Friday, July 26, 2024

Are u rich or poor ?

 *_𝑯𝒐𝒘 𝒅𝒐 𝒚𝒐𝒖 𝒌𝒏𝒐𝒘_*

*_𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒓𝒊𝒄𝒉?_*


*𝑨𝒎𝒂𝒛𝒊𝒏𝒈 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓* 

*𝒃𝒚 𝒂𝒏 𝑰𝑰𝑻 𝒔𝒕𝒖𝒅𝒆𝒏𝒕.*  


*𝑾𝒉𝒆𝒏 𝑰 𝒘𝒂𝒔  𝒅𝒐𝒊𝒏𝒈 𝒎𝒚 𝑩 𝑻𝒆𝒄𝒉, 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒘𝒂𝒔 𝒂 𝑷𝒓𝒐𝒇𝒆𝒔𝒔𝒐𝒓 𝒘𝒉𝒐 𝒖𝒔𝒆𝒅 𝒕𝒐 𝒕𝒆𝒂𝒄𝒉 𝒖𝒔 ‘𝑴𝒆𝒄𝒉𝒂𝒏𝒊𝒄𝒔’.*


*𝑯𝒊𝒔 𝒍𝒆𝒄𝒕𝒖𝒓𝒆𝒔 𝒖𝒔𝒆𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒗𝒆𝒓𝒚 𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒔𝒊𝒏𝒄𝒆 𝒉𝒆 𝒉𝒂𝒅 𝒂𝒏* *𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒘𝒂𝒚 𝒕𝒐* *𝒕𝒆𝒂𝒄𝒉 𝒂𝒏𝒅 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏*

*𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒆𝒑𝒕𝒔.*


*𝑶𝒏𝒆 𝒅𝒂𝒚, 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒍𝒂𝒔𝒔, 𝒉𝒆 𝒂𝒔𝒌𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒇𝒐𝒍𝒍𝒐𝒘𝒊𝒏𝒈 𝒒𝒖𝒆𝒔𝒕𝒊𝒐𝒏𝒔:*


*𝟏. 𝑾𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒁𝑬𝑹𝑶?*

*𝟐. 𝑾𝒉𝒂𝒕 𝒊𝒔 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀?*

*𝟑. 𝑪𝒂𝒏 𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒃𝒆 𝒔𝒂𝒎𝒆?*


*𝑾𝒆 𝒂𝒍𝒍 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕 𝒕𝒉𝒂𝒕 𝒘𝒆 𝒌𝒏𝒆𝒘 𝒕𝒉𝒆 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓𝒔 𝒂𝒏𝒅 𝒘𝒆 𝒓𝒆𝒑𝒍𝒊𝒆𝒅 𝒂𝒔 𝒇𝒐𝒍𝒍𝒐𝒘𝒊𝒏𝒈:*


*𝒁𝑬𝑹𝑶 𝒎𝒆𝒂𝒏𝒔 𝒏𝒐𝒕𝒉𝒊𝒏𝒈.*

*𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒎𝒆𝒂𝒏𝒔* 

*𝒂 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒈𝒓𝒆𝒂𝒕𝒆𝒓 𝒕𝒉𝒂𝒏 𝒂𝒏𝒚 𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓.*


*𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝒀 𝒂𝒓𝒆 𝒐𝒑𝒑𝒐𝒔𝒊𝒕𝒆 𝒂𝒏𝒅 𝒕𝒉𝒆𝒚 𝒄𝒂𝒏 𝒏𝒆𝒗𝒆𝒓 𝒃𝒆 𝒔𝒂𝒎𝒆.*


*𝑯𝒆 𝒄𝒐𝒖𝒏𝒕𝒆𝒓𝒆𝒅 𝒖𝒔 𝒃𝒚 𝒇𝒊𝒓𝒔𝒕 𝒕𝒂𝒍𝒌𝒊𝒏𝒈 𝒂𝒃𝒐𝒖𝒕 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒂𝒏𝒅 𝒂𝒔𝒌𝒆𝒅, 𝑯𝒐𝒘 𝒄𝒂𝒏 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒃𝒆 𝒂𝒏𝒚 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒘𝒉𝒊𝒄𝒉 𝒊𝒔 𝒈𝒓𝒆𝒂𝒕𝒆𝒓 𝒕𝒉𝒂𝒏 𝒂𝒏𝒚 𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓?*


*𝑾𝒆 𝒉𝒂𝒅 𝒏𝒐 𝒂𝒏𝒔𝒘𝒆𝒓𝒔.*


*𝑯𝒆 𝒕𝒉𝒆𝒏 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒆𝒑𝒕 𝒐𝒇 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒊𝒏 𝒂 𝒗𝒆𝒓𝒚 𝒊𝒏𝒕𝒆𝒓𝒆𝒔𝒕𝒊𝒏𝒈 𝒘𝒂𝒚, 𝒘𝒉𝒊𝒄𝒉 𝑰 𝒓𝒆𝒎𝒆𝒎𝒃𝒆𝒓 𝒆𝒗𝒆𝒏 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝟑𝟓 𝒚𝒆𝒂𝒓𝒔.*


*𝑯𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒎𝒂𝒈𝒊𝒏𝒆 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒊𝒔 𝒂𝒏 𝒊𝒍𝒍𝒊𝒕𝒆𝒓𝒂𝒕𝒆 𝒔𝒉𝒆𝒑𝒉𝒆𝒓𝒅 𝒘𝒉𝒐 𝒄𝒂𝒏 𝒄𝒐𝒖𝒏𝒕 𝒐𝒏𝒍𝒚* 

*𝒖𝒑𝒕𝒐 𝟐𝟎.*


*𝑵𝒐𝒘, 𝒊𝒇 𝒕𝒉𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒐𝒇 𝒔𝒉𝒆𝒆𝒑 𝒉𝒆 𝒉𝒂𝒔 𝒍𝒆𝒔𝒔 𝒕𝒉𝒂𝒏 𝟐𝟎 𝒂𝒏𝒅 𝒚𝒐𝒖 𝒂𝒔𝒌 𝒉𝒊𝒎 𝒉𝒐𝒘 𝒎𝒂𝒏𝒚 𝒔𝒉𝒆𝒆𝒑 𝒉𝒆 𝒉𝒂𝒔, 𝒉𝒆 𝒄𝒂𝒏 𝒕𝒆𝒍𝒍 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒑𝒓𝒆𝒄𝒊𝒔𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 (𝒍𝒊𝒌𝒆 𝟑, 𝟓, 𝟏𝟒 𝒆𝒕𝒄.).*


*𝑯𝒐𝒘𝒆𝒗𝒆𝒓, 𝒊𝒇 𝒕𝒉𝒆 𝒏𝒖𝒎𝒃𝒆𝒓 𝒊𝒔 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝟐𝟎, 𝒉𝒆 𝒊𝒔 𝒍𝒊𝒌𝒆𝒍𝒚 𝒕𝒐 𝒔𝒂𝒚 “𝑻𝑶𝑶 𝑴𝑨𝑵𝒀”*.


*𝑯𝒆 𝒕𝒉𝒆𝒏 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒏 𝒔𝒄𝒊𝒆𝒏𝒄𝒆 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚 𝒎𝒆𝒂𝒏𝒔 ‘𝒕𝒐𝒐 𝒎𝒂𝒏𝒚’ (𝒂𝒏𝒅 𝒏𝒐𝒕 𝒖𝒏𝒄𝒐𝒖𝒏𝒕𝒂𝒃𝒍𝒆) 𝒂𝒏𝒅 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒘𝒂𝒚 𝒛𝒆𝒓𝒐 𝒎𝒆𝒂𝒏𝒔 ‘𝒕𝒐𝒐 𝒇𝒆𝒘’ (𝒂𝒏𝒅 𝒏𝒐𝒕 𝒏𝒐𝒕𝒉𝒊𝒏𝒈).*


*𝑨𝒔 𝒂𝒏 𝒆𝒙𝒂𝒎𝒑𝒍𝒆, 𝒉𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒇 𝒘𝒆 𝒕𝒂𝒌𝒆 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝑬𝒂𝒓𝒕𝒉 𝒂𝒔 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒆𝒅 𝒕𝒐 𝒅𝒊𝒔𝒕𝒂𝒏𝒄𝒆 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝑬𝒂𝒓𝒕𝒉 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒏, 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒛𝒆𝒓𝒐 𝒔𝒊𝒏𝒄𝒆 𝒊𝒕 𝒊𝒔 𝒕𝒐𝒐 𝒔𝒎𝒂𝒍𝒍.*


*𝑯𝒐𝒘𝒆𝒗𝒆𝒓, 𝒘𝒉𝒆𝒏 𝒘𝒆 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒆 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒘𝒊𝒕𝒉 𝒕𝒉𝒆 𝒔𝒊𝒛𝒆 𝒐𝒇 𝒂 𝒈𝒓𝒂𝒊𝒏, 𝒅𝒊𝒂𝒎𝒆𝒕𝒆𝒓 𝒐𝒇 𝒆𝒂𝒓𝒕𝒉 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒂𝒊𝒅 𝒕𝒐 𝒃𝒆 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒆*.


*𝑯𝒆𝒏𝒄𝒆, 𝒉𝒆 𝒄𝒐𝒏𝒄𝒍𝒖𝒅𝒆𝒅 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒕𝒉𝒊𝒏𝒈 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒁𝑬𝑹𝑶 𝒂𝒏𝒅 𝑰𝑵𝑭𝑰𝑵𝑰𝑻𝑬 𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒔𝒂𝒎𝒆 𝒕𝒊𝒎𝒆, 𝒅𝒆𝒑𝒆𝒏𝒅𝒊𝒏𝒈 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒕𝒆𝒙𝒕, 𝒐𝒓 𝒚𝒐𝒖𝒓 𝒎𝒂𝒕𝒓𝒊𝒙 𝒐𝒇 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒊𝒔𝒐𝒏*.


*𝑻𝒉𝒆 𝒓𝒆𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔𝒉𝒊𝒑 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝒓𝒊𝒄𝒉𝒏𝒆𝒔𝒔 𝒂𝒏𝒅 𝒑𝒐𝒗𝒆𝒓𝒕𝒚 𝒊𝒔 𝒔𝒊𝒎𝒊𝒍𝒂𝒓 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝒓𝒆𝒍𝒂𝒕𝒊𝒐𝒏𝒔𝒉𝒊𝒑 𝒃𝒆𝒕𝒘𝒆𝒆𝒏 𝒊𝒏𝒇𝒊𝒏𝒊𝒕𝒚* 

*𝒂𝒏𝒅 𝒛𝒆𝒓𝒐*.


*𝑰𝒕 𝒂𝒍𝒍 𝒅𝒆𝒑𝒆𝒏𝒅𝒔 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒔𝒄𝒂𝒍𝒆 𝒐𝒇 𝒄𝒐𝒎𝒑𝒂𝒓𝒊𝒔𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔*.


*𝑰𝒇 𝒚𝒐𝒖𝒓 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆 𝒊𝒔 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔,* 

*𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒓𝒊𝒄𝒉*.

*𝑰𝒇 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔 𝒂𝒓𝒆 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒂𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆,*

*𝒚𝒐𝒖 𝒂𝒓𝒆 𝒑𝒐𝒐𝒓.*


*𝑰 𝒄𝒐𝒏𝒔𝒊𝒅𝒆𝒓 𝒎𝒚𝒔𝒆𝒍𝒇 𝒓𝒊𝒄𝒉 𝒃𝒆𝒄𝒂𝒖𝒔𝒆 𝒎𝒚 𝒘𝒂𝒏𝒕𝒔 𝒂𝒓𝒆 𝒇𝒂𝒓 𝒍𝒆𝒔𝒔 𝒕𝒉𝒂𝒏 𝒎𝒚 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆.*


*𝑰 𝒉𝒂𝒗𝒆 𝒃𝒆𝒄𝒐𝒎𝒆 𝒓𝒊𝒄𝒉 𝒏𝒐𝒕 𝒔𝒐 𝒎𝒖𝒄𝒉 𝒃𝒚 𝒂𝒄𝒒𝒖𝒊𝒓𝒊𝒏𝒈 𝒍𝒐𝒕𝒔 𝒐𝒇 𝒎𝒐𝒏𝒆𝒚, 𝒃𝒖𝒕 𝒃𝒚 𝒑𝒓𝒐𝒈𝒓𝒆𝒔𝒔𝒊𝒗𝒆𝒍𝒚 𝒓𝒆𝒅𝒖𝒄𝒊𝒏𝒈 𝒎𝒚 𝒘𝒂𝒏𝒕𝒔.*


*𝑰𝒇 𝒚𝒐𝒖 𝒄𝒂𝒏 𝒓𝒆𝒅𝒖𝒄𝒆 𝒚𝒐𝒖𝒓 𝒘𝒂𝒏𝒕𝒔, 𝒚𝒐𝒖 𝒕𝒐𝒐 𝒄𝒂𝒏 𝒃𝒆𝒄𝒐𝒎𝒆 𝒓𝒊𝒄𝒉 𝒂𝒕 𝒕𝒉𝒊𝒔 𝒗𝒆𝒓𝒚 𝒎𝒐𝒎𝒆𝒏𝒕.*


 *𝑴𝒂𝒚 𝒚𝒐𝒖𝒓 𝒍𝒊𝒗𝒆𝒔 𝒈𝒆𝒕 𝒓𝒊𝒄𝒉 𝒃𝒚 𝒈𝒐𝒐𝒅 𝒕𝒉𝒐𝒖𝒈𝒉𝒕𝒔, 𝒈𝒐𝒐𝒅 𝒅𝒆𝒆𝒅𝒔, 𝒈𝒐𝒐𝒅 𝒑𝒆𝒐𝒑𝒍𝒆 𝒂𝒏𝒅 𝒍𝒐𝒗𝒆𝒍𝒚 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔 𝒂𝒓𝒐𝒖𝒏𝒅 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒘𝒂ys...(As received through WhatsApp)

Sunday, July 21, 2024

ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பது...

 ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான

காரணங்களை பலரும் பலவிதமாக விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து கருத்தரித்தால்
சித்திரையில் குழந்தை பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்ற்றவனாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப்
பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக
ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Saturday, July 20, 2024

வாழ்கிறோமா..இருக்கிறோமா ?

  வாழுகிறோமா❓ இருக்கிறோமா❓


இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை நாட்களில் மட்டும்


கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான் இருந்தது


நண்பர்களோடு எதையும் எதிர்பாராமல் தூய நட்பாய் பழகினோம்


ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு

ஒரு வாரம் தவம் கிடந்தோம்

அந்த காலம் தான் நன்றாக இருந்தது..


ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..


தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..


ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..


இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..


அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்


மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்


வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்


ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..


ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..


கண்டதை உண்டாலும் செரித்தது.


தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..


பண்டிகை க்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன் தயாரானோம்


உடுத்த புதுத்துணி கையில் தரும் போது ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் போல் உணர்ந்தோம்


ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..


எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..


வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..


பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..


கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..


மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..


ஆசிரியைகளிடம்.

எளிமை இருந்தது.. 


படுக்கையை எதிர்பாராமல் பாயில்

உறங்கினோம்


தாத்தா பாட்டி சொல்லும் கதை கேட்டுகொண்டே 

அவர்கள் மடி மீது தலை வைத்து

 நாம் உறங்கிய தருணம் கண்டோம்


பெரியப்பா சித்தப்பா உரிமையோடு அடித்தார்கள் நம் தப்பை சரி செய்ய


பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..


அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..


பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...


காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..


பையில் இருக்கும் ஐந்து ரூபாய் க்கு அளவில்லா ஆனந்தம் கொண்டோம்


ஹோட்டலில் தாத்தா ஆசையோடு வாங்கி தரும் பூரி மசாலா க்கு எல்லையில்லாத மகிழ்ச்சி கண்டோம்


செல்போன் எதுவும் இல்லை

ஆனாலும் பேசிய நேரத்தில் வந்து சேர்ந்தனர் நண்பர்கள்


ஆசிரியர் மீது அசாத்திய மரியாதை இருந்தது


தாவணியில் தேவதைகளாக இளம் பெண்கள்


காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை கேட்டோம்


ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும் இல்லாமல் நண்பர்கள்  சுவைத்தோம்


ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..


மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..


மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது இருக்கிறோம் அவ்வளவே...


ஆமாம் தானே❓❓❓


(வாட்ஸ் அப் உபயம் )

#(ப.பி)

Sunday, June 16, 2024

Think before order..

 How the food delivery commerce works?* 


the *MAGIC* of *HOME DELIVERY* *at whose cost*


If I order 2 idlis with chutney and 1 masala dosa with sambar, from a nearby restaurant which is 1.5 km from home, the total bill comes to 177.3 rupees. Very normal darshini kind of a hotel. You can choose any aggregator like Swiggy or Zomato. 


1. Food - 110/- 

2. GST - 6.30 

3. Packing - 16/-

4. Delivery - 45/- 


Total - 177.30


This is the customer bill. 


You pay 67.30 extra, or 38% of what you spend on this order is on Non-food services. 62% is for food. 


So, the broad allocation is 62% for food, 5% to the government, 9% for packing and 25% for delivery. 


Now, let us take a look at how the restaurant reconciliation happens, after 10 days of the transaction. 


Amount paid to the restaurant = 70% of the order value. Zomato and Swiggy take 30% as sales commission.


Restaurant receives - 0.7 X 110 = 77/-


Amount paid to delivery partner = 15/- 


Amount paid to government = 6.30


Amount that Zomato or Swiggy pockets = 79/-


Now, if you analyze percentages and look at how much each of them have benefited from the transaction, you will realize this.


Food - 43.4% and non food - 56.6%.


Restaurant share - 43.4%

Delivery partner share - 8.5%

Government - 3.5%

Zomato / Swiggy share - 44.6%


So, what actually happens when this is how the transaction actually looks like? 


1. Quality and quantity of food. 


Your dine in experience is going to be much different as compared to food being ordered through a 3rd party.


2. Highly inflated prices on aggregator portals.


As a restaurant, if I need to run discounts and still manage to keep riding the gravy train, I need to raise my prices by 150% at least. That only means that the aggregator makes more money and the customer pays for it.


3. Food delivery in itself is not a sustainable practice with our inefficient solid waste management, use of plastic and the extremely affordable fuel prices.


Still hungry. Please reach for a chopping board and a frying pan and enjoy


Time to dig in.


*delivery partners are making more money than restaurants...*

*very useful information everyone should think and decide and share

Tuesday, June 11, 2024

ஒரு வகையில்....

 சமீபத்தில் வால்பாறையில் இருக்கும்  கோவிலுக்கு போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். 


எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார். 


ஆச்சர்யமாய் இருந்தது..


விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டோம் ...


அதற்கு அவர் சொன்னார் 


"சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில் தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். 


ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் 


இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.. 


இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் குரங்குகள் மாறி விடுகின்றன... 


வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக மாறி விடுகின்றன... 


எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது" என்று பதில் சொன்னார்...


கேக்கும்போதே மனசு திக்கென்றது நிறைய யோசிக்க வைத்தது...! - 


இலவச பஸ்ஸில் பயணம் செய்து

இலவச அரிசி வாங்கி, 

இலவச கிரைண்டரில் 

இட்லிக்கு மாவாட்டி, 

இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து,

இலவச மின்விசிறியைப் போட்டு 

இளைப்பாறி, இலவச டிவியில் படமும் சீரியல்களும் பார்க்கும் நம்மஊர் மக்களுக்கும், 

இது தான் நடக்கிறது!உழைக்கவே மனம் வருவதில்லை!"


மேட்டர்" என்னவோ குரங்கு பற்றித்தான். ஆனால் அது நம் மக்களுக்கும் அப்படியே பொருந்துகிறது.


படித்ததில் பிடித்தது

Wednesday, May 22, 2024

நம்மை ஏமாற்றும் மின்வாரியம்..

 ❌❌❌❌❌❌❌❌❌❌

*இதை நீங்கள் செய்வீர்களா என்று தெரியவில்லை உங்களுக்காகத்தான் இதை படித்துவிட்டு அனுப்புகிறேன் நீங்களும் மற்றவர்களுக்கு அனுப்புங்கள் தீர்வு காணும் வரை மிக பெரிய மின் வாரிய சுரண்டல்* *தற்போதைய TNEB மின் கட்டணம்:*

 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.  1330/-

 501 யூனிட் பயன்படுத்தினால் ரூ.  2127/-

 *1 யூனிட் அதிகமாக இருந்தால் ரூ.797/- கூடுதலாக செலுத்த வேண்டும்*


 இந்த முறையை மாற்றி, மாதாந்திர மீட்டர் ரீடிங் செய்ய வேண்டும்.

 தயவு செய்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.

 நீங்கள் 1000 யூனிட்களை 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால், நாம் ரூ.5420/- செலுத்த வேண்டும்.

 ஆனால், மாதாந்திர முறை அமல்படுத்தப்பட்டதால், மாதம் ரூ.1330/- மட்டுமே செலுத்த வேண்டும்.

 எனவே, இரண்டு மாத கட்டணம் ரூ.2660/- மட்டுமே.

 இரண்டு மாதங்களுக்கு ரூ.2760/- சேமிக்க முடியும்.

 மாதாந்திர மீட்டர் ரீடிங் முறையை கொண்டு வர அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.  உங்கள் அனைத்து குழுக்களுக்கும் அனுப்பவும்.🙏


 சகோதரர் அவர்கள் அனுப்பிய இந்தப் பதிவு மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு.......*


 பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை.  இதனால் நமது பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகிறது.


 ஆகவே இதன் முக்கியத்துவத்தைக் கருதி, இந்தக் கட்டுரையின் சாராம்சத்தை தமிழில் தருகின்றேன்.

 

 மின்சார வாரியம், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் பெரிய பொருளாதார நஷ்டம் நமக்கு ஏற்படுகின்றது......


 உதாரணத்திற்கு ,


 500 யூனிட் வரை பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330.


 அதே நேரத்தில் ஒரு யூனிட் கூடுதலாக வந்தால் (501 யூனிட் ) அப்போது கட்டணம் ரூ.2127.


 ஒரே ஒரு யூனிட் கூடுவதால், நமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.797.


 யோசித்துப் பாருங்கள்.... நம்மை அரசு எவ்வாறு சுரண்டுகின்றது என்று........?


 ஆக, *ஒவ்வொரு மாதமும் மீட்டர் ரீடிங் செய்யப்பட்டால், நமது மின்சார கட்டணம் குறைவு........!*


 மேலும்..........,


 இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது (60 நாட்களுக்கு ஒரு முறையாவது) மீட்டர் ரீடிங் பார்க்க சரியாக வருகின்றார்களா .....?  என்று சொன்னால் நிச்சயமாக இல்லை........


 *இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 28 அல்லது 29 ந் தேதி ரீடிங் பார்க்க வர வேண்டிய ஊழியர், இந்த மாதம் 31 ஆம் தேதி வந்தால் பல வீடுகளில், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.*


 ஆகவே இந்த அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல  அவசியமெனில் போராடவும் முன்வர வேண்டும்.

 


 அதிகம் பகிரவும்,

 அனுப்பப்பட்டது.

Tuesday, May 21, 2024

துவக்கத்தின் மகிமை

 சிக்கனம் : சொற்களில் தொடங்குகிறது.


வைராக்கியம் : உணவில் தொடங்குகிறது.


வன்மம் : சொல்லில் தொடங்குகிறது.


பெருந்தன்மை : மன்னிப்பில் தொடங்குகிறது.


சான்றாண்மை : விட்டுக்கொடுப்பதில் தொடங்குகிறது.


பேராசை : பணத்தில் தொடங்குகிறது.


அன்பு : புன்னகையில் தொடங்குகிறது.


அழகு : தூய்மையில் தொடங்குகிறது.


காதல் : கண்களில் தொடங்குகிறது.


காமம் : கற்பனையில் தொடங்குகிறது.


கருணை : பார்வையில் தொடங்குகிறது.


கண்ணியம் : மதிப்பதில் தொடங்குகிறது.


பரோபகாரம் : அண்டை வீட்டோடு தொடங்குகிறது.


பண்பு : பழகுவதில் தொடங்குகிறது.


ஒற்றுமை அனுசரணையில் தொடங்குகிறது.


நட்பு : பகிர்வதில் தொடங்குகிறது.


பாசம் : பிரிவில் தொடங்குகிறது.


நாணயம் : திருப்பி தருவதில் தொடங்குகிறது.


பகைமை : குறை காண்பதில் தொடங்குகிறது.


சோம்பல் : தூக்கத்தில் தொடங்குகிறது.


விழிப்புணர்வு : தண்ணீரை பயன்படுத்துவதில் தொடங்குகிறது.


வேகம் : சிந்திப்பதில் தொடங்குகிறது.


பொறாமை : ஒப்பிடுவதில் தொடங்குகிறது.


தோல்வி : அலட்சியத்தில் தொடங்குகிறது.


வீழ்ச்சி : ஆணவத்தில் தொடங்குகிறது.


ஆரோக்கியம் : கருவில் தொடங்குகிறது.


ஆத்திரம் இயலாமையில் தொடங்குகிறது.


மரணம் : ஜனனத்தில் தொடங்குகிறது.


பூமியில் வாழும் வாழ்க்கை கொஞ்ச நாள் வாழ்க்கை அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்...(வாட்ஸ் அப் பகிர்வு )

Thursday, May 16, 2024

மணி பென் படேல்..

 🙏

*_தெரியாத மணிபென் பட்டேல் & நன்றி கெட்ட  இந்திய அரசியல்_* 


மணிபென் படேல் சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒரே மகள். 16 வயதில் காதிக்கு மாறி (Khadi) காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தார்!

17 வயதில் அவள் தங்க வளையல்கள், காதணிகள் தங்க மணிக்கட்டு கடிகாரம் மற்றும் அனைத்து ஆபரணங்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் ஒரு துணி மூட்டையில் வைத்து, தந்தையின் ஒப்புதலைப் பெற்று, சுதந்திரத்திற்காக காந்தி ஆசிரமத்தில் அவற்றை டெபாசிட் செய்தார்.

1921க்குப் பிறகு சர்தார் அணிந்த அனைத்து ஆடைகளும் மணிபென் தயாரித்த நூலில் நெய்யப்பட்டவை.

நேருவின் மகள் இந்திராவைப் போல இல்லாமல், மணிபென் சுதந்திரப் போராட்ட வீரர், ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர்.

1928 இல், பர்தோலி சத்தியாகிரகத்தில் முகாம்களில் இருந்த சத்தியாக்கிரகிகளுக்கு உதவினார்.

1930ல் உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்!

அதன்பிறகு பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பர்தௌலியில் தடையை மீறி, 1932 இல் கைது செய்யப்பட்டார், கெடாவில் தடையை மீறியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், ராஜ்கோட்டின் கிராமங்களில் மக்களைத் தூண்டியதற்காக 1938 இல் கைது செய்யப்பட்டார்!

மணிபென் போன்ற இன்னொரு மகளைப் பார்க்கவில்லை என்று அந்தப் பெண்ணைப் பாராட்டினார் காந்திஜி!

காந்திஜியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்ப்படியாமையின் கீழ், மணிபென் 1940 இல் கைது செய்யப்பட்டு, மே 1941 இல் பெல்காம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மீண்டும் நீதிமன்றக் கைது செய்ய விரும்பியபோது, காந்திஜி இந்த பலவீனமான பெண்ணை உடல்நல குறைவுக்காக தடுத்தார்!

1942 க்விட் (Quit) இந்தியாவின் போது அவர் கைது செய்யப்பட்டார். 

கஸ்தூரிபா காந்தி மார்ச் 1944 இல் விடுவிக்கப்பட்டார், மீண்டும் மே 1944 இல் பர்தௌலியில் மீண்டும் கைது செய்யப்பட்டு சூரத் சிறைக்கும் பின்னர் எர்வாடா சிறைக்கும் அனுப்பப்பட்டார்! 


*அவள் திருமணம் செய்து கொள்ளாமல் தன் தந்தைக்கு சேவை செய்தாள்*

*சர்தார் 1950 ல் இறந்தார்*!


பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக டாக்டர் குரியனின் சுயசரிதையின் அடிப்படையில் மணிபென் தொடர்பான அதிர்ச்சியூட்டும் அத்தியாயம் இதோ: *'எனக்கும் ஒரு கனவு இருந்தது'*!


சர்தார் படேலுக்கு வங்கி இருப்பு அல்லது சொத்து இல்லை!

மிகவும் வெற்றிகரமான வழக்கறிஞராக அவருக்கு கணிசமான வருமானம் இருந்தபோதிலும், அவர் சுதந்திர இயக்கத்தில் மூழ்கிய பிறகு அனைத்தையும் கைவிட்டார்.

*அவர் சொல்வார்: அரசியலில் இருப்பவர்கள் சொத்து வைத்திருக்கக் கூடாது, நான் எதையும் வைத்திருக்க மாட்டேன்*!

 (இன்று இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சர்தாரை ஒரு பெரிய முட்டாள் என்று நினைக்கலாம்). 


சர்தார் இறந்தபோது மகளுக்கு எதுவும் வைக்கவில்லை!

சர்தார் இல்லாததால் அவள் வீட்டைக் காலி செய்ய வேண்டியிருந்தது!

தலைக்கு மேல் கூரையும், பணமும் இல்லாமல்

மணிபென் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது!

சர்தாரின் பிரிந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து, மணிபென் ஒரு பையையும் புத்தகத்தையும் கொடுக்க நேருவிடம் சென்றிருந்தார்!

பணிவுடன், பிரதமர் நேருவிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி பையையும் புத்தகத்தையும் நேருவிடம் ஒப்படைத்தார்!

புத்தகம் ஒரு கணக்கு புத்தகம்!

பையில் முப்பத்தைந்து லட்சம் ரூபாய் இருந்தது! (அது 1950 ம் வருடம்)*!

இரண்டையும் நேருவிடம் ஒப்படைத்துவிட்டு, சிறிது நேரம் காத்திருந்தாள்!

நேரு அவளுக்கு நன்றி கூட சொல்லவில்லை!

அவள் என்ன செய்வாள் என்றும் நேரு விசாரிக்கவில்லை!

அவள் எங்கே தங்குவாள் என்று நேரு கேட்கவில்லை!

அவளிடம் வாழ பணம் இருக்கிறதா என்று நேரு கேட்கவில்லை!

நேரு உனக்கு ஏதாவது உதவி அல்லது உதவி தேவையா என்றும் கூட நேரு கேட்கவில்லை!

அவளுக்காக நேரு ஏதாவது செய்ய முடியுமா? 

நேரு, அனுதாபத்துடன் பேசவில்லை, அவள் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை! 

சுதந்திரம் அடைவதற்கு முன்பு காந்திஜி அவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளிலிருந்து யாருமே சிபாரிசு செய்யாத நேருவை பிரதம மந்திரியாக நியமிக்கவேண்டி, சர்தார் பட்டேலை பிரதமர் பதவியை நேருவுக்கு விட்டு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் வேண்டுகோளுக்கு தலைவணங்கி, பிரதமர் பதவியை சர்தார் அவர்கள் நேருவுக்கு விட்டு கொடுத்தார். பிறகு சர்தார் பட்டேல் அவர்களை உள்துறை அமைச்சராக நியமித்தார் காந்திஜி அவர்கள். அந்த நன்றியை சுத்தமாக மறந்துவிட்டு, சர்தார் மகளுக்கு நேரு எதுவும் செய்யவில்லை. 

அந்த நேருவுக்கு 35 லட்சம் ரூபாய் பெரும் பணம் கிடைத்த பிறகு , மணிபென் அவர்களின் நினைவு சுத்தமாக இல்லாமல் போய்விட்டது திருவாளர் நேரு அவர்களுக்கு..


*மணிபென் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு உறவினருடன் தங்குவதற்காக அகமதாபாத்திற்கு திரும்பினார். நன்றிகெட்ட தேசத்தால் எப்பேர்பட்ட தியாகம் செய்த ஒரு பெண்மணி மறந்துவிடப்பட்டார்* !


இந்த செய்திகள் அனைத்தும் புத்தகத்தின் வழியாக எழுதியவர்.. டாக்டர் கௌர் மொஹந்தி. 


 எவ்வளவு அநியாயம்.....!!


அதிர்ஷ்டவசமாக, யாரோ இதை முன்னெடுத்து பதிவாக கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே குடிமக்களாகிய நாம் *இந்தியாவின் உண்மையான ஹீரோக்களைப்* பற்றி அறிந்து கொள்ளலாம்.

 *_சும்மாவா வந்தது சுதந்திரம் !_*

 *_இன்னுயிரைத்  தந்தவர்கள்‌ எத்தனையோ எத்தனை !_*

 *_வந்தே மாதரம்_*

🔥

Tuesday, May 7, 2024

இது‌ எப்படி இருக்கு

 தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...


ஆச்சரியமா  இருக்கா? தொடர்ந்து படிங்க.....


ஏன்னா சைக்கிள்ல போறவ 

கார் வாங்க மாட்டான்...

பைக் வாங்க மாட்டா ....

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...

வட்டியும் கட்ட மாட்டான்...


பேங்க் 

பைனான்ஸ் கம்பெனிக எதுக்கும் 

சல்லி பைசாவுக்கு கூட 

பிரயோஜனம் இல்லாதவ இவ ....


கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு 

போக மாட்டான்...

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...


சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...


பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...


இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு சுகர் வராது...

இதய நோய் வராது...

குண்டாகவும் மாட்டான்...

ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...


உலக

பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...


அதே சமயம் 


ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

10 இதய டாக்டர்...

10 பல் டாக்டர்...

10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...


உடனே முடிவெடுங்க

சைக்கிளா?

பைக்கா ? 

காரா?

இந்திய பொருளாதாரமா???

உங்க உடல் நலமா???( வாட்ஸ் அப் பதிவு )

Friday, May 3, 2024

அறிந்து வைப்போமா..

 கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது…


ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள்.

முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது....


"யாதும் ஊரே; யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே;...

வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;*_

முனிவின் இன்னாது என்றலும் இலமே;

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...

ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”


_*கணியன் பூங்குன்றனார்*_


இதன் பொருள் ….

_*"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."*_

*எல்லா ஊரும் எனது ஊரே....எல்லா மக்களும் எனக்கு உறவினர்களே என்று எண்ணுக 


*"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."*_

உனக்கு வரும் தீமையானாலும்  நன்மையானாலும், அது அடுத்தவரால் வருவதில்லை.

 அவற்றின் அடிப்படை காரணம் நீதான் என்பதை உணர்க ..


*"நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன...."*_

*மனக் கவலையும்  ஆறுதலும்கூட மற்றவரால்  கிடைப்பது இல்லை,  மனம் பக்குவப்பட்டால், கவலைகள் உன்னை அண்டாது என்க ..


_*"சாதலும் புதுவது அன்றே.."*_

இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது எல்லோருக்கும் பொதுவானது....


_*"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே 

முனிவின் இன்னாது என்றலும் இலமே."*_

வாழ்க்கையில் ஏற்படும் இனிய நிகழ்வுகளைக் குறித்து பெருமகிழ்ச்சி கொள்ளவும்  வேண்டாம் ..

அதுபோலவே, துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். 

இன்பமும் துன்பமும் இணைந்தே வாழ்க்கை என்பதை உணர்க… 


*"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."*


*இந்த வானம் வெப்பமான  மின்னலையும் தருகிறது குளிர்ந்த மழையையும் தருகிறது. 

கற்களைப் புறட்டிச் செல்லும் காட்டாற்று வெள்ளத்தில், முட்டிமோதிச் செல்லும் படகு போல, , துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும்  ஊடே  வாழ்க்கையும்  போய்கொண்டே இருக்கும். 

இதுவே இயல்பு என மனத்தெளிவு கொள்க....*_


*"ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."*_

*இந்த தெளிவு வரப் பெற்றால், உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப்  பார்த்து  வியந்து நிற்கவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ளவர்களைப் பார்த்து   இகழ்வதும் வேண்டாம். 

அவரவர் வாழ்வில்  அவரவர்  பெரியவர் என்பது அடிப்படை ..

Wednesday, May 1, 2024

கோவிஷீல்ட்....மருத்துவரின் விளக்கம்

 கோவிஷீல்டு  தடுப்பூசி குறித்த விளக்கம் 


சிறிய ரீகேப்


கொரோனா பெருந்தொற்று 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 

2022 ஆம் ஆண்டு தொடக்கம் வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது. 


கொரோனா பெருந்தொற்று 

கொரோனா வைரஸ் குடும்பத்தின் 

புதிய சார்ஸ் வகை இரண்டு (nCoV-2) என்ற வைரஸினால் ஏற்பட்டது. 


இந்த தொற்றுக்கு எதிராக 

மூன்று முக்கிய வகைகளில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி தொடங்கியது. 


பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனமும் இணைந்து 

வேக்ஸ்செர்வியா எனும் வெக்ட்டார் வகை தடுப்பூசியை உண்டாக்கும் முயற்சியில் இறங்கின. 


ரஷ்யாவின் கேமாலயா நிறுவனம் 

ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டறிந்தது. 


ஃபைசர் மற்றும் மாடர்னா முதலிய நிறுவனங்கள் மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்பம்  மூலம் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியை உண்டாக்கும் முயற்சியில் இறங்கின. 


இந்தியாவில் கோவேக்சின் எனும் பெயரில் வைரஸை செயலிழக்கச் செய்து உருவாக்கும் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும் ஐசிஎம்ஆரும் இணைந்து உருவாக்கின. 


சீனாவும் தன் பங்குக்கு செயலிழக்கச் செய்த வைரஸ் தொழில்நுட்ப தடுப்பூசியை உருவாக்கியது. 


டிசம்பர் 2020 தொடங்கி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஃபைசர் மாடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 


இந்தியாவில் வேக்செர்வியா தடுப்பூசியை கோவிஷீல்டு எனும் பெயரில் சீரம் இண்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்தது. 

ஜனவரி2021 மத்தியில் மக்களுக்கு வழங்கப்படத் தொடங்கியது. 


தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களுள் 

நிகழும் அரிதினும் அரிதான பக்கவிளைவுகளைத் தொடர்ந்து மருத்துவ அறிவியல் உலகம் ஆய்வுகள் மூலமும் அறிக்கைகள் மூலமும் வெளிப்படுத்தின. 


அதில் மெசஞ்சர் ஆர்என்ஏ தொழில்நுட்பம் மூலம் உண்டாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு அரிதினும் அரிதாக இதய தசை அழற்சி ( மயோ கார்டைட்டிஸ்) ஏற்படுகிறது என்றும் 


வெக்ட்டார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  உண்டாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு அரிதினும் அரிதாக 

ரத்த உறைதல் தன்மையை அதிகமாக்கும் , ரத்த நாளங்களில் ரத்த கட்டிகளை ஏற்படுத்தும் பக்கவிளைவு உண்டு என்று மருத்துவ அறிவியல் ஆய்வறிக்கைகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 


எனினும் அதே சூழலில் பரவி வந்த கொரோனா தொற்று பீட்டா , டெல்ட்டா  எனத் தீவிர வடிவம் எடுத்தது. 

இத்தகைய வைரஸ் தொற்றைப் பெறுபவர்களில் தீவிர தொற்று அடைந்தவர்களுக்கு ரத்த உறைதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படும் தன்மை மிக அதிகமாக இருந்தது. 


மருத்துவ அறிவியலாளர்கள்

தடுப்பூசியினால் ஏற்படும் பலன்களையும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் ஆராய்ந்து 

தடுப்பூசிகளினால் தீவிர கொரோனா நோய் தடுக்கப்படுகிறது. 

மேலும் அரிதினும் அரிதாக தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. 

எனவே தடுப்பூசிகளினால் ஏற்படும் பலன் பாதகத்தை விட அதிகமாக இருப்பதால் தடுப்பூசி பெறவே வலியுறுத்தினர். 


இந்தியாவைப் பொருத்தவரை சுமார் இருநூறு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 

இதில் 90% க்கு மேல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

 

கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்ட 28 நாட்களுக்குள் இத்தகைய ரத்த உறைதல் நிகழ்வுகள் / ரத்த தட்டணுக்களை குறைத்தல் போன்ற பக்க விளைவுகளை அரிதினும் அரிதாக ஏற்படுத்தியது


அரிதினும் அரிது என்றால் எவ்வளவு ? 

( 22 ஏப்ரல் 2021 இல் நான் எழுதிய பதிவில் இருந்து) 


ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பிரிட்டனில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடையே ரத்த உறைதல் நிகழ்வுகள் எத்தனை நிகழ்ந்துள்ளன? 

 


ஆஸ்டர் செனிகா நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டறிந்த வெக்ட்டார் வைரஸ் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய AZD1222 எனும் தடுப்பூசி 


2.5 கோடி பேருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் 

பிரிட்டனில் 1.8 கோடி பேர் சேர்த்து 


4.3 கோடி பேருக்கு 

வழங்கப்பட்ட பின் 

86 ரத்த உறைதல் நிகழ்வுகள் ( ஐரோப்பிய யூனியன்) 

30 ரத்த உறைதல் நிகழ்வுகள் ( பிரிட்டன்) 

இரண்டையும் சேர்த்து 


116 நிகழ்வுகள் 

 கண்டறியப்பட்டன 


இது தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களிடையே 


லட்சம் பேருக்கு போட்டால் 0.2 பேருக்கு அதாவது ஒரு நபர் என்ற அளவில் கூட நேராத அளவு அரிதினும் அரிதான நிகழ்வு 


இந்த ரத்த உறைதல் நிகழ்வில் 

மூளைக்கு செல்லும் சிரை (Cerebral venous thrombosis) 

வயிற்றுப்பகுதியில் உள்ள சிரை, கால்களில் உள்ள ஆழ்சிரை ஆகியவற்றில் பெரும்பான்மை கட்டிகள் ஏற்பட்டுள்ளன.  சிறுபான்மையாக தமனிகளில் கட்டிகள் ஏற்பட்டுள்ளன .


இத்தகைய ஒவ்வாமையை வெளிப்படுத்துவோருக்கு  ரத்த தட்டணுக்கள் 1.5 லட்சம் என்ற அளவை விட குறைந்து இருக்கும். 


டி- டைமர் எனும் ரத்தம் கட்டியாவதைக் கண்காணிக்க உதவும் உயிர்ரசாயன சமிக்ஞை நொதி அளவில் 4.0 மிகி/லி க்கு மேல் கூடியிருக்கும் 


இந்த அரிதினும் அரிதான பக்கவிளைவு நிகழ்வை 

Vaccine Induced Prothrombotic Immune Thrombocytopenia என்று பெயிரிட்டுள்ளனர். 


அதாவது ரத்த தட்டணுக்கள் குறைபாடுடன் கூடிய ரத்த உறைதல் நிலையை உருவாக்கும் பக்கவிளைவு என்று பொருள் 


இதே போன்ற ஒவ்வாமை நிகழ்வு ரத்த உறைதல் தன்மையை தடுக்க பயன்படும் 

ஹெபாரின் என்ற மருந்தை செலுத்துபவர்களுக்கு அரிதினும் அரிதாக ஏற்படும். அதை HEPARIN INDUCED THROMBOCYTOPENIA என்று அழைப்போம். 


நூறு பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது 

0.0002 பேருக்கு நிகழும் அரிதினும் அரிதான நிகழ்வு 


இதை கருத்தில் கொண்டு 

ஐரோப்பிய யூனியனின் ஐரோப்பிய மெடிக்கல் ஏஜென்சியும் 

பிரிட்டனின் தேசிய சுகாதார நிறுவனமும் (NHS) 


கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் 

ஒவ்வொரு லட்சம் பேருக்கு 1400 


கொரோனா தொற்றினால்  ரத்த உறைதல் தன்மை ஏற்படுவதற்கு 

ஒவ்வொரு லட்சம் பேருக்கு 16800 


இதை ஒப்பிடும் போது 

இந்த தடுப்பூசியினால் ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவு

லட்சம் பேருக்கு 0.3 என்ற மிக மிக குறைவான அளவிலே

 ஏற்படுவதால் 

தொடர்ந்து தடுப்பூசியை மக்களுக்கு வழங்கி வருகின்றது.  


இந்த VIPIT பக்கவிளைவின் அறிகுறிகள் என்ன? 


ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 -42  நாட்களுக்குள் 


அதீத தலைவலி / வலிப்பு / பக்கவாதம் 


மூச்சு விடுவதில் சிரமம்


நெஞ்சு வலி


வயிற்று வலி 


கால்கள் வீங்கி சிவந்து குளிர்ச்சியாக காணப்படுதல் 

போன்ற அறிகுறிகள் இருந்தால் அது 

குறித்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது. 


இந்த விபிட் விளைவுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தால் நல்ல முறையில் மீளும் சிகிச்சை உள்ளது. 


வயிற்றுப்பகுதி வலிக்கு ஸ்கேன் எடுக்கப்பட வேண்டும்.  

தலைவலிக்கு  தலைப்பகுதி எம்ஆர்ஐ   

கால்கள் வீக்கம் இருந்தால் வலி இருந்தால் ரத்த நாளங்களுக்கான டாப்ளர் பரிசோதனை எடுக்கப்படும் 


ப்ளேட்லெட் அளவுகள் 1.5 லட்சத்துக்கும் கீழ் குறைந்திருக்க வேண்டும். 


டி டைமர் அளவுகள் 4 மிகி/லிக்கு மேல் கூடியிருக்க வேண்டும்


இவர்களுக்கு ஹெபாரின் அல்லாத ரத்த உறைதல் தடுக்கும் மருந்துகளான அர்காட்ரோபான் அல்லது ஃபாண்டாபாரிணக்ஸ் மூலம் சிகிச்சை வழங்கலாம். 


கட்டாயம் ரத்த தட்டணுக்கள் மாற்று சிகிச்சையோ ஹெபாரின் மூலம் சிகிச்சையையோ தவிர்க்க வேண்டும். 


இதற்கென பிரத்யேகமாக உள்ள சிரைவழி இம்யூனோகுளோபுளின் (Intravenous Immuno globulin ) சிகிச்சையை வழங்கிட வேண்டும். 


இந்தியாவில் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனத்தின் பதிப்பான கோவிஷீல்டு இதுபோன்ற ரத்த உறைதல் நிகழ்வுகளை உருவாக்குகின்றதா ? 


கோவிட் தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்க தேசிய தடுப்பூசி பக்க விளைவுகள் கண்காணிப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு 

தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகளை தொடர்ந்து கண்காணித்தும் ஆய்வு செய்தும் வருகின்றனர். 


அவர்களின் அதிகாரப்பூர்வ கருத்துப்படி 

மார்ச் 13,2021 வரை 

இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட மக்களுள் 

தடுப்பூசி சார்ந்த மரணங்கள் 79 நடந்தன 

412 தீவிர பக்க விளைவுகள் நிகழ்ந்தன. 


இந்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை 17.05.2021


கோவிஷீல்டு தடுப்பூசியால் மிக மிகக் குறைந்த அளவில் ரத்த உறைதல் நிகழ்வுகள் நடந்துள்ளன என்று அறிக்கை வெளியிடப்பட்டது. 


அதில் பத்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்பால் 0.61 என்ற அளவில் மட்டுமே ரத்த உறைதல் நிகழ்வுகள் நடக்கின்றன. 


இது பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைக் காட்டிலும் மிக மிகக் குறைவு 

எனினும் இந்தத் தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் மக்கள் அதிகம் என்பதையும் இந்த ஆய்வு பரைசாற்றியது.


அது குறித்த எனது பதிவின் லிங்க் 


https://www.facebook.com/share/p/vh9wEL9Sh7yZvbzd/?mibextid=oFDknk


இவ்வாறு மருத்துவ உலகம் தொடர்ந்து 

தடுப்பூசியினால் ஏற்படும் நன்மை மற்றும் பக்கவிளைவுகளை சீர்தூக்கிப் பார்த்து தொடர்ந்து வெளிப்படையாக பேசிவந்திருக்கிறது. 


இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. 


பிறகு ஏன் தற்போது 

இந்த கோவிஷீல்டு பக்கவிளைவுகள் தலைதூக்கி உள்ளன? 


இது பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு அதனால் ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவான ரத்த உறைதலுக்கு உள்ளான சகோதரர் ஒருவருக்கும் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனத்துக்கும் இடையே 2021இன் மத்தியில் இருந்து  நடக்கும் வழக்கில் 


2023 ஆம் ஆண்டு 

அத்தகைய ரத்த நாள அடைப்புக்கு எங்களது தடுப்பூசி காரணமாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று கூறி வாதிட்ட ஆஸ்ட்ரா செனிகா நிறுவனம் 


தற்போது 

இத்தகைய ரத்த உறைதல் நிகழ்வு அரிதினும் அரிதாக நிகழக் கூடும் என்று அறிவித்திருக்கிறது. 


இதில் எந்த வித அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை


காரணம் இந்த விசயங்கள் அனைத்துமே நமக்கு 2021ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தெரியும். 


எனினும் ஆஸ்ட்ரா செனிகா நிறுவனம் தற்போது வழக்கில் கூறியபடியால் மீண்டும் மீடியாவில் இந்த செய்தி வலம் வரத் தொடங்கியிருக்கிறது. 


இன்னும் சொல்லப்போனால் கோவிஷீல்டு பெற்ற 80 கோடிக்கும் மேல்  மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. 


முதலில் சில விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் 


கோவிஷீல்டு தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்கு முதல் இருபத்தி எட்டு  நாட்களுக்குள் இத்தகைய ரத்த உறைதல் ஏற்படும். 


அரிதினும் அரிதாக 

பத்து லட்சம் பேரில் ஒருவருக்கும் குறைவாகவே இதனால் பாதிப்புக்குள்ளாகினர். 


அப்போது பெற்ற தடுப்பூசிக்கு  இப்போது பக்கவிளைவு தெரிகிறது எனும் அளவில் எத்தகைய ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை. 

அறிவியல் சான்றுகளும் இல்லை. 


இன்னும் சொல்லப்போனால் தடுப்பூசிகள் பெரும்பான்மை மக்களுக்கு செலுத்தப்படும் முன்னமே இரண்டாம் அலை இந்தியாவில் வீசியது. 

அதில் பலருக்கும் கொரோனா தொற்று தீவிரமாக ஏற்பட்டது. 

அத்தகைய கொரோனா தொற்றின் தாக்கமும் நம்மிடையே பல வாழ்வியல் மற்றும் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை உண்டாக்கி உள்ளன. 


இன்னும் சொல்லப்போனால் 

மருத்துவ அறிவியல் ஆய்வுகளில் 

தடுப்பூசி பெற்றவர்களிடையே மாரடைப்பு சார்ந்த மரணங்கள் 

கொரோனாவுக்கு பின்பான காலங்களில் குறைவாக நடந்து வருவதாக ஆய்வு முடிவுகள் உள்ளன. 


எனவே தடுப்பூசி பெற்றவர்கள் பீதிக்குள்ளாகத் தேவையில்லை. 


தடுப்பூசிகள் - எவ்வாறு பலன்கள் கொண்டிருந்தவையோ அதே போன்று பக்கவிளைவுகளும் கொண்டிருந்தன 


எந்த மருந்திற்கும் பலனும் பக்கவிளைவும் இணைந்தே இருக்கும். 


தீவிர பக்கவிளைவுகள் அரிதினும் அரிதாக தடுப்பூசிகளுக்கு இருந்தது உண்மை. 

இதை மருத்துவர்களோ

நவீன மருத்துவ அறிவியலாளர்களோ மறுக்கவில்லை. 


தொடர்ந்து இதுகுறித்து நிகழ்காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறேன். 

அதன் லிங்க்குகள் இதோ


https://www.facebook.com/share/p/4iPyufwZjQUCgxcV/?mibextid=oFDknk


https://www.facebook.com/share/p/31HdJFKgj4xZ7Mw2/?mibextid=oFDknk


அரிதினும் அரிதாக 

பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு என்ற அளவில் ஏற்படும் பக்கவிளைவை ஏதோ அனைவருக்கும் ஏற்படுவது போலவும் 

மீடியா நண்பர்கள் பரப்புவது நன்மையன்று. 


தங்களது செய்திகளில் 

ரத்த உறைதல் பக்கவிளைவு அரிதினும் அரிதாக ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசிக்கு "ஏற்பட்டது" என்று குறிப்பிடுங்கள்


மூன்று வருடம் முன்பு தடுப்பூசி போட்டவர்களுக்கு இப்போதும் அத்தகைய நிகழ்வுகள் நிகழ்கிறது என்று அறிவியல் ஆதாரமில்லாத  தகவல்களைப் பரப்பாதீர்கள். 

அந்த பக்கவிளைவு தடுப்பூசி செலுத்திய  4 முதல் 42 நாட்களுக்குள்  நடக்கவே வாய்ப்பு உண்டு. 


கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலையில் பல உயிர்களைக் காத்தவை - கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள். 


மக்களைத் தேவையற்ற பீதியில் வைத்திருக்கவே இத்தகைய செய்திகள் உதவுகின்றன. 


கோவிஷீல்டு கோவேக்சின் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்ட சகோதர சகோதரிகளே வீண் அச்சம் வேண்டாம் என்று கூறி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். 


 Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

Tuesday, April 30, 2024

சொல்லி வைப்போம்..

 தமிழக அரசு நினைத்தால்.,.   எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம் !


நம் அனைவரின் சிந்தனைக்கு மட்டுல்ல, வனத்துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு சிறு பதிவு !

                                       தமிழ் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள்:- 37.                                                  


நகராட்சிகள்:-148.                   


பஞ்சாயத்து யூனியன்கள்:-385.                      


டவுன் பஞ்சாயத்துகள்:- 528.                                                


கிராம பஞ்சாயத்துகள்:-

12,618.         


ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் குறைந்தது 5 குக்கிராமங்கள் இருக்கும். 


அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும்

  "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம்" 


நடைமுறையில் உள்ளது.       

 

இந்த 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம்,  மாதம் ஒரு செடி மட்டுமே நட்டு பராமரித்து வந்தால் போதும் !


நம் கிராமங்கள் பசுமையான கிராமங்களாக மாறிவிடும். !


                              For example :- 12,618 கிராம பஞ்சாயத்துகளில்,100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் 50 பேர் பணிபுரிகிறார்கள் எனில்:-12,618×50= 6,30,900 நபர்கள் மாதம் ஒரு செடி நடவு எனில் 6,30,900 எனில் 12 மாதங்களுக்கு 6,30,900×12= 75,70,800.  செடிகள்.


       கற்பனை செய்ய முடியாத எண்ணிக்கை !


         தமிழ்நாட்டை பொறுத்த வரை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள்  மழைக்காலங்கள் !


இந்த காலங்களில் செடி நடவு செய்து ஒரு வருட காலம் பராமரித்தால் போதும் !

 

பின்னால் மரங்கள் வேர்களில் சேமித்து வைத்துள்ள ஈரத்தன்மையால் தானாக வளர்ந்து விடும்.   


 இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கும்,கால்நடைகளுக்கும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம்.                  


100 நாள் வேலைவாய்ப்புத்திட்டத்தில் செடிகள் நடவு செய்ய தேவைப்படும் செடிகள், வனத்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியோர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.         


இந்த பதிவை காணும் மேற்குறிப்பிட்ட மூன்று துறை அலுவலர்கள், கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தி,(ஒரு பஞ்சாயத்திற்கு, வருடத்திற்கு  500 செடிகள் எனக் கணக்கிட்டு) 


கிராமங்களில் மரம் வளர்ப்பு குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்து, உண்மை நிலையை தெரிவித்து, ஒப்புதல் பெற்றால்...


 இத்திட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெற்று, நம் நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம் !


                       இந்தப் பதிவினை படிக்கும் ஊடக நண்பர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் இவற்றை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Friday, April 26, 2024

Tn.govt.servants.NHIS

 *தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்* *மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின்*

*பார்வைக்காக*:*

---------------------------------------------------------------------

நீங்கள் புதிய காப்பீட்டு திட்டம்

(New Health Insurance Scheme) NHIS சந்தாதாரரா/சார்ந்தவரா...

அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...

அவர்களின் முகவரி மற்றும்

தொலைபேசி எண்கள் 📞📞📞📞📞


1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101


2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102


3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104


4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105


5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106


6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107


7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108


8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109


9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110


10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112


11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113


12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114


13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164


14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116


15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117


16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118


17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119


18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123


19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124


20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125


21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126


22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127


23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128


24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135


25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136


26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132


27 .Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133


28 .Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180


29 .Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road, Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129


30 .Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri,Vellore-632009. Mr.Vinayagamoorthy 7373703137


31 .Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138


32 .Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நல்ல தகவல் நீங்களும்  பகிர்ந்திடுங்கள்! நண்பர்களுக்கும் உதவிடுங்கள்!

Tuesday, April 23, 2024

சிம்மாசனத்தில் அமர்ந்தும் பிச்சைக்காரனாய்

  மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Saturday, April 20, 2024

அரசியல்..கர்மா..

 😀


*அண்ணாமலை* என்று ஒரு பலமான எதிரியை களமிறக்கியது *கர்மா*


கர்மா பொல்லாதது.. 

அதை வெல்ல யாராலும் முடியாதது.. 

இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..


மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சி பெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.


காமராஜர் பதவி இழந்து, அண்ணாதுரை மறைந்த பின் நமக்கு எதிரி யாருமே இல்லை என்று இறுமாந்து இருந்த கருணாநிதிக்கு எம் ஜி ஆரை முன்னிறுத்தியது கர்மா.. அவர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சி கட்டிலுக்கு வர முடியவில்லை இதுதான் கர்மா 


எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய் விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார் இதுதான் கர்மா .


ராமதாஸ்,சசிகலா , வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள் இதுதான் கர்மா   ...


எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...


ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்...


ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார் இதுதான் கர்மா  ...


ஜெயலலிதா சிறைக்கு போக வேண்டுமென கருணாநிதியும்.... கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...


ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறை சென்ற போது  அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி  இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.


மெத்தப் படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...


மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமர் ஆக்கிய சோனியா, இந்தியாவே என் குடும்பத்திற்கு சொந்தம் என் மகனை எப்போது வேண்டுமானாலும் பிரதமர் ஆக்கி கொள்வேன் என்று இறுமாப்பில் இருந்த சோனியாவுக்கு மோடி வடிவில் ஆப்பு வைத்தார் கடவுள் இதுதான் கர்மா  


ஜெயலலிதா அம்மையார் மறைந்து சசிகலா முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்து, எடப்பாடியார் முதல்வர் ஆனார் இது விதி என்றால்... எடப்பாடியார், சசிகலா தினகரன் என பிரிந்து, தேர்தலில் படு தோல்வி அடைந்து ஸ்டாலின் முதல்வர் ஆகி, இனி எதிரிகள் யாரும் இல்லை நிம்மதியாக ஆட்சி செய்யாலாம் என்று ஸ்டாலின் நினைக்க, அண்ணாமலை என்று ஒரு பலமான எதிரியை களமிறக்கியது கர்மா .. இது தான் கர்மா 


விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்... ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது....


கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை... 


உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் 

தவறுவதும் இல்லை....


உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.


யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.. .


கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் 

நன்மையை மட்டுமே விதைப்போம்.


நல்லவர்களாக வாழ்வோம்.

கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.....


*பாவமன்னிப்பு*  என்ற மதச்சடங்கு, இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?


பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.


உணர்ந்தவன் பாக்கியசாலி.... கட்டுப்பட்டவன், புத்திசாலி.. நீங்கள் பாக்கியசாலியா... புத்திசாலியா?..  உங்களுக்கான மதிப்பெண்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்..... 


வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்ற நல் கொள்கையை பின்பற்றுவோம்  நமது வருமானத்தில் ஓர் மிக சிறிய தொகையினை நம் சமுதாய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம்.


தயவுசெய்து யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். கர்மா அதனுடைய வேலையை மறக்காமல் செய்யும்.


இறைவனின் ஆசீர்வாதத்தையும் விட  தர்மத்தின் வாழ்த்து மிகவும் சிறப்பானது. தர்மம்-தலைகாக்கும்  தக்கசமயத்தில் துணை நிற்கும்.  கூட இருந்தே குழி பறித்தாலும் செய்த தர்மம் தலைகாக்கும்.      

 

தர்மமானது  நம் வம்ச வழியையும் நல் வழி அழைத்துச் செல்லும்.    

                                                                            பார்ப்போம்...(வாட்ஸ் அப் பகிர்வு )

 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, April 7, 2024

பயனுள்ள தை பகிரலாமே..

 தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விடுதி


வெளியூரில்  இருந்து சென்னைக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகளிர் விடுதி மாவட்டங்களில் வந்து வேலை செய்து வரும் மகளிருக்கான மாதம் 300 ரூபாய்க்கு ”தோழி பெண்கள் தங்கும் விடுதி”.. தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி! - முழுவிபரம்

அமைந்துள்ள இடங்கள்:


இவ்விடுதிகள் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.


வசதிகள்:


சாப்பாட்டு அறை, ஓய்வு அறை, க்ரீச், வைஃபை, ஏர் கண்டிஷனர்கள், லிஃப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் போர்டு, அயர்ன் பாக்ஸ், குளிர்சாதனப் பெட்டியுடன் கூடிய சரக்கறை, மைக்ரோவேவ், வாட்டர் கூலருடன் கூடிய ஆர்ஓ வாட்டர் போன்றவை உள்ளன. அதோடுகூட சிசிடிவி கேமராக்கள் என்று பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரம் கண்காணிப்பும் உள்ளது.குடும்பங்கள்/உறவினர்களுக்கு அவ்விடத்தில் தங்குவதற்கான விடுதி வழங்கப்படுவதில்லை.


நேரம்:


இரவு 10:00 மணக்குள் விடுதிக்கு வந்து விடவேண்டும். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரத்திற்கு ஏற்றார் போல விடுதிக்கு வரலாம்.


கூடுதல் விவரங்களுக்கு:


தமிழ்நாடு அரசின் தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  techexe@tnwwhcl.in என்ற இணையதள முகவரியின் மூலம் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் தேவையான விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


முழுமையான விவரங்களுக்கு:


http://tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலமாக விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு போன்ற  தகவல்களையும் பெறலாம். For புக்கிங் 


https://www.tnwwhcl.in/hostel-details

Friday, March 29, 2024

படித்ததில் பிடித்தது

 ●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்.


○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க.


●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா...


○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!...


●X:  சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன்.


○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்.


●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?


 Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன்னா..


6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்.


5 ன்ன பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்.


4 ன்ன, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்.


3 ன்ன, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்.


2 ன்ன, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது.


1 ன்ன, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும் போதுதான்.


அப்புறம் எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்ன, நீங்க பையனோட salary சர்டிபிகேட் "கொடுக்கனும்.


வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்.


பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்.


●X: மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?


○Y : என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!

ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்துஇருக்கோம்!" புகுந்த வீட்லே போய் கஷ்டப் படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!

மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத்தெரியாது! சமையல் பண்ணத் தெரியாது! லீவு நாளுன்ன 10 மணிக்குத்தான் எழுந்துந்துப்பா, புடவை கட்டிக்கத்தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!


அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா! இதுக்கெல்லாம் நீங்க ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா! 


●X : சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது... இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்! 


○Y : அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க...


●X : என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பேசறேன்...

உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா! 


நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க

மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு சனத்தை கொண்டு கல்யாணம் பண்ணினா இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!


○Y : என்னது... என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்...

Thursday, March 28, 2024

அமெரிக்கா..ஒரு புலிவால்..

 படித்தேன்- உண்மை- யதார்த்தம்-  பகிர்கிறேன்*


*Ground Reality from a US Citizen:

“ சித்ரா ராகவன்.

உ.எண்.1854.


*இதோ ஒரு புதிய பார்வை - தங்கள் கவனத்திற்கு...


*America ஒரு புலிவால்


நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன்.

 

அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று.....


*ஆனால் Ground reality வேறு. 


நாணயத்துக்கு 2 பக்கம் உண்டு. 

நான் அவர்கள் பக்கத்தையும் பார்க்க விரும்புகிறேன். 


அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம். ஆனால் தான் விரும்பிய படிப்பை படிக்க வரும் குழந்தைகளின் student life எப்படிபட்டது தெரியுமா? 

Middle class அப்பாவால் fees boarding கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பமுடியும். எல்லோருக்கும் scholarship கிடைப்பதில்லை .

*நிறைய குழந்தைகள் பணத்தேவைக்காக அந்த குளிரில் part time வேலை செய்யும். 


*வீட்டில் சாப்பிட்ட தட்டை அலம்பாத பையன் அங்கே hotelல் தட்டை எடுத்து table clean பண்ணுவான். *வீட்டில் துடைப்பத்தை எடுத்து பெருக்காத பெண் அங்கு canteenல் தரைக்கு mop போடுவாள். 


வீட்டு வேலை செய்ய ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். *அமெரிக்கா சொல்லி தரும். 


Vacationல் அமெரிக்க குழந்தைகள் அவரவர்கள் வீட்டிற்கு போய்விடும்.


உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து அவர்கள் மனது வைத்து நம் குழந்தைகளை ticket வாங்கி அழைத்துக்கொண்டால் உண்டு.


*இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.

படிப்பு மிகவும் கடினம். 

நல்ல grade வாங்கவில்லை என்றால் collegeல் திருப்பி அனுப்பி விடுவார்கள். *Tension.


படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள்

வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்பி போக வேண்டும் . பணம் waste. அப்பா மூஞ்சியை திருப்புவார். *Tension.


வேலை கிடைத்தவுடன் 3 வருடத்திற்குள் h1b work visa lotteryல் விழ வேண்டும்.

இல்லாவிட்டால் திரும்பி போக

வேண்டும். *Tension. 


இத்தனையையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம். இங்கே வேலை பார்க்க தகுதி உள்ள பெண்/பையன் அல்லது இங்கேயே வேலை பார்ப்பவர்களை பார்க்க வேண்டும்.


இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை, family background பார்த்தால் போதும்.


*இங்கே location, career முக்யம்.

North carolina, south carolina - 

Low cost area. Bay area, California. அதே area வரன்தான் வேண்டும். cost of living அதிகம்.


வேறு state வரன் என்றால் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து வேலை தேட முடியாது.  

Visa transfer ,amendment என்று ஏகப்பட்ட ப்ரச்னை.


*ஒருசம்பளத்தில் California வில் குடுத்தனம் பண்ண முடியாது.


Minasotta, Detroit, Chicago - snow area- 

Social drinking- NO


பாதி பேர் west coast california Bay areaல் இருப்பார்கள். *அவர்கள் east coast வரன்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.


இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு வேலை பார்க்க EAD permit உள்ள வரன் வேண்டும். 

வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இருக்க முடியாது.

அப்படியே வேலை பார்த்தாலும் dependent visa என்றால் ஒருத்தருக்கு வேலை போனால் அடுத்தவருக்கும் போய்விடும். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும் இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.

Citizen வரன்கள் born and brought up in USA வரன்தான் வேண்டும் என்பார்கள்.


*அதற்குள் நிறைய குழந்தைகளுக்குஇந்த ஊர் climate ,தண்ணிக்கு முடி கொட்டிவிடும்.😁


*இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம், ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.😁😁


பிறகு 2 வருடத்திற்கு ஒரு முறைதான் 3 weeks leave கிடைக்கும். 

*இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா போய் வந்தால் இரண்டு வருட savings காலி. 


பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland என்று சுற்றிக்காட்டிவிட்டு கைநிறைய சாமானும் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள். 


*வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண்டால் life, health, பல்லுக்கு என்று தனித்தனியாக insurance எடுக்க வேண்டும்.


*Insuranceல் cover ஆகாத வியாதி வந்தால் அவ்வளவுதான். சொத்தையே எழுதி வைக்க வேண்டும். 


Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

அதற்குள் ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே  போய் விடும் அல்லது நாமளே போய்விடுவோம்.


Doctors உம் சனி, ஞாயிறு லீவு எடுப்பார்கள். 

சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும். 


Weekdaysல் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment குடுப்பார்கள். அப்போதுதான் இவர்களுக்கு office meeting இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள். *அதனால்தான் பணத்தை இந்தியாவுக்கு  அனுப்பி இங்கேயே ராஜ வைத்யம் பார்த்துக்கொள் என்கிறார்கள்.


நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது.


சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்கு போய் வந்த ஒரு பையனை companyல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.


Survival முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். 

இப்போது இந்தியாவிலும் இப்படித்தான்.


Greencard கிடைக்க வருடங்கள் ஆகலாம். 


Coronaவா? 

ஊருக்கு போக முடியாது. 

Stamping வாங்கலையா..... இந்தியா போனால் stamping வாங்காமல் USA க்குள் திரும்ப முடியாது. 

Stamping வாங்க  Indian embassy slotக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். 

நடுவில் அப்பா போனாலோ, அம்மா போனாலோ USA வை விட்டு கிளம்ப முடியாது. 

*ஊரார் சாபத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும். 


பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது. 

Society pressure.


சரி. பரவாயில்லை ஊரோடு போய்விடுவோம் என்றால் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.


இந்தியாவுக்கு திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டு கடன், கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு 

எஞ்சிய சொற்ப பணத்தோடு ஊர்போனால் மாசா மாசம் லட்சலட்சமாய் சம்பாதித்தெல்லாம் என்ன செய்தாய் என்று பெற்றோரை அலட்சியம் செய்ததாக சொன்னவர்கள் கேட்பார்கள்.


இந்தியாவுக்கு திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள். 


அது அவரவர் குடும்ப சூழ்நிலயை பொறுத்தது.


Company மூலமாக onsightல் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது.


அவர்களுக்கு இந்தியா திரும்பி போனாலும் வேலை இருக்கும்.


இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு settle ஆனவர்கள் பெற்றோர்களை பார்க்க ஓடி வருகிறார்கள். 

இது அங்கிருப்பவர்களுக்கு புரிவதில்லை.


மொத்தத்தில் அமெரிக்கா புலி வால் பிடித்த கதைதான்.* 

*விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.


அட இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படியாவது அமெரிக்கா போகாட்டா என்ன  என்கிறீர்களா???


மற்றவர்கள் நினைப்பது போல் பணம் வசதிக்காக மட்டும் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு நிறைய கனவுகளோடு சாதிக்க வந்திருப்பவர்கள் அவரவர் துறையில் சாதித்தும்  இருக்கிறார்கள்.


*இந்த மனித சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு/research வசதி வாய்ப்புகள் சற்று அதிகம்.


*சொந்தமாக startup companyகள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம். 


எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஒரு குறிப்பிட்ட cancerக்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.


*வெறும் பணத்துக்காக என்று பொதுவாக முத்திரை குத்தாமல் “”அவர்களின்  கனவுகளையும் நாம் மதிப்போம்

Monday, March 18, 2024

தேர்தல்...

 எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்

கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(ஐம்பதாண்டுகளுக்கு‌ முன்னால் சிகரம் முற்போக்கு மாத இதழில் நான் எழுதியது.திருத்தம் ஏதும்‌ செய்ய வேண்டி‌இல்லாது  சூழல் அப்படியே இருப்பது ஆச்சரியமே.  )

Sunday, March 17, 2024

யாதோ...

 கவிஞனாக அறிமுகமாயிருந்த 

என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக் சுருங்கத் துவங்கியது 

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம்  ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளைத்  தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம் நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்


Wednesday, March 13, 2024

டைம் பேங்க்..

 படித்ததில் பிடித்தது வியந்தது❤️😮


சுவிட்சர்லாந்தில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவர் எழுதுகிறார்:


சுவிட்சர்லாந்தில் படிக்கும் போது கல்லூரிக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன்.

வீட்டு உரிமையாளரான கிறிஸ்டினா 67 வயதான ஒற்றை வயதான பெண்மணி, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

சுவிட்சர்லாந்தின் ஓய்வூதியம் மிகவும் நன்றாக உள்ளது, அவளது பிற்காலத்தில் உணவு மற்றும் தங்குமிடம் பற்றி கவலைப்படாமல் இருந்தால் போதும்.

இருப்பினும், அவள் உண்மையில் "வேலை" கண்டுபிடித்தாள் - 87 வயதான ஒற்றை முதியவரை கவனித்துக் கொள்ள.

அவள் பணத்திற்காக வேலை செய்கிறாளா என்று கேட்டேன்.

அவளுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது:

"நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை, ஆனால் எனது நேரத்தை 'டைம் பேங்கில்' வைக்கிறேன், மேலும் எனது வயதான காலத்தில் என்னால் நகர முடியாதபோது, நான் அதை திரும்பப் பெறலாம்."

"டைம் பேங்க்" என்ற இந்த கான்செப்ட்டைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, நான் மிகவும் ஆர்வமாக இருந்ததால், வீட்டு உரிமையாளரிடம் மேலும் கேட்டேன்.

அசல் "டைம் பேங்க்" என்பது சுவிஸ் மத்திய சமூகப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும். மக்கள் இளமையாக இருக்கும்போது முதியவர்களைக் கவனித்துக்கொள்வதில் 'நேரத்தை' மிச்சப்படுத்துகிறார்கள், மேலும் அவர்கள் வயதாகும்போது, நோய்வாய்ப்பட்டால் அல்லது கவனிப்பு தேவைப்படும்போது அதைத் திரும்பப் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் ஆரோக்கியமாகவும், தொடர்புகொள்வதில் நல்லவர்களாகவும், அன்பு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். உதவி தேவைப்படும் முதியவர்களை அன்றாடம் கவனிக்க வேண்டும்.

அவர்களின் சேவை நேரம் சமூக பாதுகாப்பு அமைப்பின் தனிப்பட்ட 'நேர' கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.

அவள் வாரத்திற்கு இரண்டு முறை வேலைக்குச் சென்றாள், ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வயதானவர்களுக்கு உதவினாள், ஷாப்பிங் செய்தாள், அவர்களின் அறைகளைச் சுத்தம் செய்தாள், சூரிய குளியலுக்கு அழைத்துச் செல்வாள், அவர்களுடன் அரட்டையடித்தாள்.

ஒப்பந்தத்தின்படி, அவரது சேவையின் ஒரு வருடத்திற்குப் பிறகு, *"டைம் பேங்க்"* அவள் பணிபுரிந்த மொத்த காலத்தைக் கணக்கிட்டு, அவளுக்கு "டைம் பேங்க் கார்டை" வழங்கும்.

மேலும், அவளைக் கவனித்துக் கொள்ள யாராவது தேவைப்படும்போது, "நேரம் மற்றும் நேர வட்டியை" திரும்பப் பெற அவள் "டைம் பேங்க் கார்டை" பயன்படுத்தலாம். முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, "டைம் பேங்க்" மற்ற தன்னார்வலர்களை மருத்துவமனையில் அல்லது அவரது வீட்டில் கவனித்துக் கொள்ளும்.

ஒரு நாள், நான் கல்லூரியில் இருந்தேன், வீட்டு உரிமையாளர் ஜன்னலைத் துடைக்கும் போது அவள்  விழுந்ததாகச் சொன்னாள்.

நான் அவசரமாக விடுப்பு எடுத்து அவளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினேன்.

வீட்டு உரிமையாளருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சில நாட்கள் படுக்கையில் இருக்க வேண்டியிருந்தது.

நான் அவளைக் கவனித்துக் கொள்ள ஒரு வீட்டிற்கு விண்ணப்பிக்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவளைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் உறவினர் என்னிடம் கூறினார்.

அவள் ஏற்கனவே "டைம் பேங்க்" க்கு திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை சமர்ப்பித்திருந்தாள்.

நிச்சயமாக, இரண்டு மணி நேரத்திற்குள் "டைம் பேங்க்" ஒரு நர்சிங் தொழிலாளியை வந்து வீட்டு உரிமையாளரைக் கவனித்துக் கொள்ள அனுப்பியது.

நர்சிங் தொழிலாளி தினமும் வீட்டுப் பெண்ணை கவனித்து, அவளுடன் அரட்டையடித்து, அவளுக்கு சுவையான உணவைச் செய்தார்.

நர்சிங் தொழிலாளியின் உன்னிப்பான கவனிப்பில், வீட்டுப் பெண் விரைவில் குணமடைந்தார்.

குணமடைந்த பிறகு, வீட்டு உரிமையாளர் "வேலைக்கு" திரும்பினார். தான் ஆரோக்கியமாக இருக்கும் போதே "டைம் பேங்க்" இல் அதிக நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவதாக அவர் கூறினார்.

இன்று, சுவிட்சர்லாந்தில், முதுமையை ஆதரிக்க "டைம் பேங்க்" பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாகிவிட்டது.

சுவிஸ் அரசாங்கம் "டைம் பேங்க்" திட்டத்தை ஆதரிக்கும் சட்டத்தையும் இயற்றியது.


நம்ம நாட்டுலயும் இப்படி திட்டம் இருந்தா நல்லா இருக்கும்ல!(இதை நாம் வேறுவிதமாக  புண்ணியத்தை சேர்க்கச் சொல்கிறோம்...அது டைம் பேங்கை விட அனைத்து விதத்திலும் சிறந்து இல்லையா )

Monday, March 11, 2024

படித்ததில் பிடித்தது

 ஒருவேளை வனவாசம் படிக்காமல் இருந்திருந்தால் அண்ணாதுரையை பேரறிஞர் அண்ணா என்றும் கருணாநிதியை கலைஞர் கருணாநிதி என்றுமே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-


ஒருவேளை "வந்தார்கள் வென்றார்கள், சென்றார்கள்" படிக்காமல் இருந்திருந்தால் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களெல்லாம் அற்புதமானவர்கள் என்றும் பாபர் காலம் பொற்காலம், அக்பர் காலம் பொற்காலம் என்றே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்-


பூலித்தேவன் முதல், அழகுமுத்துக்கோன் வேலுநாச்சியார், கட்டபொம்மன் மருதுபாண்டியர்,வீரவாஞ்சி, பாரதியார், வ.உ.சி, சுப்ரமணியசிவா, நேதாஜி, ஜான்சிராணி போன்ற என்னற்ற வீரர்களின் தியாக, போராட்ட வலராறுகளைப் படிக்காதிருந்தால் வெள்ளையர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காகத்தான் இங்கே ஆண்டார்கள் என்றும் கூட நம்பவைக்கப்பட்டிருப்பேன் -


இவை எதையுமே தெரியாமல் இங்கே வாழும் மக்கள்தான் அதிகம் -


கல்வியறிவு பெருமளவில் இல்லாமலிருந்த மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இருந்த நாட்டுப்பற்று, ஆன்மிகப்பற்று, போராடும் வீரம் சுதந்திரத்திற்குப் பிறகு இன்று பெருமளவிற்கு மக்கள் கல்வியறிவு பெற்றும் கூட இல்லாமல் போனதற்குக் காரணம் இந்திய அளவில் கல்வித்துறையில் பெருமளவிற்கு ஊன்றிவிட்டிருக்கும் கம்யூனிஸ, மிஷநரிக் கூட்டங்களே -


இந்த நாட்டில் நம்மை அடிமைப்படுத்திய கொடுங்கோலர்களின் வரலாற்றை அவர்கள் செய்த கொடுமைகளை மறைத்து அவர்களை தேவதூதர்கள் என்று நம்மிடம் நம்பவைத்துள்ளனர் -


உதராணமாக தளராத முயற்சிக்கு உதாரணமாக கஜினி முகம்மது 17 முறை படையெடுத்தான் என்று மட்டுமே பதியப்பட்டுள்ளது ஆனால் 17 முறையும் கொள்ளையடிக்க மட்டுமே வந்தான், பல லட்சம் மக்களைக் கொன்றான், பல நூறு கோவில்களை இடித்தான் என்ற வரலாறு எங்குமே காணோம் -


அதே கஜனி முகமதுவின் சொந்த நாடான ஆப்கானில் அவனது கல்லறை இருக்கும் இடம் கூட இன்று யாருக்கும் தெரியாது -

(பல கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்த அவனது நாடு இன்று பிச்சைக்கார தேசமாக இருப்பது இறைவன் செயல்)-


இந்தியாவின் இருப்புப்பாதைகளின் தந்தை என்று லார்ட் டல்ஹொசி பெயரைப் படித்திருப்போம், ஆனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் வளங்களை வேகமாகக் கடத்துவதற்காக மட்டுமே அவன் இருப்புப்பாதைகளை அமைத்தான் என்பதுதான் உண்மை -

உதாரணமாக இருப்புப்பாதையே இல்லாத மூனாறு -தேனி இடையே அவன் அந்தக்காலத்திலேயே பாதை அமைத்தது மூனார் பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் தேயிலை மற்றும் ஏலம் போன்ற பணப்பயிர்களைக் கடத்தத்தான் -


இவற்றையெல்லாம் மறைத்து நம்மை முட்டாள்களாக்கியது -


சுதந்திர இந்தியாவில் 35 வருடங்கள் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், திராவிடக் கட்சிகளுக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தமிழக கல்வித்துறையில் வியாபித்து வரும் கிறிஸ்தவர்கள் -


இவற்றையெல்லாம் மாற்றியமைத்து பழம்பாரதத்தின் பெருமைகளையும், பழந்தமிழர் வீரத்தையும், அறிவையும், ஆன்மீகத்தையும் மீட்டெடுக்க -


இங்கே, திராவிடக் கட்சிகள் முற்றிலும் களையப்பட்டு தேசிய, தெய்வீக சிந்தனையுள்ள கட்சிகளின் ஆட்சி அமையவேண்டும் -Mk😍

Sunday, March 10, 2024

ஹாப்பி ஸ்ட்ரீட்????

பெ ரிய பெரிய கிரிமினல் விசயங்கள் தான் மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படியான ஒன்று தான் ” ஹாப்பி ஸ்ட்ரீட் ”.  இதைப் படிச்சா உங்க குடும்பத்திற்கு நல்லது.


ஹாப்பி ஸ்ட்ரீட் என்றவுடன், ஏதோ கலாச்சார சீரழிவு என்று நினைத்துக் கொண்டு கலிகாலம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால், அது லெஃப்ட்ல போட்ட இண்டிகேட்டர். நிஜத்தில் வலதுபுறமா கூட்டிட்டுப் போய் போதைப் பொருள் விற்கும் தளம் அது!


மனிதர்களுக்கு பொதுவாகக் கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. பண்டிகைகள் / கோவில் திருவிழாக்கள், நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் போடுவது, அவ்வளவு ஏன்.... ஞாயிற்றுக் கிழமை கறி எடுத்து குடும்பத்துடன் சேர்ந்து புசிப்பது கூட கொண்டாட்ட மனநிலை தான். இது தனிமையில் கிடைக்காது. குறைந்தபட்சம் சிறு கூட்டம். வாய்ப்பு கிடைத்தால் பெருங்கூட்டம். 


கொஞசம் யோசித்துப் பாருங்கள்... நியூ இயர் கொண்டாட்டம் என்பதில் என்ன நடக்கிறது? யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லிக்கலாம். ஆரவாரமாக எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் கூட கத்திக் கொள்ளலாம். வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டிக் கொள்ளலாம். குடித்து விட்டு பொது நாகரீகம் இல்லாமல் அலையலாம். ஏன் பொதுவிடத்திலேயே குடிக்கலாம். இதெல்லாம் கூட்டமாகச் செய்யும் போது குற்றவுணர்வின்றி போகும். 

எல்லாரும் செய்வதால் தவறில்லை என்ற மாயை. எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன். 


இப்ப புரியுதா...? கூட்டமா செய்யும் போது சமூக பயம் , சமூக ஒழுங்கு, கட்டற்ற கொண்டாட்ட மனநிலை. 


சரி, ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்கும், போதைப் பொருள் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்? 


முதலில் பெரிய ஸ்பீக்கர் வைத்து இளைஞர்களின் தினவுக்கு இரையாக ஆடச் செய்வர். ஆண்களுக்கு பெண்கள் முன் வித்தையைக் காட்டவும், பெண்களுக்கு ஆண்கள் முன் ஈர்ப்பைக் காட்டவும், ஆட்டத்தில் உற்சாகமும், அதீத கொண்டாட்டமும் பொங்கும். நிகழ்ச்சி முடிந்ததும், ஏதோ பெரிதாகக் கொண்டாடியது போன்ற ஒரு மகிழ்ச்சி உருவாகும். 


அடுத்து....?


நாமெல்லாம் நண்பர்களுடனோ சில குடும்பங்கள் சேர்ந்தோ டூர் போய்விட்டு திரும்பும் போதே... அடுத்து எங்கே போகலாம் என்று திட்டமிடுவோம் இல்லையா? அதே போல அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டிற்கு இப்படி போகணும், அவனையும் கூப்பிடணும் லைட்டா சரக்கு அடிச்சுட்டுப் போனா கூடுதல் மஜாவா இருக்கும் என்றெல்லாம் திட்டம் எழும்.  அடுத்த சில நாட்களுக்கு ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடியதை எல்லாம் சற்றே மிகைப் படுத்தி நண்பர்களிடம் பகிரப்படும். ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்குப் போகாதவனெல்லாம் சமகால இளைஞன் அல்ல என்பதாக சித்தரிக்கப்படும். 


அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டில் சீனியர்கள் சரக்கடித்து விட்டு வந்திருப்பார்கள். உடன் வந்த குடிப்பழக்கம் இல்லாத பெண்களை, “இன்று மட்டும் கொஞ்சமா” என்று வற்புறுத்துவார்கள். அவர்களும், அவர்கள் வற்புறுத்துவதால் மட்டும் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். இதன்... நீண்ட நாள் இலக்காக...


இந்தக் கூட்டத்திற்குள் ஒருவன் நுழைந்து ஒரு ஸ்டஃப் இருக்கு பாஸ்... யூஸ் பண்ணிப் பாருங்க என்று ஒரு பணக்கார இளைஞனை இழுப்பான். முதலில் ஓசியாக... பிறகு ஷேரிங்காக, அப்புறம் அவனவன் காசில், பிறகு ஸ்டஃப் கிடைக்கவில்லை என்று டிமாண்ட் கூட்டி... வேண்டுமென்றால் கொஞ்சம் மொத்தமாக வாங்கணும். இன்னும் நாலைந்து பேர் ஷேர் பண்ணினால் தான் என்று இன்னும் இளைஞர்களை உள்ளிழுப்பார்கள். இது தான் எல்லா தேசத்திலும் போதை விற்பனை ஆசாமிகளின் சேல்ஸ் டெக்னிக். 


நம்பாதவர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் ஸ்பான்சர்களின் நெட்வொர்க்கை தேடிப் பாருங்கள். 


ஒன்று பத்தாகும், பத்து ஆயிரமாகும்.  நாளைக்கு பிடிபடுபவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார பெருசுகளாக இருப்பதால், பணத்தை விட்டெறிந்து ரகசியம் காப்பார்கள். இந்த போதைப் பழக்கம் நடுத்தரக் குடும்பத்திற்குள் நுழையும் போது, பணத் தட்டுப்பாட்டால், வழிப்பறி திருட்டு, கொலை வரை சர்வசாதாரணமாகி விடும். 


எச்சூச்மீ.... உங்க வீட்ல இளம் வயதினர் இருக்காங்களா? ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி பேசத் தொடங்கும் போதே செருப்பால் அடித்து அடக்கி வச்சுடுங்க. புள்ள முக்கியமா இல்ல அதோட பிடிவாதம் முக்கியம்


இந்த பதிவை உங்கள் குழுவில்/நண்பர்களுடன் பகிருங்கள்.