Sunday, October 25, 2020

கற்றலின் கேட்டலே சிறப்பு

 மூன்றாவது 

கவிதை நூலுக்கான வேலைகளில்

மிகத் தீவீரமாய் இருந்தான் என் நண்பன்


ஏற்கெனவே வெளியிட்ட

இரண்டு நூல்களும் பெருவாரியாய்

அறையை அடைத்துக் கிடக்க

மீண்டும் இவன் படும் அவஸ்தை

என்னை ஆச்சரியப்படுத்தியது


"எதற்காக எழுதுகிறாய்

உன்னை உலகுக்கு நிரூபிக்கவா ?

சொல்லவேண்டியவைகளை

உலகுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும்

எனும் உந்துதலை திருப்திப்படுத்தவா ? "

என்றேன்


நான் எதிர்பார்த்தைப் போலவே

ஒருவிதத்தில் 

எல்லா இலட்சிய எழுத்தாளர்களைப் போலவே

இரண்டாவது காரணத்தைத்தைத்தான் சொன்னான் அவன்.


"சரி ஒருமுறை

எத்தனைப் பிரதிகள் வெளியிடுவாய்"என்றேன்


"முதலில் ஆயிரம் அடுத்தது ஐநூறு

இப்போது முன்னூறு " என்றான்


"ஏன் குறைந்து கொண்டே போகிறது "எனக் கேட்க


"அவ்வளவுதான் போகிறது " என்றான்


தயாரிப்புச் செலவு

வெளியீட்டுச் செலவு எல்லாம் 

அவன் சொல்லச் சொல்ல

மலைப்பாக இருந்தது


"நானும் சில விஷயங்களை

உலகுக்கு சொல்லத்தான் நினைக்கிறேன்

அதற்காகவே பதிவுகளாக

என் பாணியில் எழுதுகிறேன்


குறைந்த பட்சம் நாளொன்றுக்கு

இருநூறு பேர் வாசிக்க

வருடத்திற்கு அறுபதாயிரம்  கணக்கில்

இப்போது பத்து வருடத்தில்

ஆறு இலட்சத்தைக் கடந்து கொண்டிருக்கிறேன்

அதுவும் உள்ளூரில் மட்டுமல்ல

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில்..."

நெட் செலவு தவிர வேறு செலவில்லை..."

எனச் சொல்லி நிறுத்த....


அதை ஹாலில் அமர்ந்து

கவனிக்காதது போல் இதுவரை

கவனித்துக் கொண்டிருந்த

அவருடைய மனைவி

சட்டென எழுந்து உள்ளே போய்

தட்டுடன் திரும்பி வந்து.....


"முறுக்கு நான் செய்து அண்ணே

சாப்பிட்டுக் கொண்டே பேசுங்க அண்ணே " 

என்றார்


அவரின் குறிப்பு எனக்குப் புரிந்தது


குறிப்பை என் இலட்சிய நண்பனுக்கும்

புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறேன்...

Thursday, October 22, 2020

வெல்லும் தலைவர்கள்...

மூடத்தனத்தால்

பதிந்த நம்பிக்கையின் பலம்

பகுத்தறிவினால்

விளைந்த நம்பிக்கையில் இல்லை


சடங்கு சம்பிரதாயங்களால்

மனதுள் பதிந்த செயல்கள்

பயனறிந்து செய்ய முயல

அதன் சுவடுகளே தட்டுப்படவில்லை


விவரமறியா வயதில்

இணைந்த நட்பின் இறுக்கம்

விவரமறிய தொடரும் நட்பில்

துளியும் இல்லவே இல்லை.


இவையெல்லாம் இப்படி

என ஆகிப் போனதால்தானோ என்னவோ.

இந்தச் சூட்சுமத்தை.

நன்கு புரிந்து கொண்டதால் தானோ என்னவோ


பயனுள்ள தேவையான

விஷயங்களைவிட...

பயனற்ற சுவாரஸ்யங்க்களே

இங்கு அதிகம் விற்பனையாகின்றன


கடமையை பொறுப்பினை 

உணர்த்தும் தலைவர்கள்

செல்லாக் காசாக்கிப் போக


உணர்வினை ஆசையினைத்

தூண்டும் தலைவர்களே

வெல்லும் தலைவர்களாகிப் போவதைப் போலவே... 

Monday, October 12, 2020

மனம் நிறைந்த மனோ..


 SPBக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று திருவண்ணாமலையில் அவரது தங்கை S.P.சைலஜா விளக்கேற்றி வேண்டியுள்ளார்.. 


இதில் நெகிழ வைத்த நபர், நெற்றி நிறைய விபூதியுடன், வேட்டி சட்டையில் பயபக்தியுடன் விளக்கேற்றிய மனோ தான்..


பிறப்பால், பழக்க வழக்கத்தால் இஸ்லாமியரான அவரது இந்த சைகை தான் நம் சமூகத்தின் நிஜமான பிரதிபலிப்பு.. '


“வணக்கம் சொல்ல மாட்டேன்', 'பிற மதக் கடவுளுக்குப் பூஜை செய்ததைச் சாப்பிட மாட்டேன்' என்பதெல்லாம் நம் சமூகத்திற்கும் நம் பண்பாட்டிற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத வந்தேறி வழக்கங்கள்.. 


சகமனிதன், வேறு நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதையும் மதிப்பது தான் நம் மண்ணின் மாண்பு.. மனோ அதைத் தான் கச்சிதமாகச் செய்து காட்டினார்..


வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அவற்றின் வந்தேறி வழக்கத்தைப் பிடித்துத் தொங்காமல், சக மனிதனின் நம்பிக்கைகளை மதிக்கும் மனோ, யேசுதாஸ் போன்றோர் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்.. 


இவர்கள் தான் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இருக்க வேண்டியவர்கள்.. 


மாறாக திராவிட & கம்யூனிச ஆட்கள், தாங்கள் தான் செக்யூலரிசத்தின் ஒரே அத்தாரிட்டி என்பது போல் செயல்படுவதால் தான் இங்கு ஒருவருக்கொருவர் இத்தனை முட்டல் மோதல்கள்..


எந்த இந்துவும் சர்ச்சுக்குள்ளோ மசூதிக்குள்ளோ போக யோசிப்பதில்லை.. சிவன், பெருமாள் மாதிரி ஏசு & அல்லாவும் அவனுக்கு ஒரு கடவுள் தான்.. அதனால் தான் அவன் உருத்தாக பிரியாணி கேட்கிறான், வேளாங்கண்ணி மாதா படம் போட்ட மோதிரம், எண்ணெய் கேன் என பயன்படுத்துகிறான்.. 


இதையே பதிலுக்குச் செய்யும் மனோவும் யேசுதாஸும் தான் இந்தச் சமூகம் சமநிலையாக இருக்க முழுபலத்தோடு உதவுபவர்கள்.. 


மனோக்களும் யேசுதாஸ்களும் அதிகரிக்கும் போது தான் செக்யூலரிசம் எத்தனை போலியானது என நமக்குத் தெரிய வரும்..


துரதிர்ஷ்டவசமாக, மனோக்களையும் யேசுதாஸ்களையும் என்றும் அதிகரிக்க விடாது திராவிட & கம்யூனிச அரசியல்.. 'சிறுபான்மை, ஒடுக்குமுறை, பார்ப்பனீயம்' என்றெல்லாம் தூண்டிவிட்டு அவர்களை எந்நேரமும் பயத்திலேயே இருக்க வைத்து, பெரும்பான்மைக்கு எதிராகக் கொம்பு சீவி விடுவது மட்டுமே இவர்களின் குறிக்கோள்.. 


மனித குலத்தின் நோய் கம்யூனிசம் என்றால், தமிழ் இனத்தின் நோய் திராவிடம்.. இந்த நோய்க்கான மருந்து, மனோ, யேசுதாஸ் போன்ற இந்திய பாரம்பரியத்தை மதித்து வாழும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே


நன்றி Ram Kumar

Sunday, October 11, 2020

ஆம் பதிவர் சந்திப்பில் உச்சம் இதுவே...

  நான் சிறுவனாக இருக்கையில்

எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக
இருந்தவர்கள் எல்லாம்  சிவாஜி
எம்.ஜி.ஆர் விஷயத்தில் இரண்டாகப்
பிரிந்து விடுவோம்

யாராக இருந்தாலும் இரண்டில் யாராவது
ஒருவர் பக்கம் நின்றாகவேண்டும்

இரண்டு பக்கமும் என்பதற்கெல்லாம்
அப்போது வாய்ப்பே கிடையாது

எப்படித்தான் அருமையாக சண்டைப்
போட்டாலும்  எம்.ஜி ஆர்அவர்களுடன்
ஒப்பிட்டுப் பேசுதல் என்பது கிடையாது
அவர் லெவலே வேறு

ஆனால் புதிதாக நடிக்க வந்தவர்கள்
யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்தால்
அவரை சிவாஜி அவர்களுடன் ஒப்பீடு
செய்வோம்.அனேகமாக அது
சிவாஜிக்கு முக்கால்  வருவார்,அரை வருவார்
கால் தூசி பெறமாட்டார் என்பதைப்
போலத்தான் எப்போதும் இருக்கும்

எனக்குத் தெரிய அந்த லிஸ்டில் மேஜர்
சவுந்திரராஜன்,ஏ.வி எம் ராஜன் எல்லாம்
 வந்து போனதுண்டு

ஆனால் யாரும் சிவாஜி அவர்களுக்கு
இணையாக வந்ததில்லை

அதைப் போலவே இனி பதிவர் சந்திப்பு
என்றால் புதுகைப் பதிவர் சந்திப்புத்தான்
நிச்சயம் ஒரு அளவுகோலாக இருக்கும்
புதுகைப் பதிவர் சந்திப்புப் போல் வராது
அல்லது புதுகைச் சந்திப்பைப்போலச்
சிறந்தது,அல்லது புதுகைப் பதிவர் சந்திப்பை
விட மிகச் சிறப்பாக இருந்தது
என்பதைப் போலத்தான் நிச்சயம் இருக்கும்

அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவர்
சந்திப்பை நடத்தி முடித்த அனைவருக்கும்
அதற்கு முழுமையாக அனைத்து விதத்திலும்
ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதோடு...

இந்த ஒற்றுமையும்,அமைப்பும் பதிவர்
சந்திப்பு நடத்துவதற்காகக்த்தான்
என்பதற்காக மட்டும் இல்லாது,

பதிவர்களுக்குள் எப்போதுமே ஒரு
இணப்புப் பாலமாக இருக்கும்படியான
ஒரு அமைப்பாக மாற்றினால்...

கூட்டு முயற்சியில் பொதுவாக ஒரு
வலைத்தளம்(தமிழ்மணம் போல் )
உருவாக்கும்படியான முயற்சியில் ஈடுபட்டால்...

புத்தகமாக தமது படைப்புகளை வெளிக்
கொணர விரும்புவோருக்கு  உதவும் ஒரு நல்ல
அமைப்பாக மாறினால்...

தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனை
வேண்டுவோருக்கு எப்போது வேண்டுமானாலும்
உதவும் ஓர் அமைப்பாக மாறினால்..

நல்லதோர் வீணையை  நலங்கெடாது
அதற்குரிய உயரிய பீடத்தில் வைத்தது போலாகும்
எனக் கூறி எனது இந்தத் தொடர்பதிவை
மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்....(ஆம் இதே நாளில் 2015 ல் பதிந்தது )
























Thursday, October 8, 2020

வெற்று உரலை இடித்தபடி

 கண்டதும்

கண்களை இமைக்கவிடாது
சுண்டி இழுக்கும்படியாய்
ஒரு அருமையான தலைப்பும்..

ஆரம்பமே
அமர்க்களமாய் இருக்கிறதே என
எண்ண வைக்கும்  படியாய்
சுவாரஸ்யமான பல்லவியும்

கருவிட்டு விலகாது
சங்கிலிக் கண்ணியாய்த்
தொடர்ந்து மயக்கும்
அசத்தலான சரணங்களும்

மூன்றையும்
மிக நேர்த்தியாய் இணைத்து
அட டா என தலையாட்டவைக்கும்
அருமையான முடிவும்

மிகச் சரியாய் அமைந்தால்
ஒரு கவிதை எழுதி விடலாம் என
அனுதினமும் காத்திருக்கிறேன்

என்றும் போல இன்றும் 
வெற்று உரலை 
வேதனையுடன் இடித்தபடி....

Tuesday, October 6, 2020

கண்டேன் சீதையை....

என் சிறு வயதில் ஏறக்குறைய

ஓராண்டு காலம் செவ்வாய் மற்றும்

சனிக்கிழமைகளில் இராமாயண உபன்யாசம்

கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.


உபன்யாசம் கேட்கப் போகாவிட்டால்

இரவு உணவு பாதிக்கப்படும் எனும்

நிலையில் வீட்டின் கண்டிப்பு இருந்ததாலும்

உபன்யாசகர் வெகு சுவாரஸ்யமாகக்

கதை சொல்லிப் போனதாலும் நான்

கூடுமானவரையில் உபன்யாசம் 

கேட்கப் போவதைத் தவிர்ப்பதில்லை


அன்று சிறு வயதில் கேட்ட இராமாயணக் கதை

மட்டுமல்ல சில குறிப்பிட்ட காட்சிப் படிமங்களும்

அன்று என்னுள் பதிந்தது இன்று வரை என்

நினைவில் இருப்பது என்பாக்கியம் எனத்தான்

சொல்லவேண்டும்


அவற்றுள் முக்கியமானது சீதையை

இலங்கையில் சந்தித்து பின் இராமனை

அனுமன் சந்திந்த நிகழ்வை அந்த

உபன்யாசகர் உபன்யாசம் செய்த விதம்...


அனுமனைத் தவிர அனைவரும் பல்வேறு

திசைகளில் சீதையைத் தேடிச் சென்று

எவ்வித நேர்மறையான தகவலும் இன்றித் திரும்ப

மீதம் நம்பிக்கையூட்டும்படியாய் இருந்தது

அனுமன் வருகைமட்டுமே என்றிருந்த நிலையில்..


அனுமன் வருகிற செய்தி அறிந்து இராமன்

கொள்கிற பதட்டத்தையும் அவன் என்ன சொல்லப்

போகிறாரோ என கொண்ட அதீத எதிர்பார்ப்பையும்

இராமானாகவும் அனுமனாகவும் அவர்

கதாப்பாத்திரமாகவே மாறி மாறி உபன்யாசம்

செய்து கேட்போருக்குள் பதட்டத்தைக் கூட்டி.....


சீதையைக் கண்டேன் எனச் சொல்லாமல்

கண்டேன் சீதையை எனச் சொன்னதன்

முக்கியத்துவத்தை கேட்போரும் உணரச்

சொன்னவிதம், அந்தக் காட்சி ஏன் அந்தச்

சூழல் கூட இன்று என்னுள் நிழற்படமாய்

இருக்கிற சூழலில்.....


இந்த கொரோனா காலத்தில் முக நூல்

மற்றும் வலைத்தளங்களில் வருகிற

சில பதிவுகளும் அதே தாக்கத்தை

ஏற்படுத்திப் போகிறது என்றால்

அது மிகையில்லை


பிறந்த நாள் வாழ்த்து மண நாள் 

வாழ்த்துகளைப் பதிவு செய்கிறவர்கள்

எல்லாம் முதலில் வாழ்த்துச் செய்தி 

என்று பதிவு செய்யாமல் சம்பத்தப்

பட்டவரின் புகைப்படத்தைப் பதிவு செய்துவிட்டு

பின் அவர் குறித்த சிறப்பான விஷயங்களை

எல்லாம் பதிவு செய்துவிட்டு பின் 

கடைசியாக பிறந்த நாள் வாழ்த்து எனவோ

மணநாள் வாழ்த்து எனவோ பதிவிடுவதற்குள்

ஏற்கெனவே பல்வேறு எதிர்மறைச் செய்திகளால் தகவல்களால் பாதிக்கப் பட்டிருக்கும் நம் மனம் எதையோ கற்பனை செய்து

படபடத்து முடிவைப் படித்ததும் தான்

ஆசுவாசம் கொள்கிறது..


எனவே இந்தக் கொரோனா கொடூரம்

முடிகிறவரையிலாவது முதலில் சம்பத்தப்பட்டவரின்

புகைப்படத்தைப் பதிவு செய்யும் முன்

சொல்லின் செல்வர் அனுமன் 

கண்டேன் சீதையை எனச் சொன்னதைப் போல

பிறந்த நாள் வாழ்த்து என்றோ

மண நாள் வாழ்த்து என்றோ பதிவிட்டுவிட்டு

பின் புகைப்படத்தைப் பதிவு செய்தால்

தேவையற்ற சில நிமிடப் பதட்டம் குறையும்

எனபதோடு இந்தச் சாக்கில் இராமனையும் அனுமனையும் சில நிமிடங்கள் நினைக்கிற பாக்கியமும் 

புண்ணியமும் நிச்சயம் வந்து சேரும்

என்பது என் அபிப்பிராயம்...


 சரிதானே.....

Monday, October 5, 2020

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரனாய்...

 மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Saturday, October 3, 2020

ஜன்னலும் விண்டோஸும்

பால்கனியே பூங்கா ஆகிப் போக

காரிடரே வீதியாகிப் போக 

கிச்சனே ஸ்டார் ஹோட்டலாக 

ஹாலே கூட்ட அரங்காக 

வெறுமையில் தகிக்கும் மனதிற்கு...

அதிகாலையில் ஜன்னல் திறக்க

விரும்பி விரைந்து விருந்தாளியாய் நுழையும்  
குளிர்ந்த காற்றும் மஞ்சள் வெய்யிலும்

மனச் சுளுக்கெடுத்துப் போகிறது... 

ஒருவகையில் தனிமைத் துயர் நீக்க.. 

முக நூலாய்   
வாட்ஸ் அப்பாய் 
வலைத்தளமாய் 
வந்து மகிழ்வூட்டிப் போகும் 
விண்டோஸைப் போலவே...

Friday, October 2, 2020

காந்தி 80

 வாழிய நீ எம்மான்....


1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?

➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி

2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?

➯  கரம் சந்த் காந்தி

3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன? 

➯ புத்திலிபாய்

4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?

➯  02-10-1869

5. காந்தியடிகளின்  எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2018 அன்று நாம் கொண்டாடுகிறோம்?

➯ 149 வது பிறந்தநாள்

6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?

➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்

7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?

➯ அரிச்சந்திரன் நாடகம்

8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?

➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்

9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?

➯ மே 1883

10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?

➯ 13க்கும் 14க்கும் இடையில்

11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?

➯ கஸ்தூரிபாய்

12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?

➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்

13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?

➯ 1888

14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?

➯ 24ம் வயதில்

15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

➯ 21 ஆண்டுகள் (1893-1914)

16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?

➯ நிறவெறி கொடுமைக்கு

17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?

➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்

18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?

➯  09-01-1915

19. காந்தியடிகள்  தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?

➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)

20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?

➯ கோபால கிருட்டின கோகலே

21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?

➯ மிதவாதகொள்கை

22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட  கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?

➯ இந்திய தேசிய காங்கிரஸ்

23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட  முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?

➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)

24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?

➯ கேதா ஆர்ப்பாட்டம்

25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?

➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்

26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?

➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்

27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?

➯ ஒத்துழையாமை இயக்கம்

28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?

➯ சட்டமறுப்பு இயக்கம்

29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?

➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்

30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த்  என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?

➯ ஒத்துழையாமை இயக்கம்

31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?

➯ உப்புசத்தியாகிரகம்

32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?

➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது

33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?

➯  12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்

34. காந்தியடிகள் மேற்கொண்ட  தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?

➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக

35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?

➯ செய் அல்லது செத்துமடி (do or die)

36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?

➯ குழந்தைகள் திருமணம்,  திண்டாமை ஒழிப்பு,  விதவைகளுக்கு எதிரான கொடுமைகள் 

37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?

➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)

38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?

➯  30-01-1948

39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?

➯ தியாகிகள் தினம்

40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?

➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )

41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?

➯ நவஜீவன்

42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?

➯ குஜராத்தி மொழியில்

43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?

➯ சத்தியசோதனை

44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?

➯ மன்மோகன் தேசாய்

45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன? 

➯ My Experiments with Truth.

46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?

➯ யங் இந்தியா

47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?

➯ இந்தியன் ஒப்பீனியன்

48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ”  என்று அழைத்தவர் யார்?

➯ இரவீந்திரநாத் தாகூர்

49. காந்தியடிகளை முதன்முதலில்  “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?

➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்

50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள்  என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?

➯ திரு.வி.க

51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?

➯  2338 நாட்கள்

52.  காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?

➯ எரவாடா சிறை (பூனா)

53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?

➯ 78 வயது

54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்

➯ காந்தி

55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?

➯ கஸ்தூரிபாய்

56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?

➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்

57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?

➯ காந்திஜியின் பிள்ளைகள்

58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?

➯ ஹரிலால்

59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?

➯ ஹரிலால்

60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?

➯ காந்திஜி

61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?

➯ காந்திஜி

62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?

➯ காந்திஜி

63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?

➯ காந்திஜி

64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்

➯ காந்திஜி

65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்

➯ காந்திஜி

66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்

➯ ஹரிலால்

67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்

➯ காந்திஜி

68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்

➯ மணிலால்

69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்

➯ மணிலால்

70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்

➯ மணிலால்

71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்

➯ மணிலால்

72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்

➯ மணிலால்

73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்

➯ ஹரிலால்

74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை  நடந்த இடம்

➯ சிறைச்சாலை

75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்

➯ சிறைச் சாலை வளாகம்

76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்

➯ கஸ்தூரிபாய்

77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.

➯ கஸ்தூரிபாய்

78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்

➯ காந்திஜி

79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்

➯ காந்திஜி

80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்

➯ காந்திஜி.