Monday, February 16, 2026

படித்ததில் பிடித்தது

 Beautiful meaning 


In the southern part of India the practice of celebrating of ages 60, 70, 80, 90 and 100 :


Someone once asked me the Reason....

“Why do we celebrate ages like 60, 70, 80, 90, and 100 so grandly?

Are these numbers spiritual, or are they just cultural traditions?”


The answer lies in a powerful story from the Mahabharata—the story of King Yayati....


King Yayati lived life to the fullest—power, pleasures, success, everything. But when old age suddenly arrived, it shook him deeply. After deep reflection, he realized a profound truth:

“Pleasure has limits, but desire never ends.”

This single realization transformed his life. He accepted old age and explained that life has five inner turning points—not based on age, but on understanding.


Remarkably, these five turning points align with the traditional Indian milestones of 60, 70, 80, 90, and 100 years. Let us understand them in simple terms.


*60 – Shashti*


The mind shifts from accumulation to understanding


Around 60, something changes—not in the body, but in priorities.

The question “How much more can I get?” slowly fades, and

“What truly matters now?” takes its place.


Introspection begins.

Noise, applause, and external validation are no longer needed.

Clarity is what one seeks.


This is not decline—it is maturity catching up with ambition.


*70 – Bheemaratha Shanthi*


Peace feels more powerful than proving a point


In the 40s and 50s, we explain ourselves to the world.

At 70, a quiet shift occurs.


You no longer react instantly.

Arguments lose their attraction.

Preserving relationships matters more than winning debates.


One realizes:

Being peaceful is more valuable than being right.

That is why the 70th year is celebrated.


*80 – Sathabhishekam*


Your presence itself becomes healing


At 80, people don’t come seeking advice.

They come seeking something deeper—

the reassurance that life can be lived, processed, and understood.


At this age, your presence becomes a blessing.

Words are no longer necessary.

Your very being says:

“Everything was okay. Life finds its way.”


That is why 80 is considered sacred.


*90 – Navathi*


The ego quietly retires


At 90, something rare happens.


You no longer feel the urge to correct people.

You don’t cling to opinions.

Things are not taken personally.

You are not easily hurt.


Not because of weakness—

but because life has already shown you enough.

Petty matters no longer deserve your energy.


A gentle stillness settles in.

This humility is true spirituality.


*100 – Shatamanam*


Life moves beyond personal stories


Reaching 100 is not just about the number of years.

It is a state where the larger picture becomes visible.


You realize that many of the worries you carried were unnecessary.

The love you gave was what truly mattered.

And life was always being held by a mysterious, compassionate force.


At 100, a person becomes less of an individual

and more of a presence.


Essence


Our sages did not celebrate age.

They celebrated the inner transformation that comes with age.


•⁠  ⁠60 – Priorities shift

•⁠  ⁠70 – Peace becomes strength

•⁠  ⁠80 – Presence becomes healing

•⁠  ⁠90 – Ego dissolves quietly

•⁠  ⁠100 – Life reaches completion


Age is not deterioration.

Age is a filtration process—

through which wisdom, gentleness, and grace remain.


*Growing older means life is becoming purer, wiser, and gentler.*

Friday, February 13, 2026

படித்ததில் பிடித்தது..

 *கோபம் புத்தியை மழுங்க செய்யும்.*


செங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான். கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான். பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.. 


செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான். மற்ற நாடுகள் மேல் தாக்குதல் நடத்தி அவற்றைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தான். பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.


மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள். அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.


ஒரு நாள் செங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள். செங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான். ""என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான். அவன் குதிரையில் பயணித்த போது பருந்து கம்பீரமாக அவன் முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.


பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் செங்கிஸ்கான். அந்தக் குல்லா தலையில் இருக்கும் வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லக் கூடாது. அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான் செங்கிஸ்கான். பருந்து பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.


அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை. செங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளி குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான். பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது. 


செங்கிஸ்கானும் நண்பர்களும் களைப்பு வரும் வரை வேட்டையாடினார்கள். விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் செங்கிஸ்கான் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான்


மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது. 


செங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது. நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக் குல்லாவைக் கழட்டி அதில் நீரைப் பிடித்தான்.


அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டி விட்டது. தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது. தன் கையில் அமர்ந்திருந்த பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டி விட்டது. இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம் வந்து விட்டது.


""இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன். இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை.''


செங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்துத் தன் வலக்கையில் பிடித்துக் கொண்டான். பருந்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான். "இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ, நீ செத்தாய்' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான். வெள்ளி குல்லாவில் தண்ணீர் நிரம்ப நேரமானது. ஊற்று மிகவும் மெதுவாக வந்து கொண்டிருந்தது. 


பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். பருந்து மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன். பருந்து வெட்டுண்டது. என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.


பருந்து இறந்து விட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. சொட்டிக் கொண்டிருந்த நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான். பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி இருந்தது. அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.


தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.


அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும். மன்னன் அந்த நீரை உண்டிருந்தால் உடனே செத்திருப்பான். அதனால் தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.


உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான செங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான். 


நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்தில் ஒரு பருந்தைச் செய்து வைத்தான். அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.


""கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன.''


மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது.....


""உன்னுடைய உண்மையான நண்பன் உனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான்.''


செங்கிஸ்கான் கதை இத்துடன் முடிகிறது.


இதோ ஒரு எளிய விளக்க கதை!


ஒரு செயலை எடை போடும் போது அந்தச் செயலை மட்டும் பார்க்காமல் அதைச் செய்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும். 


நமது பெற்றோர், நம் குரு, உண்மையான நண்பர்கள் பல சமயங்களில் நமக்குப் பிடிக்காததைச் செய்வார்கள்.


அதற்காக அவர்களை விட்டு விலகிச் சென்று விடக் கூடாது. நம்முடைய நன்மைக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


நம்மைக் கவிழ்க்க நினைப்பவர்கள் நம்மைப் புகழ்வார்கள். நமக்குப் பிடித்ததைச் செய்வார்கள். ஆனால், அவர்கள் நோக்கம் நம்மை வீழ்த்துவது தான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்....by Senthil... படித்ததில் பிடித்தது 

Saturday, February 7, 2026

நட்புகளின் வீழ்ச்சி


சமீபத்தில் நான் Harvard Business Review-ல் ஒரு கட்டுரையைப் படித்தேன். அதில் சொல்லப்பட்டிருந்தது:


1. நட்புகளின் வீழ்ச்சி (Friendship Recession) – உலகளவில் நட்புகள் வேகமாக குறைந்து வருகின்றன.


2. 1990 முதல் இன்றுவரை, “எனக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை” என்று கூறும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 12% ஆகியுள்ளது.


3. அதே நேரத்தில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட நெருக்கமான நண்பர்கள் உள்ளோரின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.


4. இந்திய நகரப் பகுதிகளிலும் இதே நிலை – ஓரறிவு (acquaintances) அதிகரிக்கிறது, ஆனால் உண்மையான நட்பு குறைகிறது.


5. முன்பு மக்கள் கஃபே, கிளப், நிகழ்ச்சிகளில் அந்நியர்களுடன் உரையாடுவார்கள். இன்று மக்கள் கூட்டத்துக்குள்ளும் தனியாகவே இருக்கிறார்கள்.


6.அமெரிக்காவில்தனியாக உண்பவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் 29% அதிகரித்துள்ளது.


7.ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் கூட இப்போது நட்பு பற்றிய பாடநெறியை தொடங்கியுள்ளது.


8. இது ஒரு சமூகப் பிரச்சனை மட்டும் அல்ல, இது கலாச்சாரப் பிரச்சனை.


9. நட்பிற்கு நேரம் ஒதுக்குவது இப்போது ஒரு ஆசை அல்ல — ஒரு அத்தியாவசியம்.


10. தனிமை ஒரு பழக்கமாகி வருகிறது. நட்பை மதிக்கவில்லை என்றால், நாம் புதிய நண்பர்களையே அல்லாமல் பழைய உறவுகளையும் இழந்து விடுவோம்.


ஆராய்ச்சிகள் சொல்வது:


1. தனிமை இதய நோய், மனச்சிதைவு (dementia), மற்றும் அவசர/முன்கூட்டிய மரணம் அபாயத்தை அதிகரிக்கிறது.


2. இது ஒரு நாளில் 15 சிகரெட் புகைப்பதற்கு சமமான தீமையை உண்டாக்குகிறது.


3. நட்பு மன, உடல், உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.


4. Harvard-ன் 80 ஆண்டு ஆய்வு கூறுவது — உண்மையான மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கிய காரணம் நெருக்கமான உறவுகள்.


5. பணம் சம்பாதிக்கலாம், நிலை மாறலாம் — ஆனால் எந்த சூழலிலும் உன்னுடன் நிற்கும் ஒருவர் தான் உண்மையான நண்பன்.


6. நட்பு என்பது ஒருபோதும் குறையாத செல்வம். எனவே ஓரறிவில் மட்டும் நின்றுவிடாதீர்கள் — நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், ஏனெனில் நல்ல நண்பர்களே உண்மையான செல்வம்.


7. நட்பைப் பராமரியுங்கள் — நேரம் கொடுங்கள், மன்னியுங்கள், நினைவுகளை உருவாக்குங்கள்.


8.உண்மையான நண்பர்களுடன் வாழ்க்கை இன்னும் அழகாகிறது.

இங்கு நட்பே சொந்தமாகிறது.

 🤝🤝

🙏🏻🙏🏻படித்ததை பகிர்கிறேன் 🙏🏻🙏🏻



Wednesday, January 28, 2026

குடந்தை நவகிரகச் சுற்றுலா

 நமது தமிழ்நாடு அரசு, பக்தர்களின் வசதிக்காக, தினமும் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 9 நவக்கிரக பரிகார  திருத்தலங்களுக்கு, குறைந்த செலவில்  சிறப்பான பேருந்து வசதிகளை (2 பேருந்துகள் A/C & Non A/C)  நவகிரக சுற்றுலா பேருந்து என்ற பெயரில் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது👍🤝

புறப்படும் இடம் : கும்பகோணம் பேருந்து நிலையம்

நேரம் : காலை 5.00 மணி


பயணம் நிறைவு பெறும் நேரம் : இரவு 8.00 மணி


கட்டணம் :Non A/C Bus Rs.750/-

A/C Bus Rs. 1350/-


டிக்கெட் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே பெற முடியும்.  புக் செய்ய

www.tnstc.in  (tnstc நவக்கிரகா) 

TNSTC Mobile Application

Ph : 94432 63988 & 94897 95509


ஏசி பஸ் அனைத்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும்... 


நான் ஏசி பஸ் அனைத்து நாட்களிலும் சிறப்பாக செயல்படுகிறது🤝👍


உணவு வசதிகள் : காலை & மதிய உணவு  இரண்டும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. 


பக்தர்களுக்கு, காலை உணவு ரூபாய் 60/-  மதிய உணவு 90/- ரூபாய்க்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.  மேலும் பேருந்தில் வரும் பக்தர்கள் சிலர் உணவுக்கு ஆன செலவுகளை ஸ்பான்சர் ஆக ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே மற்ற பக்தர்களுக்கு உணவு க்கான செலவுகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது🤝👍


காணிக்கை தர சில்லரை தேவைப்படுமாயின், போக்குவரத்து நிர்வாகமே, பயணத்தின்போது, 100/- ரூபாய்க்கு, பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருகிறார்கள்👍


ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போதும், பேருந்தில் வரும் கைடு (வழிகாட்டி) ஒவ்வொரு கோயிலின் வரலாற்றினையும் அனைவருக்கும் புரியும்படி மைக்கில் அறிவிக்கிறார் மேலும் வேற்று மாநில பக்தர்களின் புரிதலுக்கு, அவர்கள் தாய்மொழியில் வாட்ஸ்அப் மூலம், வீடியோக்கள் அனுப்பி அவர்களுக்கும் புரியும் படி தெரிவிக்கிறார்கள்👍🤝


பேருந்து புறப்பட்டதும், பக்தர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் அடையாள அட்டை

வழங்கப்படுகிறது👍

இதன்மூலம் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றும் விரைவாக வும் தரிசனம் செய்ய முடிகிறது🙏


ஒவ்வொரு ஆலயத்திலும், வழிபாட்டின் போது, பேருந்து ஓட்டுனர் சங்க நாதம் எழுப்பி, வழிபாட்டுக்கு உதவுகிறார்🙏


பயண விபரம்.... 


1) சந்திரன் பரிகார ஸ்தலம் - திங்களூர்

மன சஞ்சலங்களை போக்கு பவர் - 

(அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்) & ஸ்ரீ மூங்கில் அமர்ந்தவள் திருக்கோயில்


பசுமையான வயல்வெளிக்குள் இந்த ஆலயம் அமைந்துள்ளது🙏


2) ஆலங்குடி - குருபகவான் பரிகார ஸ்தலம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில்) 


இங்கு தரிசனம் முடிந்து காலை உணவு சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது. ஸ்பான்சர் கள் கையால் உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அனைவர் முன் நன்றியும் தெரிவிக்கப்படுகிறது👍


குருபகவான் ஸ்தலத்தில் இருந்து ராகு ஸ்தலம் செல்லும் வழியில் வலங்கைமான் எனும் ஊரில் அமைந்துள்ள "பாடைகட்டி மகாமாரியம்மன்" கோவில் உள்ளது. பேருந்தில் இருந்தபடியே அம்மனை வணங்கலாம். நடத்துனர் மட்டும் கோவிலின் உள்ளே சென்று பிரசாதம் எடுத்து வந்து அனைவருக்கும் தருகிறார்🙏


3) ராகு ஸ்தலம் - திருநாகேஸ்வரம் / அருள்மிகு நாகநாதசுவாமி இங்கு மங்கள ராகுவாக (நாக வல்லி-நாககன்னியாக காட்சி தருகிறார். ( அதிர்ஷ்டம் தரும் ஸ்தலம் - 8 தோசங்களுக்கான பரிகார ஸ்தலம் இது. ராகு நேரத்தில், ராகு பகவான் சிலை மீது பால் ஊற்றும் போது, அது நீல நிறமாக மாறும்) கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் உள்ளது.  உப்பிலியப்பன் ஆலயம், இந்த ராகு ஸ்தலத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு👍


4) சூரிய பகவான் - சிவசூரியபெருமான் ஆலயம் - திருமங்கலக்குடி /

சூரியனுக்கு தனி கோவில் உள்ள இடம். இந்த ஆலய நிர்வாகம், திருவாடுதுறை ஆதீனம் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 


சூரிய பகவானுக்கு, இந்தியாவில் "கோனாரக்"கிற்கு அடுத்து இங்கு மட்டும் தான் கோவில் உள்ளது.  சூரிய பகவானுக்காக அனைத்து நவகிரக தெய்வங்களும் 77 ஞாயிற்றுக்கிழமை கள் விரதம் இருந்த வரலாறு உண்டு / தற்பொழுது குடமுழுக்கு க்காக, கோவில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது 👍


5)  சுக்கிர பகவான் - கஞ்சனூர் அக்னீஸ்வரர் - கற்பகாம்பாள் இங்கு பிரசித்தம். 

கோவில் நிர்வாகம், மதுரை ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது.  மேலும் தற்பொழுது, குடமுழுக்குக்காக கோவில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது👍


6) வைத்தீஸ்வரன் கோவில் - ஜடாயு பறவை, சூரியன், 

அம்பாள் தையல்நாயகியாகவழிபட்ட இடம். செவ்வாய் கிரகம் அமைந்துள்ள ஸ்தலம்.  முதலில் செவ்வாயை வணங்கிய பின்னர், வைத்தீஸ்வரன் வணங்க வேண்டும். மேலும் 4448 வியாதிகளுக்கு இறைவன் வைத்தியம் பார்த்ததாக வரலாறு. நவகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்👍

பிரஜாபதி க்கும் (வஷிஸ்டரின் மகன்) -திலோத்தமைக்கும் பிறந்த குழந்தை செவ்வாய் கிரகம்.  செவ்வாய் தோசத்துகு பரிகாரம் செய்ய ஏற்ற ஸ்தலம் இது 🙏

 இந்த கோவிலின் நிர்வாகம், தருமபுரம் ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது 🙏


இங்கு தரிசனம் முடிந்ததும், மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்கான செலவினைனையும்,பேருந்தில் உடன் பயணித்தவர்களே ஸ்பான்சர் முறையில் ஏற்றுக்கொள்வதால்தால்,  உணவுக்கான செலவீனம் தவிர்க்கப்படுகிறது🙏


7) புதன் ஸ்தலம் - ஸ்வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் -   திருவெண்காடு...  

நவகிரக கோவில்களில் பெரிய கோவில் இந்த புதன் ஸ்தலம்... 

பட்டினத்தார் தீக்ஷை பெற்ற இடம் இது. 

3 மூர்த்தி யாக, 3 அம்பாளக, தீர்த்தம் 3 இங்கு சிறப்பு.... 

பிள்ளை இடுக்கி அம்மன் இங்கு சிறப்பு... சம்பந்தர்க்கு அம்பாள் பால் ஊட்டியதாக வரலாறு...

குழந்தை பாக்கியம் பெற திருவெண்காடு சிறந்த ஸ்தலம்- இது திருஞானசம்பந்தர் வாக்கு... அகோர மூர்த்தியாக இறைவன் அருள் பாலிக்கிறார்... அம்பாள் இங்கு பிரம்ம வித்யாம்பாள் என வணங்கப்படுகிறார்..

புதன் என்பவர், சந்திரனின் பிள்ளை..


8) கேது ஸ்தலம் - ஸ்ரீ நாகநாத ஸ்வாமி திருக்கோயில் - கீழப்பெரும்பள்ளம்... 

 கேது வின் சிறப்பு, இவர் ஞானம் கொண்ட பகவான். அறிவு விருத்தியடையும். 

அம்பாள் இங்கு சௌந்தர்யா நாயகியாக உள்ளார்🙏


9) சனி பகவான் - திருநள்ளாறு (பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்டது) 

சூரியனின்-சாயாதேவியின் மகன் சனி பகவான்.  சிவனை சனீஸ்வரன் பிடிக்க முயலும் போது, பிரம்மன் முன்கூட்டியே இந்த தகவலை, சிவனுக்கு தெரிவிக்க, சிவன் 71/2 ஆண்டுகள், குகையில் தவம் செய்து விட்டு வெளியேவந்து, சனியிடம், நீ என்னை பிடிக்கவில்லை எனும் போது, நீங்கள் குகை க்கு போகும்போதே நான் பிடித்து விட்டேன், அதனால் தான் நீங்கள் ஏழறை ஆண்டுகள் குகையில் இருந்தீர்கள் என்று சொல்ல, சிவன் மகிழ்ந்து சனீஸ்வரன் என பட்டம் தரல்.  சனி பிடிக்காத 2 பேர் 1) விநாயகர் (இன்று போய் நாளைவா கதை), 2) ஆஞ்சநேயர்... 

தினமும் மதியம் உணவு உண்ணும் முன் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிட்டால், சனி பகவான் யாருக்கும் தொந்தரவு தருவதில்லை.... 

சிவன் இங்கு தர்ப்பணேஸ்வர்என்ற பெயரில் குடி கொண்டுள்ளார்... 

சனீஸ்வரன் ன் குரு காலபைரவர் ஆவார்👍


சனி பகவானை வழிபட்ட பின்பு டீ/காபி சாப்பிட 10 நிமிடம் பேருந்து நிற்கும்... 

இரவு 8.00 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து சேரலாம். 


மொத்தத்தில் 9 நவகிரகம் தெய்வங்களை சிறப்பாக ஒரே நாளில் திருப்தியாக, அவசர மின்றி தரிசனம் செய்து வரலாம். 


மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பான முயற்சியும், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வழிநடத்தலும், குறைந்த செலவில் அனைத்து நவகிரகம் தெய்வங்களையும் ஒரே நாளில், எந்த சிறமம் இன்றி சிறப்பாக தரிசனம் செய்துவிட்டு வர முடிகிறது👍🤝

Tuesday, January 20, 2026

நன்றி சொல்வோம்..


இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்*. ❤️🤩


பாத்து செஞ்ச  நம்ம உடம்பு ஒரு லாஜிக்!


டயரு தேயுது ரோட்டுல... ஆனா,

நம்ம பாதம் இரண்டு பாருங்க 

நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை.. 😂

செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,

ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!😂


உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,

ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்

அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!😂


நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,

ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்

ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!😂


லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!

நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும். 

 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும் 😂


நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,

சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது

சப்பு கொட்டி சண்டை போடும் 😂

 

எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!


படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!


மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,

நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த

ஆயிலும் தேவையில்ல, 

on off  எதுவும் தேவையில்ல!

தொடர் ஓட்ட சாதனை புரியும்!


சென்சார் இல்லாமலே தோலு உணருது,

கொசு கடிச்சா – கை

சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது👏


எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!

ஆனா பொண்டாட்டி கூப்பிட்டா மட்டும் – அது

ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!😂


எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!

இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை👌


பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா 👍


படைச்ச இறைவனுக்கு

நன்றி சொல்லி 

பத்திரமா பாத்துக்குவோம் 🙏           படித்ததில் பிடித்தது 


தினமும் காலையில

எழுவது கூட எவ்வளவு 

பெரிய மிராக்கிள் 🙏


 எல்லா படைப்பையும்

பார்த்து வியப்போம்!

பக்குவமா நடப்போம்!!

நன்றி 🙏🏼🤩

Saturday, January 17, 2026

காலத்தை வென்றவரை...

 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான்,
 தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை  நம்முள்
விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை
காவியமானவரை
இந்த நூற்றாண்டுப்   பிறந்த நாளில்
 நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்திப் பெருமிதம் கொள்வோம்

Wednesday, January 14, 2026

படித்ததில் பிடித்தது

 *மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!*


ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..


இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..


தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..


அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..

ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.


ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..


மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..


இங்கு வெள்ளையன் 

வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.


வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...


 வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..


தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...


 புகையிலையும் அப்படி வந்ததே.


இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.


 உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.


வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான், 

வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.


கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.


கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.


தேங்காய் இருந்த 

இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌


மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.


நோய்கள் பெருகின..


ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...


 ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட் 

இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..


ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..


அத்தோடு விட்டானா?


அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.


 விளைவு..?


தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...


சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.


 சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...


ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..


நோய் பெருகிற்று....


அதாவது சூடான பூமியில் சூடு 

கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...


வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசிக் கஞ்சியும், பதநீரும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?


குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.


உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..


இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..


எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.


இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...


பரிதாபம்.


காரணம்,  அவற்றுக்கு உண்மையான 

பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....


அவை என்ன செய்யும்?


எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...


 ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!


நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார் 

நிலையங்கள் எப்படி இருக்கும்?


எதையோ தின்று 

எதையோ குடித்து, 

எதையோ புகைத்து, எதையோ மென்று 

இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்


எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..


ஆப்ரிக்காவிலும் 

அரேபியாவிலும் காப்பி இருந்தது..


தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. 


பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!


புரிகிறதா...?


இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..


பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,

இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 


 காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..


அவை இன்றியும் வாழமுடியும்...


அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.


 பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 


விஷம் அவை..


இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது


ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை  ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 

காணலாம்..


தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..


துளசி போல் அருமருந்தில்லை..


அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.


தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..


தேர்களில் தெய்வங்களுக்கு 

வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.


உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...


அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி 

இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.


அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.


சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..


அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் 

நோய்க்கு இடம் கொடா...


மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..


இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..


அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..


கருத்தரிப்பு சிக்கல் 

சிசேரியன் என மறுபுறம்.


 மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..


பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..


அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...  மாறாக அதெல்லாம் பழமை என 

ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..


அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது


 இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..


அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...


நாம் பாரம்பரியத்தை 

மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது... 

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..


ஆம். 


மாறாக,  கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் 

ஆகபோவது ஒன்றுமில்லை...


நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..


 அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...


 பழங்களை சாப்பிடும் முன்....

    🍌 வாழைப்பழம் நீங்கலாக, எந்தப் பழத்தையும் சாப்பிடுவதற்கு முன்னர் உப்புத் தண்ணீர்+ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து,ஒரு மணி நேரமாவது ஊறவைத்து, பின்னர் சாதாரண தண்ணீரில் நன்றாகக் கழுவி உண்ண வேண்டும். இப்படி செய்வது பழத்தின் மேற்புறத்தில் உள்ள பூச்சிக்கொல்லி படிமங்களை நீக்கிவிடும். உடல் நலம் காக்கும் ரகசியம் இதுதான். *By சிவராமன் படித்ததில் பயனுள்ளது.