Monday, September 28, 2020

கொஞ்சம் முயன்றால் எல்லோரும் கவிஞர்களே

சீர்மிகு கவிகள் செய்ய.                                                                                                    சிந்தனை அதிகம் வேண்டாம்

கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்

Sunday, September 27, 2020

Yes..B.B (1 ) படித்ததும் பகிரப் பிடித்தது..

 பாடகர் SP  பாலசுப்ரமணியம் கடந்து வந்த பாதை..! 


என்ன மனிதர் இவர்..? 


இளையராஜாவை அறிமுகப்படுத்தினேன் என்று இதுவரை இவர் வெளிப்படுத்தியதே இல்லை.அவரும் வெளிக்காட்டியதில்லை. 


70 வயதிலும் கடவுள் ஆசியில் எனக்கு சுகர், பி.பி., என்று எந்த பிரச்னையும் இல்லை. 60 வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ் தானே..?


50  வருடம் பாடினாலும் 48 வருடம் கடனுடன் வாழ்ந்தேன் ...! 


2017, ஏப்ரல், குமுதம் நேர்காணலில்

தன் மனதுக்குள் இருந்த உணர்வை வெளிப்படுத்தினார் எஸ்.பி.பி.,


------------------------------------


50 வருட திரை இசை வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்த திருப்தியுடன் பௌர்ணமி நிலவாக ஜொலிக்கிறார் பாடும் நிலா பாலு. பொறியியல் படிக்க நெல்லூரில் இருந்து சென்னை வந்த சிறுவனை தமிழ் சினிமா இசையின் தவிர்க்க முடியாத குரலாக கொண்டாடித் தீர்த்தவர்கள் தமிழர்கள். அவர்களை சந்தித்து நன்றி நவிலும் பணியில் மும்முரமாக இருக்கிறார். அதற்காக உலகம் முழுவதும் சுற்றி எஸ்.பி.பி. லைவ் நடத்திக் கொண்டிருக்கும் இந்த உலகம் சுற்றும் பாடகனை ஒரு காலை வேளையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். 


உங்கள் அப்பாவின் கனவை நிறைவேற்றிய மகனாக ஒரு வாழ்க்கையை இளம் வயதில் உங்களால் வாழ முடிந்ததா?


நான் ஒரு இஞ்ஜினியர் ஆகணும் என்பது தான் என் அப்பாவின் கனவு. ஐ வாஸ் எ வெரி குட் ஸ்டூடண்ட். ஸோ, எனக்கும் அந்த கனவு இருந்தது. ஆனா நம்ம முயற்சி இல்லாமலேயே, நமக்குத் தெரியாமலேயே நான் ஒரு பாடகனாக வந்ததால கடவுள் தந்த பரிசா தான் இந்த வாழ்க்கையை நினைக்கிறேன். 

தெலுங்கில் என் முதல் பாடலை நான் பாடின பிறகு அப்பாவிடம் போய் விஷயத்தை சொன்னேன். ‘யாரோ தயவு பண்ணி உனக்கு படத்துல பாட சான்ஸ் கொடுத்திருக்காங்கடா...! கண்டசாலா முன்னால நீ எல்லாம் ஒரு எலி. அவர் ஒரு ஐராவதம் மாதிரி இருக்கார். எதோ வாய்ப்பு கிடைச்சிருக்கு பவ்யமா இரு. தொடர்ந்து வாய்ப்பு கிடைச்சா நல்லா ப்ராக்டீஸ் பண்ணி மேல வா. ஆனா படிப்பை மட்டும் விட்டுடாத’ என்றார். 

நான் என் இன்ஜினியரிங்கை தொடர்ந்து படிச்சுகிட்டே தான் பாடிகிட்டும் இருந்தேன். ஒரு கட்டத்துல காலேஜூக்கே போக முடியாத அளவுக்கு நான் மியூஸிக்ல பிஸி ஆன பிறகு, காலேஜில் அட்டென்டன்ஸ் பிரச்னை எல்லாம் வந்தது. மியூசிக்கா, படிப்பானு முடிவு செய்ய வேண்டிய நிர்பந்தம். அப்பாகிட்டயே போய் ஐடியா கேட்போம்னு முடிவு பண்ணினேன். ஒருவேளை அப்பா, ‘போய் படிக்கிறதை பாருடா’னு சொன்னா, மியூசிக்கை ஏறகட்டிட்டு இன்ஜினியரிங்கை தொடரலாம் என்பது தான் என் ஐடியா. அவர் அப்படித் தான் சொல்லுவார் என்றும் எதிர்பார்த்து போனேன். 

ஆனால் அவரோ, ‘நீ நல்ல பையன். நல்லா படிச்ச. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. வருங்காலத்துல உனக்கு எது சாப்பாடு போடும்னு உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனா ஒன்ணு. ஒரே சமயத்துல ரெண்டு குதிரையில சவாரி செய்யணும்னு மட்டும் எப்பவும் நினைக்காதே. உனக்கு எது பிடிக்குதோ அதுல மனசு வச்சு நல்லா உழைச்சு மேல வா. நீ இதை தான் செய்யணும்னு நான் சொல்லமாட்டேன்’ என்று தெளிவாக சொல்லிவிட்டார். 

சரி... ரெண்டு வருஷம் பார்ப்போம். மியூசிக் சரியா வர்லனா திரும்ப பையை தூக்கிட்டு காலேஜூக்கே போயிடலாம் என்ற முடிவோட தான் இசைத் துறைக்கு வந்தேன். ஆனா அப்புறம் திரும்பிப் பார்க்க கூட கடவுள் எனக்கு நேரம் கொடுக்கல.  

எங்கப்பாவோட அந்த கனவை நிறைவேற்ற முடியாம போச்சு. ஆனா எங்க அப்பா இருக்குற வரைக்கும் நான் செய்யுற வேலையை பார்த்து சந்தோஷப்பட்டுட்டு தான் இருந்தார். 


நீங்கள் ஏன் இப்போது வரை முறையாக சங்கீதம் பயில முயற்சிக்கவில்லை?


சினிமாவில் நான் பாட ஆரம்பித்த பிறகு, நான் முறையா சாஸ்திரீய சங்கீதம் பயின்று கச்சேரி பண்றதை பார்க்கணும் என்று அப்பா ரொம்பவே ஆசைப்பட்டார். கண்டிப்பா பண்றேன்னு சொல்லி இருந்தேன்.  ஆனா மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் ஒரு நாளுக்கு ஆறேழு ரிக்கார்டிங்கெல்லாம் பாடிட்டு இருந்ததால, அவரோட அந்த ஆசையை மட்டும் கடைசி வரை நிறைவேற்ற முடியாமலேயே போச்சு.

இப்ப வரைக்குமே சாஸ்திரீய சங்கீதம் கற்றுக்கொள்ள முயற்சி செஞ்சுகிட்டே தான் இருக்கேன். நேரம் கிடைக்கும்போது, ‘எனக்கு ஆதார ஸ்ருதியில இருந்து சங்கீதம் கற்றுக் கொடுங்க’னு யார்கிட்டயாவது போய் கேட்டா, ‘விளையாடாதீங்க சார். உங்களுக்கு தெரியாத சங்கீதமா’னு கேட்டு திருப்பி அனுப்பிடறாங்க. நான் என்ன செய்யுறது சொல்லுங்க? பிஸியா இருக்குறதுனால கத்துக்க முடியலனு சொல்றது எனக்கு நானே துரோகம் பண்ணிக்கிறேனோனும் தோணுது. இனிமே கத்துக்க முடியுமோ முடியாதோ? அதை காலத்துகிட்டயே விட்டுட்டேன். 


இளையராஜா?


வயசுலயும், வித்தையிலயும் எனக்கு சீனியர். சினிமாவில் எனக்கு ஜூனியர். இளையராஜாவுக்கு முன்னாலயே பாரதிராஜா தான் எனக்கு ஃப்ரெண்ட். அவன் பெட்ரோல் பங்க்ல வேலை பார்க்கும்போது தற்செயலா எனக்கு அறிமுகமானான். அவன் நாடகத்துக்கு போய் நான் லைவ்வா பாட்டு பாடுவேன். எனக்கு கொஞ்சம் புல்லாங்குழல் வாசிக்க வரும். அதனால அவன் நாடகத்துக்கு வாசிச்சிருக்கேன். இப்படி நாங்க நண்பர்களானோம். 

அப்ப நான் ஒரு சின்ன கார் வாங்கி இருந்தேன். நானே தான் டிரைவிங். கச்சேரிக்காக எங்க வெளியில போனாலும் பாரதிராஜா என் கூடவே இருப்பான். நிறைய கதைகள் சொல்லுவான். எல்லாமே ரொம்ப அட்வான்ஸ்டு திங்கிங்கா இருக்கும். அவனோட 16 வயதினிலே கதையை நானும் அவனுமே சேர்ந்து தயாரிக்கிறதா முடிவு பண்ணினோம். அப்ப எந்த மொழிப் படமா இருந்தாலும் பெங்களூர்ல ஷூட்டிங் நடத்துனா மானியம் கொடுத்துட்டு இருந்தாங்க. அதுக்காக பெங்களூர்ல ஒரு கம்பெனி ஆரம்பிச்சு வேலை பார்த்தோம். ஆனா ஆரம்பகட்ட ஷூட்டிங் நடத்தக்கூட எங்களால காசு புரட்ட முடியல. அப்புறம் நாலஞ்சு வருஷம் கழிச்சு தான் அவனுக்கு சான்ஸ் கிடைச்சது.

இதுக்கு இடையில நான் நிறைய மேடை கச்சேரிகள்ல பாடிகிட்டு இருந்தேன். அனிருத்தா என்கிறவர் தான் எங்க டீம் லீடர். அவர் தான் முதல் முதலா எனக்கு மேடையில பாடுற வாய்ப்பு தந்தவர். அவர் ஒரு ஹார்மோனியம் ப்ளேயர். கார்பரேஷன்ல வேலை பார்த்துகிட்டு இருந்தார். 

எங்க வீட்டுல நாங்க ஒருநாள் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தப்ப ‘நாங்க  பாராதிராஜா ஊர்காரங்க. அண்ணன் தான் உங்கள பார்த்துட்டு வர சொல்லி அனுப்பினாருனு மூணு பசங்க வந்தாங்க. ‘யார் யார் என்னென்ன இன்ஸ்ட்ரூமென்ட் வாசிப்பீங்க’னு கேட்டதும், ‘தம்பி ராசய்யா ஹார்மோனியம் வாசிப்பான்’ என்றார் பாஸ்கர். எங்க வாசிப்பானு சொன்னேன்.

ரெண்டு கையிலயும் பெல்லோஸ் போட்டு ரெண்டு கையாலயும், டாக்டர் ஷிவாகோ படத்துல வர்ற லாராஸ் மெலடி தீம் வாசிச்சான்... அசந்துட்டேன் நான். ‘எங்க மியூசிக் படிச்சீங்க’னு கேட்டேன். ‘எங்கயும் படிக்கல’ என்றார். ‘அப்புறம் எப்படி வெஸ்டர்ன் வாசிக்கிறீங்க’னு கேட்டதும், ‘என்னை அறியாமயே வாசிக்கிறேன் சார். எனக்கு மியூசிக் தெரியாது’ என்றார். அடடா இந்த பையனை விட்டுடக் கூடாதுனு மனசு அடிச்சுகிட்டது. ஆனா ஹார்மோனியத்துக்கு ஏற்கெனவே அனிருத்தா இருக்காரேனு சொன்னதும், ‘நான் கிடார் கூட வாசிப்பேன்’ என்றார். அதிலிருந்து எங்கள் குழுவின் கிடார் ப்ளேயர் ஆனார் ராஜா.

அதன்பிறகு அனிருத்தா வேலை காரணமாக எல்லா கச்சேரிக்கும் வரமுடியாமல் போனதால் ராஜா ஹார்மோனிய ப்ளேயர் ஆனார். அமர் சிங் என்ற கங்கை அமரன் கிடாரிலும், பாஸ்கர் ட்ரிபிள் காங்கோவிலும் அமர்ந்தனர். குழு பெயரை ‘பாவலர் சகோதரர்கள்’னு வச்சோம். ஆயிரக்கணக்கான கச்சேரிகள் பண்ணோம். 

அதுக்கு அப்புறம் தான் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட கிடாரிஸ்டா சேர்ந்தார். அப்ப ராஜா கம்போஸ் பண்ணின நிறைய பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் பேரில் வந்தது. அப்பவே ரொம்ப டிசிப்ளினா இருப்பார். அந்த நோட் சரியா வாசிக்கலனு ரிக்கார்டிங்ல யாராவது சொன்னா, ‘திரும்ப போட்டு கேளுங்க. நான் சரியா தான் வாசிச்சிருக்கேன்’னு போல்டா பேசுவார். அவர் இசை மேல அவருக்கு அப்படியொரு நம்பிக்கை எப்போதுமே உண்டு. அவருடைய attitude அப்படி. இப்போது கூட ராஜாவை சில நேரங்களில் தவறாக சிலர் நினைப்பதற்கு அந்த attitude தான் காரணம். 


ராஜாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்?


ரொம்ப பிடிச்சது அவனோட முயற்சி, டெடிகேஷன், டிசிப்ளின். புயலே அடிச்சாலும் ரிக்கார்டிங்குக்கு அவன் லேட்டா வந்தது இல்ல. 

பிடிக்காதது... அவனை சுத்தி ஒரு சின்ன வட்டம் போட்டுகிட்டு அதுக்குள்ளயே இருந்துட்டான். யாரையுமே கிட்ட நெருங்கவிட்டது இல்ல. அதுக்கு என்ன காரணம்னு அவனுக்கு தான் தெரியும். நாங்க ஆர்கெஸ்ட்ரா வெச்சிருக்கும்போது எவ்வளவு ஜாலியா இருந்தோம். எத்தனை அழகான நாட்கள் அவை. அப்பகூட அவன் ரொம்ப டிசிப்ளினா தான் இருப்பான். மேடையில நான் ஒரு ராங் நோட் பாடிட்டாகூட ‘என்னய்யா நீ... அந்த காந்தாரம் ஸ்ருதி சேராம பாடிட்டியே’னு கோவிச்சுப்பான். தொழில் ரீதியா இது.

பர்சனலா பார்த்திங்கன்னா நானும் பாரதிராஜாவும் தான் இன்னுமே அவனை வாடா போடானு பேசுற ஃப்ரெண்ட்ஸ். அதுவும் நாங்க அவன் கூட தனியா இருக்கும்போது ரொம்ப ஜாலியா ஜோவியலா பேசுவான். மேடைனு வந்துட்டா அவன் வேற. 

எனக்கு என்ன தோணும்னா இவன் கலகலப்பான வாழ்க்கையை மிஸ் பண்றானேனு தோணும். நிறைய பேரை சந்திச்சு, கருத்துக்களை பரிமாறிகிட்டு இன்னும் மகிழ்ச்சியா இவன் இருக்கலாமே. சன்னியாசி மாதிரி எல்லாரையும் விட்டு தூரமா இருக்கானேனு தோணும். அது அவனைப் பொறுத்தவரை கரெக்டா இருக்கலாம். ஆனா ஒரு ஃப்ரெண்டா எனக்கு அப்படி தோணும். 


பாடகர், நடிகர், இசையமைப்பாளர்.. இதில் முழு திருப்தி தந்தது எது?


சார்... நான் ஒரு பாடகராக வரவில்லை என்றால் இது எதுவுமே நடந்திருக்காது. என்னோட ஸ்பெஷல் குவாலிட்டியா எல்லோரும் சொல்றது ஐம் எ வெரி குட் எக்ஸ்பிரசிவ் சிங்கர். அதனால இயல்பாவே எனக்குள்ள ஒரு நடிகன் எப்பவும் இருக்கான். ரிக்கார்டிங்ல பாடும்போது நான் மைக் முன்னால எப்பவுமே நடிக்கத் தான் செய்வேன். 


உங்களுக்குள் இருந்த நடிகனை முதலில் எப்படிக் கண்டுகொண்டார் கே.பாலசந்தர்?


நான் என்னோட ஆந்திரா ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து மேடையிலே ஒரு  20 நிமிஷ மைம் செஞ்சேன். அதை பார்த்த கே.பி. சாருக்கு ஒரே ஆச்சர்யம். டேய்... பெரிய நடிகன்டா நீ. உனக்கொரு கேரக்டர் கொடுக்கணுமேனு சொல்லிகிட்டே இருந்தார். அதன் விளைவா கிடைச்சது தான் ‘மனதில் உறுதி வேண்டும்’ டாக்டர் கேரக்டர்.  

அந்த படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முதல் நாள் எங்கப்பா இறந்துவிட்டார். நான் முறைப்படி மொட்டை அடிச்சு அப்பாவுக்கு எல்லா சடங்குகளும் செஞ்சேன். 15 நாட்கள் கழிச்சு தான் என்னால வீட்டைவிட்டே வெளியில வரமுடியும்ங்கிற நிலை. ஆனா சத்யா ஸ்டூடியோவுல ஆஸ்பிட்டல் செட் போட்டு ரெடியா இருந்தார் கே.பி. சார். அப்ப சுஹாசினி ரொம்ப பிசியான ஆர்ட்டிஸ்ட். அவங்க டேட்ஸ் வேற வாங்கி வச்சிருந்தார். ‘என்னால இந்தப் படம் பண்ண முடியுமானு தெரியல சார்’னு அவருக்கு போன் செஞ்சு சொன்னேன். எனக்காக எல்லா டேட்ஸையும் மாத்தி 15 நாட்கள் காத்திருந்தார் பாலசந்தர் சார். அந்த படத்துல பார்த்திங்கனா கூட மொட்டை அடிச்சு லேசா வளர்ந்த முடியோட தான் இருப்பேன். அதுக்கப்புறம் தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 65 படம் நடிச்சிட்டேன். 


டைரக்ஷன் பக்கம் இன்னும் வரலியே?


ஆசை இருக்கு. ஒரு படமாவது டைரக்ட் பண்ணிடனும். ஆனா அதுக்கு முன்னால யாருகிட்டயாவது ஒரு படமாவது அசிஸ்டென்ட்டா வேலை பார்த்து சினிமாவை முழுசா கத்துக்கணும். நான் ஒரு இன்டிபென்டன்ட் டைரக்டரா இருக்கணும்னு நினைக்கிறேன். எல்லா டெக்னிக்கல் விஷயங்களையும் கத்துகிட்டு டைரக்டர் ஆகணும். நிச்சயமா டைரக்ட் பண்ணுவேன். 


எத்தனையோ பேருக்கு பாடி இருக்கீங்க. யாருக்கு உங்க குரல் அப்படியே பொருந்திப் போனதா நினைக்கிறீங்க?


ஒரு குரல் யாருக்குமே 100 சதவீதம் பொருந்திப் போகாது. நிச்சயமா இருக்கவே இருக்காது. முதல்லயே பாட்டு ரெக்கார்ட் பண்ணிடறோம். அதுக்கு ரொம்ப அழகா அவங்க நடிக்கும்போது எனக்கும் பேர் கிடைக்குது, அவங்களுக்கும் பேர் கிடைக்குது. அதே சமயத்துல நல்ல பாட்டை கெடுத்த நடிகர்களும் இருக்காங்க. ரிக்கார்டிங்ல உயிரை கொடுத்து பாடியிருப்போம். ஸ்கிரீன்ல அது வரலைனா எல்லாமே வேஸ்ட். ஆடியோவுல கேட்டு தான் சந்தோஷப்படணும்.

காமெடியன்சுக்கு பாடும்போது மட்டும் தான் குரலை மாத்தி ட்ரை பண்ணுவேன். எம்.ஆர்.ராதா அண்ணனுக்கு பாடியிருக்கேன், சுருளிராஜனுக்கு, தேங்காய் சீனிவாசனுக்கு பாடி இருக்கேன். அப்ப மட்டும் தான் லேசான மாற்றம் செய்துப்பேன். மத்தபடி வேற யாருக்குமே குரலை மாற்றிக் கொண்டது இல்லை.  


ஏர்.ஆர்.ரஹ்மான் முதல் சந்தோஷ் நாராயணன் வரை எப்படி இருக்கிறது இன்றைய இசை?


இன்றைய தலைமுறையிடம் திறமைக்கு எந்தக் குறையும் இல்ல. ஆனா அவங்க தங்கள் மனசை டெக்னாலஜி மேல வைக்கிற அளவுக்கு இசை மீது வைக்கிறது இல்ல. அந்த பாடலில் அதன் ஆத்மா வெளிப்படுவதில்லை. அதனால் தான் அந்த காலத்து பாட்டு மாதிரி இல்லனு நிறைய பேர் சொல்றதை இன்றும் கேட்க முடியுது. 

ஒரு படத்துக்காக கம்போஸ் செய்யப்படுகிற பாடல் சார்ட் பஸ்டரில் இருந்தால் போதும்னு நினைக்குறாங்க. அது நீண்ட நாட்கள் நிலைச்சு நிக்குமானு யோசிக்கிறதில்ல. 

அதுக்கு மியுசீஷியன்ஸை மட்டும் குறை சொல்லவும் முடியாது. பாலசந்தர், கே.விஸ்வநாத், மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு பாடலை மிஸ் பண்ணினா கதையில் ஒரு லிங்கை தவறவிட்டுவிடுவோம். அந்த அளவுக்கு அது படத்துடன் கலந்து இருக்கும். அந்த அளவுக்கு சேலஞ்சிங்கான சிச்சுவேஷன்கள் கொடுப்பாங்க. இன்றைக்கு அப்படிப்பட்ட பாடல்கள் அதிகம் வருவதில்லை. சாங் ஃபார் த சேக் ஆஃப் சாங். அந்த இடத்தில் ஒரு பாடல் இருந்தாலும் பரவாயில்லை. இல்லையென்றாலும் ஒன்றும் தவறில்லை என்பது போன்ற சிச்சுவேஷன்கள் தான் அமைக்கப்படுகின்றன. அது தான் பிரச்னையே. திறமையான பாடகர்கள், மியுசீஷியன்கள் இருந்தும் நல்ல பாடல்கள் இன்றைக்கு அரிதாகத் தான் அமைகிறது. 


இன்றைய இளம் தலைமுறையின் கம்போசிஷன்களில் பாடுவதற்கு முன் அவர்களை எப்படி கணிக்கிறீர்கள்?


முதலில் பாட்டை எனக்கு அனுப்ப சொல்லிடுவேன். அது அவர்களின் தகுதியை எடை போடுவதற்காக இல்லை. அந்த பாட்டை என்னால பாட முடியுமா முடியாதானு என்னை நானே எடை போட்டுக்க அப்படி சொல்லுவேன். சிலது ஸ்ருதி ரொம்ப ஜாஸ்தி வச்சிருப்பாங்க. என்னால் அந்த உயரத்தை தொட முடியாமல் போகலாம். சில பாடல்களில் இந்த வயசுல நான் பாடக்கூடாத வரிகள் இருக்கும். சிலது சின்னப் பசங்க பாடினா தான் நல்லா இருக்கும், என் குரலுக்கு செட் ஆகாது. இதையெல்லாம் ஜட்ஜ் பண்ண தான் முன்னாடியே பாட்டை அனுப்ப சொல்லி கேட்டுட்டு அப்புறமா முடிவு பண்றேன். ஒரு நல்ல விஷயம் என்னன்னா... இன்னைக்கும் தினமும் ஒரு பாட்டாவது ரிக்கார்ட் பண்ணிடறேன். அது போதும். 


இசையமைப்பாளராக தொடராததற்கு ஏதாவது தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறதா?


அதெல்லாம் ஒன்ணும் இல்ல சார். யாரும் சான்ஸ் கொடுக்கல அவ்வளவு தான். இப்பக்கூட நிறைய பேர் ஏன் சார் பாடுறதை குறைச்சுட்டீங்கனு கேட்குறாங்க. நான் எங்க கம்மி பண்ணேன். யாரும் கூப்பிடறதில்ல. நிறைய திறமையான யங்ஸ்டர்ஸ் பாட வந்துட்டாங்க. நேச்சுரலா வாய்ப்பு குறையத்தான் செய்யும். ஒருகாலத்துல நான் வந்தேன்ல. அப்படித்தான். நெக்ஸ்ட் ஜென்ரேஷனுக்கு ஹேப்பியா வழிவிடணும். 

ஆனா மியூசிக் டைரக்ஷன் ஏன் குறைஞ்சதுன்னு எனக்கு ஐடியாவே இல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம் சேர்த்து 70 படங்களுக்கு மேல இசையமைச்சுட்டேன். எந்த படத்துலயும் எனக்கு திருப்தி இல்லாத வேலையை செய்யவே இல்ல. சிகரம் முடிச்சதும் அழகன் பண்ண சொன்னார் கே.பி. சார். ஒரே சிட்டிங், 15 நாள்ல பாட்டு ரெக்கார்ட் பண்ணி வேணும்னு கேட்டார். என்னால முடியாதுன்னு சொல்லி நானே அறிமுகப்படுத்தி வச்சது தான் மரகதமணி. என்னைவிட திறமையானவர்கள் இருந்ததால எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வராம போயிருக்கலாம்னு நினைக்கிறேன். 


பல வருடங்களாக புகைப் பிடிச்சுகிட்டு இருந்த நீங்க ஒரு கட்டத்துல அதை நிறுத்தினீங்க. ஒரு பாடகரா அந்தப் பழக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன?


காலேஜ் படிக்கும்போது ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் சிங்கர் ஆகி நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போது, இந்தப் பழக்கத்தை நிறுத்திடணும்னு பல முறை யோசிச்சிருக்கேன். ஆன  அந்தப் பழக்கத்தை விட முடியாம 30 வருடங்கள் தவிச்சேன். கடைசியில என் பொண்ணு தான் அந்தப் பழக்கத்தை நிறுத்த வச்சா. ஒரு நாள் எனக்கு ஏதாவது பிராமிஸ் பண்ணிக் கொடுங்கப்பா என்று கேட்டாள். என்ன வேணும்டானு கேட்டேன். நாளையில இருந்து சிகரெட் பிடிக்கக் கூடாது என்றாள். சரிடானு கையில் அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தேன். அவ்வளவு தான். அன்னியோட அந்த பழக்கத்தை விட்டுட்டேன். 

நிறைய பாடகர்கள் குரலை பாதுகாப்பதற்காக ஜில்லுனு எதுவும் சாப்பிடாம, புளிப்பு சாப்பிடாம அப்படியே குரலை கடைசி வரை பாதுகாப்பாங்க. என்னைப் பொறுத்தவரை ஜில்லுனு சாப்பிடறதுக்கும் வோக்கல் கார்ட்சுக்கும் சம்மந்தமே இல்ல. முகமது ரஃபி, கச்சேரிக்கு நடுவுலயே அரைகிளாஸ் ஐஸ்கட்டி போட்டு கூல் டிரிங்ஸ் குடிப்பதை பழக்கமாவே கொண்டிருந்தவர். பாலமுரளி சாருக்கு ஐஸ் வாட்டர் இல்லாம இருக்கவே முடியாது. என்னைப் பொறுத்தவரை நம் குரலை பாதிப்பவைகள் புகை, குறைவான தூக்கம், தூசி இவைகள் தான். 

ஒரு சிங்கர் புகைப்பதும், குடிப்பதும் தவறு. நீங்க செஞ்சீங்களேன்னா... நான் செஞ்சேன் தான். அதுக்கு இப்ப என்ன பண்ண முடியும்? என் வாழ்க்கையை திரும்ப ரீவைண்ட் பண்ணி வாழ முடியுமா? நான் தப்பு பண்ணிட்டேன், அதே தப்பை நீங்களும் பண்ணாதீங்க. 


50 ஆண்டு கால இசைப் பயணம் கற்றுக் கொடுத்தது என்ன?


இன்னும் கற்றுக்கிட்டே இருக்கேன். இந்த 50 வருடங்களில் நேர்த்தியை நெருங்கி வந்திருக்கிறேனே தவிர. இன்னும் நேர்த்தியை தொட்டுவிடவில்லை. செய்கிற கலையில் குறைவான தவறுகளை செய்பவன் தான் உலகிலேயே மிச்சிறந்த கலைஞன். 

எனக்கு இருக்குற மிகச்சிறிய ஞானத்துக்கு எவ்வளவு புகழை கொடுத்திருக்கிறார் இறைவன். அதனால் வாழ்க்கையில் எனக்கு அதிருப்தி என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். இந்த 70 வயதிலும் கடவுள் ஆசியில் எனக்கு சுகர், பி.பி., என்று எந்த பிரச்னையும் இல்லை. 60 வயதுக்கு மேல் ஒவ்வொரு நாளும் போனஸ் தானே.

இந்த 50 வருடங்களில் தன்னிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். நிறைய பணம் சம்பாதிச்சேன். நிறையவே இழந்தேன். இந்த 50 வருட இசை வாழ்க்கையில் 48வது வருடம் தான் கடனில் இருந்தே வெளியே வந்தேன். தினமும் 5 பாட்டு பாடிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது வீட்டுல சேட்டு காத்துகிட்டு இருப்பான். ஒரு நாள் கூட இன்னிக்கு பணம் இல்ல நாளைக்கு வா என்று சொல்லக்கூடிய நிலைமையை கடவுள் எனக்கு கொடுக்கல. ஐஸ்வர்யம் என்பது பணத்தால வராது. கடன் இல்லாத வாழ்க்கை வாழுறவன் தான் உண்மையான பணக்காரன். 

என் இசையை கேட்டு என்னை வளர்த்துவிட்டவர்களுக்கு நான் நன்றி சொல்ல இந்த ஒரு ஜென்மம் போதாது. இன்னொரு ஜென்மம் வேண்டும். அதிலும் நான் எஸ்.பி.பாலசுப்ரமணியனாகவே பிறக்க வேண்டும். ஒரு நல்ல மனிதானக வாழ்ந்த திருப்தி இருக்கிறது. என் கல்லறையில் ஒரு நல்ல மனிதன் இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள். அது போதும்.


- அருண் சுவாமிநாதன்

Thanks Nishandi

நிஜமாவேவா...

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

Friday, September 25, 2020

YES.B.B......யே.

 தனிமையில்

ஏகாந்த சுகத்தை

சுவைக்க நிலைக்க

முயன்ற போதெல்லாம்

உன் குரலே எமக்குப்

பற்றுக்கோடாய்ப் பிரணவமாய் ....


வெறுமைப் பாலையில்

வெம்பிக் கிடந்து

சோர்ந்த வேளையில்

திசைதெரியாது தவித்தச் சூழலில்

உன் பாடலே எமக்குச் 

சாமரமாய் பெரும் சாரலாய்....


களிப்பு மிகக்

கூட்டமாய்

கொண்டாடிய தருணங்களில்

சுப வேளைகளில்

உன் தீந்தமிழே எமக்குள்

சுக ஊற்றாய்..தென்றல் காற்றாய்..


பேரிழப்புச் சுழலில்

சிக்கித் திணறிச்

செய்வதறியாது

சின்னாபின்னமாகித் தவிக்கையில்

உன் மென்ராகமே எமக்கு

மயிலறகாய்..தாயின் அரவணைப்பாய்.


இன்னும்.......


வெகு தூரப் பயணத்தில்.

உற்ற தோழனாய்


தூக்கம் வரா

பின் இரவுகளில்

அன்புத் தாதியாய்...


நகராப் பொழுதுகளை

நகர்த்தி எறியும்

நெம்பு கோலாய்...


இப்படி

உன்னோடு நாங்கள் கொண்ட

உறவுகளை

உளப் பாங்கான

உணர்வுகளை

எண்ண எண்ண...


இதயம் கிழிபடுவதை

கண்களில்

குருதி பெருகுவதைத்

தவிர்க்க இயலவில்லை...


அடிமைப்பெண்ணில்

துவங்கி

அண்ணாத்தை வரை என

தரவினை வேண்டுமானால்

காலன் முடித்து வைக்கலாம்


தேனூறிய குரலால் 

செவி வழி

அன்பு தோய்ந்த சிரிப்பால் 

விழிவழி

நுழைந்து...

இதயத்தில் நிலைத்திட்ட 

உன்னை காலனால்

உலகிலிருந்து எப்படிப் பிரித்துவிட முடியும்


எண்ணத்தால்

பேச்சால்

செயலால்

எப்போதும்

நேர்மறையாகவே வாழ்ந்த

Y.ES.பி,பியே


காற்றில்

பிராணவாயு இருக்கும் வரை

நீயும் இருப்பாய்.....


ஆம்

தமிழாய்

இசையாய்

எஸ்.பி.பி யாய்

என்றென்றும்....


ஆம்

இன்று போல் என்றென்றும்

Tuesday, September 22, 2020

முனை சேரா முக்கோணம்.

இறக்கைகள் இன்னும்

கொஞ்சம் வளரணும்

அப்போதுதான்

வெகுதூரம் பறந்து தப்பிக்க இயலும்

என எண்ணியபடி

சீட்டை எடுத்து கொடுத்து

கூண்டுக்குள் அடைந்தது

சோலையை மனதில் கொண்ட

அந்த ஜோதிடக் கிளி...


இறக்கைகள் இன்னும்

கொஞ்சம் வளரணும்

அப்போதுதான்

பிய்த்தெடுக்கத் தோதாகும்

என எண்ணியபடி

சீட்டைப்படிக்கத் துவங்கினான்

கிளிஜோதிடம் தவிர்த்து 

வேறு ஏதும் அறியா 

அந்தக் கிளி ஜோதிடன்


கெட்ட நேரம் விலக

இன்னும் ஆறுமாதம் ஆகும்

அப்போதுதான் நினைத்த காரியம்

பலிதமாகும் என்ற

ஜோதிடனின் வாக்குக் கேட்டு

உடன் போதலை

ஆறுமாதம் தள்ளிப் போடத் தீர்மானித்தாள்

பொறுப்பற்ற பெற்றோருக்குப் பிறந்த

சித்தாள் செண்பகம்

Sunday, September 20, 2020

படித்தால் உங்களுக்கும் பிடிக்கலாம்

 மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.


 அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார்.


 அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை.  சாலையின்  வேலை செய்யும் ஒரு தொழிலாளி போல் இருந்தது, சிறுமியின் ஃபிராக் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டு சுத்தமாக வைத்திருந்தாள்.


 அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது.  ஹோட்டலின் முழு அழகையும் அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம்.  மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன.


 குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.


 பணியாளர் இரண்டு பெரிய கண்ணாடி குளிர்ந்த நீரை அவர்களுக்கு முன்னால் வைத்தார்.


 அவர் தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார்.  அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் தெளிவாகியது.


 உங்களுக்கு என்ன வேண்டும்?  என்று பணியாளர் கேட்டார்.


 எனக்கு எதுவும் தேவையில்லை: அவர் பதிலளித்தார்.


 சற்று நேரத்தில், சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது,

 சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார்.


 பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது.  இது பழைய மாடல்.   மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது.  

இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் அவர் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார்.


 பள்ளியில் முதல் இடத்தை வென்றால், பிறந்தநாளன்று ஹோட்டலில் இருந்து தனது மசாலா தோசை வாங்கி தருவதாக  முன்பு உறுதியளித்ததாகவும், அவர் முதல் இடத்தை வென்றதால் இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார் என்றும் அவர் கூறினார்.


 (அவர் பேசியது தெளிவாக கேட்டது)… இல்லை, நாங்கள் இருவரும் எப்படி சாப்பிட முடியும்?  எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?  சில நாட்களாக எனக்கு எந்த குறிப்பிடத்தக்க வேலையும் இல்லை, வீட்டில் என் மனைவி தயாரித்த சாப்பாடு  உள்ளன. எனக்கது போதும்.


 இதற்கு முன் காட்சியையும் உரையாடலையும் கேட்ட நான், எனது தேனீரை என் உதடுகளுக்கு கொண்டு வந்த சூடான தேநீர் நாக்கு எரிந்தபோது அவர்களிடமிருந்து கண் அகற்றப்பட்டது. 


 யார் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ... தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வர் என்பதை நான் உணர்ந்தேன்.


 நான் எழுந்து கவுண்டருக்குச் சென்று எங்கள் ஐஸ்கிரீம் மற்றும் தேநீருக்கான பணத்தைத் தவிர இரண்டு மசாலா தோசைகளுக்கான பணத்தை ஒப்படைத்தேன்.


 அவர் தந்தையையும் மகளையும் சுட்டிக்காட்டி மெதுவாக கடைக்காரரிடம் கூறினார்


 'அந்த மனிதனுக்கு இன்னொரு தோசை கொடுங்கள், அவர் பணம் கேட்டால்,' இன்று உங்கள் மகளின் பிறந்த நாள், அவள் பள்ளியில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறாள், எனவே இது ஹோட்டலில் இருந்து உங்கள் மகளுக்கு கிடைத்த பரிசு.  இதை இன்னும் சிறப்பாகப் படிப்பதற்கான ஊக்கமாக இதை நாம் கருத வேண்டும்.  அவருக்கு இலவசம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், அது அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும். "


 ஹோட்டல் உரிமையாளர் புன்னகைத்து, "இந்த பெண்ணும் அவளுடைய தந்தையும் இன்று எங்கள் விருந்தினர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இந்த பணத்தை வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அல்லது இது போன்ற பிற தேவைக்கும் பயன்படுத்தலாம்."


 பணியாளர் மற்றொரு தோசை மேசையில் வைத்தார், நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

 சிறுமியின் தந்தை திடீரென்று அதிர்ச்சியில் அவரிடம், "நான் ஒரு தோசை சொன்னேன், எனக்கு இது தேவையில்லை" என்று கூறினார்.


 பின்னர் ஹோட்டல் உரிமையாளர் அருகில் சென்று, “உங்கள் மகள் பள்ளியில் முதலில் வருவதற்கு இது எங்கள் பரிசு,

 நீங்கள் ஒவ்வொருவருக்கும், மசாலா தோசை இன்று ஹோட்டலின் வகை. '


 தந்தையின் கண்கள் விரிந்தன, அவர் தனது மகளை நோக்கி, "பார், மகளே, நீ கடினமாகப் படித்தால் வாழ்க்கையில் இது போன்ற பல பரிசுகளைப் பெறலாம் என்று பாருங்கள்."


 அவர் ஒரு பேக் பண்ண முடியுமா என்று பணியாளரிடம் கேட்டார்.  அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அதை சாப்பிட அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறினார்.


 "இல்லை,  நீங்கள் அதை இங்கே சாப்பிடலாம். வீட்டிற்கு  நான் இன்னும் 3 தோசையும் ஒரு இனிப்பு  பொதி யும் பேக்செய்கிறேன்."


 இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் மகளின் பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் இனிப்புகளுடனும் கொண்டாடுங்கள், அவளுடைய நண்பர்களை அழைக்கவும், அதில் எல்லா மிட்டாய்களும் இருக்கும். '


 இதையெல்லாம் கேட்டபோது, ​​என் கண்களில், மகிழ்ச்சியால் கண்ணீர். 


ஒரு நல்ல செயலைச் செய்ய ஒரு சிறிய படி எடுப்பதில் எங்களுடன் சேர பல மனிதாபிமான மக்கள் முன்வருவார்கள் என்பதை உணர்ந்தேன்.


 படித்ததில் பிடித்தது.💐💐

உங்களுக்கும் பிடிக்குது தானே.ர

Saturday, September 19, 2020

BIG BOSS

பால்கனியே
பூங்கா ஆகிப்போக

பிக் பாஸ்கெட்டே
மார்கெட் ஆகிப் போக

செல்போனே
சமூகத் தொடர்பென ஆக

முன்பு
சிலிர்ப்பூட்டிய
சுவாரஸ்யப்படுத்திய

பிக் பாஸ்
இப்போது

சலிப்பூட்டுவதாக
மிக மிக எரிச்சலூட்டுவதாக.                                   
இருக்கவே சாத்தியம் அதிகம்..
ஆம் 
வெளியிலிருந்து
கூண்டுக்குள் இருப்பதைப்
பார்க்கிற சுவாரஸ்யம்....

கூண்டுக்குள் இருந்து
கூண்டுக்குள் பார்க்கச் சாத்தியமா என்ன ?

எம்.ஜி.ஆரின்.கதையும் நம் பதிவரின் கதையும் ( 4)

ஒரு கதையைத் தழுவிப் படம் எடுப்பதுண்டு..ஒரு கதையின் பாதிப்பில் படம் எடுப்பதும் உண்டு..                                                      நம் பதிவர் ஜி.எம்.பி. அவர்கள் 1963ல் எழுதிய அவர் இப்போது பதிவு செய்திருக்கும் கடைசி பக்கங்களைக் காணோம் என்கிற கதையும் 1968 ல் எம்.ஜி.ஆர் அவர்கள் கதையென வந்த கணவன் என்கிற படத்தின் கதையும் மேற்குறித்த இரண்டில் எதற்குப் பொருந்தும் என யோசித்தால்   .........................                                       நிச்சயம்  கணவன் படத்தைப் பார்த்தவர்களுக்கு முதலில் சொன்னதுதான் ஒப்புக் கொள்ளும்படியாய்  இருக்கும் என்பதில்  எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.                                எம்.ஜி ஆர்  அவர்கள் இப்போது இருந்தால் ஒத்த சிந்தனை என்பது சாத்தியம் என்றாலும் கூட. நம் பதிவர் ஜி.எம்..பி அவர்களை நேரடியாக அழைத்துக் கௌரவித்திருப்பார் என்பது என் திடமான  நம்பிக்கை.                                                                               சந்தேகம் உள்ளவர்கள் அவர் பதிவு செய்துள்ள கடைசிப் பக்கங்களைக் காணோம் என்கிற நாடகம் முழுவதையும் ஒருமுறைப் படித்துப் பின் ஒரு  முடிவுக்கு வரலாம்..                                                                                   1963 லேயே 1968 ம் வருடச் சூழலுக்கு அதுவும் புரட்சித் தலைவருக்குப் பொருந்தும்படியான ஒரு கதையை நாடகமாக எழுதிய நம் மூத்த பதிவர் ஜி.எம்..பி அவர்களுக்கு நம் பதிவர்கள் அனைவரின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளைப் பதிவு செய்வதில் மிக்க பெருமிதம் கொள்கிறேன்                                                                                   (படம் பார்க்காது பதிவை மட்டும் படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்காக இப்படத்தின்  கதைச் சுருக்கத்தையும் கீழே பதிவு செய்துள்ளேன்)                                                                                                                             Kanavan (About this soundpronunciation (help·info) English: The Husband), is a 1968 Indian Tamil film, directed by P. Neelakantan, starring M. G. Ramachandran in the lead role and Jayalalithaa, with C. R. Vijayakumari, S. A. Asokan, Cho among others. The film was dubbed into Hindi as Aakhri Nishan.[1]


Kanavan

கணவன்

Kanavan film poster.jpg

Film Poster

Directed by

Pa.Neelakandan

Produced by

Sadayappan

Written by

Sornam

Story by

M. G. Ramachandran

Starring

M. G. Ramachandran

Jayalalitha

C. R. Vijayakumari

S. A. Asokan

R. S. Manohar

Cho

Music by

M. S. Viswanathan

Cinematography

V. Ramamoorthy

Edited by

G. D. Joshi

Production

company

Valli Films

Distributed by

Valli Films (Madras)

Release date

15 August 1968

Country

India

Language

Tamil

Plot Edit

Vellaiya was falsely accused for murdering cashier Ganapathy. Meanwhile. Rani a wealthy daughter of Chidambara Pillai, who hates marriages wand wants to be freed from humiliated Manogar, who comes to see Rani after Chidambara Pillai invitation. Manogar gets angry and insults Chidambara Pillai on Rani's behavior. Chidambara Pillai, gets heart-attack and writes a will based on Manager Mani's advise and dies. To inherit, Rani (Jayalalithaa), has to marry in urgency. She chooses a person sentenced to death, the good Velaiya (MGR). Vellaiya though reluctant initially, he marries Rani. However, due to twist of incident, Vellaiya acquitted at the last minute, Velaiya comes to settle down with his beautiful Rani.


He has decided well to give her a lesson in the hardness of life



அ ன்பின் ரமணி சாருக்கு 

 இந்த நாடகம்  நான் 1963 வாக்கில் மேடை  ஏற்றியது  நன்றி வணக்கம்   ...GMB



Thursday, September 17, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவர் கதையும் (3 )

 நான் மதுரையை விட்டு பல ஊர்களுக்கு

சிறு வயதில் போய் வந்திருந்தாலும் கூட

என்னுடைய கல்லூரி நாட்களில்,தான்

சென்னை வரும் வாய்ப்புக் கிடைத்தது


அதுவரை நான் அறிந்திருந்ததெல்லாம்\

சினிமா காட்டிய சென்னைதான்.....


சினிமாவில் சென்னை என்றாலே

அந்த எல்.ஐ.சி கட்டிடத்தையும்

கடற்கரையையும் தவறாது காட்டுவார்கள்.


அந்த வகையில் சென்னை வந்ததுமே

என் வயதொத்த எல்லோரும் விரும்பி முதலில்

சென்ற இடம் மெரினா கடற்கரைதான்


மாலை நேரமாகவும்/ இருக்கும் நேரம்

அதிகம் இருந்ததாலும் /விடுமுறை நாள் 

என்பதால் கூட்டம் அதிகம் இருந்ததாலும்

நாங்கள் கற்பனை செய்து வைத்திருந்ததை விட

கடற்கரை மிக மிக அற்புதமாக இருந்தது.


இங்கு வரும்வரை கடலில் குளிக்கும்

எண்ணம் ஏதும் இல்லாதிருந்தபோதும்

பலர் கடலில் குளிப்பதையும் அலைகளில்

அழகாய் மிதந்து நீந்துவதைப் பார்த்ததும்

எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் நீந்தும்

ஆசை வந்துவிட்டது.


குளம் கண்மாய் கிணறு என நீச்சல் அடித்துப்

பழக்கமிருந்தாலும் கடலில் அதுவரை நீந்திப்

பழக்கமில்லை.ஆயினும் இளமை முறுக்கு தந்த

தைரியமா அல்லது முன்னால் நீந்திச் செல்லுகிறவர்கள்

கொடுத்த தைரியமா அல்லது இரண்டுமா

எனத் தெரியவில்லை.``


நானும் என் நண்பனும் தைரியமாக கடலில்

இறங்கிவிட்டோம்.அலைகள் வருகையில்

கரைப்பக்கம் தள்ளிவிடாது உடலை தூக்கிக்

கொடுக்க வேண்டும் என்கிற செய்தி முன்னமேயே

தெரிந்திருந்ததால் விறுவிறுவென கடலுக்குள்

நீந்திச் செல்ல ஆரம்பித்தேன்..


சிறிது நேரத்தில் கடற்கரையில் சப்தமாய்

சிலர் கத்தி அழைப்பது போல் சப்தம் கேட்டது

என்னவென்று திரும்பிப் பார்க்க அதிர்ந்து போனேன்

ஒரு கணம் இருளடித்தது போலாகிவிட்டது


காரணம் நான் கரையை விட்டு வெகுதூரம்

வந்திருந்தேன்.உடன் வந்த நண்பன் பாதி வழியிலேயே

திரும்பிக் கொண்டிருந்தான்.முன்னான் நீந்தி

அசட்டுத் தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்

என்னிலும் வெகு தூரம் போயிருந்தார்கள்.


ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 

மெல்ல மெல்ல கரை நோக்கி நீந்தி வந்து சேர்ந்தேன்


பின் எல்லோரும் எனக்கு தேறுதல் சொல்லி

ஆசுவாசப்படுத்தும்படியாக என் மன நிலை

இருந்தது..


உடன் நீந்து வந்த நண்பன் மட்டும்

"எந்த தைரியத்தில் முன் பின் பழக்கம்

இல்லாத போதும் கடலில் இவ்வளவு

தூரம் நீந்தி போனாய் " என மிகச் சரியான

கேள்வியைக் கேட்டான்.


"எனக்கு முன்னால் நீந்திச் சென்றவர்கள்

கொடுத்த அசட்டுத் தைரியம்தான்.வேறில்லை "

என்றேன்..


இந்த நிகழ்வை இங்கு சொல்வதற்குக்

காரணமிருக்கிறது


நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும்

எனக்கு உள்ள எழுத்து ஆர்வம் குறித்தும்

வாசிக்கும் விருப்பம் இருக்கும் நேசம் குறித்தும்

அறிந்திருந்த எனது மகள் வலைத்தளம்

ஒன்று இருக்கிறது அதில் எழுத்தத் தெரிந்தவர்கள்

நிறையப் பேர் நிறைய விஷயம் குறித்து

எழுதுவார்கள். உனக்குப் படிக்க அது பிடிக்கும்

நீயும் விரும்பினால் அதில் எழுதலாம் என

ஒரு கணினியும் வாங்கி கொடுத்து 

வலைத்தளத்தையும் உருவாக்கிக் கொடுத்தாள்.-


நான் தொடர்ந்து வலைத்தளத்தில்

வரும் பதிவுகளைப் படித்தும் பின் நானும்

கொஞ்சம் கொஞ்சமாய் எழுதத் துவங்கி

இப்போது ஆயிரத்து ஐநூறுக்கும் மேலாக

எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக்

காரணம்........


எனக்கு ஏதோ நீச்சல் தெரியும் என்றாலும்

கடலில் அவ்வளவு தூரம் அசட்டுத் தைரியத்தில்

நீந்தியதற்குக் காரணம் எனக்கு முன்னால்

நீந்திச் சென்ற நன்றாக கடலில்  நீந்தத்

தெரிந்தவர்களே...


அந்த வகையில் வலைத்தளத்தில் அவ்வளவு

பரிச்சியம் இல்லை என்றாலும் இத்தனை

பதிவுகள் எழுதக் காரணம் ....


சிறந்த பதிவுகள் எழுதியும் 

எழுதுபவர்களை மிகவும் ஊக்கப்படுத்திய 

பல இளைஞர்கள் என்றாலும் கூட....


நான் ஊக்கம் கொண்டது என்னிலும்

வயது கூடிய என்னிலும் சிறப்பாகவும்

விடுதல் இன்றி தொடர்ந்து அனைத்து வகையாகவும்

எழுதி ஆச்சர்யப்படுத்திய நான்கைந்து பேர்

அதுவும்  என் வயது கடந்தவர்கள் தான் 

என்றால் அது மிகையில்லை


அதில் ஒருவரே இந்த பதிவுக்குக் காரணமானவர்

அவர் தன்னைத் தானே இப்படி மிகச் சரியாக

அறிமுகம் செய்து கொண்டிருப்பார்.


81 இயர்ஸ் யங் அண்ட் விப்ரண்ட் பர்டிகுலர்

அபவுட் வேல்யூஸ் இன் லைஃப் லவ் ஆல்...


சூரியன் உதிக்கும் திசை இதுவெனச் சொல்லி

திசையையும் காட்டியபின் கிழக்கு என்பது

உங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் தானே


(தலைப்பில் குறிப்பிட்டுள்ளதில் எம்.ஜி.ஆரின்

கதை குறித்தும் அதன் சிறப்புக் குறித்தும்

நம் பதிவர் குறித்தும் எழுதி விட்டேன்


அடுத்து அந்தக் கதைக்கும் நம் பதிவர் கதைக்கும்

அப்ப்டி என்ன சம்பந்தம் குறித்து அடுத்த பதிவில்..

நிச்சயம் அது ஏன் இவ்வளவு பெரிய பதிவாக

முக்கியம் கொடுத்து எழுத வேண்டும் என்கிற

கேள்விக்கு சரியான பதிலாக அமையும் ) 

Tuesday, September 15, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவர் கதையும் ( 2 )

 தலைப்பில் சொன்னது போல்

எம்.ஜி.ஆரின் கதைக்கும் நம் பதிவர் கதைக்கும்

என்ன தொடர்பு ? அந்தப் பதிவர் யார் ? என

சென்ற பதிவை முடித்திருந்தேன்...


நல்ல சுவையான தண்ணீர் ஆயினும்

நெல்லிக்கனியை உண்டபின்  குடித்தால் கொஞ்சம்

கூடுதல் சுவை கிடைக்கச் சாத்தியம் உண்டு

அதைப் போல் முன் பதிவைப் படித்தபின் இதைப் படிக்க

கூடுதலாய் இரசிக்கவும் சாத்தியம்..உண்டு.


சரித்திரத்தை கி.மு. கி.பி என

பிரித்துக் கொள்வது எப்படி புரிந்து கொள்ள

வசதிப்படுகிறதோ அதைப் போலவே

தமிழகத்தைப் பொருத்தவரை இலக்கியமோ

அரசியலோ சினிமாவோ சமூகச் சூழலோ

மக்களின் மனோ பாவமோ எதுவாயினும்

அறுபத்து ஏழுக்கு முன் அதற்குப் பின்

என பிரித்துப் பார்க்கப் பழகிக் கொண்டோமேயானால்

எதையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்


ஏனெனில் அறுபத்தி ஏழுக்குப் பின்

தமிழகத்தைப் பொருத்தவரை அனைத்து துறையிலும்

மிகப் பெரிய மாற்றமிருந்தது.


மிகப் பெரிய மாற்றம்

என்பதை விட இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும்

என்றால் தலைகீழ் மாற்றமிருந்தது 

எனக் கூடச் சொல்லலாம்..


குறிப்பாக சினிமாத் துறையில்.....

அதன் கதைப் போக்கில்..கதை சொல்லும் விதத்தில்..


சமூகப் படங்கள் எடுக்கத் துவங்கியபின்

ஏறக்குறைய எல்லாத் திரைப்படங்களின்

கதையமைப்பும் நல்லதாக இருக்கிற சூழல்

யாரோ ஒருவரின் தலையீட்டால்,

அல்லது எதோ ஒன்றின் காரணமாக

மிக மோசமான நிலையடைதலும் பின்

அது படிப்படியாய் சீரடைந்து முடிவில்

பழைய நிலையை அதாவது பழைய 

நல்ல நிலையை அடைவது போலவும் இருக்கும்


யாரோ ஒருவரின் தலையீட்டால் என்பது

அதிகமாக வில்லனின் தலையீட்டால் பெரும்பாலாக

எம்.ஆர். இராதா அவர்களின் தலையீட்டால் இருக்கும்


ஏதோ ஒன்றின் தலையீட்டால் என்பது

புதிய நாகரீகமாக இருக்கும்/ ஆணவமாக இருக்கும்

பேராசையாக இருக்கும்...


(பிரச்சனையை மையமாக ஒரு வரிக் கதையாக

வைத்து பின் விரிவு படுத்திய கதைகள் எல்லாம்

எண்பதுக்குப் பின்தான். )


அந்த வகையில் அமைந்த கதைகளுக்கு

சிறுகதையைப் போல பிரச்சனையை முன் சொல்லி

பின் அந்தப் பிரச்சனையை விளக்கி முடிவாக

தீர்வைச் சொல்கிற பாணி சரிப்பட்டு வராது

என்பதால்..


நாவல் போல்  முதலில் விஸ்தாரமாக 

சூழலை விவரித்துப் பின் அந்தச் சூழலில் ஏற்படும் 

பிரச்சனையைக் காட்டி பின் படிப்படியாய்

சுவாரஸ்யமாய் அதை விடுவிக்கும் பாணியே

அதிகம் கையாளப்பட்டது...


அந்தச் சூழலில் அதாவது அறுபத்து எட்டாம்

ஆண்டில் எம்.ஜி.ஆர் அவர்களின் கதை என்கிற

அடையாளத்தோடு வந்த கணவன் என்கிற படமே

சிறுகதை பாணியில் இருந்தது


 ஆம் சிறுகதை பாணியில் படத் துவக்கத்திலேயே

செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை பெற்ற

ஒருவரைக் காட்டி...... 


அவரைத் திருமணத்தில் ஆர்வமே இல்லாத/

ஆண்கள் மீது வெறுப்புக் கொண்ட/ 


திருமணம் செய்து கொண்டால்தான் தான்

பயன் பெற முடியும் என்பதற்காக/


தன் தாலி அறுந்தாலும் பரவாயில்லை

என ஒரு யுவதி திருமணம் செய்து கொள்வதும்

பின் ஆண் வெறுப்பும் ஆணவமும்

எப்படிப் படிப்படியாய் சரிசெய்யப்படுகிறது

அல்லது அடக்கப்படுகிறது எனத் தொடரும்...


இந்த வித்தியாசமான பாணியை துவக்கி

வைக்கிறோம் என்பதாலேயே எந்தப் படத்திற்கும்

பெரும்பாலாக திரைக்கதை விஷயத்தில்

முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிற

புரட்சித் தலைவர் அவர்கள் முந்தைய

படங்களில் தன்னை கதை விஷயத்தில்

முன் நிறுத்தாத எம்.ஜி.ஆர் அவர்கள்

இதில் தன்னை கதாசிரியராக முன் நிலைப்

படுத்திக் கொண்டார் என்பது என் எண்ணம்


அந்த வகையில் சிறப்புப் பெற்ற 

வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட

படம் கணவன் என்பதைச் சொல்லவே

எம்.ஜி.ஆரின் கதை எனத் தலைப்பிட்டிருந்தேன்


அதன்படி தலைப்பில் முதல் பாதி சரி...

பின் பாதி....


யார் அந்தப் பதிவர்...அவருக்கும் கணவன்

படக் கதைக்கும் என்ன சம்பந்தம்....


நீளம் கருதி அடுத்தப் பதிவில்...  

Sunday, September 13, 2020

எம்.ஜி.ஆரின் கதையும் நம் பதிவரின் கதையும்

ஆகஸ்ட் 15 1968 ஆம் நாள் காலை.

சுமார் எட்டு மணிக்கே ஆசியாவிலேயே

பெரிய தியேட்டர் எனப் பெயர்பெற்ற மதுரை

தங்கம் தியேட்டர் டிக்கெட் கவுண்டரில்

நாங்கள் டிக்கெட் எடுக்க மூச்சுத்திணற வைக்கும்படியான

கூட்டத்தில் முட்டி மோதி முன்னேறிக் கொண்டிருந்தோம்..


ஆம் என்னைப் போன்ற எம்.ஜி.ஆரின் 

தீவிர ரசிகர்களுக்கெல்லாம் அவரின் படம் 

வெளியாகிற அன்றே முடிந்தால் முதல் ஷோவே

பார்ப்பதே ஒரு பெரும் கெத்து.


போலீஸ் அடிவாங்கி சட்டை கசங்கி சமயத்தில்

கிழிந்து டிக்கெட் எடுக்கும்படியான நிலை

என்ற போதும் கூட அதைப் பார்த்து விட்டு

ஊரில் தெருவில் முதல் நாள் முதல் ஷோ

பார்த்துவிட்டேன் என சக நண்பர்களிடம்

பீத்துவதில் உள்ள சுகம் கெத்து அது

அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்


அந்த வகையில் அன்று எம்.ஜி.ஆரின்

கணவன் என்கிற படம் ரிலீஸ் ஆகி இருந்தது

அவர் நடிப்பில் வந்த படத்துக்கே கூட்டம் அள்ளும்

இந்த படத்திற்கு கதை எம்.ஜி.ஆர் என வேறு

போட்டிருந்ததால் கூட்டம் எக்கிக் கொண்டிருந்தது


எழுபது பைசா கௌண்டர் அதை அடுத்து எண்பது

பைசா அதை அடுத்து ஒரு ரூபா பத்து பைசா

கவுண்டர் என வரிசையாக இருக்கும்


முதலில் குறைந்த டிக்கெட் என்பதால் எண்பதில்தான்

அதிகக் கூட்டம் இருக்கும்.முதலில் அதைத்தான்

கொடுக்கவும் செய்வார்கள்.அது முடிந்ததும் அந்த டிக்கெட்

கிடைக்காதவர்கள் சட்டென கம்பித் தடுப்பை

அவர்கள் இருப்பிடத்திலிருந்து அப்படியே

இருக்கிற மேல் இடைவெளியில் அடுத்த

கவுண்டருக்கு லாவகமாக்த் தாண்டுவார்கள்.


அவர்கள் அப்படித் தாவி இறங்குவது

பெரும்பாலும் நம் தலையாகவோ நம்

முதுகாகவோ கூட இருக்கும்.. போலீஸ்

கவுண்டருக்கு வெளிப்பகுதியில் இருப்பதால்

அவர்களால் இதைத் தடுக்க எதுவும்

செய்ய முடியாது.


இந்தக் களேபரத்தில் கழுத்துச் சுளுக்கு

கைகால் சேதாரம் எல்லாம் சர்வ சாதாரணம்.

அதை இரசிகர்கள் வீரத் தழும்பாகவே

ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற்றிருந்ததால்

நாங்களும் அந்தப் பக்குவத்தோடும்

பெருமிதத்தோடும் தியேட்டருக்குள் போய்

மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் என்ற எழுத்து

வந்ததுமுதல் இறுதிக் காட்சிவரை

விசிலடித்து ஜிகினா பேப்பர் கட்டிங் தூவி

சூடம் காண்பித்து பெரும் ஆரவாரத்தோடு

படம் பார்த்து வெளியில் வந்தால்.......


முதலில் இருந்ததை விட இப்போது

போலீஸ் அதிகம் இருந்தது...இரண்டு மூன்று

போலீஸ் லாரிகள் வேறு ஆயுதம் ஏந்திய

போலீஸோடு இருந்தது..


பயந்து வேகமாக வெளியே வந்து

என்ன வென்று விசாரித்தால் போன

காட்சியில் டிக்கெட் கவுண்டரில்

கூட்ட நெரிசலில் இரண்டு பேர்

நசுங்கிச் செத்ததாகச் சொன்னார்கள்.


நாங்கள் நல்லவேளை அது நாமாக

இல்லாமல் போனோமே என

ஆண்டவனுக்கு வானம் பார்த்து

ஒரு கும்பிடு போட்டு நடக்கத் துவங்கினோம்


அப்போது அங்கு கடையோரம்

நின்றிருந்த ஒரு பெரியவர்

"சும்மாவே ஆடறவன் கொட்டடிச்சா

சும்மாவா இருப்பான்.

அவர் நடிப்பு மட்டும்னாலே கட்டி ஏறுகிறவன்.

கதை வேற அவருன்னா ...

இப்படித்தான் ஆகும் " என

யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.


அது சரி..அது என்ன கதை ?

அது எம். ஜி ஆர் தன் கதை என சொல்லிக்

கொள்ளும்படியாக அதில் என்ன சிறப்பு ?


அதெல்லாம் கூட இருக்கட்டும்

தலைப்பில் சொன்னது போல் 

எம்.ஜி.ஆரின் கதைக்கும் நம் பதிவர்

கதைக்கும் என்ன தொடர்பு ?

அந்தப் பதிவர் யார் ?  ....


நீளம் கருதி அடுத்தப் பதிவில்...

...

Saturday, September 12, 2020

நிஜத்திற்கு வரும் சோதனை..

 👆Hitler and Stalin 

Whole video made with Artificial Intelligence ...only with the help of two pictures...will change the future of movie making...this may finish the career of even all the actors...in a movie of hitler and stalin...they themself will be actors...and now videos can not be taken as an evidence to prove any crime....


Friday, September 11, 2020

நம்ம ஊர் நிலையும் வெளி நாட்டு மிருகக் காட்சி சாலையும்

"அப்பா  இன்னைக்கு நாம இந்த நாட்டில்

உள்ள முக்கியமான

மிருகக் காட்சிச் சாலைக்குப் போறோம்"

என்றாள் என் மகள்..


"நான் நம்ம ஊரூலேயே நிறைய

மிருகக் காட்சிச் சாலையைப்

பார்த்துவிட்டேன் .வேறு

எங்காவது போவோம்  "என்றேன்


"அப்பா இது நம்ம ஊர்

மிருகக் காட்சி சாலைபோல இருக்காது

மிருகங்கள் எல்லாம் சுதந்திரமாய்த் திரியும்

நாம தான் கூண்டு வண்டியில  பாதுகாப்பாய் இருந்து

அதைப் பார்க்கணும்." என்றாள்


"ஓ.. நம்ம ஊருல சட்டத்த மதிக்கிறவங்க

வாழற மாதிரியா.." என்றேன்


"எக்ஸாட்லி " என்றாள் மெல்லச் சிரித்தபடி... 

Thursday, September 10, 2020

தமிழன்னை பாடும் பாட்டு

 தர்பார் மண்டபங்களில்

மன்னனைக்  குளிர்விக்கும் 
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா

Wednesday, September 9, 2020

விளையாத முந்திரி..


 இது விளைந்து வந்த முந்திரி அல்ல.பேக்டரியில் செய்கிற முந்திரி.இதைத்தான் முந்திரிப்பருப்பு என்று பஸ்களிலும், இரயில் வண்டிகளிலும் கிலோ ₹400/-க்கு விற்கிறார்கள்,  இது செயற்கையாக மைதா மாவு,முந்திரிபருப்பு எசன்ஸ் மற்றும் பல உடலுக்கு கேடுவிளைவிக்க கூடிய கெமிக்கல்களும் சேர்த்து தயார்செய்கிறார்கள். இதை சாப்பிட்டால் உடலுக்கு நிச்சயம் கேடு...கவனம் கொள்வோம்

Tuesday, September 8, 2020

மிக எளிதெனில் அதிக அலட்சியம்

 மிக மிக எளிதாக இருப்பதனால் /கிடைப்பதனால்  நாம் இவைகளை அன்றாடம்  பயன்படுத்துவதில் அலட்சியம் காட்டுகிறோமோ எனத் தோன்றுகிறது..


Sunday, September 6, 2020

எனக்கு இதுவரை தெரியாது...உங்களுக்கு

 *நண்பர் ஒருவரின் விழிப்புணர்வு பதிவு*



எனது தங்கை சாலைவிபத்தில் உயிரிழந்து ஒருவருடம் ஆகிவிட்டது...

அந்த விபத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், மற்றும் காப்பீடுகள் சம்மந்தப்பட்ட விசயங்களை நான்தான் *Follow* செய்து கொண்டு இருக்கிறேன்.


*முதலில் வாரிசு சான்றிதழ் வாங்க திருப்பூருக்கும் பல்லடத்திற்க்கும் நான் அலைந்த அலைச்சல் சொல்லிமாளாது..*


ஒருவழியாக வாரிசு சான்றிதழை வாங்கி

சம்மந்தப்பட்ட *காப்பீட்டு நிறுவனத்திற்க்கும்*. வழக்கு நடத்தும்

வக்கீலிடமும் கொடுத்துவிட்டேன்.


அப்படியே *முதலமைச்சர் நிவாரணநிதிக்கும்* விண்ணப்பிதாகிவிட்டது...


இதற்க்கு முன்பாக ,

என் தங்கை இறந்த ஒருமாதம் கழித்து,

 அவள் வங்கிகணக்கு வைத்திருக்கும்  *கனராவங்கி* சென்று *மாதம் ஒருரூபாய் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் பிரதமமந்திரி விபத்துகாப்பீட்டில் இணைந்து இருக்கிறதா?* என்று வங்கி மேலாளரை சந்தித்து கேட்டேன்.


 அந்த தொகையை பிடித்தம் செய்யவில்லை .

அதனால் *அந்த ஸ்கீம் உங்கள் தங்கையின் வங்கிக்கணக்கில் இல்லை கூறி முடித்துக்கொண்டார்.*


கஷ்ட்டப்படும் தங்கை குடும்பத்திற்க்கு என்னால் பணம் காசு கொடுத்து உதவமுடியாட்டாலும், இதுபோன்ற விசயங்களை நான் விடாமல் அழைந்து திரிந்து என்னால் முடிந்த வேலையை செய்துவந்தேன்.


இந்த சூழ்நிலையில் தங்கை இறந்து *நான்கைந்து மாதங்கள் கழித்து வாட்சாப்பில் ஒரு மெஜேஜை பார்த்தேன்*


 அது சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்தாலோ ,

உயிரிழந்தாலோ,

_*வங்கி  ATM CARD வைத்துஇருந்தால் காப்பீட்டுத்தொகை கிடைக்கும் என்று இருந்தது*_


இந்த விசயம் நான் கேள்விப்படாத *ஏன் இன்னும் அநேகர் கேள்விப்படாத விசயம்.*


உடனே அருகில் இருக்கும் கனராவங்கிகிளைக்கு சென்று இந்தவிபரம் குறித்து வங்கி மேளாளரிடம் கேட்க,


 ஆம் அப்படிப்பட்ட ஒரு காப்பீடு இருக்கிறது என்று கூறினார்.


நானும் சரியென்று என்தங்கை வங்கிகணக்கு வைத்திருக்கும் கனராவங்கி கிளைக்கு சென்று அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் விசாரிக்க ,

அவர் ஆம் 

*ATM கார்டு* வைத்திருக்கும் *நபருக்கு காப்பீடு உண்டு என்று என் தங்கையின் வங்கிவிபரங்களை வாங்கி சரிபார்த்துவிட்டு, நீங்கள் இந்த காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்*


 என்று கூறி அதற்க்குறிய ஆவணங்களையும் விண்ணப்பங்களையும் கொடுக்க சொன்னார்கள்.


 நான் என்தங்கையின் கணவர் அவரால் வரஇயலாத சூழ்நிலையிலும் அவரை வரச்சொல்லி விண்ணப்பத்தை கொடுத்த்தோம்.


பின்னர் கிளை மேலாளரையும் நேரில்பார்த்து கஷ்ட்டப்படும் குடும்பம் சார். திருமணவயதில் பெண்இருக்கிறாள் இந்த காப்பீட்டுத்தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று காப்பீடு கிடைக்க உங்கள் தரப்பில் இருந்து செய்யவேண்டிய விசயங்களை செய்யுங்கள் சார்னு சொல்லிவிட்டு

அவருடைய போன்நம்பரையும் வாங்கி கொண்டேன். 


 *அவ்வப்போது போன்செய்து என்ன ஆச்சு?* விண்ணப்பம் என்று கேட்டுக்கொண்டு இருப்பேன்.

 அவரும் நான் பார்த்து சொல்கிறேன் ,பார்த்து சொல்கிறேன்,

 என்று *சொல்லிச்சொல்லி காலம் கடந்தது.*


இதற்க்கிடையில் *கொரோனா பிரச்சனையை காரணமாக சொல்லிக்கொண்டு இருந்தார்.*


  பின்னர் நேரில் இரண்டுமுறை சென்று விபரம் கேட்க அது கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது.


இதற்க்கிடையே கடந்த வாரம் போன்செய்து கேட்க்கும்போது 

*உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.*

*விபத்து நடந்து 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து இருக்கவேண்டும்* என்று


 *நியு இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மெயில் வந்துள்ளது* என்று கூறினார்.


மீண்டுமாக ,


அவரிடம் சார் நான் என்தங்கை இறந்து ஒருமாதம் இருக்கும்போது *பிரதமமந்திரி காப்பீடு பற்றி நான் விசாரிக்க வரும்போதே இந்த ATM காப்பீடு பற்றி கூறியிருந்தால் நான் அப்போதே விண்ணப்பித்து இருப்பேன். ஏன் வங்கியின் மேளாளராக இருக்கும் உங்களுக்கு என்தங்கை விபத்தில் இறந்துவிட்டார் என்று விபரம் என்னிடம் கூறி காப்பீடு பற்றியும் விசாரிக்கும்போது, அந்த காப்பீடு இல்லைங்க. பரவாயில்லை ATM காப்பீடு இருக்குனு*


 அதை *விண்ணப்பியுங்கள் என்று சொல்லியிருக்கலாமே.?*


ஏன் உங்களுக்கு *ATM காப்பீடு* பற்றி தெரியாதா? 


அப்படினு கேட்க ,


*அவர் மழுப்பலாக பேசி இல்லைங்க சார் 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து இருக்கனும் நீங்கனு பழைய பல்லவியை படித்தார்.* 


நானும் விடாமல் வங்கி வாடிக்கையாளருக்கு  இதுபோன்று பயன்தரும் விசயங்கள் பற்றி எந்த வங்கியிலும் கூறுவதில்லை,


 நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள்.


கஷ்ட்டப்படும் சூழ்நிலையில் உள்ள தங்கை மகளுக்கு  அவளுடைய திருமணகாரியங்களுக்கு இந்த தொகை பயன்படும்னுதான் நான் இவ்வளவு பிரயாசைபட்டேன். அதுவும் இப்போ இல்லைனு ஆகிடுச்சு சரிங்க சார்  ரொம்ப நன்றினு சொல்லிட்டு போனை வைத்தேன்.


இப்போது *ஒருசில விசயங்களை* நான் இங்கே முன்வைக்கிறேன்.


*1)வங்கிகளில் பிரதமமந்திரி காப்பீடு திட்டம், ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளருக்கான காப்பீடு திட்டம் பற்றி அறிந்தவர்கள் எத்தனைபேர்???*


*2)இந்த காப்பீடுகள் பற்றி எந்த வங்கிகளாவது வெளியரங்கமாக வாடிக்கையாளர்களிடம் பேசி* அதில் 

இணைய வற்ப்புறுத்தியிருக்கிறார்களா??*

*(எனக்கு நான்கு வங்கிக்கணக்கு இருக்கிறது எந்த வங்கியோ அதன் ஊழியர்களோ இதுபோன்ற விசயத்தை கூறியது இல்லை)*


*3)மக்கள் பெரும்பாலும் அறியாத இந்த விசயங்களை பற்றி வங்கிகள் அக்கறை காட்டாமல் இருப்பது ஏன்??*

அப்படியே அறிந்து விண்ணப்பித்தாலும் ,


*அந்த வங்கியுடன் டையப் வைத்துள்ள காப்பீட்டுநிறுவனங்கள். அந்த விண்ணப்பங்களை பெரும்பாலும் ஏதோ ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி நிராகரிப்பதிலேயே குறியாய் இருப்பது ஏன்.???*


*4)ஒரு மரணம் நிகழ்ந்த குடும்பத்தில் அதுவும் விபத்தில் மரணம்அடைந்தவர்களின் குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகள் அந்த துன்பநிகழ்வில் இருந்து மீண்டு வர எவ்வளவு நாட்கள் ஆகும், என்ற உளவியல் ரீதியான ஒரு விசயத்தைக்கூட நினைத்துப்பார்க்காமல் 90 நாட்களில் விண்ணப்பிக்க சொல்வது என்னமாதிரியான நடைமுறை.*



_*( என் தங்கை  விசயத்தில் வாரிசு சான்றிதழ், பிரேதபரிசோதனை அறிக்கை கிடைக்கவே நான்கு மாதத்திற்க்குமேல் ஆகிவிட்டது)*_ 


*5)கார் லோன்மேளா, வீட்டுக்கடன் லோன்மேளா, ஒருபவுனுக்கு அதிகபணம்,குறைந்த வட்டி என்று விளம்பர பதாகைகளை வங்கிக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்து விளம்பரபடுத்தும் வங்கிகள்.*


_*இதுபோன்ற காப்பீடுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்திவைக்க முன்வருவதில்லை.*_ 


அதேவேளையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் இதுபற்றி *விழிப்புணர்வு செய்யவோ காப்பீடுதிட்டத்தில் இணையவோ சொல்வது இல்லையே என்பதுதான் வேதனையான விசயம்.* 


ஏதோ இந்த காப்பீடுபணம்கிடைத்தால் அடமானம்  வைத்த நகையை திருப்பி தங்கைமகளின் திருமணகாரியத்திற்க்கு உதவியாக இருக்கும் என்று நினைத்த காரியத்திலும் மண்விழுந்த கதையாக போய்விட்டது.


இதற்க்கு முழுமுதல் காரணகர்த்தா யாரென்றால் நான்சொல்வேன் என்தங்கை இறந்த ஒருமாதத்தில் வங்கிக்கு சென்று பிரதமமந்திரிகாப்பீடு பற்றி  நான் விசாரித்தபோது,

 *அந்த திட்டத்தில் உங்கள் தங்கையின் வங்கிகணக்குயில்லை ,*


*விபத்தில் இறந்த உங்கள் தங்கையின் ஏடிஎம் கார்டுக்கு காப்பீடு இருக்கிறது. என்று என்னிடம் சொல்லாமல் மறைத்த அந்த வங்கி மேளாலர்தான் என்று பட்டவர்த்தனமாக சொல்லுவேன்.*


இந்த பதிவை பார்க்கும்  வங்கித்துறையில் உள்ளவர்கள் இனிமேலாவது ,


*ஒரு சம்பரதாயத்துக்காகவாவது இந்த காப்பீடு பற்றிய விசயங்களை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சொல்லுங்கள்.*


இல்லையென்றால் இந்த காப்பீடுகள் குறித்த விளம்பரபதாகைகளை அதிலும் *குறிப்பாய் ATM கார்டு காப்பீடுபற்றி விளம்பரப்படுத்துங்கள்.*


அது கஷ்ட்டப்படும் ஏழைக்குடும்பத்திற்க்கு ஆறுதல் அளிக்கும் *நல்ல விளம்பர சேவையாய் இருக்கும்.*


நன்றி(இது சரிதானா நம் இணைப்பில் உள்ள வங்கி அதிகாரிகள் இது குறித்து விவரம் அளிக்கலாமே) உண்டு என்பதற்கான ஆதாரம் Pdf file ஆக Bandhu அவர்களின் Comment ல் உள்ளது..

Thursday, September 3, 2020

கோடாலி அல்லாது நகத்தோடு

என் பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்காவில்

இருப்பதால் ஆறு மாதப் பயணமாக மூன்று முறை

அமெரிக்கா சென்று வரும்படியாக அமைந்தது


மூன்றில் இரண்டுமுறை சமமான சீதோஷ்ண நிலை

இருந்த காலத்தில் சென்று வந்ததால் உடலுக்கு

எவ்வித பிரச்சனையும் இல்லை. ஒருமுறை மட்டும்

குளிர்காலத்தில் சென்று வரும்படியாக இருந்தது.


எங்களுக்கு இந்த மைனஸ் டிகிரி உஷ்ண நிலை

யெல்லாம் பரிச்சயமில்லை என்றாலும் அங்கு

வீடு மற்றும் செல்லும் மால்கள் முதலான

இடங்களில் எல்லாம் சீதோஷ்ண நிலையை 

சமன் செய்யும்படியானவசதிகள் எங்கும் இருந்ததால் 

வீட்டுக்குள் இருப்பதும் மால்கள் செல்வதும் 

பிரச்சனையில்லை.


ஆனால் வெளியில் தான் எத்தனை பாதுகாப்பாக

உடை அணிந்து கொண்டாலும்  ஐந்து நிமிடங்கள்

கூட தொடர்ச்சியாக இருக்க முடியாது..

இந்த அனுபவத்தை நேரடியாக அனுபவித்த பின்புதான்

கோடையை ஏன் அவ்வளவு சிறப்பாகக்

கொண்டாடுகிறார்கள் என்பதைப் புரிந்து

கொள்ளமுடிந்தது..நாங்களும் அவர்களுடைய

மனோபாவத்திற்கு மாறி கோடையை 

மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தோம்


அது குறித்து எழுதவும் புகைப்படங்களைப்

பகிரவும் நிறைய இருந்தாலும் இப்போது

இந்தப் பதிவு அதற்கானது இல்லை என்பதால்

அந்தக் குளிரின் காரணமாக கொண்ட

ஒரு அசௌகரியத்தை உடல் உபாதையை

அது தீர்ந்த விதத்தை பகிர்ந்தால்

அனைவருக்கும் அது பயன் தரலாம் என

இப்போது பகிர்கிறேன்


ஆறு மாதம் அங்கு இருந்து வந்த ஒரு வாரம்

எந்தப் பிரச்சனையுமில்லை. ஒரு வாரம் கழித்து

காலை நேரம் படுக்கையை விட்டு எழுகையில்

வலது கையை அசைக்க முடியவில்லை.

இடது கைப்பிடித்து தூக்கினாலும்

ஒரு நாற்பது டிகிரிக்கு மேல் நகர்த்தவே

முடியவில்லை.


சரி படுத்து இருந்ததில் வேலை செய்ததில்

ஏதாவது நரம்புப் பிசகு நேர்ந்திருக்கும்

இரண்டு நாள் லேசான பயிற்சிகள் செய்து 

பார்ப்போம் என முயற்சித்ததில் வலியும்

தூக்க முடியாத நிலையும்கூடியதே தவிர

குறைகிற பாடாய்க் காணோம்


சரி இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்

என மருத்தவரைப் பார்க்கப் போனேன்..

அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சி

அளிப்பதாக இருந்தது


மீதி அடுத்தப் பதிவில் 

Wednesday, September 2, 2020

இரசிப்பின் உச்சம்...

        

:https://ta.quora.com/profile/Jagatheeswaran-1மிகச் சிறந்த முறையில் திரைப்படத்தை வடிவமைத்தவருக்கு நாம் தரும் உச்சபட்ச மரியாதை அதை மிகச் சரியாக உணர்ந்து இரசித்து கொண்டாடுதலே...அதை இவர் எவ்வளவு விரிவாக அருமையாக கொண்டாடி இருக்கிறார் பாருங்களேன் முடிந்தால் அவர் தளத்திற்குச்  சென்று அவரைப் பாராட்டி கௌரவிக்கலாமே..)   .                                              நீங்கள் பார்த்து வியந்த தமிழ் திரைப்படம் எது?

நான் பார்த்து வியந்த படம் 2018 ஆம் ஆண்டு வெளியான "வடசென்னை", ஒரு வரி கதையாக சொன்னால் இந்தப்படம் சாதரணமாக தெரியும்.

தந்தை மாதிரி இருந்த நபரை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதாநாயகன்.

இந்தக்கதைக்கு மிகவும் அடர்த்தியான, கணிக்க முடியாத திரைக்கதை, உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் மற்றும் பிரம்மிப்பூட்டும் Detail Work பண்ணியிருப்பார் இயக்குனர் வெற்றி மாறன்.

Ripple effect என்ற தத்துவத்தின் படி ஒரு சிறிய அதிர்வு எப்படி ஒரு பெரிய அலையை ஏற்படுத்துகிறது என்ற அமைப்பில் படமாக்கியிருப்பார் இயக்குநர்.

ராஜன் மற்றும் அன்பு இருவரின் வாழ்க்கை ஒரே நேர்கோட்டில் பயனிக்கும்.

நான் பார்த்து வியந்ததற்கான காரணங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

வரலாறு முக்கியம் அமைச்சரே என வடிவேலு சொல்வதுபோல் இந்த வரலாற்று நிகழ்வுகளை தொடர்பு படுத்தி திரைக்கதை எழுத வெற்றி மாறன் திரைக்கதை, வசனம் அபாரமானது.

படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் அந்த காட்சியின் கால கட்டத்தை விளக்க அவர் பணியாற்றிய நுட்பம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

1987 - 2003 வரை நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே படம், எந்த காட்சியையும் நிறுத்தி அதனை உற்று கவனித்தால் அல்லது வசனத்தை கவனித்தாலோ அது நடக்கும் கால கட்டத்தை எளிதாக கூறிவிடலாம்.

  • ஆரம்ப காட்சி

ஒரு கொலை நடந்திருக்கிறது, யார் என காட்டப்படவில்லை, அந்த கொலையின் உச்சக்கட்ட வன்முறையை அவர்கள் மீது ஒட்டியிருக்கும் ரத்தம் மற்றும் சிறிதளவு சதையினை காட்டியே மிரட்டியிருப்பார்.

  • ஜெயில் சந்திப்பில் வசனம்

ஒரு வருஷமா ஜெயில்ல இருக்கோம், எப்ப வெளியே எடுப்ப என சமுத்திரக்கனி கேட்பார். இப்பதான் ஆட்சி மாறிடிச்சி, அடுத்த ஆறு மாசத்தல எலக்‌ஷன் வரும், அடுத்த எலக்‌ஷன் ல எங்க ஆட்சிதான் வரும்னு கிஷோர் சொல்வார்.

இந்த காட்சி 1988 ல் தமிழகத்தின் நிலையை குறிக்கும். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஜானகி ஆட்சி செய்து 23 நாட்களில் கலைக்கப்பட்டது, பின்னர் லா அண்ட் ஆர்டர் பிரச்சனையால் குடியரசு ஆட்சி நடந்ததையை அவர் கூறுகிறார். அப்ப அடுத்த ஆறு மாசத்துல எலக்‌ஷன் நடக்கும், ஆட்சி மாறும் என சொன்னதும் சரியானதே.

  • மத்திய சிறைச்சாலை

2000 ஆம் ஆண்டில் மத்திய சிறைச்சாலை சென்னையில் தான் இறுந்தது, அப்போது புழல் சிறை கட்டப்படவில்லை என்பதனை காட்டுகிறார்.

2006 ல் தான் புழல் சிறை திறக்கப்பட்டு அந்த சிறைக்கு கைதிகள் மாற்றப்பட்டனர்.

  • NDPS act

ஜெயிலில் போதைப்பொருள் கடத்தி உள்ளே இருக்கும் ராஜூ கைதான சட்டத்தை அழகாக விளக்கியிருக்கிறார்.

NDPS act என்பது Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 ஆகும்.

  • IPC act

இபிகோ - 302 : Section 302 of Indian Penal Code. " Punishment for Murder, 323 : Punishment for voluntarily causing hurt, 324 : Voluntarily causing hurt by dangerous weapons or means, 506(II) : Punishment for criminal intimidation

சிங்கார வேலர் நினைவு மன்றம்

யார் இந்த சிங்கார வேலர்?

சிங்கார வேலர் என்பவர் தான் இந்தியாவில் உழைப்பாளர் தினர் (மே, 1) கொண்டாட ஆரம்பித்தவர். இவர் மெட்ராஸ் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பெயிண்டிங் அந்த மன்றத்தின் சுவற்றில் இருப்பதையும் காணலாம்.

  • மெட்ராஸ்

சிங்கார வேலர் நினைவு மன்றம் திறக்கும்போது மெட்ராஸ் என பெயர்பலகையை பார்க்கலாம். இந்த சம்பவம் 1987 ல் நடக்கிறது.

1996 க்கு பிறகு தான் சென்னை பெயர் மாற்றம் செய்யப்பட்டது, அதற்கு முன்னர் மெட்ரான் தான்.

  • ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நாள்

இந்தக் காட்சியில் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக சொல்வார்கள்.

காலெண்டரில் உள்ள தேதியை பாருங்கள், 21–5–1991 ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நாளை காட்டியுள்ளார்.

  • Solidaire tv

அடுத்த காட்சியில் ஒருவர் Solidaire டிவியை திருடி வருவார், 1991 களில் இந்த கம்பெனி மிகவும் பிரபலமானது.

அதனுடன் பழைய அண்டென்னா வையும் காட்டியிருப்பார்

  • பிரச்சார விளம்பரம்

1991 ல் நடந்த தேர்தலில் ADMK சார்பில் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தல் தேதி : 24–06–1991.

  • சினிமா ரெபரன்ஸ்

1996 ல் தனுஷ் ஸ்டேட் லெவல் சாம்பியன் பட்டம் வெல்வார், பின்னர் அடுத்த காட்சியில் டிவியில் பூவே உனக்காக படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.

1983 க்கு பாயும் புலி ரெபரன்ஸ்

  • கிரிக்கெட் ஜெர்சி

தனுஷ் கொலை செய்துவிட்டு தப்பிக்கும் காட்சியில் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து செல்வார். 1996 ல் நடக்கும் காட்சி என்பதால் அப்போது இந்திய அணி பயன்படுத்திய ஜெர்சியை உபயோகித்திருப்பார்.

  • செய்தி வாசிப்பாளர்

எம்.ஜி.ஆர் இறந்த செய்தியை சமுத்திரக்கனி ரேடியோவில் கேட்கும் காட்சியில், ஆல் இண்டியா ரேடியோ செய்திகள் வாசிப்பவர் P. ராஜாராமன் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் இறந்த செய்தியை வாசிப்பார்.

டிசம்பர், 24, 1987 அன்று எம்.ஜி.ஆர் இறந்த செய்தியை வாசித்தவர் P. ராஜாராமன் ஆவார்.

  • ராதாரவி

ராதாரவி கதாபாத்திரம் அ.தி.மு.க வை சேர்ந்த எம்.எல்.ஏ போன்று காட்டப்பட்டிருக்கும். இதற்கு அவ்ர் வீட்டை சுற்றியுள்ள போஸ்டர், கொடி மற்றும் வீட்டிலுள்ள போஸ்டர் சான்று.

1984–1987 வரை எம்.ஜி.ஆர் ஆட்சியில் மீன் வளத்துரை அமைச்சராக இருந்தவர் எட்மன்ட் என்பதனை காட்டியுள்ளார்.

செய்தித்தாள்

ராஜன் பொண்ணுகேட்கிர காட்சியில் தினத்தந்தி செய்திதாளில் ஜெயலலிதாவை நீக்க முடியாது எம்.ஜி.ஆர் பேட்டி என எழுதப்பட்டிருக்கும்.

இது அப்போதைய Breaking News.

இந்தப்படத்தில் காட்டப்படும் செய்தித்தாள், காலெண்டர் அந்த காலத்தை சரியாக சொல்லியிருப்பார்.

இன்னொரு காட்சியில் வீரப்பன் கன்னட நடிகரை கடத்திய செய்தியும் காட்டப்பட்டிருக்கும்.

போப் ஆண்டவர் சென்னை வருகை மற்றும் எம்.ஜி.ஆர் இறந்த போது தமிழகத்தில் பேச்சு வாக்கில் இறந்த விடயங்களை வசனங்களில் அருமையாக கொடுத்திருப்பார்.

படத்தில் வரும் அனைத்து கதாபத்திரத்திற்கும் Continuity வை கொடுத்திருப்பார்.

  • Contractor
  • MLA

அவர் ராஜன் காலத்தில் மக்களில் ஒருவராக அல்லது சின்ன பதவிகளில் இருந்தார் என்பதற்காக இந்த பக்கத்தில் இருக்கிறார்.

  • ராஜன் அடியாட்கள்
  • குணா ஆட்கள்

போலிஸ் முடியை வெட்டும் காட்சியில் இருவர் நான் குணா ஆட்கள் என சொல்வார்கள் அவர்களை குணாவுடன் காணலாம்.

இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.

  • குணாவிற்கு ஏற்பட்ட வெட்டு தழும்பு
  • அலகு குத்திய தழும்பு

ஒவ்வொரு காட்சியும் வரலாற்று நிகழ்வுடன் தொடர்பு படுத்தி நகரும். முதலில் எடிட்டிங் செய்த First Copy நீளம் 4 மணிக்கு மேல் அதனை மைக்ரோ வெர்ஷனாக சுருக்கி 2 மணி 20 படமாக கொடுத்துள்ளார் (நல்ல விஷயம் எந்த பகுதியையும் நீக்கவில்லை)

முழு படத்தையும் பார்க்க மார்டின் ஸ்கோர்செஸி இயக்கிய ஐரிஷ்மேன் படம் போல் இருக்கும் என நினைக்கிறேன்.

இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காகது வருத்தமே.

ஹீரோ அதிக உடல்போட முட்டை செலவுக்கு 3 கோடி ஒதுக்கிய விட்டளாச்சாரியார் காலத்து கதை கொண்ட படத்துக்கு தேசிய விருது, ஒ**** நல்லா வாயில வருது.

பதிவின் நீளம் கருதி நிறுத்தி கொள்கிறேன், வட சென்னை படம் பற்றி மேலும் பல விவரங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

-

ஜேகே

-

404
4
33
கருத்து தெரிவிக்க…

National award இந்த படத்துக்கு கிடைகாதது பெரிய அதிர்ச்சியா இருந்தது.

எந்த படத்துக்கு கிடைத்தது? I lost track in following few years.

டீடெயிலிங் ஒன்னும் விடுபடலை. செம பதில் ஜேகே! 💐

8
பதில் அளியுங்கள்

இப்பலாம் National award லயும் Politics பண்றாங்க.

5
பதில் அளியுங்கள்

National award இந்த படத்துக்கு தேவையில்லை, நல்ல வருமானம் வந்துவிட்டது. போலிஸை அடிப்பது, ரவுடிகைளை அல்லது ரவுடி போன்ற செயல்பாடுகளை ஆதரிக்கும் வகையில் நிறைய காட்சிகள் உள்ளன.

2
பதில் அளியுங்கள்
ஜெகதீஸ்வரன்ஏற்கனவே தேசிய விருது கொடுத்த படங்களில் போலீஸை அடிப்பது போன்ற காட்சிகள் இல்லையா?

அப்பப்பா…அபாரமான observations ஜெகதீஸ்வரன் (Jagatheeswaran) .

இந்த படத்தை நான் பார்க்கவில்லை. விரைவில் பார்த்துவிடுவேன், இந்த பதிலை reference ஆக வைத்துக்கொண்டு

படத்தை ஏற்கனவே பார்த்து விட்டேன். இவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவில்லை. இப்போது சரியான விவரங்களோடு மீண்டும் ஒரு முறை பார்க்கப் போகிறேன்.

2
பதில் அளியுங்கள்

தரமான பதிவு 🔥