வைத்தது
அவர் பிராமணர் என்பதாலும் சமஸ்கிருத ஞானம் கொண்டவர், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான தொடர்பை சொன்னவர், கல்வெட்டிலும் ஓலை சுவடிகளிலும் இருக்கும் இந்திய இந்து பெருமைகளை சொன்னவர் என்பதால் மறைத்தார்கள்
கிண்டி தொழில்நுட்ப கழகத்தை அண்ணா பல்கலைகழகம் என பெயரை மாற்றியர்களுக்கு சென்னை பல்கலை கழகத்தை நீலகண்ட சாஸ்திரி பெயரில் மாற்ற மனமில்லை
அவ்வளவு ஏன் நெல்லை பல்கலைகழகம் உருவாக்கபட்டபோது இவர் அருகில் கூட வரமுடியாத நாடக ஆசிரியர் சுந்தரனார் பிள்ளை சூட்டபட்டபோது இவரை மறந்தார்கள்
நிச்சயம் அந்த பல்கலைகழகத்துக்கு அவர் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும்
குறைந்தபட்சம் நெல்லை பஸ் நிலையம், கல்லிடை குறிச்சி பஸ்நிலையம் ரயில் நிலையத்துகாவது அவர் பெயர் சூட்டியிருக்கலாம்
செய்வார்களா?
மாட்டார்கள்
சிறுபான்மை ஆதிக்கம் நிறைந்த இப்பக்கம், அதுவும் பிராமணர் யாராயினும் வெளிதெரியவவே கூடாது எனும் ஒருமாதிரி அரசியல் வாக்கு அரசியல் உள்ள பக்கம் இவர் மறைக்கபட்டார்
பாஜகவினை ஏன் நாம் வரவேற்கின்றோம் என்றால் இதற்காகத்தான், அக்கட்சியால்தான் இம்மாதிரி தேசாபிமானிகளை மேதைகளை நினைவு கூற முடியும்
ஒரு விஷயம் முக்கால உண்மை
இன்று ஓரளவு தமிழக இந்து அடையாளங்களை, அரச அடையாளங்களை அது ராஜராஜனோ, ஜடாமுடி சுந்தரபாண்டியனோ இதர இந்துக்கள் அடையாளமோ நாயக்கரோ சிவாஜியின் தென்னக பயனமோ கடாரம் கம்போடியா என இந்து அடையாளங்களை வரலாற்று ஆவணத்துடன் இந்துக்கள் பேசமுடிகின்றது என்றால் அவர்தான் காரணம்
அந்த மாமனிதன் அந்த பெரும்காரியத்தை செய்திருக்காவிட்டால் இன்று இந்துக்களிடம் எந்த ஆதாரமுமில்லை, திராவிடம் எனும் அந்நிய தயாரிப்பு எளிதாக மக்களை மடைமாற்றியிருக்கும்
எந்த ஆதாரமும் இல்லாமல் இந்துக்களும் தலைகுனிந்து நின்றிருக்க வேண்டும், ஒரு கட்டத்தில் எலலாம் அடையாளம் இழந்திருக்கும்
நீலகண்ட சாஸ்திரி எனும் மாமனிதன் மீட்டுகொடுத்த வரலாறுதான் ஆவணமாக வந்தது, பாடமாக வந்தது, கதையாக, காவியமாக வந்தது
ராஜராஜசோழன், மதுரையினை மீட்ட சுந்தரபாண்டியன் என்றெல்லாம் படமாக வந்து இன்று பொன்னியின் செலவ்ன் வரை வந்திருக்கின்றது
அந்த மகான் கோவில்கட்டி வணங்க வேண்டிய பண்டிதன், வரலாற்று சூரியன் ஆனால் அவன் பெயரில் ஒரு சுவர் கூட நெல்லை பக்கம், தமிழக பக்கம் இல்லை என்பதெல்லாம் வேதனை
அந்த மாமனிதனின் புகழ் நிலைக்கும்படி பெரும் அடையாளம் அமைதல் வேண்டும் இல்லையேல் நன்றி கொன்ற பாவத்துக்கு இந்த இனம் ஆளாகும்
எமக்கு தெரிந்து நெல்லை, தென்காசி இதரபகுதிகளில் தேசாபிமானிகள் உண்டு
அடிக்கடி ராஜராஜ்சோழன், சுந்தர்பாண்டியன், ஜடாவ்ர்மன் என்றெல்லாம் முழங்குவார்களே தவிர அந்த வரலாற்றை மீட்டெடுத்த மாமனிதனை மறப்பார்கள் இது நலல்தல்ல
நெல்லையிலும் சென்னையிலும் அவர் பிறந்த கல்லிடை குறிச்சியிலும் அவருக்கு அழியா நினைவிடம் வேண்டும்
அவரின் நூல்களெல்லாம் தமிழுக்கு மாற்றபட்டு ஒவ்வொரு தமிழனும் இந்துவும் அறியும்படி வகை செய்தல் வேண்டும், அதை செய்தாலே தமிழகம் தானாய் தலைநிமிரும்
இன்று அந்த மாமனிதனின் பிறந்த நாள்,, ஒரு வகையில் பாரத பிரதமரே அஞ்சலி செலுத்தும் தகுதி அவருக்கு உண்டு
தமிழக பாஜக இம்மாதிரி மனிதர்களை மோடிக்கு அடையாளம் காட்டினால் அது மிகசிறந்த பணியாய் அமையும், அதை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
நன்றி.மீள்பதிவு.பிரும்மரிஷியார்.🙏🏻