Saturday, August 15, 2026

Medical mafias

 India’s medical sector is said to be on the verge of collapse soon — even a parliamentary committee has openly acknowledged this.


According to a recent research report published on Zee News, around 44% of all surgeries performed in India are bogus, fake, or unnecessary. In other words, nearly half of all surgeries in hospitals are conducted mainly to extract money from patients or government insurance.


The report further classifies that in India, 55% of heart surgeries, 48% of hysterectomies (uterus removals), 47% of cancer surgeries, 48% of knee replacements, 45% of cesarean deliveries, and many shoulder and spine surgeries are fake or unnecessary.


A survey of many reputed hospitals in Maharashtra revealed that senior doctors in large hospitals earn salaries up to ₹1 crore per month. The reason: doctors who push patients into unnecessary tests, treatments, admissions, or surgeries earn more. (BMJ Global Health)


The Times of India has published several cases where dead patients were shown as alive and “treated” to claim money — one of the most disgusting frauds now being exposed across many places.


In one well-known hospital, a 14-year-old boy who had died was kept on a ventilator for a month under the pretense that he was alive and being treated — and only later declared dead. After complaints, the hospital was found guilty and paid ₹5 lakh in settlement. But what about the emotional trauma inflicted on the family?


Many times, fake “emergency surgeries” are conducted on already deceased patients — families are asked to pay urgently, and later told that the patient died during surgery. The hospital then collects the full surgery cost. (Source: “Dissenting Diagnosis” – Dr. Gadre & Shukla)


The medical insurance (mediclaim) fraud is equally horrifying. Around 68% of Indians have medical insurance, but when needed, most claims are denied or only partially paid through manipulations — forcing families to bear huge costs themselves.


Over 3,000 well-known hospitals have been blacklisted by major insurance companies for making false claims. During the COVID period, many big hospitals falsely claimed insurance money for fake COVID cases.


Alongside, a massive and horrifying human organ trafficking network also operates. The Indian Express reported a heart-wrenching 2019 case:

A woman named Sangeeta Kashyap from Kanpur was called to Delhi for a job interview by a reputed company. She was told to undergo a full medical check-up at the renowned Fortis Hospital before hiring. Admitted per procedure, she overheard doctors discussing “donors,” realized something was wrong, and fled. When she told her friend (who had brought her), he threatened her and demanded ₹50,000. After she went to the police, an investigation exposed a multi-crore international organ trafficking racket involving police, doctors, and hospital staff.


Everyone knows about the “Hospital Referral Scam.” Doctors refer patients claiming serious illness to large, branded hospitals like Apollo, Fortis, Apex, etc., often as part of referral programs where hospitals pay doctors per patient sent.


For example, Kokilaben Hospital (Mumbai) once openly advertised payments: ₹1 lakh for sending 40 patients annually, ₹1.5 lakh for 50, and ₹2.5 lakh for 75 patients — whether or not they were actually ill.


Another major fraud is the “Diagnosis Scam.”

Income Tax raids on some reputed pathology labs in Bengaluru uncovered over ₹100 crore in cash and 3.5 kg of gold kept aside as doctor commissions. Doctors refer patients for unnecessary tests, earning 40–50% commissions. Many labs falsify reports after performing only 1–2 real tests. Out of nearly 200,000 labs in India, only about 1,000 are certified — yet the business is highly profitable.


Similarly, pharma companies run their own massive bribery schemes. Around 20–25 big drug firms spend ₹1,000 crore per year on doctors. During COVID, the maker of the painkiller Dolo was exposed for giving ₹1,000 crore in “incentives.” Doctors receive cash, foreign trips, and luxury stays in return for prescribing specific brands. For example, USV Ltd. reportedly offers doctors ₹3 lakh cash and trips to Australia or the U.S.


Pharma companies also sell drugs and surgical tools to hospitals at extremely low prices, but hospitals charge patients full MRP — reaping huge margins. India Today exposed that Emcure’s Temikure (a cancer drug) is sold to hospitals at ₹1,950, but patients are billed ₹18,645. This is common across hospitals. (India Today Hospital Scam Survey Report)


The Medical Council of India (MCI), the apex regulatory body, was found complicit. In 2016, a government-appointed committee reported that MCI eagerly approved new medical colleges but deliberately neglected to regulate doctors and hospitals.

Doctors routinely violate MCI rules without public awareness. Examples include:

1. Doctors must prescribe only generic (salt) names, not branded drugs — rarely followed.

2. Rule 1.8: Doctors must disclose full fees before treatment — often ignored.

3. Patients’ informed consent must be obtained before tests or treatments.

4. Medical records must be preserved for at least three years.

5. Unethical, dishonest, or incompetent doctors should be publicly reported without fear.

6. Government health scheme scams: Patients (e.g., ex-servicemen) are admitted for minor issues, falsely enrolled under government insurance, and billed for fake treatments. These inflated bills are approved by corrupt officials — hospitals pocket the money.


Spread this message to all citizens so that every family can protect themselves from such dangers.


🙏 A message for public awareness and national service. 🙏 forwarded as received

நீலகண்ட சாஸ்திரியார்

 தமிழகத்தில் அதுவும் நெல்லைமாவட்டத்தில் பிறந்த பெரும் அறிஞர்களில் முக்கியமானவர் கல்லிடை குறிச்சி நீலகண்ட சாஸ்திரியார், பாரதியாரின் காலத்தவர்


கல்வெட்டில் இருந்த தமிழக இந்து வரலாற்றை இந்து மன்னர்கள் வரலாற்றை அவர்தான் ஏட்டுக்கு கொண்டுவந்தார், புத்தக ஆவணமாக்கினார், அவர்தான் தமிழக வரலாற்றின் வெளிபாட்டை 19ம் நூற்றாண்டில் தொடங்கி வைத்தார்


இவர் கொடுத்த வரலாற்று புத்தகங்களை அடிப்படையாக கொண்டுதான் கல்கி, சாண்டில்யன், கவுதவ நீலாம்பரன் என எண்ணற்ற வரலாற்று ஆசிரியர்கள் வந்தார்கள்


பாலகுமாரனின் சரித்திர நாவல் முதல் பலவற்றுக்கு பின்னால் இவர் இட்ட அடித்தளம் இருந்தது


அவர் கொடுத்த கல்லில் இருந்துதான் இவர்களெல்லாம் சிலை செய்தார்கள், அவர் கொடுத்த உளியில்தான் இவர்கள் செதுக்கினார்கள், அந்த கடலில் இருந்துதான் இவர்கள் ஆதார நீர் எடுத்து மேகமாய்பொழிந்தார்கள்

சாண்டில்யன் இவர் பெயரை நன்றியோடு தன் நாவல்களில் குறிப்பிட்டிருக்கின்றார், அவர் ஒருவருக்குத்தான் அந்த நன்றி இருந்திருக்கின்றதூ


கல்லிடைகுறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி என்பது தமிழக வரலாற்று உலகில் , வரலாற்று அறிஞர்கள் வரிசையில் மறக்கமுடியாத மறக்க கூடாத பெயர்


தமிழக வரலாற்றின் அரிசுவடி அவர்தான்


கல்லிடைகுறிச்சி அக்ரஹாரத்தில் பிறந்த அவர், தொடக்க கல்வி அங்கேதான் கற்றார் பின் இளங்கலை படிப்பை நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரியிலும் முடித்தார்.


பின் சென்னை தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் வரலாற்று ஆசிரியரானார், 1913ல் நெல்லை இந்து கல்லூரியில் பேராசிரியராக அமர்ந்தார்


அவரின் அறிவையும் ஆழ்ந்த வரலாற்று ஞானத்தையும் கண்டு பண்டித மதன்மோகன் மாளவியா அவரை காசி பல்கலைகழகத்துக்கு அழைத்து சென்றார்


பாரதி போல காசியிலும் மிளிர்ந்தார் நீலகண்ட சாஸ்திரி


அவர் அங்கே பணியாற்றும் போதுதான் அண்ணாமலை செட்டியார் கல்லூரி தொடங்கியிருந்தார், சிதம்பரம் மீனாட்சி கல்லூரி அப்போதுதான் தொடங்கபட்டது, அதன் வளர்ச்சிக்காக தமிழகம் திரும்பினார் நீலகண்டர்


பின் 1929ல் திருச்சி தேசிய கல்லூரி , சென்னை பல்கலைகழகம் ஐசூர் பல்கலைகழகம் என 1947 வரை பணியாற்றினார்


1947ல் தேசம் சுதந்திரமடைந்த போது மைசூர் பல்கலைகழகத்தின் வரலாற்று தலைவராக இருந்தவரிடம் இந்திய தொல்லியல்துறை ஒப்படைக்கபட்டது, அயராது பாடுபட்டு அழிந்துகிடந்த கோவில் கல்வெட்டு இதர கல்வெட்டில் இருந்து எல்லாவற்றையும் அச்சில் ஏற்றினார்


1971ல் யுனெஸ்கோ அவரை இந்திய கலாச்சார இயக்குநராக அறிவித்தது


(இது அந்த அய்யா ராம்சாமியின் யுனெஸ்கோ விருது என காமெடி அல்ல, ஆவணபடுத்தபட்ட உண்மை)


1959ல் அமெரிக்க சிகாகவோவில் அவர் ஆற்றிய உரை இந்திய வரலாற்றினை ஆவணமாக சொன்ன முதல் பேச்சாக கருதபடுகின்றது


இந்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி கவுரவித்தது


இந்து சமயச் சார்பும், சமஸ்கிருத ஆதரவும், இந்தியாதான் உலகிலேயே சிறந்த நாடு கொண்டதாக அவரின் எழுத்தும் பேச்சும் இருந்தது


வரலாற்றை சரியாக ஆய்வு செய்தவர் எனும் வகையில் இந்திய பெருமை, இந்திய மன்னர்கள் செய்த இந்துமத தொண்டு, இந்துமதத்தின் மிகபெரிய ஞானபோதனைகளெல்லாம் அவர் புத்தகத்தில் வந்தன‌

எவ்வளவு பெரிய வாழ்வு வாழ்ந்த இனம் இந்த தமிழக இந்து இனம் என்பதை அவர்தான் ஆதாரமாக எழுதினார், வரலாற்றை வெளிகொண்டுவந்தார்


கிட்டதட்ட 40 நூல்களை எழுதியுள்ளார். . 1929ஆம் ஆண்டு முதல் 1975ஆண்டுக்கும் இடைப்பட்ட சுமார் ஒரு அரை நூற்றாண்டு கால இடைவெளியில் 40 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தென்னிந்திய வரலாறுபற்றி 25 நூல்களும் அடங்கும்.


பாண்டிய வரலாறு, சோழர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பண்டைய தமிழகம் முதல் நாயக்கர் காலம் வரையிலான தமிழக வரலாறு, தென்னிந்தியப் பேரரசுகள், தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியத் தாக்கம், தென்னிந்தியாவில் சமய வளர்ச்சி, சங்கப்பாடல்கள் மூலம் அறியும் தமிழக வரலாறு, தமிழர்களின் வரலாறும் பண்பாடும் என அவர் எழுதிய 40 நூல்களும் ஞான களஞ்சியம்


ஆனால் அவர் ஆங்கிலத்தில் எழுதினார் அது இன்னும் ஆங்கிலத்திலேதான் இருக்கின்றது


இவ்வளவு பெரும் மேதை வரலாற்றை சரியாக உலகுக்கு சொன்னவர் , உலக தொல்லியல் அறிஞர்களில் முக்கியமானவர் என் கருதபட்ட நீலகண்ட சாஸ்திரி பற்றி தமிழகத்தில் யாரும் அறிந்திருக்கவில்லை

ஒரு சில நூல்கள் தமிழில் வந்திருந்தாலும் அது முழுமை இல்லை, பலவிஷயங்கள் விடபட்டன, பல நூல்கள் வரவே இல்லை


ஏன் என்றால் விஷயம் எளிதானது


அன்னார் பாரதியின் தேசியசாயல் கொண்டவர், அதனால் அவரின் நூல்களெல்லாம் பாரத பெருமை, இந்துமதம், சமஸ்கிருத சாயல் என கலந்திருக்கும், மிக மிக ஆணிதரமாக இந்து அரசர்கள், இந்து நாகரீகமெல்லாம் எழுதியதால் காங்கிரஸ் அவரை மறைத்தது


அவர் மேல் திராவிட கும்பல் சுற்றிய கம்பு சுற்றலுக்கு காங்கிரசும் அவரை மறைத்தே வைத்தது

அவர் பிராமணர் என்பதாலும் சமஸ்கிருத ஞானம் கொண்டவர், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான தொடர்பை சொன்னவர், கல்வெட்டிலும் ஓலை சுவடிகளிலும் இருக்கும் இந்திய இந்து பெருமைகளை சொன்னவர் என்பதால் மறைத்தார்கள்


கிண்டி தொழில்நுட்ப கழகத்தை அண்ணா பல்கலைகழகம் என பெயரை மாற்றியர்களுக்கு சென்னை பல்கலை கழகத்தை நீலகண்ட சாஸ்திரி பெயரில் மாற்ற மனமில்லை


அவ்வளவு ஏன் நெல்லை பல்கலைகழகம் உருவாக்கபட்டபோது இவர் அருகில் கூட வரமுடியாத நாடக ஆசிரியர் சுந்தரனார் பிள்ளை சூட்டபட்டபோது இவரை மறந்தார்கள்


நிச்சயம் அந்த பல்கலைகழகத்துக்கு அவர் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும்


குறைந்தபட்சம் நெல்லை பஸ் நிலையம், கல்லிடை குறிச்சி பஸ்நிலையம் ரயில் நிலையத்துகாவது அவர் பெயர் சூட்டியிருக்கலாம்


செய்வார்களா?


மாட்டார்கள்


சிறுபான்மை ஆதிக்கம் நிறைந்த இப்பக்கம், அதுவும் பிராமணர் யாராயினும் வெளிதெரியவவே கூடாது எனும் ஒருமாதிரி அரசியல் வாக்கு அரசியல் உள்ள பக்கம் இவர் மறைக்கபட்டார்


பாஜகவினை ஏன் நாம் வரவேற்கின்றோம் என்றால் இதற்காகத்தான், அக்கட்சியால்தான் இம்மாதிரி தேசாபிமானிகளை மேதைகளை நினைவு கூற முடியும்


ஒரு விஷயம் முக்கால உண்மை


இன்று ஓரளவு தமிழக இந்து அடையாளங்களை, அரச அடையாளங்களை அது ராஜராஜனோ, ஜடாமுடி சுந்தரபாண்டியனோ இதர இந்துக்கள் அடையாளமோ நாயக்கரோ சிவாஜியின் தென்னக பயனமோ கடாரம் கம்போடியா என இந்து அடையாளங்களை வரலாற்று ஆவணத்துடன் இந்துக்கள் பேசமுடிகின்றது என்றால் அவர்தான் காரணம்


அந்த மாமனிதன் அந்த பெரும்காரியத்தை செய்திருக்காவிட்டால் இன்று இந்துக்களிடம் எந்த ஆதாரமுமில்லை, திராவிடம் எனும் அந்நிய தயாரிப்பு எளிதாக மக்களை மடைமாற்றியிருக்கும்

எந்த ஆதாரமும் இல்லாமல் இந்துக்களும் தலைகுனிந்து நின்றிருக்க வேண்டும், ஒரு கட்டத்தில் எலலாம் அடையாளம் இழந்திருக்கும்


நீலகண்ட சாஸ்திரி எனும் மாமனிதன் மீட்டுகொடுத்த வரலாறுதான் ஆவணமாக வந்தது, பாடமாக வந்தது, கதையாக, காவியமாக வந்தது


ராஜராஜசோழன், மதுரையினை மீட்ட சுந்தரபாண்டியன் என்றெல்லாம் படமாக வந்து இன்று பொன்னியின் செலவ்ன் வரை வந்திருக்கின்றது


அந்த மகான் கோவில்கட்டி வணங்க வேண்டிய பண்டிதன், வரலாற்று சூரியன் ஆனால் அவன் பெயரில் ஒரு சுவர் கூட நெல்லை பக்கம், தமிழக பக்கம் இல்லை என்பதெல்லாம் வேதனை


அந்த மாமனிதனின் புகழ் நிலைக்கும்படி பெரும் அடையாளம் அமைதல் வேண்டும் இல்லையேல் நன்றி கொன்ற பாவத்துக்கு இந்த இனம் ஆளாகும்


எமக்கு தெரிந்து நெல்லை, தென்காசி இதரபகுதிகளில் தேசாபிமானிகள் உண்டு


அடிக்கடி ராஜராஜ்சோழன், சுந்தர்பாண்டியன், ஜடாவ்ர்மன் என்றெல்லாம் முழங்குவார்களே தவிர அந்த வரலாற்றை மீட்டெடுத்த மாமனிதனை மறப்பார்கள் இது நலல்தல்ல‌


நெல்லையிலும் சென்னையிலும் அவர் பிறந்த கல்லிடை குறிச்சியிலும் அவருக்கு அழியா நினைவிடம் வேண்டும்


அவரின் நூல்களெல்லாம் தமிழுக்கு மாற்றபட்டு ஒவ்வொரு தமிழனும் இந்துவும் அறியும்படி வகை செய்தல் வேண்டும், அதை செய்தாலே தமிழகம் தானாய் தலைநிமிரும்


இன்று அந்த மாமனிதனின் பிறந்த‌ நாள்,, ஒரு வகையில் பாரத பிரதமரே அஞ்சலி செலுத்தும் தகுதி அவருக்கு உண்டு


தமிழக பாஜக இம்மாதிரி மனிதர்களை மோடிக்கு அடையாளம் காட்டினால் அது மிகசிறந்த பணியாய் அமையும், அதை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.


நன்றி.மீள்பதிவு.பிரும்மரிஷியார்.🙏🏻

Friday, August 14, 2026

Digipin..

 Good Morning Friends 🌞 


 *Important Message* 😲 


*`Goodbye to PIN code, Postal Department introduces DigiPIN, how to find your digital address?`*


Delhi: The era of PIN codes, which were the attraction of postal addresses, is over, and the Indian Postal Department has introduced a digital address called 'DigiPIN' as an alternative. DIGIPIN will be the new address system in the country from now on. While traditional PIN codes cover a wide area, the 10-digit DigiPIN system represents the exact location of your home or business. Let's know what are the differences between PIN code and DigiPIN.


The Indian Postal Department has introduced the DIGIPIN system to understand the exact location. DigiPIN has a 10-digit digital code.  Instead of the traditional pin code, which covered a wide area, the DigiPIN will provide precise location information. That is, the exact location of your home or business can be found through this DigiPIN. You can find your home by visiting the government website designated for creating a DigiPIN and finding the code. The advantage of DigiPIN is that it will deliver correspondence to the right place and help emergency services such as ambulances and fire departments to reach it accurately by understanding the location. It is hoped that DigiPIN will be beneficial in remote areas including rural areas.


It is claimed that DigiPIN will be able to deliver parcels to the right location not only for correspondence, but also for e-commerce websites.


 *How to find your Digipin?*


The government website https://dac.indiapost.gov.in/mydigipin/home has been prepared to find your Digipin. By visiting this website and clicking on the location you have found, you can find out your Digital Digi  pin📍. What makes Digi pin different from other address systems is that you can know your exact location within a radius of four meters. India Post has developed a geocoded digital address system called Digipin in collaboration with IIT Hyderabad, NRSC and ISRO. Digipin can also be used offline.

 *Best wishes* 🙏

Tuesday, August 4, 2026

இதையும் கவனத்தில் கொள்வோம்..

 இந்தியாவின் கூட்டுக் குடும்ப அமைப்பை உடைக்கும் சதி


“குடும்பங்களை உடைத்தால், சந்தை வளர்கிறது” — இது ஒரு எண்ணமல்ல, முழுமையான யோசித்த திட்டம்.


நவீனத்துவமா? மறைந்த அடிமைத்தனமா?


இந்தியாவின் மிக வலிமையான சொத்து என்ன?

முகலாயர்களும், பிரிட்டிஷார்களும், பல்வேறு கைவரிசை அடையாளமிட்ட ஆக்கிரமிப்பாளர்களும் வந்தனர் — ஆனால் ஒரு விஷயம் மட்டும் உடையவில்லை…

நம் “கூட்டுக் குடும்ப” அமைப்பு!


இது தான் நம் உண்மையான சமூக பாதுகாப்பு (Social Security).

ஊதியம் தேவையில்லை, தனிமை இல்லை, மனநலம் பாதிப்பு இல்லை.


எதற்காக மேற்கு நாடுகள் இதை வெறுக்க ஆரம்பித்தன?


மேற்கு நாடுகள் காலனியவாதிகள் — அவர்களின் பெரிய மதம் தான் “சந்தை”.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் பகிர்ந்து செலவழிக்கிறார்கள், தேவைக்கு மேல் விரும்புவதில்லை, ஒருமைப்பாட்டுடன் வாழ்கிறார்கள் — இங்கு பொருட்கள் விற்க முடியவில்லை.


எனவே, ஒரு சதி திட்டம் உருவாக்கப்பட்டது:


> “குடும்பங்களை உடையுங்கள், எல்லாரையும் தனிமைப்படுத்துங்கள் — அனைவரும் வாடிக்கையாளராக மாறுவார்கள்.”


இந்த தாக்குதல் எப்படி நடக்கப்பட்டது?


ஊடகங்கள்:


கூட்டுக் குடும்பங்களை தகராறு செய்பவர்கள், பழிச்சும்பிகள், சுமையாக சித்தரித்தது.


அதே நேரத்தில் குறுக்கு குடும்பங்களை (nuclear families) “சுதந்திரம்”, “நவீனத்துவம்”, “சுய முன்னேற்றம்” என புகழ்ந்தது.


நினைவிருக்கிறதா?


எத்தனை தொலைக்காட்சி நாடகங்களில் மாமியார்-மருமகள் சண்டை வருகிறது, தீர்வு என்ன? — "வேராக இருந்தால் நிம்மதி"!


---


நுகர்வுப் பூச்சி (Consumerism):


ஒவ்வொரு தம்பதியும் தனித்தனியாக வாழ ஆரம்பித்ததும்:


1 குடும்பம் = 4 வீடுகள்


1 டிவி = 4 டிவிகள்


1 சமையலறை = 4 சமையலறை சாதனங்கள்


1 கார் = 4 ஸ்கூட்டர் + 2 கார்கள்


சந்தை சூழ்ந்தது.

சமூகம் சிதைந்தது.


---


இந்த “அறிவோடு திட்டமிடப்பட்ட தாக்குதலுக்குப்” பிறகு என்ன நடந்தது?


சமூக சிதைவு:


முதியோர் இப்போது சுமையாக பார்க்கப்படுகிறார்கள்


பிள்ளைகள் தனிமையில், ஸ்கிரீன்களுடன் வளர்கிறார்கள்


உறவினர்கள் முடிந்துபோனவர்கள்


“Influencers” சான்றோர்கள் என்கிற இடத்தை பிடித்துள்ளனர்


மனநலம் பாதிப்பு:


முந்தைய காலத்தில் பாட்டி-தாத்தாவிடம் பகிர்ந்த மனவாய்ப்பாடுகள் இப்போது கவுன்சிலரிடம் பேசப்படுகின்றன


முன்னால் அன்பால் தீர்க்கப்பட்ட தனிமை இப்போது மருந்தால் குணமாக்கப்படுகிறது


சந்தையின் வெற்றி:


ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு பொருள்!


ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு செயலி!


ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு “ஆன்லைன் ஆர்டர்!”


> “சந்தாதாரம்தான் இப்போது சாஸ்திரமாகிவிட்டது!”


---


இன்று கேள்வி — நாம் என்ன ஆகிக் கொண்டிருக்கிறோம்?


“நவீனத்துவத்தின்” பந்தயத்தில், நாம்தான்...


கூட்டுக் குடும்பங்களை “பழமையானவை” என புறக்கணித்தோம்


பெற்றோர்களை “தடை” என அடையாளமிட்டோம்


குடும்பத்தை “தேவையற்ற உணர்வுகள்” என நிராகரித்தோம்


உறவுகளை “Unfollow” செய்தோம்


---


ஆனால் ஒருமுறை யோசித்துள்ளீர்களா?


தீபாவளியில் நீங்கள் தனியாக இருந்தால்தான் Amazon நன்மை அடைகிறது — கடையைப் பார்ப்பதற்காக, குடும்பத்துடன் அமருவதற்காக அல்ல!


Zomato உங்களிடம் பணம் சம்பாதிக்கிறது, அம்மாவின் உணவைச் சாப்பிடவில்லையென்றால்!


Netflix பார்க்கப்படுவது, பாட்டியின் கதைகளை கேட்பதற்குப் பதிலாக!


---


தீர்வு என்ன?


நாம்இனும் திரும்ப முடியும்!


கூட்டுக் குடும்பங்களை சுமை என்று அல்ல, செல்வம் என்று பாருங்கள்


பிள்ளைகளை நுகர்வோராக அல்ல, மூலமுள்ள மனிதர்களாக வளர்க்கவும்


முதியோரை வீட்டைவிட்டு அகற்றாதீர்கள் — அவர்கள் அனுபவம், கூகுளிலும்கிடையாது


பண்டிகைகளை பொருட்கள் அல்ல, உணர்வுகள் கொண்டாடுங்கள்


அன்பை அதிகரியுங்கள், ஆப்புகளை அல்ல — தனிமை குறையும்


---


முடிவு:


> “மேற்கு நாடுகள் வாணிபத்துக்காக குடும்பங்களை உடைத்தன.

நாமோ நவீனராக வேண்டும் என்று எங்கள் அடையாளத்தை விற்றுவிட்டோம்.


பகிர்வு..✍️


#

Thursday, July 23, 2026

கதை போல் ஒரு நிஜம்..

 எனக்கு சுரீர் என்று கோபம் வந்தது. 


என் மகன் "என்னப்பா இப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்டயே அதுவும் நீங்க விஜிலென்ஸ்ல வேலை பார்த்து இருக்குறேன்னு சொல்லியும் கேக்குறாங்களே?"


"ஆட்சி மாறினாலும் காட்சி மாறல "

"இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களாப்பா?"


"இனி இவனிடம் பேசக்கூடாது.அடுத்து இவனை காசு வாங்காமல் வேலை செய்ய வைப்போம்" என்று மகனிடம் கூறினேன்.


ஆனால் விஜிலென்ஸில் என்னுடன் வேலை பார்த்த இன்செக்டரே பணிபுரிந்த பொழுதும் அவர்களிடம் சொல்வதற்கு சற்று தயக்கமாக இருந்தது. 


சரி ஒரு வாரம் பார்ப்போம் .அவனாக வேலையை முடிக்கின்றானா என்று பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். 


இன்று கருவூல சூப்பரெண்டென்டை செல்லில் அழைத்து பென்ஷன் பற்றி கேட்க 

"சார் இந்த மாசம் க்ளோஸ் பண்ணிட்டோம் அடுத்த மாசம் 3ஆம் தேதிக்கு மேல உங்கள எல் ஒன் செக்ஸன்ல இருந்து காண்டாக்ட் பண்ணுவாங்க சார்"


"ஏன் சார் சென்னையிலேயே ஒரு நாள்ல கொடுத்து இருக்காங்களே? என்று நான் கேட்க..

கொஞ்சம் கூட யோசிக்காமல் "சார் இங்கே பென்ஷனர்கள் ரொம்ப சார்" என்றான். 


இனி நாம் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசாமல் வேலையாகாது என்று செல்லை எடுத்த போது..


டிவியில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற செய்தியை பார்த்ததும் எனக்கு டிஎஸ்பியாக இருந்த வேலன் அவர்கள் பையன் ஞாபகத்திற்கு வந்தார்.


வேலன் அவர்களும் நேர்மையாகவும் வெகு சிறப்பாக பணிபுரிபவர்.

காவல் துறைக்கு சவாலாக பிடிபடாமல் இருந்த மதுரை மற்றும் திண்டுக்கல் மிகப்பெரும் ரவுடிகளை வட மாநிலத்திற்கு சென்று பிடித்து போலீசுக்கு பெருமை சேர்த்தவர். 

அவர் எல்லா உச்சபட்ச அதிகாரிகளுக்கும் பரிச்சயமானவர்.


எந்த ஒரு செயலையும் சரியாக திட்டமிட்டு குழுக்களை உருவாக்கி வழி நடத்தி செய்து முடிப்பதில் அவருக்கு நிகர் அவரே!

அவர் தன்னிடம் வேலை பார்ப்பவர்களை ஒரு குடும்பமாக கருதபவர். 


அவரும் நானும் இன்ஸ்பெக்டராக ஒன்றாக வேலை பார்த்ததாலும் வயதில் அவரை விட மூப்பு என்பதாலும் என்னை சார் என்றே அழைப்பார்


உடனே அவரை தொடர்பு கொண்டு 

"சார் வணக்கம் 

உங்க பையன் PGக்கு நீட் அப்ளை பண்ணிட்டாரா?"என்று கேட்க


"அப்ளை பண்ண போறான் சார்"


" அப்புறம் ரிட்டையர்டு பணம் எல்லாம் வந்திருச்சா சார் ?" என்று கேட்கவும் 


"நம்ம ஆபீஸ்ல இருந்து வரவேண்டிய பணமெல்லாம் வந்துருச்சு சார்"

"ஆனா கருவூலத்தில் பென்ஷன் பேப்பர் ஃபார்மாலிட்டிக்காக டிலே ஆகுது சார்"


'என்ன சார் நாம இவ்வளவு நேர்மையா வேலை பார்த்து பணம் கேட்கிறார்களா?" என்று கோபப்பட்டார்.


"ஆமா சார் ஏதோ பழமொழி சொல்லுவாங்களே .. பொண்டாட்டி நகையே ஆனாலும் இரண்டு உரசு உரசாம விட மாட்டாங்கன்னு" அதுபோல

"அவங்க அப்பனே வந்தாலும் விடமாட்டாங்க போல சார் "


"நீங்க பெயரை மட்டும் சொல்லுங்க சார்" என்றார் 


நான் அவரிடம் பெயரை கூறினேன். 

அடுத்த மூன்று மணி நேரத்தில் கருவூலத்திலிருந்து சூப்ரெண்டெண்ட் என்னிடம் செல்லில் பேசினார். 

"சார் உங்க பென்ஷன் புக் ரெடியாயிடுச்சு சார் "

"இன்னைக்கு சாயந்தரம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் சார்"

 ?https://arammsei.blogspot.com/ இல் இருந்து

Monday, July 20, 2026

அம்மா ஒருநாள் விடுப்பெடுத்தால்..

 அம்மா ஒரு நாள் விடுமுறை எடுத்தால்...

"என் அம்மா உலகிலேயே மிகவும் கோபமானவர் என்று நான் நினைத்தேன்..."

ஒரு நாள் பள்ளியின் முதல்வர் திடீரென்று ஒரு தாயை பள்ளிக்கு அழைத்து கூறினார்:

“உங்கள் மகன் ‘என் அம்மா ஒரு நாள் விடுமுறை எடுத்தால்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறான். அதை படித்ததும் ஆசிரியர் அறை முழுவதும் அமைதியாகிவிட்டது. முதலில் அனைவரும் சிரித்தார்கள்... பின்னர் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது.”

அந்தத் தாய் பதற்றமடைந்து நாற்காலியில் அமர்ந்தார்.

தன் மகன் ஏதோ பெரிய தவறு செய்திருப்பான் என்று நினைத்தார்.

முதல்வர் சிரித்தபடி அந்த நோட்டுப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து கூறினார்:

“இதை வீட்டில் போய் படிக்க வேண்டாம்... இங்கேயே படியுங்கள்.”

முதல் பக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

“என் அம்மா ஒரு நாள் விடுமுறை எடுத்தால்...”

முதலில் எனக்கு என் அம்மா உலகிலேயே மிகவும் கோபமானவர் என்று தோன்றியது.

காலை 5 மணிக்கே என்னை எழுப்பி படிக்க வைப்பார்.

சாப்பாட்டை முழுவதும் சாப்பிடவில்லை என்றால் திட்டுவார்.

அதிக நேரம் மொபைல் பயன்படுத்தினால் அதை பிடுங்கி விடுவார்.

விடுமுறை நாட்களிலும் கூட அறையை சுத்தம் செய்யச் சொல்வார்.

நான் நினைத்தேன்:

"என் அம்மா ஒரு நாள் எங்காவது போய்விட்டால் நன்றாக இருக்கும்..."

பிறகு கடந்த திங்கட்கிழமை அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவர் முழுமையான ஓய்வு எடுக்கச் சொன்னார்.

அன்று தான் முதல் முறையாக என் அம்மா உண்மையாகவே படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை.

காலையில் அலாரம் அடித்தது...

ஆனால் யாரும் என் தலையை வருடி,

“மகனே, எழுந்திரு... பள்ளிக்கு நேரமாகிவிட்டது”

என்று சொல்லவில்லை.

நான் தாமதமாக எழுந்தேன்.

சீருடை இஸ்திரி செய்யப்படவில்லை.

ஒரு காலுறை ஒரு அறையில் இருந்தது, மற்றொன்று வேறு இடத்தில் இருந்தது.

சாப்பாட்டு பெட்டி காலியாக இருந்தது.

அப்பா சமையலறையில் நின்று கொண்டிருந்தார்.

அவர் முதல் முறையாக சப்பாத்தி செய்ய முயற்சி செய்தார்.

அது வட்டமாக வரவில்லை...

இந்தியாவின் வரைபடம் போல இருந்தது.

அன்று தான் அம்மா ஒரே நேரத்தில் எத்தனை வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக புரிந்து கொண்டேன்.

பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தபோது வாசலில் யாரும் என்னை எதிர்பார்த்து நிற்கவில்லை.

அம்மா படுக்கையில் இருந்தார். இருந்தாலும் சிரித்துக் கொண்டு கேட்டார்:

“என் ராஜா வந்துட்டானா?”

நான் சொன்னேன்:

“அம்மா, பசிக்குது.”

அவர் எழுந்திருக்க முயன்றார்.

ஆனால் வலியால் முனகியபடி மீண்டும் படுத்துக் கொண்டார்.

அன்று தான் முதல் முறையாக நானே எனக்கு உணவு எடுத்துக் கொண்டேன்.

உணவு குளிர்ந்திருந்தது...

ஆனால் அதைவிட குளிர்ச்சியாக இருந்தது அந்த வீடு.

அன்று இரவு அம்மாவுக்கு அதிக காய்ச்சல் இருந்தது.

இருந்தாலும் அப்பாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்:

“மகன் பால் குடித்தானா?”

“ஹோம் வொர்க் செய்தானா?”

“நாளைக்கு அவனுடைய வரைதல் நோட்டை மறக்காமல் எடுத்து வையுங்கள்.”

தன் மருந்துகளை விட என் கவலைதான் அவருக்கு அதிகமாக இருந்தது.

மறுநாள் நான் அம்மாவின் மொபைலை எடுத்துப் பார்த்தேன்.

அதில் விளையாட்டுகள் இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் அதில் இருந்தது வேறு ஒன்று.

அதில் அதிகமாக இருந்தவை என் புகைப்படங்கள்.

முதன்முறையாக பள்ளிக்கு சென்ற நாள்... என் புகைப்படம்.

முதன்முறையாக சைக்கிள் ஓட்டிய நாள்... என் புகைப்படம்.

எனக்கு காய்ச்சல் வந்த நாள்... என் புகைப்படம்.

அம்மாவின் சொந்த அழகான ஒரு புகைப்படம் கூட அதில் இல்லை.

அவரது மொபைல் முழுவதும் என் புகைப்படங்களே இருந்தன.

அன்று தான் புரிந்தது:

அம்மா தன் வாழ்க்கையை வாழ்வதில்லை... நம் வாழ்க்கையையே வாழ்கிறார்.

மூன்றாவது நாள் நான் அம்மாவின் கால்களை பிடித்து விட்டேன்.

அவர் சிரித்துக் கொண்டு கேட்டார்:

“இன்று சூரியன் மேற்கில் உதித்ததா?”

நான் சிரித்தேன்... ஆனால் என் கண்களில் கண்ணீர் இருந்தது.

எத்தனை முறை நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன்:

“உங்களுக்கு எதுவுமே தெரியாது... எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பீர்கள்.”

ஆனால் உண்மை என்னவென்றால் எனக்குத்தான் எதுவும் தெரியவில்லை.

என் சட்டை தானாக அலமாரிக்குள் செல்வதில்லை.

என் சாப்பாட்டு பெட்டி தானாக நிரம்புவதில்லை.

என் படுக்கை தானாக ஒழுங்காக மாறுவதில்லை.

எனக்கு பிடித்த உணவு தானாக சமைக்கப்படுவதில்லை.

இதற்குப் பின்னால் அம்மாவின் தூக்கமில்லாத இரவுகள், அவருடைய நேரம், அவருடைய முழு வாழ்க்கையும் இருக்கிறது.

கடவுள் என்னிடம் உலகிலேயே மிகவும் கடினமான வேலை எது என்று கேட்டால்...

நான் சொல்வேன்:

“அம்மாவாக இருப்பதுதான்.”

ஏனென்றால் அம்மாவுக்கு விடுமுறை கிடையாது.

அவருக்கு காய்ச்சல் இருந்தாலும் வீடு நடக்கும்.

வலி இருந்தாலும் குழந்தைகளின் கவலை இருக்கும்.

அழ வேண்டும் என்று தோன்றினாலும் சிரித்தபடி உணவு பரிமாறுவார்.

இனி நான் கடவுளிடம் ஒருபோதும் சொல்ல மாட்டேன்:

“என் அம்மா ஒரு நாள் எங்காவது போகட்டும்.”

அதற்கு பதிலாக நான் சொல்வேன்:

“கடவுளே... என் ஆயுளையும் என் அம்மாவுக்கு கொடு.”

ஏனென்றால்...

அம்மா வீட்டில் இருந்தால், சிறிய வீடும் சொர்க்கம் போல இருக்கும்.

---

கட்டுரை அங்கே முடிந்தது.

நோட்டுப் புத்தகத்தை கையில் பிடித்தபோது அந்தத் தாயின் கைகள் நடுங்கின.

அவரது கண்ணீர் அந்தப் பக்கங்களில் விழுந்தது.

கடந்த மாதம் கோபத்தில் மகன் சொன்னது அவருக்கு நினைவுக்கு வந்தது:

“உங்களுக்கு திட்டுவது மட்டும்தான் தெரியும்.”

அன்று இரவு முழுவதும் அவர் அழுதிருந்தார்.

ஆனால் இன்று அதே மகன், ஒரு வார்த்தையும் சொல்லாமல், தன் அம்மாவின் முழு வாழ்க்கையையும் புரிந்து கொண்டிருந்தான்.

முதல்வர் மெதுவாக கூறினார்:

“குழந்தைகள் நம்முடைய வார்த்தைகளை மட்டும் படிப்பதில்லை... நம்முடைய தியாகங்களை படிக்கிறார்கள். அதை புரிந்து கொள்ள அவர்களுக்கு சிறிது நேரம் தேவை.”

அம்மா வீட்டிற்கு வந்தார்.

மகன் ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்தான்.

இந்த முறை அவன் எதுவும் சொல்லவில்லை.

அம்மாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அம்மா அவன் தலையை வருடினார்.

இருவரும் அமைதியாக இருந்தனர்...

ஆனால் அந்த அமைதியில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தன.

அன்று முதல் முறையாக மகன் தன் தட்டை எடுத்துச் வைத்தான்.

தன் காலணியை தானே சுத்தம் செய்தான்.

தூங்குவதற்கு முன் அம்மாவிடம் வந்து சொன்னான்:

“அம்மா... இனிமேல் உங்களுக்கு விடுமுறை கொடுக்க மாட்டேன்... ஆனால் எல்லா வேலைகளிலும் உங்களை தனியாக விட மாட்டேன்.”

அம்மா சிரித்தார்.

அந்த ஒரு வார்த்தையிலேயே அவருடைய எல்லா சோர்வும் மறைந்தது.

---

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

பெற்றோர்கள் நமக்காக எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும் போது அவர்களின் மதிப்பை குழந்தைகள் உணர்வதில்லை.

அதே கைகள் ஒரு நாள் சோர்வடைந்த பிறகுதான் அதன் அருமை புரியும்.

எனவே காத்திருக்க வேண்டாம்.

இன்றே உங்கள் பெற்றோரின் அருகில் அமர்ந்து, அவர்களின் கைகளை பிடித்து சொல்லுங்கள்:

“நீங்கள் இருக்கிறீர்கள் என்பதால்தான் என் உலகம் இருக்கிறது.” ❤️

---

இதைப் படித்த பிறகு மனம் நெகிழ்ந்தால்... உங்கள் அம்மாவுக்கு ஒரு முறை அழைப்பு விடுங்கள்.

Sunday, July 5, 2026

வாழ்வதற்கு நேரமில்லை

 *“எனக்கு நேரமில்லை”:*


பன்னிரண்டு மணி நேரப் பயணம் இப்போது நான்கு மணி நேரமாகக் சுருங்கிவிட்டது, ஆனாலும் அந்த மனிதன் சொல்கிறான் - நேரமில்லை.


பன்னிரண்டு பேர் கொண்ட ஒரு குடும்பம் இப்போது இரண்டு பேர், ஆனாலும் அந்த மனிதன் சொல்கிறான் - நேரமில்லை.


ஒரு காலத்தில் நான்கு வாரங்கள் எடுத்த ஒரு செய்தி, இப்போது நான்கு வினாடிகள் எடுத்தது, ஆனால் அந்த மனிதன் சொல்கிறான் - நேரமில்லை.


ஒரு காலத்தில் தொலைதூர நபரின் முகத்தைப் பார்க்க பல ஆண்டுகள் ஆனது, இப்போது அது வினாடிகளில் தோன்றும் - ஆனாலும் அந்த மனிதன் சொல்கிறான் - நேரமில்லை.



ஒரு காலத்தில் மணிக்கணக்கில் வங்கி வரிசையில் நின்ற மனிதன், இப்போது தனது மொபைலில் வினாடிகளில் பரிவர்த்தனைகளை முடிக்கிறான், ஆனாலும் அந்த மனிதன் சொல்கிறான் - நேரமில்லை.


ஒரு காலத்தில் வாரங்கள் எடுத்த மருத்துவ பரிசோதனைகள், இப்போது சில மணிநேரங்களில் நடக்கும், ஆனாலும் அந்த மனிதன் சொல்கிறான் - நேரமில்லை.


ஆக்டிவாவிலசவாரி செய்யும் போது, ​​ஒரு கை கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கை தொலைபேசியில் - நிறுத்திப் பேச அவருக்கு நேரமில்லை.


 கார் ஓட்டும்போது, ​​ஒரு கை ஸ்டீயரிங்கில், மறு கை வாட்ஸ்அப்பில்.  அவருக்கு நேரமில்லை என்பதால்.


போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் போது, ​​அவர் சாலைவிதிகளை மீறுகிறுகிரார் ஏனென்றால் அவருக்கு நேரமில்லை.


தனியாக இருக்கும்போது, ​​அவர் நிதானமாக இருப்பார், ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் அமைதியற்றவராக மாறுவார் - அவருக்கு நேரமில்லை.


புத்தகங்களைப் படிக்க நேரமில்லை,

பெற்றோரை அழைக்க நேரமில்லை,

ஒரு நண்பரைச் சந்திக்க நேரமில்லை,

இயற்கையை ரசிக்க நேரமில்லை


ஆனால் -


அவருக்கு ஐபிஎல்,

நெட்ஃபிக்ஸ்,பயனற்ற ரீல்களுக்கான நேரம்,அரசியல் பற்றி விவாதிக்க நேரம் இருக்கிறது -


ஆனால் தனக்கென நேரமில்லை...


உலகம் எளிமையாக, வேகமாக, தொழில்நுட்பம் நெருங்கி வந்தது, தூரங்கள் மறைந்துவிட்டன, வசதிகள் அதிகரித்தன, வாய்ப்புகள் வளர்ந்தன.. ஆனாலும் மனிதன் நேரமில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தான், தன்னை விட்டு விலகிச் சென்றான்.


அமைதியாக உட்கார,

தன்னுடன் பேச,

தன்னைப் புரிந்துகொள்ள,

அல்லது சில தூய தருணங்களுக்கு சிரிக்க -

அவர் நேரமில்லை என்று கூறுகிறார்.


 *பின்னர் ஒரு நாள், நேரமே நழுவிப் போகிறது. அந்த இறுதி தருணத்தில், அவர் உணர்கிறார் - நேரம் இருந்தது... ஆனால் நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார், வாழ மறந்துவிட்டார்.*


_*எனவே இன்றே முடிவு செய்யுங்கள்*


 *உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்*


_*உறவுகளுக்கு,*

*நட்புகளுக்கு  சிறிது* *நேரம் கொடுங்கள்*


*_உங்கள் இதயத்திற்காக, உங்கள் அமைதிக்காக, வாழ்க்கையின் சாராம்சத்திற்காக சிறிது வாழுங்கள்..*


**ஏனென்றால் எந்த நேரமும் உண்மை அல்ல - அது வெறும் பழக்கம்தான்... அது மாற வேண்டும்*