Saturday, July 23, 2011

முத்தான மூன்று முடிச்சு

மாய உலகம் ராஜேஸ் அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க

முத்தான மூன்று முடுச்சு பதிவுத் தொடரினை இங்கே

உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்

மானே தேனே என கமலஹாசன் ஆங்காங்கே

போட்டுக்கொள்ளச் சொல்லுகிற மாதிரி

"எனக்கு" என்பதையும்" மூன்று"

என்பதையும்ஆங்காங்கே சேர்த்துக்கொள்ள வேணுமாய்

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

பிடித்த உறவுகள்

1.தாயாய் தந்தையாய் இருக்கிற அன்பான மனைவி    
2.ஆண் வாரிசுக்குரிய பொறுப்போடு இருக்கிற பண்புமிக்க  பெண்வாரீசுகள்
3. சுய நலமற்ற நண்பர்கள்

பிடித்த உணர்வுகள்.  
               

1.அன்பு 
2.இரக்கம்
3.சந்தோஷம்

பிடிக்காத உணர்வுகள்.              

1.அச்சம்
2.ஆணவம்  
3.கழிவிரக்கம்

முணுமுணுக்கும் பாடல்கள்

1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா
2.துள்ளாத மனமும் துள்ளும்
3.தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

பிடித்த திரைப்படங்கள்

1.உதிரிப் பூக்கள்  
2.அன்பே சிவம்  
3.புன்னகை

அன்புத் தேவைகள்  

1.குடும்பம்  
2.உறவினர்கள்  
3. நண்பர்கள்

வலிமையை அழிப்பவை

1.அச்சம்
2.சோம்பல்  
3.கவலை

குட்டித் தத்துவம்  

1.அனுபவமே சிறந்த ஆசான்
2.கிட்டாதாயின் சட்டென மற
3.ஊக்கமது கைவிடேல்

பயமுறுத்தும் பயங்கள்  

1.வயதொத்தவர்களின் மரணம்
2.இயற்கையின் சீற்றங்கள்
3.ந்ட்பு வட்டத்தில் கறுப்பு ஆடுகள்

அடைய விரும்பும் நிலையான விருப்பங்கள்

1.சம நிலை மனது
2.திருப்தி
3.அமைதி

கற்க விரும்புவது  

1.யோகா    
2.வயலின்  
3.சமையல்

வெற்றி பெற வேண்டியவை

1.நேர்மறை எண்ணங்கள்
2.முறையான பயிற்சி
3.விடா முயற்சி

சோர்வு நீக்க தேவையானவை  

1.பிடித்த பாடல் கேட்பது
2.சூடான காபி
3.குழந்தைகளுடன் உறவாடுவது

எப்போதும் தயாராக இருக்க வெண்டியது    

1.உடல் நலம்    
2.செல்வ நிலை
3.உறவுகளின் நெருக்கம்

முன்னேற்றத்திற்கு  தேவை   

 
1.ஆசை  
2.பயிற்சி  
3.தொடர் முயற்சி

எப்போதும் அவசியமானது

1.உடல் நலம்  
2.போதுமான செல்வம்
3.உறவுகளுடன் நெருக்கம்

பிடித்த தத்துவம்  



1.இதுவும் கடந்து போகும்
2.உள்ளத்தனையதே உயர்வு
3.உடையது விளம்பேல்

தெரிந்து தெரியாது குழப்புவது

1.கடவுள் 

2.மனது 
3.இயற்கை

எரிச்சல் படுத்துபவர்கள்

1.பேசத் தெரிந்த முட்டாள்கள்

2.பேசத் தெரியாத புத்திசாலிகள்
3.பேச்சிலேயே சுகம் காண்பவர்கள்

மனங்கவர்ந்த பாடகர்கள் 

1.பி.பி.ஸ்ரீனிவாஸ்  

2.ஏ எம் ராஜா 
3.இளைய ராஜா

இனிமையானவை

1.புத்தகம் படிப்பது 

2.நண்பர்களுடன் உரையாடுவது
3.தனிமையில் உலாவுவது

சாதித்தவர்களின் பிரச்சனைகள்


1.தக்க வைத்துக் கொள்ள போராடுவது

2.உடன் அடுத்து உள்ளவர்களை சந்தேகிப்பது
3.தொடர முயலாது தேங்கி விடுவது

பிடித்த பழமொழிகள் 

1.மீன் பிடித்துக் கொடுத்துப் பழக்காதே மீன் பிடிக்கச் சொல்லிக் கொடு  

2.வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமாக எதையும் செய்வதில்லை செய்வதை வித்தியாசமாகச் செய்கிறார்கள்
3.மரம் வெட்டச் சொல்லி மூன்று மணி நேரமும் கோடாரியும் கொடுத்தால் முதல் இரண்டுமணி நேரத்தை  கோடாலியை கூர்படுத்துவதில் செலவிடு

 பதிவிட அழைக்கும் மூவர்  

 
1.மஞ்சுபாஷினி(http://manjusampath.blogspot.com/)
2,சந்திர கௌரி(http://kowsy2010.blogspot.com/)
3.வானதி (http://vanathys.blogspot.com/                                         

                                                  
                 

Monday, July 11, 2011

பயனற்ற பூமாலை

சிந்தனையைத் தூண்டாத கல்வி
சங்கடத்தில் உதவாத நட்பு
நம்பிக்கை தாராத பக்தி
பயன்படுத்த இயலாத சக்தி
தன்மதிப்பைக் கூட்டாத செல்வம்
சமயத்தில் இணையாத சுற்றம்
நம்மோடு இருந்தால்தான் என்ன?
இல்லையென்று ஆனால்தான் என்ன?

பயனின்றி பேசுகின்ற பேச்சு
ஆக்ஸிஜன் இல்லாத காற்று
தயார் நிலையில் இல்லாத படைகள்
உடலுறுப்பு மறைக்காத உடைகள்
மனமகிழ்ச்சி  தாராத கூத்து
நடப்படாது கட்டிவைத்த நாற்று
கணக்கின்றி  இருந்தால்தான் என்ன ?
இல்லையென்று போனால்தான் என்ன ?

நோய் நொடிகள் தீர்க்காத மருந்து
நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
தாய்தந்தை பேணாத தனயன்
தனனலத்தை துறக்காத தலைவன்
மேற் சொன்ன எல்லாமே வீண்தான்
பிணத்தின்மேல் பூமாலை போல்தான்

Friday, July 1, 2011

தன் முனைப்பு

சில வருடங்களுக்கு முன்பு எங்களூரில் மேற்கு ஊரணியும் மற்ற ஊரணிகளைப் போல
சாக்கடை ஊரணியாகத் தான் இருந்தது

ஒரு மழைமாத முடிவில் ஊரணியின் கிழக்குக் கரையில்ஒரு வேம்பும் அரசும் சேர்ந்து வளர
ஊரார் உற்சாகமடைந்து போயினர்

உடன் ஊர் கூடி முடிவெடுத்து கழிவுகளைக் கொட்டுதலை நிறுத்தி கால் நடைகள் இறங்குதலை தடுத்து
நாள் நட்சத்திரம் பார்த்துஒரு பிள்ளையாரையும் பிரதிஷ்டை செய்து வைத்தனர்

அழுக்கடைந்து கிடந்த குப்பைஊரணி "அரச மரத்து ஊரணி" என பேர் பெற்றுப் போனது. சீண்டுவாரின்றிக் கிடந்த நீர்
தீர்த்தமாகிப் போனது. குப்பைமேட்டுக் குளக்கரை கோவிலாகிப் போக ,ஊருக்கு அக்குளம் புஷ்கரணி ஆகிப் போனது

சில காலம் எல்லாம் நன்றாகத் தான் போனது

வெகு நாட்கள் கழித்து அவ்வூர் வந்த சூறைக் காற்று
புதிய சூழல் கண்டுபொருமிப் போயிற்று

"நீ வரும் முன்பு இக்குளத்தி பெயர் என்ன தெரியுமா குப்பைக் குளம்
உன்னால் அது இன்று புனிதக் குளம் ஆகிப் போனது உனக்கது தெரியுமா " என
அரச மரத்தை அசைத்துப் பார்த்தது

"அப்படியா" எனஅரசு அதிசயித்துக் கேட்க சூறை காற்று
 ராமாயணக் கூனியானது

"அதை கூட பொறுத்துக்கொள்ளலாம் பெயரில் கூடவா உன்னைப் புறக்கணிக்க வேண்டும்
ஊரணிக்கரை அரசமரம் என்பது எப்படி?அரசமரத்து ஊரணி என்பது எப்படி?
நீயே யோசித்து கொள்" எனஒரு விஷ விதையை ஊன்றிப் போனது
விஷ வித்தும் ஒரே நாளில் விஷ விருட்ஷமாக வளர்ந்தும் போனது

" நான் வருவதற்கு முன்பு உன் பெயர் குப்பை ஊரணியாமே" எனச் சொல்லிச் சிரித்தது அரசு
மர்ம ஸ்தானத்தில் விழுந்த அடிபோல கலங்கிப் போனது ஊரணி

"நீ வந்த விதம் ஊருக்குத் தெரியாது எனக்குத் தெரியும்
காக்கை எச்சத்தில்தானே நீ இங்கு கருத்தரித்தாய்
என் குப்பை நீரால் தானே உன் உயிர் வளர்த்தாய் " என்றது

" நானா ?ஊரே வலம் வந்து வணங்கும் நானா?உன் நாற்ற நீர் குடித்தா ?
என் புகழ் பொறுக்காது பொருமலில் பேசுகிறாய் நீ .உன் நாற்ற நீர் எனக்குத் தேவையில்லை.
எனக்கு ஆண்டவன் கொடுக்கும் மழை நீர் போதும் "எனச் சொல்லி
இனி அக்குளத்து நீரை தொடவேண்டாம் தன் ஆணிவேர்களுக்கு உத்தரவிட்டது அரசு

தானின்று அவளுக்கு ஏது வாழ்வென்றுஅகங்காரம் கொண்ட குளமும்
கிழக்கே செல்லும் ஊற்றுகளை திட்டமாய் அடைத்துவைத்தது

ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்
சாம்பலாகிப் போகும் பிரச்சனை,பக்குவமின்மையால் தீயாய் பற்றிக் கொண்டது
நீயா நான யுத்தம் நீண்டு கொண்டே போனது

இவர்களைக் கடந்து போன காலப் பறவைகள் இவைகளின்  முட்டாள் வீம்பு கண்டு கலங்கிப் போயின

நீரின்றி வேம்பும் அரசும் கருகத் துவங்க ஊரார் முகமும் சுருங்கத் துவங்க்கியது

"நீர் இருந்தும் வாடுகிறது எனச் சொன்னால் ஏதோ தெய்வ குற்றம்" இருக்கும் என
ஊரார் எண்ணத் துவங்கினர்.உள்ளூர் கோடாங்கியும்  அவர்களை அனுசரித்தே பாடி வைத்தான்

மீண்டும் நாள் நட்சத்திரம் பார்த்து பிள்ளையரை பெயர்த்தெடுத்து வேறு இடத்தில்
பிரதிஷ்டை  செய்து மகிழ்ந்தனர் கிராமத்தினர்

பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக
மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும்  ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும்
மற்ற ஊரணியை போல மீண்டும்  குப்பை ஊரணி ஆகிப் போனது