Wednesday, March 15, 2023

விந்தையே கவிதை..

 யானைகளைக் கட்டி

பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது

நிச்சயம் ........

 அதிசயமே அசந்து போகும்
அதிசயம் போலவே
 விந்தையதே வியக்கும் விந்தைதான்

Monday, March 13, 2023

பெற்றோர்களின் கவனத்திற்கு...

அன்பார்ந்த பெற்றோர்களே!*


*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*


*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*


*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*


*தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில்*

*ஒரு கலைஞன் இருப்பான்*


*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*


*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிராது.*


*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*


*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..* 


*எடுக்காவிட்டால்  தரம் குறைந்த மாணவன என்று*


*தயவு செய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*


*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.* 


*நீ வாழ்க்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*


*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*


*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*


*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*


*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

 

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்..

Friday, March 10, 2023

நிஜமாகும் கட்டுக்கதை

 ஏழுகடல் தாண்டி

ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Wednesday, March 8, 2023

சங்கல்ப்பம்..

 தேடுதலையே...

நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

Wednesday, March 1, 2023

திரு "வோட்டை " க் கொண்டு..

 ஒரு பிச்சைக்காரனுக்கு சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சைஓடு மட்டுமே. தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். யார் வந்தாலும் பிச்சை கேட்பான். ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.


முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.


சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான்.  ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.


பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.


இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு 

காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..


எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம். 

யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.


அந்த துறவி  “அடப்பாவிகளா! மூணு  தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..


பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.


துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.


பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து 

அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...


துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.


பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.


துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...


மெள்ள மெள்ள...


மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!


பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.


ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.


பிச்சைக்காரனின் கையில் அந்தத் 

தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!


“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.


இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு *ஓட்டில்* (Vote)  பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.


*ஓட்டின்* மகிமையை என்று உணர்வார்களோ. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.


சிந்திப்போம்...படித்ததில் பிடித்தது..

Tuesday, February 21, 2023

அறிதல் நன்று..

 


அவர் நெல்லை மாவட்டம் பத்தமடை பிறப்பு, அந்தண குலத்தில் குப்புசாமி என 1887ல் பிறந்தார்.  வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர், அதனால் அந்நாளைய மருத்துவபடிப்பினை தஞ்சாவூரில் படித்தார்


அவரின் தந்தையின் மரணம் அவரை வறுமையில் தள்ளி 1915 களில் மலேய நாட்டுக்கு தள்ளிற்று


அது மலேயாவின் ரப்பர் தோட்டம் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்நாட்டில் பெரும் தொழிலாளர்களை குவித்த வெள்ளையன் அவர்களுக்காக மருத்துவர்களையும் குவித்திருந்தான், ஓயா மழை கொட்டும் ரப்பர் எஸ்டேட்டுகளில் ,காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது


அப்பொழுதுதுதான் குப்புசாமி அங்கு பணியாற்றினார், மலேய தோட்ட தொழிலாளர்களில் இந்தியாவில் பொருளாராதார ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் அதிகம்


இந்தியாவில் சாதிகொடுமை என பலரை வைத்து தூண்டிவிட்ட வெள்ளையன் அம்மக்களை இலங்கை தேயிலை தோட்டம், மலேய ரப்பர் தோட்டம் , தென்னாப்ரிக்க சுரங்கம் போன்ற பல கடினமான வேலைக்கு வஞ்சகமாக அழைத்து வந்திருந்தான்


ஆம் தமிழகத்தில் விவசாய கூலிகளாக இருந்த அவர்களை சிலரை வைத்து தூண்டிவிட்டு தனக்கு அடிமையாக அவன் தூக்கி சென்ற தந்திரம் அது


குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக மின்னினார் அவர், பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தது, மிகபெரிய மருத்துவ கலாநிதியாக அவர் கொண்டாடபட்டார்


எவ்வளவு பெரும் சென்றாலும் அவர் மனதில் ஒரு இரக்கம் இருந்து கொண்டே இருந்தது, அதுதான் தெய்வத்தின் குரல்.


மலேயாவில் எஸ்டேட் கூலிதொழியான பெண்ணின் பிரசவத்தில் உதவி மிக கடினபட்டு தாயினையும் சேயினையும் இருநாட்கள் போராடி காத்தார் அந்த குப்புசாமி


உயிர் பிழைத்த குடும்பம் அவர் காலில் விழுந்து நன்றி சொல்லிற்று, அந்த நன்றியில் தெய்வத்தை உணர்ந்தார் குப்புசாமி


ஆம், ஒருவனின் மனம் எதையெல்லாமோ தேடும், தேடி தேடி ஓடும். தேடியதை அடைந்தபின் அந்த உச்சியில் ஒரு தருணம் அவன் மனம் கடவுளை தேடும், இதற்கு மேல் என்ன உண்டு என நினைக்கும் நொடியில் அந்நேரம் இறைவன் உண்டு என்பது தரிசனமாகும்


சிந்தை என்பது ஆன்மாவினை தொடும்பொழுது ஆன்மாவும் சிந்தையும் புத்தியும் சரியாக சந்திக்கும்பொழுது அந்த விழிப்புநிலை உருவாகும்


அந்த ஏழை குடும்பத்தின் நன்றி கண்ணீர் அவருக்குள் இருந்த இறைதன்மையினை உசுப்பிவிட்டது, "சாமி நீங்க தெய்வமய்யா" எனும் அந்த வார்த்தை அவரை உருக்கிற்று


ஆம் அந்த பிரசவம் கடினமானது, அக்குழந்தையும் தாயும் தன்னை மீறிய ஒரு சக்தியால் பிழைக்கவைக்கபட்டனர் என்பதை உணர்ந்த குப்புசாமி மனம் முழுக்க மருத்துவம் மீறி தெய்வம் நிரம்பிற்று


மலேய நாட்டில் ஒரு ஏழை குடும்பத்துக்கே இவ்வளவு உதவி தேவைபட்டால் இந்தியாவில் எவ்வளவு பெரும் உதவி தேவையாயிருக்கும் என எண்ணினார், விளைவு சேவையில் இறைவனை காணலாம் என்ற மனம் அவருக்கு வந்தது


இன்னும் அவரின் சிந்தனை நீண்டது, மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கின்றது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் சொல்லமுடிவதில்லை


அந்த பெண்மணியும் குழந்தையும் பிழைத்தது தன்னாலோ தன் மருத்துவத்தாலோ அல்ல என நம்பினார், பிரபஞ்சத்தின் ஒரு பெரும்சக்தி அந்த அதிசயத்தை தன்மூலம் செய்ததாக உணர்ந்தார்


ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை அந்நொடியில் தெரிந்து கொண்டார்


மனம் முக்கியம், ஆன்மபலம் முக்கியம் அதுதான் அடிப்படை மருத்துவம், அது படிப்பால் வராது ஆங்கில ஆராய்ச்சியால் வராது. பாரத பண்பாட்டின் ஆன்மீகத்தால் மட்டும் மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்ந்தார்


அவரின் மனம் ஆன்ம பலம் ,யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கியது


"தன்னலமற்ற தொண்டே ஆன்மிக வாழ்வின் அடிப்படை. அதன் மூலம் உள்ளத் தூய்மையும், அதனால் யோகமும், வேதாந்த ஞானமும், இறுதியில் ஆத்ம அனுபூதியும் பெறலாம்" என அவர் மனம் சொல்லிற்று


தன் டாக்டர் தொழிலை உதறினார், கோட்டும் ஸ்டெஸ்கோப்பும் அகன்றது காவியும் ருத்திராட்சமும் கழுத்தில் ஏறியது, ஆயினும் மனம் நிலையின்றி தவித்தது


ஆம் நிலையில்லா மனம் என்பது நதி கடலை தேடி ஆரவாரமாக ஒடுவது போல் பொங்கி கொண்டே இருக்கும் , ஞானம் அடையும் வரை அது அடங்காது


தன் மனதை அடக்க ரிஷிகேஷம் சென்றார் குப்புசாமி அல்லது விதி இழுத்து சென்றது,பல நாள் பட்டினி கிடந்தார், வீதியில் உறங்கினார், பிச்சைகார கோலத்தில் ஞானம் தேடினார்


அந்த தேடலில் மகான் விஸ்வானந்த சரஸ்வதியினை சந்தித்தார், அவர் இவரை எதிர்பார்த்து இருந்தவர் போல அழைத்து தீட்சை கொடுத்து


ஞானத்தை ஞானமே அடையாளம் கண்டுகொள்ளும் என்பது போல அந்த விஸ்வானந்தர் இவருக்கு சிவானந்தர் எனும் பட்டமும் கொடுத்து மன்னனிடம் சொல்லி ஒரு காணிநிலமும் கொடுத்து ஆசிரமம் அமைத்தார்


அப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன‌


ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கபட்டனர்


ஆம் சிவானந்த சுவாமிகளே இந்தியாவில் ஏழை தொழுநோயாளிகளை மருத்துவரீதியாக அரவணைத்த மகான், தெரசா இவருக்கு பின்னால் வந்தவர் அதுவும் மதம் மாற்ற வந்தவர்


இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியது இந்து சன்னியாசிதான்


இதில் விஷேஷமான செய்தி என்னவென்றால் சுவாமியின் ஆஸ்ரமத்தில் நோயாளிகளாக‌ இஸ்லாமியர் இருந்தார்கள், பவுத்த மக்கள் இருந்தார்கள், ஆனால் யாரையும் அவர் மதம்மாற்றவில்லை


இஸ்லாமியர் தொழுகை நடத்த கூட இடம் ஒதுக்கி கொடுத்திருந்தார்


ஆம் உண்மையான பாரத ஆன்மீக மனிதநேயம் எதுவோ, சனாதனதர்மம் சொன்ன தத்துவம் எதுவோ அதை அப்படியே பின்பற்றினார், ஒரு இடத்திலும் மததுவேஷமோ இல்லை வன்மமோ அவர் காட்டியதில்லை, பழுத்த ஞானம் என்பது அதுதான்


நாள் செல்ல செல்ல அவருக்கு இறை அனுபவம் கூடிற்று, இறையருள் அவரை நடத்திற்று, எப்படியெல்லாமோ ஆச்சரியங்கள் நிகழ்ந்தன‌


அவர் ஆசிரமத்தில் அனுதினமும் பக்தர்கள் அலைமோதினர், அதில் பிள்ளையில்லாமல் வருந்திய தம்பதியும் ஒன்று


ஒருநாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணோருத்தி சாமியின் சீடர்களால் காப்பாற்றபட்டு அவரிடம் கொண்டுவரபட்டார்கள், அவள் தொலைதூரத்தில் இருந்து வந்தவள், அவள் சாக துணிந்த காரணம் மணமாகாமல் கர்ப்பம் தரித்தது


சுவாமி அவளை திட்டவில்லை, கர்ப்பம் கலைக்க சொல்லவில்லை, அவளை பெற்றோரிடமும் அனுப்பவில்லை, அனுப்பினால் என்னாகும் என்பது சுவாமிக்கு புரிந்தது


அவள் அங்கேயே தங்க வைக்கபட்டாள் குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லா தம்பதியிடம் அக்குழந்தையினை ஒப்படைத்துவிட்டு அப்பெண்ணின் வழியில் அவளை போக சொன்னார்


சுவாமியின் காலில் விழுந்து இரு பெண்களும் அழுதனர், சுவாமி நிதானமாக சொன்னார்


"ஒரு உயிரை காத்து இன்னொரு உயிரிடம் ஒப்படைக்க‌ இறைவன் என்னை பயன்படுத்தினான் அவ்வளவுதான்"


சிவானந்த சாமியின் புகழும் அவரின் ஞானமும் அது கொடுத்த போதனையும் ஏராளம், ஏகபட்ட புத்தகங்களை எழுதினார், உலகெல்லாம் அவர் மடம் கிளைகளும் திறந்தது


இன்று சுமார் 300 கிளைகளுடன் மிகபெரிய தொண்டு நிறுவணமாக அது வளர்ந்தும் நிற்கின்றது


அந்த இளைஞன் 1962ல் ரிஷிகேஷில் விரக்தி நிலையில் இருந்தான், ஒல்லியான உருவமும் குள்ள வடிவமும் கொண்ட அவன் கண்களில் நீர்வழிய சுவாமி முன் நின்றிருந்தான்


அவனையே உற்று நோக்கினார் சுவாமி, அந்த இளைஞன் கண்ணீர் விட்டு சொன்னான், "சுவாமி நான் ஏழை மீணவ வீட்டு மகன், நன்றாக படித்து பைலட்டாக வேண்டுமென கனவு கண்டேன், படித்தும் முடித்தேன்


ஆனால் பைலட் தேர்வில் என்னை நிராகரித்துவிட்டார்கள், நான் அதற்கு தகுதி இல்லையாம், இனி நான் என்னாவேன் என எனக்கே தெரியவில்லை" என மனமுடைந்து நின்றான்


புன்னகைத்த சுவாமி சொன்னார் "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல். காரணங்களின்றி இங்கு எதுவும் நடக்காது"


அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த இளைஞன் பின் தீவிரமாக உழைத்து ஏவுகனை விஞ்ஞானியாகி பாரதத்தின் குடியரசு தலைவனுமானான்


அவர்தான் அப்துல் கலாம்


ஆம், வாழ்வில் தோல்வினையே பெற்று தத்தளிக்கும் ஒவ்வொருவரும் நினைவு வைக்க வேண்டிய வரிகள் சுவாமியினுடவை


படைக்கபட்ட நோக்கத்தை நோக்கியே ஒவ்வொருவானையும் இழுத்து செல்லும் காரியத்தின் பெயர்தான் தோல்வி, இதை ஞானிகளின் கண்கள் அறியும்.


சிவானந்தர் இந்தியாவின் மிகபெரும் யோகி, அதுவும் விஞ்ஞான கல்வி கற்றுவிட்டு அதெல்லாம் பணம் சம்பாதிக்கும் விஷயம் மட்டுமே, வாழ்க்கைக்கு உண்மையன தேவை ஆத்ம தெளிவு, ஆன்ம பலம் கொடுக்கும் ஆன்மீகம் என உணர்ந்து நின்றவர்


சுருக்கமாக சொன்னால் தன்னை அறிந்தவர்


எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர், இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்


ஒவ்வொருவர் வாழ்வும் அதன் நோக்கில் நல்லபடியாக செல்ல, அவர்கள் பிறந்த கடமையினை சரியாக செய்ய இடையூறுகளை நீக்கி வழிகாட்டினார் சுவாமி, இன்றும் அவரின் ஆஸ்ரமம் அதை தொடர்ந்து செய்கின்றது

அந்த நெல்லை பிறப்பு பாரதி போல தனித்துவம் மிக்கது, தொழுநோயாளிகளை தொட்டு அரவணைத்த உன்னத கரங்கள் அவருடையது


ஆனால் தெரசாவுக்கு இருந்த விளம்பரமும் உலகளாவிய கொண்டாட்டமும் பாரத ரத்னா போன்ற விருதுகளும் ஏன் சுவாமி சிவானந்தாவுக்கு இல்லை


அதுதான் இங்கு இந்து யோகிகள் அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவணங்களெல்லாம் வெளியே தெரிய கூடாது எனும் கள்ளதனம், மிகபெரிய மோசடி


அதுதான் நெல்லை பிறப்பான அந்த உத்தம சத்திய ஞானவானை ஏன் மறைத்தது?


ஆம் நெல்லையில் பாரதி தவிர ஏகபட்ட பிம்பங்கள் உண்டு, பொதுநல பித்தர்கள் உண்டு. தன் ஆஸ்தி கொடுத்து பாலம் கட்டிய சுலோச்சன முதலியார் முதல் பெரும் மருத்துவ வாழ்வினை உதறி தள்ளி தொழுநோய் ஆசிரமம் அமைத்த ஞானி சிவானந்தர் வரை பலர் உண்டு


ஆனால் தமிழரில் யாருக்காவது இவர்களை தெரியும்?


அல்பேனியாவில் இருந்து வந்த தெரசாவினை தெரிந்த அளவு, மானிட நேயத்தில் உண்மையான பாரத மரபில் இங்கு தொழுநோயாளிகளை அரவணைத்த சுவாமி சிவானந்தா பற்றி யாருக்கும் தெரியாது


வெறும் வாக்கும் அரசியலும் இங்கு மாற்றத்தை கொண்டுவராது, மக்கள் மனம் மாற வேண்டும், இங்கு நடந்த பெரும் மோசடிகளை அவர்கள் உணரவேண்டும், தங்களின் அடையாளமும் பெருமையும் மறைக்கபட்டு அதன் மேல் கட்டபட்ட போலி பிம்பங்களையும் அவர்கள் உணர்தல் வேண்டும்.


அப்படி உணரும் பட்சத்தில் இங்கு மாற்றம் தானாக வரும், வந்த மாற்றம் நிலைத்தும் நிற்கும்


இம்மாதிரி மகான்களை என்று தேசம் கொண்டாட தொடங்குமோ அப்பொழுதுதான் இத்தேசம் இன்னும் வேகமாக தன்  பொற்காலத்தை எட்டும்


Stanley Rajan


இனியேனும் இருக்கும் போதே...

 நல்லவர்..

வல்லவர்..

மனித நேயமிக்கவர்..

எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..

பலரது பசியையும் ஆற்றியவர்..

இளகிய மனம் கொண்டவர்..


என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட, 


அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..


மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..


அவருக்காக வாக்கு கேட்கவில்லை..


அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..


தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..


நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..


கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..


அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..


அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..



இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!



இன்று அவர் மரணத்திற்குப் பிறகு.. 


மைக் பிடித்து அழுவது..


உருகி உருகி பதிவு போடுவது..


ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..


என்று செய்வது எல்லாம் சரிதான்..


ஆனால்..


அது எதுவும் அவருக்குத் தெரியாது..


அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது..


இதுதான் வாழ்க்கை..


இவ்வளவுதான் வாழ்க்கை..


இனியாவது..


மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை


அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே

கொண்டாடப் பழகுங்கள்..


வாழ்க்கை மிகவும் புதிரானது..


இருந்தாலும்... மறைந்தாலும்... பேர் சொல்ல வேண்டும்.


லயன் ராமர்🙏🙏🙏

Friday, February 17, 2023

இவர் எதனால் இன்னும் ..வாழ்ந்து கொண்டிருக்கிறா..

 எம்.ஜி.ஆர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.


ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.


சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!


ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத் தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப் புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.


‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!


- தி இந்து .

Wednesday, February 15, 2023

இடைத்தேர்தலும் மக்கள் மனோபாவமும்..

 


முன்பு

பதவிக் காலம் முடியும் முன்

மக்கள் பிரதிநிதிகள் இறந்தால்

அவர்கள் குடும்பத்தாரைப் போலவே

மனம் கலங்கிய காலம் ஒன்று இருந்தது


அவர்கள் குடும்ப வாரீசுகள்

எவரேனும் போட்டியிட்டால்

அனுதாப ஓட்டுக்களால் மிக எளிதாக

வெல்லும் காலம் என்றும் இருந்தது


இன்று

எப்படியும் வென்றாக வேண்டும்

என்கிற முனைப்பில் வெறியில்

ஆளும் கட்சிகள் அள்ளி இறைக்கும்

பணத்தைப் பார்க்கையில்....


எப்படியும் தோற்க வைக்க வேண்டுக்

என்கிற நோக்கில் அதற்கு இணையாக

எதிர்கட்சிகள் செய்யும்

அட்டகாசங்களைக் கவனிக்கையில்...


மெல்ல மெல்ல

பிறதொகுதி மக்களின் மனோபாவமும்

மாற்றம் கொள்ளத் துவங்குகிறது

நலமாக இருக்கும் தங்கள் பிரதிநிதியை

கொஞ்சம் ஆற்றாமையோடு பார்க்கிறது


இருக்கையில்

தொகுதிக்கு ஏதும் செய்ய இயலாவிட்டாலும்

இதுபோல் இடையில் போயாவது

தொகுதி மக்களுக்கு நனமை செய்ய மாட்டாரா என

ஏக்கப் பெருமுச்சு விடுகிறது


எனவே......

பெருமூச்சு மெல்ல மெல்ல

ஆசையாக மாறாதிருக்கவாவது

வேண்டுதலாக ஆகாதிருக்கவாவது.....                                                                                                           அதன் தொடர்ச்சியாய்                                                                                                                                         இனி இடைத்தேர்தலே இல்லை என்று                                                                                                           ஆகித் தொலைப்பதற்காகவாவது...                                                                                                               அடக்கி வாசிக்கப் பயில்வோமா.....                                                                                                                 இடைத்தேர்தலை போர்க்களமாகக் கருதாது                                                                                               போட்டித் தேர்வாகக் கொள்வோமா...


Monday, February 13, 2023

இனியேனும் அளவுகோலை மாற்றாதிருப்போம்

 முன்பெல்லாம்

குடிகாரன் தீயவனாகத் தெரிந்தான்


இப்போது எல்லோரும் குடிப்பதால்

குடித்து கலாட்டா செய்பவன் மட்டுமே

தீயவனாகத் தெரிகிறான்


குடித்தும் அமைதியாக இருப்பவன்

நல்லவனாகத் தெரிகிறான்


எனவே இந்த நல்லவன் பட்டியலில்

குடிக்காதவனுக்கு இடமே இல்லை


முன்பெல்லாம்

கையூட்டுப் பெறுபவன் 

மோசமானவனாகத் தெரிந்தான்


இப்போது எல்லோரும் கையூட்டுப் பெறுவதால்

கையூட்டுப் பெற்றும் காரியம் முடிக்காதவனே

மோசமானவனாகத் தெரிகிறான்


கையூட்டுப் பெற்று காரியம் முடிப்பவன்

சிறந்த நிர்வாகி ஆகிப் போகிறான்


இந்தச் சிறந்தவன் பட்டியலில்

கையூட்டுப்பெறாதவனுக்கு வாய்ப்பே இல்லை


முன்பெல்லாம்

அரசியலில் ஊழல் செய்பவன் மட்டுமே

மோசமானவனாகத் தெரிந்தான்


இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருமே

ஊழல் வாதிகளாக இருப்பதால்

பிடிபடுபவன் மட்டுமே

மோசமானவனாகத் தெரிகிறான்


பிடிபடாது ஊழல் செய்பவன்

அரசியல் சாணக்கியன் ஆகிப் போகிறான்


இந்த சாணக்கியன் பட்டியலில்

ஊழலற்ற அரசியவாதிக்கு சம்பந்தமே இல்லை


அளவுகோலை நிலையானதாக வைத்து

பொருட்களை எடைபோட்ட காலம் மாறி


பொருளுக்கு ஏற்றார்ப்போல

அளவுகோலை மாற்றும் நம் மனோபாவம்

தொடர்கிறவரையில்.......


இனி வரும்காலங்களில்

குடிக்காதவன் தீயவனாகிப் போகவும்

கையூட்டுப் பெறாதவன் மோசமானவனாகிப் போகவும்

ஊழல் செய்யாதவன் அரசியலுக்கு

இலாயக்கற்றுப் போகவுமே

அதிகச் சாத்தியம் ....


எனவே இனியேனும்

அளவுகோலை நிலையானதாகக் கொள்வோம்


பொருட்களை இனியேனும்

அளவுகோலை மாற்றாது எடை போடப் பயில்வோம்


Sunday, February 12, 2023

சுருக்கமாக எனினும் நறுக்..

 (அர்த்தமுள்ள வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்தச் சிறிய கட்டுரை)


நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.


_அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறிவிடுகிறது._


_நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?_


_“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்._


_ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது._ _அப்படியென்றால் என்ன காரணம்?_


உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது. _ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்._

_கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும்._


_இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்._ 


_வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்._

_இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்._ 

_ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம்._


_வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?_


_கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா? நிச்சயம் இல்லை._


_வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது._ அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…

_இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!_


நல்லவற்றை நமக்குள் 

நிரப்பி வைப்போம்!

_வாழ்க்கை நமக்கு  கிடைத்த வரம்... அதை அனுபவித்து வாழ்வோம்..

Sunday, February 5, 2023

நளினமா...நடத்தையா..

 ஒரு கற்றறிந்த குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார்.


 "நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?"


 அந்த இளைஞன் பதிலளித்தான் - "அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்".


 குருஜி கேட்டார் - "அந்தப் பெண் முன்னேறிய பிறகு, நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?"


 அந்த இளைஞன் சொன்னான் - ஆம், என் மனைவி என்னுடன் இல்லை என்றால் .  (கூட்டத்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்)


 குருஜி மீண்டும் கேட்டார் - "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?"


 அந்த இளைஞன்,- "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார்.  மற்றும் புன்னகைத்தார்


 குரு ஜி பின்னர் அந்த இளைஞனிடம் கூறினார் - இப்போது கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, ​​நான் உங்களுக்கு ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுத்தேன். உங்கள் வீட்டிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த பாக்கெட்டை டெலிவரி செய்ய வேண்டும் என்று சொன்னேன்.


 புத்தகங்களை விநியோகிக்க நீங்கள் அவருடைய வீட்டிற்குச் செல்கிறீர்கள். அவருடைய வீட்டைப் பார்த்தாலே அவர் ஒரு கோடீஸ்வரர் என்பது தெரிய வருகிறது.


 அவரது பங்களாவின் வராந்தாவில் 10 வாகனங்களும், வீட்டின் வெளியே 5 வாட்ச்மேன்களும் நிற்கின்றனர்.


 உள்ளே புத்தகப் பொட்டலத்துடன் நீங்கள் வந்த தகவலை அனுப்பிவிட்டீர்கள், பிறகு அந்த மாண்புமிகு தானே வெளியே வந்து உங்களை வரவேற்றார்.


 உங்களிடமிருந்து புத்தகப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டார்.  பின்னர் நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கிய போது உங்களை அவரது வீட்டிற்குள் வரும்படி அவர் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் அமர்ந்து உங்களுக்கு சூடான தேநீர் மற்றும் உணவு கொடுத்தார்.  மிகவும் நன்றாக கவனித்து, இவ்வளவு சீக்கிரம் புத்தகங்களை அவரிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி கூறுகிறார்.  நீங்கள் திரும்பி வரவிருக்கும் போது, ​​அவர் உங்களிடம் கேட்கிறார் - நீங்கள் எப்படி என் வீட்டிற்கு வந்தீர்கள்? என்று.

 நீங்கள் சொன்னீர்கள் - உள்ளூர் ரயிலில்.


 உடனே அவர் தனது டிரைவரிடம் தனது சொகுசு கார் ஒன்றில் உங்களை உங்கள் இலக்குக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடையும் நேரத்தில், அந்த கோடீஸ்வரர் உங்களை அழைத்து கேட்டார் - தம்பி, நீங்கள் வசதியாக வந்துவிட்டீர்களா..!!


 குருஜி கேட்டார், இப்போது சொல்லுங்கள் *இந்த மனிதரை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்?*


 அந்த இளைஞன் சொன்னான் - குருஜி!  அவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.


 இளைஞர்கள் மூலம் கூட்டத்தில் உரையாற்றிய குரு ஜி - "இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்" என்றார்.


 "அழகான முகம் குறுகிய காலத்திற்கு நினைவில் இருக்கும், ஆனால் அழகான நடத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்."


 💐 உங்கள் முகம் மற்றும் உடலின் அழகை விட உங்கள் நடத்தையின் அழகில் கவனம் செலுத்துங்கள்.  வாழ்க்கை உங்களுக்கு சுவாரஸ்யமாகவும், மறக்க முடியாத அழகாகவும் மற்றவர்களுக்கு உத்வேகமாகவும் மாறும்.......வாட்ஸ் அப் பகிர்வு

Wednesday, February 1, 2023

நினைவில் கொள்வோம்..

 அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த  சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.வரும் 10/15 ஆண்டுகளில் அன்பாலும் பாசப்பிணைப்பாலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட ஒரு மூத்த தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது.இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.!

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

காலையில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள்

வீட்டு தோட்டம், செடிகளுக்கும் தண்ணீர் விடுப்பவர்கள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மருதாணி, செம்பருத்தி தன் வீட்டிலேயே வளர்ப்பவர்கள்.

கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து பிரார்த்தனை செய்பவர்கள்.தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்,வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிப்பவர்கள்அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம், அவர்களும் வித்தியாசமானவர்கள்.

திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே எதார்த்தமாகவும், மனிதநேயத்தோடும், இயற்கையாகவும், எந்தவிதமான நாடகத்தன்மையும் கலக்காமல் இருக்கும்.

லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். தொலைபேசி எண்களை மனப்பாடமாகவும், டைரியிலும் பராமரிக்கும் பழக்கம் உடையவர்கள். முகவரியை தெளிவாக கூறுவார்கள். முடிந்தால்  அழைத்துச் சென்று காட்டுவார்கள்.ஒருநாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்.எப்போதும் ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் வைத்து கொள்பவர்கள் இந்த மக்கள் கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், குடும்ப, சமூக அக்கறை பயம் உள்ளவர்கள்.தைத்து பராமரிக்கப்பட்ட பழைய செருப்புடன் உலா வருபவர்கள், பனியன், பெரிய கண்ணாடி என மிக எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில் ஊறுகாய், வடகம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்

விடியற் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு அவர்களே தங்கள் கைகளாலேயே வீட்டைப்பெருக்கி, ஒட்டடை அடித்து வீட்டை சுத்தபத்தமாக வைத்திருப்பவர்கள்.எப்போதும் நாட்டு மாட்டுப்பால், தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா...?உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா? ஆம் எனில், நீங்கள் மட்டுமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள்  அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள் மரியாதை கொடுங்கள்.அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்.இல்லையெனில் அவர்களுடன் ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் அழிந்தே போய்விடும்.அதாவது,

மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை, கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை, நமது கலாச்சாரத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து போய் விடும்.

உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை, நேரம் மற்றும் அன்பு கொடுங்கள். 

நம்முன்னோர்களே நமது அடையாளம், நமது முகவரி, மற்றும் நமது பெருமை, நம் கடமை.தனிமனித வாழ்வியில் சடங்குகள் மட்டுமே பல குற்றங்களை தடுக்க முடியுமே தவிர, அரசாங்கத்தால் மட்டுமே முழுமையாக தடுக்க இயலாது.

 இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம்.

ஆரோக்கியம் பேணுவோம்.

உடல் நலனிற்கு முக்கியத்துவம் தருவோம்

பாரம்பரியத்தை தூக்கிச்செல்லும் கலாச்சாரக் காவலராவோம்.....வாட்ஸ் அப் பகிர்வு..

Monday, January 30, 2023

புரியாவிட்டாலும் முழுவதும் படிங்க..முடிவில் புரியும்..

 1254


Ambani vs Adani 


கடந்த இரண்டு வருடங்களாக அசைக்க முடியாமல் வலுவாக இருந்த அதானியின் சாம்ராஜ்யத்தினை ஹிட்டன்பர்க் என்ற ஒரே அறிக்கை ஒட்டு மொத்தமாய் சாய்த்து விட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதானியின் கம்பெனிகளின் பங்குகள் அனைத்தும் 20 சதவீதத்திற்கும் கீழ் சரிந்தது. 


இது ஹிட்டன்பர்கினால் தானா? ஹிட்டன்பர்க் அறிக்கை அதானியை கவிற்பதற்காகவே போலியாக ஏற்பாடு செய்யப்பட்டதா? இரண்டாம் உலகப்போருக்கும் ஹிட்டன்பர்க்குமே சம்பந்தம் இருக்கிறதாமே? 


இது போன்ற விவாதங்களுக்கு நான் வரவில்லை. ஏனென்றால் நானே ஹிட்டன்பர்க் அறிக்கையினை இன்னும் படிக்கவில்லை. ஆனால் அதானியின் பங்குகள் சரிவடைந்ததற்கு காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த அளவிற்கு பங்குகளைப் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் வாங்கினார்களோ, அதே வேகத்தில் கடந்த இரண்டு நாட்களில் விற்றிருக்கின்றனர். இதில் பெரிய முதலீட்டாளர்கள், ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என எல்லாருமே அடங்குவார்கள். இதை தான் bear market என்று சொல்வார்கள். இந்த கரடி மார்கெட் அமைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதானிக்கு ஹிட்டன்பர்க் ரிப்போர்ட். 


இந்த  பியரிஷ் மார்கெட்டை நான் எப்படி பார்க்கிறேன் என்றால், 


ஒன்று - ஹிட்டன்பர்க் அறிக்கையினால் அதானியின் பங்குகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள் அதை விற்று விட்டார்கள்.


இரண்டு - அதிக லாபம் பார்க்க வேண்டி (அ) அதானியை கவுக்க வேண்டி அவரின்  எதிரிகள் (பியர் கேங் ஐ) வைத்து செய்த சதி.


ஆனால், அதானியின் எதிரிகள் அவரை கவுக்க சதி செய்து பங்குகளின் விலை பல மடங்கு குறைந்ததாக தெரியவில்லை. அதனால் 90% முதலாவதாக சொன்ன விசயம் தான் சரியாக இருக்க வேண்டும். 


2022 - நாடெங்கும் அதானி அலை அடிக்குது. காலகாலமா இருந்த ஆண்ட பரம்பர முகேஷ் அம்பானியவே சொத்து மதிப்புல ஓவர்டேக் செய்கிறார் அதானி.


ஒரு ஊர்ல தின்னைல கடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் கூட ஆகும். ஆனா பணக்காரன் ஆக முடியுமா? அப்படியே ஆயிட்டா, அவன் நேர்மையாக பணக்காரன் ஆகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கா?


அப்படி செல்வந்தர் ஆன அண்ணன் தான் அதானி. அதானியின் கம்பெனிகளின் பைனான்சியல் இன்டிக்கேட்டர்களைப் பார்க்கும்போது எல்லாவற்றிலும், revenue மற்றும் valuation  தான் ஏறியிருக்கிறதே தவிர, அவரின் நிகர லாபம் (net profit) பெரிதளவில் ஏறவில்லை. ஆனாலும் தன் நிறுவனத்திற்கு வந்த இன்வெஸ்ட்மென்ட்களை வைத்து கம்பெனியின் வேல்யூவேஷனை உயரத்திக்காட்டியிருக்கார்.  இது எல்லா நிறுவனங்களும் செய்யும் விஷயம் தான். ஆனால் அதானிக்கு கடன் கொடுத்தோர் பட்டியலில் அதிகமாக உள்ளது நம் தேசியமய வங்கிகள் தாம் என்பது தான் இங்கு வேடிக்கையான விசயம். இந்தக் கடன் எல்லாம் வாராக்கடனாகி, நீரவ், மல்லையா பட்டியலில் அதானி வருவாரா என்பது சொல்ல முடியாத விஷயம். ஆனால் போகிற நிலைமையைப் பார்த்தால் அப்படி வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. அதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இதில் அதானி பங்குகளின் விலை இறங்கியதற்கு இரண்டாவது காரணமாக ( அவரின் எதிரிகளால்) நடந்தது என்றால், இந்தியாவில் அப்படி நடப்பது இது முதன்முறை அல்ல.


ஏற்கனவே ஒரு நபருக்கு நடந்து இருக்கிறது. தற்போது அதானி இருக்கும் நிலையை விட பலமடங்கு அப்போது அவர் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். 


அவர் வேறும் யாரும் அல்ல. துருபாய் அம்பானி தான்!


எனக்கு பொருளாதாரத்தின் மீது ஈர்ப்பு வந்ததற்கு காரணமே குரு மாதிரியான படங்கள் தான். உண்மையாலுமே பத்து பேர தூக்கி போட்டு ஒரு ஆளு அடிச்சா அந்த மாதிரியான படங்கள தூக்கி வச்சு கொண்டாடும் கூட்டம் மத்தியில எனக்கு குரு மாதிரியான படங்கள் தான் உண்மையாலுமே ஹீரோயிட்டாக தெரிந்தது. அந்த படத்தில் ஒரு சண்டை காட்சி இல்ல. படம் முழுக்க உண்மைனும் சொல்ல முடியாது. அதே சமயம் படம் முழுக்க கு(து)ருபாய நல்லவனாகவும் காட்டவில்லை. குரு படம் வந்து இருபது ஆண்டுகள் கழித்து ஹர்ஷத் மேத்தாவின் ஸ்காம் சீரியஸ் வெளிவரும் போது தான் நாம் கட்டிவைத்திருக்கும் ஹீரோ பிம்பம் உடைந்து, உண்மையில் ஹீரோயிஸம் என்றால் என்ன என்பதை வெகுஜனம் உணர ஆரமிக்கிறது. பல பேர் ஸ்காம் பார்ப்பதற்காக பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். பலர் ஸ்காம் பார்த்த பின் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஒரு ஆய்வில், கோவிட் காலத்தில் பெரும்பாலான மில்லினியல்ஸ் என்று சொல்லப்படும் 90s kids பங்கு சந்தையில் டிமேட் அக்கவுண்ட் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக ஸ்காம் 92 சீரியஸை நான் பார்க்கிறேன். 


 சரி..வலவலனு போகாம மேட்டர்குள்ள போவோம். பொருளாதார கட்டுரை ஆதலால் கொஞ்சம் பொறுமையாக தான் போக வேண்டும். அதனால கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க.


இந்தியால தற்போது இரண்டு ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் இருக்கிறது. ஒன்று பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE)  மற்றொன்று National Stock Exchange (NSE). இதற்கு நடுவில் பல ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்கள் இருந்தன. ஆனால் அவையனைத்தையும் முடிவிட்டன. இதில் NSE ஹர்ஷத் மேத்தா வழக்கிற்கு பின் ஆரம்பிக்கப்பட்டது. BSE ஆங்கிலேய காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டது. அதனால் ஒரு நிறுவனம் மக்களிடையே பணம் திரட்ட வேண்டும் என்றால்,  அந்த காலத்தில் BSE ஐ தான் அணுகுவார்கள். நம் துருபாயும் BSE யை தான் தேடி போனார்.  Reliance Industries Ltd. 1977 இல் பங்கு சந்தையில் இறங்கியது. ஒரு ஷேர் பத்து ரூபாய் என மொத்தம் 2.8 மில்லியன் ஷேரை ஷேர் மார்கெட்டில் இறக்கியது. அப்போது பத்து ரூபாய் என்றால் இப்போது இருநூறு ரூபாய் என்று இருக்கும். ஒரு வருடத்திலேயே ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் ₹10 இல் இருந்து ₹50 ரூபாயை எட்டியது. இந்த தொகை சின்னதாக தெரியலாம். ஆனால் ஒரு வருடத்தில் ஐந்து மடங்கு அளவிற்கு பங்குகள் ஏறியிருக்கிறதென்றால் நினைத்துப் பாருங்கள். அதே பங்குகள் 1980 இல் ₹104  ரூபாயாகவும், 1983 இல் ₹186 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த அசுர வேக வளர்ச்சி பலருக்கு பல சந்தேகங்களை கொடுத்தது. அதே சமயம் பல போட்டியாளர்களுக்கு பொறாமையினையும் கொடுத்தது. 


குரு படத்தில் ஒரு காட்சி இருக்கும். மாதவன் குருவின் செயலை பற்றி செய்தி தாளில் எழுதியவுடன், சட்டென பங்குகள் சரிவை சந்திக்கும். முதலீட்டாளர்கள் (மக்கள்) எல்லாம் தங்கள் ஷேர் சர்டிபிகேட்'களை குருவிடம் காண்பித்து சண்டை போடுவது மாதிரியான காட்சிகள் இருக்கும். அதே போல் தான் தற்போது ஹிட்டன்பர்க் அறிக்கை அதானியை கவிழ்த்து விட்டிருக்கிறது.


நாம கதைக்கு வருவோம். இப்படி வீறு நடை போட்ட அம்பானியின் கம்பெனியை கவிழ்க்க ஒரு கூட்டம் பங்கு சந்தையில் களம் இறங்கியது. அது தான் "The Bear Cartel". கதையைப் பற்றி பார்க்குமுன் Bear cartel ஐ குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


பங்கு சந்தையில் இருவிதமான மக்கள் உள்ளனர். Bulls and Bears. நான் ₹10 ரூபாய்க்கு ஒரு பங்கை வாங்குகிறேன். அது ₹20 ஏறினால், அதை விற்று விடுவேன். எனக்கு ₹10 ரூபாய் லாபம். கம்பெனிக்கும் பங்கு விலை உயர்ந்ததால் லாபம். பங்கு விலை உயரும் என்று optimistic mindset உடையவர்கள் தான் bulls. அதே பங்கு விலை இறங்கும் என்ற pessimistic mind set உடையவர்கள் தான் bears. கம்பெனி நஷ்டமானால் கரடிகளுக்கு கொண்டாட்டம். இந்த bear mind set உடையவர்கள் எல்லாம் ஒரு சேர இணைந்து மார்கெட்டை manipulate செய்வார்கள். அதை தான் bear cartel என்கிறோம்.


 இப்போது இந்த bear cartel துருபாயின் பங்குகள் மீது கண்ணு வைத்துவிட்டனர். ரிலையன்ஸின் பங்குகளை சரிவடைய செய்து, லாபம் பார்க்கும் நோக்கில் சந்தையில் களம் இறங்கினர். அந்த சமயத்தில் ரிலையன்ஸ் பங்குகளை பல நடுத்தர மக்கள் வைத்திருந்தார்கள். பங்குகளின் விலை இறங்கினால், லாபம் பார்ப்பது இந்த bear cartel மட்டும்தான். ஆனால் நஷ்டத்தை சந்திக்க நேரிடுவது அம்பானியோடு சேர்த்து, அவரை நம்பியுள்ள லட்ச குடும்பங்கள். 


1982 - மார்ச் 18. Bear cartel தன் வேலையை துவங்க ஆரம்பித்தது. கடகடவென ரிலையன்ஸ் பங்குகளை மார்கெட் இல் விற்க ஆரம்பித்தது. ரிலையன்ஸ் பங்குகள் விற்று கொண்டே இருந்தன. அரை மணி நேரத்தில் 3 லட்சத்து ஐம்பதாயிரம் பங்குகள் விற்று தீர்ந்தது. வெறும் அரை நாளில் ரிலையன்ஸின் பங்கு விலை ₹131 இலிருந்து ₹121 ஆக சரிந்தது. 


இப்போது ஒரு சில பங்கு சந்தை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வோம். இப்போ இன்னைக்கு நீங்க ஒரு கம்பெனியோட ஒரு பங்கை வாங்குறிங்கனா, அந்த பங்கு உங்களுக்கு T+2 நாளில் வந்துவிடும். அதாவது Trading day + 2 days. திங்ககிழமை  டாடா மோட்டார்ஸ் ஷேர் ஆர்டர் போடுறிங்கனா, புதன்கிழமை உங்க அக்கவுண்டுக்கு டாடாவின் பங்குகள் வந்துவிடும். ஆனா அதுக்குள்ள நீங்க அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். அப்போது இப்படி இல்லை. ஒரு பங்க நீங்க இப்போ ஆர்டர் போட்டா அது உங்களுக்கு ஒரு மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை தான் கிடைக்கும். அதற்குள் நீங்கள் செட்டில்மென்ட் எல்லாம் முடித்துவிட வேண்டும். இப்போது உள்ளது போல ஆன்லைன் முறையும் அப்போது அல்ல. In case, ஒரு வேளை அந்த second friday இன் போது உங்களிடம் shares இல்லையென்றால் நீங்கள் அதற்கான தனி அபாராத தொகையை செலுத்த வேண்டும். அதற்கு பெயர் தான் உந்தா பத்லா. கொஞ்சம் குழப்பமாக இருக்கும். கதைக்கு போனவுடன் புரிந்து விடும்.


சரி. அம்பானியோட shares எல்லாத்தையும் bear cartel வித்தாங்க. அப்போ, bear cartel ஏற்கனவே அம்பானியோட பங்குகளை வாங்கி வச்சிருந்தாங்களா? 


அப்படினு கேட்டா, இல்ல!


அப்போ எப்படி இல்லாத ஒரு ஷேர்ஸை விக்க முடியும்? 


ஹூம். முடியும். அதற்கு பேரு தான் short selling. அதை தான் இந்த bear gang பண்ணாங்க.


அவர்களிடம் இல்லாத ஒரு ஷேரை வாங்கி, அதன் விலையை இறக்கி, விலை இறங்கியவுடன் அதை விற்று  லாபம் பார்ப்பார்கள். இந்த இடத்தில் உங்களுக்கு தெளிவாக குழம்ப வேண்டும். இப்போது மீண்டும் ஒரு  முறை குழப்பினால், தெளிவாகி விடும்.


அதாவது, ஒரு ரிலையன்ஸ் ஷேர் உங்ககிட்ட இல்ல. அதே சமயம் நீங்க ஒரு bear ஆக trading பண்ணனும் னு ஆசை படுறிங்க. அதிக விலைக்கு விற்று, மீண்டும் குறைந்த விலைக்கு வாங்க ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு தான் sebi ஒரு விதிமுறை வைத்துள்ளது. அதற்கு பெயர் தான் MIS (Marginal Intraday Settlement). 


ஒரு டாடா மோட்டார்ஸ் பங்கு ₹300 இல் இருக்கிறது. கண்டிப்பாக அது இன்று ₹200 ஐ தொடும் என்று உறுதியாக நம்புறீங்க. இப்போ நீங்க ₹300 ரூபாய் ஷேரை வித்து, அதை மீண்டும் ₹200 ரூபாய்க்கு வாங்கினால், உங்களது லாபம் எவ்வளவு? 

₹100 ரூபாய்.


எல்லாம் ஓகே. ஆனா என்கிட்ட இல்லாத ஷேரை எப்படி நான் விக்க முடியும்? னு கேப்பிங்க.


அத பத்தி Sebi யே கண்டுக்கிறதில்ல. நீங்க ஏன் worry பண்றிங்க! 


ஆனாலும் இதுல லாஜிக் உதைக்குதே பாஸூ னு தோணும். இப்போது லாஜிக்கை உடைக்கிறேன்.


நீங்க இல்லாத டாடா மோட்டார்ஸ் ஷேரை யாருக்கோ ₹300 ரூபாய்க்கு வித்துட்டிங்க. இங்க நீங்க seller. Buyer உங்கிட்ட இருந்து share ஐ இன்னும் வாங்கல. ஆனா பணம் கொடுத்துட்டான். இப்போ நீங்க அன்னைக்குள்ள buyer கிட்ட share அ ஒப்படைச்சே ஆகனும். இல்லாத share எங்க போய் வாங்குவிங்க? மார்கெட் ல. அன்னைக்கு சாயங்காலம் மார்கெட் மூடுறதுக்குள்ள share அ வாங்கி நீங்க buyer கிட்ட ஒப்படைச்சே ஆகணும். ஏன்னா, அதுக்கு தானே வாங்கிருக்கிங்க ₹300 ரூபா துட்டு. உங்க கணிப்புபடியே share இன் விலை ₹200 கிட்ட இறங்குது. டக்கனு அத ₹200 ரூபாய்க்கு வாங்கி buyer கிட்ட கொடுக்குறிங்க. .


இப்போ உங்க லாபம் எவ்ளோ? ₹100 ரூபாய். கணக்கு சரியா வரும். இதே நீங்க எதிர்பார்த்த மாதிரி பங்கோட விலை ₹200 க்கு போகாம ₹400 க்கு போச்சு னா?  


உங்களுக்கு ₹100 ரூபாய் நட்டம். Buyer க்கு ₹100 ரூபாய் profit. ஏன்னா அவன் உங்க கிட்ட ₹300 ரூபாய்க்கு வாங்குவான். பங்கு விலை ₹400 க்கு போச்சுனா, அத அந்த ரேட்டுக்கு வித்துட்டு லாபம் பாத்துப்பான். அவன் bull. நீங்க bear.


சரி. இப்போ கதைக்குள்ள வருவோம். அம்பானியோட பங்குகளை எல்லாம் இப்படி தான் இந்த bear cartel விற்றுக்கொண்டிருந்தது. அவர்கள் கணிப்பு, இப்போ ₹131 ரூபாய்க்கு வித்துருக்கோம். பின்னாடி ₹121 ரூபாய்க்கு வாங்கிக்கலாம் என்பது தான். 


 எவ்ளோ shares வித்துருங்காங்க?


கிட்டத்தட்ட 3 லட்சம் 50 ஆயிரம். ஒரு share ku 10 ரூபாய் லாபம் னா. 3,50,000 x 10 = 35, 00,000 வரை லாபம். அதுவும் அந்க காலத்துல. விலை இன்னும் இறங்குச்சுனா இன்னும் லாபம்.


ஆனா, அந்த இடத்துல யாருமே எதிர்பார்க்காத சம்பவம் ஒன்னு நடந்துச்சு. திடீர்னு ரிலையன்ஸோட பங்குகள் அனைத்தும் ஏற ஆரம்பிச்சிது. 


Bear cartel எல்லாரும், "ஏய் எப்புற்றா" னு பாத்தாங்க. விலை ஏறி ஏறி ஆரம்ப விலை ₹131 க்கே வந்துச்சு. அதோட விட்டுச்சா னு பாத்தா அதான் இல்ல. இன்னும் ஏறுது ஏறுது ஏறிகிட்டே இருக்கு.


இப்போ bear cartel மட்டுமில்ல, whole இந்தியாவுமே சொல்லுச்சு, " Eppuuuraaa".


இது எப்படி சாத்தியமாச்சு. அம்பானிக்கும் அரசுக்கும் தொடர்பு இருந்துச்சா? , அம்பானிக்கும் Sebi க்கும் ஏதாச்சு உடன்படிக்கை நடந்துச்சா? 


இல்லை! 


இந்த இடத்தில் தான் துருபாய் எனும் பிஸினஸ் மேக்னேட்டை குறைவாக எடை போட்டுவிட்டார்கள்.


பங்கு விழுந்த அதே நேரத்தில், உடனடியாக பக்கத்திலிருந்த நாடுகளிலுள்ள பெரிய முதலீட்டாளர்களை அழைத்து , Friends of Reliance எனும் ஒரு நிறுவனம் மாதிரியான அமைப்பை உருவாக்கி, மலமலவென தன் கம்பெனி shares ஐ, தான் உருவாக்கிய கம்பெனியை வைத்தே ஆர்டர் செய்தார். கட கட கட வென buying order பறக்கிறது. இதெல்லாம் எதுவும் புரியாமல் மக்கள் திக்குமுக்காடினர். என்னடா இவ்ளோ வேகமா இறங்குது, திடீர்னு இவ்ளோ வேகமா ஏறுது னு யாருக்குமே ஒன்னும் புரியல.


₹131 ரூபாய்  ஷேரை ₹121 ரூபாய்க்கு கொண்டு வந்து bear cartel லாபம் பார்க்க நினைத்தார்கள். ஆனால் அதை அம்பானி கடைசியில் ₹201 ரூபாய் க்கு கொண்டு வந்து நிறுத்தினார்.


"எதிர்ல வரவனோட பொருள புடுங்கி அவனையே போடணும் டா" என்று பாணியை அம்பானி கடைபிடித்தார்.


இப்போ இவ்வளவு பணம் கொடுத்து share ஐ settle செய்ய bear இடம் பணம் இல்லை. வெள்ளிக்கிழமை வந்தாகிவிட்டது, கால அவகாசம் கேட்டார்கள்.


"வரட்டும் அவன்.. இதுக்கு தான் நா காத்துகினுகிடந்தேன். என்ன கதி ஆவறன் பாரு." 


ஒரு ஷேருக்கு உந்தா பத்லா ₹25 கொடுக்கனும் ஆர்டர் போட்டாரு அம்பானி. அப்போ எத்தனை ஷேர். எத்தனை பைசா. அம்பானிக்கு எவ்வளவு லாபம். நினைச்சு பாத்தாலே தலையெல்லாம் சுத்துது.


அடுத்த ரெண்டு நாளில் கிட்டத்தட்ட 10 கோடி அளவில் ஆர்டர் பண்ண ஷேர் வராததால் மார்கெட்டே ஸ்தம்பித்து நின்றது. இரண்டு நாட்கள் ஷேர் மார்கெடே க்ளோஸ். அடுத்த மூன்று நாட்கள் வரை வெறும் ரிலையன்ஸ் ஷேர் மட்டுமே மார்கெடில் ட்ரேட் ஆகியது.


இன்னைக்கு அதானியோட பங்குகள் சரிந்து வருவது அன்றைய அம்பானியோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. அதே சமயம் அம்பானி போல ஏதாவது மாய மந்திரம் செய்து அதானி மீண்டு வந்திருவாரா என்றால், நிச்சயம் முடியாது. ஏனென்றால் நான் முன்னாடியே சொன்னேனே, தின்னை - கலியாணம் - பணக்காரன்.


இன்னும் ஓப்பானாக சொல்ல வேண்டுமென்றால், அதானியால் ஒரு போதும் அம்பானி ஆகவே முடியாது.


ஏன்னா....


இந்த துணியும் வளர்ச்சியும் கடுமையான உழைப்பால வந்தது.


நீ குருநாத் கூட மோதனும் னா கடுமையா உழைக்கனும்.


குருநாத் கூட சண்ட போட நீ குருநாத் ஆகணும்.


ஆனா...


குருநாத் இங்க ஒருத்தன் தான்! Thanks Vishnu)


PC ஜோதிஜி திருப்பூர்

Friday, January 27, 2023

சைவமும் அசைவமும்..

 சைவம்! அசைவம்!! என்ன  வேறுபாடு?


தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..


தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...


தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை. 


தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். 


செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்? 


தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்.. 


நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும். 


ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை! 


எங்கே தவறு நடந்தது? 


நாக்கு தான். 


வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை! 


மாமிசம் மனித உணவா?இனி ஆராய்ச்சி

செய்வோம்.


இரு ஜீவராசிகளுக்கும் பற்களின்

அமைப்பு


சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை

போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக

பற்கள் உள்ளன.


எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன?

சைவ ஜீவராசிகள் அனைத்தும்

மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி

தான் குடிக்கின்றன.


அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக்

குடிக்கின்றன.


கால் விரல்கள்?

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள்

மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம்

தட்டையாகவும் இருக்கும்.


அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள்

நீளமாகவும், கூர்மையான

நகங்களுடனும் இருக்கும்.


குடல் அமைப்பு?


சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப்

போன்றே பதினைந்து அடி வரை

நீளமான குடலாக உள்ளது. காரணம்,

சைவ சாப்பாட்டில் நச்சுத் தன்மை

குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும்

இருப்பதால் உணவானது குடலில் சற்று

அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு. 


அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ

உணவில் நச்சுதன்மை அதிகம்

உள்ளதால் மிக குறைவான நேரத்தில்

குடலை விட்டு வெளியேறு ஏற்றாற்போல்

ஐந்து அடிகள் மட்டுமே குடலின் நீளம்

உள்ளது. 


சமநிலையான உடல் உஷ்ணம் 

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப்

போன்றே உடலில் வெப்பம்

அதிகமானால் தாகத்தை உண்டாக்கி

அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை

என்ற செயலின் மூலமாக உடலை

குளிர்விக்கிறது. 


அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு

இல்லை. ஆதலால் தனது நாக்கினை

தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை

குளிர்விக்கிறது.


மலத்தின் தன்மை.

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப்

(சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே

மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம்

துர்நாற்றம் வீசாது. 


அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம்

சாப்பிடும் மனிதன் உட்பட) மலம்

கழிப்பதில் சிரமமும், மலம் அதிக

துர்நாற்றத்துடனும் இருக்கும்.


"உடற்கூறு ஆராய்ந்தோம். இனி

மனநிலை ஆராயலாம்."


வாழும் முறை 

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக

அதாவது கூட்டம் கூட்டமாக வாழும்.

மனிதனும் அவ்வாறே வாழ

ஆசைப்படுகிறான்.


அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக

வாழும் இயல்புடையது. தன்

எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த

இன்னொரு விலங்கினை

அனுமதிக்காது.

(இன்றைய மனிதனின் நிலையும்

இதுதான்.)


இயல்பு 

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம்

சாந்தமாகவும், அமைதியாகவும்

இருக்கும்.


அசைவ ஜீவராசிகள் வேகமாகவும்,

ஆக்ரோசமாகவும் இருக்கும்.


சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான

வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்)

ஈடுபடுத்த முடியும். அசைவ

ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள்

எதுவும் செய்ய இயலாது.


மன இறுக்கம்


அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக

மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்? 

ஒவ்வாருவரின் உடலிலும்

அபாயகரமான சமயங்களில் தப்பித்துக்

கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க

சக்தியை தர ) சக்தி வாய்ந்த

ஹார்மோன்கள் அட்ரீனல்

சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில்

கலக்கும்.


இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும்

வெட்டப்படும் போது அதிக அளவில்

சுரந்து அதன் இரத்தத்திலும்,

சதைகளிலும் கலந்து இருக்கும். 

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன்

சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ

அபாயத்தில் உள்ளது போன்ற

உணர்வைப் பெறுகிறான். 

இதுவே மன இறுக்கமாக

உருவெடுக்கிறது.


மனிதன் ஆறாவது அறிவை சற்றும்

பயன்படுத்தாது அதிக சக்தியும், பலமும்

வேண்டியே தான் அசைவம்

சாப்பிடுவதாக எண்ணுகிறான். 

சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும்

உள்ளது.சைவம் சாப்பிடும் யானைக்கு

பலத்தில் என்ன குறை? 


உதாரணமாக சோயா பீன்ஸில்

நாற்பது சதவீதம் சுத்தமான புரோட்டீன்

உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதை விட

இரு மடங்கும், முட்டையில் உள்ளதை விட

நான்கு மடங்கும் அதிகமாகும்


மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் அறிய

வேண்டியது. இயற்கையின் அமைப்பு படி

மனிதன் உட்கொள்ள வேண்டியது

சைவமே ! எனவே, மனிதன்

ஆரோக்கியமாக, அமைதியாக,

நிம்மதியாக, பொறுமையாக,

பலசாலியாக, ஒற்றுமையுடனும், கோபம்

இல்லாமல்,மன இறுக்கம், மலச்சிக்கல்,

நோய் இல்லாமலும் வாழ

ஆசைப்படுவாான் எனில் சைவமே

உட்கொள்வது காலச் சிறந்தது.


இது உண்மைதானா என்று யோசித்துக் கொண்டே இருக்க, திருவள்ளுவர் எனக்கு விடை கொடுத்தார்.


*தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்*.


பொருள்:தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.


மனிதன் நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணல, என்ன மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறாருன்னு இனிமேல் கேட்க மாட்டான்.

(பகிர்வு)

Tuesday, January 24, 2023

One rupee a day..keep enemies away

 Another good decision by the Modi government on the suggestion of Superstar Akshay Kumar :* ........

* Daily payment of only one rupee, that too for the Indian Army. In the cabinet meeting yesterday, the Modi government opened a bank account for the modernity of the Indian Army and for the soldiers who are injured or martyred in the war zone. In which every Indian can donate any amount on his own free will. Which starts from Rs.1 and is unlimited.*


* This money will also be used to buy weapons for the army and paramilitary forces. Taking a final decision on today's burning situation on Mann Ki Baat and suggestions of people on Facebook, Twitter, WhatsApp, Modi government has opened Army Welfare Fund Battle Casualty Fund account in New Delhi, *Canara Bank.*


* This is the master stroke of Film Star Akshay Kumar. From where no one can stop India from becoming a super power. If even 70% of India's 130 crore population puts only one rupee daily in this fund, then that one rupee will be 100 crores in a day. 3000 crores in 30 days and 36000 crores in a year. 36,000 crores is not even the annual defense budget of Pakistan. We spend 100 or 1000 rupees daily in useless work, but if we give one rupee for the army, India will definitely become a super power.


* Your money will be directly deposited in the Defense Ministry's Army Assistance and War Casualty Fund. Which will be useful for military material and army personnel.


*That's why help the army directly by joining this campaign of Modiji.*

  Nothing will happen by doing hi hi kar Pakistan, blocking roads and making rhetoric. Implement the thinking of Modi and the people of the country and strengthen the army of our country. So that countries like Pakistan and China can be told their status without the help of any other country. Bank details are given below.


*Bank Details:*


*CANARA BANK*

*A/C NAME: ARMY WELFARE FUND BATTLE CASUALTIES,*

*A/C NO:* *90552010165915*

*IFSC CODE:* *CNRB0000267*

*SOUTH EXTENSION BRANCH,NEW DELHI.*


👉 * Spread this message everywhere so that all 130 crore Indians come to know about their duties. All group and personal no. Also send to.*

*🙏🌹Jai Hind, Vande Mataram 🌹🙏 **Jai Jai Shri Ram*🙏🚩

Wednesday, January 18, 2023

எழுதும் எல்லாம் கவியாக..

 தன்னுள் அடைக்கலமான

ஜீவத் துளியினை

உயிரெனக் காக்கும்

தாயென மாறிப் போனால்....


கூட்டில் உயிரைவைத்து

குஞ்சுகளுக்கென

பலகாதம் கடக்கும்

பறவையென மாறிப்போனால்...


இன்னும் இன்னும் என

மிக மிக நெருங்கி

ஓருடலாகத் துடிக்கும்

காதலர்கள் ஆகிப் போனால்..


விட்டு விலகி

விடுதலையாகி

தாமரை இலைத் துளிநீர்

தன்மையடைந்து போனால்..


வேஷம் முற்றும் கலைத்து

ஜனத்திரளில்

இயல்பாய் கலக்கும்

மன்னனாகிப் போனால்..


தானே யாவும்

தானே பிரம்மன் என்னும்

தன்னம்பிக்கை மிக்க

தனியனாகிப் போனால்...


மொத்தத்தில்

தன்னிலை விடுத்து

கூடுவிட்டு கூடுபாயும்

வித்தையறிந்து போனால்..


காணும் யாவும்

கருவாகிப் போகவும்

எழுதும் எல்லாம்

கவியாகிப் போகவும்

நிச்சயம் சாத்தியம் தானே ?

அழுது கொண்டிருப்பதற்குப் பதிலாக..

 புரியாது என புலம்பித் திரிந்ததைவிட

புரிந்து கொள்ள முயன்றது

கொஞ்சம் புரியத்தான் வைத்தது


கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட

தேட முயன்றதில்

கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது


முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட

அடைய முயன்றது

கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது


மாறாது என மறுகித் திரிந்ததை விட

மாற்ற முயன்றது

கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது


கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட

நமபத் துவங்கியதில்

கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது


என்றும்

பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து

அழுது கொண்டிருந்ததை விட


நாளைய மழையை எதிர்பார்த்து

உழுது வைத்தது

நிச்சயம்  பலன் தரத்தான் செய்தது..

Sunday, January 15, 2023

Why sankaranthi differ one day

 This year Makar Sankranti is on sunday ,the 15th of January. Why is it not on the 14th? What has changed the date or pushed it forward to the next day?

 We need to know a minor time calculation process to understand why it is so.


Normally, Makar Sankranti or Pongal Festival should fall on 14th of January every year. 

Most of us, since childhood, have been observing it on the 14th of January every year. 


In fact, from the year 1935 onwards, till 2007, Pongal was falling on the 14th January every year.


 (Prior to that, between 1862 and 1934, it was falling on the 13th January every year). 

But from 2008 onwards, Pongal has been falling on 15th of January every year. Till the Year 2080, it will fall on 15th of January only every year. From the year 2081 onwards, it will fall on 16th of January every year for the next 72 years, that is, till 2153.


As per the Indian Almanac's Time calculation, Sun enters the Zodiac sign of Makara Raasi (from Dhanur Raasi), 20 minutes late every year, as compared to the English time or the World Time. 

Thus, once in 3 years, Sun enters the Makar Raasi late by one hour. That means, in every cycle of 72 years, Sun enters Makar Raasi late by one day.


(Also know that Indian Almanac Time is calculated so precisely that our Pundits can accurately tell you today when exactly solar or lunar eclipse will take place after 5,000 years. That also means that the universe works strictly as per precision timings which is why we can confidently calculate today when exactly the eclipse will occur after 5,000 years.)

Saturday, January 14, 2023

பொங்கலின் சிறப்பறிவோம்..

 விதைத்த  ஒன்றை

நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது 

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம் 
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( நண்பர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )


Friday, January 13, 2023

கேள்விகளால் ஒரு வேள்வி

 நதியினுக்கு கரையிரண்டு உறவா பகையா ?

நாவினுக்கு பல்வரிசை உறவா பகையா ?
விழியினுக்கு இமையிரண்டு உறவா பகையா
விதியதற்கு மதியதுவே உறவா பகையா ?
மொழியினுக்கு சைகையது உறவா பகையா ?
கவியதற்கு இலக்கணமே உறவா பகையா ?
புரியாது புலம்புகிறேன் சொல்வாய் நண்பா

மனதிற்கு மறதியது அழகா குறையா ?
மங்கையர்க்கு இரக்ககுணம் அழகா குறையா ?
இனமதற்கு  தனித்தகுணம் அழகா குறையா ?
இயற்கைக்கு ஈகைக்குணம் அழகா குறையா ?
இளமைக்கு வேகமது அழகா குறையா ?
முதுமைக்கு நிதானமது அழகா குறையா ?
புலமைக்கு மிகைப்படுத்தல் அழகா குறையா ?
புரியாது தவிக்கின்றேன் புகல்வாய் நண்பா

அன்புக்கு அடிபணிதல் சரியா தவறா ?
அதிகாரம் தனைமறுத்தல் சரியா தவறா ?
பண்புக்கு துணைபோதல் சரியா தவறா ?
பகட்டுக்கு பகையாதல் சரியா தவறா ?
இன்பத்தில் மயங்காமை சரியா தவறா ?
துன்பத்தில் கலங்காமை சரியா தவறா ?
சந்தமதே இன்கவிதை சரியா தவறா ?
நல்லதொரு விளக்கமதை நவில்வாய் நண்பா?

Thursday, January 12, 2023

சிந்திப்போமா...

 தமிழகத்தில் வளரும் மூதேவிகளும் அவர்களைப் பெற்ற பெரும் மூதேவிகளுக்கும்


நேற்று வேலையிலிருந்து வந்து வீட்டில் தொலைக்காட்சியை ஆன் செய்தால்  அஜீத்தின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் பொங்கல் வெளியிடான அஜித்தின் படம் பார்க்கச் செல்கையில் ஒரு லாரி மீது ஏறி ஆட்டம் போட்டு கீழே விழுந்து இறந்து போய்விட்டான்.. உடனே வழக்கம் போல ஊடகங்கள் அதனைக் கவர் செய்து அவர் ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டது மாதிரி செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அந்த பையனின் குடும்பத்தினரும்  நண்பர்களும் இரக்கம் வருவது மாதிரி பேசுகிறார்கள்.


இதில் அந்த பையனின் அம்மா நடிகனின் பின்னால் போகாதீர்கள் அவர்களாக வந்து உதவப் போகிறார்கள் என்று ஊடகங்களிடம் சொல்லி அழுகிறார். அட கூறு கெட்டவளே இதை ஊடகத்திடம் சொல்லுவதற்குப் பதில் உன் புள்ளைக்கு சொல்லி வளர்த்து இருந்தால் இன்று உன் புள்ளையாவது உயிரோடு இருந்திருப்பான். ஒருவேளை அப்படிச் சொல்லி வளர்த்து இருந்தாலும் அதன் பின் உன் பையன் அதைக் கேட்காமல் கூறு கெட்டு வளர்ந்து இருந்தால் அவன் இருப்பதோடு போய்ச் சேர்ந்ததே நலம் என்று சந்தோஷமாக இருக்கவேண்டும்


 கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த  இந்த பையன்தான் அந்த குடும்பத்திற்கு ஆதாரமாம். அப்படி இருந்தும் தனது தகுதிக்கும் மீறிக் கஷ்டப்பட்டு  உழைத்து  சம்பாதித்த ஊதியத்தை, 2,500 ரூபாய் கொடுத்துப்  படத்தைப் பார்க்க டிக்கெட் வாங்கியிருக்கிறான்  அதுவே மிகத் தவறு அதோடு நிறுத்தாமல்  படம் பார்க்கப் போனால் படத்தைத்தானே பார்க்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்யாமல் வழியில் வந்த லாரியின் மீது மற்றவர்களுடன் சேர்ந்து ஏறி ஆட்டம் போட்டு  நிலை தடுமாறி கீழே விழுந்து முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டுச் செத்துப் போய்விட்டான். இப்படித்தான் படம் பார்க்க வேண்டும் என்று எந்த நடிகரும் சொல்லவில்லை. இவன் களாக இப்படிக் கூறு கெட்டு நடந்து கொண்டு கடைசியில் நடிகர்களால் இந்த நாடே கெட்டுப் போய்விட்டது என்று அவர்கள் மீது பழி சொல்லுவது அவர்கள் வந்து இப்படிக் கூறு கெட்ட ரசிகர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.


அதிலும் அஜித் மற்ற நடிகர்கள் போலச் சமுகத்திற்குக் கருத்து சொல்லுரேன் மயிறு சொல்லுரேன் என்று ரஜினிகாந்த் மாதிரி இல்லாமல் வந்தோமோ படத்தில் நடித்தோமா அதற்கான ஊதியத்தை வாங்கினோமா தன் குடும்பத்தோடு நேரம் செலவழித்தோமா தனது பொழுது போக்கான கார் பைக் ரேஸில் கலந்து கொண்டோமா என்று அமைதியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார். அவர் எந்த கட்சியையும் கட்சி தலைமையும் ஆதரித்தோ எதிர்த்தோ பேசுவதில்லை போலியான சமுக அக்கறை உள்ளவர்கள் போலவும் நடிப்பது இல்லை தன்னால் முடிந்த உதவிகளை  எந்த வித சத்தமும் ஆர்ப்பாட்டமும்  விளம்பரமும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்.


அப்படிப்பட்டவர் இந்த பையன் தன் ரசிகனாக இருந்ததால் அவரின் குடும்பத்திற்கு உதவ வேண்டுமாம் அடேய் கூறு கெட்ட பயல்களா போய் வேலை மயிரை போய் பாருங்களாடா...


சமுகமும், எந்த அமைப்பும் , எந்த நடிகரும் இது போலக் கஷ்டத்திற்கு உள்ளாகும் குடும்பத்திற்கு உதவவே கூடாது அதுதான் இந்த சமுகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடம்....அப்படி இல்லாமல் உதவ  முன் வந்தால் அது ஒரு மோசமான முன் உதாரணமாகத்தான் இருக்கும் .அந்த குடும்பம் அந்த பையன் இருந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் காரணம் இப்படிப் பொறுப்பில்லாமல் 2500 ரூ டிக்கெட் வாங்கும் அந்த பிள்ளை நாளை பொறுப்புடனும் கஷ்டத்தில் இருக்கும் தன் குடும்பத்தைப் பெற்றோர்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக நினைக்கவே மாட்டான் இந்த பையன் 2500 ரு கொடுத்து முதல் ஷோ பார்க்கவேண்டும் என்று டிக்கெட் எடுப்பவன்  வரும் காலத்தில் முதல் ஷோ முதல் டிக்கெட் எனது டிக்கெட்டாகவே இருக்க வேண்டும் என்று 10000 ம் கொடுத்து முதல் டிக்கெட்டை வாங்க வேண்டும்தான் என்று நினைப்பான் அதைத்தான் தன் சாதனையாகக் கருதுவான் அப்படிப்பட்ட இந்த பையன் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன?


இழப்பு இழப்புதான் அதற்காக நாம் வருந்த வேண்டுமே தவிர அந்த இழப்பை வைத்து மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற்று அவர்களின் உதவிக்  கொண்டு  வாழ் முயற்சிக்க கூடாது


இந்த பையன் மட்டுமல்லாமல் முதல் ஷோ  அல்லது  முதல் வாரத்தில் படம் பார்த்துவிட வேண்டும் என்று அப்பத்தான் பெருமை என்று குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ செல்லும்  படித்த  இந்திய வாழ் மற்றும் மேலை நாடுகளில் வாழும் இந்திய அனைத்து மக்களுக்கும் இந்த பையனுக்கும் வித்தியாசங்கள் ஏதுமில்லை எல்லோரும் ஒருவிதமான கூமுட்டைகள்தான் என்னைப் பொருத்தவரை


அன்புடன்

மதுரைத்தமிழன்

சிம்மாசனத்தில் அமர்ந்த பிச்சைக்காரனாய்..

 மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Sunday, January 8, 2023

நாம் நம்மை கடக்க முயற்சிப்போம்..

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

Saturday, January 7, 2023

இது நீரோடு செல்கின்ற ஓடம்..

 நல்ல படிப்பு 

நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வப் போது புலம்பி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குறைக்க முயன்று
தோற்று வீழ்வாள் துணைவி

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்


Thursday, January 5, 2023

சுதந்திரத்தின் மேன்மை..வேறு பார்வையில்

 




கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள கழிவறையில் நடந்த நிகழ்வு.      

ஒரு சிறுத்தை நாயை துரத்தியது.  நாய் ஜன்னல் வழியாக கழிவறைக்குள் நுழைந்தவுடன்   வெளியில் இருந்து மூடப்பட்டது.  நாயின் பின்னால் நுழைந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சிக்கிக் கொண்டன.  சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தது.  குரைக்கக்கூடத் துணியவில்லை.  சிறுத்தை பசியால் நாயை துரத்தி வந்தாலும் நாயை தின்று, ஒரே பாய்ச்சலில் இரவு உணவு ஆக்கியிருக்கலாம்.  


ஆனால்,இரண்டு விலங்குகளும் சுமார் 12 மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒன்றாக இருந்தன.  12 மணி நேரத்தில் சிறுத்தைப்புலியும் அமைதியாக இருந்தது.  


வனத்துறையினர் சிறுத்தையை ரிமோட் இன்ஜெக்ஷன் கன் (கால்நடை மயக்க மருந்து) மூலம் பிடித்தனர்.  கேள்வி, என்னவெனில், பசித்த சிறுத்தை ஏன் எளிதாக  நாயை வேட்டையாடவில்லை???  

இந்த கேள்விக்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலளித்தனர்: அவர்களின் கருத்துப்படி, 'வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மிகவும் உணர்திறன் கொண்டவை.  அவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன், அவைகள் தங்கள் பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை உணர முடியும்.  வயிற்றுக்கு உணவளிக்கும் அவைகளின் இயல்பான உந்துதல் மறையத் தொடங்குகிறது.      ஒரு மனிதனாக நமக்கும் பல்வேறு வழிகளில் சுதந்திரம் தேவை..   பேச்சு, கருத்து, மதம் மற்றும் நம்பிக்கை, உணவு , சிந்தித்து செயல்படும் சுதந்திரம்.... போன்றவை.  சுதந்திரம் என்ற கருத்தை இன்னும் விரிவாகப் பார்த்தால், அது மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.   ஆம்.., மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம்....வாட்ஸ் அப்பில் கிடைத்தது..

இரசித்துப் படித்தலும்..வாசித்தலும்..

 அன்பின் கனபரிமானம்

அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன் மதிப்பறிந்து
முழுமையாய்
அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்

இடையில் இருப்பவருக்கு
அது புரிய வாய்ப்பே இல்லை

நேர்மையின் அசுரபலம்
அது துயரே தரினும்
அதுதரும் ஆன்மபலம்
அதை முழுமையாய்
அறிந்தவருக்குத்தான் தெரியும்

பித்தலாட்டத்தில் லாபமடைபவர்
அதை உணர வாய்ப்பே இல்லை

உண்மையின் பெரும்சக்தி
அது அரிச்சந்திர வீழ்ச்சி தரினும்
அது தரும் பெரும் எழுச்சி
அதன் பரிபூரணம்
அறிந்தவருக்கே புரியும்

பொய்யில் செல்வந்தராவனுக்கு
அது  புரிய வாய்ப்பே இல்லை

கவித்துவத்தின் அருமை
அதைப் படைப்பவனுக்கும்
அதன் உட்பொருளறிந்து
அதை முழுமையாய்
இரசிப்பவருக்கும்தான் தெரியும்

வாசித்துச் செல்பவருக்கு
அது விளங்க வாய்ப்பே இல்லை

Wednesday, January 4, 2023

வரம் வேண்டா தவம்..

  என்மூலம் வந்ததெல்லாம்

என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை