Thursday, April 30, 2020

மரபுக் கவி படைக்க சுருக்கு வழி

விளம"தும் "மா "வும் தேமா
முறைப்படி அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
உடனடி யாக உன்னால்
இயற்றிடக் கூடு மாயின்
கவியென ஏற்பேன் " என்றான்
வலதுகை போன்றே நாளும்
என்னுடன் உலவும் நண்பன்

"இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும் "
முதல்வரி இதுவாய்க் கொண்டு
முத்தெனத் தொடரும் அந்தச்
சுதந்திரத் தேவிப் பாடல்
சந்தமென் நினைவில் ஊற
பதட்டமே சிறிது மின்றி
பகிர்ந்தேன் இந்தப் பாடல்

"சிந்தனை செய்ய வேணும்
சிலநொடி நேரம் வேண்டும் "
என்றுநான் சொல்வே னென்ற
நினைப்பினில் இருந்த நண்பன்
மந்திரம் சொல்லல் போல
நிமிடமாய்ச் சொல்லக் கேட்டு
வந்தெனைக் கட்டிக் கொண்டு
வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டான்

எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்
பக்குவம் இதனை யாரும்
பழகினால் மட்டும் போதும்
நிச்சயம் நொடியில் யாரும்
கவிஞராய் மாறக்  கூடும்

Tuesday, April 28, 2020

நம்பிக்கையூட்டும் செய்தி...

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை:
ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய தொற்றுகள் குறைந்து வரும் நிலையில், இதேநிலையை தக்கவைத்துக் கொள்வது தான் தமிழகத்தின் முதன்மைக் கடமையாகும்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஏற்பட்ட புதிய தொற்றுகளில் 47 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது கவலையளிக்கும் விஷயம் தான் என்றாலும் கூட, அவர்களைத் தவிர ஒட்டுமொத்த தமிழகத்திலும் 5 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் கூட 4 பேர் மதுரையையும், ஒரு குழந்தை விழுப்புரத்தையும் சேர்ந்தவர்கள் எனும் நிலையில், மீதமுள்ள 35 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்று ஏற்படவில்லை என்பது உண்மையாகவே தமிழக மக்கள் அனைவருக்கும் நிம்மதியை அளித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாகவே கட்டுக்குள் இருப்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரி கொரோனாவின் பிடியிலிருந்து  கிட்டத்தட்ட விடுவிக்கப்பட்டு விட்டது என்று கூறும் அளவுக்கு அந்த மாவட்டத்தில் கடந்த 19 நாட்களாக புதிய தொற்றுகள் ஏற்படவில்லை. அதேபோல் வட எல்லையில் இராணிப்பேட்டை மாவட்டத்திலும், தெற்கு எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 14 நாட்களாக புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் 13 நாட்களாகவும், கரூர், தேனி மாவட்டங்களில் 11 நாட்களாகவும், வேலூர் மாவட்டத்தில் 10 நாட்களாகவும் புதிய தொற்றுகள் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 8 நாட்களாகவும், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 5 நாட்களாகவும், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 4 நாட்களாகவும் கொரோனா வைரஸ் யாரையும் புதிதாக தாக்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக யாரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை. இவை தவிர கிருஷ்ணகிரி மாவட்டம் தொடக்கம் முதலே கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படாத ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொருபுறம் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1937 பேரில் இதுவரை 1101 பேர், அதாவது 57 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 809 பேர் மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவர்களை விட அதிகமானவர்கள் குணமடைந்திருப்பது  கொரோனா நோய் பரவலைத் தடுப்பதில் நாம் வெற்றிக்கோட்டை நெருங்குகிறோம் என்பதைக் காட்டுகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதல், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் கடுமையான உழைப்பு, காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் உதவி, இவர்களுக்கெல்லாம் மேலாக பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகியவை இல்லாமல் இத்தகைய முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது. ஊரடங்கு ஆணையை தமிழக மக்கள் மதித்து நடந்ததற்கு கிடைத்த பரிசு தான் இதுவாகும்.

கொரோனா பரவல் தடுப்பில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம் என்றாலும் கூட, முழுமையான வெற்றியை அடைந்து விடவில்லை. அதற்கு இதே கட்டுப்பாட்டுடன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். கடந்த சில வாரங்களில் நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, அடுத்த சில வாரங்களில் கொரோனா அச்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்கி விட முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஊடரங்கு ஆணை  மற்றும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை நாம் எவ்வளவு கடுமையாக கடைபிடித்து வந்தோமோ, அதை விட மும்மடங்கு கூடுதலாக கடைபிடிப்பதன் மூலம் கொரோனாவை விரட்டியடிக்க முடியும்.

சென்னையைப் பொறுத்தவரை நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும் கூட, அதை எண்ணி அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தியாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது, அவற்றை விட மிக அதிகமாக சென்னையில் 10 லட்சம் பேருக்கு 3100 சோதனைகள் என்ற அளவில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது. அடுத்து வரும் நாட்களில் இன்னும் கூடுதலான சோதனைகளை மேற்கொண்டு  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம் சென்னையிலும் கொரோனா வைரசை வீழ்த்தி விட முடியும். ஆகவே, கொரோனாவை ஒழிப்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா ஒழிப்பு போரில் வெற்றி விரைவில் சாத்தியமாகும்.
பா ம க நிறுவனர் மரு.ராமதாஸ் அறிக்கை
#SocialDistancing #LockDown #StayHomeStaySafeSavelives

Sunday, April 26, 2020

இது புலிவால்...

இது எனக்கு வாட்ஸ்அப்ல வந்தது
உண்மையா தெரியவில்லை
தோழமைகளின் கருத்துக்களை எதிர்நோக்கி

கொரொனாவை விட கொடூரமானது ஆன்லைன் ரம்மி.

ஊரடங்கு முடியும் பொழுது பலரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் ரம்மி கொண்டு போய்விடும். பொதுமக்கள் போண்டி ஆகிவிடுவார்கள் - அது இந்திய மக்களின் வாழ்வை கடுமையாக பாதிக்கும்

இந்தியா சட்டப்படி பணம் வைத்து சீட்டு விளையாடுவது தண்டனைகுரிய குற்றமாகும் மேல்தட்டு மக்களின் கிளப்புகள் - மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து விளையாடுவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான்

இப்போது சமூக வலைத்தளங்களில் எங்கு நோக்கினும் ஆன்லைன் ரம்மி விளையாட அழைக்கும் விளம்பரங்கள் இவ்விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் இடுவது கூகுள் நிறுவனம் தான் என்பது கொடுமையிலும் கொடுமை

சுந்தர் பிச்சையின் கேரியரில் இது ஒரு கரும்புள்ளி பிச்சை பொதுமக்களை பிச்சை எடுக்க வைக்கப் போகிறார். ன்லைனில் எப்படி பணம் பறிபோகிறது

ஆன்லைனில் விளையாட உங்கள் வங்கி கணக்கிலிருந்து தான் நெட்பேங்கின் மூலம் தான் பணம் செலுத்த வேண்டும் நீங்கள் உடனே ரம்மி விளையாடுங்கள் உங்களுக்கு உடனடி போன்ஸ் 50 ரூபாய் என்று துண்டில் இடுவார்கள்

விளையாட ஆரம்பித்தவுடன் உங்களுக்கு 50 ரூபாய் போனஸ் கிடைத்துள்ளது என்று ஒரு மெஜெஜ் வரும் நீங்கள் உங்கள் வங்கி கணக்கு விபரத்தை அனுப்புவீர்கள்

அப்போதே உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்பதை ஒரு "சிறப்பு சாப்ட்வேர்" மூலமாக ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம் அறிந்து கொள்ளும்

உங்கள் அக்கவுண்டில் 1 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விளையாட ஆரம்பித்தவுடன் 1000,5000..10,000 ரூபாய் என உங்களுக்கு கிடைக்கும்படி செய்வார்கள்

நீங்கள் ரம்மி விளையாட்டில் கில்லி என நினைத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடுவீர்கள் அப்போதுதான் ஆபத்து ஆரம்பிக்கும்.. நீங்கள் எவ்வளவு திறமையாக விளையாடினாலும்..தோற்றுக் கொண்டே இருப்பீர்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் போய்விடும்

இதுதான் இன்றைய நிலைமை ஆன்லைன் ரம்மியின் ஆபத்து குறித்தும்..அது இந்தியாவில் சட்ட விரோதம் அதை தடை செய்ய வேண்டும் எனவும் நான் பலமுறை பதிவுகள் இட்டுள்ளேன்

பாமகா நிறுவனர் ராமதாஸ் மட்டும் ஆன்லைன் ரம்மியால் விளையும் ஆபத்து குறித்து கூறி..அதனை தடை செய்ய வேண்டும் என அறிக்கை கொடுத்தார் அச்சு ஊடகங்களும்.. காட்சி ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை

மத்திய..மாநில அரசுகளும் ஆன்லைன் ரம்மியால் விளையப்போகும் ஆபத்து குறித்து உணரவில்லை தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

ஊரடங்கு முடியும் பொழுது பொதுமக்கள் ஆன்லைன் ரம்மியால் போண்டி ஆகிவிடுவார்கள் எனவே,சமூக அக்கறையோடு.. ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரியும் அதன் ஆபத்து குறித்து அச்சு ஊடகங்களும்.. காட்சி ஊடகங்களும் செய்தி வெளியிட வேண்டும்

அரசியல் காட்சிகள்,அமைப்புகள்,இயக்கங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி மத்திய மாநில அரசுகளை வழியுறுத்த வேண்டும் மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மியை இந்தியாவில் தடை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்

கொரோனாவை விட கொடியது ஆன்லைன் ரம்மி அது இந்தியாவில்.. தமிழகத்தில் பல வீடுகளுக்குள் நுழைந்து விட்டது. தடைசெய்..தடைசெய் ஆன்லைன் ரம்மி எனும் சீட்டு விளையாட்டை தடை செய்  ...இது புலிவால் பிடித்துவிடவேண்டாம்..

இருளில் ஒளிக்கீற்றாய்...

எச்.டி.எஃப்.சி வங்கி நிர்வாக இயக்குனர் திரு ஆதித்யா பூரியை நேர்காணல் செய்த போது, இந்தியா கொரானா சிக்கலில் இருந்து விடுபட்டு, இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, எப்படி மாற்றி கொள்ளும் என்பது பற்றி கூறி இருக்கிறார் *

திரு.ஆதித்யா பூரி இந்திய பொருளாதாரத்தில் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர்.

அவரின் நேர்காணலில் இருந்து முக்கிய சில விஷயங்கள்:

1. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம் தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. அது
வலுவாக தான் இருக்கிறது.

2. இந்தியா, இளைஞர்களின் தேசமாக இருப்பதால், மற்ற ஐரோப்ப நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த கொரோனாவின் ஆரோக்கிய பாதிப்பு, இந்தியாவில் மிக குறைவாகவே இருக்கிறது.

3. வணிகர்கள் மற்றும் சிறு கடைகள் வைத்திருப்பவர்களுக்கு, அந்நியரிடம் அதிகமான கடன்கள் இருக்காது. எனவே கடைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன்,  மீண்டும் வலுவாகி விடும்.

4. எண்ணெய் விலை வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் பிற செலவுகளை வெகுவாக குறைக்கும்.

5. நம் நாட்டின் உள் நுகர்வு அதாவது உள்நாட்டு தேவை மிக வலுவானது, அதிகமானது.

6. இந்தியாவை 14 நாட்கள் அல்லது 28 நாட்கள் என மேலும் சில நாட்கள் ஊரடங்கில் வைத்திருந்தால் கூட, அது ஒரு பெரிய விஷயமே அல்ல.

7. இந்தியாவை சில நாட்கள் ஊரடங்கில் வைத்திருந்தால், பங்குச்சந்தை சரிந்து, முக்கியமாக தானியங்கி வழிமுறைகள் காரணமாக பங்கு விற்பனையை கட்டாய படுத்துகின்றன. ஆனால் இதில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

8. வீட்டிலிருந்து வேலை செய்வது, நிறுவனங்களுக்கான அனைத்து செலவுகளையும் குறைக்கிறது. இது இறுதியில் கம்பெனிக்கு இலாபத்தை அதிகரிக்கும்.

இந்த இருண்ட நாட்களால், சில முக்கிய நிகழ்வுகள், இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

1. ஜூன் மாதத்திற்குள், இந்த தொற்றுநோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட முதல் நாடு இந்தியாவாக இருக்கும்.

2. ஊரடங்கு, வெப்பமான வானிலை மற்றும் நமக்கு இருக்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நம்மை விரைவில் இந்த சிக்கலில் இருந்து விடுபட வைக்கும்.

3. நாம் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்பவர்களாக இருப்போம். மேலும் பி.சி.ஜி தடுப்பூசிகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஹைட்ராக்ஸி குளோரோக்வினின் போன்றவற்றை நம்மிடம் வழக்கமாக வாங்குவதற்கு உலகம் தயாராக இருக்கும்.

4. இதுவரை சீனாவுக்கு முன்னுரிமை கொடுத்து வந்த, உலகெங்கிலும் உள்ள பல நாட்டு நிறுவனங்கள், சீனாவை ஒதிக்கி, இனி இந்தியாவில் உற்பத்தி வசதிகளை மேற்கொள்வார்கள்.

100 அமெரிக்கா மற்றும் 200 ஜப்பானிய கம்பெனிகள் ஏற்கனவே சீனாவை விட்டு கிட்டத்தட்ட வெளியேறுகிறார்கள்.

மொபைல் போன்கள் முதல் மருந்துகள் வரை ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா மாறும்.

இந்திய மக்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், திறமையானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள் என இதுவரை மதிப்பிடப்பட்டவர்கள் என்பதை, உலகின் மிக பெரிய மற்றும் சிறந்த பிராண்ட் கம்பெனிகள் இனி உணரும்.

5. வேலை வாய்ப்பு இந்தியாவில் பெருகும்.

6. நமது சைவ உணவு வகைகள் மற்றும் நமது கலாச்சாரத்தை உலக நாடுகளால் மேலும் மேலும் இனி பாராட்டப்படும்.

7. உலகெங்கிலும் உள்ள இந்திய துணைத் தூதரகங்களுக்கு முன்பாக மக்கள் வரிசையில் நிற்பார்கள்.

இந்தியாவுக்கு வருவதற்கான விசாக்கள், சோதனைக்குப் பிறகு 3 வார இடைவெளிக்கு பிறகு வழங்கப்படும்.

சுற்றுலா, ஆரோக்கியம் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றிற்காக மக்கள் இனி இங்கு வருவார்கள்.

8. இந்தியாவில், குறைந்த செலவிலான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பது மற்றும் விரைவாக குணமாவது ஆகியவற்றால் உலக அளவில் பாராட்டப்படும்.

9. இந்திய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் மிகவும் பிரபலமாகிவிடும். யோகா மற்றும் பிராணயம் ஆசிரியர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். ஆப்டெரால், ஃபைப்ரோஸிஸுக்கு சிறந்த தீர்வு, நுரையீரலுக்கு உடற்பயிற்சி செய்வது.

10. வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த, சிறந்த மூளை கொண்ட இந்தியர்கள், தங்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான சொந்த நாட்டிற்கு திரும்புவதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களின் சம்பளமும் எதிர் பார்க்கும் அளவில் அவர்களுக்கு கிடைக்கும். ஏனெனில் மேக் இன் இந்தியா உற்பத்தி அதிகரிப்பதன் மூலம், மிக சுலபமாகவே கிடைக்கும்.

11. 2020 உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். அது இந்தியாவுக்கு முழுவதுமாக சாதகமாக இருக்கும்.

மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையாக தோன்றலாம்
ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு தங்க பறவையாக - இந்தியாவை பார்ப்போம்.

ஆங்கிலத்தில் வந்த பதிவு......

இவர் கூறி இருப்பது சற்று ஆறுதலாக..நம்பிக்கையாக இருக்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை...(வாட்ஸ் அப்பில் கிடைத்தது..)

👍👍👍.....🙋‍♂️ BE POSITIVE

Wednesday, April 22, 2020

கடும் பயிற்சியில் வார்த்தைகள்...

.கவிதைத் தேர்வுக்குத்தன்னைத்
தயார்செய்துகொள்ளும்படியான
கடும் பயிற்சியிலிருக்கின்றன
வார்த்தைகள் அனைத்தும்

நாணலினும்
இன்னும் நெகிழ்வாய்

கூரிய வாளினும்
இன்னும் கூர்மையாய்

மலர் இதழ்களினும்
இன்னும் மென்மையாய்

குளிர் நிலவினும்
இன்னும் தண்மையாய்

தேக்கு மரம் போல்
மிக்க உறுதியாய்

மொத்தத்தில்
கவிஞனின் எந்த மன நிலைக்கும்

கவிதைக்குள் கிடைக்கும்
எந்தச் சிறு இடைவெளியிலும்

மிகச் சரியாய்த்
தன்னைப் பொருத்திக்கொள்ளும்படியாய்..

கடும் பயிற்சியிலிருக்கின்றன
தமிழ் வார்த்தைகள் அனைத்தும்

வள்ளுவனின் விழிபட்ட
கம்பனின் கைத்தொட்ட
வள்ளலாரின் கருணைப்பெற்ற
பாரதியின் நாவு நவின்ற
அவன் தாசனால் எழுச்சிப் பெற்ற
வார்த்தைகள் போல்

காலம் எத்தனைக் கடந்தும்
மலர்ந்து மணம் வீசும்
புத்தம் புது மலராய்
மணக்க வேண்டுமெனில்

மாற்றங்கள் எத்தனை நேரினும்
மதிப்பில் உயர்ந்தே நிற்கும்
முத்தாய்ப் பவளமாய்ப் தங்கமாய்
ஜொலிக்க வேண்டுமெனில்

கவிஞனின் கருணைப் பார்வையில்
படும் படியாய்
அவன் கவிதைக்குள் பொருத்தமாய்
விழும் படியாய்
அதற்குரிய தகுதிகள் அனைத்தும்
பெறும் படியாய்
இருந்தால் மட்டுமே சாத்தியமென
உணர்ந்த படியால்

கடும் பயிற்சியிலும்
தொடர் முயற்சிலும்
இருக்கின்றன
அழகுத் தமிழ் வார்த்தைகள்

வார்த்தைகளின்
அசுர பலமறியாது
உயர் நிலையறியாது
அதை உமிழ்ந்துச்  செல்வோரே
சற்று விலகியே செல்லுங்கள்

ஆம் தவமனைய
அதன்கடும் பயிற்சிக்கு
அதன் பெரும் முயற்சிக்கு
பங்கம் வந்துவிடாது

மௌனமாய்   ......
ஆம்
மௌனமாய்
முடிந்தால்ஆசிர்வதிச்சு மட்டும் செல்லுங்கள்


Sunday, April 19, 2020

எங்களைக் குறை கூ றி அலையாதீர்கள்..

எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

கொஞ்சம் தூரமாயினும்
அமருமிடமும்
பறிமாறும் நேர்த்தியும்
திருப்திப்படவில்லையாயினும்
கைப்பக்குவமும் ருசியும்
சரியாயிருந்தால் சரி
என்ற காலம் போய்.....

ருசி கொஞ்சம்
முன்பின்னாயினும்
ஹோட்டல் இருப்பிடமும்
கார் பார்க் வசதியும்
பரிமாறும் நேர்த்தியும்
சரியாய் இருந்தால்தான்
திருப்திப்படுகிறது என்பதால்

வசதியற்றவனாயினும்
நேர்மையானவனாக
எளிமையானவனாக
கூப்பிட்ட குரலுக்கு
உடன் வருபவனாக
இருந்தால் போதும்
என்ற காலம் போய்.....

ஜெயித்தப்பின்
காணாமல் போகிறவனாயினும்
கிரிமினல் குற்றவாளியாயினும்
தேர்தல் சமயத்தில்
கொடுப்பவருள்
கூடுதலாய் கொடுப்பவனாய் இருந்தால்
சரியானவனாய்ப் படுகிறது என்பதால்

ஒப்பனைகளாயினும்
அழகுக் கடங்கியும்
பாவனைகளாயினும்
அறிவுக் கடங்கியும்
அளவுகோள்கள்
நெகிழும் தனமையற்றும்
இருந்த.காலம் போய்...

அழகென்பதே
ஒப்பனைகளாய்
அறிவென்பதே
பாவனைகளாய்
நெகிழத் தக்கதே
அளவுகோள்களாய் இருந்தால்தான்
சந்தைப்படுத்த முடிகிறது என்பதால்

சொல்லத் தக்கதை
பயனுள்ளதை
எளிமையாய்
மிக உறுதியாய்
சொல்வதென்பதே
மதிக்கத் தக்கதென
இருந்தகாலம் போய்...

பொய்யாயினும்
சுவாரஸ்யமாய்
பயனற்றதாயினும்
நேரங்கடத்தியாய்
இருக்கத் தகுந்ததே
மதிக்கத் தகுந்ததாய்
வியாபாரமாகிறது என்பதால்...

இது சரியானது
இதற்கானது எது என்பது போய் ...
எனக்கிது சரி
இதற்கானது எது
என்பதுவே
இன்றைய   சூழலின்
தர்மமாகிப் போனதால்

எப்போதும்,
இனியேனும்
எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள்
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

Thursday, April 16, 2020

ஏன் வீட்டுக்குள் முடங்க வேண்டும்..?

*நான் Dr.P.மணி.நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன் என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என கேட்டனர். எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கம் ........ முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் வைரஸ். ஒரு ஆர்என்ஏ(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறை (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கறைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே. இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.இந்த வைரஸ் மூக்கு, வாய் அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் தொண்டப் பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system) மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள் அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.* *இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட. நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.* *முதலாவது அந்த நுண்ணியிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணியிரின் உருவம்.* *இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.* *ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று Innate lymphoid cells. இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான் இதன் வேலை.அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள். இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.* *இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க...* *தொண்டைப்பகுதியை அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை. நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும். இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். இன்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.* *அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து, பல்கிப் பெருகும். 10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.* *மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான். ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.* *இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை. இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.* *ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது. உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.* *நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது. அதே போல இதயக் கோளாறு, பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் போதி சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட. ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான்* *நல்ல செய்தி.கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா?* *தெரியவில்லை.* *35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.* *ஆனால், கொரோனா மாதிரி எச்ஐவி இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.* *அதற்குத் தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள்.* *இன்னும் மருந்து இல்லாத நிலையில், இந்த நோயில் இருந்து தப்பிப்பதே உசிதம்.இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!*......வாட்ஸ் அப்பில் கிடைத்தது..

கவிமூலம்

சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா ?

இனிய நினைவு உன்னில் பெருக
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா ?

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா ?

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-நீயும் 
அந்த  ராமா னுஜனைப் போல
உரத்துக்  கதற மாட்டியா ?

விதையாய் கவிதை அனவரி டத்தும்
நிறைந்து தானே  கிடக்கு
விரைந்து வெளியே  விளைந்து வரவே
தவித்துத் தானே  கிடக்கு
முறையாய் இதனைப்  புரிந்து  கொண்டால்
மட்டும்  போதும் போதுமே--உன்னுள் 
நிறைவாய்க்  கவிதை நூறு  கோடி
தானாய்ப்  பெருகிக் கொட்டுமே  ! 

Tuesday, April 14, 2020

சில கட்டாய விதிகள்..

*அடுத்த 17 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி!*

*ஒரே நபர் கொள்கை:* அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே போகும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்... வீட்டின் ஒவ்வொரு தேவையின்போதும் அவர் ஒருவரே வெளியே செல்ல வேண்டும். மற்றவர்களை அவர் உடன் அழைத்துச் செல்வதையோ, அவருக்குப் பதிலாக மற்றவர்கள் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

*ஒரே ஆடை:* அப்படி வெளியே செல்லும் நபர், ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் ஒரே ஆடையை அணிவதை வழக்கமாகக் கொள்ளலாம். அது முழுமையான ஆடையாக இருக்க வேண்டும். இந்த ஆடைகளை மற்ற ஆடைகளுடன் கலந்துவிட வேண்டாம்.

*ஒரே வாலெட்:* வெளியே செல்லும் நபர், ஒரே வாலெட்டைப் பயன்படுத்த வேண்டும். அதில் இருக்கும் பணம், மீதி சில்லறை போன்றவற்றை வீட்டில் இருக்கும் மற்ற பணம், மற்றும் சில்லறைகளுடன் கலந்துவிடக்கூடாது!

*ஒரே பை:* ஒவ்வொரு முறை கடைகளுக்குச் செல்லும்போதும் ஒரே பையை எடுத்து செல்லலாம். வீட்டுக்கு வந்த பின்னர் அந்தப் பையை தனியே வைத்துவிடலாம். வீட்டுக்கு வெளியே வைப்பதற்கு வாய்ப்பு இருந்தால், அங்கேயே வைத்துவிடுவது நல்லது!

*ஒரே வாகனம்:* இன்று பல வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் சூழல் இருக்கிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் வாகனங்களில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்பவர்கள், ஒரே வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்

*ஒரே `ஒருமுறை’:* அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்லலாம் என்பதால், ஒவ்வொன்றுக்காகச் செல்லாமல், முறையான திட்டமிடுதலுடன் ஒரே ஒருமுறை மட்டும் வெளியே சென்று வரலாம். அந்த ஒரே பயணத்தில், அனைத்து விதமான பணிகளையும் செய்து முடிக்கும்படி செய்யலாம்!

வெளியே செல்பவர்கள் மொபைல் போனை எடுத்துச் செல்ல வேண்டாம். ஒருவேளை எடுத்துச் சென்றாலும், வெளியே அதைப் பயன்படுத்த வேண்டாம்.

நாம் அதிகம் பயன்படுத்தாத கை அல்லது கை முட்டி கொண்டு கதவுகளைத் திறப்பது, பொத்தான்களை அழுத்துவது போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. அந்த கையைக்கொண்டு நம் முகத்தைத் தொடுவதற்கான வாய்ப்பு குறைவு... இதனால் பாதிப்பை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.

வெளியே செல்லும்போது, அத்தியாவசியம் என்றாலும்கூட கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். விரைவாகப் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிட வேண்டும்.

*வீட்டுக்கு வந்ததும் செய்ய வேண்டியது:* வெளியே செல்ல பயன்படுத்தப்பட்ட ஆடை, பை, சாவி, வாலெட் முதலிய பொருள்களைத் தனியாக வைக்க வேண்டும். கட்டாயம் மற்ற பொருள்களுடன் கலக்கக் கூடாது. வீட்டில் எந்தப் பொருளையும் தொடுவதற்கு முன்பாக கை மற்றும் முகத்தை நன்றாகக் கழுவிவிட வேண்டும். முன்னரே சொன்னது போல், வெளியே செல்லும்போது மொபைல் போனை தவிர்ப்பது நல்லது. மீறி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால், அதை வீட்டுக்கு வந்ததும் சானிடைஸரால் துடைத்துவிட்டுப் பயன்படுத்துவது சிறந்தது.

நன்றி: *விகடன்.*

🌹🌹🌹🌹🌹🌹🌹
பகிர்வதில்
மகிழ்ச்சி.
🌹🌹🌹🌹🌹🌹🌹

நம் நாடே வழிகாட்டி ஆகும்

நித்தம்
உடல்தேடி அலையுதுங்க கொரோனா..நம்ம
ஊரெல்லாம் உலகெல்லாம கொரோனா..அதுக்கு
உடலேதும் கிடைக்காது போனா...அதுவா
உடனழிஞ்சு போகுமுங்க நெஜமா..

அதுக்கு
பணக்காரன் ஏழையென்ற கணக்கோ..பெரும்
முதலாளி தொழிலாளி நெனைப்போ..உசந்த
இனமென்ற  மதமென்ற பிரிப்போ....எதுவும்
இல்லாததே கொரோனாவின் சிறப்பே
                                                                     
நோயாளி
மூனடிக்குள் இருந்தாலே போதும்...முகத்தை
மறைக்காது தும்மினாலே போதும்..தொத்து
நேரடியா நம்மேலே தொத்தும்...பின்னே
நம்மைவச்சு ஊரெல்லாம் சுத்தும்..
                                                                     
தொடர்ந்து
எரிவதற்கு ஏதுமின்றிப்  போனா..எந்த
நெருப்பதுவும் அணைஞ்சுபோகும் தானா..அதுபோல்
பிடிப்பதற்கு உடலின்றிப் போனா...தானே
அடங்கிவிடும் ஒழிந்துவிடும் கொரோனா

அதுக்கு
ஊரடங்கை மதித்திருந்தா போதும்..நாம
வீதிக்கு வராதிருந்தா போதும்...கொரோனா 
வேரற்ற மரம் போல வீழும்...உலகுக்கு நம்நாடே வழிகாட்டி ஆகும்...

Friday, April 10, 2020

ஒன்றுக்குள் ஒன்றுதானா..

குழப்பங்களே கேள்விகளாகிறதா            கேள்விகள்தான் குழப்புகிறதா                                                                                              கேள்விகள்தான் பதில்பெறுகிறதா                  பதில்கள்தான் கேள்விக்குக் காரணமா                                                                                                எளிதானதுதான் புரிகிறதா                          புரிந்ததுதான் எளிதாய்த் தெரிகிறதா                                                                                                  புதிரானதுதான் புரியவில்லையா              புரியாததால் அது புதிராகிறதா                                                                                                                சிந்திப்பது எழுதுவதால்தானா                    எழுதுவதே சிந்திப்பதால் தானா                                                                                                              இருப்பதனால் வாழ்வதுபோல்                            வாழ்வதனால் இருப்பதுபோல்                                                                                                                  இவையெல்லாம் ஒன்றுதானா                    இல்லை ஒன்றிலிருந்து ஒன்றுதானா

Thursday, April 9, 2020

உணர்தலே புரிதலாய்..

பால்மணம் மாறாத
பச்சிளம் குழ்ந்தையை
மடியில் கிடத்தி
ஏதோ பழங்கதையைச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
குடிசை வாசலில் தாய் ஒருத்தி

"இதென்ன கேலிக் கூத்து
இவள் சொல்வது
குழந்தைக்குப் புரியவா போகிறது ?
ஏன் அவளும் கஷ்டப்பட்டு
குழந்தையையும் கஸ்டப்படுத்துகிறாள் ?"
எரிச்சல்படுகிறான்  உடன் வந்த நண்பன்

"தாய்மை உணர்விருந்தால்
புரியும் என்பது
உனக்கும் புரியும்'
இல்லையேல் வாய்ப்பில்லை"
என்கிறேன்

அவன் அலட்சியமாய்ச் சிரிக்கிறான்

வரும் வழியில்
கோவில் வாசலில்
கண்ணீர் மல்க
என்ன என்னமோ
வேண்டிக் கொண்டிருக்கிறான்
பக்தன் ஒருவன்

"இத்தனைப் பக்தர்களையும் தாண்டி
இவன் வேண்டுதல்
ஆண்டவனுக்குத் தெரியப் போகிறதா ?
ஏன் இப்படி
இவனும் கஸ்டப்பட்டு
ஆண்டவனையும் கஷ்டப்படுத்துகிறான் ?"
மீண்டும் ஆதங்கப்பட்டான் நண்பன்

"பக்தி உணர்விருந்தால்
தெரியும் என்பது
உனக்கும் தெரியும்
இல்லையேல் வாய்ப்பில்லை "
என்கிறேன் மீண்டும்

தொடர்ந்து
"இவை இரண்டுக்கும்
ஆதாரமாய்இருக்கும்
ஒரு விஷயம்
கவிதைக்கும் கவிஞனுக்கும் உண்டு
அது குறித்து ஒரு கவிதை
எழுதும் உத்தேசமிருக்கிறது " என்கிறேன்

அவன் சிரிக்கிறான்
"இரண்டுமே அர்த்தமற்றது என்கிறேன்
அதை அர்த்தப்படுத்தும் விதமாய்
ஒரு கவிதை வேறா
அதுவாவது புரிய வாய்ப்புண்டா? "என்கிறான்

"கவி மனம் கொண்டால்
உனக்கும் புரிய வாய்ப்புண்டு
இல்லையேல்  அவைகள் போல்
நிச்சயம் இதற்கும் வாய்ப்பில்லை "
என்கிறேன்

பிரியும் இடம் வர
மெல்ல என்னை விட்டு
விலகத் துவங்குகிறான் அவன்

Wednesday, April 8, 2020

பட்டுப் போன மனம்...


  1. ஈரமிழந்த மரமாய் மனமும்                                மெல்ல மெல்ல                                              பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது                மனிதாபிமானமிழந்து..                                                                                                        மணத்தையும்   நிறத்தையும்  உணர்ந்து      மலரை எடைபோட்ட மனம்                              இப்போது வியாபார குணம் மிகுந்ததால்  எண்ணிக்கையும்   எடையையும் வைத்தே    மதிக்கப் பழகிக் கொண்டு விட்டது  போலவும்                                                                                                                                      முகமறியா தொடர்பேயில்லா                          ஒருவரின் மரணச் செய்தி கேட்டு                  அதிர்ந்த அதே மனம்                                      இப்போதுஇயலாமையினகாரணமாய் மாலைச் செய்தியில்                                    மரண எண்ணிக்கை அறிய.                          ஆவலாயிருக்கிறது                                              எவ்வித உறுத்தலின்றியும்...

Monday, April 6, 2020

இப்போதைய தேவை இது மட்டுமே...

மனநல நிபுணரின்
அற்புத அறிவுரைகள்...

1) Virus குறித்து எல்லா செய்திகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். எல்லாமே நமக்கு தெரிந்துதான். திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருக்காதீர்கள்.

2) தினமும் எத்தனை பேருக்கு வந்தது, எத்தனை பேர் இறந்தார்கள் என்று பார்த்து கொண்டிருக்கதீர்கள்.
It is not a Cricket match to know
the latest score.Avoid that.

3) மேலும் மேலும் தகவல் அறிய வேண்டும் என்று internetல் தேடாதீர்கள். இது உங்கள் mental stateஐ மனநிலையை பலகீனபடுத்தும்.

4) உங்களுக்கு விஷயம் தெரியும் என்று கடுமையான,பயப்படுத்தக்கூடிய
messages எல்லோருக்கும் அனுப்பாதீர்கள். இது அவர்களை பயப்படுத்துவதுடன், Depressionயும் ஏற்படுத்தும்.

5) வீட்டில் இருப்பதால் குழந்தைகளுடன் பொழுதை கழியுங்கள்.Chess, Caram board and telling stories, enquiring about their Future plans etc etc

6) Maintain discipline by washing your hands, keep yourself Clean. மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழுங்கள்.

7) உங்கள் நேர்மறை எண்ணங்கள் உங்கள் immune systemதை பாதுகாப்பதுடன் உங்களை பலப்படுத்தும். உங்கள் எதிர்மறை எண்ணங்கள் Virus குறித்து உங்கள் immune systemஐ பலவீனப்படுத்தும்.

8) திடமாக நம்புங்கள்.. இதுவும் கடந்து போகும். நாம் நலமாக இருப்போம்.

Most importantly, firmly believe that this shall also pass and we will be safe.

Stay positive... Stay safe🙏🌹

Sunday, April 5, 2020

படிக்காதவர்கள் படிப்பதற்காக...

மன்னிக்கக் கூடாத குற்றம்!

தப்லீக் ஜமாத் அமைப்பின்
இஸ்லாமிய மாநாடு குறித்த,

தினமணி நாளிதழின்
தலையங்கம்

உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது,

கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது.

தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும்,

அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும்,

இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும்,

ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.

தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம்,  அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது.

இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர். 

200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் கூடும் எல்லா விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், மதச் சடங்குகள் ஆகியவற்றையும் தடை செய்து தில்லி அரசு பொதுத்தடை அறிவித்த அன்றுதான் தப்லீக் ஜமாத்தின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது.

உடனேயே  அந்த மாநாட்டை ரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால்,  எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி இருப்பார்கள்.

மார்ச் 16-ஆம் தேதி, 50 பேருக்கும் அதிகமானோர் கூடும் எல்லாக் கூட்டங்களையும் மார்ச் 31 வரை தடை செய்வதாக தில்லி அரசு அறிவித்தபோதாவது,

உடனடியாக அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புவதில் மசூதி  நிர்வாகம் முனைப்புக் காட்டியதா என்றால் அதுவும் இல்லை.

இந்த மாநாடு கூடுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தில்லி அரசும், தில்லி காவல்துறையும் உடனடியாக அதைத் தடுக்கவும் முடக்கவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள்.

அவர்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும்,  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள்.

ஜனநாயக இந்தியா
இதை சகித்துக்
கொண்டிருக்கிறது.

9,000-க்கும் அதிகமான தப்லீக் ஜமாத்தின் தொண்டர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளும் தீநுண்மி நோய்த்தொற்றுக்காகத் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 500}க்கும்  அதிகமானவர்கள் தில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பெற்றவர்கள்.

தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர்களில் 1200 பேர்தான் திரும்பியிருக்கிறார்கள்.  திரும்பியவர்களில் 364 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு  மாநிலங்களுக்குத் தீநுண்மி நோய்த்தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள்.

அது குறித்து அவர்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
188 பேரில் பலர் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறார்கள்.

மருத்துவர்களையும்  செவிலியர்களையும் சிலர் தாக்கியிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் மாநாட்டிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரைக் கல் எறிந்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன.

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 960 பேர்  வந்திருக்கிறார்கள்.

 மதப்பிரசாரம் செய்ய வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதற்கான நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி பெற்று  தில்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களது நுழைவு அனுமதி இப்போது  ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு  வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும்  தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது.

மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார்.

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும்,
அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு,

மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல?  (தினமணி தலையங்கம்) 

Thursday, April 2, 2020

அதிகாரமும் சுதந்திரமும்

பகலும் இரவும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பகலில் இரவில்
எதைச் செய்வது என்பது மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

பருவமும் காலமும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பருவத்திற்கும் காலத்திற்கும்
தகுந்தார்ப்போல நம்மை
தகவமைத்துக் கொள்ளும்
அதிகாரம் மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஆயுளும் முடிவும்
நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
ஆயுள் முடிவதற்குள்
எதைச் செய்து முடிப்பது என்பதை
முடிவு செய்யும்
அதிகாரம் மட்டுமே
நம் வசம் உள்ளது

வார்த்தைகளும் அதற்கான
அர்த்தங்களும் நம் கட்டுப்பாடில் இல்லை
அதனை முழுமையாகப் புரிந்து
மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....