Tuesday, December 31, 2024

இன்றோடு..

 இன்றோடு.......

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Saturday, December 14, 2024

மாதங்களில் "அவன்' மார்கழி

 *" மார்கழி மாதம்*

 *பிறக்கவிருக்கிறது*


*மார்கழி ஸ்பெஷல்* ! 

(*சூரிய பகவானின் தனுர் ராசி பிரவேசம்*)


🙏 *மார்கழி மாதத்தின்*

 *சிறப்புகள்*🙏


    'மாதங்களில்  நான் மார்கழியாக இருக்கிறேன்'  என   ஶ்ரீகிருஷ்ணர் கீதையில்  கூறியிருக்கிறார். மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும்.  (பீடு என்றால் பெருமை)

இம் மாதம்  தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும்.  மனிதர்களுக்கு  ஒரு வருடம் என்பது  தேவர்களுக்கு ஒரு நாள் என்பர்.  தை மாதத்திலிருந்து  ஆனி மாதம் வரை  உத்ராயண புண்ணிய காலமாகும்.  அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம்.   எனவே  மார்கழி என்பது தேவர்களுக்கு  வைகறை  பொழுதைப் போன்றது. மிகவும்  சிறப்புடைய மாதம் மார்கழி.  எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு  உகந்தது. 


      தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத்  'தனுர் மாதம்" எனவும்  அழைப்பர். இம்மாதத்தில்  அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது  மக்களின் வழக்கம்.  ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப்  பக்தர்கள்  இம்மாதத்தில்   மேற்கொள்ளுகின்றனர். 

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.


        மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில்  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் 'என்றும் பதினாறு  வயது'   எனச் சிவபெருமானிடமிருந்து வரத்தைப் பெற்ற  மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மிருத்யுஞ்சய ஹோமம்( யமனைவெல்லும் வேள்வி) செய்ய இம்மாதம் சிறந்தது.


          மார்கழி  மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.


🙏 *ஆருத்ரா தரிசனம்*🙏


       சிவபெருமானின்  "ஆருத்ரா தரிசனம்" மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது

ஆடலரசனான  நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான்  அக்னிவடிவாக நின்ற நாள்  என்பதால்  திருவாதிரை, சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாகிறது;"ஆதிரையான்" என்று சிவனை அழைப்பர்.


          இவ்விழாவைப்   பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின்போது திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும். சிவபெருமானுக்குப்   படைக்கப்படுகின்றன. 'திருவாதிரைக்கு ஒருவாய் களி' என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.

அன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு மேற்கோள்வோர்,  நடனகலையில் சிறக்கலாம்.


🙏 *வைகுண்ட ஏகாதசி*🙏


         வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.

திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது மிக முக்கிய நிகழ்சியாகும்.


        வைகுண்ட ஏகாதசி அன்று   திருமாலுக்குப்  பிரியமான  துளசி  தீர்த்தத்தை  மட்டுமே  உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தைத்  தரும்.    இந்நாளில்  வைகுண்டத்தின் வாசல் திறந்தேயிருக்கும் என்றும்,  அன்று  மரணிக்கின்ற உயிர்கள், நேரே வைகுண்டத்திற்குச் செல்லும்!  என்பதும் ஐதீகம்.


🙏பாவை நோன்பு. 🙏


         ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாயணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமானதால்  இவ்விரதம், பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று.


       பூமாதேவியின் அவதாரமான  ஸ்ரீ ஆண்டாள், பாவை நோன்பினை மேற்கொண்டு, அரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் ம


னதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள்.


           எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய  திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.

திருமணமான பெண்களோ,  மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.


🙏திருவெம்பாவை நோன்பு🙏

          _மாணிக்கவாசகர்

   

      திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும்.

இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர்.


       இவ்விரத்தினை பெரும்பாலும் கன்னிப்பெண்கள் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தின்போது  மாணிக்கவாசகர்  அருளிய  'திருவெம்பாவை"  பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வழிபாட்டில்  சிவபெருமானுக்குப்  பிரியமான பிட்டு படைக்கப்படுகிறது. இதனால் இவ்வழிபாடு "பிட்டு வழிபாடு" என்று அழைக்கப்படுகிறது.


🙏முருகன்__படி உற்சவம்🙏


          ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி மலைமேல் உள்ள முருகன் கோவில்களில் படி உற்சவம் என்ற விழா சிறப்பாக நடைபெறுகிறது.

அன்றைய தினம் பக்தர்கள் குழுக்களாக மலைபடிக்களின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுகின்றனர். இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.


🙏விநாயகர் சஷ்டி விரதம்🙏


            இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.  இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும்  உணவினை உட்கொள்கின்றனர் விரதமிருப்போர்  கடைசிநாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர்.

விரதத்தின் நிறைவு நாள் அன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத்துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.


🙏அனுமன் ஜெயந்தி🙏


           மார்கழி மாதத்தில்  மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தியன்று   விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.கோயில்களில் 

அனுமனிற்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.


🙏உற்பத்தி ஏகாதசி🙏


          மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி'  என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட சகல  செல்வங்களும் கிடைக்கும்;  எதிரிகளை  வெல்லலாம்.


மார்கழி  மாதத்தில் 63 நாயன்மார்களில்_ வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகின்றது.


பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.


         இரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில்   பிறந்தவர்களாவர்.

மார்கழி  மாதத்தில்   வாசலில்  கோலம் இட்டு சாணத்தைப்  பிடித்து  கோலத்தில் வைத்து,  பிள்ளையாரரைப் போற்றி வழிபடுகின்றனர் மக்கள்.


               🙏   தேவர்கள்  இறைவனை துதித்து  வழிபடும் மாதம் மார்கழி.  இறைவனின்  அம்சமாகவேயுள்ள  மார்கழி மாதத்தில்   பரம்பொருளின் எல்லா தெய்வ வடிவங்களும் போற்றப்படுகின்றன.  எனவே  பீடுடைய ( பெருமையை உடைய) மாதமான  புனிதமான மார்கழி மாதத்தை   வரவேற்கப் பக்தர்கள் நாம் அனைவரும்  தயாராவோம். மார்கழி மாதம் பிறக்க இருக்கின்றது.  சூடிக் கொடுத்தச் சுடர்கொடியான ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய  திருவெம்பாவையையும்  பாடி  இறையருளைப் பெறுவோம்.🙏


ஸர்வம் ஸ்ரீ

 கிருஷ்ணார்ப்பணம் 🙏 (வாட்ஸ் அப் பகிர்வு)


ஆண்டாள் திருவடிகளே

சரணம் 🙏


ஓம் நமோ நாராயணாய

ஓம் நமோ நாராயணாய

ஓம் நமோ நாராயணாய


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பகிரவும்..அவசியமெனில் பயன்படுத்தவும்..

 *லஞ்ச ஒழிப்பு துறை – விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை பதிவு அனைவரிடமும் பகிருங்கள்*


அனைத்து பொதுமக்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!


நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை: தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பது, தாமதப்படுத்துவது, அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை தடுக்க தீவிரமாக செயல்படுகிறது.


ஒன்றிய அல்லது மாநில அரசு அலுவலர்களின் செயல்பாடுகள் உங்கள் வாழ்வாதாரத்தை பாதித்தால், நீங்கள் இதைப் பற்றிய புகார்களை உறுதிப்படுத் தரமான ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.


புகார் அளிக்க முடியும் காரணங்கள்:


1. நியாயமான கோரிக்கைகளை நிராகரித்தல்:

உங்கள் உரிமையான கோரிக்கைகளை மறுக்க வேண்டிய காரணமின்றி நிராகரிப்பது. நிராகரிப்பதற்கான காரணத்தை சொல்லாமல் அலட்சியம் காட்டுவது.


2. தாமதப்படுத்துதல்:

உங்களின் கோரிக்கைக்கு தேவையற்ற தாமதம் செய்வது.


3. அலட்சியம் காட்டுதல்:

உங்கள் கோரிக்கையை கவனிக்காமல் புறக்கணிப்பது.


4. மறைமுக லஞ்ச கோரிக்கை:

லஞ்சம் கொடுக்க தூண்டுவது, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மறைமுகமாக பணம் அல்லது பொருள் கேட்கும் நிலை. இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெற முயற்சிப்பது.


புகார் அளிக்க தேவையான முக்கிய ஆதாரங்கள்:


1. கோரிக்கை தொடர்பான ஆவணங்கள்:


நீங்கள் அளித்த கோரிக்கையின் பதவி ஏற்ற பதிவு (பதிவு எண், நாள்).


2. ஆடியோ/வீடியோ ஆதாரம்:


அதிகாரி நேரடியாக அல்லது மறைமுகமாக லஞ்சம் கேட்கிறதற்கான பதிவுகள்.


3. அலட்சியத்தின் ஆதாரம்:


கோரிக்கையை சமர்ப்பித்த பின்னரும் செயல்பாடுகள் இல்லாததற்கான சான்றுகள்.


4. செயல்முறை விளக்கம்:


கோரிக்கையின் தன்மை, ஆவணங்களின் விவரங்கள் மற்றும் சம்பவத்திற்கான நேரம், இடம்.


*லஞ்ச ஒழிப்பு துறையின் தொடர்பு தகவல்கள்:*


தொலைபேசி: 1064


மின்னஞ்சல்: dvac@tn.gov.in


இணையதளம்: www.dvac.tn.gov.in



புகார் அளிக்க சுலபமாக அணுகவும், உங்கள் தகவல்கள் பூரணமாக பாதுகாக்கப்படும். 🙏


லஞ்சம் ஒழிக்க செய்ய வேண்டிய முக்கிய ஆலோசனைகள்:


1. உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பது:


உங்கள் கோரிக்கைகளை நேர்மையாக பதிவு செய்து நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும். உங்க நியாயமான கோரிக்கையை நிராகரித்தால் தாமதப்படுத்தினால் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க சொல்லுங்கள் நிராகரிப்பது எந்த சட்ட பிரிவின் கீழ் நிராகரித்துள்ளீர்கள் தாமதப்படுத்துகிறீர்கள் என்று. 


2. உண்மையான ஆதாரங்களை சேகரிக்கவும்:


அதிகாரிகள் உங்களை தாமதப்படுத்தினால் அல்லது லஞ்சம் கேட்கிறார்கள், நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து, அதிகாரிகளை மாற்றி மாற்றி பார்க்கச் சொல்லி அலட்சியப்படுத்தி, சரியான பதில் கொடுக்காமல் லஞ்சம் கொடுக்க தூண்டுகிறார்கள் என்றால் சரியான சான்றுகளுடன் ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறைல் தாமதிக்காமல் உடனடியாக புகார் கொடுங்கள், உங்கள் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும். 


3. பொதுமக்கள் தங்களின் உரிமைகளை நினைவில் கொள்ளுங்கள்:


உங்கள் உரிமைகளுக்கு போராட தயங்க வேண்டாம்.

அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே லஞ்சம் ஒழிக்க முடியும்.


"ஒன்றிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க, உங்கள் ஆதரவை வழங்குங்கள்! லஞ்சத்திற்கு இடமில்லாத சமூகத்திற்காக, நீங்கள் லஞ்சம் ஒளியும் வரை ஒற்றுமையாக பகிருங்கள்." 🙌

Wednesday, December 11, 2024

புலி வேட்டை...

 அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்


யானையக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேடையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Friday, December 6, 2024

அறிந்து தெளிவோமா...

 *மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!*


ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..


இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..


தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..


அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..

ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.


ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..


மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..


இங்கு வெள்ளையன் 

வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.


வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...


 வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..


தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...


 புகையிலையும் அப்படி வந்ததே.


இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.


 உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.


வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான், 

வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.


கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.


கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.


தேங்காய் இருந்த 

இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌


மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.


நோய்கள் பெருகின..


ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...


 ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட் 

இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..


ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..


அத்தோடு விட்டானா?


அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.


 விளைவு..?


தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...


சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.


 சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...


ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..


நோய் பெருகிற்று....


அதாவது சூடான பூமியில் சூடு 

கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...


வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?


குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.


உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..


இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..


எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.


இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...


பரிதாபம்.


காரணம்,  அவற்றுக்கு உண்மையான 

பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....


அவை என்ன செய்யும்?


எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...


 ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!


நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார் 

நிலையங்கள் எப்படி இருக்கும்?


எதையோ தின்று 

எதையோ குடித்து, 

எதையோ புகைத்து, எதையோ மென்று 

இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்


எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..


ஆப்ரிக்காவிலும் 

அரேபியாவிலும் காப்பி இருந்தது..


தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது. 


பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!


புரிகிறதா...?


இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..


பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,

இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது. 


 காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..


அவை இன்றியும் வாழமுடியும்...


அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.


 பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல. 


விஷம் அவை..


இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன. 

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது


ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை  ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும் 

காணலாம்..


தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..


துளசி போல் அருமருந்தில்லை..


அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.


தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..


தேர்களில் தெய்வங்களுக்கு 

வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.


உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...


அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி 

இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.


அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.


சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..


அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும் 

நோய்க்கு இடம் கொடா...


மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..


இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..


அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..


கருத்தரிப்பு சிக்கல் 

சிசேரியன் என மறுபுறம்.


 மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..


பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..


அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்...  மாறாக அதெல்லாம் பழமை என 

ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..


அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது


 இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..


அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...


நாம் பாரம்பரியத்தை 

மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது... 

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..


ஆம். 


மாறாக,  கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும் 

ஆகபோவது ஒன்றுமில்லை...


நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..


 அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...✍🏼🌹(படித்ததில் பிடித்தது)

Tuesday, November 26, 2024

தீதும் நன்றும்....

 _*இதைவிட ...  யார் உலக பாடத்தைச் சொல்லித் தர முடியும்.......?????!!!!!*_       இன்று கதைகளில்லாத பதிவு... 

           

_*சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஓன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது.*_


_*'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே*_ _*பிரபலமாகி வருகிறது. பாடலின்*_


_*எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.....*_


_*முழு பாடலும்... அதன் பொருளும்....*_


_*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*_


_*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*_


_*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*_


_*சாதலும் புதுவது அன்றே;...*_


_*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;*_


_*முனிவின் இன்னாது என்றலும் இலமே;*_


_*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*_


_*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*_


_*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*_


_*முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*_


_*ஆதலின் மாட்சியின்*_


_*பெயோரை வியத்தலும் இலமே;*_


_*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*_


_*கணியன் பூங்குன்றனார்*_


_*"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."*_


_*எல்லா ஊரும் எனது ஊர்....எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,*_


_*அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது சுகமானது.*_


_*"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."*_


_*தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை. எனும் உண்மையை,உணர்ந்தால்,*_


_*சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.*_


_*"நோதலும் தனிதலும் அவற்றோ ரன்ன...."*_


_*துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை, மனம் பக்குவப்பட்டால், அமைதி அங்கேயே கிட்டும்...*_


_*"சாதல் புதுமை யில்லை.."*_


_*பிறந்த நாள் ஒன்று உண்டெனில், இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*_


_*இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது எல்லோருக்கும் பொதுவானது....*_


 

_*இந்த உண்மையை உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால் எதற்கும் அஞ்சாமல், வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.*_


_*"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே*_


_*முனிவின் இன்னாது என்றலும் இலமே."*_


_*இந்த வாழ்க்கையில் எது, எவர்க்கு, எப்போது, என்னாகும் என்று எவர்க்கும் தெரியாது. இந்த வாழ்க்கை மிகவும் நிலை அற்றது. அதனால்,இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம்...*_


_*துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.*_


 

_*"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."*_


_*இந்த வானம் நெருப்பாய், மின்னலையும் தருகிறது. நாம் வாழ மழையையும் தருகிறது. இயற்கை வழியில்அது,அது அதன் பணியை செய்கிறது. ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல, வாழ்க்கையும், சங்கடங்களில் அவர், அவர் ஊழ்படி அதன் வழியில் அடிபட்டு போய்கொண்டு இருக்கும். இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...*_


_*"ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;*_


_*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."*_


_*இந்த தெளிவு பெற்றால், பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ள சிறியவர்களைப் பார்த்து ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம். அவரவர் வாழ்வு அவரவர்க்கு. அவற்றில் அவர், அவர்கள் பெரியவர்கள்...*_


_*இதை விட வேறு எவர்*_


_*வாழ்க்கைப் பாடத்தை*_


_*சொல்லித் தர முடியும்?*_


_*வாழ்வினிது*_

_*சிந்தித்து செயலாற்றுங்கள்._

Wednesday, November 20, 2024

நமக்குள்ளே ...

 எந்தவொரு சூழ்நிலையிலும்

ஆனந்தமாக இருக்க....

 

ஓஷோ சொல்லும் வழிமுறை..

 

அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில  அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும்  முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே  இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

 

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல்  இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ  வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும்  மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

 

ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு  மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

 

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு  ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த  நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை  படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும்  உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

 

அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

 

 ''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.

 

 உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.  அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு  உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள்  குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி  விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.


நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை  விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும்  அதுதான்!

 

நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.

 

 'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால்  காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

 ''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள்  குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே  உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

 

ஓஷோ நமக்குச் சொல்கிறார்:  ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ  எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான  காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக  இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய்.  அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப  நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ  வெறுப்படைகிறாய்'' என்கிறார். 

 

ஓஷோ....(அன்றாடம் நாம் தொலைக்காட்சி மூலமும் செய்தித்தாள்கள் மூலமும் பெறுகிற செய்திகளும் தகவல்களும்அந்த நாய்களைப் போலவே எதிர்மறை வகையானவைகளாகவும் நம் தூக்கத்தைக் கெடுப்பவைகளாகவுமே உள்ளன.ஓசோ அவர்களின் கூற்றுப்படி அவைகளை உள்ளே ஏற்றிக் கொள்ளாது வாழப் பழகுவோம் )

Friday, November 15, 2024

படித்ததில் பிடித்தது

 1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து...


திருநெல்வேலி-

பாளையங்

கோட்டை இரட்டை நகரங்கள். 


இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு,


ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரை புரண்டோடும். 


ஆற்றைக் 

கடந்திடப் படகில் தான் பயணித்திட

வேண்டும்


படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தலும் வேண்டும்,


குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்று விடவும் முடியாது


படகில் இடம் பிடித்திட முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகி

விட்டது,


சமூக

விரோதிகளின் திருவிளை

யாடல்களுக்குப் பஞ்சமிருக்காது


களவும்,

கலகமும் குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை,


1840-ஆம் 

ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு, 

E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 

5 நாட்களே ஆன நிலை,


தாமிரபரணிப் படகுத் 

துறையில் குழப்பம் கலகம் நாலைந்து கொலைகள் 


எனவே, 

கலெக்டர் இரவு முழுவதுமே

தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தார்...


நெல்லை-

பாளை நகரங்களுக்

கிடையே பாலம் ஒன்றிருந்தால் சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார்,


ஆலோசனைக் கூட்டமும் 

அரை லட்ச மதிப்பீட்டில் பாலங் கட்டத் தீர்மானமும்

கேப்டன் பேபர் 

W.H. ஹார்ஸ்லி நமது சுலோசன முதலியார் (தாசில்தார்) பதவிக்குச் 

சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர் கலெக்டர் தாம்சன் தலைமையில் ஒன்று கூடினர்...


உடனடியாகப் பாலங்கட்டத் தீர்மானிக்கப்

பட்டது,


கேப்டன் 

பேபரிடம் 

பொறுப்பு ஒப்படைக்கப்

பட்டது,


வரைபடமும் தயாரானது...


760 அடி நீளம்,

21.5 அடி அகலம், 

60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள் அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது...


தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டி

லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடனே திகழ்ந்தது...


திட்ட மதிப்பீடு அரை லட்சம் கலெக்டர் உட்பட அனைவருமே மலைத்துப் போயினர்


இன்றைய மதிப்பில் 

அது பல கோடியைத் 

தாண்டி விடும்...


ஆனாலும் மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார்...


பணத்திற்கு 

என்ன செய்வது எங்கே போவது..??


மக்களிடம் 

வசூல் செய்வது என்று தீர்மானிக்

கின்றார்..


அதே சமயம் கலெக்டர் அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது...


யார் 

இந்த சுலோசன முதலியார்..??


திருமணம் தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர் இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள் தான் முதலியாரின் மூதாதையர்கள்...


கோடீஸ்வரக் குடும்பம்...


வீட்டில் தங்கக் கட்டிகள் பாளம் பாளமாய் அடுக்கி வைக்கப்

பட்டிருக்குமாம்... 


தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்

களாம்... 


கௌரவத்திற்

காகவே கலெக்டர் ஆபீஸில் உத்தியோகம்...


குதிரை 

பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர்...


நீளமான 

அல்பேகா' கருப்புக் கோட்டு ஜரிகைத் தலைப்பா அங்கவஸ்திரம் வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே  ஒரு கம்பீரமாக இருக்குமாம்...


மக்களிடம் 

வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை...


நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார்...


மனைவி வடிவாம்பாள் கவலைப்

படாதீர்கள் தூங்குங்கள் காலையில் பார்த்துக் கொள்ளலாம் 

என ஆறுதல் அளிக்கின்றார்...


தூங்கிய 

சுலோசன மு்தலியாரின் நினைவலை

களின் சுழற்சி,


அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார்...


வீர பாண்டிய 

கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது...


1799-ஆம் 

ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்

படுவதற்கு முன் கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே இவர் தந்தை இராமலிங்க முதலியார் தான்...


பின்னர், 

கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்த

புரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது...


மனைவி வடிவாம்பாள் குடும்ப வசதி 

ஒரே மகன் வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது.... என்றெல்லாம் நெஞ்ச்சத்

திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன் இரவுப் பொழுதைக் கழிக்கின்றார், 

ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார்...


அவரது 

தந்தை மொழிப்

பாலமாக (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை 

ஆற்றுப் பாலத்தில் போட முடிவு செய்கின்றார் 


கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாளும் மறுக்கவில்லை..


மறுநாள் காலையில் கலெக்டரிடம், பாலங்கட்ட 

ஆகும் மொத்தச் செலவையும் 

தாமே ஏற்றுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார்...


சொன்னதுடன் வெள்ளித் தாம்பாளத்தில் 

தன் மனைவி 

தந்த தங்க நகைகளையும் கொஞ்சம் பணத்தையும் அச்சாரக் காணிக்கை என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார்...


கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி திக்கு முக்காடிப் போகின்றார்,


வெள்ளையன்-

கருப்பன் பேதங்கள் காணாமல் போகின்றன.. 


மரபுகள் உடைகின்றன கலெக்டர், முதலியாரை, அப்படியே 

ஆவி சேர்த்து ஆலிங்கனம் செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார்...


பாலத் திருப்பணிக்குக் தனி மனிதர் 

தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது இன்றளவும் வரலாற்று உண்மை...


கலெக்டர் 

புது உத்வேகத்துடன் செயல்

படுகின்றார் பாலமும் கட்டிமுடிக்கப் படுகின்றது...


இன்றும் அது சுலோச்சனா முதலியார் பாலம் என்றே தான் அழைக்கப்

படுகிறது....


அப்பேர்பட்ட பாலத்துக்குத்

தான் இன்றைக்கு பர்த் டே...


திறப்பு 

விழாவில் சுலோச்சன முதலியார் முன் நடக்க....

கலெக்டர் உட்பட மற்றவர்கள் 

பின் நடந்த செய்தியும் உண்டு...


மக்கள் 

நலனுக்காக சொந்த பணத்திலேயே பாலம் கட்ட 

உதவிய மனிதர் வாழ்ந்த நாட்டில் இன்று எத்தகைய அரசியல் வாதிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது வேதனையாகவே உள்ளது....



Wednesday, November 13, 2024

ரோஜாவின் ராஜா..

 நேரு மாமா பிறக்கும் முன்பும்

ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை  
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Saturday, November 9, 2024

படித்ததில் பிடித்தது..

 இமயமலை அடிவாரத்தில் ஒரு மடம். அங்கே ஒரு சன்னியாசி இருந்தார். அவரிடம் ஒருவன் வந்தான்.


 சுவாமி ஆசையை உதற நினைக்கிறேன் முடியவில்லை ஒட்டிக் கொண்டே வருகிறது என்றான்.


 இப்படி உட்கார் ஒரு கதை சொல்கிறேன் என்றார்

 சன்னியாசி.


 ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பெயர் குப்புசாமி.

அவனிடம் எப்போதும் ஒரு பழைய தொப்பி இருக்கும். அதனால் அவனை தொப்பிசாமி என்றுதான் எல்லோரும் சொல்வது வழக்கம்.


 ஒரு புது தொப்பி வாங்கக் கூடாதா என்று நண்பர்கள் சொல்லிப் பார்த்தார்கள். பணத்துக்கு எங்கே போவேன். பணம் வைத்திருக்கிறான். செலவு பண்ண மனசு இல்லை. மகா கஞ்சன். பழைய பொருள்களை எல்லாம் வாங்கி விற்றுக் கொண்டிருந்தான்.


 அப்படி ஒரு தடவை பழைய கண்ணாடி பொருட்களை எடுக்கும்போது அதில் ஒரு அருமையான சென்ட் பாட்டில் கிடைத்தது. உடனே ஒரு ஐடியா செய்தான். அதை சின்ன சின்ன போத்தல்களில் அடைத்து ஜன்னல் ஓரமாக அடுக்கி வைத்து விட்டான். அதை விற்றால் நிறைய பணம் கிடைக்குமே.


 இதற்கிடையில் ஒரு நாள் அவன் நண்பன் வந்தான். என்னடா உன் பழைய தொப்பியை மாற்றக் கூடாதா ஊரில் எல்லோரும் கேலி செய்கிறார்கள் என்றான். சென்ட் பாட்டில் விற்றதும் பணம் வரும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றான்.


 சரி வா நீச்சல் குளத்துக்கு போய் வருவோம் என்று கூப்பிட்டான். நண்பர்கள் இரண்டு பேரும் போனார்கள். அதே நேரம் அந்த ஊர் நீதிபதியும் அங்கே குளிக்க வந்தார். அவரிடம் இருந்த விலை உயர்ந்த புது தொப்பியை் அங்கிருந்த ஸ்டாண்டில் மாட்டிவிட்டு குளிக்க போனார். 


 இதற்கிடையில் குப்புசாமி குளித்துவிட்டு வந்தான் அவனுடைய பழைய தொப்பியை காணவில்லை. அந்த புது தொப்பியை பார்த்தான். இது நண்பனுடைய வேலை என்று புரிந்து கொண்டு அதை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். நீதிபதி குளித்துவிட்டு வந்து பார்க்கிறார் தொப்பியை காணவில்லை. போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் வந்துவிட்டார்கள் .அங்கே ஒரு மூலையில் பழைய தொப்பி கிடைத்தது. அடடா இது குப்புசாமி தொப்பி. அவன் வீட்டுக்கு போனார்கள். தொப்பி அங்கேயே இருந்தது. அவனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டார்கள். கட்டிவிட்டு வந்தான். 


பழைய தொப்பி கண்ணில் பட்டது. உன்னால் தான் எனக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்று சொல்லி அதை எடுத்துக்கொண்டு போனான். அந்த ஊர் குளத்தில் வீசி எறிந்துவிட்டு வந்தான். அது மீன் பிடிக்கிற ஒருவன் கையில் சிக்கிக் கொண்டது. வருகின்ற வழியில் அதை எடுத்து வேகமாக வீசி எறிந்தான். அது நேராக குப்புசாமி வீட்டு ஜன்னல் வழியே உள்ளே வந்து போத்தல்கள் மேல் விழுந்து எல்லாம் உடைந்து நொறுங்கியது. 


குப்புசாமி தோட்டத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினான். தொப்பியை போட்டான். மூடிவிட்டான். இதை அடுத்த வீட்டுக்காரன் பார்த்தான் ஏதோ புதையல் வைத்திருக்கிறான் என்று போலீசில் புகார் கொடுத்தான். மறுபடியும் போலீஸ் தோண்டினார்கள் .பழைய தொப்பி மறுபடியும் வந்தது .எல்லோரும் சிரிக்கிறார்கள்.


 அன்றிரவே இந்த தொப்பியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் . ஒரு கல்லோடு சேர்த்துக் கட்டி குடிநீர் தொட்டியில் போட்டு விட்டான் .ஒரு நாள் திடீரென்று குழாய் அடைபட்டு போனது. மாநகராட்சி அலுவலர்கள் வந்து என்னவென்று பார்த்தால் அந்தப் பழைய தொப்பி குழாயை அடைத்துக்கொண்டிருந்தது . இது குப்புசாமியின் தொப்பி என்பது எல்லோருக்கும் தெரியும். 


 குப்புசாமி 2,500 ரூபாய் அபராதம் போட்டது கட்டி விட்டு வெளியில் வந்தான் கடைசியாக முடிவு பண்ணினான். ஒரு நெருப்பு வைத்தான் தொப்பி எரிந்தது. எடுத்து வெளியில் எறிந்தான். கொஞ்ச நேரத்தில் தீயணைப்பு படை வந்து விட்டது. இவன் எடுத்து எறிந்தது வழியில் உள்ள  கூரையின் மேல் விழுந்து பற்றிக்கொண்டது. அவனுடைய பணத்தாசையும் அதோடு சேர்ந்து அழிந்து போனது என்று கதையை சொல்லி முடித்தார் அந்த இமயமலை அடிவாரத்தில் இருந்த சந்நியாசி.


 இப்போது அந்த குப்புசாமி எங்கே இருக்கான் என்று கேட்டார் எதிரில் இருந்தவர் . இதோ உன் எதிரிலேயே இருக்கிறார். நான்தான் அந்த குப்புசாமி என்றார் சந்நியாசி.


குப்புசாமியிடம் இருந்தது போல் ஒரு பழைய தொப்பி நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது அதை எப்படி வைப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.  நம்மைச் சூழ்ந்து இருக்கின்ற மாயைதான் அந்தத் தொப்பி என்கிறார் சுவாமி சின்மயானந்தர். 


ஞானம் எப்போது கிடைக்கிறதோ அப்போது மாயையும் எரிந்து போகும் என்கிறார் அவர். 

🙏🙏🙏

Tuesday, November 5, 2024

தெரிஞ்சு வச்சுக்குவோம்...(பயன் இருக்காது என்றாலும்‌)

 234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!

ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.

பதில் வருமா வராதான்னு தெரியாது,

எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது 

அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.

234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது...SKV🙏


1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in

2 Alandur - mlaalandur@tn.gov.in

3 Alangudi - mlaalangudi@tn.gov.in

4 Alangulam - mlaalangulam@tn.gov.in

5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in

6 Anaicut -- mlaanaicut@tn.gov.in

7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in

8 Andimadam --- mlaandimadam@tn.gov.in

9 Andipatti----mlaandipatti@tn.gov.in

10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in

11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in

12 Arantangi-- mlaarantangi@tn.gov.in

13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in

14 Arcot --- mlaarcot@tn.gov.in

15 Ariyalur --mlaariyalur@tn.gov.in

16 Arni -- mlaarni@tn.gov.in

17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in

18 Athoor--- mlaathoor@tn.gov.in

19 Attur ---mlaattur@tn.gov.in

20 Avanashi ---mlaavanashi@tn.gov.in

21 Bargur ---mlabargur@tn.gov.in

22 Bhavani---mlabhavani@tn.gov.in

23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in

24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in

25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in

26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in

27 Chengam---mlachengam@tn.gov.in

28 Chepauk---mlachepauk@tn.gov.in

29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in

30 Cheyyar---mlacheyyar@tn.gov.in

31 Chidambaram---mlachidambaram@tn.gov.in

32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in

33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in

34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in

35 Colachel---mlacolachel@tn.gov.in

36 Coonoor----mlacoonoor@tn.gov.in

37 Cuddalore---mlacuddalore@tn.gov.in

38 Cumbum---mlacumbum@tn.gov.in

39 Dharapuram---mladharapuram@tn.gov.in

40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in

41 Dindigul---mladindigul@tn.gov.in

42 Edapadi---mlaedapadi@tn.gov.in

43 Egmore---mlaegmore@tn.gov.in

44 Erode----mlaerode@tn.gov.in

45 Gingee---mlagingee@tn.gov.in

46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in

47 Gudalur----mlagudalur@tn.gov.in

48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in

49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in

50 Harbour-----mlaharbour@tn.gov.in

51 Harur----mlaharur@tn.gov.in

52 Hosur---mlahosur@tn.gov.in

53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in

54 Jayankondam---mlajayankondam@tn.gov.in

55 Kadaladi---mlakadaladi@tn.gov.in

56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in

57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in

58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in

59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in

60 Kangayam---mlakangayam@tn.gov.in

61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in

62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in

63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in

64 Karur----mlakarur@tn.gov.in

65 Katpadi----mlakatpadi@tn.gov.in

66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in

67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in

68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in

69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in

70 Kolathur---mlakolathur@tn.gov.in

71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in

72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in

73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in

74 Kulithalai----mlakulithalai@tn.gov.in

75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in

76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in

77 Kuttalam---mlakuttalam@tn.gov.in

78 Lalgudi---mlalalgudi@tn.gov.in

79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in

80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in

81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in

82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in

83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in

84 Mangalore----mlamangalore@tn.gov.in

85 Mannargudi----mlamannargudi@tn.gov.in

86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in

87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in

88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in

89 Melur---mlamelur@tn.gov.in

90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in

91 Mettur---mlamettur@tn.gov.in

92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in

93 Morappur---mlamorappur@tn.gov.in

94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in

95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in

96 Musiri---mlamusiri@tn.gov.in

97 Mylapore---mlamylapore@tn.gov.in

98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in

99 Nagercoil---mlanagercoil@tn.gov.in

100 Namakkal---mlanamakkal@tn.gov.in

101 Nanguneri---mlananguneri@tn.gov.in

102 Nannilam----mlanannilam@tn.gov.in

103 Natham-----mlanatham@tn.gov.in

104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in

105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in

106 Nilakottai---mlanilakottai@tn.gov.in

107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in

108 Omalur---mlaomalur@tn.gov.in

109 Orathanad---mlaorathanad@tn.gov.in

110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in

111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in

112 Palacode---mlapalacode@tn.gov.in

113 Palani----mlapalani@tn.gov.in

114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in

115 Palladam---mlapalladam@tn.gov.in

116 Pallipattu---mlapallipattu@tn.gov.in

117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in

118 Panruti---mlapanruti@tn.gov.in

119 Papanasam---mlapapanasam@tn.gov.in

120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in

121 ParkTown----mlaparktown@tn.gov.in

122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in

123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in

124 Perambalur----mlaperambalur@tn.gov.in

125 Perambur---mlaperambur@tn.gov.in

126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in

127 Peravurani---mlaperavurani@tn.gov.in

128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in

129 Pernambut---mlapernambut@tn.gov.in

130 Perundurai---mlaperundurai@tn.gov.in

131 Perur---mlaperur@tn.gov.in

132 Pollachi---mlapollachi@tn.gov.in

133 Polur---mlapolur@tn.gov.in

134 Pongalur---mlapongalur@tn.gov.in

135 Ponneri---mlaponneri@tn.gov.in

136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in

137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in

138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in

139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in

140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in

141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in

142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in

143 Ranipet---mlaranipet@tn.gov.in

144 Rasipuram----mlarasipuram@tn.gov.in

145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in

146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in

147 Royapuram---mlaroyapuram@tn.gov.in

148 Saidapet---mlasaidapet@tn.gov.in

149 Salem -I---mlasalem1@tn.gov.in

150 Salem-II---mlasalem2@tn.gov.in

151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in

152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in

153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in

154 Sankari---mlasankari@tn.gov.in

155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in

156 Sattangulam----mlasattangulam@tn.gov.in

157 Sattur---mlasattur@tn.gov.in

158 Sedapatti----mlasedapatti@tn.gov.in

159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in

160 Sholavandan---mlasholavandan@tn.gov.in

161 Sholinghur----mlasholinghur@tn.gov.in

162 Singanallur---mlasinganallur@tn.gov.in

163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in

164 Sivaganga----mlasivaganga@tn.gov.in

165 Sivakasi---mlasivakasi@tn.gov.in

166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in

167 Srirangam---mlasrirangam@tn.gov.in

168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in

169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in

170 Talavasal---mlatalavasal@tn.gov.in

171 Tambaram---mlatambaram@tn.gov.in

172 Taramangalam---mlataramangalam@tn.gov.in

173 Tenkasi----mlatenkasi@tn.gov.in

174 Thalli---mlathalli@tn.gov.in

175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in

176 Thanjavur---mlathanjavur@tn.gov.in

177 Theni---mlatheni@tn.gov.in

178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in

179 Thirumayam---mlathirumayam@tn.gov.in

180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in

181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in

182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in

183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in

184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in

185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in

186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in

187 Thottiam---mlathottiam@tn.gov.in

188 Tindivanam---mlatindivanam@tn.gov.in

189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in

190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in

191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in

192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in

193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in

194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in

195 Tirupporur----mlatirupporur@tn.gov.in

196 Tiruppur----mlatiruppur@tn.gov.in

197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in

198 Tiruttani----mlatiruttani@tn.gov.in

199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in

200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in

201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in

202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in

203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in

204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in

205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in

206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in

207 Triplicane----mlatriplicane@tn.gov.in

208 Tuticorin---mlatuticorin@tn.gov.in

209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in

210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in

211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in

212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in

213 Usilampatti---mlausilampatti@tn.gov.in

214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in

215 Valangiman----mlavalangiman@tn.gov.in

216 Valparai----mlavalparai@tn.gov.in

217 Vandavasi----mlavandavasi@tn.gov.in

218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in

219 Vanur----mlavanur@tn.gov.in

220 Varahur-----mlavarahur@tn.gov.in

221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in

222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in

223 Vedasandur---mlavedasandur@tn.gov.in

224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in

225 Vellakoil---mlavellakoil@tn.gov.in

226 Vellore---mlavellore@tn.gov.in

227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in

228 Vilavancode---mlavilavancode@tn.gov.in

229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in

230 Villupuram---mlavillupuram@tn.gov.in

231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in

232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in

233 Yercaud---mlayercaud@tn.gov.in

234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

முடிந்தவரை பிறருடன் பகிரவும்...

VERY IMPORTANT SO SHARE SHARE

Friday, November 1, 2024

படித்ததில் பிடித்தது

 *1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*

===============

*நாங்களும் மாறினோம்.*

================

*இன்று அதையே* 

==============

*BARBECUE என்று BC,*

*KFC ,*

*MACDONALD இல் விக்கிறான்.*

===============

*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*

*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*

==============

*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*

*SALT + CHARCOAL* *இருக்கா ?*

*என்று கேட்கிறான்.* 

==============

*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*

===============

*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*

==============

*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*

=============

*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*

=============

*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*

=============

*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின்  SPERM ஏற்றுமதி செய்கிறான்.*

===============

*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*

==============

*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*

==============

*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*

==============

*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொன்மைகளைத் தொலைத்த* 

================

         *" முட்டாள் "*

================

*இனம் நாமாகத்தானிருப்போம்.*

===============

*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*

==============

*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*

===============

*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*

===============

*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*

===============

*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*

==============

*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,* 

===============

*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*

==============

*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*

==============

*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*

==============

*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*

=============

*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*

===============

*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*

================

           *" நாகரிக கோமாளி "*

================

*ஆகி விட்டோம்.*


படித்ததில் பிடித்ததை 

பகிர்கிறேன் ...

___________________

🙏🙏🙏🙏

Wednesday, October 30, 2024

திருநாள்‌நல்வாழ்த்துகள்

 தானும் மகிழ்ந்திராது.                                           தன்னைச் சார்ந்தவர்களையும்

தன்னைச் சூழ்ந்தவர்களையும்
மகிழ்விக்க முயலாது
கடக்கிற நாளது
திரு நாள் ஆயினும்
அது வெறும் நாளே.

தானும் மகிழ்ந்து
தன்னைச் சார்ந்தவர்களையும்
தன்னைச் சூழ்ந்தவர்களையும்
மகிழ்விக்கச் செய்யும்
எந்த நாளாயினும்
வெறும் நாளாயினும்
அதுதான் திரு நாளே.                  

 ஆம்..நாம் சிரிக்கும் நாள் திருநாள் இல்லை...,...................

.பிறர் சிரிக்க நாம் மகிழும்  நாளே.          ‌    திருநாள்.                         ‌.                                         நம் வாழ்வில்
இனி வரும் நாளெல்லாம்
திரு நாளாகவே இருக்க
அருளவேணுமாய்
வாலறிவனை வேண்டி
என் வாழ்த்துக்களை
வழங்கி  மகிழ்கிறேன்

வாழ்த்துக்களுடன்....

Saturday, October 26, 2024

அரசியல் முதிர்ச்சி ????

 "மன்னராட்சியின் நீட்சியாய்

வாரீசுக்கு பட்டம் சூட்டிய
மேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "

கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..

"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
 எதையும் பேசலாம்
 எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் முதிர்ச்சி..

Wednesday, October 16, 2024

ஆம்..எதுவும் கடந்து போகும்...

 *இதுவும் கடந்து போகும்*


நம்முடைய, இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால், 


இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும் !


*எத்தனை வெற்றிகள் ?*


*எத்தனை தோல்விகள் ?*


*எத்தனை மகிழ்ச்சிகள் ?*


*எத்தனை துக்கங்கள் ?*


எல்லாம் வந்து, 

சிறிது காலம் தங்கி, கடந்து போயிருக்கின்றன !!


வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால், நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா ?


வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால், 

நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா ?


*எத்தனை நண்பர்கள் ?*


*எத்தனை பகைவர்கள் ?*


*எத்தனை உறவுகள் ?*


நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து, வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள் ?


வாழ்வில் வந்ததெல்லாம், நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன?


ஒரு விதத்தில்  என்றும் நாம் தனியர்களே அல்லவா ?


இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது, 

கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.


அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.


வெற்றிகள் கிடைக்கும் போது,

*இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*கர்வம் தலை தூக்காது !!*


தோல்விகள் தழுவும் போது,

*இதுவும் கடந்து போகும்* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சோர்ந்து விட மாட்டீர்கள்*


நல்ல மனிதர்களும்,

நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது,

*இதுவும் கடந்து போகும்* என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.

*இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்*


*அவர்கள் விலகும் போது, பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்*


தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது,

*இதுவும் கடந்து போகும்* என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.

*தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள்*


*பெரிதாக மன அமைதியை இழக்க மாட்டீர்கள்*


நெற்றி சுருங்கும் போதெல்லாம்,

*"இதுவும் கடந்து போகும்* என்பதை  நினைவில் கொள்ளுங்கள்,

*சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.*


வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விடவும்..


அந்தப்  புன்னகைநிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி இருக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள்...படித்ததில் பிடித்தது


😊😊😊

Tuesday, October 15, 2024

மாறாத ஒன்றே நிலையானது....

 


வெறித்துப் பயந்து ஓடும்
தன்மை கொண்ட பூனையாயினும்
முழு வழியையும் அடைத்துத்
தாக்கக் கூடின்
அது தப்பிக்கக் கழுத்தில்தான் பாயும்

பள்ளம் பார்த்து
தானே ஒதுங்கி ஓடும் நீராயினும்
அதன் போக்கனைத்தும் அடைத்துத்
தொலைப்போம் ஆயின்
அது நம் போக்கை அடைக்கத்தான் செய்யும்

வறுமையில் வயிறு
ஒட்ட ஒட்டக் கிடப்பவன்
பாடம் கற்காது போயின்
செல்வச் சேர்க்கையின் போது
அது நிச்சயம் வீணாகித்தான் போகும்

கோடையில் நீர்த்தேடி
தினம் அலைந்துத் தொலைப்பவன்
அதன் தன்மை அறியாது போயின்
அது அதிகம் கிடைக்கையில்
நிச்சயம் அது பகையாகித்தான் போகும்

ஓட்டைப் பானையில்
நீர்ப்பிடிக்கும் மூடனாய்
இயற்கையின் பால பாடங்களையே
அறியாத மூடனாய்
இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறோம் ?

வலியக் கிடைக்கும்
வரங்களைக் கூட
கொடிய சாபமாக்கி
அவதிப்படும் மூடர்களாய்
இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறோம் ?(மாறுதல் ஒன்றே மாறாதது என்பது தத்துவம்.. மாறாதது ஒன்றே நிலையானது என்பதே இங்கு யதார்த்தம்)

Monday, October 14, 2024

ரத்தன் டாடா..வாழ்கிறார்

மரியாதைக்குரிய ரத்தன் டாடாவிடம் 

வானொலி தொகுப்பாளர்  

தொலைபேசி பேட்டியில் கேட்டபோது:


வாழ்க்கையில் 

அதிக சந்தோஷம் கிடைத்ததும் 

உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?


ரத்தன் டாடா கூறியதாவது:


நான் 

வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 

நான்கு நிலைகளைக் கடந்துவிட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை 

நான் புரிந்துகொண்டேன்.


முதல் கட்டம் 

செல்வத்தையும் வளங்களையும் குவிப்பதாகும்.


ஆனால் இந்த கட்டத்தில் 

நான் விரும்பிய மகிழ்ச்சி கிடைக்கவில்லை.


பின்னர் மதிப்புமிக்க  பொருட்களை சேகரிக்கும் 

இரண்டாவது கட்டம் வந்தது.


ஆனால் 

இதுவும்  தற்காலிகமானது .

விலைமதிப்பற்ற பொருட்களின் பிரகாசம் நீண்ட காலம் நீடிக்காது என்பதை நான் உணர்ந்தேன்.


மூன்றாம் கட்டம் வந்தது. 

அப்போதுதான் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 95% டீசல் சப்ளை என்னிடம் இருந்தது.


இந்தியாவிலும் ஆசியாவிலும் மிகப்பெரிய

 எஃகு தொழிற்சாலையின் உரிமையாளராகவும் இருந்தேன்.


ஆனால் நான் 

நினைத்த மகிழ்ச்சி இங்கும் கிடைக்கவில்லை.


நான்காவது படியில் 

சில ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள் வாங்கித் தருமாறு 

எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.


சுமார் 200 குழந்தைகள்.


எனது நண்பரின் வேண்டுகோளின் பேரில், நான் 

உடனடியாக சக்கர நாற்காலிகளை வாங்கினேன்.


ஆனால் நானும் அவருடன் சென்று 

சக்கர நாற்காலிகளை குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நண்பர் வற்புறுத்தினார். நான் தயாராகி 

அவனுடன் சென்றேன்.


அங்கே இந்தக் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகளை 

என் கைகளால் கொடுத்தேன். 


அந்தக் குழந்தைகளின் முகத்தில் 

ஒரு விசித்திரமான மகிழ்ச்சியைப் பார்த்தேன். 

அவர்கள் அனைவரும் 

சக்கர நாற்காலியில் அமர்ந்து, 

அங்குமிங்கும் நகர்ந்து வேடிக்கை பார்ப்பதைக் கண்டேன்.


அவர்கள் 

ஒரு பிக்னிக் இடத்தை அடைந்தது போல் இருந்தது, 

அங்கு அவர்கள் வெற்றிகரமான 

பரிசைப் பகிர்ந்து கொண்டனர்.


எனக்குள் 

உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன்.


நான் 

வெளியேற 

முடிவு செய்தபோது, ​​​​


குழந்தைகளில் ஒருவர் 

என் காலைப் பிடித்தார்.


நான் மெதுவாக 

என் கால்களை 

விடுவிக்க முயற்சித்தேன், 


ஆனால் 

குழந்தை என் 

முகத்தைப் பார்த்து 


என் 

கால்களை 

இறுக்கமாகப் பிடித்தது. 


நான் 

குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: 

உங்களுக்கு 

வேறு ஏதாவது தேவையா?


அந்த குழந்தை 

எனக்கு அளித்த பதில் 

என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய எனது பார்வையை 

முற்றிலும் மாற்றியது.


அந்த குழந்தை கூறியது:


"உன் 

முகத்தை 

நினைவில் 

வைத்துக் கொள்ள 

விரும்புகிறேன்."


நான் 

உன்னை 

சொர்க்கத்தில் 

சந்திக்கும் போது, ​​


உன்னை  நான் 

அடையாளம் கண்டு 

மீண்டும் ஒருமுறை 

நன்றி கூறுவேன்....!!"


ஆம். ரத்தன் டாடா.... வாழ்கிறார்...படித்ததில் பிடித்தது 

Tuesday, October 8, 2024

அது ஒரு காலம்..படித்ததில் பிடித்தது

 *வேம்பு அய்யர் போளி* 👇🏻



வேம்பு அய்யர் அந்த நாட்களில் திருநெல்வேலி சீமையில உள்ள  மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.


மணியாச்சி ரயில் நிலையம் ஞாபகம் இருக்கா ? வாஞ்சி அய்யர் ஆஷ் துரையை இங்கே சுட்டுக்கொன்ற இடம் தான் இன்று வாஞ்சி மணியாச்சி ஆயிற்று.


ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கிவந்து கூடைக்குஅருகில்வைத்தார்.


மேஜையின்மேல் வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார்.


அதன் பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக

எடுத்து இலைகளின் மேல் அடுக்கி வைத்தார்.


அவர்வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக் கொண்டது.


அத்தனை போளிகளையும்

எடுத்து வைத்த வுடன்,வெறும்

கூடையைஎடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 


இன்னும் ரயில் வர அரை மணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவதுபோலத் தோன்றியது. 


வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக் கொண்டிருந்தார்.

ஆள் நெருங்கி யதும் வருபவர் பெரிய அருணா சலம் என்று தெரிந்தது. 


நாதசுவர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம். 


இரண்டு அருணா சலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு அய்யர் கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள். 


இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாக ஸ்வரக் குழுவுமே இந்த போளிகளுக்கு அடிமை.


அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும் போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான். 


அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு அய்யர். 


ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுலே! ஓடுலே!”, என்று பையனை விரட்டுவார்.


ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும். 


அவர் மனைவி சுந்தரி எப்படியும் இழுத்துப்பிடித்துச்சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியவில்லை என்றாலும் அருணா சலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு அய்யர். 


அவரைப் பொருத்த மட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திரு நெல்வேலி ஜில்லா வில் அவதாரம் செய்த கந்தர்வன் தான் அருணாசலம் என்பது அவர் துணிபு.


திருச்செந்தூர் பச்சை சாற்றி திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணா சலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்பு அய்யரை நிச்சயம் பார்க்கலாம். 


எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணா சலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்பு அய்யரை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார். 


’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம் மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு அய்யர்.


என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.

“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணி யாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.”


வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.

அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம்.


“ஒட்டபிடாரத்து லகச்சேரினு தெரியாமப் போச்சே!ராத்திரி வந்துடுவேன்,” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.


“ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்க கிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்,” என்றார் அருணா சலம்.


வேம்பு அய்யருக்கு ஒன்றும் புரிய வில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன.


அதை வாங்காமல்

அருணாசலம் தொடர்ந்தார்.

“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும் போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுரீய, அவம் பணத்தை நீட்டக்கூட விட மாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”

வேம்பு அய்யர் லேசாகப் புன்னகைத்தார்.


“நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்ல”


வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.


“ஏ...லே! 

நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கு இந்தப் போளிக்குத் தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணு மாங்கேன்?”


“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடு படாது. பைசா வாங்கிகிட்டாத்தா இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்”, என்று பிடிவாதம் பிடித்தார் அருணா சலம்.


”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அம்புட்டு தானே?”


“ஆமா”“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.” கொடுப்பீயளோ?


“என்ன வேணும் னாலும் கேளுங்க”, என்று அவசரப் பட்டார் அருணா சலம்.


“யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தை யுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.


“அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”


“திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங் காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை. 


நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ் வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”

இப்படி ஒரு வேண்டு கோளை அருணாசலம் எதிர் பார்க்கவில்லை.


“வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்”


”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.


அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணா சலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக் கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்து விட்டது.


“சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்.” என்று சொல்லி விட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடை மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.


உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு. 


“முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக் கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன? 


ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும் போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?”, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார் அய்யர்


அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப் படத் துவங்கியது.


அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபி மானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். 


ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப் பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும். 


அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?


இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது. 


இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?


வேம்பு தனக்குத் தெரிந்த ஊர் காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்? 


பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர். 


மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது.

சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. 


வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக் கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.


’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்றமுடியும்,’ என்று வெதும்பிய படி வீட்டுக்குள் நுழைந்தார் வேம்பு.


இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.


“ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.


“என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அது தானே?அதைப் போய் வெக்கலாமா?”,

என்று தழுதழுத் தார்வேம்பு.


“உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரம நீங்கப் படற வேதனையை என்னால பார்க்க முடியல.”, என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.

வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக் கொண்டார்.


சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணா சலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணா சலம், பெரும் பள்ளம் வெங்க டேசன், அம்பா சமுத்திரம் குழந்தை வேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர். 


வேம்பு அருணா சலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். 


குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.

பந்தலில் கூட்டம் அம்மியது. 


சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று அருகில் உள்ள ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.


அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.


அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடி காட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார். 

எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல் ! புரவிப் பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன. 


வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டி ருந்தார். பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்த வர்களைப் பார்த்தார். 


இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தா கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.


அருணாசலம் கர் நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.

“நேனெந்து வெதுகுதுரா”

”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது.


 ‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப்பட்டது.

“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”

வேம்புவுக்கு கண்கள் கலங்கின. 


தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் பொற்றிக் கொண்டார். 


அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்கு கண்ணீர் பெருகியது. 


சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனதி லிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது. 


அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.

அன்றைய பிரதான ராகம் கரஹர ப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது. 


பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம். 


ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி. 


ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டி ருந்தது.‘சக்கனி ராஜமார்கமு’


அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.


கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்த பின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணா சலம்.


“நாளைக்கு சேலேத்திலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைபிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்”, என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.


“ஆஹா! ஆஹா!” என்றபடி அருணா சலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு. 


அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை.

பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணா சலம்.


வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணா சலத்தை மொய்த்துக் கொண்டனர். 


வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.

ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர். 


முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸி லிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொ ருவன் தயாராக நின்றிருந்தான்.


அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.

ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம். 


ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.


“ஐயர் வாள்! திருப்தி தானே?”, என்று கேட்டார் அருணாசலம்.


“இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!”, என்ற படி ஒரு பையை நீட்டினார் வேம்பு.


துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு. 


வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.

அருணா சலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.


வண்டி கிளம்ப ஆயத்தமானது.


”ஐயர்வாள் ! நான் நேற்றைக்கு திருச் செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்”,

என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.


வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது. 


கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணா சலத்துக்கு விடை கொடுத்தார்.


வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார். 


திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.

அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.

அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.


சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.


 *அப்படி ஒரு பிணைப்பு இருந்த காலம் அது - அய்யருக்கு அருணாசலம்  பிள்ளைவாள் தந்த தாலிக்கொடி பரிசு அது !!!*thanks to Lalitharam


Wednesday, October 2, 2024

ஊருக்குள்ளே நல்ல பாரு...

 பாருக் குள்ளே நல்ல நாடு

நம்ம நாடு என்று
வீறு கொண்டு இருந்தோம் அன்று-பகை
வென்று மகிழ்ந்தோம் அன்று

ஊருக் குள்ளே நல்ல "பாரு"
எந்த "பாரு " என்று
தேடி யலைந்துத் திரிகிறோம் இன்று-மதியைக்
தோண்டிப் புதைக்கிறோம் இன்று

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலென
பெருமிதம் கொண்டோம் அன்று
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடென-நெஞ்சம்
பூரித்து நின்றோம் அன்று

விண்ணகம் முட்டும் விலையில் கல்வியை
உயரே கொண்டு வைத்து
வன்முறை வளர்ந்திட நாடது கேடுற-நாமே
வழிகள் வகுக்கிறோம் இன்று

இன்னறு கங்கை எங்கள் ஆறென
உரிமை கொண்டோம் அன்று
மன்னும் இமயம் எல்லைக் கோடென-உள்ளம்
மகிழ்ந்து திரிந்தோம் அன்று

அண்டை மாநில உறவு கூட
ஜென்மப் பகைபோல் மாற
வன்மம் வளர்த்து வன்முறை வளர்த்து-கூண்டில்
ஒடுங்கித் தவிக்கிறோம் இன்று

உலகை மாற்றி ஊரை மாற்றி
நம்மை மாற்ற எண்ணும்
தலையச் சுற்றி மூக்கைத் தொடுகிற-வீண்
வேலை இனியும் வேண்டாம்

அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்

Sunday, September 22, 2024

Facts of life


1. Take risks in your life. If you win, you can lead; if you lose, you can guide.


2. People are not what they say but what they do; so judge them not from their words but from their actions.


3. When someone hurts you, don't feel bad because it's a law of nature that the tree that bears the sweetest fruits gets maximum number of stones.


4. Take whatever you can from your life because when life starts taking from you, it takes even your last breath.


5. In this world, people will always throw stones on the path of your success. It depends on what you make from them - a wall or a bridge.


6. Challenges make life interesting; overcoming them make life meaningful.


7. There is no joy in victory without running the risk of defeat.


8. A path without obstacles leads nowhere.


9. Past is a nice place to visit but certainly not a good place to stay.


10. You can't have a better tomorrow if you are thinking about yesterday all the time.


11. If what you did yesterday still looks big to you, then you haven't done much today.


12. If you don't build your dreams, someone else will hire you to build theirs.


13. If you don't climb the mountain; you can't view the plain.


14. Don't leave it idle - use your brain.


15. You are not paid for having brain, you are only rewarded for using it intelligently.


16. It is not what you don't have that limits you; it is what you have but don't know how to use.


17. What you fail to learn might teach you a lesson.


18. The difference between a corrupt person and an honest person is: The corrupt person has a price while the honest person has a value.


19. If you succeed in cheating someone, don't think that the person is a fool...... Realize that the person trusted you much more than you deserved.

 

20. Honesty is an expensive gift; don't expect it from cheap people.


STAY BLESSED🙏❤️ படித்ததில் பிடித்தது

Thursday, September 19, 2024

World husband's day ????

 Today is Husband Appreciation Day .

Let us keep 2 minutes silence and read some quotes of great personalities. 


First quote

After marriage, husband and wife become two sides of a coin, they just can’t face each other, but still they stay together.

– Al Gore 


A good wife always forgives her husband when she’s wrong.

– Barack Obama 


When you are in love, wonders happen. But once you get married, you wonder, what happened.

- Steve Jobs 


And the best one is…


Marriage is a beautiful forest where Brave Lions are killed by Beautiful Deers.

- Brad Pitt 


National Husband Appreciation Day !! 💐😀

Laughter Therapy 


While getting married, most of the guys say to girl's parents, 

" I will keep your daughter happy for the rest of her life ".


Have you ever heard a girl saying something like this to the boy's parents like I will keep your son happy for the rest of his life 


Nooooo ... because women don't tell lies! 


-x-x-x-x-x-x-x-


If wife wants husband’s attention, she just has to look sad and uncomfortable.

If husband wants wife’s attention, he just has to look comfortable & happy.


-x-x-x-x-x-x-x-


A Philosopher HUSBAND said:- Every WIFE is a ‘Mistress’ of her Husband…

Miss” for first year & “Stress” for rest of the life… 


-x-x-x-x-x-x-x-


Position of a husband is just like a Split AC, No matter how loud he is outdoor, He is designed to remain silent indoor.


Share to make others smile...!


Laughter Works Like Medicine! 


*Today is world husband's day...*

*All husbands cheer up... At least one day in a year is dedicated to the helpless husbands  ..!*

Tuesday, September 17, 2024

அதிருப்தி..

 ஒரு உணர்வாகவோ

ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

Sunday, September 15, 2024

ஆனந்தத்தின் அற்புதம்..

 அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்


யானையைக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்கப் பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடி
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேட்டையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Saturday, September 14, 2024

முடிவின் விளிம்பில்...

 குழப்பம் என்னுள் சூறாவளியாய்

சுழன்றடிக்கிறது

நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?


இருக்கிறேன் என்பது சரியா?
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உண்ர்வு அற்றுப்போனதா? 


கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாதிருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் 

புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன


பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறல்களே பரவிச் சிரிக்கின்றன


பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்


மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி


முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது


விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்


என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன


எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எரிந்துகொண்டிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்துணை  அவஸ்தைகளுக்கும் மத்தியில்


இவைகளுக்கெல்லாம்

 தொடர்பே இல்லாததுபோல்

தென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோடு

 தங்கத்தின் தகதகக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்
கொத்தின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்துணை வலிகளும்
அத்துணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர


அது கடந்த வழியெல்லாம்

 சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம்

 பரவசம்  பரந்து விரிய

நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே

 திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் 

சேரவேண்டிய வெட்டவெளிக்கும்

இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது


இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி


"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்ப்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்


கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?


காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?


காலவெளியில் காலத்துளி

 மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது


நான் பிணமாகிறேன்


அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது(சொல்ல முடியாத அந்த கடைசி நொடியை சொல்ல முயன்றிருக்கிறேன் )