Showing posts with label வாழ்த்துரை. Show all posts
Showing posts with label வாழ்த்துரை. Show all posts

Saturday, July 14, 2018

பயிற்சியும் முயற்சியும் வளர்ச்சியும்

 (விடா முயற்சியும் தொடர்ப்  பயிற்சியுமே
நீடித்த வளர்ச்சியுடன்நிலையாக
சிகரத்தில் நிற்க வைக்கும்

இந்தப் பாலப் பாடம் அறிந்தால் போதும்
மற்றவை எல்லாம்
தானாய் நிழலாய்த்  தொடரும்

இந்தச் சூட்சமம் அறிந்தோர் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்வதோடு

திறமையும் தகுதியும் இருப்பதால்  தானே
 தலைவர்கள் ஆனோம்

 பின் வீணாய் இன்னும் எதற்கு
இந்த அயற்சித் தரும்கூடுதல்  பயிற்சி
 என நினைப்போர் மட்டும்

 சிந்திக்க ஒரு சிறிய முயற்சி
ஒரு சிறு கவிதையாய்)

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
பலரும் பயணத்துக் கொண்டிருந்தார்கள்

அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
 நீச்சல் அறியாதவர்களும் இருந்தார்கள்

 நீச்சல் அறிந்தவர்களின் கண்களும் மனமும்
ஏரியின் அழகில் அதன் குளுமையிலும்
மயங்கிக் களிக்க

அது அறியாதவர்களின்
 மனமும் நினைவும் ஏரியின் ஆழத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணியே  கலங்கிக் கொண்டிருந்தது

படகில் பயணம் செய்ய
நீச்சல் பயின்றிருக்க அவசியம் இல்லைதான்

ஆயினும் இரசித்துப் பயணிக்க
நீச்சல் அறிதல் நிச்சயம் அவசியம்

ஆம் எதையும்
வருந்திச் செய்யாது
விரும்பிச் செய்யவும்.
 விரும்பிச் செய்வதைத்
திருந்தச் செய்யவும்

பயிற்சி என்பது நிச்சயம் அவசியம்
.
 இன்றைய அரிமா மாவட்ட பயிற்சிமுகாமில்
கலந்து கொள்ளும் தலைவர் செயலாளர்
பொருளாளர் அனைவருக்கும் மனமார்ந்த 
வாழ்த்துக்களுடன்.

எஸ் வெங்கட சுப்பிரமணியன்
324B3 District  Area coordinator (Madurai )

Wednesday, May 11, 2016

நூல் வெளியீட்டு விழா...

தொடர்ந்து  எழுதுவது காரணமா ,வயதா
எளிமையாக பு ரியும்படியாக எழுதுவதா
காரணம் எதுவெனத் தெரியவில்லை

ஆனாலும்கூட  வலைத்தளப் பதிவர்கள்
தங்கள் மதிப்புமிக்கப படைப்புகளை
நூலாக வெளியிடும்போது என்னுடைய
வாழ்த்துரையினையோ  ,அணிந்துரையினையோ
பெற்று வெளியிடுவது தொடர்கிறது

 அந்த வகையில்  இது ஆறாவது
அணிந்துரை என நினைக்கிறேன்

கவிஞர்  ரூபன் அவர்கள்  சிறந்த கவிஞர் ,
மனித நேயச் செம்மல் , ஊற்று இலக்கிய மன்ற
ஸ்தாபகர் பொறுப்பாளர் ,அவருடைய
"ஆயுதப் பூ " சிறுகதைத் தொகுப்பு
இலங்கையில் வருகிற மே  25 இல்
வெளியிடப்பட உள்ளது

அந்த அற்புதமான நூலுக்கு  நான் எழுதிய
வாழ்த்துரையை  இங்கு பதிவு செய்வதோடு
அந்த நூல் வெளியீட்டு  விழா    மிகச் சிறப்பாக
நடைபெறவும் ,நண்பர் ,கவிஞர் , ரூபன் அவர்களின்
இலக்கிய சேவையும்,எழுத்துப் பணியும்
சிகரம் தொடவும் , தொடர்ந்து சிகரத்திலேயே
நிலைக்கவும் மனமார்ந்த என் நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்





ரூபன் என்பது காரணப் பெயர் என்பது 
வலையில் இவரது புகைப்படம் பார்த்து 
நான் எண்ணி இருந்தேன்

அவரது கவிதைகளையும் அதற்கான
 பாடு பொருளையும் வலையில்
படித்து இளகிய மனதுக்குச் சொந்தக்காரார் 
என்கிறமுடிவில்  இருந்தேன்

சுற்றுலாவாக மலேசியாவில் நேரடியாகச் 
சந்தித்த போதுதான்,அவர் அதிரூபன் எனவும்
எத்தனை விசால மனதுக்குச் சொந்தக்காரர்
எனவும் புரிந்து கொள்ளமுடிந்தது

பொருள் ஈட்டும் முகத்தான் இலங்கைவிட்டு
மலேசியாவில் பணி புரிந்து வந்தாலும் கூட
தமிழ்மொழியின் பாற்கொண்ட வற்றாத 
தாகத்தால் மோகத்தால்,சிறந்த கவிஞராய்த்  
தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு 
அல்லாது,உலக அளவில் தன் 
சொந்தப் பொறுப்பில், கவிதை போட்டிகள்
நடத்தி பரிசுகளும் சான்றிதழ்களும்  தொடர்ந்து
வழங்கி வருவதோடு, அதன் தொடர்ச்சியாய்
ஊற்று என்கிற ஒரு இலக்கிய மன்றத்தைத் 
துவக்கிஅதை இன்னும் சிறப்பாகச் 
செய்து வருவதும் தமிழ்கூறும் நல்லுலகம் 
என்றும் போற்றி மகிழக் தக்கது

கவிஞர் ரூபன் அவர்களின் படைப்புகள்  
புத்தகமாக வெளிவருவது மிக்க மகிழ்வளிக்கிறது

சிறப்பின் காரணமாக எல்லை கடந்த
ரூபனின் படைப்புகள், 
அந்தச் சிறப்பின் காரணமாகவே
காலமும் கடக்கும் என்பதை இங்கு பதிவு
செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்
தார்த்தக் கவி. யாதோரமணி

Sunday, May 1, 2016

வாழ்த்துரை...



தாய்மையின் வாஞ்சையுடன்
சமூகத்தின் பால் கொண்ட அதீத அக்கறையுடன்
ஒவ்வொரு படைப்பையும் கொடுக்கும்
திருமதி. கௌரி சிவபாலன் அவர்களின்
எழுத்தின்  தீவிர இரசிகன் நான்.

இதுவரை நேரடியாகவோ குரல் வழியோ கூட
தொடர்பு கொண்டதில்லை என்றாலும் கூட
ஒரு நாள் மின் செய்தி வழி , அவர்கள்
தங்கள் படைப்புகளை நூல்வடிவாகக்
கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகவும்
அதற்கு ஒரு நான்கு வரி வரும்படியாக
ஒரு வாழ்த்துப்பா  வழங்க முடியுமா
எனக் கேட்டிருந்தார்கள்

மனதிற்குப் பிடித்து நான் தொடர்கிற அனைத்துப்
பதிவுகளையும் முழுவதுமாகப்  படித்து
அதில் உள்ள சிறப்புகளை மிகச் சரியாகக்
குறிப்பிட்டுப்  பின்னூட்டமிடுவதாலும்

சில சமயங்களில், இது இப்படி இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என
உரிமை எடுத்துப் பின்னூட்டமிடுவதாலும்,

பதிவர்கள் சிலர் தங்கள் நூல் வெளியீட்டின் போது
என்னிடம் உரிமையுடன் வாழ்த்துரையோ,
முன்னுரையோ கோருவது உண்டு

அந்த வகையில் இது என்னுடைய ஐந்தாவது
வாழ்த்துரை என நினைக்கிறேன்

ஜெர்மெனியில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு
திருமதி. கௌரி சிவபாலன்  அவர்களின் 
"முக்கோண முக்களிப்பு "என்னும் நூல்
 ஸ்ரீலங்காவில் வெளியிடப்படுவது
மிக்க மகிழ்வளிக்கிறது

திருமதி.கௌரி சிவபாலன் அவர்கள்
பதிவுலகிலும், எழுத்துலகிலும் தொடர்ந்து
தன் சிறப்பான பதிவுகளைக் கொடுத்து
சிகரத்திலேயே தொடர்ந்து நிலைக்க
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

என்னுடைய வாழ்த்துப் பா

"தாய்மை நிரம்பி வழியும்
  தூய விரிந்த மனமும்
  ஆய்ந்து அறிந்துத் தெளிந்த
  அன்னைத் தமிழின் திறனும்

  வரமாய்ப் பெற்று "வலையில் "
   மலையாய் நிலைத்த கௌரி
   அறம்போல் என்றும்   உந்தன்
   எழுத்தும்  நிலைக்கும். வாழி  !  "
   

வாழ்த்துக்களுடன்...