Thursday, December 27, 2018

கண்காணும் தெய்வங்கள்

கையில் சூலம் கொண்டோ
தோளில் சிலுவை சுமந்தோ

ஒளியாய் திருவாய் மலர்ந்தோ
கடவுள் நம்மிடம் வருவதில்லை.

விழும் போது தூக்கி விடுவோரும்
தாழ்ந்த போது தோள் கொடுப்பவரும்

புன்னகையை பரிசாக கொடுப்பவரும்
பசியறிந்து உணவிடுவோரும்

பிற உயிரை தன்னுயிராய் நேசிப்போரும்
மழலையின் மொழியில் மயங்குவோரும்

புண்ணியம் செய்து வாழ்பவர்களும்
எல்லோரும் கடவுளின் வடிவங்களே

புரிந்தவன் கடவுளை காண்கிறான்
புரியாதவன் கடவுளை தேடுகிறான்.           இது புரியாது                                     
கடவுளை ஏசுபவன் மட்டுமல்ல.         பூஜை செய்வோனும் அடிமுட்டாளே           (படித்தது பகிரப் பிடித்தது )

Tuesday, December 25, 2018

கடலை ஒரு துளியில்.

நண்பனிடம், நான்: “ஸீஸன் ஆரம்பிச்சாச்சு.. வாடா சபாக்கு கச்சேரி போலாம்...!”

நண்பன்: “எனக்கு கர்னாடிக் மியுசிக் இலக்கணமே தெரியாதேடா...   subtitle இல்லாம இங்கிலீஷ் படம் பாக்றா மாதிரி ஒண்ணும் புரியாது எனக்கு..!”

“பெரிய விஷயம் இல்லடா.. மியுசிக்னாலே ஏழு ஸ்வரம்தானே..?”

“முதல்ல ‘ஸ்வரம்’னா என்னன்னு சொல்டா..!”

“Sound production ஏழு நிலைகள்ள பண்லாம்...!  கீழ base - ‘ச’, ஷட்ஜமம்.  மேல high -  ‘நி’, நிஷாதம்.. கீழேயிருந்து மேலே போற progression - ச.ரி.க.ம.ப.த.நி – ஆரோகணம்.  மேலேயிருந்து கீழே progression - நி.த.ப.ம.க.ரி.ச - அவரோகணம்.  அந்த 7 நிலைகளுக்கும் கொடுத்திருக்கிற ‘ச ரி க ம ப த நி'ங்கிற label தான் ‘ஸ்வரம்...!"

“ஸ்ருதி’ன்னா என்னா..?"

“சவுண்டுங்கிறது ஒரு ரேடியோ மாதிரின்னா, அதுல பல frequencies தான் ‘ஸ்ருதி’..! அதையும் broadடா 7 நிலைகளா சொல்றாங்க.. நாம 1,2,3..7 கட்டைகள்னு சொல்றோம்... westernல அதையே Scaleனு சொல்றாங்க . இப்படி ‘ஸ்ருதி’க்கு fixed definition இருக்றதால, பாடறவங்க, accompaniments எல்லாமும் குறிப்பிட்ட ஸ்ருதி ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டு பாட / வாசிக்கும் போது கேட்க நல்லா இருக்கும்..!"

“ராகம்னா என்ன...?”

“ஸ்வரங்கள் சொன்னேன்ல..? அந்த 7 ஸ்வரங்களோட வேற வேற combinations தான் ராகங்கள்..! அதாவது ஆரோகணம், அவரோகணம் progression,  7 ஸ்வரங்களும் இருந்தோ, இல்ல,  சில சில ஸ்வரங்கள் இல்லாமலோ கோர்க்கும் போது, மாறுபட்ட tunes வரும்.. அதுதான் ராகம்..! ஒரு ராகத்துக்கான defined ஸ்வரங்கள பாடும்போது என்ன basic டியுன் வருதோ, அதே tuneல பாட்டோட வரிகளைப் பொருத்திப் பாடணும்..!"

“எல்லா ஸ்வரமும் இருக்கறது என்ன ராகம்..?”

“எல்லா ஸ்வரமும் இருக்கறது 72 ராகம் இருக்கு, அத மேளகர்த்தா ராகங்கள்னு சொல்றங்க..”

“அதெப்டி..? நீ சொல்றபடி பாத்தா அது ஒரு unique combination தானே..?”

“சிலது தவிர,  ஒவ்வொரு ஸ்வரத்திலேயும் 3 variations இருக்கு.. உதா: ‘ரி’ங்கிற ஸ்வரத்துல ‘ரி1’, ‘ ரி2’, ‘ரி3’ ன்னு மூணு இருக்கு.. ஸோ, permutations, combinations..! ராகத்தோட constituents வேற சிலவும் இருக்கு.. எனக்கு ரொம்ப தெரியாது..!”

“சரி… ‘தாளம்’கறது என்ன..? எல்லாரும் மூணு விரல் நீட்றாங்க... அப்புறம் முன்ன பின்ன கையை தட்றாங்க.. என்னது அது..?”

“Beatதான்டா தாளம்..! நம் எல்லோருக்குள்ளேயும் தாளம் defaultட்டா இருக்கு..! கொஞ்சம்  நேரம் கேட்டவுடனே ஒரு பாட்டோட தாளம் புரிஞ்சிடும்..! ‘ஆதி’ தாளம்தான் ரொம்ப பேசிக், நிறைய யூஸ் பண்ற தாளம்.. 1 2 3 4, 1 2 3 4.. அதத்தான், ஒரு தட்டு 3 விரல் (4), அப்றம் முன்ன பின்ன ரெண்டு தடவை தட்றது (4) ன்னு செய்றாங்க.. நிறையா தாளங்கள் இருக்கு..! எனக்கு எல்லாம் தெரியாது.. "

“டேய்.. உண்மையை சொல்லு... உனக்கு எவ்ளோ கர்னாடிக் மியுசிக் தெரியும்..?”

“5% தான் தெரியும்.. சபா கச்சேரி போறவங்கள்ள 95% பேருக்கு அவளோதான் தெரியும்..! பாட்டு, டான்ஸ், ஓவியம், சிற்பம்னு எல்லா கிளாசிகல் ஆர்ட்ஸுமே நம்ம மூளை, மனசு ரெண்டுத்துக்கும் அப்பீல் ஆகும்..! டெக்னிகல் எதுவும் தெரியாமலே   நாம் மனசால இன்வால்வ் ஆக முடியும்..! சங்கீதம் grows on you..! கர்நாடக சங்கீதம்கறது பெரிய கடல்..! எல்லாம் தெரிஞ்சாத்தான் கச்சேரி போகணும்னா பத்து பேரு கூட தேற மாட்டாங்க..!  போலாம் வா..!” (படித்தது பகிரப் பிடித்தது)

Sunday, December 23, 2018

நம் தமிழகத்தில் தான்..

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.

கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.

எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்: எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’
தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.

1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர்.மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,'அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா! அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.

மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,
எதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.
கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்?
சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.
கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. ‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.

அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.
கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!

*டிச 23., கக்கன் அவர்களின் நினைவு நாள்* (படித்ததில் பிடித்தது )

Tuesday, December 11, 2018

அறிவியலின் புலிப்பாய்ச்சல்

அறிவியலின் படு வேகமான வளர்ச்சி. இனி *கைவலிக்க தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை*. தரப்பட்டுள்ள முறையை கையாண்டால் *நாம் பேசுவது அப்படியே தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு விடும்*.

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முயன்று பாருங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதை உணர்ந்து கொள்ளலாம். *எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் எளிதாக இரண்டு நொடிகளில்*  தட்டச்சு செய்து விடலாம்.

அந்தச் செயல் முறையை கீழே தந்துள்ளேன். இத்தகைய அருமையான செயலியை உருவாக்கிய பொறியாளர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழில் பதிவிட புதிய செயலி ..

வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் அழகிய தமிழ்.....
*கைவலிக்க இனி தமிழில் டைப் செய்ய வேண்டாம்*.

*தமிழ் எழுதத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்*.

தமிழ் டைப்பிங் கஷ்டம் என்பது இனி இல்லை.

ஆச்சரியம், அருமை.

எழுத்துப்பிழை இல்லாமல் தமிழில் வார்த்தைகள்

நீங்கள் பேசினாலே தமிழில் அதுவாகவே டைப் ஆகிறது

வழி என்ன?

Play Store செல்லவும்.

Gboard app என டைப் செய்து download செய்யவும்..

Input language ல் தமிழ் செலக்ட் செய்ய வேண்டும்.
அதில் gboard ஐ செலக்ட் செய்ய வேண்டும்.

வாட்ஸ் ஆப் போகவும்.

வழக்கம்போல இருக்கும் கீபோர்டு, சற்றே வித்தியாசமாகத் தெரியும்

தமிழ் கீ போர்டை செலக்ட் செய்யவும்.

Keyboard
மேலே வலதுபுறம் பச்சை கலர் மைக் இருக்கும்.... அதில் பேசக்கூடாது....

அந்த பச்சைக் கலர் மைக்குக்கு கீழே,
கருப்புக் கலரில் சின்ன மைக் இருக்கும்.

Just  அதை பிரஸ் செய்துவிட்டு கையை எடுத்துவிடலாம்.

speak now என வரும்

நீங்கள் பேசினால் உடனே தமிழில் டைப் ஆகும்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்......

*தூய தமிழில் பேச வேண்டும்*

செய்தி வாசிப்பாளர்களைப் போல தெளிவாகப் பேசினால், வார்த்தை மாறாமல், பிழை இல்லாமல் அச்சு அசலாக நீங்கள் டைப் செய்தது போலவே வரும்

முயற்சி செய்து பாருங்கள்

எழுத்துப்பிழை இல்லாமல்,  மிக அழகாக *ஒலி எழுத்து வடிவம் பெறும் அறிவியலின் அற்புதம்*... பயன் படுத்துங்கள்… பயன்  பெறுங்கள்.

இது பதிவிடும் அனைவருக்கும் பயன்படும் செயலி என்பதால் இதில் பதிவு செய்துள்ளேன்.

Thursday, December 6, 2018

நம்மவரின் நூல் வெளியீட்டு விழா


நேரடிப் பரிட்சியமின்றி பண்புநலனையும்  புகழையும் கேள்விப்பட்டு நட்பு கொண்ட கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போல தாய்மையின் கனிவுடன் இன்றைய இளைஞர்பால் கொண்ட அதீத அக்கறையுடனும் தொடர்ந்து மிகச் சிறப்பானப் படைப்புகளை வழங்கிவரும் திருமிகு கௌசிசிவபாலன்  அவர்களின் அதி தீவிர இரசிகன் நான்.நல்லவர்கள் வல்லவர்களாகவும் ஆனால் நாடு எத்தனை நலம் பெறுமோ அதனினும் சிறந்ததை பயனுள்ளதை  மட்டுமே எழுதுபவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும் பாண்டித்தியம் மிக்கவர்களாகவும் இருப்பின் இலக்கிய உலகம் இன்னும் பல உன்னத பொக்கிஷங்கள் பெறும் என்பதற்கு எழுத்தில் பன்முகத் திறன் கொண்ட கௌசி சிவபாலன் அவர்களே நல்ல உதாரணம். அவரது மூன்றாவது வெளியீடான
நாளை (8/12/2018)நடைபெற இருக்கும்       "வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் " நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக அமைய தமிழ்ப்பதிவர்கள் சார்பாக என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, November 13, 2018

உண்மையான ஒருவிரல் புரட்சி

 எங்கள் பகுதியை ஏழு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அந்தப் பகுதியில் ஒரு அட்மினை நியமித்து அந்தப் பகுதி மக்களை வாட்ஸ் அப்பில் இணைத்து அவர்கள் பகுதியில் நேரும் பொதுக்குறைகளைப் பதிவிடுமாறு ஏற்பாடு செய்துள்ளோம். பதிவின் தன்மைப் பொருத்து தகவலை உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.அவர்கள் உடன் பகுதிப் பணியாளருக்கு உத்திரவிட உடன் அந்தக் குறைபாடு சரிசெய்யப்படுகிறது.எங்கள் பகுதிக்கு வாய்த்த அனைத்துத் துறை அதிகாரிகளும் பொது நல நோக்கு அதிகம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களாகவே வாட்ஸ் அப் பக்கத்தில் தங்களை உடன் இணைத்துக்கொண்டு குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார்கள். உதாரணத்திற்கு நேற்று நடந்த ஒரு விஷயத்தை தகவலுக்காக பகிர்ந்துள்ளேன். முயன்றால் உங்கள் பகுதியிலும் இப்படி மக்களுக்குப் பணியாற்ற நிச்சயம் முடியும்..வாழ்த்துக்களுடன்                           
நாய் ஒன்று 2429 பிளாட்டுக்கு எதிரில் இறந்து கிடக்கின்றது அகற்ற ஏற்பாடு செய்யவும் நன்றி       ( 13/11 அன்று இரவு 9மணிக்கு வந்த தகவல் )                               
சம்பத்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடன் ஆவன செய்வார்கள் தகவலுக்கு நன்றி (அன்று இரவு 10 மணிக்கு அவரின் தகவலை சம்பத்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பி விட்டு அவருக்கு நான்  அனுப்பிய செய்தி      )                                                             
 இறந்த நாய் உடன் அப்புறப்படுத்தப்பட்டது    (மறுநாள் காலை 9மணிக்கு சம்பத்தப்பட்ட அதிகாரியிடமிருந்து படத்துடன் வந்த செய்தி)                                                                                             .                                           உடன் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்ட அதிகாரிகளுக்கும் அப்புறப்படுத்திய ஊழியருக்கும்மிக்க நன்றி  (பத்து மணிக்கு நானிட்ட பதில்)                                   
 நன்றி தங்களின் துரித நடவடிக்கைக்கு எனது வாழ்த்துக்கள் (புகார் கொடுத்தவரின் பதில் கடிதம் 11மணிக்கு )

Thursday, November 1, 2018

சர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை

எதைச் சொல்வது என அறியாது
எப்படிச் சொல்வது என்பதறிந்து
என்ன செய்வது என அறியாது
உப்பரிகையில் உலாத்தியபடி சிலர்

எதைச் சொல்வது என்பதறிந்து
எங்கு எப்படிச் சொல்வதென அறியாது
என்ன செய்யலாம் என பிதற்றியபடி
வீதியில் திரிந்தபடிப் பலர்

எதை எப்படி என இரண்டுமறிந்தவர்
முன்புபோல் ஏன் இல்லை என
விசனப்பட்டு இருவருக்குமிடையில்
அனாதைகளாய் கதைகளுக்கான கவிதைகளுக்கான
பல அற்புதக் கனவுகளும் கற்பனைகளும்....

Wednesday, October 31, 2018

தலைப்பும் கவிதையும் கவிஞனும்

தயிருக்குள் தயிராகவே
தனைமறைத்த வெண்ணையாய்க்
கவிதைக்குள் புலப்படாது மறைந்திருந்து

கவிஞனின் தேடுதல் நிறைவுற
மெல்லத் தலைக்காட்டும் நற்தலைப்பும்

மொட்டுக்குள் நேர்த்தியாய்
மறைந்திருக்கும் இதழ்களாய்த்
தலைப்புக்குள் சூட்சுமமாய் ஒளிந்திருந்து....

கவிஞனின் சிந்தனை ஒளிபட
மெல்ல விரியும் பூங்கவிதையும்

கண்ணுக்கினிய காட்சியாய்
நிகழ்வாய் உணர்வாய்
அரூபமாய் எங்கெனும் ஒளிர்ந்திருந்ததை

கண்டு உணர்ந்து இரசித்து
கவியாக்கி மகிழும் கவிஞனும்

ஒன்றுக்குள் ஒன்றாயும்
ஒன்றின்றிலிருந்து ஒன்றாயும்
ஒன்றின்றி ஒன்று இல்லையாயினும்..

அவைகளுக்கான இடம் விட்டு நகராதும்
இடைவெளிக் காக்கும் நாசூக்கும் கூட...

புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டுமென
வாழ்வின் சூட்சுமம் ஒன்றை
சொல்லாது சொல்லித்தான் போகிறது

Tuesday, October 30, 2018

நீதி மன்றமும் நியாய சபையும்

குற்றவாளிக் கூண்டில் பதட்டத்தில்
கைகளைப் பிசைந்தபடி நீதிபதியைப் பார்க்கிறேன்
அவர் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார்

"எனவே சந்தர்ப்பச் சாட்சியங்களை தீர விசாரித்த
வகையில் இவர் மீதுள்ள குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபணம் ஆன படியால்...."

அவர் தொடர்ந்து படிக்கிறார்

நான் சத்தமாய்க் கதறுகிறேன் " ஐயா நல்ல
விசாரிங்க ஐயா.. இது ஒரு தப்புத்தான்
ஏதோ ஒரு கோபத்தில் நடந்து போனது.
மத்தபடி ஊருக்கு ஆயிரம் நன்மை
செய்திருக்கிறேன் ஐயா......கொஞ்சம்
கருணை காட்டுங்க ஐயா....

என்னை இடைமறித்த நீதிபதி ' இது
நியாய சபையல்ல. உன்னைப்பற்றி
முழுவதும் தெரிந்து கொள்வதற்கு
நீ செய்த இந்தக் குற்றம் குறித்து மட்டுமே
இந்த மன்றம் கவனத்தில் கொள்ளும்....
எனவே நீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய
10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை
இந்த நீதிமனறம் உறுதி செய்கிறது...

இதற்கு மேல் என் செவியில் எதுவும்
விழவில்லை.சடாரென மயங்கிக் கீழே சரிகிறேன்.

நான்விழித்துப் பார்க்கையில் எம கிங்கரர்கள்
புடை சூழ வேறு ஒரு குற்றவாளிக் கூண்டில்
நிற்கிறேன்

எதிரே சிம்மாசனத்தில் ஆஜானுபாவனாய் அமர்ந்திருந்த
எம தர்மன் தீர்ப்பை வாசிக்கக் துவங்குகிறார்

கொஞ்சம் தைரியத்தை கூட்டியபடி "ஐயா
விசாரிக்கவே இல்லை. அதற்குள் தீர்ப்பைப்
படிக்கிறீர்களே ..." என்கிறேன்

அவர் கடகடவென சிரித்தபடி "சாட்சி, சந்தர்ப்பம்
மண்ணாங்கட்டி மட்டை எல்லாம் உங்கள்
நீதிமன்றங்களில் தான்.இங்கு நாங்கள் எவரையும்
விசாரிக்க வேண்டியதில்லை.உன் பிறப்பு முதல்
இறப்பு வரையிலான செயல்பாடுகள் எல்லாம்
எங்களுக்கு அத்துப்படி... எனவே...

அவர் படிக்கத் துவங்க எனக்குள் எண்ணைக்
கொப்பறை சவுக்கு,முள்படுக்கை எல்லாம்
நினைவுக்க் வர உடல் நடுங்கத் துவங்குகிறது

அவர் தொடர்கிறார் " இவர் கோபத்தில்
சில பாவங்களைச் செய்திருந்தாலும் கூட
அதையும் தாண்டிய வகையில் ஏழை எளிய
மக்களுக்கு தன்னாலான சேவையை தொடர்ந்து
செய்துள்ளபடியால்..இவரை இரண்டாம் நிலை
சொர்க்கத்துக்குப் பரிந்துரை செய்கிறேன்..

என்னால் நம்பவே முடியவில்லை.என்னைக்
கிள்ளிப்பார்த்துக் கொள்கிறேன்.

" ஐயா இப்படின்னு தெரிஞ்சா இன்னும் நிறைய
நனமை செய்திருப்பேனே. முதல் நிலைக்குப்
போயிருப்பேனே.. ஐயா ஐயா இன்னொரு
சந்த்ர்ப்பம் கொடுங்கையா.. ஐயா.. ஐயா..

நான் கதறுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை வலுக்கட்டாயமாக அங்குள்ள பல்லக்கில்
ஏற்றுகிறார்கள்..

நான் திமிரத் திமிர என் முகத்தில் சட்டென
ஏதோ ஈரப்பதம் தென்பட முகத்தைத் துடைக்கிறேன்

எதிரே பித்தளைச் செம்புடன் என் மனைவி..

Monday, October 29, 2018

ஆனந்தத்தின் அற்புதம்

அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்

யானையக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேடையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Saturday, October 27, 2018

மார்கெட்டிங்கும் பிசினெஸ்ஸும்

'இத்தனை நாள் நான் பிஸினெஸ்ஸில்
இருக்கிறேன் எனத்தான் பேரு
நிஜமாகவே இந்த பயிற்சி வகுப்புக்குப் போய்த்தான்
மார்கெட்டிங்கிற்கும் பிசினெஸ்ஸுக்குமான
வித்தியாசம் புரிந்தது "என்றான் நண்பன்

நான் மெல்லச் சிரித்தபடிக் கேட்டேன்
"இந்தப் பயிற்சி வகுப்புக்கு எவ்வளவு செலவு"

'ஒரு முழு நாளுக்கு பத்தாயிரம்
உணவு உட்பட "என்றான்

'இதோ வெளியே எட்டிப்பார்
அந்தப் பயிற்சி இலவசமாகவே "என்றேன்

வெளியே நடுரோட்டின் கொட்டடித்துக்
கீரிப் பாம்புச் சண்டையென கூட்டம் கூட்டி
நல்ல கூடம் சேர்ந்ததும் தன் தாயத்தின்
மகிமையை விளக்கி விறபனை செய்து
கொண்டிருந்தான் அந்தப் பாம்பாட்டி

நண்பனின் முகம் இறுகிக் கொண்டிருந்தது.

Tuesday, August 28, 2018

வெள்ள நிவாரண சேவைப்பணி

உலகில் எங்கு தேவை உள்ளதோ
அங்கு நிச்சயம் உடன் உதவ அரிமாக்கள்  இருப்பார்கள்
என்பது உலகம் முழுதும் அறிந்த மொழி

மிகக் குறிப்பாக வில்லாபுரம் அரிமா சங்கமும்
அது துவங்கக் காரணமாக இருந்த
வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர்
நலச் சங்கமும் இருக்கும்   என்பது
மதுரை மாவட்டம் அறிந்தச் செய்தி

சென்னை நகரம் புயலால் பாதிக்கப்பட்டபோது
சுமார் பத்து இலட்சம் மதிப்பிலான
நிவாரணப்பொருட்களுடன் பாதிக்கப்பட்ட
பகுதிக்கு  (முடிச்சூர்) நேரடியாகச் சென்று
வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றதன்
தொடர்ச்சியாய் ..... அதன் மூலம் பெற்ற
அனுபவத்தின் தொடர்ச்சியாய் ...

(அப்போது வழிப்பறி கொள்ளையர்களாய்
சில கட்சிக்காரர்களே இருக்க அதனைத்
தடுக்கும் விதமாய் காவல்துறை
அதிகாரிகளை உடன் அழைத்துச் சென்றது,
வெறும் உணவுப் பொட்டலங்கள் மட்டுமின்றி
சமையல் சாமான்கள் பத்து நாட்களுக்கு
வரும்படியாக தனித்தனியாக பேக் செய்து
கொண்டு போனது ,  மெழுகுவர்த்தி
தீப்பெட்டி ,டார்ச் லைட் ,மருந்துப்  பொருட்கள்
என உடனடியாகவும்   தொடர்ந்து சிலநாட்களுக்கு
அவர்களுக்குத் பயன்படும்படியாய் பார்த்துப் பார்த்து
சேகரித்துக் கொண்டு போனது , மிகச் சரியாக
முறையாக பாதிக்கப்பட்டோரை நிவாரணப் பொருட்கள்
சேரவேண்டும் என்பதற்காக முடிச்சூரில் இருந்த
சேவை மனப்பான்மை கொண்ட அமைப்புடன்
இணைந்து பகிர்ந்தளித்தது இத்யாதி ..இத்யாதி )

..இம்முறை கேரளாவில் அதிகம் பாதிக்கப்பட்ட
ஆலுவா என்கிற பகுதியினைத் தேர்ந்தெடுத்து
அப்பகுதியில் சுமார் 1500 பேருக்குப் பயன்படும்படியாக
சுமார் பதினைந்து இலட்சம் மதிப்பிலான
நிவாரணப் பொருட்களை சேகரம் செய்து
மிகச் சரியாக முறையாக பகிர்ந்துதளித்து
திரும்பி இருக்கிற சேவைச் செம்மல்களை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்

இந்த மாபெரும் சேவைப் பணியினை
முன்னின்று முறையாகச் செய்து தந்த

வில்லாபுரம் புதுநகர் குடியிருப்போர் சங்க
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ,

வில்லாபுரம் புது நகர் அரிமா சங்க முன்னாள் ,
மற்றும் இவ்வருட  நிர்வாகிகளுக்கும்
துடிப்புமிக்க உறுப்பினர்களுக்கும்

வில்லாபுரம் புதுநகர் பேட்மிண்டன் சங்க
பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்

மிக  முக்கியமாய் இவர்கள் அனைவரையும்
மிகக் சரியாய் ஒருங்கிணைத்து இந்த
வெள்ள நிவாரண சேவைப்பணிமிகச் சரியாய்
நடைபெறக் காரணமாய் இருந்த
வில்லாபுரம் புது நகர் அரிமா சங்க
பட்டயத் தலைவர் /குடியிருப்போர் சங்கச்
செயலாளர் லயன் இப்ராகிம் சுல்தான் சேட்
அவர்களுக்கும்

எங்கள் மனமார்ந்த நன்றியினைக்
காணிக்கையாக்கி அது  தொடர்பான
புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்










:





Tuesday, August 21, 2018

விஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்

சாதாரண நாட்களில் படித்துக் கொண்டும்
விளையாடிக் கொண்டும் ஒய்வு நேரங்களில்
ஜாலியாகச் சினிமா மற்றும் வெட்டி அரட்டை
அடித்தபடி   சிரித்துப்  பேசி
கலாய்த்துக் கொண்டு  மட்டுமே
இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும்
இளைஞர்களுக்குள்  ,

நீறுபூத்த நெருப்பாக சமூகப் பொறுப்பும்
சேவை மனப்பான்மையும்  எவ்வளவு
கனன்று கொண்டிருக்கிறது  என்பதற்கு
வெள்ளம் புயல் போன்ற அசாதாரண
சூழல்கள்  வரும்போதுதான் நமக்கே
புரியவும் செய்கிறது ,நம் நாட்டின் வருங்காலம்
குறித்து பெரும் நம்பிக்கையும் துளிர்க்கச் செய்து போகிறது

மதுரை டி .வி.ஸ்  நகரில் இயங்கிவரும்
இளைஞர்கள் அமைப்பின் சார்பில்
சில தினங்களுக்குள் சுமார் ஒன்றரை
மதிப்பிலான மருந்துப்பொருட்கள் நாப்கின்
டவல்ஸ் , பிஸ்கெட்ஸ்,டார்ச் லைட் /உடைகள்
மற்றும்   உடனடி அவசரத் தேவைக்கான
பொருட்களை ச் சேகரித்து நிவாரண
முகாம்களுக்கு அனுப்பிவைத்த நிகழ்வு
மிக்க பெருமிதம் தருகிறது

அவர்களது சேவையைப்  போற்றும் விதமாக
விஸ்வரூபம் எடுத்த வாமனர்களின்
புகைப்படங்களை இங்கு பகிர்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்






Monday, August 20, 2018

இம்முறையும் எப்போதும் போலவே ..

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி   எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

இயற்கைக்கு எதிராக
எங்கள்  வசதியான வாழ்க்கைக்காக
நாங்கள்  செய்தக்  கொடுமைகளை

அது  தானாகத்  தன்னைச்
 சரிசெய்து கொள்ளச்
தன்னைச் சீர்திருத்திக் கொள்ள முயல

அது  எங்களுக்குப்   பேரிடராய்
பெரும் அழிவாய்
எம்  அன்றாட வாழ்வைப் பாதிக்க

இனியும் அது தொடர்ந்தால்
எம் நிலை அதோ கதிதான் என
மிகத்  தெளிவாய்ப் புரியக்

காடுகளை அழிப்பதில்லை
மண்வளம் கெடுப்பதில்லை
நீர் வளம் காக்கத் தவறுவதில்லை என

இன்னும் அற்புதமான
மிக மிக அவசியமான
உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

ஒவ்வொரு முறையும்
குடலும் உடலும்
குடியால் பாதிக்கப்பட

இனியும் குடித்தால்
உயிருக்கு உ த்தரவாதமில்லை என
மருத்துவர் கைவிரிக்க

இனியும் குடிப்பதில்லை என
மருத்துவருக்கு உறுதி தரும்
ஒரு மொடாக்   குடிகாரனைப்போலவே

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி  எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

செயலால் துரும்பசைக்கக் கூடக்
சிறிது குனிந்து நிமிரும் சிரமம் இருக்கிறது என்பதால்

எண்ணத்தால் இமயம் அசைப்பதில்        வெற்றுச் சொல்லால் அதன் சிகரம் தொடுவதில்
சிறிதும் சிரமம் இல்லை என்பதால்

இம்முறையும் .....


Thursday, August 16, 2018

"தமிழனென்பேன் கன்னடியன் என்பேன்...

கையில் காசு குறைகிறதெனில்
வீட்டில்
சட்டிப் பானை உருட்டி
ஆர்ப்பாட்டம் செய்து...

காசு வ்ந்தவுடன்
அதனை
மதுக்கடையில் கொண்டு சேர்ப்பவனை
என்னவென்பாய் " என்றது
கருத்துப் பெருத்திருந்த
அந்தக் கார் மேகம்

"இதிலென்ன சந்தேகம்
குடிகாரன் என்பேன்
கூறு கெட்டவன் என்பேன்
இன்னும் சரியாகச் சொன்னால்
வாழத் தகுதியற்றவன் என்பேன்"
என்றேன்

இகழ்ச்சியாய் மின்னலாய்ச்
சிரித்த மேகம்...

"அது சரி
அப்படியானால்
குறைவாய்க் கொடுக்கையில்
அதன் அருமை புரிந்து
பகிர்ந்துவாழப் பழகாது
அரசியல் செய்பவனை

அதிகமாய்க் கொடுக்கையில்
சேமிக்கத்  தெரியாது
அதனை வீணாய்க்
கடலில் சேர்ப்பவனை
என்னவென்பாய் " என்றது நக்கலாய்..

சுருக்கென்றது

"தமிழனென்பேன்
கன்னடியன் என்பேன்
இன்னும் சரியாகச் சொன்னால்
இந்தியன் என்பேன் "
எனத் தான் சொல்லத் தோன்றியது

ஆனாலும்
இனப்பற்றும் நாட்டுப்பற்றும்
இடையிலிருந்துத் தடுக்க
மௌனமானேன்

மௌனத்தில் எரிச்சல் கொண்ட மேகம்
இடியெனச் சிரித்து
இன்னும் கருத்துக் கனக்கத் துவங்கியது

கோபத்தில் அது
இன்னமும் "கொட்டித்" தீர்க்கலாம்
எனப்படுகிறது எனக்கு

Tuesday, August 14, 2018

ஆயிரம் பதிவுகடந்தும்...

அறவுரையாய் அல்லாது
அறிவுரையாய் இல்லாது
அனுபவ உரையாய்...

அறிவுறுத்தியும் சொல்லாது
அலட்சியமாயும் சொல்லாது
எளிமையாய் மிக  இயல்பாய்..

கவிதையாயும் இல்லாது
உரையாயும் இல்லாது
இரண்டுக்கும் இடைப்பட்டதாய்..

இளக்கிய கவிதையாய்
இறுக்கிய உரையாய்
வசனகவிதை எனும் படியாய்

இழுத்தும் செல்லாது
ஒதுக்கியும் போகாது
உடன்வரும் வழிகாட்டியாய்..

பாண்டித்தியம் காட்டாதும்
"படி "இறங்கிச் சாயாதும்
தரமது நிலைக்கும்படியாய் ...

உயர்த்தும்படி இல்லையெனினும்
ஒதுக்கும்படி இல்லாது
தவறாது தொடரும்படியாய்

வேகமது குறைவெனினும்
விட்டுவிடாது தொடர்ச்சியாய்
எட்டாம் ஆண்டு எனும்படியாய்

ஆயிரம் பதிவுகடந்தும்
அயராது தொடர்கிறேன்
ஆரம்ப நாளைப்  போலவே

என்றும் குறையாது
தொடரும் உங்கள்
ஆதரவைப்  போலவே...

 வாழ்த்துக்களுடன்....


Monday, August 13, 2018

கன மனம் கொண்டோரே கவலை மிகக் கொண்டோரே

கன மனம் கொண்டோரே
கவலை மிகக் கொண்டோரே

நதிக்கரையோரம்...
குளக்கரையோரம்...
ஓடைக்கரையோரம்...

மெல்ல நடப்பதாலேயே
நீங்கள் ஆறுதல் கொள்வது நிஜம்தான்...

அந்தச் சூழல் உங்களுக்குள்
ஒருமாற்றம் ஏற்படுத்துவது நிஜம் தான்

ஆயினும்
அதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு
என்பதை நீங்கள் என்றேனும்  சிந்தித்ததுண்டா ?

ஆம் சிந்தித்தீர்கள் ஆயின்

நிச்சயம் கனத்த மனத்துடன்..
கவலை தோய்ந்த முகத்துடன்
அவ்விடம் செல்ல மாட்டீர்...

மேலே பறந்தபடி
தன்னைக் கவ்வ நோட்டமிடும்
பருந்துக் கூட்டம் எதையும்..

தவமுனிவனைப் போல்
ஒற்றைக்காலில் நின்று தன்னைக் கொத்த எண்ணும்
கொக்குக் கூட்டம் எதையும்...

வலைவீசியபடி
ஆசையோடுக் காத்திருக்கும்
மீனவர் கூட்டம் எதையும்...

துளியும் கவலையது கொள்ளாது

பிடிபடும் கடைசி நொடிவரை
சந்தோசித்துத் திரியும்
அந்த மீன் கூட்டதின் மன நிலையை..

அதன்
உற்சாக மன நிலையை
உல்லாச சுக நிலையை

உங்கள் கனத்த மன நிலை
கவலை கொண்ட மன நிலை

நிச்சயம் மாற்றவும்
வாய்ப்பு உண்டுதானே..

எனவே
கன மனம் கொண்டோரே
கவலை மிகக் கொண்டோரே...

Thursday, August 9, 2018

முகம் மறைத்துப் புரட்சித் தீமூட்டும்....

பிரச்சனையாளர்களாய் இருப்போம்
எப்போதுமே
பிரச்சனையாளர்களாய் இருப்போம்

பிரச்சனை சிறிது எனில்
ஊதி ஊதிப் பெரிதாக்குவோம்

பிரச்சனை ஏதும் இல்லையெனில்
நாமே அதை உண்டாக்குவோம்

ஏனெனில் பிரச்சனை இல்லையெனில்
நம்மை கண்டு கொள்வார் இல்லை

நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள
நியாய வழியில் வாய்ப்பே இல்லை

நேரடிச் சண்டையில்
சிறிதேனும் காயம் பட வாய்ப்புண்டு

நிழல் யுத்தத்தில்
சிறுகீறலுக்கும் நிச்சயம் வாய்ப்பில்லை

கவனமாய் முகம் தெரியாது
முகமூடி அணிந்து கொள்வோம்

பிறர் பொருளுக்கு ஆசைப்படும்
திருடனுக்கு மட்டுமல்ல

சமூக அமைதியைக் குலைக்கும் நமக்கும்
அது  நிச்சயம் அவசியம்

சொல்பவர்கள் ஆயிரம் சொல்லட்டும்

தானெரித்த  வீட்டில் சிகரெட்டுக்கு
நெருப்பெடுக்கும் சுகம்
அனுபவித்தால்தான் புரிந்து கொள்ள முடியும்

எரிபவர்கள் குறித்து வருந்துபவனுக்கு
இந்தச் சுகம் புரிய
நிச்சயமாய்  வாய்ப்பே இல்லை

முகம் மறைத்துப் புரட்சித் தீமூட்டும்
நவயுகப்  போராளிகளே...

வாருங்கள்

இன்றைக்கு எதைப் பற்ற வைப்பது
என்பது குறித்துச் சிந்திப்போம்

நாடு எப்படியோ நாசமாகட்டும்

நம்மை அடையாளப் படுத்திக் கொள்வதில்
நாம் நம்  கவனத்தைக் குவிப்போம்

Tuesday, August 7, 2018

"அந்தோ ஐயகோ "

"அந்தோ ஐயகோ "
சோகத்தின் உச்சத்திற்கான வார்த்தைகளாய்
உன் பயன்பட்டால்
வீரியம் கொண்ட  வார்த்தைகளை
உனக்கே பயன்படுத்தும்படி  ஆகிப் போனதே

ஐயகோ ! இந்தக் கொடுமையை
என்னவென்று சொல்வது ?

"அண்ணனுக்கு" நீ எழுதிய
இரங்கற்பாவே இன்று வரை
இரங்கற்பாவிற்கு இலக்கணமாய்..
இரங்கற்பா இலக்கியமாய்...

உனக்கே ஒரு இறங்கற்பாவா
இந்தக் கொடுமையை எப்படிச் சகிப்பது ?

அன்று இயக்கப் பாதையில்
நீ முதலடி எடுத்து வைக்கையில்
உன்னைச் சுற்றி
இரண்டு பட்டமேற்படிப்புத் தலைவர்களே அதிகம்

மிரண்டு விடவில்லை நீ
காரணம் உன்னிடம் அவர்களினும்
இரண்டு மடங்கு தமிழறிவும் தமிழுணர்வும்
தகிக்கித் கிடந்தது உன்னுள்

அன்றைய தலைவர்கள் எல்லாம்
நகர வாசிகளாய் நடுத்தரவாசிகளாய்
நீ மட்டும் கிராமவாசியாய் கீழ் நிலையாய்..

கலங்கிடவில்லை நீ...

காரணம் நீ  பேச்சாற்றலால்
தமிழகமெங்கும்
நகரும் வாசியாய் இருந்ததால்

பாமர மக்களை
இனிய தமிழால்
கவரும் வாசியாய் இருந்ததால்..

அண்ணனுக்கு அடுத்து நான்
என் முன் வரிசையில் எல்லோரும் இருக்க
நீ அண்ண்னுக்கு பின் பலமாய் இருந்தாய்

அதனால் தானே கழகத்தின் உயிராய்
தொண்டனுக்குத் தலைவானாய்
தமிழக முதல்வனாய் முன்மொழியப்பட்டாய்..

பதவியை முள் கிரீடமாய் எண்ணினாய்

அதனால்தான் உன்னால்

தென்றலின் சுகத்தில்
மயங்கா தீரனாய்

புயலில் கொடுமையில்
சோராத தலைவனாய்
இறுதிவரை இருக்க முடிந்தது

அதனால்தானே கழகத்தை
அண்ணன் போதித்த
கடமை கண்ணியம் கட்டுப் பாட்டுடன்
இன்று வரை கட்டிக் காக்க முடிந்தது..

நல்ல தெளிவுடன் இருக்கையிலேயே
" ஓயாது உழைத்த இதயம் இங்கு
ஓய்வு கொள்கிறது " என
கல்லறைக்கான  இறுதிவாசகம் தந்தவனே

சாணக்கியத் தனத்தினால்
உன் அரசியல் எதிரிகளையும்
உனக்குச் சாமரம் வீச  வைத்தவனே

பேச்சுச் திறத்தால்
உன் கொள்கை எதிரிகளையும்
உனக்குத் காவடித் தூக்க வைத்தவனே

திடமான முடிவுகளால்
என்றும் எதிரான வடவர்களையும்
உனக்கு கம்பளம் விரிக்க வைத்தவனே                                                                                      மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதில் நீ உறுதியாய் இருந்தாய்             அதனால்தானே அந்த மகேசனும்             பழுத்த ஆன்மீக வாதிக்கும் அருளும்   l ஏகாதசி மரணத்தை உனக்கு அருளி          மனம் நிறைவு கொண்டிருக்கிறான்

 உன் திறன் குறித்து எழுத
உன் புகழ்க் குறித்து எழுத
நிச்சயம் இங்கு எமக்குத் தகுதியில்லை

எங்கள் விழிப்புணர்வுக்காக
ஓயாது உழைத்த உதய சூரியனே

தமிழ் உள்ளவரை
உன் புகழ் நிச்சயம் உச்சத்தில்தான்

கையறு நிலையில்
கண்ணீர் மல்க விடைதருகிறோம்

போய் வா
தன் மானத் தலைவா

போய்வா
தமிழினதின் ஒப்பற்ற தலைவா

Monday, August 6, 2018

சாய்வு நாற்காலியில் இருந்து ...

இளமையில்
நல்லவைகள் எதைச் செய்யவும்
வரையரை வைக்காதீர்கள்

இளமையில்
நல்லவைகள்  எதை இரசிக்கவும்
எல்லைகள் வகுக்காதீர்கள்

ஏனெனில் முதுமையில் ...

நினைத்ததையெல்லாம்
முன்போல உங்களால்
சொல்லச் சாத்தியமில்லை

சொல்ல முடிந்தவைகள் மட்டுமே
நினைவுகளாய்...

விரும்பியதையெல்லாம்
முன்போல் உங்களால்
உண்ணச் சாத்தியமில்லை

உண்ணமுடிந்தவைகள்  மட்டுமே
விருப்பங்களாய்...

நண்பர்களையெல்லாம்
முன்போல் உங்களால்
சந்திக்கச் சாத்தியமில்லை

சந்திக்க முடிந்தவர்கள் மட்டுமே
நண்பர்களாய்...

இலட்சியங்களையெல்லாம்
முன்போல் உங்களால்
அடையச் சாத்தியமில்லை

அடைய முடிந்தவைகள் மட்டுமே
இலட்சியங்களாய்...

ஆம் ...

நினைத்ததையெல்லாம்
மிகச் சரியாய்ச் சொன்னதும்..

விரும்பியதையெல்லாம்
அதிகம் இரசித்து  உண்டதும்

நண்பர்களையெல்லாம்
தவறாது தினமும் சந்தித்ததும்

இலட்சியங்களையெல்லாம்
விடாதுத் தொடர்ந்து அடைந்ததுமே

முதிர்ந்த  நிலையில்
மனதுக்கு இதம் தருவதாய்..

தொடர்ந்து இயங்குவதற்கு
உடலுக்கு உரம் தருவதாய்...

வாழ்ந்த,
வாழும் வாழ்க்கைக்கு

முழுமையான அர்த்தம் தருவதாய்...
இருக்கச் சாத்தியம்  என்பதால் ..

இளமையில்
நல்லவைகள் எதைச் செய்யவும்
வரையரை வைக்காதீர்கள்

இளமையில்
நல்லவைகள்  எதை இரசிக்கவும்
எல்லைகள் வகுக்காதீர்கள்

Thursday, August 2, 2018

காதலும் கவிதையும்

"காதலர்கள் காதலில் தோற்று
தற்கொலை செய்துகொள்வது
தொடர்ந்து நடக்கிற போதும்...

கவிதைகள் என்கிற பெயரில்
குப்பை கூளங்கள்
தொடர்ந்துப் பெருகிடும் போதும்...

காதலும் கவிதையும் மட்டும்
எப்படி நித்தமும் புத்தம் புதிதாய்த்
தழைத்தபடியே இருக்கிறது

பதினாறு வயது மார்க்கண்டேயனாய்
எப்படி இளமைத் துடிப்புடன்
நிலைத்தபடியே இருக்கிறது " என்றான்
புதிதாய்க் காதல்வலையில் சிக்கிய நண்பன்

" எல்லாம்
அசட்டுத் துணிச்சலும்
குருட்டு நம்பிக்கையும்
 தரும் பலத்தால் தான் "என்றேன் சிரித்தபடி

"இது காதலை அறியாதவனின்
பொறாமைப் புலம்பல் " என்றான் எரிச்சலுடன்

"அரசியல் செய்யவில்லை என்றால்
அரசியல் தெரியாது என்று அர்த்தமில்லை
அப்படித்தான்
காதலிக்கவில்லை என்றால்
காதல் புரியாது என்றும் அர்த்தமில்லை" என்றேன்

"எனக்குத் தேவை
 புத்திசாலித்தனப் புலம்பல் இல்லை
ஏற்றுக் கொள்ளும்படியான
தெளிவான விளக்கம் " என்றான்

"பகைவனின் கோட்டைக்குள்
காதலி இருக்கிறாள் எனில்..

கிடைக்கும் நூலேணி பிடித்தோ
ஒட்டடை நூல் பிடித்தோ
ஏறும் அசட்டுச் துணிச்சலையும்...

ஒரு சந்தம் கிடைத்ததென்றால்
ஒரு சொல் கவர்ந்ததென்றால்...

அதைக் கொண்டே
ஒரு காவியம் இயற்றிவிடலாம் எனும்
குருட்டு நம்பிக்கையையும்

நிச்சயம்
காதல் உணர்வும்
கவிதை மனமும் மட்டுமே தரும்.

அதனால்தான்
காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காதும்..

குப்பைகள் நிறைந்தபோதும்
கவிதையும் வீரியம் குறையாதும்

தொடர்ந்து கொண்டிருக்கிறது "என்றேன்

இதனை ஒப்புக் கொண்டானா
எனத் தெரியவில்லை
ஆனால் பதில் கேள்வி எழுப்பவில்லை

Wednesday, July 25, 2018

சில இலக்கணங்கள்

அளவின்றி
சாவதற்காகக்  குடிக்காது
அளவறிந்து
சாகும்வரைக் குடிப்பவன்
குடிக்கத் தெரிந்தவன்

அளவின்றி
வயிறு நிறைக்க உண்ணாது
அளவறிந்து
உயிர்வளர்க்க உண்பவன்
உண்ணத் தெரிந்தவன்

இல்ல விஸ்தீரணம்
இருப்புப் பொருத்து அல்லாது
தேவைப்பொருத்து என அறிந்தவன்
நல்ல குடும்பஸ்தன்

ஆடை வடிவமைப்பு
தன் ஆசைப்படியல்லாது
உடல்   அமைப்புப்பின்படி எனத் தெளிந்தவன்
நல்ல இரசிகன்

மொத்தத்தில் ...

இருப்பதனால்
வாழ்ந்துகொண்டிருக்காது
வாழவதற்காக இருப்பவன்
வாழத்தெரிந்தவன்

எதையும்
எழுதுவதற்காகச் சிந்திக்காது
சிந்திப்பதனால் எழுதுபவன்                சிறந்த எழுத்தாளன்
என்பதைப் போலவும் ...

Tuesday, July 24, 2018

அடைகாத்தல்..

"விடுவி
இல்லையேல்
என்னைக் குறித்து
விசாரம் கொள்

காரணமின்றி
ஆயுள் கைதியினைப்போல்
அடைபட்டுக் கிடக்க
எனக்குச் சம்மதமில்லை "

பிதற்றிக் கொண்டே இருக்கிறது...

இன்னும் முழு வளர்ச்சிக் கொள்ளாத..

அடைபடுதலுக்கும்
அடைகாத்தலுக்குமான
வித்தியாசம் புரியாத...

விரும்பி என்னுள்
நான் இட்டுவைத்த உயிர்க்கரு.

கொக்கரித்துத் திரியும்
புறச் சேவல்களால்
மீண்டும் கருவுறாதபடியும்...

என் கவனச் சூடு
தவறியும் துளியும்
சிதறிவிடாதபடியும்...

நான் அன்றாடம் படும்பாடு..
நிச்சயம் கருவுக்குப் புரிய
சாத்தியமில்லாததால்...

அது பிதற்றிக் கொண்டே இருக்கிறது

 தாய்மைக்கே உரிய
அக்கறையுடனும் அவஸ்தையுடனும்
அதனை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்...

இன்றும் எப்போதும்போலவே 

Monday, July 23, 2018

"மந்திரி "எனும் மாயச் சொல்லும்....

பற்பலப் பொருள் தரும் ஒரு சொல்
பலப்பலச் சொற்கள் தரும் ஒரு பொருள்

தமிழுக்கே ஆன சிறப்பு
அது தழிழனுக்குத் தந்தது பெரும் செறுக்கு

ஆனால் இன்று
முரண்பட்ட இரு சொற்கள் தரும்ஒரே பொருள்
இது தமிழுக்கே ஆன அழுக்கு

அது தமிழனுக்குத் தருதே பெரும் இழுக்கு

நம் விருப்பமின்றி நம்மை ஆண்ட
அன்னியனுக்கான
"ஆக்கிரமிப்பாளன் "எனும் சொல்லும்..

நம் வெறுப்புடனேயே கூட
நம்மை விடாது ஆளும்
"ஆட்சியாளன் "எனும் சொல்லும்...

அடிமை நாடு என்பதற்கு அடையாளமாய்
தவறாது அன்னியனுக்குச் செலுத்திய
"கப்பம் "என்னும் வரியும்

நமக்குப் பயன்படாது
சுய நலத்துக்குச் சுருட்டவே எனத் தெரிந்தும் செலுத்தும்
"வரி "என்னும் கப்பமும்

நமக்காக ஆள்வதாக சொல்லியபடி
தனக்காக ஆட்சி செய்பவனுக்கான
"சர்வாதிகாரி "எனும் சொல்லும்

நம் விருப்பப்படியே என முழங்கியபடி
தான் தன் குடும்பத்திற்கென ஆளுவோனுக்கான
"மந்திரி "எனும் மடச் சொல்லும்....

இப்படித் தொடரும் முரண்பட்ட சொற்கள்
ஒரு பொருள் தரும் இந்த அவலத்தை
என்று நம் செயலால் மாற்றப் போகிறோம்

முன்பு போலவே

பற்பல பொருள்தரும் ஒரு சொல் தரும் பெருமையும்
பற்பல சொற்கள்  தந்த ஒரு பொருள் அருமையும்
போதுமென நம் முயற்சியால் ஆக்கப்போகிறோம்

Tuesday, July 17, 2018

கொசுக்கள் உள்ளிருக்கும் கொசுவலை

கொசுக்கள் சூழ்ந்த இடத்தில்
குழந்தையைக் காக்க
கொசுவலைக்  கட்டுதல்
புத்திசாலித் தனமே

ஆயினும்
தெரிந்தோ தெரியாமலோ
கொசுக்களை
உள்ளே விட்டுக்கட்டுதல்
பெரும் மடத்தனமே

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில்
பாதுகாப்புக் கருதி
காவலர்களை நியமிப்பது
நிச்சயம் அவசியமே

ஆயினும்
வாய்ப்புக் கிடைத்தால் உடல் மேயும்
காமாந்திரர்களை நியமித்தல்
நிச்சயம் பெரும் ஆபத்தே

மக்கள் நலம் பேண
ஜனநாயக வழியில்
தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே
ஆகச் சிறந்த முறையே

ஆயினும்
இலவசங்களுக்கு மயங்கி
பேராசைப் பேய்களைத் தேர்ந்தெடுத்து
அவதியுறும் நிலைபோலவே

Sunday, July 15, 2018

Useful message ...

If you know anyone in class 11 or 12, & interested in IIT preparation:
The IIT-Professor Assisted Learning (PAL) video lectures for Class XI and Class XII can be accessed on You Tube through the links shown below. Many faculty members from various IITs have contributed to these lectures. Prof. Ravi Soni from the Dept. of Physics, IIT Delhi is the national coordinator and IIT Delhi has coordinated this entire effort with funding from MHRD. Over 600 hours of lectures in Physics, Chemistry, Maths and Biology are available for students.
 Pl. pass on the information to your friends/relatives and their needy children.

Biology: Channel 19
www.youtube.com/channel/UCqiFTyCxFFMAN_lhAzIkdpA/videos
Chemistry: Channel 20
www.youtube.com/channel/UC3Zv0XxBjYlWMjbMv8ODE8Q/videos
Mathematics: Channel 21
www.youtube.com/channel/UCfz4W0rG8HoyyrrK6qNc1rA/videos belonging
Physics: Channel 22
www.youtube.com/channel/UCwNr8peMxn8-Nc2V_RZsRvg/videos

These videos can also be accessed on Doordarshan Freedish DTH. Complete list of videos is available at (Channel 19,20,21 and 22)

www.swayamprabha.gov.in/index.php/ch_allocation

 *Student no need to attend tuitions anymore.. forward to all students..save their money ..stop tuition mafia..*

Saturday, July 14, 2018

பயிற்சியும் முயற்சியும் வளர்ச்சியும்

 (விடா முயற்சியும் தொடர்ப்  பயிற்சியுமே
நீடித்த வளர்ச்சியுடன்நிலையாக
சிகரத்தில் நிற்க வைக்கும்

இந்தப் பாலப் பாடம் அறிந்தால் போதும்
மற்றவை எல்லாம்
தானாய் நிழலாய்த்  தொடரும்

இந்தச் சூட்சமம் அறிந்தோர் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்வதோடு

திறமையும் தகுதியும் இருப்பதால்  தானே
 தலைவர்கள் ஆனோம்

 பின் வீணாய் இன்னும் எதற்கு
இந்த அயற்சித் தரும்கூடுதல்  பயிற்சி
 என நினைப்போர் மட்டும்

 சிந்திக்க ஒரு சிறிய முயற்சி
ஒரு சிறு கவிதையாய்)

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
பலரும் பயணத்துக் கொண்டிருந்தார்கள்

அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
 நீச்சல் அறியாதவர்களும் இருந்தார்கள்

 நீச்சல் அறிந்தவர்களின் கண்களும் மனமும்
ஏரியின் அழகில் அதன் குளுமையிலும்
மயங்கிக் களிக்க

அது அறியாதவர்களின்
 மனமும் நினைவும் ஏரியின் ஆழத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணியே  கலங்கிக் கொண்டிருந்தது

படகில் பயணம் செய்ய
நீச்சல் பயின்றிருக்க அவசியம் இல்லைதான்

ஆயினும் இரசித்துப் பயணிக்க
நீச்சல் அறிதல் நிச்சயம் அவசியம்

ஆம் எதையும்
வருந்திச் செய்யாது
விரும்பிச் செய்யவும்.
 விரும்பிச் செய்வதைத்
திருந்தச் செய்யவும்

பயிற்சி என்பது நிச்சயம் அவசியம்
.
 இன்றைய அரிமா மாவட்ட பயிற்சிமுகாமில்
கலந்து கொள்ளும் தலைவர் செயலாளர்
பொருளாளர் அனைவருக்கும் மனமார்ந்த 
வாழ்த்துக்களுடன்.

எஸ் வெங்கட சுப்பிரமணியன்
324B3 District  Area coordinator (Madurai )

Tuesday, July 10, 2018

உப்பும் தலைமையும்

இல்லையோ என
உணரும்படியாகக்
குறைவாகப் போடப்பட்ட உப்பும்

அதிகமோ என
உணரும்படியாக
அதிகமாகப் போடப்பட்ட உப்பும்

நிச்சயம்
உணவின் தரம் குறைத்துவிடும் என்பதும்

இருப்பது தெரியாதபடி
மிகச் சரியான அளவில்
இடப்பட்ட உப்பே
உணவின் சுவைக்  கூட்டும் என்பதுவும்

நல்ல சமையற்காரருக்குத் தெரியும்

பொறுப்பில்லையோ என
உணரும்படியாக
ஈடுபாடு இல்லாத தலைமையும்

ஆக்கிரமிக்கிறாரோ என
எரிச்சலூட்டும்படியான
அதிகாரம் காட்டும் தலைமையும்

நிச்சயம்
இயக்கத்தைப் பாழப்படுத்திவிடும் என்பதும்

தன்னைப் பிரதானப் படுத்தாது
அனவரையும் இயங்கவிட்டு
இணைந்து இயங்குவதே
இயக்கத்தை வலுப்படுத்தும் என்பதுவும்

நல்ல தலைவர்களுக்குத் தெரியும்

ஆம் பயிற்சிப் பெற்ற
அனைத்து அரிமாத் தலைவர்களுக்கும்
இது மிகத் தெளிவாய்த் தெரியும்

பயிற்சிப் பெற்றப் பின்
உங்களுக்கும் இது
மிகத் தெளிவாய்ப் புரியும்

( 15/07/2018 இல் நடைபெற உள்ள
 பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள இருக்கிற
இவ்வாண்டின் தலைவர் செயலாளர் மற்றும்
பொருளாளர் அனைவருக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள் )

அரிமா.எஸ். வெங்கடசுப்ரமணியன்
அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மதுரை

Wednesday, June 20, 2018

காலா ( 2 )

(http://yaathoramani.blogspot.com/2018/06/blog-post_13.html க்குத் தொடர்ச்சியாக )
 )

காலா வெளியாகி முதல் வார ஞாயிறு
என்பதால் கொஞ்சம் முன்னதாகவே போகலாம்
என நினைத்து அரை மணி நேரம் முன்னதாகவே
தியேட்டருக்குப் போனோம்

நான்கு தியேட்டர் உள்ள வளாகம் என்றாலும்
கூட்டம் அவ்வளவாக இல்லை. மிகக் குறிப்பாய்
நம்மவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள்.
அதில் மிக லேசாகப் புன்னகைத்தவரை நெருங்கி
எப்போது அனுமதிப்பார்கள் எனக் கேட்டுச்
சினேகம் ஏற்படுத்திக் கொண்டேன்

"நீங்கள் ரஜினியின் தீவீர இரசிகரா " என்றார்
அவர்

"இல்லை அப்படியெல்லாம் இல்லை
ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் " என்றேன்

"இல்லை பொதுவாக இங்கு முதல் வாரத்தில்
அபிமான நடிகரின் தீவிர ரசிகர்கள் தவிர யாரும்
படம் பார்க்க வரமாட்டார்கள். காரணம்
முதல் வாரத்தில் டிக்கெட் விலை 20 டாலர்
மறுவாரம் என்றால் 7 டாலர் தான். அதுதான்
கேட்டேன் " என்றார்

"என்ன் இருபது டாலரா அப்படியானால்
வந்திருக்கமாட்டேனே.என் பெண் ஆன்லயனில்
டிக்கெட் எடுத்துக் கொடுத்துப் போய்ப் பார்த்து
வாருங்கள் என்றாள்.டிக்கெட் விவரமெல்லாம்
சொல்லவில்லை " என்றேன்

"சரிதான் சொன்னால் நிச்சயம் நீங்கள் வேண்டாம்
எனச் சொல்லிவிடுவீர்கள் எனச் சொல்லாமல்
இருந்திருக்கலாம். ஆன் லயன் டிக்கெட் என்றால்
நீங்கள் இங்கு நிற்க வேண்டாம். நேரடியாக
இந்த வழியாக உள்ளே செல்லலாம் " என
ஒரு வழியைக் காட்டினார்.

நான்கு தியேட்டர் உள்ள அந்த தியேட்டர்
வளாகத்தில் டிக்கெட்டைக் காண்பித்து
உள்ளே சென்று அமர்ந்தோம்,எமக்கு முன்பாக
ஒரே ஒரு குடும்பம் மட்டும் அமர்ந்திருந்தது

நாங்கள் எங்களுக்கு விருப்பமான இடத்தை
தேர்வு செய்து அமர்ந்தோம்
அப்போதுதான் புறப்படும் முன்பு என் பெண்
எப்போதும் சொல்லும் "அப்பா அமெரிக்கா வந்தால்
எப்பவும் நீ ஒரு பழக்கத்தை விடணும்.ஒன்னு
இந்தியாவுடன் எதெற்கெடுத்தாலும்
கம்பேர் பண்ணிப் பார்ப்பது மற்றொன்று
எந்தச் செலவையும்
ரூபாய்க்கு கன்வெர்ட் பண்ணிப் பார்ப்பது "
எனச் சொன்னது ஞாபகம் வந்தது

என்னால் கம்பேர் பண்ணிப் பார்க்காமல் எப்படி
இருக்கச் சாத்தியம்.எண்பது பைசா டிக்கெட்டே
அதிகம் என்று எழுபது பைசாவுக்கு முயன்ற நான்
ஒரு டிக்கெட் ஏறக்குறைய 1300/ ரூபாய் என்றால்..?

அனேகமாக என் வாழ் நாளில் அதிகப்
பணம் கொடுத்துப் பார்க்கிற படம் இதுதான்
நிச்சயம் கடைசியாக இருக்கும்
இனி எப்போது இங்கு சினிமா டிக்கெட் எடுத்து
போனாலும் விலை விசாரித்துதான் போக வேண்டும்
என முடிவெடுத்துக் கொண்டிருக்கையில்
தவிர்க்க இயலாமல் நான் முதன் முதலாகப் பார்த்த
சினிமாவின் ஞாபகம் நெஞ்சில் நிழலாடியது

மெல்லச் சிரித்துக் கொண்டேன்.விவரித்தால்
உங்களாலும் சிரிக்காமல் இருக்க முடியாது

( தொடரும் )

Wednesday, June 13, 2018

காலா







ஒவ்வொரு முறை இங்கு (யு.எஸ் )
வரும்போதும் அவசியம் பார்க்கவேண்டும் என
நான் எண்ணும் ஒரு திரைப்படம்  வெளியாகும் .
ஒருமுறை கபாலி ,ஒருமுறை
பாகுபலி 2 ,இப்போது  காலா

நான் சிறுவயதில் மதுரையை ஒட்டிய ஒரு
சிறிய கிராமத்தில்வளர்ந்தவன் .
அங்கு சினிமா என்றால்
எங்கள் ஊரில் டெண்ட்   கொட்டகையில்
வெளியாகும் சினிமாதான்

அதுவும் காலாண்டு   அரை அரையாண்டு
முழு ஆண்டுதேர்வு விடுமுறைக்கு
தலா ஒருபடம் வீதம் வருடத்திற்குமூன்று படம்
மற்றும் தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு
வெளியாகும் ஒரு சிறப்புத் திரைப்படம்.
அதுதான் வாய்க்கும்
(இந்தச் சிறப்புத் திரைப்படம் கூடுமானவரையில்
ஒரு புரட்சித்தலைவரின் படமாகத்தான் இருக்கும் )

இந்தப் படம் பார்க்கக் கூட அதிக மெனக்கெட
வேண்டியிருக்கும்விடுமுறை முடிந்து
பள்ளிக்கூடம் போனதும் லீவில்
என்ன படம் பார்த்தாய் என்பதுதான் உடன் படிக்கும்
மாணவர்களின் முதல் கேள்வியாயிருக்கும் .
பார்க்கவில்லை என்றால்அதுவே ஒரு தகுதிக்
 குறைவு போல் மதிக்கப்படும்

அதற்காகவே வீட்டில்   அழாத குறையாக அடம் பிடித்து
ஒரு திரைப்படம்  எப்படியும் பார்த்து விடுவோம்
வீட்டிலும் இதை சாக்காக வைத்து பல்ப் துடைப்பது
மாடி கூட்டுவது ,கொல்லைப்புற அறையைச் சுத்தம்
செய்ய வைப்பது முதலான பல வேலைகளை
வாங்கி விடுவார்கள்   என்பது வேறு விஷயம்

அப்படிப் பார்த்துப் போய்ப் கதை சொன்னால் கூட
நம்பாமல் கதை யாரிடமோ கதையை கேட்டு
கதை விடுகிறாய் என சொன்னதற்காக சினிமா
டிக்கெட்டைக் கூட பத்திரமாய் கொண்டு போய்
காண்பித்த நிகழ்வெல்லாம் இப்போதும் நினைவில்
இருக்கிறது

இப்படி சினிமா பார்த்துப் போய் பெருமையைப்
பீத்தலாம் எனப் போனால் வசதியான வீட்டுப்
பசங்க இரண்டொருவர் டவுனில் படம் பார்த்து விட்டு
அந்தப் பெருமையைப் பீத்த நாங்கள்
ஒன்று மத்தவர்களாய்கவனிக்கப்படாமல் அவர்கள்
பீத்தலுக்கு அடிமையாகிஅவர்கள் சொல்கிற
கதையைக் கேட்க வாய்ப்பிளந்துக்கிடப்போம்

அதிலும் சுப்பையான்னு ஒரு பையன் .ஒரு சினிமா
கதையைப் பகுதி பகுதியாய்  நான்கு ஐந்து நாள்
சுவாரஸ்யம் குறையாமல் சொல்வான்
முத்து  மண்டபம்  என்று ஒரு சஸ்பென்ஸ் படம்
அதில் கொலைகாரன் யாரென்று சொல்லாமல்
எங்களை ஐந்து நாள் திண்டாடவிட்டு பின் ஒரு நாள்
இரக்கப்பட்டு முடிவைச் சொன்னான் .அதுவும்
அவன் புத்தகத்திற்கு அட்டைப்போட்டுக் கொடுத்த பின்பு

இப்படி வளர்ந்த சூழ் நிலையில் பின் உயர் நிலைப்
பள்ளி வந்ததும்   டவுனில் சினிமா பார்ப்பதற்காக
காசு சேர்த்த கதை ,காலைப்  பத்து மணி
காட்சிக்குப் போய்தொடர்ந்து இரண்டு காட்சிக்கு
 டிக்கெட் கிடைக்காது போயும் மனம் தளராது
நள்ளிரவுக்கு காட்சிப் பார்த்து
ஊருக்கு நடந்தே திரும்பிய கதை ,பெண்கள் மற்றும்
சிறுவர்களுக்கென இருந்த 70 பைசா டிக்கெட்
எடுப்பதற்காக  (பெரியவர்களுக்கு 80 பைசா )  முட்டி
மடித்து குள்ளமாய் நடந்த கதை ,என எம் வாழ்வோடு
பின்னிப்பிணைந்த சினிமா தொடர்பான
நினைவுகள் எல்லாம் இந்தக் காலா படம் பார்க்க
அந்தத் திரைப்படத் தியேட்டர் வாயிலில் காரை விட்டு
இறங்கியதும்  தொடர்ச்சியாய் வந்து போனது
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை

                                                                  ( தொடரும்   )

   

Monday, June 4, 2018

மூல மந்திரம்

உயிரின் அருமை
அறிந்து தெளிந்தோம்
அதன் காரணமாய்
உடல் மீது கவனம் கொண்டோம்

உடல் மீது
கவனம்  கொண்டோம்
அதன் பொருட்டு
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை   கொண்டோம்

உட்கொள்பவைகளின் மீது
அக்கறை   கொண்டோம்
அதன் தொடர்ச்சியாய் 
நிலம், நீர்,வெளி இவைகளின்
அருமை அறிந்தோம்

நிலம், நீர் ,வெளியதன்
அருமை அறிந்தோம்
அதன் நீட்சியாய்
அதன் தூய்மையைக்  காத்தலே
முதல் நெறி என உணர்ந்தோம்

'எதிரிலிருக்கும்  கோன் உயர
வெளியே விரவிக்கிடக்கும்
வரப்புயர்தல்  அவசியம் "என்ற
அவ்வையின் அறிவுரை
அறிந்த நமக்கு

 "உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே  " என்று
விரிந்த ஒன்றை சுருங்கச் சொன்ன 
திரு மூலரின்  வாக்கினைப்
புரிந்த நமக்கு

"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர்  காக்கும்
மூல மந்திரம்  "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?

Friday, June 1, 2018

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவாளனை உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

 இவை எதற்கும் நேரமில்லையெனில்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

Wednesday, May 30, 2018

பிரசவ சங்கல்பம்

தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது

ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்...

கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்

அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை

'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி
அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்

கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன.....
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

Saturday, May 26, 2018

கால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம்  ?

முருகனடியாரின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?

Friday, May 25, 2018

அமைதியில் நிலைப்போம்..

மன அமைதியை இரசிப்போம்
மன அமைதியில் இலயிப்போம்
மன அமைதியில் நிலைப்போம்

மன அமைதியே பேரானந்தத்தின்  ஊற்று
மன அமைதியே கலைகளுக்கு ஆசான்
மன அமைதியே சக்திக்கு ஆதார மையம்

பரந்து விரிந்த புல்வெளி
பனிபடந்த மலைச் சிகரம்
சலசலத்து ஓடும் சிற்றோடை
ஆரவாரமற்ற தெய்வ சன்னதி
மழலையின் மயக்கும் சிரிப்பு ...

இன்ன பிற  எல்லாம்
அமைதியின்
உற்பத்திச் சாலைகள் இல்லை

அமைதியின்
 சுகம்காட்டும்
அற்புத ஆதாரமையங்கள்

ஆதாரமையங்கள்  வழி
நம் மன இரசிப்பைத் துவங்குவோம்

மனம் அமைதியை இரசித்தல்
 வெறும் துவக்கமேஎன அறிந்தபடி...

மனம் அமைதியில் இலயித்தல்
ஒரு  தொடர்ச்சியேஎன உணர்ந்தபடி..

மனம் அமைதியில் நிலைத்தேலே
 முதிர்ச்சி எனத்  தெளிந்தபடி ....

Thursday, May 24, 2018

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிறப்  போக்கில்
எதிர்ப்படும் நண்பனை
விசாரித்துப்போகும்
 "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாகத்  தவிர்க்க முடியாதுக்
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும்
 "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடிப்  பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும்
 "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்தக்
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள்
அன்றாடம் அலைந்து திரிந்துத்   ...
தன்  சுயம் தொலைப்பவன் ...

முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர்விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்

குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
மெய் நிகர்க்  காட்சிகளைக் கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும் 

Wednesday, May 23, 2018

நம் இணைய தளத்தின் பெருமையை....

எந்த ஒரு கட்சியின்  தலைவனாயினும்
எந்த ஒரு இயக்கத்தின் தலைவனாயினும்
தான் முன்னெடுத்துச் செல்லும்  போராட்டத்திற்கு
முன்  நிற்கவும்  வேண்டும்

 வெற்றியோ தோல்வியோ அதன் முழு
நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்கவும்  வேண்டும்

மாறாக கொள்ளு  என்றால் வாயை த் திறந்து
கடிவாளம் என்றால்  வாயை மூடும்
கெட்டிக்கார குதிரை போல

வெற்றி என்றால் தோளை நிமிர்த்துவதும்
தோல்வி என்றால் ஓடி ஒளிவதும் நிச்சயம்
நல்ல தலைவனுக்கு   அழகில்லை

அதிலும் குறிப்பாக தங்கள் உணர்ச்சிகரமான
பேச்சில்  மயங்கி  தன்  சுக துக்கங்களை  மறந்து
களத்தில் நின்று பேராடுபவர்கள் பாதிக்கப்படுகையில்
நிச்சயம் கூடுதல் பொறுப்பெடுக்கவே வேண்டும்

அரசும் மக்களின் அதிருப்தி தலைகாட்டும் போதே
அதுதொடர்பாக கவனம் கொள்ளாது அலட்சிய
மனோபாவம் கொள்வதும் ,பிரச்சனைகள் குறித்து
கவனம் செலுத்தாது  அதைத் தலைமை தாங்கித்
தொடர் பவர்களை வேறு வேறு  வண்ணங்கள் பூசி
கொச்சைப்படுத்த முயல்வது நிச்சயம்  உச்சக்கட்ட
அநாகரிகம்

இதில் மூன்றாவதாக இணைய தள போராளிகள்
தொலைக்காட்சி விவாத விற்பன்னர்கள் வேறு

எரிகிற கொள்ளியில் எங்கோ
 சுகமாய் இருந்து  கொண்டு எண்ணெய் வார்த்தபடி ..

தம் எழுத்தும் பேச்சும் பிரச்சனைகளை இன்னும்
அதிகரிக்கச் செய்யுமே தவிர
நிச்சயம் குறைக்கப்போவதில்லை
எனத்  தெளிவாகத் தெரிந்தும்  விதம் விதமாய்
எழுதியபடி பேசியபடி ... பகிர்ந்தபடி

முன்பும் எப்போதும் பிரச்சனைகளும்  போராட்டங்களும்
அரசின் அலட்சியப்போக்கும் இல்லாமல் இல்லை
இருந்தது

பற்றிய நெருப்பை அணையவிடாதும்  தொடர்ந்து
பரவ விடும் காற்றினைப்போல ஊடகங்கள்
இப்போதைப்  போல அப்போது இல்லை

எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய கருத்தை
உலகமே எதிர்பார்த்திருக்கிற அதீத மனோ நிலையில்
அன்றைய தனி மனிதர்களும் இல்லை

முன்னிருவர் திரும்ப முடியாத அளவு  வெகு தூரம்
மோசமான நிலைக்கு வந்து விட்டனர்
அதன் விளைவுகளை அவர்கள் நிச்சயம் அறுவடை
செய்வர் .பட்டுத் திருந்தட்டும் அவர்கள்

அதைப்  போல்  தொலைக்காட்சி மற்றும்
செய்தித் தாள்களின் மீதான நமபகத் தன்மையும்
படிப்படியாய்க் குறைய ...

நம் இணையத்  தொடர்பில் வெளியாகும்
செய்திகளைத்தான் நம்பத்  தக்கதாக
மக்கள் கொள்ளும்படியான சூழல்  இன்று உள்ளது

எனவே பலம் கூடக்  கூட  பொறுப்புகளும்
கூடவேண்டும் இல்லையேல் பலம் கூடிப்
பயனில்லை என உணர்ந்து...

உணர்வுப் பூர்வமான விஷயங்களில்  மேலும் உணர்வைத்   தூண்டும்படியான பகிர்வுகளைத்
தவிர்த்து

,அறிவுப்பூர்வமான அவசியமான பதிவுகளை  மட்டும்
பதிவோம், பகிர்வோம்  என உறுதி பூணுவோமாக

நம் இணைய தளத்தின்   பெருமையை அருமையை
இன்னும் உயர்த்த உறுதி கொள்வோமாக 


Tuesday, May 22, 2018

தேடல்

என் முன்னே என் பின்னே    
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்" என்றேன்
என்னை ஒத்தவரிடம்

"நம் முன்னால் செல்பவர்கள் எல்லாம்
தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான் நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால் அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில் என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்

"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான் யாரேனும் உண்டா" என்றேன்


நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்" என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்

"நம் கால்கள் ஓடத்தான் படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான் படைக்கப்பட்டது
எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட கேட்கலாம்தானே"
என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப் பார்த்துக் கேட்டேன்

"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன் ஓய்வாக இருக்கிறீர்கள்"

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்" என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும் கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பார்-கேள்வி கேள் -
உனக்கே எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்

அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்

ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்

இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்

எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

Monday, May 21, 2018

நாளைப் பிடித்தல்

 லாகவமாய்ப்  பிடிக்கும்
 சூட்சுமம் அறிந்தவர்களிடம்
 பயிற்சிப் பெற்று                                   
முதல் நாள் இரவில்               
ஒத்திகையும் பார்த்து                           
மிகக் கவனமாய் ...                   
கண்கொத்திப் பாம்பாய் 
விடியலுக்காகக் காத்திருக்க.       

 சோம்பல் இடுக்கில்                 
சுவாரஸ்யப் புதர்களில்
அதன்  தன்மை மாறாது              
 மெல்ல மெல்ல நழுவி                     
மறைந்துத் தொலைகிறது
விடிந்த இந்த நாளும்         
எப்போதும் போலவே

சற்றும் மனம் தளரா
விக்கிரமாதித்தனாய்
இன்று இரவும்
ஒத்திகையைத் தொடர்கிறேன்

 நாளையேனும்
முழுப்பொழுதையும்
என் பிடிக்குள் அடக்கவேண்டும் எனும்
அசைக்கமுடியா உறுதியுடன்
எல்லோரையும் போலவே

Sunday, May 20, 2018

சுற்றுச் சுவர்

கரிய இருள்
கூடுதல் தூரம்
அறியாமை
வெறுப்பு மட்டுமல்ல

கூடுதல் வெளிச்சம்
அதிக நெருக்கம்
பரிபூரணமாய் அறிதல்
அதீத அன்பு கூட

புரிதலையும்
அன்னியோன்யத்தையும்
மிக எளிதாய்
அடியோடழித்துப் போகிறது

இப்போதெல்லாம்
போதுமான ஒளி
கண்ணுக்கெட்டியதூரம்
தேவையான அறிதல்
கைகுலுக்கும் நெருக்கத்தோடு
என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்

வெகு நாட்களாய் 
பட்டுப்போய்க் கிடந்தவைகள்   கூட
இப்போது  லேசாய்
மிக லேசாய்த்   துளிர்க்கத் துவங்குகின்றன

Saturday, May 19, 2018

காலம் கடக்க நினைப்பதுதான்....

எதைப் பறக்க வைப்பது
எதை  இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து  கொள்ளவேண்டும்

 எதனைமுளைக்கச் செய்வது
 எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்

எதனை   மிதக்கச் செய்வது
எதனை  மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்

எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக்  கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதனைக் கடத்தி  ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத்  தகுதிப்படுத்திக்  கொள்ளவேண்டும்

Thursday, May 17, 2018

புலிவேஷம்

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டி
காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
நிஜ உருவை விட
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற
பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டேன் ஆயினும்
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்  மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப்  போகிறது

ஆனாலும் என்ன
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

Tuesday, May 15, 2018

பாவப்பட்ட அவன்

உட்புறம் தாளிட்டுக்
கதவருகில் அமர்ந்தபடி
யாரேனும் வரமாட்டார்களாவென
வெகு நேரம் காத்திருந்து
மனச் சோர்வு கொள்கிறான்

தானே இழுத்து அடைத்த
ஜன்னலருகில் அமர்ந்தபடி
அறையினைக் கொதிகலனாக்கும்
வெக்கையில் புழுக்கத்தில் தன்மீதே
கழிவிரக்கம் கொள்கிறான்

தனிமைத் துயர்
குரல்வளை நெறிக்க
யாரேனும் அழைக்கமாட்டார்களாவென
தொலைபேசிக்கு அருகமர்ந்து
மனம் சலித்துப் போகிறான்

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்
காலமெல்லாம் காத்துக்கிடந்தே
கவலை மிகக் கொள்கிறான்

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

எதனையோ எவரையோ எதிர்பார்த்தபடியே
இன்றும்  எப்போதும்போல்
காத்திருந்து காத்திருந்து
வெந்து நொந்துச் சாகிறான்
பாவப்பட்ட அவன்....

Saturday, May 12, 2018

neet is also good as neat

நீரை அடித்துக்கிளப்பி
அச்சுறுத்தும் அலையாக்கி
அலைதான் கடலென
 சாதிக்க முயல்கிறது
சுயநலப் பேய்க்காற்று

 அலைச்சீற்றம் கண்டு
அச்சம் கொண்டு
முத்தெடுக்கப் பயணிப்போரை
முடக்கிவிட முயல்கிறது
முட்டாள்ப் பேய்க்காற்று

கடலின் ஆழம் அறிந்தோர்
 அதன் சீலம் அறிந்தோர்
கிஞ்சிற்றும்
குழப்பம் கொள்ளவில்லை
ஒதுங்கிக் கரையில் நிற்கவில்லை

கடந்ததைத் தாண்டும் விதமாய்
சாதனையெனச் சொல்லும் விதமாய்
 கூடுதலாய் கடலினுள் பயணிக்கின்றனர்

பதினான்குக்கொருவர்
அதுவும் கூடுதல் பிடுங்கலின்றி
முத்தெடுத்தல் சாத்தியம் என்பது
அவர்களுக்குத்தெரியும்

கத்தியின்றி இரத்தமின்றி
சுதந்திரம் பெறுதல் மட்டுமின்றி
அல்லக்கைகளின் அட்டகாசங்களை
ஒழிக்கவும்  முடியும் என்பதற்கு
ஒரு நேரடிச் சாட்சியாய்....

ஆம் இனிநேர இருக்கும்
பெரும் மாறுதலுக்குக் கட்டியம் கூறும் விதமாய்

ஆம் இனி மாளிகைக்காரர்கள் மட்டுமின்றி
இனி மத்தியமரும்
முத்தெடுக்கும்  சாத்தியமென்பதை
நிரூபிக்கும் விதமாய்  

Friday, May 11, 2018

நிர்வாண ஞானம்

 "உனக்குத் தெரியாது
நான் சொல்கிறபடிச் செய் "என்றார் அப்பா

எரிச்சல் எரிச்சலாக வந்தாலும்
என் நன்மைக்குத்தானே எனச்
 சொன்னதை எல்லாம் தவறாது செய்தேன்

 " உனக்குத் தெரியாது
 நாங்கள் சொல்கிறபடிச் செய் "
என்றார்கள் ஆசிரியர்கள்

 கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தாலும்
என் வளர்ச்சிக்குத்தானே என
சொன்னதை எல்லாம் தட்டாமல் செய்தேன்

 "உங்களுக்குத் தெரியாது
நான் சொல்கிறபடிச் செய்யுங்கள் "
என்றாள்  மனைவி

அனுபவத்தில் சில விஷயங்களில்
அவள் சொல்வதே சரியாய் இருந்தாலும்
 ஆண் எனும் மனோபாவத்தில்
விரும்பாத பாவனையில் செய்தேன்

"உங்களுக்குப் புரியாது
நான் சொல்கிறபடி மட்டும் செய்யுங்கள் "
என்றான் மகன்

புதிய தொழிற்நுட்பங்கள் புரியாததால்
வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய்
அவன் சொன்னதை மட்டும் செய்து கொண்டு வந்தேன்

 "மக்குத்தாத்தா
 உனக்கு ஒன்னுமே தெரியலை
 இப்படிச்செய்யனும் "எனத்
தப்பும் தவறுமாய்  எது ஒன்றையும் செய்கிறாள் மழலை தாண்டும் பேத்தி.

முதன் முதலாய் தவற்றை ஒப்புக்கொண்டு
அவள் போங்கில் சரியாய்ச் செய்து போகிறேன்

 வாழ்வில் முதன் முதலாய்
"உனக்கு எதுவும் தெரியாது "என்கிற வார்த்தைக்குச்

சங்கடப்படாதபடி..
அதிகம் சந்தோசம் கொண்டபடி
அடிக்கடி சொல்லமாட்டாளா என எதிர்பார்த்தபடி


Wednesday, May 9, 2018

வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...

படைப்பாளிக்கு
இது வரமா இல்லை சாபம்தானா ?

முன்னிரவில் விசையுடன்
அடிமனத்திலேயே
மையம் கொண்ட  "அது "

வளர்ந்து நகராது
அல்லது
கரைந்து மறையாது

விசையுடன் அவனை  இம்சிக்க...

அதன்  போக்கை
கணிக்கத் தக்கவனாய் இராது
கவனிக்காத தக்கவானாய் மட்டுமே
இருக்க முடிவதால் ...

கனத்ததை விழுங்கிய
கருநாகமாய்
மெல்ல மெல்ல ஊர்கிறது
அவனது உறக்கத்தையும்  விழுங்கியபடி
இன்றைய இரவும் ..

துணைக்கு யாருமற்று
தானே பிரசவிக்க நேர்ந்த
ஒரு ஜீவனின் அவஸ்தையுடன்
உலாவத் துவங்குகிறான்
பேயாய் இந்த நடு இரவிலும்...

வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய்
இது படைப்பாளிகளுக்கேயான
வரமா இல்லை சாபம்தானா எனும்
விடைதரா கேள்வியைச் சுமந்தபடியும் ...


Monday, May 7, 2018

என்னருமைத் தமிழ்த் தாயே...

தெரியாதவருக்குச்
சொல்வதைப் போல
எதையும் விளக்கிச் சொல்லிவிடாது
மிகவும் எச்சரிக்கையாய் ..

தெரிந்தவருக்கு
ஞாபகம்செய்வதைப் போலவே
எதையும் மிகவும் எளிமையாய்
மிகச் சுருக்கமாய்...

பாண்டியத்தைக்
காட்டும்படியாய்
எந்தப் பெரும் வார்த்தையையும்
தவறியும் பயன்படுத்தி விடாது

வசனகவிதைக்கும்
உரை நடைக்கும் இடையினில்
மிகச் சரியாய் புரியும் படியாய்
மிக மிக எளிமையாய்

மிகப் பெரும்பிரச்சனையும்
நாளும் விட்டு விடாது
தொட்டுப் போக முனைகிறேன்
சமூக அக்கறையின் காரணமாய்..

நித்தமும்
கரிக் கங்கினை வெறும் கையால்
இடம் மாற்றும்
அப்பத்தாவின் லாவகமாய்...

"போற்றுவோர்
போற்றாட்டும் புழுதி வாரி
தூற்றுவோர் தூற்றட்டும் "என்ற
மன நிலை மாறாமலே

பிரச்சனைகளை
நடு நிலைக் கண்ணோட்டத்தோடு
நாளும் அணுகுகின்ற
நல்லமனப் பாங்கினையும்
  
வார்த்தையோடு விளையாடும்
சூட்சுமமும் எனைவிட்டு
மாறாதுக்  காத்திடுவாய்
என்னருமைத் தமிழ்த் தாயே

Thursday, May 3, 2018

"வனத்தோடு வாழ்ந்தாலும்...

"வனத்தோடு வாழ்ந்தாலும்
இனத்தோடு வாழ் "

இதில் இனம் என்பது
உடலால் என்பதில்
விலங்குகளுக்குக் குழப்பமில்லை

நமக்குத்தான் ஆயிரம் குழப்பம்

ஆதி மனிதனுக்குக் குழுவே இனம்
அடுத்து அதன் தொடர்ச்சியாய் ஜாதி
அதன் அகண்ட வடிவாய் மொழி
அதன் எல்லை விரிய விரிய மதம்
அது இன்னும் இன்னும் விரிய நாடு

அதன் நிறைவான எல்லையாய்
மதிக்கத் தக்கதாய் மனிதம்

ஆயினும் இன்னும் நம்மை
நிறைவினில் சிறிது நேரம்  கூட நிற்கவிடாது
குறைந்த பட்சம் நாட்டுடன் கூட
நிலைபெற்று இருக்க விடாது

இனம் என்னும் சொல்லுக்கு
வேறு வேறு விளக்கம் அளித்து
நம்மை பின்னோக்கி நகர்த்துவோரை ...

இனியேனும்
நம் எல்லைக் கோட்டைவிட்டு
வெளியே நகர்த்தி வைப்போம்

நம் நிலை என்றும்
நாட்டிற்குக் கீழிறங்கிவிடாது
மேல் நோக்கியே நகரும் எனும்
உறுதியை நெஞ்சில் ஏற்போம்

Wednesday, May 2, 2018

தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்

தமிழகத்திற்கு இப்போது
மிக மிக அவசரமாய் அவசியமாய்த்
தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்

படிப்பு , சுய நலமின்மை ,
பொது நலன் பேணல் முதலான
குணங்கள் தேவையில்லை

ஊராட்சி வார்டில் நின்று
ஜெயிக்கும் செல்வாக்கு இல்லையெனிலும்
அது ஒரு பொருட்டில்லை

உணர்வுப் பூர்வமாய்
கேட்போரைக் கவரும்படியாய்
பேசமட்டும் தெரிந்திருக்கவேண்டும்

மிகக் குறிப்பாய்...

ஜாதி வைத்தோ மதம் வைத்தோ
மக்களைக் கூறு போடும் படியாய்...

எங்கோ எந்தக் கருங்காலியோ
செய்யும் சிறு பிரச்சனையாயின்
அதனைப் பெரிதாக்கும் படியாய்

பெரிதெனின் அதனை
பிரச்சனையாகச் சிந்திக்கவிடாது
ஜாதி மதத்தோடுக் கலந்து
இன்னும் மிகப் பெரும் பிரச்சனையாக்கும்படியாய்

அவசியம் பேசத்  தெரிந்திருக்க வேண்டும்

இப்போது
அதைச் செய்து கொண்டிருப்பவர்களின்
போலி அடையாளங்கள் உதிர்ந்து போனதால்

ஒரு பெருவாரியான மதத்தின் பெயரைத் தாங்கிய
வேற்று மதத்தினர் என்பது
அதிகம் பிரச்சாரமாகிப் போனதால்

அவர்களை நம்பி இனிப் பயனில்லை என்பதாலே
நாங்கள்
புதுத் தலைவர்களைத் தேடுகிறோம்

(பொது மதத்தினருக்கு
கூடுதல் வாய்ப்பளிக்கப்படும் என்பதைக்
கருத்தில் கொள்ள வேண்டுகிறோம் )

இவண்

தமிழகத்தை பதட்டத்திலேயே வைத்திருக்க
உறுதி கொண்டோர் கழகம்
(த.ப.வை.உ.கொ.க  )

Tuesday, May 1, 2018

பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ?

நம் பகைவர்கள் நம்மை வெல்ல
முன்புபோல்
தம் படைப்பலம் பெருக்குவதில்லை
முன்புபோல்
தம் ஒற்றர்களையும் நம்புவதில்லை

மாறாக நம்முள்
நன்கு பேசத் தெரிந்த சிலரைத்
தங்கள் துணையாக்கிக் கொள்கிறார்கள்
அவர்கள் மூலம் நம்மை எப்போதும்
பதட்டத்திலேயே வைத்திருக்கச் செய்கிறார்கள்

பதட்டத்தில் எப்போதும் இருக்கும் நாம்
இயல்பாக நம் சுயம் இழக்கிறோம்
அதன் காரணமாகவே நம்
கடமைகளையும் மறக்கிறோம்

எங்கோ சில கயவர்கள்
செய்யும் அட்டூழிங்களை அவர்கள்
ஜாதிக்குள்ளும் மதத்திற்குளும்  அடக்கி
நம்மை கொந்தளிக்கச் செய்கிறார்கள்

போராட்டப் போதையில் நம்மை
எப்போதும் இருக்கவைத்து
நேர்மறையான பல விஷயங்களை
நம்மை பார்க்காதே செய்துவிடுகிறார்கள்

உடனிருந்து கொல்லும் நோயாய்
நம்முடனிருந்து நம்மை
நாளும் வீழ்த்தும் இவர்களை
என்று அடையாளம் காணப்போகிறோம் ?

நாம், நம் குடும்பம்,நம் நாடு எனும்
நமக்கான விஷயங்களில்
கவனம் கொள்ளப்போகிறோம் ?
பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ? 

Monday, April 30, 2018

அதிகம் படித்த மூஞ்சூறு கழனிப்பானையிலே...

அனைத்து மதப் பானைகளிலும்
மேற்பரப்பில் மட்டுமே
உண்ணச் சகிக்கா
அதிகம் வெந்த சோறு

பக்குமாய் வெந்து உள்ளிருக்கும்
சோற்றினை அறிந்து கொள்ளமுடியாதபடி...
அதனை  முற்றிலுமாய்  மூடி மறைத்தபடி

மேற்  கவளம் நீக்கினால் போதும்
ஆம் ஒரே ஒரு கவளமெடுத்து
கழனிப்பானையில் எறிந்தால்போதும்

மீதம் உள்ளிருப்பது எல்லாமே
உடலுக்குறுதி சேர்க்கும்
உன்னதச் சோறு தானே

அதிகம் படிந்த முன்சோறு
கழனிப்பானயிலே என்பதனை
அதிகம் படித்த  மூஞ்சூறு கழனிப்பானையிலே
எனத் தவறாய்ப் புரிந்து கொண்டதைப் போல்...

மேற்சோறேபானைச் சோறு என
இன்னும் எத்தனை நாள்
தவறாய்ப் புரிந்து திரியப்  போகிறோம் ?

மதத் தீவீரவாதிகளின் வாதத்தில் மயங்கி
மதத்தின் அருமையை
மறந்து திரியப் போகிறோம் ?

Saturday, April 28, 2018

..தனக்கான காலம் கடந்தும் ..

காலங்கடக்கும்
சக்தியுள்ள கவிதைக்கான
கரு ஒன்று
வளர்ச்சியடைய விரும்பாது
அவனுள்
கருவாகவே சுழன்று கொண்டிருக்கிறது
தனக்கான காலம் கடந்தும்  ..

அவன் படைப்பின் மீதான
சிலரின் விமர்சனம்
ஒருதலைப்பட்சமானதுதான்
என்றாலும்
இவ்வளவு உணர்சிவசப்படுதல் பிடிக்காது

அவனைப் பாராட்டும் பலரின்
பாராட்டுக்கள் எல்லாம்
மிக நியாயமானதுதான்
என்றாலும்
இவ்வளவு பெருமிதம் கொள்வதை விரும்பாது

சம நிலையடையும்
சமயம் வரட்டும் என்று...

கருவாகவே சுழன்றுகொண்டிருக்கிறது
காலம் கடக்கும் சக்தி கொண்ட
வெகு அற்புதமான கரு ஒன்று.
தனக்கான காலம் கடந்தும்  ..
.

Wednesday, April 25, 2018

மட்டுமேயை மட்டும்....

சினிமாவினால் தமிழில்
பிடிக்காத வார்த்தையாய்
பிரபலமாகிப் போன
"மன்னிப்பைக் " கூட
என்னால் மன்னித்து விட முடியுது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
மன்னிக்கவே முடியவில்லை  ( சினிமாவினால் )

அதிகப் பட்சவிலை என்பது
அநியாயக் கொள்ளைதான் என்றாலும்
உணமையைச் சொல்லித் தொலைப்பதால்
அதைக் கூட
பொறுத்துத் தொலைக்க முடிகிறது
ஆனால்
இந்த மட்டுமேயை மட்டும்
ஜீரணிக்கவே  முடியவில்லை  (சினிமாவினால் )

ஏதோ மிகக் குறைவான விலையை
மிகக் சரியாய்ச் சொல்வதைப் போல
எம்மை மயக்கிட நினைக்கும்
இந்த "மட்டுமேயை  "
பொருளின் விலைப்பட்டியலில்
கண்டபோதெல்லாம்
எம்மை மயக்க நினைப்பதுபோல்
எம்மை மடையனாக்குவது போல் தெரிவதால்
                                         (சினிமாவினால் )

Thursday, April 19, 2018

தப்புக்கும் தவறுக்கும்...

தப்புக்கும் தவறுக்கும் இருக்கும்
வேறுபாடு புரியாததால் தான்
தப்புக்கான தண்டனையை தவறுக்கும்
தவறுக்கான மன்னிப்பை தப்புக்கும்
தப்புத் தப்பாய்த் தந்து
நாட்டில் தப்புக்களை
தாறுமாறாய் வளரவிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

நகத்தால் செய்து முடிக்கவேண்டியதை
கோடாலி கொண்டு பெயர்த்துக் கொண்டும்
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கவேண்டியதை
நகத்தால் கீறிக் கொண்டுமிருக்கிறோமா ?
அதன் காரணமாகவே
நச்சு மரங்கள்இன்னும்
செழித்து வளர உரமிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

இல்லையெனில்
எங்கோ எவனோ ஒரு கயவன்
செய்து தொலைக்கும் கயமைக்கு
அவனுக்கு எதிராய் ஒன்று திரளாது
கயமைக்கு எதிராய் கொதித் தெழாது
 ஜாதி மதப்  பூச்சுப் பூசி
நாட்டின் இறையாண்மைக்கு
ஊறு விளைவிப்போமா ?

இல்லையெனில்
நம்மை கொதி நிலையிலேயே
அன்றாடம் நிற்க வைத்து
போராட்டக் களத்தில் குதிக்க வைத்து
தன்னை வளர்த்துக் கொள்ள நினைப்போரை
புரிந்துக்கொண்டு விலகாது
தொடர்ந்து மோசம் போவோமா?
தேச ஒற்றுமையைக்கு ஊறு விளைவிப்போமா ?

இனியேனும்
தப்புக்கும் தவறுக்குமான
வேறுபாட்டை மட்டுமல்ல
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும்
முடிச்சு போட நினைப்போரை
எதனையும் ஜாதி மதத்திற்குள்
துணிந்து நுழைக்க முயல்வோரைக்
கண்டு ஒதுங்கிச் செல்வோமா ?
நாடேபெரிதென மனதில் உறுதி கொள்வோமா ?

Monday, April 16, 2018

கவிதைக் கரு

கனல் புணர
மனம் குளிர்ந்து
ஒளியாய் உருக்கொள்ளும்
பாக்கியமற்று

காற்றின் அணைப்பில்
மனம் வெறுப்புற்று
மெல்ல மெல்லக் கரையும்
கற்பூரமாய்

உணர்வுப் புணர்வில்
மதிமயங்கி
கவியாக உருவாகும்
பாக்கியமற்று

சொற்களின் பிடியில்
சுயமிழந்து
கரையத் துவங்குது
கவிதைக்  கரு

என்றும் போலவே
மாறாது
இன்றும் இப்போதும்

Wednesday, April 11, 2018

கவிதையை நிறைவு செய்யலாமே

போர்க்களமென
இதிகாச காலங்களில்
ஓரிடமிருந்தது
வீரர்கள் மட்டும் தம் வீரம் காட்டும்
ஒரு பெரும் மைதானமாய்...

இன்று போல்
எந்த விதத்திலும் காரணமாகாத
வெகு ஜனங்கள்
வாழும் பகுதியாய் அல்லாமல்

வீரர்களென
மன்னர் காலம் வரை
மனிதர்கள் இருந்தார்கள்
நேருக்கு நேர் நின்று போர்புரிதலே
வீரத்திற்கு இலக்கணமென

இன்றுபோல்
எங்கிருந்தோ நள்ளிரவில்
எவரோ குண்டுமழை
பொழிதல் போலல்லாமல்..

மன்னர்களென
ஒரு குடும்பமே தொடர்ந்து
நாட்டை ஆண்டுவந்தது
மக்களுக்காக வாழ்வதே
தமக்கான பணியென்று குழப்பமில்லாமல்

இன்றுபோல்
தம் குடும்ப நலன் காக்க
தம் குடும்பமே பதவியில் தொடரவேண்டும்
என்னும் சுய நலம் போலல்லாமல்

இவை அனைத்திற்கும் காரணம்...

(அவரவருக்குத் தோன்றும் காரணங்களை
சுருக்கமாய்ப் பதிவு செய்து
கவிதையை நிறைவு செய்யலாமே )