Saturday, November 1, 2014

 
(உரையாற்றிக் கொண்டிருப்பவர்
பட்டிமண்டபப் பேச்சாளர் முத்து நிலவன் ஐயா அவர்கள்
இடது ஓரம் உணவு உலகம் சங்கரலிங்கம்  அவர்கள்
நடுவில் நான் வலது ஓரம் மதுரை சரவணன் அவர்கள் )

மதுரை வலைப்பதிவர் திருவிழாவைப் பற்றிய செய்திகளை 
 02/11/2014 மதுரைப்பதிப்பு தினமலர் இணைப்பில் ஒருபக்கம் 
வெளியிட்டு விழாவைப் பெருமைப் படுத்தியுள்ளது.


Friday, October 31, 2014

காதல் வயப்பட்டவனின் கடவுள் வாழ்த்து

வானூறும் நிலவெடுத்து
கறைதுடைத்து முகம்படித்து
தேனூறும் மலரெடுத்து
தெவிட்டாத இதழ்படைத்து
பாநூறுப் பாடுவென
பாவலனாய் எனப்படைத்து
வானுயரப் போனவனை
என்னசொல்லி வாழ்த்திடுவேன் ?

கருநாகக் குழல்படைத்து
கருமேக நிறம்கொடுத்து
கருவண்டால் விழிபடைத்து
கள்ளிலதை மிதக்கவிட்டு
ஒருபோதும் சோர்ந்திடாத
இளம்மனதும் எனக்களித்து
உருவமற்று நிற்பவனை
எப்படித்தான் வாழ்த்திடுவேன் ?

தந்தத்தால் உடல்செய்து
சந்தனத்தில் நிறம்சேர்த்து
தங்கமென தகதகத்து
தரணியிலே உலவவிட்டு
செந்தமிழின் சுவையதனைத்
தெரிந்தவனாய் எனைப்படைத்து
அந்தமாதியாய் ஆனவனை
ஏதுசொல்லிப் போற்றிடுவேன்?

Wednesday, October 29, 2014



பதிவர்  விழாவின்  காலை  நிகழ்விலசில  காட்சிகள்







Displaying 20141026_102443.jpg

















கத்திக்கு எதிராய் ஒரு குண்டூசி

வயிற்றின் அளவினை
உடற்கூறு முடிவு செய்யாது
மனோவிகாரங்களே முடிவு செய்வதால்
வயிறு நிறையவோ
"இட்டிலி" மிஞ்சவோ
வாய்ப்பே இல்லையென்பதால்
மிஞ்சியது அடுத்தவன் "இட்டிலி" என்கிற
பேச்சுக்கு இங்கு இடமேயில்லை

எனவேதான்
வயிறுபசித்தவன் "பசியினை"
அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க
வயிறு பெருத்தவன்
"இட்டிலியினை"
தன் ஏழு தலைமுறைக்குக் கடத்துவதோடு
தன் செயலுக்கு ஆதரவாய்ச் சில
தத்துவங்களையும் உதிர்த்துப்போகிறான்

என்ன செய்வது
சொல்லவேண்டியதை
சொல்லவேண்டியவன்
உரக்கச் சொல்லுகிற சக்தியற்றுப்போனதால்
உணரச் சொல்லுகிற சக்தியற்றுப் போனதால்

சொல்ல வேண்டியதை
சொல்லக் கூடாதவன்
உரக்கச் சொல்லித் தத்துவங்களை
நீர்த்துப்போகச் செய்வதோடு அல்லாது
தானும் கூடுதல் சக்தியும் பெற்றுக் கொள்கிறான்

என்னசெய்வது
சொல்ல வேண்டியதை
சொல்ல வேண்டியவன்
சொல்லும் சக்திபெறும்வரை நாமும்
நொந்து வீணாகித் திரியாது இதுபோல்
சந்துமுனைச் சிந்து பாடியேனும் திரிவோம்

Tuesday, October 28, 2014

பாராட்டுச் சான்றிதழ்

மதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல் உள்ளிட்ட 
நான்குரெவென்யூ மாவட்டங்களை உள்ளடக்கியப் 
பகுதியினை மாவட்டம் 324 பி3 என 
அரிமா சங்கத்தில் குறிப்பிடுவார்கள்

அந்த மாவட்டத்திற்குரிய மிட்- டேர்ம் கன்வென்ஸன்
கடந்த சனிக்கிழமை மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ்
கட்டிடத்தில் நடைபெற்றது

அதில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 
மிகச் சிறப்பாகச் சேவைசெய்த 
சங்கத் தலைவர் செயலாளர் மற்றும்பொருளாளரை 
மாவட்ட ஆளுநர் தனித்தனியாக
மேடையேற்றி சான்றிதழ் மற்றும் பரிசு கொடுத்துக்
கௌரவித்தார்

(அந்த வகையில் நானும் பாராட்டப்பட்டேன்
என்னுடன் இருப்பவர் எமது சங்கச் செயலாளர்
கே.முத்துமுணியாண்டி அவர்கள் )

பரிசு ,சான்றிதல் ,பாராட்டுக்காக சேவை இயக்கத்தில்
சேவை மனப்பான்மையுள்ளவர்கள் சேர்வதில்லை
என்பது உண்மையாயினும் கூட ----

இதுபோன்ற சிறு உற்சாகமூட்டல்
சேவைசெய்வபவர்களுக்குத் தொடர்ந்து 
சேவையை இன்னும் கூடுதலாகச் செய்யவும் 
இன்னும் சிறப்பாகச் செய்யவும் ஊக்கமளிக்கிறது
என்பதோடு அல்லாமல்--- 

சேவை மனப்பான்மையிருந்தும் 
எதைச் செய்வது, எப்படிச் செய்வது ,
எவருக்குச் செய்வது
யார் மூலம் செய்வது எனத் தெரியாது தவிப்பவர்களுக்கு

ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும் என்பதாலேயே
இதுபோன்ற அவ்வப்போது பாராட்டுக் கூட்டங்கள்
சேவை இயக்கங்கங்களில் நடத்தப்படுவது உண்டு

இங்கு  இது குறித்து பகிர்தல் கூட அந்தநோக்கத்தில்தான் என நான் சொல்லவும் வேண்டுமா என்ன ? 





    




Monday, October 27, 2014

"ன்"னை "ம் "ஆக்குவோம்

கூட்டம்
சங்கம்
தீர்மானம்
இயக்கம்
ஆர்ப்பாட்டம்
போராட்டம்

கூட்டாக இருந்தால் ஒழிய
மேற்குறித்த எவையும்
வெற்றி கொள்ள வாய்ப்பேயில்லை

"நா " வைத் தொடர்ந்து
"ன் "இருக்கும்வரை
"நா " வைத் தொடர்ந்து
"ம் " மட்டுமே தொடராதவரை

மேற்குறித்த ஐந்தும்
உறுதிபட வழியுமில்லை
வெற்றி கொள்ள வாய்ப்பும்
நிச்சயம் இல்லவே இல்லை

எனவே எப்போதும்
"நா "விற்குபின் ஒட்டி உறவாடி
நம் ஒற்றுமையைக் கலைக்கும்
"ன்"னை ஒழிக்கப் பயில்வோம்
"நா"விற்குப் பின் எப்போதும்
"ம்"இருக்க முயற்சி செய்வோம்

Sunday, October 26, 2014

கணியனும் கணினியும்....

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும்
முதல் எழுத்துச் சம்பந்தமன்றி
வேறேதும் சம்பந்தமில்லை என்பது
எனக்கும் உடன்பாடுதான்

ஆயினும்
கணியன் பூங்குன்றனாருக்கும் கணினிக்கும்
முதல் இரண்டெழுத்து மட்டுமே சம்பந்தம்
என ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியவில்லை

ஏனெனில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனக் கவிதையாக கணியன் சொல்லிப் போனதை

கணினி தானே  மிக எளிதாய்
இன்று சாத்தியமாக்கிப் போகிறது ?

(வலைப்பதிவர் ஆண்டுவிழாவில் சுற்றத்தார்போல
சொந்தம் கொண்டாடிய பதிவர்களை நினைக்கப்
பிறந்த எண்ணம் )