Friday, July 26, 2024

Are u rich or poor ?

 *_𝑯𝒐𝒘 𝒅𝒐 𝒚𝒐𝒖 𝒌𝒏𝒐𝒘_*

*_𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒓𝒊𝒄𝒉?_*


*𝑨𝒎𝒂𝒛𝒊𝒏𝒈 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓* 

*𝒃𝒚 𝒂𝒏 𝑰𝑰𝑻 𝒔𝒕𝒖𝒅𝒆𝒏𝒕.*  


*𝑾𝒉𝒆𝒏 𝑰 𝒘𝒂𝒔  𝒅𝒐𝒊𝒏𝒈 𝒎𝒚 𝑩 𝑻𝒆𝒄𝒉, 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒘𝒂𝒔 𝒂 𝑷𝒓𝒐𝒇𝒆𝒔𝒔𝒐𝒓 𝒘𝒉𝒐 𝒖𝒔𝒆𝒅 𝒕𝒐 𝒕𝒆𝒂𝒄𝒉 𝒖𝒔 ‘𝑴𝒆𝒄𝒉𝒂𝒏𝒊𝒄𝒔’.*


*𝑯𝒊𝒔 𝒍𝒆𝒄𝒕𝒖𝒓𝒆𝒔 𝒖𝒔𝒆𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒗𝒆𝒓𝒚 𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒔𝒊𝒏𝒄𝒆 𝒉𝒆 𝒉𝒂𝒅 𝒂𝒏* *𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒘𝒂𝒚 𝒕𝒐* *𝒕𝒆𝒂𝒄𝒉 𝒂𝒏𝒅 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏*

*𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒆𝒑𝒕𝒔.*


*𝑶𝒏𝒆 𝒅𝒂𝒚, 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒍𝒂𝒔𝒔, 𝒉𝒆 𝒂𝒔𝒌𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒇𝒐𝒍𝒍𝒐𝒘𝒊𝒏𝒈 𝒒𝒖𝒆𝒔𝒕𝒊𝒐𝒏𝒔:*


*𝟏. 𝑾𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒁𝑬𝑹𝑶?*

*𝟐. 𝑾𝒉𝒂𝒕 𝒊𝒔 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀?*

*𝟑. 𝑪𝒂𝒏 𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒃𝒆 𝒔𝒂𝒎𝒆?*


*𝑾𝒆 𝒂𝒍𝒍 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕 𝒕𝒉𝒂𝒕 𝒘𝒆 𝒌𝒏𝒆𝒘 𝒕𝒉𝒆 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓𝒔 𝒂𝒏𝒅 𝒘𝒆 𝒓𝒆𝒑𝒍𝒊𝒆𝒅 𝒂𝒔 𝒇𝒐𝒍𝒍𝒐𝒘𝒊𝒏𝒈:*


*𝒁𝑬𝑹𝑶 𝒎𝒆𝒂𝒏𝒔 𝒏𝒐𝒕𝒉𝒊𝒏𝒈.*

*𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒎𝒆𝒂𝒏𝒔* 

*𝒂 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒈𝒓𝒆𝒂𝒕𝒆𝒓 𝒕𝒉𝒂𝒏 𝒂𝒏𝒚 𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓.*


*𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒂𝒓𝒆 𝒐𝒑𝒑𝒐𝒔𝒊𝒕𝒆 𝒂𝒏𝒅 𝒕𝒉𝒆𝒚 𝒄𝒂𝒏 𝒏𝒆𝒗𝒆𝒓 𝒃𝒆 𝒔𝒂𝒎𝒆.*


*𝑯𝒆 𝒄𝒐𝒖𝒏𝒕𝒆𝒓𝒆𝒅 𝒖𝒔 𝒃𝒚 𝒇𝒊𝒓𝒔𝒕 𝒕𝒂𝒍𝒌𝒊𝒏𝒈 𝒂𝒃𝒐𝒖𝒕 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒂𝒏𝒅 𝒂𝒔𝒌𝒆𝒅, 𝑯𝒐𝒘 𝒄𝒂𝒏 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒃𝒆 𝒂𝒏𝒚 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒘𝒉𝒊𝒄𝒉 𝒊𝒔 𝒈𝒓𝒆𝒂𝒕𝒆𝒓 𝒕𝒉𝒂𝒏 𝒂𝒏𝒚 𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓?*


*𝑾𝒆 𝒉𝒂𝒅 𝒏𝒐 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓𝒔.*


*𝑯𝒆 𝒕𝒉𝒆𝒏 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒆𝒑𝒕 𝒐𝒇 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒊𝒏 𝒂 𝒗𝒆𝒓𝒚 𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒘𝒂𝒚, 𝒘𝒉𝒊𝒄𝒉 𝑰 𝒓𝒆𝒎𝒆𝒎𝒃𝒆𝒓 𝒆𝒗𝒆𝒏 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝟑𝟓 𝒚𝒆𝒂𝒓𝒔.*


*𝑯𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒎𝒂𝒈𝒊𝒏𝒆 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒊𝒔 𝒂𝒏 𝒊𝒍𝒍𝒊𝒕𝒆𝒓𝒂𝒕𝒆 𝒔𝒉𝒆𝒑𝒉𝒆𝒓𝒅 𝒘𝒉𝒐 𝒄𝒂𝒏 𝒄𝒐𝒖𝒏𝒕 𝒐𝒏𝒍𝒚* 

*𝒖𝒑𝒕𝒐 𝟐𝟎.*


*𝑵𝒐𝒘, 𝒊𝒇 𝒕𝒉𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒐𝒇 𝒔𝒉𝒆𝒆𝒑 𝒉𝒆 𝒉𝒂𝒔 𝒍𝒆𝒔𝒔 𝒕𝒉𝒂𝒏 𝟐𝟎 𝒂𝒏𝒅 𝒚𝒐𝒖 𝒂𝒔𝒌 𝒉𝒊𝒎 𝒉𝒐𝒘 𝒎𝒂𝒏𝒚 𝒔𝒉𝒆𝒆𝒑 𝒉𝒆 𝒉𝒂𝒔, 𝒉𝒆 𝒄𝒂𝒏 𝒕𝒆𝒍𝒍 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒑𝒓𝒆𝒄𝒊𝒔𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 (𝒍𝒊𝒌𝒆 𝟑, 𝟓, 𝟏𝟒 𝒆𝒕𝒄.).*


*𝑯𝒐𝒘𝒆𝒗𝒆𝒓, 𝒊𝒇 𝒕𝒉𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒊𝒔 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝟐𝟎, 𝒉𝒆 𝒊𝒔 𝒍𝒊𝒌𝒆𝒍𝒚 𝒕𝒐 𝒔𝒂𝒚 “𝑻𝑶𝑶 𝑴𝑨𝑵𝒀”*.


*𝑯𝒆 𝒕𝒉𝒆𝒏 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒏 𝒔𝒄𝒊𝒆𝒏𝒄𝒆 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒎𝒆𝒂𝒏𝒔 ‘𝒕𝒐𝒐 𝒎𝒂𝒏𝒚’ (𝒂𝒏𝒅 𝒏𝒐𝒕 𝒖𝒏𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆) 𝒂𝒏𝒅 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒘𝒂𝒚 𝒛𝒆𝒓𝒐 𝒎𝒆𝒂𝒏𝒔 ‘𝒕𝒐𝒐 𝒇𝒆𝒘’ (𝒂𝒏𝒅 𝒏𝒐𝒕 𝒏𝒐𝒕𝒉𝒊𝒏𝒈).*


*𝑨𝒔 𝒂𝒏 𝒆𝒙𝒂𝒎𝒑𝒍𝒆, 𝒉𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒇 𝒘𝒆 𝒕𝒂𝒌𝒆 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝑬𝒂𝒓𝒕𝒉 𝒂𝒔 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒆𝒅 𝒕𝒐 𝒅𝒊𝒔𝒕𝒂𝒏𝒄𝒆 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝑬𝒂𝒓𝒕𝒉 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒏, 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒛𝒆𝒓𝒐 𝒔𝒊𝒏𝒄𝒆 𝒊𝒕 𝒊𝒔 𝒕𝒐𝒐 𝒔𝒎𝒂𝒍𝒍.*


*𝑯𝒐𝒘𝒆𝒗𝒆𝒓, 𝒘𝒉𝒆𝒏 𝒘𝒆 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒆 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒘𝒊𝒕𝒉 𝒕𝒉𝒆 𝒔𝒊𝒛𝒆 𝒐𝒇 𝒂 𝒈𝒓𝒂𝒊𝒏, 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒆*.


*𝑯𝒆𝒏𝒄𝒆, 𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒍𝒖𝒅𝒆𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒕𝒉𝒊𝒏𝒈 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝑬 𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒕𝒊𝒎𝒆, 𝒅𝒆𝒑𝒆𝒏𝒅𝒊𝒏𝒈 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒕𝒆𝒙𝒕, 𝒐𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒎𝒂𝒕𝒓𝒊𝒙 𝒐𝒇 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒊𝒔𝒐𝒏*.


*𝑻𝒉𝒆 𝒓𝒆𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔𝒉𝒊𝒑 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝒓𝒊𝒄𝒉𝒏𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝒑𝒐𝒗𝒆𝒓𝒕𝒚 𝒊𝒔 𝒔𝒊𝒎𝒊𝒍𝒂𝒓 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝒓𝒆𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔𝒉𝒊𝒑 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚* 

*𝒂𝒏𝒅 𝒛𝒆𝒓𝒐*.


*𝑰𝒕 𝒂𝒍𝒍 𝒅𝒆𝒑𝒆𝒏𝒅𝒔 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒔𝒄𝒂𝒍𝒆 𝒐𝒇 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒊𝒔𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔*.


*𝑰𝒇 𝒚𝒐𝒖𝒓 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆 𝒊𝒔 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔,* 

*𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒓𝒊𝒄𝒉*.

*𝑰𝒇 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔 𝒂𝒓𝒆 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆,*

*𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒑𝒐𝒐𝒓.*


*𝑰 𝒄𝒐𝒏𝒔𝒊𝒅𝒆𝒓 𝒎𝒚𝒔𝒆𝒍𝒇 𝒓𝒊𝒄𝒉 𝒃𝒆𝒄𝒂𝒖𝒔𝒆 𝒎𝒚 𝒘𝒂𝒏𝒕𝒔 𝒂𝒓𝒆 𝒇𝒂𝒓 𝒍𝒆𝒔𝒔 𝒕𝒉𝒂𝒏 𝒎𝒚 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆.*


*𝑰 𝒉𝒂𝒗𝒆 𝒃𝒆𝒄𝒐𝒎𝒆 𝒓𝒊𝒄𝒉 𝒏𝒐𝒕 𝒔𝒐 𝒎𝒖𝒄𝒉 𝒃𝒚 𝒂𝒄𝒒𝒖𝒊𝒓𝒊𝒏𝒈 𝒍𝒐𝒕𝒔 𝒐𝒇 𝒎𝒐𝒏𝒆𝒚, 𝒃𝒖𝒕 𝒃𝒚 𝒑𝒓𝒐𝒈𝒓𝒆𝒔𝒔𝒊𝒗𝒆𝒍𝒚 𝒓𝒆𝒅𝒖𝒄𝒊𝒏𝒈 𝒎𝒚 𝒘𝒂𝒏𝒕𝒔.*


*𝑰𝒇 𝒚𝒐𝒖 𝒄𝒂𝒏 𝒓𝒆𝒅𝒖𝒄𝒆 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔, 𝒚𝒐𝒖 𝒕𝒐𝒐 𝒄𝒂𝒏 𝒃𝒆𝒄𝒐𝒎𝒆 𝒓𝒊𝒄𝒉 𝒂𝒕 𝒕𝒉𝒊𝒔 𝒗𝒆𝒓𝒚 𝒎𝒐𝒎𝒆𝒏𝒕.*


 *𝑴𝒂𝒚 𝒚𝒐𝒖𝒓 𝒍𝒊𝒗𝒆𝒔 𝒈𝒆𝒕 𝒓𝒊𝒄𝒉 𝒃𝒚 𝒈𝒐𝒐𝒅 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕𝒔, 𝒈𝒐𝒐𝒅 𝒅𝒆𝒆𝒅𝒔, 𝒈𝒐𝒐𝒅 𝒑𝒆𝒐𝒑𝒍𝒆 𝒂𝒏𝒅 𝒍𝒐𝒗𝒆𝒍𝒚 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔 𝒂𝒓𝒐𝒖𝒏𝒅 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒘𝒂ys...(As received through WhatsApp)

Sunday, July 21, 2024

ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பது...

 ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான

காரணங்களை பலரும் பலவிதமாக விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து கருத்தரித்தால்
சித்திரையில் குழந்தை பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்ற்றவனாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப்
பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக
ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Saturday, July 20, 2024

வாழ்கிறோமா..இருக்கிறோமா ?

  வாழுகிறோமா❓ இருக்கிறோமா❓


இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்


கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது


நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்


ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு

ஒரு வாரம் தவம் கிடந்தோம்

அந்த காலம் தான் நன்றாக இருந்தது..


ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..


தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..


ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..


இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..


அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்


மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்


வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்


ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..


ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..


கண்டதை உண்டாலும் செரித்தது.


தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..


பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்


உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்


ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..


எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..


வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..


பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..


கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..


மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..


ஆசிரியைகளிடம்.

எளிமை இருந்தது.. 


படுக்கையை எதிர்பாராமல் பாயில்

உறங்கினோம்


தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே 

அவர்கள் மடி மீது தலை வைத்து

 நாம் உறங்கிய தருணம் கண்டோம்


பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய


பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..


அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..


பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...


காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..


பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்


ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்


செல்போன் எதுவும் இல்லை

ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்


ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது


தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்


காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்


ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள்  சுவைத்தோம்


ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..


மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..


மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது இருக்கிறோம் அவ்வளவே...


ஆமாம் தானே❓❓❓


(வாட்ஸ் அப் உபயம் )

#(ப.பி)

Sunday, June 16, 2024

Think before order..

 How the food delivery commerce works?* 


the *MAGIC* of *HOME DELIVERY* *at whose cost*


If I order 2 idlis with chutney and 1 masala dosa with sambar, from a nearby restaurant which is 1.5 km from home, the total bill comes to 177.3 rupees. Very normal darshini kind of a hotel. You can choose any aggregator like Swiggy or Zomato. 


1. Food - 110/- 

2. GST - 6.30 

3. Packing - 16/-

4. Delivery - 45/- 


Total - 177.30


This is the customer bill. 


You pay 67.30 extra, or 38% of what you spend on this order is on Non-food services. 62% is for food. 


So, the broad allocation is 62% for food, 5% to the government, 9% for packing and 25% for delivery. 


Now, let us take a look at how the restaurant reconciliation happens, after 10 days of the transaction. 


Amount paid to the restaurant = 70% of the order value. Zomato and Swiggy take 30% as sales commission.


Restaurant receives - 0.7 X 110 = 77/-


Amount paid to delivery partner = 15/- 


Amount paid to government = 6.30


Amount that Zomato or Swiggy pockets = 79/-


Now, if you analyze percentages and look at how much each of them have benefited from the transaction, you will realize this.


Food - 43.4% and non food - 56.6%.


Restaurant share - 43.4%

Delivery partner share - 8.5%

Government - 3.5%

Zomato / Swiggy share - 44.6%


So, what actually happens when this is how the transaction actually looks like? 


1. Quality and quantity of food. 


Your dine in experience is going to be much different as compared to food being ordered through a 3rd party.


2. Highly inflated prices on aggregator portals.


As a restaurant, if I need to run discounts and still manage to keep riding the gravy train, I need to raise my prices by 150% at least. That only means that the aggregator makes more money and the customer pays for it.


3. Food delivery in itself is not a sustainable practice with our inefficient solid waste management, use of plastic and the extremely affordable fuel prices.


Still hungry. Please reach for a chopping board and a frying pan and enjoy


Time to dig in.


*delivery partners are making more money than restaurants...*

*very useful information everyone should think and decide and share

Tuesday, June 11, 2024

ஒரு வகையில்....

 சமீபத்தில் வால்பாறையில் இருக்கும்  கோவிலுக்கு போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். 


எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார். 


ஆச்சர்யமாய் இருந்தது..


விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டோம் ...


அதற்கு அவர் சொன்னார் 


"சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில் தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். 


ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் 


இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.. 


இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் குரங்குகள் மாறி விடுகின்றன... 


வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக மாறி விடுகின்றன... 


எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது" என்று பதில் சொன்னார்...


கேக்கும்போதே மனசு திக்கென்றது நிறைய யோசிக்க வைத்தது...! - 


இலவச பஸ்ஸில் பயணம் செய்து

இலவச அரிசி வாங்கி, 

இலவச கிரைண்டரில் 

இட்லிக்கு மாவாட்டி, 

இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து,

இலவச மின்விசிறியைப் போட்டு 

இளைப்பாறி, இலவச டிவியில் படமும் சீரியல்களும் பார்க்கும் நம்மஊர் மக்களுக்கும், 

இது தான் நடக்கிறது!உழைக்கவே மனம் வருவதில்லை!"


மேட்டர்" என்னவோ குரங்கு பற்றித்தான். ஆனால் அது நம் மக்களுக்கும் அப்படியே பொருந்துகிறது.


படித்ததில் பிடித்தது

Wednesday, May 22, 2024

நம்மை ஏமாற்றும் மின்வாரியம்..

 ❌❌❌❌❌❌❌❌❌❌

*இதை நீங்கள் செய்வீர்களா என்று தெரியவில்லை உங்களுக்காகத்தான் இதை படித்துவிட்டு அனுப்புகிறேன் நீங்களும் மற்றவர்களுக்கு அனுப்புங்கள் தீர்வு காணும் வரை மிக பெரிய மின் வாரிய சுரண்டல்* *தற்போதைய TNEB மின் கட்டணம்:*

 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.  1330/-

 501 யூனிட் பயன்படுத்தினால் ரூ.  2127/-

 *1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்*


 இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும்.

 தயவு செய்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.

 நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், நாம் ரூ.5420/- செலுத்த வேண்டும்.

 ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1330/- மட்டுமே செலுத்த வேண்டும்.

 எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2660/- மட்டுமே.

 இரண்டு மாதங்களுக்கு ரூ.2760/- சேமிக்க முடியும்.

 மாதாந்திர மீட்டர் ரீடிங் முறையை கொண்டு வர அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.  உங்கள் அனைத்து குழுக்களுக்கும் அனுப்பவும்.🙏


 சகோதரர் அவர்கள் அனுப்பிய இந்தப் பதிவு மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு.......*


 பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.  இதனால் நமது பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகிறது.


 ஆகவே இதன் முக்கியத்துவத்தைக் கருதி, இந்தக் கட்டுரையின் சாராம்சத்தை தமிழில் தருகின்றேன்.

 

 மின்சார வாரியம், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் பெரிய பொருளாதார நஷ்டம் நமக்கு ஏற்படுகின்றது......


 உதாரணத்திற்கு ,


 500 யூனிட் வரை பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330.


 அதே நேரத்தில் ஒரு யூனிட் கூடுதலாக வந்தால் (501 யூனிட் ) அப்போது கட்டணம் ரூ.2127.


 ஒரே ஒரு யூனிட் கூடுவதால், நமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.797.


 யோசித்துப் பாருங்கள்.... நம்மை அரசு எவ்வாறு சுரண்டுகின்றது என்று........?


 ஆக, *ஒவ்வொரு மாதமும் மீட்டர் ரீடிங் செய்யப்பட்டால், நமது மின்சார கட்டணம் குறைவு........!*


 மேலும்..........,


 இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது (60 நாட்களுக்கு ஒரு முறையாவது) மீட்டர் ரீடிங் பார்க்க சரியாக வருகின்றார்களா .....?  என்று சொன்னால் நிச்சயமாக இல்லை........


 *இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 28 அல்லது 29 ந் தேதி ரீடிங் பார்க்க வர வேண்டிய ஊழியர், இந்த மாதம் 31 ஆம் தேதி வந்தால் பல வீடுகளில், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.*


 ஆகவே இந்த அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல  அவசியமெனில் போராடவும் முன்வர வேண்டும்.

 


 அதிகம் பகிரவும்,

 அனுப்பப்பட்டது.

Tuesday, May 21, 2024

துவக்கத்தின் மகிமை

 சிக்கனம் : சொற்களில் தொடங்குகிறது.


வைராக்கியம் : உணவில் தொடங்குகிறது.


வன்மம் : சொல்லில் தொடங்குகிறது.


பெருந்தன்மை : மன்னிப்பில் தொடங்குகிறது.


சான்றாண்மை : விட்டுக்கொடுப்பதில் தொடங்குகிறது.


பேராசை : பணத்தில் தொடங்குகிறது.


அன்பு : புன்னகையில் தொடங்குகிறது.


அழகு : தூய்மையில் தொடங்குகிறது.


காதல் : கண்களில் தொடங்குகிறது.


காமம் : கற்பனையில் தொடங்குகிறது.


கருணை : பார்வையில் தொடங்குகிறது.


கண்ணியம் : மதிப்பதில் தொடங்குகிறது.


பரோபகாரம் : அண்டை வீட்டோடு தொடங்குகிறது.


பண்பு : பழகுவதில் தொடங்குகிறது.


ஒற்றுமை அனுசரணையில் தொடங்குகிறது.


நட்பு : பகிர்வதில் தொடங்குகிறது.


பாசம் : பிரிவில் தொடங்குகிறது.


நாணயம் : திருப்பி தருவதில் தொடங்குகிறது.


பகைமை : குறை காண்பதில் தொடங்குகிறது.


சோம்பல் : தூக்கத்தில் தொடங்குகிறது.


விழிப்புணர்வு : தண்ணீரை பயன்படுத்துவதில் தொடங்குகிறது.


வேகம் : சிந்திப்பதில் தொடங்குகிறது.


பொறாமை : ஒப்பிடுவதில் தொடங்குகிறது.


தோல்வி : அலட்சியத்தில் தொடங்குகிறது.


வீழ்ச்சி : ஆணவத்தில் தொடங்குகிறது.


ஆரோக்கியம் : கருவில் தொடங்குகிறது.


ஆத்திரம் இயலாமையில் தொடங்குகிறது.


மரணம் : ஜனனத்தில் தொடங்குகிறது.


பூமியில் வாழும் வாழ்க்கை கொஞ்ச நாள் வாழ்க்கை அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்...(வாட்ஸ் அப் பகிர்வு )