Saturday, December 30, 2023

வளரட்டும் உயரட்டும்‌நிலைக்கட்டும்

  தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே

வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே (அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.)

Monday, December 25, 2023

வாட்ஸ் அப் மேட்டர் தான் ஆனாலும் .விசயம்‌சூப்பர்

யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி அதிரடியாக சில  முடிவுகள் எடுத்தார். 

அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார்.

ஒவ்வொருவருக்கும்  ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது.

அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும்,  பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான்  இந்த கடன்  வந்தது.

இலவசங்களையும்  பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு  அவர்களுக்கு  ஓட்டு போட்டு  தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்.

மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும் என்றார்.

மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர்.

கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.

சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் தேர்தல்  அறிவிக்கப்பட்டது.

இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டில் போட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வினியோகித்தது.

இம்முறை மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு பெற்று, 

எங்கள் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி செய்யாமல்,

எங்களை,

தன்மானம், சுயமரியாதை என்பதையே உணரவிடாமல் கையேந்த வைத்துக் கொண்டு இருக்க வருகிறாயே என,

செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டி,

பணம், பிரியாணி, இலவசப்  பொருட்கள் கொடுக்காத,

மக்களுக்கு சேவை செய்வோம் என அறிக்கை கொடுத்த,

கட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து, ஆட்சி செய்ய வைத்தார்கள்.


இப்படி ஒரு கனவு, நேற்றிரவு.

பதறியபடி எழுந்தேன்.

விடிந்ததா என பார்த்தேன்.

இருளாகவே இருந்தது.

விடியவே இல்லை.

எப்போது விடியுமோ என மீண்டும் தூங்க ஆரம்பித்தேன்.


வாக்களிக்கும் முன் சிந்திப்பீர்.. 💪

Sunday, December 24, 2023

காலத்தை வென்றவன்

 


 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Saturday, December 16, 2023

முரண்பாடும் மனித நேயமும்

 சங்கரராமன் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்தியச் சிறைக்குக் கைதியாகக் கொண்டு வரப்பட்டு என் முன் நிற்க வைக்கப்பட்டார் ஜெயேந்திரர்.

கண்கள் இரண்டும் உக்கிரத்தில் சிவந்திருந்தன. 

கோபம், வருத்தம், இயலாமை, அவமானம் என உணர்ச்சிகளின் பிழம்பாக தண்டத்தைக் கையிலேந்தி நின்றார். 


கண்களில் கண்ணீர் முட்டியது. அழுதால் அசிங்கமாகி விடும் என்று அதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.


இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.


இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அவரைக் கொட்டடியில் அடைக்க வேண்டும். திடீரென அவர் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதால், அவருக்கு எந்தச் சிறப்பு முன்னேற்பாடும் செய்யவில்லை. அரசியல் கைதிகள் அதிக எண்ணிக்கையில் வரும்போது, அவர்களை அடைப்பதற்காக 20 ஏக்கர் பரப்பளவுள்ள ‘குளோஸ்டு ப்ரிஸன்’ (Closed Prison) தொகுதி இருந்தது. அது, நீண்ட நாள்களாக யாரும் அடைக்கப்படாமல் புதர் மண்டிக்கிடந்தது.


அந்தத் தொகுதியையே அவருக்கு ஒதுக்க முடிவு செய்தேன். ஆயிரம் கைதிகளை உடனே அந்த வளாகத்துக்கு அனுப்பி, இரண்டே மணி நேரத்தில் சுத்தமாக்கினேன். தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலுள்ள இரண்டு அதிகாரிகள் தலைமையில் 40 காவலர்கள்கொண்ட ஒரு குழு ஏற்பாடு செய்யப்பட்டு, இரவு பகலாகப் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அந்தத் தொகுதிக்குப் போகச் சொன்னபோது, அவர் என்னிடம் சொன்ன வார்த்தை, என்னை அதிரவைத்தது... ‘‘நான் இனி உயிரோடு இருக்கப் போவதில்லை. இவ்வளவு பெரிய அவமானத்தைச் சகித்துக்கொண்டு உயிர் வாழ எனக்கு விருப்பமில்லை. உண்ணா நோன்பு இருந்து உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்!’’ என்றார்.


என் மனதில் தோன்றியதை நான் பேசினேன்...


‘‘நீங்கள் முற்றும் துறந்த துறவிதானே... உங்கள் பார்வையில், உள்ளே இருந்தால் என்ன, வெளியுலகில் இருந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதானே. கடவுள் ஒரு சில நாள்கள் உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொல்கிறார். சிறையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு ஏதும் இல்லையே!’’ என்றேன்.

அவர் சற்றே நிதானித்துவிட்டுப் பேசினார்...


‘‘என்னதான் எல்லாவற்றையும் துறந்தாலும் எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. லோக க்ஷேமத்துக்காக பூஜை செய்யாமல் சாப்பிடக் கூடாது. நான் நினைத்தவாறு சிறைக்குள் பூஜை செய்ய முடியுமா?’’ என்று கேட்டார். ‘‘உங்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்’’ என்றேன். ‘‘பூஜை செய்ய தனி இடம் வேண்டும்’’ என்றார். ‘‘கொடுக்கிறேன்’’ என்றேன்.


‘‘சிறையில் கொடுக்கப்படும் உணவை என்னால் சாப்பிட முடியாது; என் ஆசாரப்படி என்னுடைய உணவு ஒரு பிராமணரால்தான் சமைக்கப்பட வேண்டும், கிணற்று நீர்தான் அருந்துவேன்’’ என்றார். ‘‘அனைத்துக்கும் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றேன். அவர் எதைக் கேட்டாலும், செய்து கொடுக்கும் மனநிலையில்தான் நானிருந்தேன்.


தண்டனைக் கைதியாக இருந்த ஒரு பிராமணக் கைதியால் அவருக்கு உணவு சமைக்கப்பட்டு, எனது பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு வழங்கப்பட்டது. காலையில் அரை லிட்டர் ராகிக்கஞ்சி, மதியம் 500 கிராம் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம். இரவு மூன்று பூரி, 200 மி.லி பால்... அவருடைய ஒரு நாள் மொத்த உணவும் இவ்வளவுதான்! இதைச் செய்து கொடுக்க முடியாதா ஒரு சிறைக் கண்காணிப்பாளரால்?


எல்லாவற்றையும்விட அவருடைய பாதுகாப்புக்கு நான் பெரிதும் கவனம் செலுத்தினேன். அதற்குக் காரணம் உண்டு. அவரைச் சிறைக்கு அனுப்பிய பிறகு, அவரைப் பாதுகாப்பது குறித்து எந்த ஓர் அறிவுறுத்தலும் அரசுத் தரப்பிலிருந்து எனக்கு வரவில்லை. ஆனால், வெளியிலிருந்து பலரும் அவரைப் பத்திரமாகப் பாதுகாக்கச் சொல்லி என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள்.


அதில் நான் எதிர்பாராத ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஜெயேந்திரரின் பாதுகாப்புக்கு நான் அவ்வளவு மெனக்கெட்டதற்கு அவர் பேசியதும் மிக முக்கியக் காரணம்.


 *ஜெயேந்திரரை பத்திரமாகப் பார்த்துக்* *கொள்ளச் சொல்லி எனக்குத் தொலைபேசியில் அன்புக்கட்டளைபோட்டவர்* , *கலைஞர்* .


அவர்தான் என்னிடம் பேசி, “அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள். எங்களுக்குள் கொள்கை முரண்கள் இருந்தாலும், அவர் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவர். அதனால் அவரைக் காக்க வேண்டியது அவசியம். அது மட்டுமன்றி அவருக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கொள்கைக்கு முரணானவர்கள் செய்த காரியமாகக் கருதப்படவும் வாய்ப்புண்டு. அதில் உன் பெயரும் பழுதாகிவிடும்!’’ என்று எச்சரித்தார்.

 

ஓர் இந்துமதத் துறவியை, ஜனாதிபதி இருக்கையில் அமரவைத்து அழகு பாத்த ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர்.


அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேண்டுகோள்விடுக்கிறார் பகுத்தறிவு பேசும் அரசியல் தலைவர்.


ஆனால், இந்து மதத்தில் தீவிரமான பற்றும் பக்தியும் கொண்ட ஒருவரின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். *வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் தேசமோ...*’ என்று தோன்றியது எனக்கு.


ஜி.ராமச்சந்திரன் 

ஓய்வுபெற்ற.டி.ஐ.ஜி.

சிறைத்துறை.

Sunday, December 10, 2023

நல்லதோர் வீணை யாய்

  "நல்லதோர் வீணையாய் "

 அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து
புது விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "
அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி
 நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை "
என்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை
 விடுவித்துக் கவிதையை
அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே "
 கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு
அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"
 சோராதிருந்தான்
அதனால்தானே காலத்தை வென்றவனாய்
காவிய மானவனாய்
"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
என்றென்றும்  எப்போதும்
பரிமளிக்கவும் முடிகிறது

Saturday, December 2, 2023

அமெரிக்கா..சுஜாதாவின் பார்வையில்

 அமெரிக்காவில் நிரந்தரமாக வாழச் செல்லும் மாமிகளுக்கும், மாமாக்களுக்கும், சில நல்வாக்குகள்: சுஜாதா

(60 அமெரிக்க நாட்கள் புத்தகத்திலிருந்து)

===============

முன்னுரை

நான் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோது அதைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதும்படி 'தமிழன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக் காக ஆசிரியர் சுதாங்கன்  கேட்டுக்கொண்டார். வழக்கமான பயணக் கட்டுரை போலில்லாமல் அமெரிக்காவை 'கட்டிய வியப்புக்கள்' இன்றி யதார்த்தமாக அதன் மனிதர்களின், குறிப்பாக அங்குப் போய்ச்சேர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வின் உண்மைகளையும் பாசாங்குகளையும் யோக்கியமாக எழுதினேன். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் எழுதப்பட்டது இது. இதன்பின் மூன்று ஜனாதிபதிகள் மாறிவிட்டார்கள். இருந்தும் அமெரிக்காவைப் பற்றி எழுதிய சில ஆதார விஷயங்கள் இன்னும் மாறவில்லை.

அமெரிக்கா பற்றிய ஏராளமான புத்தகங்களின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக இந்தப் புத்தகம் இல்லை என்று யாராவது சொன்னால் திருபதிப்படுவேன்.

உயிர்மை பதிப்பகத்தார் இதை சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

சுஜாதா

சென்னை

அக்டோபர் 2007

===========================

உங்களுக்கு வீஸா  கவலை இல்லை. மகனோ, மகளோ சிட்டிசனாக இருந்து உங்களை க்ரீன் கார்டுக்கு ஸ்பான்ஸர் செய்திருப்பார்கள். மனு செய்து. வரும்நேரத்தில் வரட்டும் என்று அதிகம் பதட்டமில்லாமல் காத்திருந்து, வீஸா  வந்தபின் புறப்படுவீர்கள்.

முதலில் அந்த நாட்டுக்குப் போனதும் உங்கள் பிள்ளை/ மருமகன் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். டிஸ்னி வோர்ல்டு, டிஸ்னி லாண்ட், நயாகரா, பிட்ஸ்பர்க், க்ராண்ட் கான்யன். அதெல்லாம் போய்த் தீர்ந்தபின், உங்களுக்கு அமெரிக்காவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும், வாழ்க்கை ஓரிரு அறைகளுக்குள் பழக வேண்டும்.

டி.வி. அறை, படுக்கை அறை எல்லாமே மர வீடுகளாதலால் ராத்திரி சில விநோத சப்தங்கள் கேட்கும். பயப்படவேண்டாம். மரப்பலகைகள் சோம்பல் முறிக்கும் சப்தம்.

அமெரிக்காவில் டி.வி. பெரிசாக இருக்கும். தரைமட்டத்தி லிருந்து பார்க்கலாம். எழுபது எண்பது சானல்கள் இருக்கும். பிடித்தமாக ஓரிரு நிகழ்ச்சிகள் இருக்கும்.

தினம் முழுவதும் பண்டங்களை விற்பனை செய்யும் க்யுவிசி சானல் பார்க்கலாம். பத்திரிகை முதலில் புரியாது. எல்லா ந்யூஸும் ஒரே மாதிரிதான் இருக்கும். 'ஹிந்து' மாதிரி, The Almighty alone is worthy of obeisance போன்ற பக்தி உபன்யாச சமாசாரங்கள் எல்லாம் தேதி போட்டு அந்த ஊர் பேப்பரில் வராது.

டிவியில் ஒரு ஆண், ஒரு பெண்; ஒருத்தருக்கொருத்தர் சகஜமாக பேசிக்கொண்டே நியூஸ் சொல்வார்கள் வானிலை  இவர்களுக்கு ரொம்ப முக்கியம்: போர்ட்டோரிக்கோவில் புயல் வீசுமுன், அந்தப் புயலுக்கு பேர் வைத்துவிடுவார்கள்.

காலையிலும் மாலையிலும் வாக் போகலாம். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாகச் செல்லுங்கள். அமெரிக்காவில் சாலையோரமாக யாருமே நடப்பதில்லை. கார்கள் எல்லாமே 60 மைலுக்கு மேல் ஓடுவதால் சாலைகளைக் குறுக்கிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும்.

எதற்கும் பைக்குள் அட்ரஸ் வைத்துக்கொள்வது நல்லது. சில நகரங்களில், பைக்குள் பத்து டாலராவது வைத்திருப்பது நல்லது. யாராவது 'மக்'  (Mug) பண்ணும்போது, காசில்லையென்றால் மண்டையை உடைத்துவிடுவார்கள். முதல் வருஷங்களில் தனியாகப் போவதைத் தவிர்க்கவும் போஸ்ட். ஆபிஸ், லைப்ரரி, பார்க் என்று வெளியே சென்றால், நன்றாகப் போர்த்திக்கொண்டு செல்லவும் திடீர் என்று குளிரும்; அல்லது மழை பெய்யும்.

அமெரிக்காவில் ஆரோக்யமாக இருப்பது சுலபம். உடம்புக்கு வந்துவிட்டால் டாக்டர்கள் தீட்டிவிடுவார்கள். போன கையோடு இன்ஷுர் செய்துகொள்வது நல்லது. டயபடிஸ், இருதயக் கோளாறு இருந்தால் ஆயிரம் கண்டிஷன் போடுவார்கள். இருந்தும் உங்கள் மகனை அல்லது மாப்பிளையைப் பிடுங்கி எடுத்து இன்ஷுர் செய்து கொள்வது நல்லது. அங்கே வியாதி வருவது மிகவும் பணச் செலவாகும் சங்கதி

எல்லா இந்திய வீட்டிலும் வாஷிங்மெஷின், டிஷ்வாஷர், மைக்ரோ வேவ், வாக்கும் க்ளீனர் நான்கும் கட்டாயமாக இருக்கும். அவைகளை இயக்குவது எப்படி என்பது தெரிந்தே ஆகவேண்டும். சமையலுக்கு சில வீட்டில் கேஸ் இருக்கும்; திறந்தாலே எரியும்.

நம ஊர் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும். அதுவும் சைனீஸ் ஸ்டோரில் முளைக்கீரை, மாகாளிக் கிழங்கு எதுவும் கிடைக்கும் சில வீட்டில் எலக்ட்ரிக் ரேஞ்; துணி துவைக்க கட்டி சோப்பு கிடைக்காது. சில நகரங்களில் துணியை வராந்தாவில் உலர்த்த முடியாது, அக்கம், பக்கத்தில் புகார் செய்வார்கள். அதேபோல் இஷ்டப்படி குப்பை போடவும் கூடாது. நினைத்த இடத்தில் நம்பர் ஒன் போகமுடியாது. கிளம்பும்போது அதையெல்லாம் முடித்து கொண்டு போவது உத்தமம்.

ப்ளாஸ்டிக் தட்டுகளில் சாப்பிட்டுப் பழகவேண்டும். பீட்ஸ பிடித்தே ஆக வேண்டும். அதேபோல் மெக்ஸிக்கன் உணவுகளான Burrito, Tortilla:  எட்டுநாள் ஃப்ரீஸரில் வைத்திருந்து  சுடவைத்து, ஆவி பறக்க இட்லி சாப்பிடவும் பழகவேண்டும்.

அமெரிக்க நகரங்களில் இந்திய கலாச்சார விஷயங்களுக்கும்  பஞ்சமே இல்லை. நம் ஊர் அத்தனை சங்கீத வித்வான்களும் சிரிப்பு நாடக குழுக்களும் கைக்காசை செலவழித்தாவது அங்கு வந்து கச்சேரி பண்ணிவிட்டாவது போவார்கள்.

இந்த மாதிரி சங்கீத நாடக சந்தர்ப்பங்களில் அல்லது நாற்பது  மைல் தூரத்தில் கட்டப்பட்ட முருகன் - பிள்ளையார் - மீனாக்ஷி  -சீனிவாசர் ஆம்னி பஸ் கோவிலில், அமெரிக்காவில் மற்ற கிழங்களை  சந்திக்கும் வாய்ப்பு வரும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கையும் உங்கள்  வாழ்க்கை போலவே இருப்பதை அறிந்து திருப்திப் படலாம்.

'பாப்' சங்கீதம் உங்களுக்குப் பிடித்துப் போக சந்தர்ப்பம் இல்லை.  வேணுமென்றால் கண்ட்ரி ம்யூசிக், ஜாஸ் போன்றவை கேட்டுப்  பார்க்கலாம்.

உங்களுக்குப் புத்தகம் படிக்க ஆவலிருந்தால் அமெரிக்கா சொர்க்க  பூமி. சின்ன ஊரில் கூட அருமையான நூலகம் இருக்கும். பத்து புத்தகங்கள் தள்ளிக்கொண்டு வரலாம். அதேபோல், 'பார்ன்ஸ்  அண்ட்  நோபிள்' போன்ற புத்தகக் கடைகளில் சந்தோஷமாக ஓசியில் படிக்க அனுமதிப்பார்கள் உட்கார நாற்காலிகூட எடுத்துப் போகலாம்.

அதில் என்ன சிக்கல் என்றால் அடுத்த ப்ளாக்குக்குகூட வேண்டும்.உங்களைக் காரில் அழைத்துப் போக மகன், மருமகள்  யாரையாவது நாடவேண்டி வரும். அவர்கள் எல்லாம் ரொம்ப  பிஸி.

அமெரிக்காவில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை வண்ணமே வேறு - எண்பது தொண்ணூறு வயசு தாத்தா எல்லாம் அனாயாசமாக கார் ஓட்டுவார்கள். பாட்டிகள் ரூஜ், லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வார்கள்.

அமெரிக்க நகரங்கள் அனைத்தும் வர, வர ஒரேமாதிரி ஆகிக் கொண்டு வருகின்றன. பக்கத்திலேயே 'மால்' இருக்கும். சியர்ஸ், ஜேசி பென்னி, கே மார்ட், வால் மார்ட், போன்ற ஸ்டோர்கள் ஒரே அடையாளத்தில் இருக்கும். ஃபுட் ஸ்டோர்,  ட்ரக் ஸ்டோர், ஆபிஸ்களெல்லாம் இருக்கும் 'டௌன் டவுன்  இவ்வளவுதான் சமாசாரம். வந்த ஆறாம் மாதம் எல்லாம் பார்த்து  அலுத்துவிடும்.

கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்  தூரம் அதிகரித்துக்கொண்டே செல்லும் ஒரு நாளைக்கு பதினைந்து  வார்த்தை பேசுவதிலிருந்து 'ஹாய் டாட் போன்ற ஓரிரு வார் களில் வந்து முடியலாம்.

பேரக் குழந்தைகளிடம் அன்பு காட்டலாம். அவர்கள் பேசும் இங்கிலிஷ் புரிய வேண்டும். பேரக் குழந்தைகளிடம் அதிகம் பாசம் வைத்தால் சில சமயம் அது சிக்கலிலும், மனஸ்தாபத்திலும் முடியும்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாட்டி நன்றாக பேத்திகளைப்பார்த்துக்கொள்ள, அந்தக் குழந்தைகள் தாயாரை நிராகரித்து, பாட்டியையே எல்லாவற்றிற்கும் நாட, மருமகளால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு, 'சீனியர் சிட்டிஸன்' என்கிற தகுதியில், அரசாங்க சலுகையில், ஒரு ரூம் அப்பார்ட்மெண்டில் தள்ளி இருக்கிறார்.

தனியாக இருக்கவும், அவ்வப்போது தனக்குள் பேசிக்கொள்ளவும் பழகிவிட்டால், நமக்கு எந்தவிதக் கலாச்சார சம்பந்தமும் இல்லாத டி.வி., பொது வாழ்வை, விளிம்பிலிருந்து வேடிக்கை பார்க்கவும் பழகிவிட்டால் அமெரிக்கா உங்களுக்குப் பழகிவிடும்.

மற்றபடி பொது ஆரோக்கியம், நல்ல உணவு, வகைவகையாக ப்ரேக் ஃபாஸ்ட் ஸீரியல்கள், ஐஸ்க்ரீம், பாதாம் போன்ற பலவகை பருப்புகள், கொறிப்பதற்கு எத்தனையோ வறுவல்கள், கொட்டைகள், உறுதியாக உழைக்கும் உடைகள், சுத்தமான காற்று, தண்ணீர், பால், தயிர், மோர் இவைகளின் உபயத்தில் நீண்டநாள் வாழ்வீர்கள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை கொட்டாவி விட்டுக்கொண்டு!

===================================

Tuesday, November 28, 2023

ஆக்கப்பூர்வமான சிந்தனை

 டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஜாம்ஷெட்பூரில் டாடா ஸ்டீல் ஊழியர்களுடன் வாராந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருந்தார்.


ஒரு தொழிலாளி ஒரு தீவிரமான பிரச்சினையை எடுத்துக் கொண்டார்.


தொழிலாளர்களுக்கான கழிப்பறைகளின் தரம் மற்றும் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது என்றார்.


அதேசமயம், எக்ஸிகியூட்டிவ் கழிவறைகளின் தூய்மை மற்றும் சுகாதாரம் எப்போதும் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


அதைச் சரியாக அமைக்க எவ்வளவு நேரம் தேவை என்று டாடா தனது உயர் அதிகாரியிடம் கேட்டார்.


அதை சரி செய்ய நிர்வாகி ஒரு மாதம் கேட்டார்.


டாடா அவர்கள், "நான் அதை ஒரு நாளில் செய்துவிடுகிறேன். எனக்கு ஒரு தச்சனை அனுப்பு" என்றார்.


அடுத்த நாள், தச்சன் வந்தபோது, ​​*அவர் சைன் போர்டுகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்*.


தொழிலாளர் கழிப்பறையில் உள்ள அடையாள பலகை *"நிர்வாகிகள்"* மற்றும் நிர்வாகிகளின் கழிப்பறையில் *"தொழிலாளர்கள்"* என்று காட்டப்பட்டுள்ளது.


டாடா அவர்கள் *இந்த அடையாளத்தை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்* என்று அறிவுறுத்தினார்.


இரண்டு கழிப்பறைகளின் தரம் அடுத்த மூன்று நாட்களில் சம நிலைக்கு வந்தது.


*தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது**


ஒழுக்கம்:


*_பிரச்சினையை கண்டறிவதற்கு விமர்சன சிந்தனை தேவை_*


**ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனை தேவை_*


இது கதையல்ல உண்மை சம்பவம்...

Sunday, November 12, 2023

பயன்படும் பதிவு..

 *🚊🚊Amazing railway service:-*


தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியன் ரயில்வேயின் அற்புதமான சர்வீஸ்:::


நாங்கள் குடும்பத்தோடு டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச்சில் ஏறினோம்..


(காரணம் :-  AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. 


வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது..


 நமக்கு மொழி பிரச்சினை வேறு..ஹிந்தி எனக்கு சுத்தமாக தெரியாது.. அவிங்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது..


இரவு 9 மணி... குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடநாட்டுக்காரன் மனிதாபிமானம் இன்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிகிட்டே இருக்கானுக.. 


கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்.


.அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது.. ஹிந்தி Or ஆங்கிலத்தில் பேசனும்..நாம் பேச நினைக்கற விஷயத்தை உடனே பதிவிட்டால் அடுத்த சில நிமிடத்தில் *RPF POLICE* உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவன் எல்லாம் எங்கிட்டு போனானே தெரியல..


 Rpf police க்கு வட நாட்டான் செமையா பயப்படுறான்... அடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் நம்ம பயணம் மிக சுமுகமாக அமையும் .. தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.. நன்றி.


புகார் பதிவு மிக எளிது...

குரோம்ல *RAILMADAD* என பதிவிட்டதும் உங்கள் மொபைல் நம்பரை என்டர் செய்யவும்....மொபைல் நம்பருக்கு OTP வரும்....அதை என்டர் செய்ததும்

நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்ததும் அதிலே உங்கள் ட்ரெயின் நம்பர்....உங்கள் கோச்... பெட்டி நம்பர்... எத்தனை பேர் நீங்கள் பயணிக்கிறீர்கள் என அனைத்து தகவலும் வரும்..


 அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதிலே ரத்தின சுருக்கமா நீங்க உங்க குறையை பதிவிட்டால் போதும்.


உதாரணமாக *"MY SEATS OCCUPIED OTHERS* " என பதிவிட்டால் போதும்.. உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் உங்கள் பிரச்சினை தீரும்.. நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.. 


என் அனுபவத்தை பகிர்ந்தேன்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் 

நன்றி..

Saturday, November 4, 2023

Retirement and cricket

 Retirement in India: How It Mirrors the Game of Cricket


Cricket isn't just a sport in India; it's an emotion, a religion, and a way of life. The strategies, patience, and perseverance required in cricket often mirror the journey of retirement planning in this diverse nation. Let's explore the fascinating parallels between retirement in India and the country's most cherished game.


1. The Opening Partnership and Early Investments


In cricket, a strong opening partnership lays the foundation for a big score. Similarly, starting your retirement savings early in India, perhaps with instruments like the Employees' Provident Fund (EPF) or the Public Provident Fund (PPF), can set a strong base for a sizeable retirement corpus.


2. Setting a Target: Runs and Rupees


Every cricket team has a target score in mind, whether they're batting first or chasing. Likewise, individuals should have a clear financial target for retirement, considering factors like inflation, healthcare costs, and desired lifestyle.


3. Diverse Playing XI and Investment Portfolio


A balanced cricket team has batsmen, bowlers, all-rounders, and a wicketkeeper. Drawing a parallel, a diversified investment portfolio in India could comprise equity, debt, real estate, gold, and more. Balancing high-risk and low-risk assets can help navigate the economic ups and downs, just like a cricket team navigates the challenges of varied oppositions.


4. Reading the Pitch: Market Conditions


A cricket captain assesses the pitch and conditions before deciding to bat or bowl. Similarly, understanding market conditions and economic forecasts is vital in deciding where to invest and when to shift assets.


5. The Test Match: Long-Term Planning


Test cricket requires patience, strategy, and a long-term vision. Retirement planning in India is similar. With joint family systems and cultural nuances, planning might extend beyond just the individual, requiring foresight and extended commitment.


6. Navigating the Yorkers: Unexpected Expenses


Just as batsmen must be prepared for unexpected yorkers, retirees might encounter unforeseen expenses. Having an emergency fund or liquid assets can help navigate these financial "yorkers."


7. The Role of a Captain: Financial Advisors


A cricket captain guides the team, making strategic decisions. In the retirement journey, a financial advisor plays a similar role, offering expert advice, helping navigate challenges, and ensuring the individual stays on track.


8. The Final Overs: Nearing Retirement


As a cricket match nears its conclusion, the strategies intensify. Similarly, as one approaches retirement in India, it's essential to reassess risk, consolidate savings, and ensure there's a steady income stream, like annuities or fixed deposits.


Conclusion


Cricket, with its complexities and strategies, offers insightful lessons for retirement planning in India. By understanding and drawing parallels between the two, individuals can approach retirement planning with the same passion, dedication, and strategy as a thrilling game of cricket. And just as in cricket, with the right planning and execution, one can hit the retirement phase for a 'six'!

Wednesday, November 1, 2023

தேவையான தகவல்..

 A letter from a former geriatric hospital orthopaedic director to all the elderly (60-1 00yars and above…


*I don't advocate the determination of bone density anymore, because the elderly will definitely have osteoporosis, and with the increase of age, the degree of osteoporosis will definitely become more and more serious, and the risk of fracture is bound to get bigger.*


*There is a formula:*


*The risk of fracture= external damage force/ bone density.*


*The elderly are prone to fractures because the denominator value (bone density) is getting smaller and smaller, so the risk of fractures will definitely increase.*


*Therefore, the most important measure for the elderly to prevent fractures is to do everything possible to prevent accidental injuries.*


*How to reduce accidental damage?*


*There are the seven characters of the so-called secret that I summed up, which is:*


*“Be careful, be careful, be careful again"!*


*Specific measures include:*


*1. Never stand on a chair or stool to get something, even a low stool.*


*2. Try not to go out on rainy days.*


*3. Take special care when bathing or using the toilet, to prevent slipping.*


*4. The most important, especially for women - dont wear underwear in bathroom, taking support of wall or other things... The commonest cause of slipping and fracture of hip joint... After bath, come back to your changing room.. Sit comfortably on either a chair or on  your bed and then put on underwear..*


*5. While going to toilet, ensure that bathroom floor is dry and not slippery.. Use only comod.. but at the same time fix a hand rest to hold it  while getting upright from the comod sit...  same is true while taking a bath sitting on bath stool*. 


*5.  Be sure to clean up the floor in the house before going to bed, and take double care when floor is wet...*


*5. When getting up in the middle of the night,  sit on the bed for 3-4  minutes, be sure to turn on the light first, and then get up.*


*6. At least in night or even during day time (if feasible), please, please do not close toilet door from inside..  If possible have an alarm bell fitted in toilet, to press it alarm family members in case of any emergency...*



*7. Seniors must sit on a chair or a bed  and wear pants.*


*8. In the event of a fall, you must stretch out your hands to support the ground. It is better to fracture the forearm and wrist than to fracture the femoral neck at the hip joint.*


*8. I strongly advocate exercise, at least walk, to the extent possible for you..*


*9. Especially for women.. be very, very serious to keep your weight in permissible limits... Diet control is the most important key... Eating leftovers, common behavior of women... just get away from it... feed leftovers to stray cows... keeping your weight in control is absolutely in your had and your mind, " always better to stop eating with half stomach full, rather than eat till have a satiety for having full stomach.*


*Regarding increasing bone mass, I also advocate dietary supplements (dairy products, soy products and seafood, especially small shrimp skins, which are high in calcium) rather than medicinal supplements.*


*The other is to do outdoor activities properly, because sun exposure (under UV light) converts the cholesterol in the skin into vitamin D.*


*It is beneficial to promote intestinal absorption of calcium and osteoblast activity has the effect of delaying osteoporosis.*


*2. Elderly health care:*


*(1) Summary After investigating more than 300 centenarians, I found astonishing data. Almost all centenarians, who have fallen will die within three months.*


*(2) A fall may not necessarily lead to a fracture, but the vibration and impact force of the fall will make the whole body function of the elderly in a state of disintegration, the meridians and collaterals are blocked, and they cannot become an organic whole to achieve self-balancing regulation, resulting in rapid failure of the functions of the viscera, and thus rapid death.*


*(3) Pay special attention to the non-slip of the bathroom. When going up the stairs, pay attention to the handrails and don't fall. Everyone, take care.*


*Therefore, the elderly must pay attention to anti-skid and anti-fall.* 


*One fall will cost ten years of life. Because all the bones and muscles are destroyed. Surgery is useless, and conservative treatment is also a drag. So, be careful.* 


**Avoid standing for too long**


*The message may look long, but it’s worth reading it especially for the seniors, and those taking care of seniors.* 



*Kindly post it in the group*

படித்ததில் பிடித்தது..

 அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்  சரி மேல மாட்டுற கிளிப்பாவது (வெறும் 3 ரூபாய்) வாங்கி தாங்க என்று அழுதபோது ,

டேய் உனக்காவது இது கிடைத்தது ,

நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு வசதியில்லை என்று சொன்ன 

என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!


இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும்  மகளுக்கு exam board வாங்க போனபோது  150 ரூபாய் மதிப்புள்ள   examboardஐ பார்த்து உதட்டைபிதிக்கி 

இதவிட betterஆ வேற இல்லையா என்று கடைகாரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,, 


மகளிடம் பொருமையாக பாரும்மா, அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர் அட்டையை தான் கொண்டு போவேன்,,  ink பாட்டில்  வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன்,

சில சமயம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,,,

புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம்  இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்; bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;;;; 

என்று  மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது

 நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள்!!

 நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!


நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா (25பைசா)  சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெரிவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்

இன்று  அப்பா filter water கேன்

(2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும்  பார்க்கிறேன் 


நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு  கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு 

தாகம் எடுத்தால்  ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி ( அவங்க என்ன ஆளுங்க என்று எங்களுக்கு  தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்று அவங்களுக்கும் தெரியாது! !)   அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க, என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்


நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள்!!

( ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டிர்) ; 


 இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?

 என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!


இன்று  SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நாம் ,

 ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6 ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறோம் ( ஞாயிற்குகிழமை ஆப் charage என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!! 


இன்று 64 gb memory  வைத்து இருக்கும் நான்  ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!


இன்று ஒரு லிட்டர்  gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 milli எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி  கொண்டு ஓடி இருக்கிறேன்

(கடைகார அண்ணாச்சி திரும்பி எண்ணை ஊத்துற கேப்புல முன்னாடி இருக்கும் கடல புண்ணாக்க எடுத்து லபக்குன்னு வாயில் போடுவது தனி சுகம்) 


Boost is the secerd of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;


 இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது; 


நான்  சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; 

இப்ப இருக்கிற புள்ளைங்க 

சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதில்லை

சாப்பிடுவதற்கு  கஷ்டப்படுதுங்க.


இது தலைமுறை இடைவெளி என்று சொன்னாலும் சொல்லலாம் வாழ்க்கை முன்னேற்றம் என்று சொன்னாலும் சொல்லலாம். நாகரீக வளர்ச்சி என்று சொன்னாலும் சொல்லலாம்.

Sunday, October 15, 2023

படித்ததில் பிடித்தது..

 அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.


ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை.

"பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம்

வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.

ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.

காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.

அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள்.

""இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்!

பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.

""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''

துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.

காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.

திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.

""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து

விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று

இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.

தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.

""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின்

வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.''


அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த

காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.

பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத

குறையாகக் கெஞ்சினார்.

""பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''

""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''

""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''

தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த

உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.


இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது. இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்

அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.

Thursday, October 12, 2023

பகிரலாமே..

 கீழ்க்கண்ட பதிவை எழுதிய நண்பருக்கு நன்றி.


அரசு ஊழியர்களை, சபிச்சி, கொட்டும், அத்தனை நல்லெண்ணம் கொண்டவர்களே ,கொஞ்சம் மனச திடப் படுத்திகிட்டு படிங்க மேலும்!!!

இதயம் பலகீனமானவர்கள் படிக்க வேண்டாம்!!!

*மனதை நெகிழ வைக்கும் கண்ணை உறுத்தும் உண்மை, படித்தவுடன் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்... உங்கள் பணம் எங்கே போகிறது?!*

  இந்தியாவில் மொத்தம் 4120 எம்எல்ஏக்கள் மற்றும் 462 எம்எல்சிக்கள் என மொத்தம் 4,582 எம்எல்ஏக்கள் உள்ளனர்.


  ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் சம்பளம் உட்பட மாதம் 2 லட்சம்.  அதாவது மாதம் 91 கோடியே 64 லட்சம் ரூபாய்.


  இதன்படி ஆண்டுக்கு 1100 கோடி ரூபாய்.


  இந்தியாவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மொத்தம் 776 எம்பிக்கள் உள்ளனர்.


  இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியுடன் மாதம் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.  அதாவது எம்.பி.க்களின் மொத்த சம்பளம் மாதம் 38 கோடியே 80 லட்சம்.


  மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த எம்.பி.க்களுக்கு சம்பளப்படியாக ரூ.465 கோடியே 60 லட்சம் வழங்கப்படுகிறது.


  அதாவது, இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடியே 65 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடுகிறார்கள்.


  இது அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதர கொடைகள்.  அவர்களின் தங்குமிடம், வாழ்வாதாரம், உணவு, பயணப்படி, மருத்துவம், வெளிநாட்டுப் பயணம் போன்றவை.  கூட கிட்டத்தட்ட அதே தான்.


  அதாவது சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளுக்காக செலவிடப்படுகிறது.


  இப்போது அவர்களின் பாதுகாப்பில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களின் சம்பளத்தைக் கவனியுங்கள்.


  ஒரு எம்.எல்.ஏ.க்கு இரண்டு மெய்க்காப்பாளர்கள் மற்றும் ஒரு பிரிவு வீட்டுக் காவலர் என்றால் குறைந்தது 5 போலீசார், மொத்தம் 7 போலீசார்.


  7 காவலர் சம்பளம் (மாதம் ரூ. 35,000) ரூ.  2 லட்சத்து 45 ஆயிரம்.


  இதன்படி 4582 எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு ஆண்டு செலவு 9 ஆயிரம் கோடியே 62 கோடியே 22 லட்சம்.


  அதேபோல், எம்.பி.க்களின் பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 164 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.


  இசட் பிரிவு பாதுகாப்பு தலைவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 16000 பணியாளர்கள் பிரத்யேகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


  இதற்கான மொத்த ஆண்டு செலவு ரூ.776 கோடி.


  ஆளும் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.


  *அதாவது அரசியல்வாதிகளுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.*


  இந்தச் செலவுகளில் ஆளுநரின் செலவுகள், முன்னாள் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஓய்வூதியம், அவர்களின் பாதுகாப்பு போன்றவை இல்லை.💃💃💃💃💃💃💃


  அதையும் சேர்த்தால் மொத்த செலவு சுமார் 100 பில்லியன் ரூபாய்.


  இப்போது யோசியுங்கள்.  ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் அரசியல்வாதிகளுக்காக செலவிடுகிறோம், அதற்கு ஈடாக ஏழை மக்களுக்கு என்ன கிடைக்கும்?


  இது ஜனநாயகமா?


  (இந்த 100 பில்லியன் ரூபாய் நம் இந்தியர்களிடமிருந்து மட்டுமே வரியாக வசூலிக்கப்படும்.)


  இங்கும்  ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்கணும்.  இந்தியாவில் இரண்டு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.


  →முதல் - தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை

  தலைவர்கள் தொலைக்காட்சி மூலம் மட்டுமே விளம்பரம் செய்ய வேண்டும்.


  → இரண்டாவது - தலைவர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள்,பென்சன். போன்றவற்றின்மீதான தடை.....

  அப்போது தெரியும் அரசியல்வாதிகளின்  தேசபக்தி.


  இந்த வீண் செலவுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுக்க வேண்டும்.

  கனிவான

  மாண்புமிகு பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு,

  தயவு செய்து அனைத்து *திட்டமிடுதலை* நிறுத்தவும்.


  *ஒவ்வொரு பத்து கிலோமீட்டருக்கும் ஒரு பாராளுமன்ற வளாகம் போன்ற கேன்டீனை திறக்கவும்.*


  எல்லா சண்டைகளும் முடிந்துவிடும்.


  *ரூ.29க்கு முழு சாப்பாடு கிடைக்கும்..*


  80% மக்களுக்கு, குடும்பம் நடத்துவதற்கான போராட்டம் முடிந்துவிடும்.


  சிலிண்டர், ரேஷன்மிக குறைந்த செலவில் கொடுக்கலாம்

  இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.


  *நடுத்தர மக்கள் தங்கள் சொந்த வழியில் சொந்த வீட்டை நடத்த வேண்டும் என்று பிரதமர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


   மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும்.

  டீ = 1.00

  சூப் = 5.50

  தோசை = 1.50

 பரோட்டா= 2.00

  சப்பாத்தி = 1.00

  கோழி = 24.50

மசால்  தோசை = 4.00

  பிரியாணி=8.00

  மீன் = 13.00

  இந்த பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்கு இது போன்ற விலையில் வழங்கலாம்., இவை அனைத்தும் இந்திய பாராளுமன்ற கேன்டீனில் கிடைக்கும்.


  *ஏழைகளின் சம்பளம் மாதம் ரூ.1 லட்சத்து 80,000 அதுவும் வருமான வரி இல்லாமல்.* அந்த ஏழைப் பங்காளர்களின் வயிற்றுகு போகிறது


  உங்கள் மொபைலில் சேமித்துள்ள அனைத்து எண்களையும் ஃபார்வர்டு செய்யவும், இதன் மூலம் அனைவருக்கும் தெரியும்...

  அதனால் தான் ஒரு நாளைக்கு 30 அல்லது 32 ரூபாய் சம்பாதிப்பவன் ஏழை இல்லை என்று நினைக்கிறார்கள்.


  *ஜோக்குகள் தினமும் ஃபார்வேர்ட் செய்யப்படுகின்றன, இதையும் ஃபார்வேர்ட் செய்யுங்களேன்? அனைத்து இந்திய மக்களுக்கும் தெரிவிப்போம்.

Friday, October 6, 2023

யாரோ எழுதியது ..ஆயினும் அனைவருக்குமானது..

 *~நாம் எங்கே செல்கிறோம்~*


*_சற்றே யோசிக்கலாமே_* 


சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  *'அம்மா’*  என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,

*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_*  என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும்  ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.


*_'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_*  என்று சொன்ன  *பாட்டி*  ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~.


*_ஆடிப் பட்டம் தேடி விதை_*  என இன்றைக்கும் சொல்லும்  *வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~.


*_மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_*  எனப் பாடிய *தேரன் சித்தர்*  ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை~.


*_செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_*  எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு*  60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~.


_அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_ 


_அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_ 

_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_


*ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*.


*வள்ளுவன்*

   சொல்லும்

*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*


*பாரதி*

   சொன்ன

*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*

   சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.


*_மம்மி_*

   எனக்கு

_வொயிட் சட்னிதான்_

   வேணும்,

~க்ரீன் சட்னி~

வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,

_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.


அந்தக் குழந்தையிடம், *_'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’_*

எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.


   _ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_.


இந்த _மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!*


   *தொலைக்காட்சி விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து 

*_புரோட்டின், கலோரி, விட்டமின்_*  பற்றிய *ஞானம்*  பெருகிய அளவுக்கு,

~'கொள்ளு  உடம்புக்குச் சூடு~;

_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.

*பலாப் பழம் மாந்தம்*.

~பச்சைப் பழம் கபம்~·

*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*

என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.


   ~'அதென்ன சூடு, குளிர்ச்சி?~

அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !

இந்த *தெர்மாமீட்டர்ல*  உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~  அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,*  _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._


*_~விளைவு?~_*


   *'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’*  எனும் ~அம்மா~,

   *'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’*  என்று அக்கறை காட்டும் ~அப்பா.~


   *~'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~*  என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~  போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.


   *_'வயிறு உப்புசமா இருக்கா?_*

   மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’*  என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~


   *ஏழு மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,*  *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*.


   *~'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~*

_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~


   *வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற  பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_  என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.*


_பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_ மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?

*'பிள்ளை-வளர்ப்பான்’!*


   *'சளி பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_.

_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_


   *மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?*

_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_


   *_சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;_*


   *வாய்ப் புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_


   *பித்தக் கிறுகிறுப்புக்கு*

_முருங்கைக்காய் சூப்,_


   *மூட்டு வலிக்கு*

_முடக்கத் தான் அடை,_


   *மாதவிடாய் வலிக்கு*

_உளுத்தங்களி,_


   *குழந்தை கால்வலிக்கு*

_ராகிப் புட்டு,_


   *வயசுப் பெண் சோகைக்கு*

_கம்பஞ்சோறு,_


*வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு*

_வாழைத்தண்டுப் பச்சடி’_

     என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்

சில நேரம் ~மருந்துகள்;~

பல நேரம் _மருத்துவ உணவுகள்._


     *_காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._*


      *சுழியத்தைக்* _(ஜீரோவை)_

கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.


   *'பை’*  என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.


   *'ஆறறிவதுவே அதனொடு மனமே’*

என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன

*_தொல் காப்பியம்_*

எழுதிய ஊர் இது.


   *~இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?~*


யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய இந்த செய்தியை சிறந்த பாடமாகக்கருதி நண்பர்களுடன் பகிரவும்.

Wednesday, October 4, 2023

நுகர்ச்சிக் கலாச்சாரம்..

 நுகர்ச்சி ( consumption )


உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள் ? 


மக்கள் தொகைப் பெருக்கம்? இல்லை.


over-population அன்று, 


இன்று over-consumption தான் என்கிறார்கள். 


அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம். 


ஆனால் 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம். 


இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்.


 population is not exactly the issue. consumption is ! 


அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்.


 அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.


இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது . 


சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 


இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம். 

வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?


 பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது. 

ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.


 ' பூஜா kit' விலை 180 ரூபாய்! 


உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்

180 ரூபாய்!


தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்! 


ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் வியாபார  யுக்தி !


 தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித ' fake demand' ஐ உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள். 


சமீபத்திய உதாரணம் vegetable wash ! 


250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள். 

இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ! 


பெரும்பாலும் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிவந்து   அப்படியே தான் பிரிட்ஜில் வைத்துக்கொண்டு இருந்தோம். 


எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு kills 99.9% germs என்று போட்டு விடுகிறார்கள்.


 'கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கிறது' என்று போடுகிறார்கள். 


எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் போன்ற விவரங்கள் இல்லை. 


' கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வேண்டி கடவுளை வழிபடுவதற்கு எங்கள் ஊதுபத்தி சிறந்தது ' என்று கூடிய சீக்கிரம் விளம்பரங்கள் வந்து விடும்!


இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது


அதாவது நாம் நம் தாத்தாவை விட 8 மடங்கு அதிகம் நுகர்ந்தோம் என்றால் நம் பேரன் நம்மை விட 64 மடங்கு அதிகம் நுகர்வான். 


நம் தாத்தாவுக்கு இருந்தது ஒரே ஒரு option lifebuoy சோப் என்றால் நம் பேரன் முன்பு 64 சோப்புகள் கடை விரிக்கப்படும். 


எல்லா சோப்புகளும் more or less ஒன்றுதான் என்ற அறிவு நம்மிடம் இருப்பதில்லை. 


64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக்கொண்டு! 


' selection time rule' என்ன சொல்கிறது தெரியுமா? 


இரண்டு பொருட்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க நமக்கு 10 நிமிடங்கள் ஆகிறது என்றால் மூன்று பொருட்களில் இருந்து தேர்ந்தெடுக்க நமக்கு 100 நிமிடங்கள் ஆகுமாம். 


நான்கு பொருட்கள் என்றால் ஆயிரம் நிமிடங்கள்!


நம்முடைய நேரத்தையும் சத்தமில்லாமல் திருடி விடுகின்றன இந்த ஹைப்பர் மார்க்கெட்டுகள்.


இது நல்லது தானே? நிறைய தயாரிப்புகள் என்றால் நிறைய வேலைவாய்ப்பு என்று நினைத்தால் தப்பு. 


அந்தக் குறிப்பிட்ட தயாரிப்பு எப்படி சந்தைக்கு வருகிறது என்ற விவரம் நம்மிடம் இல்லை. 

முழுக்க முழுக்க automated process சில் வந்திருக்கலாம். 

எந்த ஒரு தயாரிப்பும் அப்படியே வானத்தில் இருந்து குதித்து விடுவதில்லை. 


அது பஞ்சபூதங்களையும் கணிசமான அளவு பதம் பார்க்கிறது. அதற்கான தயாரிப்பில் எத்தனை தண்ணீர் உறிஞ்சப்பட்டது, எத்தனை ஏக்கர் மண் மலடானது, எத்தனை டன் காற்று மாசுபட்டது, அந்தத்தயாரிப்பு எத்தனை carbon footprint ஐ பூமியின் வளிமண்டலத்தில் வெளிவிட்டது என்றெல்லாம் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை. 


மேலும் அந்தத் தயாரிப்பின் பின்புலத்தில் நசுக்கப்பட்டவர்கள் யார், மிரட்டப்பட்டவர்கள் யார், அதன் பின்புலத்தில் இயங்கும் socio, economic, political forces கள் எதுவும் நமக்கு விளங்குவதில்லை.


' கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என்ற வாசகம் இப்போது எடுபடாது.


 எங்கே கடைவிரித்தாலும் எங்கிருந்தோ 'கொள்வார்' கள் வந்து விடுகிறார்கள். 


home-made என்று போட்டுவிடு, organic என்று எழுது, 100% hygienic என்று எழுது, good for liver என்று போடு, 

ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு happy family யின் படத்தைப் போட்டுவிட்டு, அவ்வளவு தான், shit sells!!


ஓகே. இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் தானே என்றால் பொருட்களை மட்டும் அல்ல, சேவைகளையும் நாம் over consume செய்கிறோம் என்று தோன்றுகிறது. 


தினமும் 3 GB டேட்டா இலவசம். 

வேறு என்ன செய்ய? 

வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன. 

இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் cognitive data base அப்படியே தான் இருக்கும். 

எதையும் புதிதாக கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது. 


' Stop making stupid people famous ' என்று சொல்வார்கள். 


அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம். 


மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers ! 


வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை. 


data என்றில்லை, மின்சாரம், தண்ணீர்,எரிபொருள் எல்லாமே over consumption தான்.


 Buffet- வில் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம். 


விளைவு : வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை! 


இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!


மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.


 ' நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு ' என்பதெல்லாம் சரி தான்.


 ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?


 40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று exhaust ஆகி விடுகிறோம்.


 8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப்பேசுகிறான் 


'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.


 ' expression பத்தலை ' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்* .


 'ஆன்மிகம்' என்பது ஒருவருக்கு வயது முதிர்ந்தபின் தான் அர்த்தமுள்ளதாகும். 


50+...அந்தந்த வயதில் 

அது அது இனிக்கும். 


ஆன்மிகத்திற்கென்று ஓர் ஓய்வு, ஒரு விரக்தி, ஒரு களைப்பு, ஒரு சோர்வு, ஓர் அர்த்தமின்மை எல்லாம் தேவைப்படுகிறது. 


20 வயதில் எல்லாமே அர்த்தமுள்ளதாகத் தான் தெரியும். 


ஆனால் ஒரு curiosity க்காக, அனுபவத்துக்காக 20 வயதில் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கினால் அதில் ஆழம் இருக்காது. 


அது வெறும் over consumption ஆகவே இருக்கும்.


சின்னக் குழந்தைகள் ஆன்மிக கதா காலட்சேபம் செய்வது பொருத்தமாகுமா?


பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?


 40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?


நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம். 


நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை. 


அளவுக்கு மிஞ்சினால்.????

அமிர்தமும் நஞ்சன்றோ...???


சரி... இதற்கான தீர்வு தான் என்ன,..???,


மிகவும் எளிது.

விருப்பத்திற்காக நுகராதீர்கள். தேவையிருந்தால் மட்டும் நுகருங்கள்,


அப்படியென்றால், என் ஆசைகள் விருப்பங்கள் என்னாவது,,.???


உங்கள் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டதா என்று பாருங்கள், அதற்கு முன்னுரிமை தாருங்கள்,

அதன் பின் நீங்கள் விரும்புவதை நுகருங்கள், அந்த நுகர்வும் உடல் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் உங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டியது அவசியம். 


நீங்கள் விரும்பும், உங்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாத எதையும் கடன் வாங்கி நுகராதீர்கள்

Sarayu Raghavan

Wednesday, September 27, 2023

நல்ல கவிதையை "நைஸ் "என்போம்

 மனைவியை ஒய்ஃப் என்றோம்.

வாழ்க்கையை லைஃப் என்றோம். 

கத்தியை நைஃப் என்றோம். 

புத்தியை புதைத்தே நின்றோம் !


அத்தையை ஆன்ட்டி என்றோம்.

அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.

கடமையை டுயூட்டி என்றோம்.

காதலியை பியூட்டி என்றோம்!


காதலை லவ்வென்றோம். 

பசுவை கவ்வென்றோம். 

ரசிப்பதை வாவ் என்றோம். 

இதைதானே தமிழாய் சொன்னோம்!


முத்தத்தை கிஸ் என்றோம்.                                   

பேருந்தை பஸ் என்றோம். 

அளவை சைஸ் என்றோம். 

அழகை நைஸ் என்றோம் !


மன்னிப்பை சாரி என்றோம். 

புடவையை சேரி என்றோம்.

ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். 

தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!


மடையனை லூசு என்றோம். 

வாய்ப்பை சான்சு என்றோம்.

மோகத்தை ரொமான்ஸ் என்றோம். 

தமிழை அறவே மறந்தோம்!


அமைதியை சைலன்ஸ் என்றோம். 

சண்டையை வயலன்ஸ் என்றோம்.

தரத்தை ஒரிஜினல் என்றோம்.

தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!..வாட்ஸ்அப் உபயம்..

❤️❤️❤️❤️❤️❤️

Sunday, September 24, 2023

கனடாவிலிருந்து....

 நண்பர்கள் மூலமாக கனடாவில் பதிவிட்ட கடிதத்தின் தமிழ் வடிவம் . . . . . 


கனடா சகோதர்களுக்கு ஒரு கடிதம்!


உலக அமைதியை விரும்பும் நாடாகிய இந்தியாவின் ஒரு பெருமை மிகு பிரஜையாக இந்த கடிதத்தை கனடா நாட்டு நண்பர்களுக்கு எழுதுகிறேன்.


ஜஸ்டின் ட்ரூடோ என்ற பதவி ஆசை பிடித்த ஒரு தனிமனிதனால் பாழ்பட்டுப் போயிருக்கிறது இந்திய - கனடா உறவு.  


காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் ஆட்டிவிக்கின்றபடி ஆடிக் கொண்டிருக்கும் உங்கள் பிரதமருக்கு கண்டனங்கள்.   தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கு எந்த ஆதாரமுமில்லாமல் இந்தியாவின் மீது பழியை போட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் உங்கள் பிரதமர்.     இந்தியா திட்டவட்டமாக இந்தக் கொலைப் பழியை மறுத்திருக்கிறது.  


இந்தியாவிலிருந்து 11400 கிலோ மீட்டர் தூரத்தில் கனடா இருந்தாலும், இந்தியாவை அழிக்கும் முயற்சியில் பாகிஸ்தானின் கிளை அலுவலகம் போல கனடா செயல்படுவது வெட்கக்கேடானது.  


ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை ஒரு தீவிரவாதி என்று சொல்லாமல், அவனை ஒரு "ப்ளம்பர்", என்று சொல்லியிருக்கிறது உங்கள் அரசு.  அப்படியென்றால், அல்கொய்தா தலைவன்  பின்லாடனை ஏன் கட்டுமான இன்ஜினியர் என்று சொல்லவில்லை?   பதிலாக அவனை தீவிரவாத தலைவன் என்று ஏன் சொல்கிறீர்கள்?  அடுத்த நாட்டு பிரஜையாகிய பின்லாடனை, மற்றொரு நாட்டில் புகுந்து கொன்றதை ஆதரித்த நாடுகளில் கனடாவும் ஒன்றுதானே!   


அந்தக் கொலை இனிக்கும்.  இந்தக் கொலை கசக்கிறதா?


ஈராக்கில் இரசாயண ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லி அந்த நாட்டை நாசம் செய்து, அந்த நாட்டு அதிபர் சதாம் உசேனை கொன்ற அமெரிக்காவுடன் ஆதரவு நிலையில் இருந்தீர்களே!  அது என்ன நியாயம்?


உங்கள் நாட்டில் உங்கள் குடிமகன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லும் நீங்கள், உங்கள் குடிமகன்களால் இந்தியாவின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டிருக்கிறதே அதற்கு கனடா அரசு  பொறுப்பேற்க முடியுமா?  


இந்திய ஏஜன்ஸி மூலமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தனது அனுமானத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரர் ட்ரூடோ.  ஒரு பிரதமர் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.  


ஒரு சம்பவத்தை உங்கள் நினைவிற்கு கொண்டு வருகிறேன்.   சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் கொல்லப்பட்டார்.   இந்தக் கொலையில் சவுதி அரசின் தொடர்பை அம்பலப்படுத்தியது துருக்கி.  இந்த ஆதாரங்களே கொலைக்கு காரணமானவர்களை உலகத்திற்கு வெளிக்காட்டியது.  இதைப் போல ட்ரூடோவால் ஆதாரத்தை வெளிப்படுத்த முடியுமா?   


தெருவில் செல்லும் சாதாரண மனிதனைப் போல பொறுப்பில்லாமல் ஒரு பிரதமரால் பேச முடியுமா?  இவர் கிளப்பிய பிரச்னை இந்திய அரசுக்கு எதிராக சீக்கியர்களை தூண்டிவிட்டிருக்கிறது.  இதற்கு கனடா அரசு பொறுப்பேற்குமா?


அடுத்த நாட்டின் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்சியில் இருப்பவர்களே ஆதரவளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?  கனடாவின் நட்பு நாடுகள் கனட பிரதமரின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனவா?  இந்தியாவில் அல்கொய்தா இயக்கமோ, ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு செயல்பட அனுமதி வழங்கினால் உலக நாடுகள் ஒப்புக் கொள்ளுமா?  கனடா ஏற்றுக் கொள்ளுமா?


சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து உங்கள் பிரதமர் பேசியது சரியா?  அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் அவர் தலையிட்டது சரியா?  அவர் ஒவ்வொரு முறை பேசும் போதும் அது தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதற்காகத்தான் என்பதை நாங்கள் உணர்கிறோம்.  


உங்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முதல் முறையாக 2015ல் கனடாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.   அப்போது அவர், "இந்தியாவில் மோடி அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம்", என்று சொன்னார்.   இப்படி ஒரு ஒப்பீட்டை சொல்லும் போதே உங்கள் பிரதமரின் கேடு கெட்ட சிந்தனை வெளிப்பட்டுவிட்டது.  


இந்தியாவை கெடுப்பது ஜஸ்டின் ட்ரூடோவின் குடும்பத் தொழில்.   இவரின் தந்தை *பியரே எலியட் ட்ரூடோ* கனடாவின் பிரதமராக இருந்த காலத்தில் (Pierre Trudeau: 20-4-1968 to 03-06-1979 & 03-03-1980 to 29-06-1984)  காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படவில்லை.

   

1971ம் ஆண்டு இந்தியாவிற்கு ஐந்து நாட்கள் விஜயம் செய்தார்.   ஒட்டக சவாரி, காளைகளுடன் விளையாட்டு, கங்கை விஜயம், தாஜ் மஹால் விஜயம் என்று எல்லா இடங்களுக்கும் சென்று வந்தார்.   வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாத மனிதர், நாடு திரும்பியதும் இந்தியாவிற்கு எதிராக நஞ்சை கக்கினார்.   இந்திய அணு ஆயுத சோதனைக்கு எதிராக குரல் கொடுத்தார்.


1981ம் ஆண்டு, தல்வீந்தர் சிங்பார்மர் என்ற ஒரு தீவிரவாதி பஞ்சாபில் இரண்டு காவலர்களை சுட்டுக் கொன்றுவிட்டு கனடாவிற்கு தப்பிச் சென்றான்.  அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது கனடா.  


இவன் பாபர் கல்சா என்ற தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன்.   வெளிநாடுகளில் பல இந்தியர்களையும், அதிகாரிகளையும் தாக்கியவன்.   இவனை கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பிவைக்கும்படி  இந்திய அரசு அன்றைய பிரதமரான பியரே எலியட் ட்ரூடோவிடம் கோரிக்கை வைத்தது.  இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் பியரே ட்ரூடோ.   


இந்திய உளவுத்துறை பல எச்சரிக்கைகளை செய்தும் அத்தனை எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தது பியரே ட்ரூடோவின் அரசு.   இது மிகப்பெரிய இழப்பை உலகத்திற்கு கொடுத்துவிட்டது.


ஜூன் 1, 1985, காலிஸ்தான் தீவிரவாதிகளால் இந்திய உளவுத்துறை விமானத் தாக்குதல் வாய்ப்பிருப்பதாக ட்ரூடோ அரசை எச்சரித்தது.   இதையும் ட்ரூடோ அரசு பொருட்படுத்தவில்லை.   


23 ஜூன், 1985 அன்று ஏர் இந்திய விமானம் கனிஷ்கா, கனடாவின் டொரன்டோ நகரிலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்டது.   அதில் பயணித்தவர்கள் 329 பேர்கள். அந்த விமானத்தை நடுவானில் குண்டு வைத்து தகர்த்தது காலிஸ்தான் தீவிரவாத இயக்கம்.  அதில் இறந்து போனவர்வர்களில் பெரும்பாலானவர்கள் கனடா நாட்டு பிரஜைகள்.   கனடா நாட்டு தீவிரவாத தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்பட்டது இந்தத் தாக்குதல்.   இந்த குண்டு வைப்பின் மூளையாக செயல்பட்டவன் தல்வீர் சிங் பார்மர். இவனை பாதுகாத்தது அன்றைய கனட பிரதமர் பியரே ட்ரூடோ.   


இதே தல்வீர் சிங் பார்மர் 1992ம் வருடம் பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பது தனிக்கதை.   


இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியாவின் விசாரணைக்கு கனடா அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.   காலிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் எந்த வேண்டுகோளையும் ட்ரூடோ ஏற்றுக்கொள்ளவில்லை.    இறுதியாக காலிஸ்தான் தீவிரவாதிகளால் திருமதி இந்திரா காந்தி பலியானார்.


அன்று கனிஷ்கா விமான குண்டு வெடிப்பில் பலியான கனடாவைச் சேர்ந்தவர்களைப் பற்றி கவலைப்படாத கனடா அரசு, இன்று ஒரு தீவிரவாதியை தனது பிரஜை என்று உரிமை கொண்டாடுகிறது.   பொங்கி எழுகிறது!  இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?   அதுவும், அன்று கனடா நாட்டைச் சேர்ந்த பலரை கொன்ற கனிஷ்கா குண்டு வெடிப்புக்கு சம்பந்தப்பட்டவர்களுடன் இன்று கூட்டணி அமைத்திருப்பது கனடாவிற்கு பெருமையா?  


இவையெல்லாம், இப்போதைய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியவிற்கு எதிராக குழப்பத்தை விளைவிப்பதில் அவரது தந்தைக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை உணர்த்திய  நிகழ்வுகள்.  


உங்கள் பிரதமர் தனது பதவியில் நீடிப்பதற்கு ஜக்மீத் சிங் என்ற காலிஸ்தானிய தீவிரவாதிகளின் ஆதரவாளரின் ஆதரவு தேவைப்படுகிறது.   அதாவது ஜக்மீத் சிங்கிடம் உங்கள் பிரதமரின் குடுமி சிக்கியிருக்கிறது.   அவரை திருப்திப்படுத்த இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார் உங்கள் பிரதமர்.  இதை நான் சொல்லி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.   ஜக்மீத் சிங்கின் குரலைத்தான் உங்கள் பிரதமர் எதிரொலிக்கிறார்.  இதைவிட கேவலமானது ஏதுமிருக்காது.  


பஞ்சாபிலிருந்த தீவிரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.  இந்தியாவிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக அங்கு தஞ்சமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.   அவர்களின் மீது கனடா அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?   


ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள்.   இப்போது இந்தியாவில் ஆட்சியில் இருப்பது நரேந்திர மோடியின் அரசு.  காங்கிரஸ் அரசு அல்ல.   


இதை இனி வரும் காலங்களில் ஜஸ்டி ட்ரூடோ உணர்ந்து கொள்வார்.    


எது எப்படி இருந்தாலும் இரண்டு நாட்டு மக்கள் எந்த இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதில் இந்திய அரசு மிக கவனமாக இருக்கிறது.  இன்றைய தேதியில் கனடா பிரச்னைக்கு அதிநவீன அறுவை சிகிச்சை அவசியமாகிறது.  


அரசு, ஆட்சியம் எல்லாமே குடிமக்கள் நிம்மதியாக, அமைதியாக வாழவேண்டும் என்பதற்காகத்தான்.  அடுத்த நாட்டின் அமைதியைக் கெடுத்தால்தான் நம் நாட்டில் அமைதி நிலவும் என்பது தீவிரவாத சிந்தனை.  கனடா மக்களாகிய உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்றுதான்.   ஒரு பதவி வெறிபிடித்த ஒரு பிரதமரின் பேராசைக்காக குடிமக்கள் அனைவரும் கஷ்டப்பட வேண்டுமா?  


ஒரு தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுப்பவனும் தீவிரவாதிதான்.   பிரிவினைவாதிகளை ஆதரித்து, அதன் மூலம் ஆட்சியை தக்க வைக்க முயலும் கேடுகெட்ட பிரதமரின் அரசியல் வாழ்க்கையை முடித்து வையுங்கள்.    


ஒரு சந்தர்ப்பவாத, பதவி வெறிபிடித்த உங்கள் பிரதமர் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார் என்பதற்காக வெட்கப்படுங்கள்.   இவர் பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் கனடா தனது சிறப்பை இழந்து கொண்டிருக்கிறது.  ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் அவமானச் சின்னம்.  இதை இனிவரும் நாட்கள் உங்களுக்கு உணர்த்தும்.

Monday, September 18, 2023

Request to all ladies..

 Request all the Ladies to spare a few minutes - read the below message carefully and think about it . 


One friend.. 3 years earlier crossed 50..

Just about 8 days later an ailment was the excuse and a condolence message  on the group ...Sad .. she is no more ...  *RIP* 

Two months later I called her husband. A thought crossed my mind ..he must be devastated. Her spouse had a travelling job. Till her death she would oversee everything.. home.. education of their children... Taking care of the aged in-laws.. their sickness.. managing relatives..   _*everything,  everything, everything*_ 


She would express at times..my house.. my family needs me.. but should we not get appreciation... why are we taken for granted?

I called up. I thought her hubby must be lost.. to be responsible for evetything.. aging parents, Kids, loneliness at this age.. how must he be managing?

The cell phone rang for some time..the mind was perplexed.. After an hour he returned the call.. He apoligised that he could not receive the call.. He had started playing tennis for an hour at his club and meeting friends ensured he had a good time. He took a transfer to Pune.

"All well at home? " I asked, 

He replied, he had hired a cook .. he paid her a little more and she would buy the groceries and provisions. He had hired *full time caretaker* for his aging parents. "Managing.. have to ..etc.. " ....

I barely managed to say a couple of sentences and we hung up.

Tears welled up my eyes.

She was immovable from my vision. She had missed the school reunion for minor ailment of her mother in law.

Always looking forward for some appreciation and some applause.. she always said 


Today I feel like telling her..

No one is indispensable.

And no one will be missed.. it is just the play of our mind.

Perhaps it is the consolation.. A symbol of our understanding if you would like to call it that... That's the problem of putting others first.

You have taught them that YOU COME SECOND 


 *Reality bytes* :

 _After her death *two more maids* were hired and the house was in order_


We only measure our respect and our value.. ain't that true?

Then do enjoy life.. Remove the frame of mind that I am indispensable and without me the house will suffer..


 My message to all Ladies : 

Most importantly make time for *yourself* .. the *ME* time.. the time for the self..

 Get in touch with your girlfriends... Talk, laugh and enjoy

 Live your passion, live your life  

 Once in a while do things that love to do ...

 

 Don't look for your happiness in others, *you too deserve some happiness* because if you are not happy you cannot make others happy 

 Everyone needs you, and you too need your own care and love 

 Women should come forward to help and guide other women who are unable to handle their personal stress and give them a hand to uplift their confidence 


Let us HELP Ourselves and make this *LIFE WORTHWHILE*  

 we all have only one life to live,,(thro Whatsup) 

Wednesday, September 13, 2023

படித்ததுதான் ..ஆயினும் நினைவூட்டலுக்காக..

 தினம் ரூபாய் 86400/-.

  

ஒரு சின்ன கற்பனை.

விருப்பமுடன் படியுங்கள் 


ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.


பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும் 

உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.


ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு.


அவை -


1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத

பணம் " உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.


2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு கணக்கிற்கு மாற்றமுடியாது. 


3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு


4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்வரவு வைக்கப்படும்


5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.


6) வங்கி - 

"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான். 

வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.


இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?


உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?


உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்

இல்லையா? 


உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்

அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக

மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?


முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?


உண்மையில் இது ஆட்டமில்லை- 

நிதர்சனமான உண்மை😀😀


ஆம் நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.


அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் -

#காலம்.


ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின் 

அதியுன்னத பரிசாக 86400

வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.


இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.


அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.


ஒவ்வொரு நாள் காலையிலும்

புத்தம் புதிதாக நம்கணக்கில் 86400 வினாடிகள்.


எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை 

முடக்க முடியும்.


அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?


உண்மையில் 86400

வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு 

வாய்ந்தது அல்லவா?


இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? 

வாழ்க்கை என்பது ஒருமுறை தான் அதை மகிழ்ச்சியுடனும் , உறவுகளுடனும் , மனிதனேயத்துடனும் இறைவனுக்கு   ஏற்ற வாழ்க்கையாக வாழ்வோம் !

🕛🕐🕑🕒🕓🕔🕕🕖🕗🕘🕙🕚

வாழ்க்கையை வாழவே பணம் தேவை , பணத்தை சேர்க்க வாழ்வு அல்ல !

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.🏃

சந்தோஷமாகஇருங்கள் -

மீண்டும் பிறப்போம் என்பது நிச்சயம் இல்லை , மீண்டும் அம்மா,அப்பா, சகோதரர்கள் ,சகோதரிகள் ,நண்பர்கள் ,உறவுகள் வருவது இல்லை !

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - 🌈


வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்....

Tuesday, September 12, 2023

குழு தர்மம்..

 *நீங்கள் சேர்ந்த குழுவில் நட்பை எவ்வாறு பேணுவது.*


*1.* எல்லாவற்றையும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்.


*2.* குழுவில் உள்ளவர்களை விட யாரும் பெரியவர்கள் இல்லை.


*3.* குழுவில் அனைவரும் முக்கியமானவர்கள். 

ஆனால் குழுவிற்கு யாரும் முக்கியமானவர்கள் அல்ல.


*4.* ஒவ்வொருவரும் அவரால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும்.


*5.* எதுவுமே ஒரிஜினல் இல்லை..... அனைத்தும் ஃபார்வர்டுகள், 

(நீங்கள் இப்போது படிக்கும் செய்தி உட்பட) 😜


 *6.* எனவே எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை, 

சில சமயங்களில் மீண்டும் மீண்டும் பலரால் ஒரு  செய்தி  வரும், 

தொந்தரவு செய்யாதீர்கள், 

அவர்களை வரவேற்கிறோம். 

எல்லா இடங்களிலும் இது இயல்பானது.


*7.* யாரும் பணம் பெறுவதில்லை, எனவே இது அன்பு மற்றும் தன்னார்வ முயற்சிகள்.


*8.* உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழுங்கள், 

நீங்கள் தனித்துவமானவர்,

 உங்களில் சிலர் இல்லாமல் குழு சலிப்பாக இருக்கும்.


*9.* மற்றவர்கள் மட்டுமே பதிவுகள் இட வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள், 


ஆனால் உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்.


*10.* குழுக்கள் எப்பொழுதும் பொழுதுபோக்காக இருக்கும், 

எனவே இடுகையிடப்படும் அனைத்தையும் படித்து மகிழ்வோம்.

 ஒரு இடுகையைப் படித்து , அதை வளப்படுத்த ஒரு கருத்தை இடுங்கள்.


*11.* ஒவ்வொரு அரட்டையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,


 ஏனென்றால் நாம் அனைவரும் குழுவில் வேடிக்கை பார்க்க, கற்றுக்கொள்ள, 

ஒருவரையொருவர் மகிழ்விக்க இருக்கிறோம்.


 *12.* கடைசியாக, ஒருவர் போடும் இடுகையை நீங்கள் விரும்பாத நேரங்கள் இருக்கலாம். 

 அதைப் பாராட்டக் கூடிய வேறு யாராவது குழுவில் இருக்கலாம்.


13) குழு என்பதே முன் பின் தெரியாத பலர் இணைந்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வது தான்


14) குழுவில் வரும் நகைச்சுவைப் பதிவுகளை ஜாலியாக படித்து விட்டு கடந்து செல்லுங்கள் அவை சிரிப்பதற்காக மட்டுமே சிந்திப்பதற்கு அல்ல

உணர்ச்சிவசப்பட்டு எதிர் கேள்விகள் கேட்காதீர்கள் 


15) ஒரு பதிவுக்காக பதிவிட்டவருடனோ மற்ற குழு உறுப்பினர்களிடமோ வீண் சண்டையை இழுக்காதீர்கள் 


ஒருவருக்கு சரி எனப்படுவது மற்றவருக்கு தவறு எனப் படலாம் 


பல விதமான சிந்தனை / கருத்துகள் / கொள்கைகள் / நம்பிக்கைகள்  கொண்டவர்கள் இணைந்தது தான் ஒரு குழு என்பது 


*இந்த குழுவில் அனைவரும் சமம் மற்றும் முக்கியமானவர்கள்

 என்பதை நினைவில் கொள்ளுங்கள்.👍👍                  மகிழ்வித்து மகிழ்வோமே..👍👍😊💕💕

Saturday, September 9, 2023

நல்லதோர் வீணையாய்...

  


"

நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்

அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது

Monday, September 4, 2023

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு..

 ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.🍋 #அன்பு_செய்வீர் 🌳 


பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,


இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.🍋 🍋 


உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார், 


உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம்,


ஏங்க.. பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.


உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார்,


ஆனாலும், தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார்.


நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம்

அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார்.


தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு,

அந்த பாட்டியிடம்,


அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை

அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.ஷ...ரு🌳 


உடனே அந்த பாட்டி புன்னகைத்துவிட்டு, 

அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படி குறை கூறுவது போல கூறி,கொடுத்து சாப்பிட வைக்கிறான்.


இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான், 


நான் எடை அதிகமாக பழங்களை போடுவதில்லை,மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்துவிடுகிறது என்றார் அன்போடு....,


இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தானேங்க

ஜீவன் இன்னும் இருக்கு.....


அன்பை விதையுங்கள்...அதையே அறுவடை செய்வீர்கள்.. ஷ...ரு🌳


Teachers  day  wishes, ஆசிரியர்  தின வாழ்த்துகள்வாட்ஸ் அப்பில் ரசித்தது..

Thursday, August 31, 2023

படி(கு )த்தறிவோம்

 உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று.....

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!


இந்துக்களின் காலக்கணக்கு,

உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...

கி.பி.1947 - பாரத சுதந்திரம்

கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்

கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்

கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்

கி.பி 58 - சாலி வாகன சக வருசம்

கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்

கி.மு 509 - புத்தர் தோற்றம்

கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்

கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்

கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்

கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்

கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்

கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்

கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்

கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்

கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்

கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்

கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு

கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

*உண்மை இதுதான்*

 

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...


நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..


*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,

காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?


சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்

பாா்க்கும்படி வைத்து

மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..


இன்னும் இது போன்ற எத்தனையோ கட்டிடக்கலை..... தொியாமல் கட்ட முடியாது.!


*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.


*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.


*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.


*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.


*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.


*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.


*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.


*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.


*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.


*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.


*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது. 


*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.


*Anomaly Scan / Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.


இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..


இன்னும் சொல்ல வேண்டுமானால்,


ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...


இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.


லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு

கிடையாது.


ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது.


இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..


ஆனால், இதை நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,


*திருமூலா் பெருமகனார்* அற்புதமாக தன் ஞானத்தினால்,


*லட்சமாக உருவெடுத்து*  *ஆயிரம் ஆகி*

*நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா்*


என்று சொல்லியிருக்கிறார்.


எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.


- இதைப் பகிர பெருமை கொள்கிறேன்.

அறிவோம் முன்னோர் மகிமை.!!!🙏🏻🌹🙏🏻

Wednesday, August 30, 2023

Yes..age is just a number

 C. Radhakrishna Rao, retired at the age of sixty and went to live with his daughter in America along with his grandchildren.  


There, at the age of 62, he became a professor of statistics at the University of Pittsburgh and at the age of 70, he became the head of the department at the University of Pennsylvania.


US citizenship at the age of 75. National Medal For Science at the age of 82, a White House honor.  


Today, at the age of 102, he received the Nobel Prize in Statistics. 


In India, the government has already honored him with Padma Bhushan (1968) and Padma Vibhushan (2001).


Rao says: No one asks after retirement in India.  Colleagues also respect power and not scholarship. 


At the age of 102, receiving a Nobel while in good physical condition, it is probably the first example. An event that should be taken into account by all of us ! 


Age is just a number. Willingness to work and excel always matter.


 *Harekrishna*

Thursday, August 10, 2023

அந்த நாள் ...

 அந்த. நாட்கள் மீண்டும் வந்திடாதோ?


1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே...WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF.


• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்.


• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.


• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.


• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததிலலை.


• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.


• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.


• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.


• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.


• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.


• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.


• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.


• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.


• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள் நாங்கள்.


• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்.


• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல.


• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.


• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை.


• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.


• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.


• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.


• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர்.


• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.


• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.


• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.


• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.--

Friday, August 4, 2023

தமிழைக் காப்போம்

 சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!

-முரளி சீதாராமன்

Murali Seetharaman 

பொருள் புதிது தளம்


தமிழகத்தில் அடிக்கடி சமஸ்கிருதத்துக்கு எதிராக முழங்குவது, எளிய அரசியல் உத்தியாகத் தொடர்கிறது. அந்த மேதாவிகளுக்காகவே இதனை எழுதி இருக்கிறார் கட்டுரையாளர்.  


நிதி, நீதி, விதி, வீதி, நியாயம், தர்மம், அக்கிரமம், அராஜகம், மனம் (மனஸ்), க்ராமம், நகரம், பந்தம், சம்பந்தம், சம்பத்து, மரியாதை, சன்மானம், பாபம், 


புண்யம், காரணம், விசேஷம், பாக்யவான், பாக்கியம், அதிர்ஷ்டம், துரதிருஷ்டம், திருஷ்டி, பாதம், சிரசாசனம், பாகம், பாத்யதை…  


காரியம், பலன், சுபகாரியம், மங்களம், சகுனம், ஸ்தாவர ஜங்கமம் (சொத்து) கீதம், வாசனை, பதவி, (மூன்று) போகம், யோகம், சாந்தி, குணம், கோபம், ரகசியம், சந்தோஷம், துக்கம், ஜனனம், மரணம், ஜன்மம், புனர் ஜன்மம், பூர்வ ஜன்மம்…


பழம் (फल), ரசம், வர்ணம், ஆகாசம், அவகாசம், அவசரம், அற்புதம், அதிகம், ஆதி, இஷ்டம், உற்சாகம், உத்வேகம், உத்யோகம், உதயம், ஏகம், ஏகாந்தம், ஐக்கியம், பஞ்சபூதம், மூலம், மூலாதாரம், பலம், குணம், லாபம், நஷ்டம், பலாபலன், சிந்தனை (சிந்தனா) கற்பனை (கல்பனா), ரௌத்ரம், சாந்தம், 


ஆச்சரியம், உபயோகம், பிரயோகம், பிரயத்தனம், தனம், தானம், லட்சியம், கணிதம், சாஸ்திரம், சரித்திரம், சம்பவம், சாதகம், பாதகம்,


சதுரங்கம், சமர்த்து, சாமர்த்தியம், சேனை, சேனாபதி, உதார குணம், மூர்த்தி, முஹூர்த்தம், மௌனம், மோகம், காமம், கஷ்டம், கவனம், கணம், கோஷ்டி, கோஷம், கோ தானம், பாதம், பங்கஜம், ஸ்தூபம், தீபம், அக்னி, தவம் (தபம்), தாபம், பிரதாபம், புஸ்தகம், போஜனம், விரதம், வியர்த்தம், விஸ்வரூபம், விசேஷம்… 


தைரியம், பயம், பீதி, சௌக்கியம், சௌகரியம், சுந்தரம், சுந்தரி, சௌந்தர்யம், சொப்பனம்,  


நதி, சமுத்திரம், பூலோகம், லோகம், நட்சத்திரம், சூரியன், சந்திரன், கிரகம், 


வாசம், வசனம், உச்சம், நீசம், மத்தி, மத்யமம், மத்ய, புஷ்பம், பீஜம், விருட்சம், 


புத்தி, ஆலோசனை, அபிப்ராயம், ஆதி, அந்தம், ஜன்மம், புனர் ஜன்மம், தோஷம், தீரம், லட்சணம், உதரம், சிரம், அங்கம், 


உத்தமம், அந்தரங்கம், பகிரங்கம், பிரியம், தாம்பத்யம், சயனம், சாபம், சங்கீதம், குசலம், போஷணம், பட்சணம், பட்சி, பாலகன், நடனம், நாட்டியம், சலனம், நிஸ்சலனம், நிர்வாணம், நேத்ரம், கதி, அதோகதி, ஸ்தானம், சாமான்யம்…


சித்தாந்தம், தத்துவம், கதை (கதா), கவிதா (கவிதை), காவியம், நாடகம், நிதர்சனம், தத்ரூபம், தாட்சண்யம், தனநாசம், நாசம், விருத்தி, அபிவிருத்தி…


தேகம், தேசம், தெய்வம், தேவாலயம், துஷ்ட, ஜந்து, அல்பம், ஆரோக்கியம், அலங்காரம், அவதாரம், அஞ்சனம், 


சரம், சஞ்சலம், சந்தேகம், நிவாரணம், நிர்மூலம், பரிபாலனம், பூர்ணம், போதனை, பரிசோதனை, பரிவர்த்தனம்,  


முக்தி, பக்தி, வியாபாரம், வியாபாரி, மோட்சம், விமோசனம், ஸ்வதந்திரம் (சுதந்திரம்), சுயதரிசனம், விஸ்வாசம்,


பூமி, பிரபஞ்சம், மேகம், பூலோகம், சொர்க்கம், நரகம், பாதாளம், பவித்ரம்,


இப்படி நம்மையும் அறியாமல் நாம் பேசும் சமஸ்கிருதச் சொற்கள் ஆயிரக்கணக்கில்!  


இதெல்லாம் எந்த ஞானமும் – அடடே இதுவும் சமஸ்கிருதம்! – இல்லாத கும்பல்தான் தமிழை அழித்துவிடும் என்று புலம்புகிறார்கள்! 


இத்தனை சொற்கள் – இவை உதாரணம்தான் – (உதாரணம் – இதுவும் சமஸ்கிருதம்தான்!)  கலந்ததால் தமிழ் என்ன அழிந்தா போயிற்று?


 அதே சமயம்,


“என் டாட்டரை ஸ்கூல் என்ட்ரன்ஸ் கிட்ட டூவீலர்ல கொண்டு ட்ராப் பண்ணிட்டேன்!”… 


 “என் ஹஸ்பெண்ட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்ட்ரன்ஸ்ல டென் மினிட்ஸ் வெயிட் பண்ணினால் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்னு மெஸேஜ் கொடுத்திருக்காரு!”


– என்பது மாதிரி  ‘தங்கிலீஷை’ வேண்டுமென்றே ஊக்குவிக்கிறார்கள்! 


நமது குழந்தைகள் தமிழில் எழுதாமல், ஆங்கில எழுத்துகளைக் கொண்டு டிரான்ஸ்லிட்டேஷன் (TRANSLITERATION) முறையில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள்.


தமிழ் அழிவதும் – அழியப் போவதும்


சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!வாட்ஸ் அப் பகிர்வு

Wednesday, July 19, 2023

படித்ததில் பிடித்தது..

 என் பள்ளிக் காலத்தில், படிப்பு வராத மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம்,

 

*‘உனக்குப் படிப்பு வராது,* 


*நீ மாடு மேய்க்க போயிடு’* 


என்பதாகும்.


என்னுடன் எட்டாங்கிளாஸில் அய்யாத்துரை என்று ஒரு மாணவர் படித்தார். 


ஏன் 'ர்' போட்டு அழைக்கிறேன் என்று யோசிப்பீர்கள்!!  


அப்போதெல்லாம் கம்பல்சரி பாஸ் கிடையாது. 


பாஸ் ஆகாவிட்டால் ஒவ்வொரு வகுப்பிலும் பாஸ் ஆகிற வரை படிக்கவேண்டும்.


அய்யாத்துரை மூன்று நாட்கள் முக ஷவரம் பண்ணாமல் இருந்தால், முகம் கஞ்சா கருப்பு போல ஆகிவிடும்; 


அவ்வளவு மயிர்வளம்! 


காரணம், ஒவ்வோர் வகுப்பிலும் நல்ல Foundation! 


அந்த அய்யாத்துரையிடம் ஆசிரியர் வழக்கமான அந்த வாக்கியத்தைச் சொன்னார். 


துரதிஷ்டவசமாக, அந்த அய்யாத்துரை நிஜமாகவே அவ்வப்போது மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்!


‘மாடு மேய்க்கிறது ஈஸியா?’ என்றார், ஆசிரியரிடம்.


‘இல்லையா பின்னே?


 படிப்பு இல்லாதவந்தானே மாடு மேய்க்கிறான்?’ 


என்றார் ஆசிரியர்.


‘அம்பது மாட்ல எது கன்னியப்பச் செட்டியார் மாடு, எது பாண்டிய நாடார் மாடுன்னு உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா?’


ஆசிரியர் அதிர்ந்தார்.


‘எல்லா மாடும் ஒரே இடத்துலதான் மேயுமா?’


அடுத்த கேள்வி இன்னும் அதிகமாகத் தாக்கியது.


‘எது எங்க மேயும்ன்னு பாத்து ஓட்டிக்கிட்டு வருவீங்களா?’


இப்போது ஆசிரியர் பாண்டியராஜன் போல விழித்தார்.


‘மாடு எப்ப சாணி போடும்ன்னு தெரியுமா?’


இப்போது விழி ஆடு திருடின கள்ளன்போல் ஆயிற்று.


‘சாணி மொத்தத்தையும் கூடைல பிடிப்பீங்களா? 


வரட்டி தட்டத் தெரியுமா? 


வரட்டியில ஏன் வைக்கோல் போடணும்ன்னு தெரியுமா? 


அது ராடு வச்ச கான்க்ரீட்போல ஸ்ட்ராங்குன்னு தெரியுமா?’


கேள்விகள் சரமாரி ஆயின.


*‘எனக்கு மாடு மேய்க்க வரல்லைன்னுதான் எங்கப்பா படிக்க அனுப்பிச்சார் தெரியுமா ?!!* 


*நீ மாடு மேய்க்க லாயக்கில்லை, பேசாம படிச்சி வாத்யார் ஆயிடுன்னு அனுப்புச்சாரு’*


*அதற்கப்புறம், அந்த வாத்தியார் யாரையுமே நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னதே இல்லை!*



😍😍😍😍🤓🤓🤓🤓🤓😍😍😍😍