Showing posts with label ( 3). Show all posts
Showing posts with label ( 3). Show all posts

Sunday, October 26, 2014

கணியனும் கணினியும்....

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும்
முதல் எழுத்துச் சம்பந்தமன்றி
வேறேதும் சம்பந்தமில்லை என்பது
எனக்கும் உடன்பாடுதான்

ஆயினும்
கணியன் பூங்குன்றனாருக்கும் கணினிக்கும்
முதல் இரண்டெழுத்து மட்டுமே சம்பந்தம்
என ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியவில்லை

ஏனெனில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனக் கவிதையாக கணியன் சொல்லிப் போனதை

கணினி தானே  மிக எளிதாய்
இன்று சாத்தியமாக்கிப் போகிறது ?

(வலைப்பதிவர் ஆண்டுவிழாவில் சுற்றத்தார்போல
சொந்தம் கொண்டாடிய பதிவர்களை நினைக்கப்
பிறந்த எண்ணம் )