Tuesday, June 4, 2019

தமிழ்நாட்டில் இந்தி

சிறு வயதில் நீச்சல் கற்றுக் கொள்வது எளிது.அப்படியே சைக்கிள் கற்றுக் கொள்வதும்...அந்தப் பருவத்தில் கற்றுக் கொள்ளாது பெரியவர்கள் ஆனதும் அதனைக் கற்றுக் கொள்ள அதிகம் மெனக்கெட்டவர்களையும் அல்லது கற்றுக் கொள்ள இயலாதே போனவர்களையும் அதற்காக வருத்தப்படுபவர்களையும் எனக்கு அதிகம் தெரியும். நாம் கடலையா /ஆற்றையா கடக்கப்  போகிறோம் அப்படி கடக்க வேண்டி இருந்தாலும் படகு இருக்கிறது கப்பல் இருக்கிறது எனச் சொல்வது இப்போது புத்திசாலித்தனமாக ஏன் பகுத்தறிவுடன் பேசுவதுப் போலப் படலாம். ஆனால் அழகிய ஏரியைக் கண்டதும்  சட்டென இறங்கி நீந்தத் துவங்கும் நண்பனைக் கண்டதும் ஏற்படும் ஒரு விரக்தி/ சைக்கிள் ஓட்டத் தெரியாதா அப்போது பைக் பழகுவது கடினமாக  இருக்கும் என பயிற்சியாளர் சொல்லத் தோன்றும் சங்கடம் அனுபவித்தால்தான் தெரியும்     அந்த வகையில் பள்ளி நாட்களில் விளையாட்டுத்தனமாக வேறு ஒரு  மொழியைக் கற்றுக் கொள்வது நிச்சயம் பின்னாளில் அதிகம் பயனுள்ளதாகவே இருக்கும்..அது சரி கற்றுக் கொள்வோம் அதற்கு ஏன் இந்தி..உலகத்திற்கான பொது மொழி ஆங்கிலம் என்பது போல் (வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) இந்தியாவுக்கான பொது மொழியாக இந்தி இருக்கவே சாத்தியம்.(வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) சிறுவயதில் ஒழுக்கத்தை கட்டாயப்படுத்தித்தான் கற்றுத் தரவேண்டும்.இங்கு இஷ்டப்பட்டால் என்கிற வாதம் சரிப்படாது.அப்படித்தான் வாழ்வுக்கு பயனுள்ளதையும்..தங்கள் தொழில் சார்ந்து பள்ளியில் ஹிந்தி அவசியம் என கட்டாயப்படுத்துகிற பகுத்தறிவுப் பாசாங்கிகள் வெளிஉலகில் அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்ற மாய்மாலங்களில் மயங்கிடாது பொறுப்பான தந்தையாக தாயாகச் சிந்தித்தால் இதிலுள்ள நியாயம் புரியும்..                                                          .(நானும் இந்தி போராட்டத்தில் கலந்து கொண்டவன் தான், ஆனால் இன்றுஅது முட்டாள்தனமாக தோன்றுகிறது தவறுசெய்து விட்டோம்-சாலமன் பாப்பையா! )