Sunday, November 28, 2021

எது ருசி...எழுத்தா ?..குழம்பா?

 *வத்தகுழம்பு:* 😇


வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?


வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை. பூண்டு உண்பவர்கள் அதையும் வெங்காயத்துடன் சேர்த்து கொள்ளலாம். ஆனால் இவை எல்லாம் பஞ்சாங்கத்தை ஐபோனில் பார்ப்பது போன்ற உணர்வு. வத்தல் மட்டுமே ஓரிஜினல். மத்தபடி காய்கறி கூட நோ நோ தான்.


வத்தலுக்கு அடுத்தபடியாக முக்கியம் நல்லெண்ணை. மீதி எண்ணை எதற்குமே கட்டாயம் தடா. புது புளியும் வேண்டாம் பழைய புளியும் வேண்டாம். ஒரு டீன் ஏஜ் புளி அசத்தும். வத்தகுழம்பிற்கு கை பக்குவம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை வைக்கும் சட்டி. 


கும்பகோணம் கல்சட்டி பெஸ்ட். மங்களகரமாக வைக்கலாம் கமகம வத்தக்குழம்பு. கும்பேஸ்வரர் கோவில் கடைகளில் கட்டாயம் கிடைக்கும். 


குழம்பிற்கு வறுக்கப்படும் வத்தலை முதலில் வறுத்து அதிலேயே புளியிடாமல், தனியாக எடுத்து வைத்து கொண்டு கடைசியாக சேர்ப்பது குழம்பிற்கே புது அவதாரத்தை தரும். குழம்பு கொதிக்கும் பொழுது சேர்க்கப்படும் கறிவேப்பில்லை ஜன்ம சாபல்யம் பெறும். மூட கூடாது, அடுப்பை சிம்மில் வைத்து கொதித்து கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும். எண்ணெய் பிரிந்த பின் இறக்கி வைக்கப்பட்ட வத்தகுழம்பு இங்கிலாந்து வரை இழுக்கும். பின்னர் அதில் வறுத்த வத்தலை சேர்த்ததோடு மட்டுமில்லாமல் ஒரே ஒரு ஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் சேர்த்தால் அந்த மணத்திற்கு எந்த மலரும் ஈடாகாது.


வத்தகுழம்பு வைக்க தெரிந்து இருப்பதை விட முக்கியம் அதை சாப்பிட தெரிவது. சாதத்தை அழுத்தி பிசைந்து, வத்தக்குழம்பு சாதம் சாப்பிடுபவன் அடுத்த ஜன்மத்தில் பல பாவத்திற்கு ஆளாவான். இன்று பிறந்த குழந்தையை தூக்குவதை போல் மிகவும் அழுத்தம் கொடுக்காமல், சாதத்தை பிசைய வேண்டும். பிசைய என்று வார்த்தையை கூட அழுத்தாமல் படிக்க வேண்டும். என்ன தான் சாப்பாட்டிற்கு நெய் என்பது மன்னனின் மகுடம் போல என்றாலும் இங்கே அதற்கு வேலை இல்லை. இது நல்லண்ணை ராஜாங்கம். சுடச்சுட சாத்தத்தோடு ஒரு தாராளமான ஸ்பூன் நல்லெண்ணை விட்டு சாதத்தை உதிர்த்த பின் அதன் மேலே வத்தகுழம்பை விட்டு நிற்க, சாம்பார் சாதம் மாதிரி மொத்தமாக பிசைய வேண்டாம். அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக பிசிறி பிசிறி சாப்பிட, நல்ல மழையில் SPB குரலில் இளையராஜா Melodies கேட்பது போல், Sidedish க்கு இங்கே வேலை இல்லை. இல்லாமல் முடியாது என்போர்க்கு அப்பளம் 0K. சுட்டது இன்னும் சூப்பர்.


இன்னும் சிறப்பு தயிர் சாதத்தை மையாய் மசித்து, கையில் சிறிது சாதம் எடுத்து கொண்டு நடுவிலே சிறு பள்ளமிட்டு அதை வத்த குழம்பால் நிரப்பி, அடடா சூப்பர் ஸ்டார் படத்தை அவருடனேயே உட்கார்ந்து பார்த்த பரவசம்.


சாத்திற்கு மட்டுமல்ல, அடைக்கு கூட வத்தகுழம்பு நல்ல combination.

வெங்கட்பிரபுவும் பிரேம்ஜியும் போல.


முடித்த பின் கடைசியாக தட்டில் ஒரே ஒரு கரண்டி மட்டும் விட்டு வழித்து நக்கப்படும் ஒரு நல்ல வத்தக்குழம்பின் மணமும், ருசியும், worldcupல் தோனி அடித்த 6 போலே என்றுமே நினைவில் நிலைத்திருக்கும்.

*படித்ததில் பிடித்தது*

*பகிர்வு*

*எழுத்தாளர் திரு.சுஜாதா  போல் எழுதியது யாராய் இருக்கும்... *🌷🕉️🚩

Friday, November 26, 2021

தியானம் குறித்து ஒரு தியானம்

 த்யானம் பற்றி .....எழுதியவர் "கடுகு " (படித்ததில் பிடித்தது...)


எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது. 


கூடவே, 'உன்னால் முடியுமா...?' என்று உள் மனம் கேள்வி கேட்டது.


 'அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே... என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினேன்.


கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன். சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில்.


"மாநில செய்திகள் வாசிப்பது ஜெயாபாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார் கூறியிருக்கிறார்..."


"அட சட்! கமலா அந்த ரேடியோவைக் கொஞ்சம் ஆ·ப் பண்ணேன். ஒரே நியூஸை எத்தனை வருஷமாகக் கேக்கறது? ஒரு அஞ்சு நிமிஷமாவது தியானம் பண்ண விடு!"

ரேடியோ அணைக்கப்பட்டது. ஏன் கடவுள் காதுகளுக்குக் கதவு வைக்கவில்லை? உஸ்ஸ்... மனக் குரங்கே தேவையற்ற சிந்தனை வேண்டாம். ஒழுங்காகத் தியானம் செய்.


அமைதி. மின் விசிறியின் சப்தம் மட்டும் தான் கேட்கிறது. வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாற்றவேண்டும். ஐந்நூறு ரூபாயாவது ஆகும்.


 தியானம்... தியானம்... எங்கேயோ போகுதே.


கமலா வெங்காய சாம்பார் வைக்கிறாள் போலிருக்கிறது. சூடாக இட்லியும் இருந்தால் நன்றாக இருக்கும். 


சீ! தியானம் செய்யும் போது இட்லி சாம்பாரைப் பற்றி என்ன நினைப்பு! இந்த அல்பமான மனத்தை வைத்துக் கொண்டு எப்படி நான் மகானாவது?


தியானம் செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. 


அந்தக் காலத்தில் விஸ்வாமித்திரர் நூற்றுக் கணக்கான வருடங்கள் தவம் செய்திருக்கிறாரே.

அவரால் எப்படி முடிந்தது. பசியே எடுத்திருக்காதா? மனம் தவம் செய்தாலும் வயிறு சும்மா இருந்திருக்குமா? தவத்தைக் கெடுத்திருக்குமே! மடையா! முனிவருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை? நீ ஐந்து நிமிடங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தினால் ஐம்பது வருடங்கள் தவம் செய்ததற்குச் சமம். எதைப் பற்றியும் நினைக்காதே. தியானம் செய்.


"ஸார் தியானம் பண்றார் போலிருக்கு. சரி, நான் அப்புறம் வரேன்!"

எதிர்வீட்டு ஆசாமியின் குரல் கேட்டது.

"இருங்க, பேப்பர்தானே? நான் எடுத்துத் தரேன். ஏங்க?... கொஞ்சம் எழுந்திருங்களேன். பேப்பர் மேலே உட்கார்ந்து தியானம் பண்றீங்களே?"


கண்களைத் திறக்காமலேயே நகர்ந்து கொண்டேன். திறந்தால் தியானம் கெட்டுவிடும். கமலா பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பினாள்.

நானே இன்னும் பேப்பர் படிக்கவில்லை. லீவு நாள் தானே, தியானத்தை முடித்து விட்டுச் சாவகாசமாகப் படிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் அந்த ஆள்.


சரி சரி... மனத்தைத் திருப்பு. தியான மார்க்கத்தில் போ. 


தியானம் செய்தால் மனம் அமைதி பெறும். 


அமைதியான நதியினிலே ஓடம்... அருமையான பாட்டு. 

சிவாஜி என்னமாய் நடித்திருந்தார்? அநாவசியமாய் அரசியலில் நுழைந்து வேண்டாத மனக் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டார். சிவாஜி கணேசன் இல்லாத திரை உலகம் என்னவோ போலிருக்கிறது. ஏன் அவர் ஒரு படத்தை டைரக்ட் செய்யக்கூடாது? அடாடா தியானத்தை விட்டு விலகி விட்டோமே. மனமே... 


ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? அலையாமல் ஒரு இடத்தில் நில்லேன்!


ரமண மஹரிஷி மயக்க மருந்து போட்டுக் கொள்ளாமலேயே ஆபரேஷன் செய்து கொண்டாராம். அது அந்தக் காலம். இப்போது, மாத்திரை போட்டுக் கொண்டால் தான் பலருக்குத் தூக்கமே வருகிறது. உடல் வலிமை உணராமல் இருக்க ரமணரால் மட்டும் எப்படி முடிந்தது?


 உடல் வேறு, மனம் வேறு என்றால், உடல் அழிந்த பிறகு மனம் என்ன ஆகிறது, எங்கே போகிறது? 


அடடச்சீ! நமக்கு எதற்கு இந்த தத்துவ விசாரம்? கமலாவுக்கும் அம்மாவுக்கும் நடக்கிற சண்டைகளுக்கே தீர்வு சொல்ல முடியாத நமக்கு இவ்வளவு பெரிய தத்துவங்கள் எல்லாம் எப்படிப் புரியும்? போதும் மனமே சும்மா இரு-


தியானம் முடிந்த பிறகு எதைப் பற்றி வேண்டுமானாலும் நினை. ப்ளீஸ்... கொஞ்சம் ஒத்துழையேன்.


 அலைபாய்ந்து கழுத்தறுக்காதே.

'அலை பாயுதே கண்ணே...! 

என் மனம் அலை பாயுதே!' கமலாவைப் பெண் பார்க்கப் போனபோது அவள் இந்தப் பாட்டைத்தான் பாடினாள். அப்படியும் நான் அவளையே கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன். ஒரு பாட்டுக்காக ஒரு பெண்ணை நிராகரிப்பது எனக்குச் சரியானதாகப்படவில்லை.


அட, அடங்காப்பிடாரி மனமே! ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்? 


ஒரு ஐந்து நிமிடம் அசையாமல் இரு. அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை.


இப்போதுதான் புரிகிறது. மனம் என்பது விலைவாசி மாதிரி. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. தறிகெட்டு செல்லக் கூடியது. அதன் இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டியதுதான். ஆட்சிக்கு வருபவர்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள். அதுதான் மரபு.


முடியாது. என்னுடைய மனம் என் பேச்சைக் கேட்க மறுப்பதா? எவ்வளவு நேரமானாலும் சரி, 


ஒரு நிமிடமாவது மனத்தை அடக்காமல் விடுவதில்லை. அட்டென்ஷன். பல்லைக் கடித்து மனத்தை நிறுத்தினேன்.

ஆபீஸரின் முகம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. 


இந்த ஆள் இங்கே ஏன் வருகிறார்? போய்யா... 


நாளைக்கு ஆபீஸுக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன். 

லீவு நாள்ல கூட முகம் காட்டி எரிச்சலூட்டாதே!


திடீரென்று நான் என்னை மறக்க ஆரம்பித்தேன் ஓஹோ... இதுதான் தியானமா?


எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.


யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள். கமலாதான்.

"ஏங்க... எழுந்திருங்க! தியானம் பண்ணும்போது குறட்டை என்ன குறட்டை

Thursday, November 25, 2021

அட ஆமா..இல்லை


 நம் வலைத்தமிழ் வல்லுநர்கள் நிச்சயமாக ஒரு வித்தியாசமான பதில் வைத்திருப்பார்கள் தானே..

Wednesday, November 24, 2021

வன் கொடுமை ஒழிப்பு நாள்..

 இன்று நவம்பர் 25


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள். 


   டொமினிக்கன் குடியரசில் 

1960 நவம்பர் 25 ல் 

மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.

    பாதிக்கப்படும் பெண்களுக்கெதி

ராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.

    'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில்   

பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 

   1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு 

எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் 

பொதுச்சபை 1999 

டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

    பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், அவர்கள் மீதான வன்முறைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, போர்கள், கலவரங்கள், மோதல்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் பிற வடிவங்களினால் வன்முறைக் கொடுமைகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் ஆளாகி வருகின்றனர். 

    உலகில் மூன்றில் ஒரு பெண், அவளின் வாழ்நாளில் ஒருமுறையேனும் கொடுமையான வன்முறைக்கு ஆளாகிறாள் என்று ஆய்வு கூறுகிறது.

     இவற்றைத் தடுத்து நிறுத்த உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய நாள் இன்று.


Tuesday, November 23, 2021

படிக்கக் கஷ்டமாக இருப்பினும்.....

 'Relocating to Nursing Home (in Western Countries, Retirement Homes are called Nursing Homes):*


This is an article on the internet that has caused many to reflect on their own lives. The author is a retired writer, and she expressed emotion when she was about to go to a nursing home.


I'm going to a nursing home. 

I have to. 

When life gets to where you are no longer able to take care of yourself completely, your children are busy at work and have to take care of their children and have no time to take care of you, this seems to be the only way out.


The nursing home is in good condition, with clean single rooms equipped with simple and practical electrical appliances. All kinds of entertainment facilities are complete, the food is fairly delicious, the service is also very good. The environment is also very beautiful, but the price is not cheap.


My pension is poorly able to support this. But I have my own house. If I sell it, then the money is not a problem. I can spend it on retirement, and the rest will be left as an inheritance for my son. 


The son understands very well: "your money and your property should be enjoyed by you, don't worry about us." 

Now I have to consider preparing to go to a nursing home.


As the saying goes: Breaking a family is worth tens of thousands, which refers to many things. Boxes, bags, cabinets, and drawers are filled with all kinds of daily necessities: clothing for all weathers and beddings for all seasons.


I like to collect. I have collected a lot of stamps. I have also hundreds of purple clay teapots. There are many small collections, and such small items as pendants of emerald and walnut amber, and two small yellow croakers. 

I am especially fond of books. The bookshelves on the wall are full.


There are also dozens of bottles of good foreign wine. There are full sets of household appliances; various cooking utensils, pots and pans, rice, oil, salt, noodles, flour, spices, various seasonings the kitchen is also full. There are also dozens and dozens of photo albums..., looking at the house full of things, I'm worried!


The nursing home has only one room with a cabinet, a table, a bed, a sofa, a refrigerator, a washing machine, a TV, an induction cooker and a microwave oven -- all the things I will need. 

There is no place to store the wealth that I have accumulated throughout my life.


At this moment, I suddenly feel that my so-called wealth is superfluous, and it doesn't belong to me. I just take a look at it, play with it, use it. It belongs to this world. The wealth that comes in turns is just passing by. 

Whose palace is the Forbidden City? The Emperor thought it belonged to him, but today it belongs to the people and society.


You look at these, you play with these, you use these but you can't take them with you in death.


I want to donate the things in my house, but I can’t get it done. To deal with it has now become a problem. Very few children and grandchildren can appreciate what I have collected. I can imagine what it will be like when my children and grandchildren face these painstakingly accumulated treasures of mine: all the clothes and bedding will be thrown away; dozens of precious photos will be destroyed; books will be sold as scrap. Collections? If you are not interested, you will dispose of them. The mahogany furniture is not practical and will be sold at a low price.


Just like the end of the Red Mansion: only a piece of white left, so clean.


Facing with the mountain of clothes, I only picked a few favourites; I only kept a set of pots and pans for kitchen supplies, a few books that are worth reading; a handful of teapots for tea. 

Bring along my ID card, senior citizen certificate, health insurance card, household register, and of course a bank card. Enough!


It's all my belongings!  I'm gone. I bid farewell to my neighbours, I knelt at the door and bowed three times and gave this home back to the world.


Yes! In life, you can only sleep in one bed, live in one room. Any more of it is merely for watching and playing!


Having lived a lifetime, people finally understand: we don’t need much. Don’t be shackled by superfluous things to be happy!


It's ridiculous to compete for fame and fortune. Life is no more than a bed.


*For people over 60 years old, shouldn’t we think carefully about how to take the last journey in life? *

*Let go of fantasies and baggage, and of those things that can't be eaten, worn, used.*


*Be healthy and be happy*



A GOOD POST WORTH READING..

Saturday, November 20, 2021

இவரே போற்றுதலுக்குரிய கலைஞர்..

 நியாயமாக "மானமிகு" என்கிற பட்டம் இவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கவேண்டும். 


#கண்மணி_குணசேகரன் 


 #வஞ்சகரின்_காசை_வாங்கித்தான்... ... ...

#இந்தா_உன்_பணம்.

      #எலிவேட்டையிலிருந்து_ஜெய்பீம்



     #ஜெய்பீம் திரைப்பட இயக்குநர்  திரு த.செ.ஞானவேல் மற்றும் 2D ENTERTAINMENT நிறுவனத்தார் அவர்களுக்கு…


           விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வியலில் இருப்பவன் நான். இச்சூழலில் வாசகராய் அறிமுகமாயிருந்த செந்தில் என்கிற தம்பி என்னை பார்க்க  வருவதாய் (சுமார் இரண்டாண்டுகளுக்கு [சூலை 2019] முன்) சொல்லியிருந்தார். அதன்படிக்கு நான் வீட்டில் காத்திருந்த வேளையில் நாலைந்து பேர்களாய் நீங்கள் (த.செ.ஞானவேல்) என் இல்லம் (மணக்கொல்லை)  வந்திருந்தீர்கள். உடன் வந்த செந்தில் தம்பி தங்களை  ‘இயக்குநர்’ என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். 


            எனது ‘அஞ்சலை’ நாவல் வாசிப்பின் மூலம் தொடங்கிய உரையாடல் மெல்ல தாங்கள் இயக்கவிருக்கும் திரைப்படம் பற்றி திரும்பியது. திரைப்படத்தின் கதையானது கம்மாபுரம் காவல்நிலையத்தில் வெகுசில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம். நானும் அதை கேள்விப்பட்டிருந்தேன். கதையின் களம் விருத்தாசலம், கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு  வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்றும் பிரதியில் மாற்றி உதவிட வேண்டுமெனவும்  சொன்னீர்கள். 


           எனக்கு திரைக்கதையாடல் பரிச்சயமில்லாத துறையென்பதால் சற்று தயங்கினேன்.  ஆனபோதும் ஊருக்கே வந்துவிட்டதில் என்னால் தட்ட முடியவில்லை.  மேலும்  (உண்மை நிகழ்வில் குறவராக இருந்தாலும்) ஆதுபாதற்ற வாயில்லா சமூகமாய் நைந்து கிடக்கும் சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வை சொல்கிற படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன். 


      எனக்கு காட்டப்பட்ட உரையாடல் பிரதியில் (திரைக்கதைப் பிரதி அல்ல) படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய “எலி வேட்டை” என்றே இருந்தது. இப்பகுதி சார்ந்த காட்சிகளின்  உரையாடல்களும் சற்றேறக்குறைய இம் மக்களின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு அமைந்தது.  மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு  பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாக தெரியவில்லை. அந்த பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் உறுதியளித்தீர்கள். படம் ‘எலி வேட்டை’ என பரிதாபம் கொள்கிற தலைப்பாக இருந்ததால் அதற்குமேலும் அந்த பிரதியில் நான் ஊன்றி கவனம் செலுத்தவில்லை. 


          கூடுதலாய் ஒரு ஒப்பாரிப் பாடல் வேண்டுமென்றீர். நான் எழுதிக்கொடுத்ததை விடவும் இன்னும் ஆழமாக பாடலை எதிர்பார்க்கவும் நான் தவிர்த்துவிட்டேன். வட்டார உரையாடல் மாற்றம் தொடர்பான பணிக்கு தாங்களாகவே ரூ 50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணம் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கச் செய்தீர்கள். 


           இதனிடையில் கம்மாபுரம் பகுதி பச்சைப்பசேலென இருளர் வாழ்வியல் காட்சிக்கு பொருத்தமாக இராது என விழுப்புரம் பகுதியை தெரிவு செய்து படப்பிடிப்பை முடித்திருந்ததை அறிந்தேன்.


          பிறகொருநாள் படம் திடுமென (எலி வேட்டை யிலிருந்து) பெயர்மாற்றம் பெற்று “ஜெய்பீம்” என இதழ்களில் விளம்பரம் கண்டேன். தொடர்ந்து ‘தலைப்பை மனமுவந்து கொடுத்ததிற்கான கதாநாயகரது நன்றி நவிலல்’ செய்தியையும் பார்த்தேன். அப்போதே எனக்குக் கொஞ்சம் யோசனைதான்.


          அண்மையில் படத்தை பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தது கண்டு மகிழ்வோடு சொன்னார்கள். கூடவே வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்கு பேரதிர்ச்சி. 


              என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் அக்கினிக் கலசம் போன்ற காட்சி குறியீடுகளெல்லாம் அப்போது அதில் இல்லை. மீறி இருந்திருந்தால் உண்மை நிகழ்விற்கு முற்றும் புறம்பான, தேவையில்லாத  அந்த பகுதியை  உங்களிடம் நீக்க சொல்லியிருப்பேன் அல்லது நான் வழக்குமொழியாக்க வேண்டுகோளை நிராகரித்திருப்பேன். 


       எனது வழக்குமொழியாக்கத்திற்குப் பிறகு அக்கினி கலசம், சாதிய பின்புல விவரிப்பு என எம் சமூகத்தை வன்முறையாளர்களாகவும் கொலையாளிகளாகவும் வலிந்து திணிக்கப்பட்ட வன்னியர் வெறுப்பரசியலை நீங்கள் கையிலெடுத்து திரைக்கதைப் பிரதியில் சேர்த்துவிட்ட குரூரம் குறித்து நெடும் பதிவொன்றை எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன்.


      உடன் ‘பீரியட் படம் என்பதால் ஆர்ட் சைடில் தவறுதலாக வைத்துவிட்டார்களெனவும் அதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லையென்றும் அப்படியிருந்தால் உங்கள் வீடுதேடி வந்திருக்க மாட்டேன், குறிப்பாக என்மீது வருத்தம் வேண்டாமெனவும் சர்ச்சைக்குரிய அந்த காலண்டர் படத்தை நீக்கச்செய்து விட்டதாகவும்’  சொன்னீர்கள்.


     அதுபோலவே காலண்டர் காட்சியில் திருத்தம் செய்திருந்தாலும் பல இடங்களில் ஒட்டுமொத்த வன்னிய சமூகத்தையே கொலையாளிகளாக சித்தரித்தக் கொடூரத்தையும் வன்மத்தையும் என்னாலும் அதைப் பார்த்த எம் மக்களாலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.


       நிலைமையின் தீவிரமுணர்ந்து எங்கள் அன்புமணி அண்ணன் கேட்ட நியாயக் கேள்விகளுக்கு பதிலேதும் சொல்லாமல் “உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்” எனும்படியாய் பிரச்சினையை திசைமாற்றிய உங்கள் நடிகர் சூர்யாவின் தெனாவட்டு விளக்கத்தை எம்மால் சற்றும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.


       படைப்பாளி, கலைஞன் எனச் சொல்லிக்கொள்வோர்க்கெல்லாம் ஒரு நேர்மை வேண்டும். ‘எலிவேட்டை’ என என்னிடம் காட்டி ‘ஜெய்பீம்’ என நீங்கள் மாற்றுவது உங்களுக்கு சாதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் எலிவேட்டை என்கிற  தலைப்பில் இருக்கிற அதே சாதாரண உரையாடல், பெயர்கள், ஜெய்பீம் என அக்கினிக் கலச குறியீடுகளோடு வருகிறபோது உக்கிரம் கூடி வேறொரு குரூர ரூபம் கொள்கிறது. ஓட்டுமொத்தமாய் ஒரு பொய்த் தலைப்பை வைத்து என்னை வட்டார உரையாடலை எழுதச்சொல்லி பிறகு அவற்றை மாற்றிவிட்டு எனக்கு பச்சைத் துரோகம் இழைத்துவிட்டீர். 


      கூடுதலாய் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரையும் வைத்து இழிவுபடுத்திவிட்டீர்.


        பட வெளியிடு OTT தளம் என்கிற திமிரில் தெரிந்தே அக்கினி கலசக் குறியீடுகள், சாதியப் பின்புல விவரிப்புகள் என வைத்துவிட்டு அந்த தவறின் விளைவுகளை சற்றும் பொருட்படுத்தாமல் இரு சமூகங்களுக்கிடையே பெரும் பகையுணர்வை தூண்டும் விதமாக அணிதிரட்டி அதனால் காசு சம்பாரிக்க நாளும் அறிக்கை விடுகிற அற்ப வேலையை செய்து வருகிறார் தங்களின் நடிகர்.


     மறைந்த எம் மாவீரன் காடுவெட்டியார் அவர்களையும் ராசாக்கண்ணு கொலைக்கு நீதிகேட்டு நெடுங்காலம் போராடிய என் சமூகத்தாரையும் சிறுமைப்படுத்தி மற்றும் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரை வைத்துத் தாழ்த்தியும் உண்மைக்கு புறம்பான சித்தரிப்புக்கு விளக்கம் கேட்ட அண்ணன் அன்புமணியின் கேள்விகளை புறந்தள்ளியுமாய் மௌனம் காக்கும் நீங்களும் உங்கள் நடிகர் சூர்யாவின் செய்கைகளும் என்னைப் பெரும் மனஉளைச்சலாக்குகின்றன. 


       செய்த தவறை ஒத்துக்கொள்ள மனிதனாக இருந்தால் போதும். அந்த மனிதத் தன்மை இல்லாமல் கலை, கலைஞன், மயிரு மட்டை என என்ன வேண்டிக்கிடக்கிறது.  


       இருபத்திஐந்து ஆண்டுகாலம் எனது எழுத்தில் தவழ்ந்த எம் நடுநாட்டு மொழியை எம் இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்ப செய்துவிட்ட உங்கள் ஏமாற்றுத் துரோகம் இனி எந்த படைப்பாளிக்கும் வரவே கூடாது.


        உங்களால் எனக்கும் எம் இனத்திற்குமாய் சுமத்தப்பட்ட இத்தனை இழிவுகளையும் தாண்டி உங்கள் இழிசெயலால் சம்பாரிக்கிற வருமானத்திலிருந்து நான் பெற்ற அந்த பாவத்தின் சம்பளத்தை வைத்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருக்கிறேன்.  


    எனவே வட்டார மொழிமாற்ற பணிக்காக தாங்கள் அனுப்பிவைத்தத் தொகை ரூ 50000/-ஐ (ரூபாய் ஐம்பதாயிரம்) தங்களுக்கே திருப்பும் விதமாக அதற்கான காசோலையினை  இக்கடிதத்தில் இணைத்துள்ளேள்.


     என் படைப்பை படித்தவர்கள் ஒருபோதும் எனக்கு பழியை நினைக்கமாட்டார்களென நம்பி ஏமாந்துவிட்டேன். இனிவரும் காலங்களில் இதுபோன்று தூக்கிவிட்டு குலையில் குத்துகிற வஞ்சகர்களை வாழ்வில் ஒருபோதும் சந்திக்காத வண்ணம் என் குலதெய்வம் ‘முதனை  செம்பையனார்’ எனக்கு வழிநெடுகத் துணைநிற்க வேண்டும்.  


(கண்மணி குணசேகரன்)


#குறிப்பு: இந்த கடித நகலும் ரூ50000க்கான காசோலையும்  2D Entertainment நிறுவன முகவரிக்கு பதிவு அஞ்சலில்  இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Friday, November 19, 2021

ஜான்ஸி ராணி...

 🔥 புளியமரத்தின் அடியில் எரிந்து கிடந்த எலும்புகளும் சாம்பலும் மிகப்பெரிய அச்சமூட்டுபவையாக இருந்தன...


இவ்வாறான குறிப்புகள் குவாலியரில்  #யூங்_ரோஸ் எனும் பிரிட்டிஷ் படைகளை வழிநடத்திய ஒருவர் குறித்து வைத்துள்ளார்.


மேலே சொன்னது #மணிகர்ணிகா பற்றின குறிப்பு. இப்படி சொன்னால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 

❤️ #லக்ஷ்மிபாய்

#ஜான்சிராணி_லக்ஷ்மி_பாய்.💕


இந்நாளில்   தேச பக்தி இல்லாத கழிசடைகளுக்கு இப்படி ஒருவர் இருந்ததும் வாழ்ந்ததும் எப்படி சொல்லி புரியவைப்பது, இன்று அவரது பிறந்த நாள்.நவம்பர் மாதம் 19 ஆம் தேதி 1828 ஆண்டில் புகழ் பெற்ற வாரணாசிக்கு அருகில் மராத்திய பிராமண குடும்பத்தில் பிறந்தவர் தான் பின்னாளில் பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாய். ஆரம்ப காலத்தில் அவரின் பெயர் #மணிகர்ணிகா, மணிகர்ணிகா தாம்பே.


வீட்டிலேயே கல்வி பயின்ற இவர் (நன்கு கவனியுங்கள் அவர் வாழ்ந்த ஆண்டினை) நான்கு வயதிலேயே தனது தாயார் பாகிரதி_பாய் யை இழந்தார்.இவரது தந்தை மோராபாந்_தாம்பே புகழ் பெற்ற பேஷ்வார் படைகளை நிர்வாகம் செய்தவர்.


( சமீப காலத்தில் பாஜிராவ் மஸ்தானி என்ற இந்தி திரைப்படத்தில் இஃது இடம் பெற்று இருக்கிறது)


இன்றளவும் மணிகர்ணிகா என்கிற பெயருக்கு உத்தரபிரதேச மாவட்டத்தில் அளப்பறிய ஈர்ப்பு உண்டு.பலவிதமான மல்யுத்தம் மற்றும் ஆயுத போர் பயிர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் மிகச் சிறந்த குதிரையேற்றம் தெரிந்த நபராக இருந்திருக்கிறார். யாருக்கு அடங்காத குதிரைகள் கூட இவர் சொற்படி கீழ் படிந்து நடந்திருக்கிறது.

தனது தனிப்பட்ட பராமரிப்பில் இருந்து குதிரைகளான பவன், பாதல் சாரங்கி ஆகியவற்றில் பாதலுக்கு கடிவாளம் கூட போடப்பட்டது இல்லையாம்.


அதன் மீது பயணிக்கும் சமயத்தில் தானாக முன்வந்து அமர்ந்து இவரை தன் மீது ஏற்றிக் கொண்டு செல்லும் என்கிறது குறிப்புகள். பின்னாளில் ஜான்ஸி கோட்டையில் பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த சண்டையின் போது இந்த குதிரை தான் கோட்டை உச்சியில் இருந்து ராணியுடன் கீழே பாய்ந்து தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றியிருக்கிறது. இஃது இன்று இந்த தகவலுடன் அந்த கோட்டை கொத்தளத்தில் காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது.


இந்த பாதல் என்கிற பெயரிடப்பட்ட குதிரை தன் வாழ்நாளில் கடிவாளம் போட அனுமதித்தது இல்லை, கட்டிவைக்கவும் அனுமதித்தது இல்லை, அதுபோலவே தன் மீது லக்ஷ்மி பாயை தவிர வேறு ஒருவரையும் ஏற்றியதும் இல்லை. இதனை தன் வீரர்களுடன் உரை நிகழ்த்தும் போதும் உரையாற்றும் போது தவறாமல் குறிப்பிடும் லக்ஷ்மி பாய் ஒரு ஐந்து அறிவு ஜீவனுக்கே இவ்வளவு திடம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டாராம்.


அதற்கு தகுந்தாற்போல் இவர் எதிர்த்து போட்டியிட்ட படைகளின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு மாத்திரமே இவர் பயன் படுத்தி வந்திருக்கிறார். ஆனால் அசாத்தியமான துணிச்சல் மற்றும் போர் தந்திரம் ஆகியவற்றை கொண்டு செயல் பட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார்.இன்று வரையில் 1857 ஆம் ஆண்டினை இந்திய சுதந்திர போரின் ஆரம்ப காலமாக வகை படுத்தப்படுவது எல்லாம் இவரின் தாக்கத்தால் தான் என்பது கூட நம்மில் பலருக்கு தெரியாது.


💞உடல் நலமே பிரதானம் என்பதை செயல் வடிவம் கொடுத்து செயல் படுத்தியவர் இவர் தான். தன் ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொருவரும் காலையில் உடற் பயிற்சி செய்வதை கட்டாயம் மாக்கியிருக்கிறார். தானும் அவ்விதம் பலர் முன்னனியில் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார்.பஸ்கி, தண்டல் போன்றவற்றை அநாயாசமாக கையாள கூடியவர் என்கிறது சரித்திரம்.


பிரிட்டிஷ் படைகளின் பொறுப்பு வகித்த #டல்லோசி படாதபாடு பட்டிருக்கிறார் இவரை எதிர் கொள்ள...


பின்னாளில் #பாதல் தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஜான்ஸியின்  ராணி லக்ஷ்மி பாய் குவாலியர் கோட்டையில் வைத்து பிடிபட்ட நிலையில் தன் வீரர்களுக்கு போரில் படுகாயம் அடைந்த தன்னை கொன்று எரியூட்ட உத்திரவிட்டுயிருக்கார். அஃது நிறைவேற்றப்பட்டது.


அதனை தான் மேல் உள்ள வரிகளில் படித்தீர்கள். 

அப்படி சாம்பலாக இருந்ததை கைப்பற்றி அந்த புளியமரத்தின் அடியிலேயே புதைத்தனராம் பிரிட்டிஷ் படையினர். கிட்டத்தட்ட ஒரு வாரம் வரையில் தீவிர கண்காணிப்பு மற்றும் காவல் போடப்பட்ட இருந்ததாம் அந்த இடத்திற்கு.


பீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழுந்து வந்தாலும் வரலாம் என்று நம்பியிருக்கிறார்கள் என்றால் எத்தனை வீரியமுடன் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்??????


அந்த தலைமுறையில் வாழ்ந்த சிறு பெண் குழந்தைகளை கண்டாலேயே பிரிட்டிஷ் படைப்பிரிவினருக்கு அலறல் ஏற்படுமாம்.


இன்று பெயர் மாத்திரமே தெரிந்த சிலராக சுதந்திர இந்தியாவில் சுகமாக வாழ்ந்து கொண்டு வருகிறோம்.


💓 ஜெய் ஹிந்த்.


Wednesday, November 17, 2021

வ.உ.சிதம்பரம் பிள்ளை

 தான் இறப்பதற்கு 23 நாட்கள் (26.10.1936) முன்னர் தூத்துக்குடி அசெ. சு. கந்தசாமி ரெட்டியாருக்கு கப்பலோட்டிய செம்மல் வ உ சி எழுதிய உயில் 


மூத்தமகன் ஆறுமுகத்திற்கு பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்து இருக்கிறேன், ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 லாபம் கிடைக்க கூடும் ஆனால் ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 கடன் பெற்றுள்ளேன்; கடனுக்கும் லாபத்திற்கும் சரியாக போகும். 2 கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியம் கட்டப்படவில்லை அது கட்டப்பட வேண்டும். 


எனது பாகத்திற்கு ஒட்டப்பிடாரத்தில் பெரிய புஞ்சையில் 2 சங்கிலி நிலமும் 16 மரக்கால் நஞ்சையும் கிணற்று தோட்டமும் இருக்கிறது, இது தவிர ஒட்டப்பிடாரத்தில் கீழ்க்காட்டில் 1.75 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று, .75 சங்கிலி புஞ்சை ஒன்றும் இருக்கின்றன என் மக்களால் அவ்வளவு தூரத்தில் உள்ள புஞ்சைகளையும் பயிர் செய்ய முடியாது. அவற்றை தங்கள் பெயருக்கு ₹500 கிரயம் செய்து கொடுக்க நினைத்து கொண்டு இருக்கிறேன். 


ஒட்டப்பிடாரத்தில் ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. மச்சை பிரித்தெடுத்து சுவர்களை இன்னும் 3 அடி உயர்த்தி தேக்கு தேக்கு மரக்கட்டை போட்டு மேல் பக்கமுள்ள இரண்டு சன்னகளுக்கு நேராக கீழ் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்து அரைவிட்டை புதுப்பித்து கொடுக்க வேண்டும்...... இப்போழுதும் ₹200 விலை போகக் கூடிய சட்ட புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன அவற்றை விற்க வேண்டும். 


இப்போது செய்ய வேண்டிய அவரச காரியம் என் மகளிருவரில் மூத்தவளாகிய சௌபாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்குகலியாணம் செய்து வைக்க வேண்டும் ₹500 க்கு அவளிடம் நகைகள் இருக்கின்றன. இன்னும் ₹500 க்கு நகைபோட வேண்டும். கலியாணப் பந்தல் செலவு ஒரு வருஷத்து சீராட்டு செலவு என ஒரு கம்பெனி பணம் ₹1000 சரியாய் போகும். மரகதவல்லி அம்மாளுக்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து கலியாணம் செய்து வைக்க வேண்டும் அவளுக்கும் அவளிடம் இருக்கின்ற நகைகளை சேர்த்து ₹1000 க்கு நகைகளை போட வேண்டும் அதற்கு மற்றொரு கம்பெனி பணம் சரியாய் போகும். 


என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகளை தாங்கள் வாங்கி வைத்து இருந்து கோவாப்பிரேட்டிங் சொஸைட்டியில் கொடுக்கிற கரண்ட் டிபாஸிட் வட்டி போட்டு கொடுக்க வேண்டும். இந்த நிலைமையில் என் மனைவி மக்களுக்கு அன்னவஸ்திர கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயல்கிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இரண்டும் தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன


தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு 5 மாத வீட்டு வாடகை ₹135 


தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி ₹30 


வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ₹30 


சில்லறை கடன் ₹60 


இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ₹20 


சோமநாத்துக்கு ₹16 


வேதவல்லி ₹50 


எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் 


_____________ 


தன் உயிலில் தன் கடன்களை மறவாமல் நேர்மையாக எழுதிய செம்மலுக்கு இன்று நினைவு நாள் (18.11.1936)....நன்றி ஜோதிஜி திருப்பூர்


சூரியாத்தனம்...

 

நிச்சயமாக சூரியா தெரிந்தே இத்தனையும் செய்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம்.இனியும் வில்லன் பெயரை மாற்றாது பம்மாத்து செய்து கொண்டிருந்தால் எம்மைப் போன்ற நடுநிலையாளர்கூட எரிச்சல் கொள்ளுதல் தவிர்க்க இயலாதது..இந்த விசயத்தில் கிடைத்த ஒரே ஒரு லாபம் சைகைக் காட்டியதும் ரொட்டி போட்டதும் குரைக்கக் கூடியவைகளை அடையாளம் காண முடிந்ததே..(அனைவரின் உண்மைப் பெயரைப் பதிவு செய்ததைப் போலவே வில்லன் பெயரையும் பதிவு செய்திருக்கலாம்..அல்லது அனைவரின் உண்மைப் பெயர்களையும் தவிர்த்திருக்கலாம்.செய்திருந்தால் யதார்த்தமாய் தெரிந்திருக்க வேண்டிய இந்தக் காட்சிகளை கூர்ந்து கவனிக்கத் தோன்றாது.மாறாக.ஆதிக்க இனத்தால் அதிகார வர்க்கத்தால் அன்றாடம் இன்றும் அல்லல்படுகிற பாமர மக்கள் குறித்த அற்புதமான படம் இது போன்ற குள்ள நரித்தனத்தால் குரங்காய் முடிந்திருக்கிறது..)

Monday, November 15, 2021

பகிர்வோமே..

 நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்த என்ன பண்றது - குரூப்ல ஒருத்தங்க கேட்ட கேள்வி


கற்பா, உயிரா னு பாக்கும் போது உயிர் பெரிசு. விட்ருங்க போகட்டும் என்பது போல பல வழிகாட்டல்கள். ஆனா போலீஸ கூப்பிடலாமே னு ஒரு பின்னூட்டம் கூட கண்ணுல படல.


போகட்டும் என்ன பண்றது. போலீஸ்னாலே கிளைமாக்ஸ் முடிஞ்சுதான் வருவாங்க அப்டீங்குற எண்ணம் மக்களுக்குள்ள இருந்திட்டே இருக்கு


சரி விஷயத்துக்கு வருவோம்.


இந்த மாதிரி சமயத்துல என்ன பன்றது?


ஒன்னு நீங்க 100 க்கு டயல் பண்ணி எந்த சூழ்நிலையா இருந்தாலும் சொல்லலாம். "100 கால் எங்களுக்கு High priority duty"  முதல்ல அத அட்டன் பண்ணீட்டுதான் வேற எந்த டியூட்டியா இருந்தாலும் பாக்கனும்.  அதிக பட்சம் 10-15 நிமிடங்கள்ள போலீஸ் அங்க இருக்கும்.


சரி, பேச முடியாத சூழல் துறத்துறானுங்க. நீங்க ஓடுறீங்கனே வச்சுக்குவோம். Play store la " Kavalan SOS" னு ஒரு ஆப் இருக்கு கண்டிப்பா எல்லோரோட போன்லயும் இருக்க வேண்டிய ஆப். இதுல உங்க சொந்தக்காரங்க போன் நம்பர் 5 எண்ணம் ஸ்டோர் பண்லாம். 


இந்த ஆப் ஓப்பன் பண்ணுனா ரெட் கலர்ல ரவுண்டா ஒரு வட்ட சிகப்பு நிற பொத்தான் டிஸ்ப்ளேயோட சென்டர்ல தெரியும். அதுல SOS னு பெரிசா எழுதிருக்கும். இத நீங்க ஆபத்து காலங்கள்ல ப்ரஸ் பண்ணும் போது உங்க சொந்த காரங்களுக்கு மட்டுமில்ல சென்னையில இருக்குற கண்ட்ரோல் ரூம், டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் ரூம், பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேசன், ரோந்துல இருக்குற காவலர்கள், ஹை- வே பேட்ரோல்,  பைக் - பேட்ரோல் எல்லாருக்கும் நீங்க ஆபத்துல இருக்கீங்க னு 15 செகண்ட்ஸ்க்குள்ள மேசேஜ் போகும். அது மட்டுமில்ல இது GPS based. ஆபத்துல இருக்குறவங்கள எங்களால டிராக் பண்ணி ஸ்பாட்டுக்கு போக முடியும். ரொம்ப சீக்கிரமா உங்களுக்கு உதவி கிடைக்கும். இதெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த எவ்வளவோ விளம்பரம் பண்ணியும் பெரிசா விழிப்புணர்வு இல்ல. 


களத்துல வேலை பார்க்குற எங்களுக்குதான் இதனால எத்தனை உயிரை பாதுகாத்துருக்கோம் னு தெரியும்.


So, பெண்கள் கண்டிப்பா இந்த ஆப் அ டவுண்லோட் பண்ணி வச்சுக்கங்க. ஆபத்து காலங்கள்ள உதவும். எப்பனாலும் உதவிக்கு காவல்துறையை கூப்பிடுங்க. யாரு வந்தாலும் வரலைனாலும் போலீஸ் நாங்க வந்து நிற்போம். காவல்துறை எப்பவுமே உங்கள் நண்பன்தான்.



கொஞ்சம் Share பண்ணுங்க !!

Sunday, November 14, 2021

சூரியா...ஜாதி வன்மம் பிடித்தவரே..


 இது வன்முறை போலத்தான் படும்..படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் உண்மைப் பெயரை வைத்துவிட்டு ஒரு மோசமான கதாபாத்திரத்துக்கு மட்டும் வேறு பெயரை வைத்து அதுவும் வன்னியர் தலைவராக இருந்த ஒருவரின் வைத்தது...இவ்வளவு எதிர்ப்பு வந்தும் மாற்றாமல் கம்னியூஸ்டுகள் நல்லவர்கள் வல்லவர்கள் என பேட்டிக் கொடுப்பது..இதற்கு மட்டும் பதில் சொல்லாமல் தெனாவெட்டாகத் திரிகிறவருக்கு வேறு எப்படி ரெஸ்பாண்ட் செய்வது..இதைச் சொன்னவருக்கு மிதிப்பது என்பது நோக்கம் இல்லை..நிச்சயம்இதை எதிர்த்து வன்முறை என கோர்ட்டுக்குப் போனால் கோர்ட் நிச்சயம் இதை நீக்கவே சொல்லும்..இது ஜாதியை வைத்து கல்லாக்கட்ட நினைப்பவர்களுக்கு நிச்சயம் இது ஒரு பாடமாகவே அமையும்...பதினாறு வகை காய்கறி வைத்து ஓரத்தில் கொஞ்சம் மலம் வைத்த கதையாய் ஒரு அற்புதமான படம் எடுத்து அதில் தன் ஜாதி வன்மத்தை காட்டிய சூரியா அவர் மரியாதையை அவரே கெடுத்துக் கொண்டார் எனத்தான் எனக்குப்படுகிறது..(இதிலெல்லாம் ஒன்றுமில்லை என சூரியா நினைப்பார் ஆயின் அந்த வில்லன் பெயரை அவர் ஜாதி சார்ந்த தலைவரின் பெயரை வைத்து நிரூபிக்கலாம்..)

தெரிந்து கொள்வோமே..


 இதுவரை இந்த விசயம் எனக்குத் தெரியாது.அறிவோம்..பகிர்வோம்..அனைவரும் பயன் படச் செய்வோம்...

Saturday, November 13, 2021

கொடுமையிலும் கொடுமை என்பது...


 மனம் வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும்போது கூட அந்த நாயை என எழுதாமல் அந்த சார் என எழுதி வைத்துப் போகும் மாணவியை நினைக்க கண்கலங்குவதைத் தவிர்க்க இயலவில்லை..

Friday, November 12, 2021

இசை அரசி.பி.சுசிலா



         ....   *'பி. சுசீலா'* அல்லது *புலப்பாக்க சுசீலா* *(பிறப்பு: நவம்பர் 13, 1935)* இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப், பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக *25,000* பாடல்களுக்கு

மேல் பாடி, கோடானு கோடி ரசிகர்களின் இதயங்களில்

குடி கொண்டுள்ளார்.


     சுசீலா, ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் *புலப்பாக்க முந்தராவ் - சிறீசம்மா* தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். சுசீலாவுக்கு 5

சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். இவரது தந்தை

ஒரு வக்கீல்லாக இருந்தார். சுசிலா அங்குள்ள பெண்கள் உயர்நிலைப்

பள்ளியில் கல்வி பயின்றார். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை

மேதையான, துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக

இசை பயின்றார்.


    சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் *”பாப்பா மலர்”* நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். சுசீலாவின் இசைத்

திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ், தனது

*’பெற்றதாய்’* படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த அப்படத்தில் ஏ.எம்.ராஜாவுடன்

இணைந்து, பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில்,

*”ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு”* என்று துவங்கும் பாடலைப் பாடினார்.


   1953 ஆம் ஆண்டில் சிவாஜி நடித்த *‘அன்பு’* படத்தில் பாடுவதற்கு

இப்படத்தின் இசையமைபாளர் டி.ஆர்.பாப்பா இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார். ஆனால் சுசிலாவின் தமிழ் உச்சரிப்பு சரியாக

அமையாத காரணத்தால் அப்படத்தில் பாடும் வாய்ப்பை இழந்தார்.


     இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில், எஸ்.ராமராவ் இசையில், *'மனம்போல் மாங்கல்யம்'* படத்தில்,

*‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’* என்றப் பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த *'கணவனே கண் கண்ட தெய்வம்'*

படத்தில் இடம்பெற்ற *”எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்”*,

என்ற பாடலும் *“உன்னைக் கண் தேடுதே”* என்றப் பாடலும்

இவரது இனிய குரலில் மிகவும் புகழ் பெற்றதோடு இவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தன. ஆர்.சுதர்சனம் இசையமைத்த

*"டொக்டர்"* என்ற சிங்களப் படத்திலும் சுசிலா பாடியுள்ளார்.


    டி.எம்.சௌந்திர ராஜனோடு இணைந்து முதன் முதலாக, 1955 இல்

*‘செல்லப்பிள்ளை’* படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் சுசிலா

பாடினார். இதனைத் தொடர்ந்து 1956 இல் *‘பெண்ணின் பெருமை’* படம் உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் சௌந்திரராஜனோடு

இணைந்து சுசிலா பாடினார். இவ்விருவரும் இணைந்து பாடியிருக்கும் எண்ணற்றப் பாடல்கள் ரசிகர்களின் ஏகோபித்த

வரவேற்பைப் பெற்றவையாகும்.


      சுசிலா, சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, டி.ஏ.மோதி, ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம், பி.பி.ஸ்ரீனிவாஸ்

பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ்,

மலேசிய வாசுதேவன், ஜெயசந்திரன் போன்ற ஏராளமானப்

பாடகர்களுடன் இணைந்தும் தனித்தும் காதுக்கினிய கானங்கள்

பலவற்றை காணிக்கையாக்கியிருப்பது ஒரு சாதனையாகப்

போற்றப்படுகிறது.


    தவிரவும் பழம்பெரு இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன் தொடங்கி, பல்வேறு மொழிகளின் இசையமைப்பாளர்களின்

இசையமைப்பில் இவர் அழியாப் பாடல்கள் பலவற்றைப் பாடி

உலகெங்கிலுமுள்ள இவரது அபிமான ரசிகர்களுக்கு இன்ப

இசை விருந்து படைத்திருப்பதை சாதாரணமாகக்

கருதுவதற்கில்லை. தனித்துவமான தனது இனியக் குரலால்,

இதயங்களை ஈர்க்கும் வசீகரத் தன்மை சுசிலாவிடம் குடி கொண்டிருந்தது.


   *’அமுதைப் பொழியும் நிலவே’, ’மன்னவன் வந்தானடி தோழி'*,

*‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ’அழைக்காதே நினைக்காதே’*,

*‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல’*, *’நாளை இந்த வேளை பார்த்து’*, *‘ஒருநாள் யாரோ’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’*,

*’ஆலயமணியின் ஓசையை’, ‘உன்னை நான் சந்தித்தேன்’*,

*‘அழகே வா அருகே வா’*, *‘என்னை மறந்ததேன் தென்றலே’*,

*‘இதுதான் உலகமா’*, *‘என் வேதனையில் உன் கண்ணிரண்டும்’*,

போன்றப் பாடல்கள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா

இடம் பெற்றவை.


    இவர் தாம் பாடிய பலப் பாடல்களுக்கு ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்தியப் பாடகிக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த *’சில நேரங்களில்’* என்ற திரைப் படத்தில்

*“பொட்டு வைத்த”* என்றப் பாடலைப் பாடியிருந்தார்.


    1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரை சுசிலா

திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். வயது முதிர்ச்சியால் சுசிலா தற்போது திரைப்

படங்களில் பாடுகின்ற வாய்ப்பை இழந்து விட்டாலும், அவர்

ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சிறப்பு

விருந்தினராகவும் தொடர்ந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.



            

நீரால் கஷ்டம் நீரின்றி கஷ்டம்



 

Thursday, November 11, 2021

நிஜ நடிகர் சூரியாவுக்கு


 தனிநபர் யாரையும் குறிப்பிடுவன அல்ல எனச் சொல்லிக் கொண்டு ஏன் நீதிபதிஅவர்களை இறுதியில் புரொமோட் செய்கிறீர்கள்...எல்லோருடைய உண்மைப் பெயரைப் பயன்படுத்திவிட்டு வில்லனுக்கு மட்டும் பெயர் மாற்றி பம்மாத்து செய்கிறீர்கள்..முற்படுத்தப்பட்டவர்கள் என்றால் அவர் சிறப்பானவர் என்றால் அதை அப்படியே சொல்ல மனம் வராது..பிணம் முன் டான்ஸ் ஆடவிட்டு அவரை அறிமுகத்திலேயே வேறுமாதிரி காட்டி ஏன் மட்டரக ஜாதிஅரசியல் செய்கிறீர்கள்..சாரி சூர்யா சார் உங்கள் சமூகப் போராளி ஒப்பனைகள் சரியாகப் பொருந்தவில்லை..சரிசெய்யப் பாருங்கள்..

Monday, November 8, 2021

சாதம் பிரசாதமாகிறது..


 ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை..இந்துக்கள் தண்ணீர் தெளித்தால் பிரசாதம்...இவர்கள் இப்படிச் செய்தால்...அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு உசத்தி..

சிங்காரச் சென்னையும் ஐப்பசித் துயரும்..

.


மன்னனின் அலட்சியத்தால்

கணவனை இழந்த கண்ணகி

தலைவிரி கோலமாய்

அடக்கவொணோ ஆக்கிரோசமாய்

மதுரை வீதி அலைந்த நிலையாய்..


மக்களின் அலட்சியத்தால்

தான் நடந்த வழிகளையும்

தங்கி வாழ்ந்த குளம் குட்டைகளையும்

இழந்த மழைநீர்

சென்னை வீதிகளில்

வெறிபிடித்து அலைகிறது...


ஒவ்வொரு ஆண்டும்

முறையாய் அதனை 

ஆற்றுப்படுத்த முயலாது

தலைமுடிபிடித்து தள்ளுதல் போல்

அலட்சியமாய் கடத்த முயல்வதால்


தொலைந்த குழந்தையைத் தேடி

பித்துப்பிடித்தலையும் தாயாய்

மீண்டும் மீண்டும் அது 

கூடுதல் பலம் சேர்த்து வருகிறது

மிக மிக ஆக்ரோஷமாய்....


அதற்கான முறையான வழிகாட்டாது

இருந்து போக இடம் கொடாது

சாமர்த்தியமாய் திரிகிற வரை

சிங்காரச் சென்னைக்கான

இந்த ஐப்பசித் துயரத்திற்கு

விடியல் என்பது கிடையாது


குற்றமுணர்ந்து நீதி வழங்கிய

பாண்டிய மன்னனாய்

நாமும் தவறை உணர்ந்து

திருந்தாத வரையில்

சென்னைக்கான இந்த ஐப்பசிச் சாபத்திற்கு

விமோசனம் என்பதே கிடையாது

Sunday, November 7, 2021

அறிவோம்...பகிர்வோம்

 1. The *STOMACH*

     is injured when

     you do not have

     breakfast in the

     morning.

காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.


2. The *KIDNEYS*

     are injured when

     you do not even

     drink 10 glasses

     of water in 24

     hours.


தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.


3. *GALLBLADDR* 

    is injured when

    you do not even

    sleep until 11

    o'clock and do not

    wake up to the

    sunrise.


இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.


4.  The *SMALL*

     *INTESTINE* is

      injured when you

      eat cold and stale

      food.

மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.


5.  The *LARGE*

     *INTESTINES* are

      injured when you

      eat more fried

      and spicy food.


அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.


6.  The *LUNGS* are

      injured when you

      breathe in smoke

      and stay in

      polluted

      environment of

      cigarettes.

புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும். 



7. The *LIVER* is

     injured when you

     eat heavy fried

     food, junk, and

     fast food.


துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு. 


8. The *HEART* is

     injured when you

     eat your meal with

     more salt and

     cholesterol.


அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும். 


9. The *PANCREAS*

     is injured when

     you eat sweet

     things because

     they are tasty and

     freely available.


அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும். 


10. The *Eyes* are

       injured when you

      work in the light

      of mobile phone

      and computer

      screen in the

      dark.


இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும். 


11. The *Brain* is

       injured when you

       start thinking

       negative

       thoughts.


எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும். 


12. The *SOUL* gets

       injured when you

       don't have family

       and friends to

       care and share

       with you in life

       their love,

       affection,

       happiness,

       sorrow and joy. 


நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.


     *All these body parts are NOT available in the market. நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*


 So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.


EFFECTS OF WATER      

தண்ணீரின் அவசியம்.             

💐 We Know Water is 

       important but never 

       knew about the 

       Special Times one 

       has to drink it.. !!

தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம். 


       Did you???  உங்களுக்குத் தெரியுமா???


 💦 Drinking Water at the 

       Right Time ⏰ 

       Maximizes its 

       effectiveness on the 

       Human Body;

சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.


       1⃣  1 Glass of Water 

              after waking up -

             🕕⛅ helps to 

              activate internal 

              organs..

காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும். 


       2⃣  1 Glass of Water 

              30 Minutes  🕧 

              before a Meal - 

              helps digestion..

உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது. 


       3⃣ 1 Glass of Water 

              before taking a 

              Bath 🚿 - helps 

              lower your blood 

              pressure.

குளிப்பதற்கு முன்னர் ஒஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 


       4⃣ 1 Glass of Water 

              before going to 

              Bed - 🕙 avoids 

              Stroke  or Heart 

              Attack.

இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.


      'When someone 

       shares something of 

       value with you and 

       you benefit from it, 

       You have a moral 

       obligation to share it 

       with others too.'

So..., DO yours!..


யாராவது நமக்கு ஏதாவது செய்தியைப் பகிர்ந்து, அதனால் நாம் பலனடைந்தால் அத்தகவலை மற்றவர்களுக்கும் பகிருவது நமது தார்மீகப் பொறுப்பாகும். எனவே நீங்களும் உங்களது பங்கைச் செய்யுங்க.....

Saturday, November 6, 2021

படித்துப் பதறினால்..உடன் பகிரத்துடித்தால் ..நீங்களும் நம் இனமே

 வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? - நேர்மையான  அலசல் !

கொரனா வந்து 3 மாதங்களாகிவிட்டது......

அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்......முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்... இதற்கு நடுவில் கொரனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு.....வேலையிழந்தோர் பல லட்சம் ......


இதற்கு பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தேடியுள்ளேன்...


1. மது..

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது... தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்... உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகாரர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது... குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரமோ செய்ய முடிவதில்லை.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை... அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்... வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று...

இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும், இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூக விரோதிகளாகவும் உருவாகும் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...


2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்... மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.


3. நூறுநாள் வேலை..


இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை... ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்.. வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...


4. இலவசங்கள்...

அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..


5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்.. அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை... 


6. ஆக்கிரமிப்பு இடமும் கோடி ரூபாய்க்கும் மேல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


இத்தகைய காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது...  சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்.. 10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பள பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்ததாக சொல்லுவார்கள்..


தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்... ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது... தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுனர்கள் ஒருநாளைக்கு பெறும் ₹850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட வடநாட்டவர்கள் ...... 2 மணிநேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்கு செய்கிறார்கள்.. தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்... 


இதுதான் பெயிண்டர், ஆசாரி, பிளம்பர், எலக்ட்ரீசியன்  வேலைகளுக்கும்... 


நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை... சொல்லப்போனால் இங்கு உள்ள 100% பானிபூரி வண்டிகளில்  30% கூட வட இந்தியர்களுடையதல்ல.. 70%க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்... 


கடைசியாக..


நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்... இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசுகளே சாராயத்தை விற்று லாபத்தை தேடுவதுதான் உச்சபச்ச கொடுமை...


கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள்  எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப்பிழைக்கும்...


ஆம்..


#தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு# என்னவாயிற்று தமிழர்களுக்கு?


 பணப்புழக்கம்.

ஏன் இங்கு இல்லை.


இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்கு காரணம் ஏன் எது?


தமிழர்கள்  உடல் உழைப்பை விரும்புவதில்லை.... அதோடு சாராயம் மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


ஒரு நண்பர் கீழ் கண்டவாறு கூறினார் .

நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன், வண்டி வாகனங்கள் இதையெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள், இப்பொழுது வேலை செய்வது  இல்லை, முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உடல் உழைப்பு தந்து தனது பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்... விரைவில் தமிழனும் பிச்சை எடுப்பான் அன்று புரியும்.


ஹார்டுவேர்ஸ், பெயின்டர்கள் கார்பெண்டர்,பெரிய ஆள் ஹெல்பர்கள் ,பிட்டர்கள், டெய்லர்கள் , மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர் , மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள்.


தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர் அவரிடம் பேசினோம் அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிறுகிறுத்தது,


மாதம் மாதம் 10,000.(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னார் அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன் .


வந்தப்பின்தான் யோசித்தேன் இந்த ஒருவர் மாதம் 10,000.அனுப்புகிறார் ,இப்படி 10.பேர் அனுப்பினால் #ஒருலட்சம் 


நூறுபேர் அனுப்பினால் # பத்து லட்சம்


ஆயிரம் பேர் அனுப்பினால் # ஒரு கோடி 


பத்து லட்சம் பேர் அனுப்பினால் #  ஆயிரம் கோடி 


மனம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது முதலில் இவரின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன். தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு

 #திருப்பூரில்  மூனு லட்சம் பேரும் #கோவையில்_ஏழுலட்சம் பேரும் 

#சென்னையில்_ இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள் அப்போ சேலம் ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்துபோன நான் , சென்னை ,கோவை, திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து , கணக்கு பார்த்தேன் மொத்தம் முப்பது லட்சம்பேர் ஒருவர் மாதம் மாதம் பத்தாயிரம் என்றால் 30லட்சம் பேர்க்கு கணக்கு போட்டேன் #மூனாயிரம்கோடி எனக் காட்டி விட்டு கால்குலேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது .


மாதம் மாதம் 3,000 கோடி என்றால் வருடத்திற்கு 36,000 கோடி இது அனைத்தும் #தமிழ்நாட்டில் #புழக்கத்தில் இருந்தால், அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு தமிழக மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப்பணம் #வடமாநிலங்களில் புளங்கிக் கொண்டிருக்கிறது .அங்கே இருக்கும் மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது .


இது வெறும் தமிழகத்தின் மூனு மாவட்டக் கணக்கு ,மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும். வடமாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து  கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி மயக்கம் வந்து மூர்ச்சையாகி இறந்தாலும்  இறந்துவிடுவோம். 


இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கணக்கெடுத்து அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை.


இன்னொரு பிரச்சினை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம் கைத்தொழில், எல்லாவகையான சிறு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது . அதனால் லட்சக்கணக்கான பொருட்கள் அதாவது, உளி , சுத்தியல் ஆரம்பித்து  மருத்துவர் போடும் ஊசி வரை. அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில் அது ஒரு தனி கதை.


சத்தமின்றி யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும் உழைப்பில்லாமலும் இந்த மாபெரும் பொருளாதார போராட்டத்தில் தமிழன் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது இதை தமிழன் எப்போது உணர்வது.?. 


மிகவும் கொடுமையானது ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர்கைகளில் சென்று கொண்டுள்ளது, களை எடுத்தல், அறப்பு அறுத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள் இனி என்னாகும் யோசியுங்கள்.


பட்டாலும் கெட்டாலும் வருந்தாத திருந்தாத தமிழன் இருக்கும்வரை தமிழனக்கு எதிரான இந்தப் பொருளாதாரப்போராட்டம் தொடர்ந்து நாம் பிச்சைக்காரர்கள் மாதிரி வாழ வேண்டும். இந்த பிச்சைக்கார நிலைமையில் அந்நிய சக்திகளின் தேசவிரோத நடவடிக்கைகளுக்கும் நம் தமிழர்கள் விலை போகிறார்கள். #தமிழா இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் குடியிருப்பு காலி மது பாட்டில்களால் நிரம்பி இருக்கும் அது உன் கண்களுக்கு தெரியாது உன்னால் தொடவும் முடியாது,  பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்.?.


வாழ்க தமிழ். தமிழ்நாடு. தமிழ் மக்கள்.

-------=====-------

 எனது நண்பரிடம் இருந்து எனக்கு வந்த பதிவு. மனம் சங்கடப்பட்டது. பகிரத் தோன்றியது பகிர்ந்தேன். 

*இது முற்றிலும் உண்மை*

Friday, November 5, 2021

நீட் குறித்து...நீட்டாக ஒரு பதிவு..

 *திராவிட கட்சிகளின் பொய்களைப் பொடிப் பொடியாக்கும் NEET முடிவுகள்:* 


மேடைகளில், தொலைகாட்சி. விவாதங்களில் , ராஜன் குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களைப் பொடிப் பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட் முடிவுகள்.* 


 பொய்# 1:

 நீட் தேர்வு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?. 


முடிவுகள் சொல்லும் உண்மை: 


 *இந்தாண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநில போர்ட்களில் படித்தவர்கள்.* 


பொய்# 2:

 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.


 முடிவுகள் சொல்லும் உண்மை:


 *திருச்சியில் மட்டும், அரசு நடத்திய பயிற்சி வகுப்புகளில்  பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.* 


 பொய்#3

 அரசுப் பள்ளி மாணவர்கள்  முதல் முறையில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது.


முடிவுகள் சொல்லும் உண்மை:  *அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* 

பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி  மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).

ஹரீஷ் குமார் (ஏழுமலை  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373) 

எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351) 

 *ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.* 

 *மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.* 


பொய்#4 

கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு.


முடிவுகள் சொல்லும் உண்மை: 


 கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறிய  பெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றுள்ளார்.* 

அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

கடந்த ஆண்டு விவசாயக் கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.


பொய்# 5:

தமிழக மாணவர்களுக்கு  நீட் தேர்வு கடினமானது.


முடிவுகள் சொல்லும் உண்மை:  *கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி  பெற்றுள்ளனர்.* 

 

 *கடந்த ஆண்டு : 57 216.* 

 *இந்த ஆண்டு: 58,922* 


அனைவரும் அறிய வேண்டியது:


 *முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.* 


செய்ய வேண்டியது: #1 


நீதிமன்றத்தில் இந்த தரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவ வேண்டும்.


#2  *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.* 


செய்வார்களா?


இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக்காட்சிகள் அலசுவார்களா?


 *சகோதரர்களே!!!* 

 *நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்* .🙏🙏

நன்றி...... 


மேலும் தகவல் களுக்கு

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா- !!!!


மேற்கண்ட நீட்  பற்றிய எனது முகநூல் பதிவு எழுத்தாளர் மாலன் அவர்கள்  பதிவிட்டது.  அதன் முக்கியம் கருதி எனது முகநூலில் மறு பதிவிடுகிறேன். மாலன்  அவர்களுக்கு நன்றி

ஏனிப்படி...

 #ஜெய்பீம் சூர்யாவுக்கு நறுக்கென சில கேள்விகள் :


ஜெய் பீம் படம் பார்த்தேன்.. பிரமாதமான மேக்கிங்.. விழுப்புரம் மாவட்டத்தின் பேச்சு வழக்கை எழுத்தாளர் #கண்மணி குணசேகரனின் உதவியுடன் தத்ரூபமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள்.. வட தமிழக பேச்சு வழக்கை வெள்ளித்திரையில் காட்டி இருப்பதற்கு மிக்க நன்றி... எங்கள் இருளர் சமுதாய சொந்தங்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருந்தீர்கள்.. அதற்காகவும் நன்றி... இப்படத்தின் மூலம் சம்பாதித்த பல கோடியில் ஒரு கோடியை எங்கள் சமுதாயத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள்.. ( இதை கணக்கு காட்டி வருமான வரியை குறைத்து செலுத்தலாம் என்பது தனிக்கதை ).. இருந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உதவியதற்கு நன்றி... 


சரி விஷயத்திற்கு வருகிறேன்... உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என்பதால் வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட அப்பாவி ராஜிகண்ணு என கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்... அதே வேளையில் நிஜத்தில் எங்கள் சொந்தம் ராஜி கண்ணுவை மிக மிக *கொடூரமாக அடித்துக்கொன்ற சப் இன்ஸ்பெக்டரின் பெயர் அந்தோணி சாமி* .. அவர் *கிறிஸ்தவர்* (தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்) .. ஆனால் *திரைப்படத்தில்* அவர் பெயரை *குருமூர்த்தி* என *மாற்றி* இருக்கிறீர்கள்.. அதோடு அவரை *இந்து வன்னியராகவும்* காட்டி இருக்கிறீர்கள்... அதேபோல எப்பொழுதும் *நமச்சிவாய* என சொல்லிக் கொண்டிருக்கும் *வழக்கறிஞரை* ஒரு சமூக *கோமாளி* போலவும் சித்தரித்து உள்ளீர்கள்... உங்களின் *சூரரைப்போற்று* திரைப்படமும் *தொழிலதிபர் கோபிநாத்தின்* வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.. கோபிநாத் தெய்வ பக்தியுள்ள *பிராமண* சமுதாயத்தைச் சேர்ந்தவர்.. ஆனால் படத்தில் *அவரை பெரியாரியவாதியாக*, கடவுள் மறுப்பாளராக காட்டியிருந்தீர்கள்.. 


அப்பாவி இந்து மதத்தின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு *வன்மம்*..? #ஜெய்பீம் திரைப்படத்தின் இறுதியில் நீங்கள் நன்றி சொல்லி போட்டிருக்கும் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களாக வருகின்றன... நீங்கள் ஸ்டாலினை சந்திக்கும் பொழுது உங்களுடன் அம்மதத்தை சேர்ந்த பெரியவர்கள் இருந்தார்கள்.. இதெல்லாம் உங்கள் மீது பெருத்த சந்தேகத்தை வரவழைக்கிறது... ஏற்கனவே அப்பாவிகளான இந்துக்களை, குறிப்பாக எங்களைப்போன்ற இருளர், மீனவர், பறையர் போன்றோரை ஏதேதோ பொய் புரட்டுகளையும், ஆசை வார்த்தைகளையும் கூறி மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்... மதமாற்றத்தால் அகண்ட பாரத தேசம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் , இலங்கை என சிதறுண்டு கிடக்கிறது... இந்தியாவில் மிச்சம் மீதி இருக்கும் இந்துக்களையும் மதம் மாற்றிக்கொண்டு இருக்கும் சதிகாரர்களுடன் கைகோர்த்து, நீங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது.. உங்கள் தந்தை எவ்வளவு பெரிய பக்திமான்.. நீங்கள் அவருக்கும் அவரது கொள்கைகளுக்கும் துரோகம் இழைப்பதாக தோன்றவில்லையா!? 

இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமா ?உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா ?



நாங்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டாலும் எங்கள் கலாச்சாரத்தை விட்டு எப்பொழுதும் விலகியது இல்லை ... எங்களுக்கும் பலமுறை பண ஆசை காட்டி மதம்மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள் .. சிவபெருமானின் வாரிசுகளான இருளர்ளாகிய நாங்கள் அதற்கெல்லாம் அடிபணியவில்லை... எங்களை வழிநடத்த எங்கள் குலதெய்வம் இருக்கிறது... எங்கள் கலாச்சாரம் , எங்கள் வாழ்வியல் தான் எங்களுக்கு அடிப்படை.. அதை மாற்றிக் கொண்டால் எங்கள் இனமே அழிந்து விட்டதாக அர்த்தமாகிவிடாதா ? 

எப்போதாவது எங்காவது இந்துக்கள், மற்ற மதத்தினரை கத்திமுனையில் மதம் மாற்றியதாக வரலாறு உண்டா ? பணம் கொடுத்தோ மற்ற மத தெய்வங்களை சாத்தான் என இகழ்ந்து பேசியோ மதம் மாற்றியதாக கேள்வி பட்டதுண்டா? தான் உண்டு தன் வேலையுண்டு என இந்தியாவில் மிச்சம் மீதி இருக்கும் எங்களை, எங்கள் வழியில் நிம்மதியாக வாழ விடுங்கள்... 

ஜெய்பீம் ! ஜெய் ஹிந்த்!


இப்படிக்கு ,


இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த உண்மைத் தமிழன் (வாட்ஸ் அப்பில் வந்தது) 

Thursday, November 4, 2021

நம்மவரின் நிகழ்ச்சி..



 இன்று 05/11/2021 வெள்ளிக்கிழமை  காலை   9.00 மணிக்கு மக்கள் தொலை க்காட்சியில்  நம் பதிவுல தோழர் கவியாழி கண்ணதாசன் அவர்கள் எழுதிய 'அம்மா நீ வருவாயா?  அன்பை மீண்டும் தருவாயா? எனும் தலைப்பில் (அவர்  எழுதிய  )புத்தகம் பற்றி 'என்னுள் என்நூல்' என்ற தலைப்பில்  பேசுகிறார்.பதிவர்கள்  கேட்டுவிட்டு தங்களின்


கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வோம்..